என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vodafone India"

    • 5ஜி, 4ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனர்கள் பயன்பெற முடியும்.
    • 130 ஜி.பி. வரை இலவச டேட்டா கூடுதலாக வழங்கப்படும்.

    வோடபோன் ஐடியா நிறுவனம் தனது சந்தாதாரர்களுக்கு இலவச டேட்டா வழங்கி வருகிறது. குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையில் 5ஜி அல்லது 4ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பிரீபெயிட் பயனர்கள் பயன்பெற முடியும்.

    இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு 13 முறை 10 ஜி.பி. வரை இலவச டேட்டா வழங்கப்படுகிறது. எனினும், இந்த சலுகையின் முழு பயன்களை பெற பயனர்கள் பிரீபெயிடில் இருந்து போஸ்ட்பெயிடுக்கோ அல்லது நம்பரை செயலிழக்க செய்யவோ, ஏற்கனவே உள்ள ரீசார்ஜ் சலுகையை மாற்றவோ வேண்டாம் என வி தெரிவித்துள்ளது.

     


    வி கியாரண்டி திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு அதிகபட்சம் 130 ஜி.பி. வரை இலவச டேட்டா கூடுதலாக வழங்கப்படும். இந்த சலுகையை பெறும் பட்சத்தில் பயனர்களுக்கு கூடுதல் டேட்டா 10 ஜி.பி. வீதம் 13 தவணைகளில் வழங்கப்படும். இதற்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

    இந்த சலுகையை பெற பயனர்கள் குறைந்தபட்சம் ரூ. 239 துவங்கி அதிகபட்சம் ரூ. 3 ஆயிரத்து 199 விலையில் உள்ள பிரீபெயிட் சலுகையை பயன்படுத்த வேண்டும். மேலும், பயனர்கள் இதே சலுகையை தொடர்ச்சியாக ரிசார்ஜ் செய்ய வேண்டும். இந்த சலுகை மே 25 ஆம் தேதி துவங்கிய நிலையில், ஜூன் 14 ஆம் தேதி வரை வழங்கப்படும்.

    சலுகையில் பயன்பெறுவது எப்படி?

    - பயனர்கள் வி நெட்வொர்க்கில் 4ஜி அல்லது 5ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்த வேண்டும்.

    - ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், அசாம், வடகிழக்கு மற்றும் ஒரிசா டெலிகாம் வட்டாரங்களை சேர்ந்த பயனர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படாது.

    - பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் இருந்து 121199 அல்லது 199199# என்ற எண்ணிற்கு அழைக்க வேண்டும்.

    - முந்தைய ஆப்ஷனில் குறிப்பிடப்பட்டு இருக்கும் யு.எஸ்.எஸ்.டி. எண்களை தொடர்ந்து வரும் வழிமுறைகளை கவனமாக பின்பற்ற வேண்டும்.

    - இவ்வாறு செய்த பிறகு, சலுகை வழங்கப்பட்டதை உறுதிப்படுத்தும் குறுந்தகவல் வரும்.

    - கூடுதல் டேட்டா வழங்கப்பட்டுள்ளதா என்பதை பயனர்கள் *199# என்ற யு.எஸ்.எஸ்.டி. குறியீட்டை கொண்டு சரிபார்க்க முடியும்.

    இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் இணைவது குறித்த முக்கிய அறிவிப்பு நாளை வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் இணைவதற்கான அனுமதியை மத்திய டெலிகாம் துறை நாளை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருநிறுவனங்கள் இணைப்பு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் வோடபோன் ஐடியா லிமிட்டெட் என்ற பெயரில் இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக உருவெடுக்கும். 

    மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் இணைவதற்கான அனுமதியை அதிகாரப்பூர்வ சான்றிதழ் மூலம் நாளை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுக்க முடிவு செய்துள்ளன. இரு நிறுவனங்களின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.1.5 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இரு நிறுவனங்கள் இணைந்ததும், சுமார் 43 கோடி வாடிக்கையாளர்களுடன் டெலிகாம் சந்தையின் 35% பங்குகளை பெறும்.

    இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்பட்டிருக்கும் பலத்த போட்டி காரணமாக இலவச வாயஸ் கால்கள் வழங்கப்படும் சூழலில் இருநிறுவனங்கள் இணைப்பின் மூலம், ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்களின் கடன் சுமையை சமாளிக்க முடியும் என கூறப்படுகிறது. இரண்டு நிறுவனங்களின் ஒன்றிணைந்த கடன் சுமை இந்திய மதிப்பில் ரூ.1.15 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

    ஐடியா நிறுவனம் சார்பில் தேவையான வங்கி உத்தரவாதம், வோடபோன் இந்தியா கடன்களை ஏற்றுக்கொண்டதும், இருநிறுவனங்கள் இணைப்பு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
    ×