என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் இருந்து பயனர் விவரம் வெளியானதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு ஹெச்.எம்.டி. குளோபல் பதில் அளித்துள்ளது. #HMDGlobal



    நோக்கியா ஸ்மார்ட்போன்களில் இருந்து சீனாவிற்கு தகவல்கள் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியானது, நோக்கியா மொபைல் பயன்படுத்துவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஃபின்லாந்தின் தகவல் பாதுகாப்பு நிறுவனம் நோக்கியா மொபைல் போன்கள் விதிகளை மீறியதா என்பதை ஆய்வுக்கு பின் அறிவிப்பதாக தெரிவித்தது. 

    இந்த விவகாரத்தில் புதிய தகவல்களுடன் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிய அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இதில் நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் தகவல் திருட்டில் பயன்படுத்தப்பட்டதா என்பதற்கான பதில் இடம்பெற்றிருக்கிறது. மென்பொருள் கோளாறு காரணமாக இந்த பிழை ஏற்பட்டது, எனினும் இதில் எவ்வித தகவலும் மூன்றாம் தரப்புக்கு பகிர்ந்து கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளது.

    “நாங்கள் இந்த விவகாரத்தை ஆய்வு செய்ததில், ஒரு பங்கு நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் சீன வேரியண்ட்களில் இடம்பெறும் டிவைஸ் ஆக்டிவேஷன் குறியீடுகள் இடம்பெற்றிருந்தன. இவை தவறுதலாக மூன்றாம் தரப்பு சர்வெருக்கு தகவல்களை அனுப்ப முயன்றன. எனினும், இந்த தகவல்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இதில் பயனரின் தகவல்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை.” என ஹெச்.எம்.டி. குளோபல் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இந்த பிழை பிப்ரவரி மாதத்திலேயே சரி செய்யப்பட்டுவிட்டது. மேலும் அனைத்து சாதனங்களிலும் பிழை அப்டேட் மூலம் கிட்டத்தட்ட சரி செய்யப்பட்டுவிட்டன. நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு பிழை சரி செய்யப்பட்டு விட்டதா என்பதை அறிந்து கொள்ள செட்டிங்ஸ் -- சிஸ்டம் -- அபவுட் போன் -- பில்டு நம்பர் உள்ளிட்டவற்றை க்ளிக் செய்ய வேண்டும். 

    இவ்வாறு செய்ததும் ‘00WW_3_39B_SP03' or ‘00WW_3_22C_SP05'  என்ற பில்டு நம்பர் வந்திருந்தால் உங்களது நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஏற்கனவே பிழை சரி செய்யப்பட்டிருக்கும். ஒருவேளை உங்களது மொபைல் அப்டேட் செய்யப்படவில்லை எனில், ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- சிஸ்டம் -- அட்வான்ஸ்டு -- சிஸ்டம் அப்டேட் ஆப்ஷன்களை தேர்வு செய்து மொபைலை அப்டேட் செய்ய வேண்டும்.

    நோக்கியா 7 பிளஸ் தவிர மற்ற நோக்கியா போன்களிலும் இதேபோன்ற பிழை ஏற்பட்டதாக வெளியான தகவல்களை ஹெச்.எம்.டி. குளோபல் மறுத்திருக்கிறது. மேலும், சீனா வேரியன்ட் தவிர மற்ற நோக்கியா போன்களின் விவரங்களும் ஹெச்.எம்.டி. குளோபல் சர்வர்களில் சேமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பப்ஜி மொபைல் விளையாட அதிக எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளதை தொடர்ந்து அதிக நேரம் விளையாடினால் எச்சரிக்கை செய்யும் புதிய அப்டேட் வழங்கப்படுகிறது. #PUBGMobile



    குரஜராத் அரசாங்கம் பப்ஜி மொபைல் கேம் விளையாட இந்த ஆண்டு துவக்கத்தில் தடை விதித்தது. இந்த கேம் விளையாடுவோர் அதற்கு அடிமையாவதை தடுக்கும் நோக்கில் கேம் விளையாட தடை விதிப்பதாக அம்மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், தடையை மீறி பப்ஜி விளையாடிய பத்து பேர் சமீத்தில் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், கேம் விளையாட விதிக்கப்பட்டிருக்கும் தடையை கருத்தில் கொண்டும் இதேபோன்று மற்ற பகுதிகளில் கேம் விளையாட தடை ஏற்பட கூடாது என்பதால் இந்த கேமினை உருவாக்கியவர்கள் கேமில் சில மாற்றங்களை செய்திருக்கின்றனர். அதன்படி தொடர்ந்து அதிக நேரம் பப்ஜி விளையாடும் போது திரையில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறும்.

    ஹெல்த் ரிமைண்டர் என அழைக்கப்படும் இந்த அம்சம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை கடந்து பப்ஜி விளையாட முற்படும் போது, கேமினை நிறுத்திவிடும். பின் கேம் சொல்லும் நேரத்தில் மீண்டும் விளையாட முடியும். இது தொடர்ந்து அதிக நேரம் பப்ஜி விளையாடுவோருக்கு இடைவெளி போன்று அமைகிறது. 



    பப்ஜி விளையாடுவோரில் 18 வயதுக்கு உட்பட்டவர்களிடம் ஹெல்த் ரிமைண்டர்களை ஆக்டிவேட் செய்ய கேம் கோருகிறது. இந்த அம்சம் ஆக்டிவேட் ஆனதும், தொடர்ந்து ஆறு மணி நேரங்களுக்கும் அதிகமாக பப்ஜி விளையாடினால் கேம் தானாக நிறுத்தப்பட்டு விடுகிறது. 

    சிலருக்கு இந்த இடைவெளி இரண்டு மணி நேரங்களிலும் ஏற்படுவதாக சிலர் தெரிவிக்கின்றனர். இதுவரை இந்த இடைவெளியை கடக்கும் வழிமுறை பற்றி எவ்வித தகவலும் இல்லை. பப்ஜி விளையாடுவோர் மத்தியில் ஹெல்த் ரிமைண்டர் அம்சத்திற்கு கலவையான விமர்சங்கள் எழுந்துள்ளன. 

    சிலர் திடீரென கேம் நிறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். 18 வயத்துக்கும் அதிகமானவர்களுக்கும் ரிமைண்டர் வருவதாக சிலர் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த அம்சம் எதிர்ப்புக்குரல் எழுப்புவோருக்கு சற்று ஆறுதலான விஷயமாகவே இருக்கும்.

    ஏற்கனவே பப்ஜி கேம் தொடர்பான கருத்துக்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்து தடையை விலக்குவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதாக பப்ஜி உருவாக்கிய டென்சென்ட் மொபைல்ஸ் தெரிவித்தது. மேலும் இந்த விவகாரத்தில் முறையான தீர்வை எட்ட முயற்சி செய்வதாகவும் என அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
    வாட்ஸ்அப் செயலியின் ஃபார்வேர்டு மெசேஜ் அம்சத்திற்கு இரண்டு பெரிய அப்டேட்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #WhatsApp



    வாட்ஸ்அப் செயலியில் இன்-ஆப் பிரவுசிங் மற்றும் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் உள்ளிட்ட அம்சங்கள் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியானது. இரு அம்சங்களும் செயலியில் போலி தகவல்கள் பரப்பப்படுவதை கண்டறிய பயனர்களுக்கு வழி செய்யும். 

    இந்நிலையில், ஃபேஸ்புக்கின் குறுந்தகவல் செயலியில் ஃபார்வேர்டெட் மெசேஜ் அம்சம் கொண்டு போலி தகவல்களை எதிர்க்கும் நடவடிக்கைகளில் அந்நிறுவனம் ஈடுபட இருப்பதாக தெரிகிறது. இதற்கென வாட்ஸ்அப் இரண்டு பெரிய அம்சங்களை செயலியில் சேர்க்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இரு அம்சங்களும் ஃபார்வேர்டிங் இன்ஃபோ (Forwarding Info) மற்றும் ஃபிரீக்வன்ட்லி ஃபார்வேர்டெட் (Frequently Forwarded) என அழைக்கப்படுகிறது. பெயருக்கு ஏற்றார்போல் இருஅம்சங்களும் எவ்வாறு வேலை செய்யும் என்பதை புரிந்து கொள்ளலாம். பார்வேர்டிங் இன்ஃபோ மூலம் நீங்கள் உங்களது நண்பர்களுக்கு அனுப்பிய குறுந்தகவல் எத்தனை பேருக்கு ஃபார்வேர்டு செய்யப்பட்டிருக்கிறது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதனை மெசேஞ் இன்ஃபோ பகுதியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


    புகைப்படம் நன்றி: wabetainfo

    இந்த பகுதியை இயக்க பயனர் அனுப்பிய குறுந்தகவலை அழுத்திப்பிடித்து பின் இன்ஃபோ ஆப்ஷனை குறிக்கும் (i) ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். இது சாட் விண்டோவின் மேல் காணப்படும். இந்த அம்சம் கொண்டு நீங்கள் மற்றவர்களுக்கு அனுப்பிய ஃபார்வேர்டெட் மெசேஞ்களில் மட்டுமே வேலைசெய்யும். 

    உங்களுக்கு வரும் ஃபார்வேர்டெட் மெசேஞ்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள அதே குறுந்தகவலை நீங்கள் உங்களது காண்டாக்ட்களுக்கு ஃபார்வேர்டு செய்து மெசேஞ் இன்ஃபோ பகுதியில் அது எத்தனை பேருக்கு ஃபார்வேர்டு செய்யப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

    ஃபிரீக்வென்ட்லி ஃபார்வேர்டெட் அம்சத்தில், ஒருவர் குறுந்தகவலை நான்கு அல்லது அதற்கும் அதிகமானோருக்கு ஃபார்வேர்டு செய்திருந்தால் பயனர் அனுப்பிய குறுந்தகவலில் பார்க்க முடியும்.  

    வாட்ஸ்அப் செயலியில் இரண்டு புதிய அம்சங்களும் தற்சமயம் சோதனை செய்யப்படுகிறது. இந்த அம்சம் அடுத்த பீட்டா அப்டேட்டில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அம்சங்களும் வாட்ஸ்அப் பீட்டா 2.19.80 ஆண்ட்ராய்டு பதிப்பில் வழங்கப்பட்டிருக்கிறது. ஐ.ஓ.எஸ். தளங்களில் இந்த அம்சம் வழங்கப்படுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
    வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு கீபோர்டில் திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் எமோஜி சேர்க்கப்படுகிறது. #WhatsApp



    வாட்ஸ்அப் செயலியில் போட்டோக்களை டூடுள் செய்யும் போது எமோஜி மற்றும் ஸ்டிக்கர்களை தேட வழி செய்யும் அம்சம் விரைவில் சேர்க்கப்பட இருக்கிறது.

    இதுதவிர வாட்ஸ்அப் பீட்டா செயலியில் திருநங்கைகளை சிறப்பிக்கும் எமோஜி சேர்க்கப்பட்டுள்ளது. இத்துடன் மற்ற பாலினத்தவரை குறிக்கும் எமோஜிகளும் வாட்ஸ்அப் செயலியில் இடம்பெற்றிருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் திருநங்கைகளை குறிக்கும் எமோஜி வழங்கப்பட இருப்பது பற்றி ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

    இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். எனினும் இதுகுறித்து வாட்ஸ்அப் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. இத்துடன் எமோஜிபீடியா வலைதளத்தின் உதவியுடன் திருநங்கை எமோஜியை சாட்களில் மறைக்கும் வசதியை சேர்த்திருக்கிறது.



    இந்த அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.56 வெர்ஷனில் வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், திருநங்கை எமோஜி வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.73 வெர்ஷனில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இத்துடன் புகைப்படங்களை கொண்டு தேட வழி செய்யும் சர்ச் பை இமேஜ் (Search by Image) அம்சமும் விரைவில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சர்ச் பை இமேஜ் அம்சம் கொண்டு பயனர்கள் அனுப்பிய அல்லது அவர்களுக்கு அனுப்பப்பட்ட புகைப்படம் உண்மையானது தானா என கண்டறிந்து கொள்ள முடியும். இந்த அம்சம் தற்சமயம் உருவாக்கப்பட்டு வருவதாகவும், இது விரைவில் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    இவைதவிர, வாட்ஸ்அப் செயலியில் ஆடியோக்களை அனுப்பும் முன் அவற்றை கேட்கச் செய்யும் வசதியும் விரைவில் சேர்க்கப்பட இருக்கிறது. இத்துடன் ஒரேசமயத்தில் அதிகபட்சம் 30 ஆடியோ ஃபைல்களை பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்பட இருக்கிறது. 
    ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் மால்வேர் மற்றும் வைரஸ் பாதிப்புக்களை எதிர்கொள்வதாக கூறும் செயலிகள் பெரும்பாலும் இப்படித் தான் இயங்குகின்றன. #Android



    மொபைல் போன்கள் மற்றும் டெஸ்க்டாப்களில் மிகவும் அவசியமான செயலிகளாக பலரும் பார்க்கும் ஆண்டிவைரஸ் செயலிகள் பற்றிய பகீர் தகவல் வெளியாகியுள்ளது. 

    சமீபத்தில் வெளியாகியிருக்கும் அறிக்கையில் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் கிடைக்கும் பெரும்பாலான ஆண்டிவைரஸ் மற்றும் ஆண்டி-மால்வேர் செயலிகள் பயனற்றதாகவோ அல்லது நம்ப முடியாதவொன்றாகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்த்ரியாவை சேர்ந்த ஆண்டிவைரஸ் சோதனை நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. 

    இந்நிறுவனம் 250 செயலிகளை ஆய்வுக்கு உட்படுத்தியது. இதில் 2000 மால்வேர் செயலிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வெறும் 30 சதவிகித செயலிகளே மால்வேர்களை ஓரளவு சரியாக கண்டறிந்தன. இதிலும் பெரும்பான்மை முடிவுகள் தவறாகவே இருந்தன.



    ஆய்வாளர்கள் தேர்வு செய்த 250 செயலிகளை ஒவ்வொன்றாக ஆய்வுக்கு உட்படுத்தினர். ஆண்ட்ராய்டு சாதனங்களில் இவற்றை இன்ஸ்டால் செய்து, சாதனம் தானாக பிரவுசர் மூலம் மால்வேர் நிறைந்த செயலிகளை டவுன்லோடு செய்ய வைக்கப்பட்டன. இந்த வழிமுறை 2000 முறை பின்பற்றப்பட்டன, இதில் செயலிகளால் வைரஸ் அல்லது மால்வேர்களை கண்டறியமுடியவில்லை. 

    ஆண்டிவைரஸ் செயலிகளில் 2018 ஆம் ஆண்டின் பரவலான ஆண்ட்ராய்டு மால்வேர் அச்சுறுத்தல்களே சோதனைக்கு உட்படுத்தப்பட்டன என்பதால், இந்த செயலிகள் கிட்டத்தட்ட 90 முதல் 100 சதவிகிதம் வரை மால்வேர்களை துல்லியமாக கண்டறிந்திருக்க வேண்டும். எனினும், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட செயலிகளில் 170 செயலிகள் அடிப்படை சோதனைகளிலும் தேர்ச்சி பெறவில்லை.

    கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் பிளே ப்ரோடெக்ட் சேவையை வழங்கியிருக்கிறது. எனினும், பெரும்பான்மையான ஸ்மார்ட்போன் பயனர்கள் செயலிகளை அறிமுகமில்லாத மூன்றாம் தரப்பு வலைதளங்களில் இருந்து APK வடிவில் இன்ஸ்டால் செய்கின்றனர். இவை அவர்களது ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கான வாய்ப்பை அதிகப்படுத்துகின்றன.
    ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தின் ஜிபோர்டு செயலியில் உடனடி மொழி மாற்றம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. #Gboard



    கூகுள் நிறுவனம் தனது ஜிபோர்டு செயலியில் புதிய அப்டேட் வழங்கியிருக்கிறது. ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் வழங்கப்பட்டிருக்கும் புதிய அப்டேட் உடனடியாக மொழிமாற்றம் செய்யும் வசதியை கீபோர்டு செயலியில் வழங்குகிறது. 

    கடந்த இரண்டு ஆண்டுகளாக இதே அம்சம் ஜிபோர்டின் ஆண்ட்ராய்டு செயலியில் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய அப்டேட் மூலம் ஐபோன் மற்றும் ஐபேட் பயன்படுத்துவோர் கிட்டத்தட்ட 100 மொழிகளில் உடனடியாக மொழிமாற்றம் செய்து கொள்ளலாம். மேம்படுத்தப்பட்ட ஜிபோர்டு செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது.

    புதிய அப்டேட் மூலம் கூகுள் டிரான்ஸ்லேட் சேவையில் கிடைக்கும் அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து கொள்ளலாம். கூகுள் டிரான்ஸ்லேட் வலைதளத்தின் படி டிரான்ஸ்லேட் சேவை 103 மொழிகளை சப்போர்ட் செய்யும். உடனடி மொழிமாற்றம் தவிர, ஜிபோர்டு ஐ.ஓ.எஸ். செயலியில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.  



    ஐ.ஓ.எஸ்.இல் ஜிபோர்டு பயன்படுத்துவது எப்படி?

    செயலியை திறந்து மொழிமாற்றம் செய்ய வேண்டிய ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இனி, ஜி ஐகானை க்ளிக் செய்து டிரான்ஸ்லேட் ஐகானை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் மொழிமாற்றம் செய்ய வேண்டிய மொழிகளை தேர்வு செய்ய வேண்டும்.

    இனி நீங்கள் மொழிமாற்றம் செய்யவேண்டிய வார்த்தைகளை பதிவிட்டால், அதற்கான பிரீவியூ தெரியும். இனி நீங்கள் மொழிமாற்றத்தை பயன்படுத்திக் கொள்ள செலக்ட் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.

    புதிய மொழிமாற்ற வசதியுடன் ஜிஃப், எமோஜி சர்ச், ஸ்டிக்கர்கள், கிளைட் டைப்பிங், சர்ச் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது. சமீபத்தில் ஜிபோர்டு செயலியில் தாய், மெர், லௌ மற்றும் மங்கோலிய மொழிகளுக்கான மொழிமாற்ற வசதியும் சேர்க்கப்பட்டது.
    கூகுள் மேப்ஸ் சேவையில் விபத்துக்களை தெரிவிக்க புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. #GoogleMaps



    கூகுள் மேப்ஸ் சேவையில் பயனர்கள் விபத்துக்கள் மற்றும் வேக கட்டுப்பாடு பகுதிகளை தெரிவிக்க புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக இதேபோன்ற வசதியை வேஸ் எனும் நேவிகேஷன் செயலியில் ஸ்பீட் டிராப் மற்றும் விபத்துக்களை தெரிவிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

    தற்சமயம்  கூகுள், இந்த வசதியை உலகம் முழுக்க அறிமுகம் செய்திருக்கிறது. இந்த அம்சம் முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு சாதனங்களில் மட்டும் சேர்க்கப்பட்டிருக்கிறது. விரைவில் இந்த அம்சம் ஐபோன்களிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். 

    இதுகுறித்து ரெடிட் வலைதளத்தில் வெளியாகி வரும் தகவல்களில் நேவிகேஷன் மோடில் விபத்து மற்றும் ஸ்பீட் டிராப் வசதி ஆண்ட்ராய்டு சாதனங்களில் உலகம் முழுக்க பரவலாக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் மேப்ஸ் செயலியில் ஆட் எ ரிபோர்ட் (Add a report) வசதி சேர்க்கப்பட்டிருக்கிறது. 



    வேஸ் செயலியில் இருப்பதை போன்றே புதிய அம்சமும் கூகுள் மேப்ஸ் செயலியில் பயனர்களை விபத்துக்கள் மற்றும் வேக கட்டுப்பாட்டு பகுதிகள் பற்றிய விவரங்களை பதிவிடலாம். பயனர்கள் திரையின் கீழ்புறம் இருக்கும் அம்புகுறி அல்லது நேவிகேஷன் ஸ்கிரீனில் இருக்கும் பட்டனை க்ளிக் செய்து Add a report வசதியை பயன்படுத்தலாம்.

    இதனை க்ளிக் செய்ததும் விபத்து அல்லது வேக கட்டுப்பாட்டு பகுதி பற்றிய விவரங்களை கூகுளுக்கு நேரடியாக தெரிவிக்க முடியும். இதேபோன்று மற்றவர்கள் பதிவிட்டிருக்கும் கருத்துக்களையும் கூகுள் மேப்ஸ் காண்பிக்கும். இதனால் பயணத்தை அதே வழியில் தொடரலாமா அல்லது வேறு பாதையில் செல்ல வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.

    விபத்து மற்றும் வேக கட்டுப்பாட்டு பகுதிகளை தெரிவிக்கும் வசதி பற்றி கூகுள் சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
    கூகுள் ஆண்ட்ராய்டு இங்குதளத்தின் புதிய பதிப்பான ஆண்ட்ராய்டு கியூ பீட்டா வெர்ஷன் வெளியிடப்பட்டுள்ளது. #AndroidQ



    கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு கியூ பீட்டா பதிப்பை வெளியிட்டுள்ளது. இந்த இயங்குதளம் கூகுள் I/O 2019 இல் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக கூகுள் I/O நிகழ்வில் புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷன் அறிமுகம் செய்வதை கூகுள் வழக்கமாக கொண்டிருக்கிறது. 

    இதே வழக்கத்தை கூகுள் இம்முறையும் பின்பற்றலாம் என தெரிகிறது. புதிய இயங்குதளத்தில் கூடுதலாக தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சங்களை வழங்க இருப்பதாக கூகுள் தெரிவித்திருக்கிறது. இத்துடன் மடிக்கக்கூடிய சாதனங்களுக்கென மேம்படுத்துப்பட்டு இருக்கும் என தெரிகிறது.



    மேலும் புகைப்படங்களில் டைனமிக் டெப்த் வசதி, கனெக்டிவிட்டிக்கென புதிய ஏ.பி.ஐ.க்கள், புதிய மீடியா கோடெக்கள் மற்றும் கேமரா வசதிகள், வல்கன் 1.1 சப்போர்ட், வேகமான ஆப் ஸ்டார்ட்அப் போன்ற அம்சங்கள் புதிய இயங்குதளத்தில் சேர்க்கப்படுகின்றன. முதல் பீட்டாவில் சிஸ்டம்-வைடு டார்க் மோட் வழங்கப்படவில்லை.

    எனினும், டார்க் மோட் வசதியை ஏ.டி.பி. மூலம் செயல்படுத்திக் கொள்ள முடியும். இது ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தில் செயல்படுத்தப்பட்டு இருந்தால், சிலருக்கு மட்டும் தானாக செயல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தின் பேட்டரி சேவர் மோட் சில சிஸ்டம் ஆப்களை டார்க் மோடில் வைக்கிறது.



    தற்சமயம் ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளம் பிக்சல், பிக்சல் XL, பிக்சல் 2, பிக்சல் 2 XL, பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL உள்ளிட்ட சாதனங்களில் வழங்கப்படுகிறது. புதிய இயங்குதள வெர்ஷனை ஆண்ட்ராய்டு டெவலப்பர் வலைதளம் சென்று OTA முறையில் அப்டேட் செய்து கொள்ளலாம்.

    புதிய ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தின் அடுத்தடுத்த பீட்டா வெர்ஷன் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் வெளியிடப்படுகிறது. ஆண்ட்ராய்டு கியூ பொது பயனர்களுக்கான இறுதி வெர்ஷன் 2019 ஆண்டின் மூன்றாவது காலாண்டு இறுதியில் வெளியிடப்படும் என தெரிகிறது.
    இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, சமூக வலைதளங்களை கண்காணிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. #ElectionCommission



    இந்தியாவில் விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி சமூக வலைதளங்களை கண்கானிக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் அரசியல் விளம்பரங்களுக்கு முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    வெற்றிவாய்ப்பை அதிகப்படுத்தும் நோக்கில் வேட்பாளர்கள் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்வார்கள் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மூத்த தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.

    ஒவ்வொரு மாவட்டம் மற்றும் மாநில அளவுகளில் ஊடக சான்று மற்றும் கண்கானிப்பு குழுக்கள் இடம்பெற்றிருக்கும். இக்குழுவில் ஒரு சமூக வலைதள வல்லுநரும் இடம்பெறுவர். சமூக வலைதளங்களில் பதிவாக இருக்கும் அனைத்து அரசியல் விளம்பரங்களுக்கும் முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். 



    வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் சமூக வலைதளங்களில் பதிவாக இருக்கும் விளம்பரங்களுக்கு அனைத்து விதகள் மற்றும் நிபந்தணைளை பூர்த்தி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    வாக்குப்பதிவு முறை, அமைதியை சீர்குலைக்கும், பொது அமைதிக்கு கலங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகள் ஏற்படாமல் இருக்க ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள், வாட்ஸ்அப் மற்றும் ஷேர்சாட் உள்ளிட்ட தளங்களின் மீது அதிக கவனம் செலுத்தப்பட இருக்கிறது என அரோரா தெரிவித்தார்.  

    மொபைல் போன்களில் அதிகப்படியான டெக்ஸ்ட் மற்றும் வாய்ஸ் மெசேஜ்களின் மீதும், தொலைகாட்சி சேனல்கள், கேபிள் நெட்வொர்க், ரேடியோ, திரையரங்குகள், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள ஆடியோ வீடியோ டிஸ்ப்ளேக்களில் வெளியாகும் அரசியல் விளம்பரங்களுக்கும் முன்கூட்டியே அனுமதி பெற்றிருப்பது அவசியமாகும் என அரோரா மேலும் தெரிவித்தார்.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் கொண்ட ஹெட்செட் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Apple



    ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி (ஏ.ஆர்.) சார்ந்த சாதனத்தின் உற்பத்தி பணிகள் 2020 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் துவங்கும் என பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியூ தெரிவித்திருக்கிறார். 

    முன்னதாக வெளியான தகவல்களில் ஆப்பிள் காப்புரிமைகளில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி மற்றும் விர்சசுவல் ரியாலிட்டி சாதனம் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்டது. ஆப்பிளின் ஏ.ஆர். கண்ணாடிகள் கம்ப்யூட்டிங், ரென்டரிங், இண்டர்நெட் கனெக்டிவிட்டி மற்றும் லொகேஷன் சேவைளை பயனர் ஐபோனில் இருந்து டிஸ்ப்ளே செய்யும் என மிங் சி கியோ தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து ஆப்பிள் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளில், ஆப்பிளின் ஏ.ஆர். சார்ந்த ஹெட்செட் ஐபோனுடன் இணைந்து பயனர்களுக்கு கம்ப்யூட்டர் புகைப்படங்களை நிஜ உலகின் மேல் பிரதிபலிக்கச் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிளின் புதிய ஹெட்செட் ஆப்பிள் உருவாக்கும் பிரத்யேக சிப் கொண்ட மற்ற சாதனத்துடன் வயர்லெஸ் முறையில் தகவல் பரிமாற்றம் செய்யும் என கூறப்படுகிறது.



    இதுதவிர ஹெட்செட்டில் டச்-சென்சிட்டிவ் பகுதி இடம்பெற செய்ய ஆப்பிள் விரும்புவதாகவும், இதனை பயன்படுத்தி பயனர்கள் சூழலுடன் தொடர்பு கொள்ள முடியும் என தெரிகிறது. புதிய சாதனம் வெற்றி பெறச் செய்வதில் ஆப்பிள் கவனமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

    புதிய ஏ.ஆர். ஹெட்செட்களின் உற்பத்தி 2019 ஆம் ஆண்டின் இறுதியில் நிறைவுறும் பட்சத்தில் இந்த சாதனம் 2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த மாதம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஹாலோ லென்ஸ் 2 எனும் சாதனத்தை அறிமுகம் செய்தது.

    இது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மூன்றாண்டு பழைய சாதனத்தின் மேம்பட்ட புதுய வெர்ஷன் ஆகும். இந்த சாதனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை 3500 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்பாடு சுமார் 72.6 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. #MobileData



    இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்பாடு 72.6 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 

    இதுவரை இல்லாத அளவு மிக குறைந்த விலையில் மொபைல் டேட்டா கிடைப்பதும், ஸ்மார்ட்போன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மொபைல் டேட்டா பயன்பாடு அதிகரிக்கும் என்றும் இதன் மூலம் வீடியோ ஆன் டிமாண்ட் சந்தை அதிக பலனடையும் என கூறப்படுகிறது. 

    இந்தியாவில் இணைய பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதாக அசோகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் டேட்டா பயன்பாடு 10,96,85,793 மில்லியன் எம்.பி.யாக அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 2017 இல் டேட்டா பயன்பாட்டு அளவு 71,67,103 மில்லியன் எம்.பி.யாக இருந்தது குறிப்பிடத்தக்கது.



    2013 ஆம் ஆண்டு வரை இந்தியர்கள் மொபைல் டேட்டாவை தவிர வாய்ஸ் சேவைகளையே அதிகம் பயன்படுத்தி வந்தனர். தற்சமயம் பெரும்பாலான மொபைல் கட்டணங்களில் டேட்டா பயன்பாடு ஆதிக்கம் செலுத்துகிறது. மொபைல் டேட்டா பயன்பாட்டில் 65 முதல் 75 சதவிகிதம் வீடியோ ஸ்டிரீமிங் செய்யப்படுவதாக நோக்கியா மொபைல் பிராண்ட்பேண்ட் இன்டெக்ஸ் 2018 இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் இண்டர்நெட் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 2022 ஆம் ஆண்டு மொபைல் இண்டர்நெட் பயன்பாடு 56.7 சதவிகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2017 இல் இந்த வளர்ச்சி 30.2 சதவிகிதமாக இருந்தது. 
    ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியில் பயனரின் தனிப்பட்ட விவரங்களை மற்றவர் இயக்க வழி செய்த பிழை கண்டறியப்பட்டுள்ளது. #Messenger



    ஃபேஸ்புக் மெசஞ்சரில் இருந்த பிழை பயனரின் தனிப்பட்ட விவரங்களை வலைதளங்கள் இயக்க வழி செய்தது கண்டறியப்பட்டுள்ளது. இவை பயனர் யாருடன் சாட் செய்கின்றனர் என்பதை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. 

    ஃபேஸ்புக் இந்த பிழையை சரி செய்து விட்டது என்றாலும், மெசஞ்சரின் வெப் வெர்ஷன் வலைதளங்களுக்கு பயனர் சாட் செய்யும் விவரங்களை வழங்கியதாக சைபர்செக்யூரிட்டி நிறுவன ஆராய்ச்சியாளரான ரோன் மசாஸ் தெரிவித்தார். இவர் பிழை பற்றிய விவரங்களை ஃபேஸ்புக்கிற்கு அனுப்பினார்.

    2018 ஆம் ஆண்டு மசாஸ் மற்றும் அவரது குழுவினர் ஃபேஸ்புக் ப்ரோஃபைல்களில் இருந்து பயனர் விவரங்களை வலைதளங்கள் இயக்கிய பிழையை கண்டறிந்து தெரிவித்தார். இது சைடு-சேனல் அட்டாக் என அழைக்கப்படுகிறது. பிரவுசர் சார்ந்த சைடு-சேனல் அட்டாக் இன்றும் அச்சுறுத்தலாகவே இருக்கின்றன.



    ஃபேஸ்புக், கூகுள் போன்ற பெரும் நிறுவனங்கள் இந்த விவகாரத்தை கவனிக்க துவங்கியிருக்கும் நிலையில், இன்னும் பலருக்கு இதுபற்றிய விவரம் அறியாமல் இருப்பதாக மசாஸ் தெரிவித்தார்.

    ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலியை சர்வதேச சந்தையில் சுமார் 130 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். முன்னதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் வாட்ஸ்அப் சேவையை போன்று ஃபேஸ்புக்கில் பயனர் விவரங்களை பாதுகாப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

    இதற்கென ஃபேஸ்புக் தனி பிளாட்ஃபார்மை உருவாக்கி வருவதாகவும், இதில் தனிப்பட்ட உரையாடல்கள், என்க்ரிப்ஷன், பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
    ×