என் மலர்
கணினி
ஆப்பிள் 2018 டெவலப்பர்கள் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் மேக் ஓஎஸ் 10.4 இயங்குதளத்தை மேம்படுத்தியுள்ளது. இதன் புதிய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #WWDC2018 #macOSMojave
கலிஃபோர்னியா:
ஐஓஎஸ் 12, வாட்ச் ஓஎஸ் மற்றும் டிவி ஓஎஸ் இயங்குதளங்களை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் மேக் ஓஎஸ் 10.4 இயங்குதளத்தை ஆப்பிள் 2018 டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது.
புதிய மேக் ஓஎஸ் இயங்குதளம் மோஜேவ் என அழைக்கப்படும் நிலையில், பல்வேறு புதிய வசதிகளை இந்த இயங்குதளம் கொண்டிருக்கிறது. அதிகளவு ஹூட் மாற்றங்களை டெஸ்க்டாப் சாதனங்களுக்கு கொண்டு வந்திருக்கும் புதிய மேக் ஓஎஸ் இயங்குதளத்தை ஆப்பிள் தலைமை செயல் அகிகாரி குவியல் முழுவதும் புதிய அம்சங்கள் என குறிப்பிட்டிருந்தார்.
புதிய மேக் ஓஎஸ் சிஸ்டம்-வைடு டார்க் மோட் கொண்டிருக்கிறது. இந்த அம்சம் யூசர் இன்டர்ஃபேஸ் மட்டுமின்றி வால்பேப்பர் மற்றும் வின்டோஸ்-இல் இருக்கும் அனைத்து தரவுகளையும் இருள் சூழ்ந்ததாக மாற்றியமைக்கும். மேக் ஓஎஸ் மோஜேவ் டார்க் மோட் ஆப்ஷனை எக்ஸ்கோடிற்கும் கொண்டு வருகிறது. எக்ஸ்கோடு டெவலப்பர்களால் அதிகம் விரும்பக்கூடிய ஒன்றாகும்.

ஆப்பிள் நிறுவனம் ஸ்டேக்ஸ் வசதியை டெஸ்க்டாப் தளங்களுக்கு கொண்டு வருகிறது. இந்த அம்சம் அனைத்து ஃபைல்களையும் ஒழுங்கான ஃபோல்டரில் ஒருங்கிணைத்து வைக்கும். மேக் கணினிகளில் ஃபோல்டர்களை ஒழுங்குப்படுத்தும் நோக்கில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஃபைல் ஒன்றை ஸ்டேக் ஃபோல்டரில் சேர்க்க அதனை டிராக் செய்து டெஸ்க்டாப்-இல் வைத்தால் வேலை முடிந்தது.
இத்துடன் ஸ்கிரீன்ஷாட்களை எடுப்பதை புதிய இயங்குதளத்தில் மிகவும் எளிமையாக ஆப்பிள் மாற்றியிருக்கிறது. மேக் ஓஎஸ் மோஜேவ் தளத்தில் ஸ்கிரீன்ஷாட் எடுக்க டெஸ்க்டாப் கீழ் வலது புற ஓரமாக காணப்படும் ஐகானை க்ளிக் செய்தால் மார்க அப் ஆப்ஷன் தெரியும்.
ஸ்கிரீன்ஷாட் மட்டுமின்றி க்விக்டைம் செயலியில் ஸ்கிரீன் ரெக்கார்டு செய்வதை ஆப்பிள் நிறுவனம் மேலும் எளிமையாக மாற்றியிருக்கிறது. இதே அப்டேட் கன்டினியூட்டி கேமரா வடிவில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. கன்டினியூட்டி கேமரா மூலம் பகைப்படங்களை எடுத்ததும், அவற்றை உடனடியாக மேக் கம்ப்யூட்டரில் தெரியும். இந்த அம்சம் புகைபப்டங்களை போன் கேமராவில் எடுக்கப்பட்டதும் நேரடியாக மேக் கணினிகளில் பார்க்கும் வசதியை வழங்குகிறது.
இத்துடன் நியூஸ் மற்றும் ஸ்டாக் செயலிகளும் புதிய இயங்குதளத்தில் வழங்கப்படுகிறது. மேலும் வாய்ஸ் மெமோஸ் வசதியும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. புதிய இயங்குதளத்தில் முற்றியும் புதிய ஃபைல் சிஸ்டம் மற்றும் விண்டோயிங் சர்வீஸ் வழங்கும் ஆப்ஷன் கொண்டிருக்கிறது. உங்களது அனுமதியின்றி உங்களின் தகவல்களை செயலிகள் இயக்குவதை தடுக்கும் பாதுகாப்பு அம்சம் மற்றும் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களுடன் இணைக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் டெவலப்பர் நிகழ்வில் மாற்றியமைக்கப்பட்ட மேக் ஆப் ஸ்டோர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மேக் ஆப் ஸ்டோரின் இடதுபுறத்தில் சைடுபார் மற்றும் எடிட்டோரியலுக்கு பெரிய பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகள் டிஸ்கவர், கிரியேட், வொர்க், பிளே, டெவலப், கேட்டகரீஸ், அப்டேட்ஸ் என பெயரிடப்பட்டுள்ளன.
ஃபேஸ்டைம் அம்சத்தில் இனி க்ரூப் கால்களை மேற்கொள்ள முடியும். அந்த வகையில் இனி ஒரே சமயத்தில் 32 பேருடன் க்ரூப் கால்களை பேச முடியும். இத்துடன் வீடியோவில் ஒருவர் பேசும் போது, அவரின் வீடியோ தானாக பெரியதாகும் படி நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. க்ரூப் ஃபேஸ்டைம் அம்சம் ஐபோன், ஐபேட் மற்றும் ஐமேக் சாதனங்களில் வேலை செய்யும்.
இதே நிகழ்வில் மெட்டல் API மூலம் மேம்படுத்தப்பட்ட கிராஃபிக்ஸ் மற்றும் மேக் கம்ப்யூட்டர்களில் மெஷின் லெர்னிங் தொழில்நுட்பத்தை பயில கிரியேட் ML எனும் டூல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கிராஸ்-பிளாட்ஃபார்ம் ஃபிரேம்வொர்க் தளத்தில் ஆப்பிள் மேற்கொண்டு இருக்கும் புதிய மாற்றம் காரணமாக டெவலப்பர்கள் தங்களது செயலிகளை ஐஓஎஸ் மற்றும் மேக் ஓஎஸ் தளங்களில் வழங்க முடியும். #WWDC2018 #macOSMojave #mojave
ஆப்பிள் நிறுவனத்தின் 2018 டெவலப்பர்கள் நிகழ்வில் ஐஓஎஸ் 12 இயங்குதளம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #WWDC2018 #iOS12
கலிஃபோர்னியா:
ஆப்பிள் நிறுவனத்தின் 2018 டெவலப்பர் நிகழ்வு கலிஃபோர்னியாவில் உள்ள சான் ஜோஸ் நகரில் துவங்கியது. மென்பொருள் சார்ந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் 12 இயங்குதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் இயங்கும் புதிய ஐஓஎஸ் தளத்தில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவன மென்பொருள் பொறியியல் துறைக்கான மூத்த துணை தலைவர் க்ரியாக் ஃபெட்ரிகி ஐஓஎஸ் 12 இயங்குதளத்தை அறிமுகம் செய்த டெவலப்பர் நிகழ்வை துவங்கி வைத்தார். தற்சமயம் ஐஓஎஸ் 11 இயங்குதளம் கொண்ட அனைத்து சாதனங்களிலும் ஐஓஎஸ் 12 அப்டேட் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஐஓஎஸ் 12:
புதிய இயங்குதளத்தில் ஆப்பிள் நிறுவனம் ஆக்மென்ட்டெட் ரியாலி்டி எஃபெக்ட்களை வழங்க USDZ எனும் புதிய ஃபார்மேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஃபார்மேட் கொண்டு பல்வேறு வசதிகளை வழங்க ஆப்பிள் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. அந்த வகையில் அடோப் நிறுவனம் மெஷர் எனும் புதிய ஏஆர் செயலியை அறிமுகம் செய்துள்ளது.
ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் அடுத்த தலைமுறை ஏஆர் கிட் 2 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் சிறப்பான ஃபேஸ் டிராக்கிங், முக அங்கீகார அம்சத்தை மேம்படுத்துகிறது. ஷேர்டு எக்ஸ்பீரியன்சஸ் அம்சம் ஒரே சமயத்தில் பலருடன் ஏஆர் செயலியில் உரையாடவும், விளையாடவும் வழி செய்கிறது.
புதிய இயங்குதளம் இயங்கும் அனைத்து சாதனங்களிலும் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் மேம்படுத்தப்பட்ட போட்டோஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய செயலியில் தேடல் அம்சம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் டைப் செய்யும் முன்பே உங்களுக்கான பரிந்துரைகளை வழங்குகிறது.

இத்துடன் ஃபார் யு எனும் புதிய டேப் நீங்கள் எடுத்த புகைப்படங்களை எடுத்துக் காண்பிப்பதோடு அவற்றில் எஃபெக்ட்களை சேர்ப்பது மற்றும் அவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள பரிந்துரை செய்யும். ஐஓஎஸ் 12 தானாகவே நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய புகைப்படங்களை தேர்வு செய்து அவற்றை யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும் பரிந்துரைக்கும்.
ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் சிரி அதிகம் மேம்படுத்தப்பட்டு பல்வேறு புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நீங்கள் பயன்படுத்தும் செயலி குறித்த நோட்டிஃபிகேஷன்களை சரியான நேரத்தில் உங்களுக்கு நினைவூட்டும். அதாவது ஜிம் சார்ந்த செயலிகளை டிராக் செய்ய பயன்படுத்தும் பட்சத்தில், நீங்கள் அங்கு சென்றும் செயலியை இயக்க வேண்டும் என சிரி உங்களுக்கு நினைவூட்டும்.
ஐபேட்களுக்கான நியூஸ் செயலி ஐஓஎஸ் 12 தளத்தில் புதிய சைடுபார் கொண்டிருக்கிறது. இதன்மூலம் ஒரு சேவையில் இருந்து மற்றொரு சேவைக்கு மிக எளிமையாக மாற முடியும். இதே போன்று கிடைக்கும் புதிய பிரவுஸ் அம்சம் கொண்டு பல்வேறு புதிய சேனல்கள் மற்றும் தலைப்புகளை கண்டறிய முடியும். கூடுதலாக நியூஸ் ஆப் ஸ்டாக்ஸ் செயலியுடன் இணைக்கப்படுகிறது. இதனால் வணிகம் சார்ந்த செய்திகளை ஸ்டாக்ஸ் செயலியில் வாசிக்கும் போதே வணிகம் சார்ந்த இதர செய்திகளையும் படிக்க முடியும்.

இத்துடன் ஐஓஎஸ் செயலியில் டு நாட் டிஸ்டர்ப் (DND) சேவையும் சேர்க்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் DND அம்சம் உங்களது நோட்டிஃபிகேஷன்களை மறைத்து, லாக் ஸ்கிரீனை சுத்தமாக காண்பிக்கும். இத்துடன் ஒவ்வொரு செயலியிலும் நீங்கள் பயன்படுத்தும் நேரத்தை மிக நுனுக்கமாக காண்பிக்கும். இதனால் ஒவ்வொரு செயலியில் நீங்கள் செலவழிக்கும் நேரத்தை சரியாக தெரிந்து கொள்ள முடியும்.
மேலும் நீங்கள் ஒவ்வொரு செயலியை பயன்படுத்த குறிப்பிட்ட நேரத்தை செட் செய்து விட்டால், நீங்கள் செட் செய்த நேரத்தில் உங்களுக்கு நோட்டிஃபிகேஷன் மூலம் எச்சரிக்கை செய்யப்படும். இதன் மூலம் செயலிகளில் அதிக நேரம் செலவழிப்பதை தவிர்க்க முடியும்.
ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் வரும் நோட்டிஃபிகேஷன்கள் ஒன்றிணைக்கப்படுகிறது. அந்த வகையில் ஒரே செயலியில் இருந்து உங்களுக்கு வரும் அனைத்து நோட்டிஃபிகேஷன்களும் பட்டியலிடப்படும், அவற்றை க்ளிக் செய்ததும் பட்டியலை முழுமையாக பார்க்க முடியும். இந்த பட்டியலை வலது புறம் ஸ்வைப் செய்தால் அனைத்தையும் க்ளியர் செய்ய முடியும்.

டங் டிடெக்ஷன் அம்சம் ஐஓஎஸ் 12 தளத்தின் சுவாரஸ்ய அம்சமாக இருக்கிறது. இந்த அம்சம் அனிமோஜிக்களின் நாக்கை வெளியேற்றும். இத்துடன் அனிமோஜியின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக மீமோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் உங்களது முகத்தை அனிமேஷன் வடிவில் உருவாக்கி ஐமெசேஜில் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. மெசேஜஸ் கேமராவில் இதுபோன்ற பல்வேறு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஃபேஸ்டைம் அம்சத்தில் இனி க்ரூப் கால்களை மேற்கொள்ள முடியும். அந்த வகையில் இனி ஒரே சமயத்தில் 32 பேருடன் க்ரூப் கால்களை பேச முடியும். இத்துடன் வீடியோவில் ஒருவர் பேசும் போது, அவரின் வீடியோ தானாக பெரியதாகும் படி நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. க்ரூப் ஃபேஸ்டைம் அம்சம் ஐபோன், ஐபேட் மற்றும் ஐமேக் சாதனங்களில் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் வாட்ச் கொண்டு ஆடியோ முறையிலும் பதில் அளிக்க முடியும்.
வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக பதாஞ்சலி அறிமுகம் செய்த கிம்போ செயலி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பிளே ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
பாபா ராம்தேவின் பதாஞ்சலி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கிம்போ எனும் குறுந்தகவல் செயலியை வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக வெளியிட்டது.
ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் வெளியான சில மணி நேரங்களில் செயலியின் பாதுகாப்பு குறித்து பலரும் குற்றஞ்சாட்டினர். பாதுகாப்பு வல்லுநர்கள் செயலியின் பாதுகாப்பு குறித்த விமர்சனங்களை தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில் வெளியான ஒரே நாளில் கிம்போ செயலி ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டதோடு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது.
செயலி நீக்கப்பட்டதை ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருக்கும் கிம்போ பிளே ஸ்டோர்களில் கிம்போ பெயரில் இருக்கும் மற்ற போலி செயலிகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக செயலியை நீக்கியதற்கு அதிகப்படியான வரவேற்பு தான் முக்கிய காரணம் என கிம்போ சார்பில் தெரிவிக்கப்படுகிறது. எனினும் பாதுகாப்பு வல்லுநர்கள் இந்த காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற வாக்கில் தகவல் தெரிவித்துள்ளனர்.

பிளே ஸ்டோரில் கிம்போ ஆப் என டைப் செய்தாலே, ஒரே பெயரில் சில எழுத்து மாற்றங்களுடன் பல செயலிகள் வெவ்வேறு டெவலப்பர்களின் பெயரில் இடம்பெற்றிருக்கின்றன. நாளுக்கு நாள் கிம்போ பெயரில் கிடைக்கும் போலி செயலிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதால் வாடிக்கையாளர்கள் இவற்றை டவுன்லோடு செய்யாமல் இருப்பது நல்லது.
ஏற்கனவே குறிப்பிடப்பட்டதை போன்று அதிகாரப்பூர்வ கிம்போ ஆப் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. எனினும் பதாஞ்சலி சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் தகவல்களில் இந்த செயலி விரைவில் மீண்டும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் தளத்தில் டிரென்டிங் செக்ஷன் பகுதியை நீக்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கலிஃபோர்னியா:
ஃபேஸ்புக் தளத்தில் இருக்கும் டிரென்டிங் செக்ஷனை அகற்றுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஃபேஸ்புக்கில் எதிர்கால செய்தி அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக்கில் அதிக டிரென்டிங் ஆகும் தலைப்புகளை அதன் பயனர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில் 2014-ம் ஆண்டு வாக்கில் டிரென்டிங் செக்ஷன் சேர்க்கப்பட்டது.
ஐந்து நாடுகளில் மட்டும் வழங்கப்பட்டு இருந்த டிரென்டிங் செக்ஷன் வெறும் 1.5% க்ளிக்களை மட்டுமே பெற்று வருவதால் இந்த அம்சம் நீக்கப்படுகிறது. இதே காரணத்திற்காக அடுத்த வாரம் முதல் ஃபேஸ்புக்கில் டிரென்டிங் பகுதி நீக்கப்பட்டு அதன் சேவைகள் மற்றும் மூன்றாம் தரப்பு இன்டகிரேஷன்களும் நீக்கப்படுகிறது.

ஃபேஸ்புக்கில் வரும் செய்திகள் உண்மையானதாகவும், நம்பத்தகுந்த நிறுவனங்கள் தான் செய்திகளை வழங்குகின்றன என்பதை உறுதி செய்ய புதிய வழிமுறைகளை ஃபேஸ்புக் கண்டறிந்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த சுமார் 80 செய்தி நிறுவனங்களை கொண்டு பிரேக்கிங் நியூஸ் லேபெல் ஆப்ஷனை ஃபேஸ்புக் சோதனை செய்து வருகிறது. இவை செய்தி நிறுவனங்கள் தங்களது நியூஸ் ஃபீட்களில் பிரேக்கிங் நியூஸ் இன்டிகேட்டரை பதிவிட வழி செய்யும்.
ஃபேஸ்புக் செயலியின் ஈவென்ட்ஸ் பகுதியில் டுடே இன் லோக்கல் நியூஸ் (Today In local news) எனும் அம்சம் பிரத்யேகமாக வழங்க ஃபேஸ்புக் பணியாற்றி வரும் நிலையில், ஃபேஸ்புக் தளத்திலும் இதேபோன்ற அம்சத்தை வழங்கலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் நேரலை மற்றும் தினசரி செய்திகளை தெரிந்து கொள்ள முடியும்.
சியோமி நிறுவனத்தின் Mi டிவி4 மாடல் Mi8 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பீஜிங்:
சியோமி நிறுவனத்தின் Mi8 நிகழ்வில் 75-இன்ச் திரை கொண்ட Mi டிவி4 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய சியோமி ஸ்மார்ட் டிவி 11.4 மில்லிமீட்டர் மெல்லிய மெட்டல் பாடி மற்றும் அலுமினியம் ஃபிரேம் கொண்டிருக்கிறது. சியோமி இதுவரை அறிமுகம் செய்ததில் மிகப்பெரிய எல்இடி டிவி மாடலாக புதிய Mi டிவி4 இருக்கிறது.
கடந்த ஆண்டு சியோமி நிறுவனம் 49-இன்ச், 55-இன்ச் மற்றும் 65-இன்ச் Mi டிவி மாடல்களை அறிமுகம் செய்தது. புதி்ய Mi டிவி4 சியோ ஏஐ குரல் அங்கீகார வசதி, ஆன்ட்ராய்டு இயங்குதளம் சார்ந்து இயங்கும் பேட்ச்வால் யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் டால்பி மற்றும் டிடிஎஸ் ஆடியோ வசதி வழங்கப்பட்டுள்ளது.
ப்ளூடூத் மற்றும் இன்ஃப்ராரெட் மூலம் இயங்கும் Mi ரிமோட் கன்ட்ரோல் வழங்கப்படுகிறது. இது Miடிவி மட்டுமின்றி, வீட்டு உபயோக சாதனங்கள் மற்றும் செட் டாப் பாக்ஸ் போன்ற சாதனங்களை இயக்கும் வசதி கொண்டிருக்கிறது.

சியோமி Mi டிவி 4 75-இன்ச் சிறப்பம்சங்கள்:
- 75-இன்ச் 3840x2160 பிக்சல் 4K டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் T966 கார்டெக்ஸ்-A53 பிராசஸர்
- மாலி-T830 MP2 GPU
- 2 ஜிபி DDR4 டூயல்-சேனல் ரேம்
- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- MIUI டிவி மற்றும் பேட்ச்வால்
- சியோ ஏஐ குரல் அங்கீகார வசதி
- வைபை, ப்ளூடூத், Mi போர்ட், 3 x HDMI 2.0, AV, 2 x யுஎஸ்பி, 1 x ஈத்தர்நெட்
- 2x 8W ஸ்பீக்கர், டால்பி ஆடியோ, டிடிஎஸ்-ஹெச்டி
சியோமி Mi டிவி4 75 இன்ச் ஹெச்டிஆர் டிவி விலை 8999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.94,790) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் புதிய Mi டிவி4 மாடல் ஜூன் 6-ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
இந்திய வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் செயலியில் டிஜிட்டல் பேமென்ட்ஸ் வசதியின் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் யுபிஐ சார்ந்த டிஜிட்டல் பண பரிமாற்றங்களை வழங்கும் சேவைகளுக்கான போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் பேமென்ட்ஸ் வசதி வரும் நாட்களில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
செயலியில் பேமென்ட்ஸ் வசதி வழங்குவதற்கான பணிகளை செய்து முடிக்கப்பட்டு விட்ட நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்டவை சேவைகளை வழங்க காத்திருக்கின்றது. இதற்கான பணிகள் முறையான சிஸ்டம்கள் இல்லாததால் தாமதமாகி வருகிறது.
அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் முதற்கட்டமாக பாரத ஸ்டேட் வங்கியின் சேவையை மட்டும் சப்போர்ட் செய்யும் படி பேமென்ட்ஸ் வசதியை வழங்க ஃபேஸ்புக் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மூன்று நிறுவனங்களுடன் இணைந்து இந்த வசதி வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.

2018 பிப்ரவரி மாதம் முதல் பீட்டா செயலியில் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், வாட்ஸ்அப் பேமென்ட்ஸ் அம்சத்தில் ரிக்வஸ்ட் மனி (request money) ஆப்ஷன் இன்வைட் முறையில் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. வாட்ஸ்அப் பயனர் எண்ணிக்கையை வைத்து பார்க்கும் போது பேமென்ட்ஸ் அம்சம் பேடிஎம் மற்றும் கூகுள் டெஸ் உள்ளிட்டவற்றுக்கு பலத்த போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தற்சமயம் வரை வாட்ஸ்அப் செயலியை சுமார் 20 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இது பேடிஎம் சேவையை பயன்படுத்துவோரை விட சுமார் 20 மடங்கு அதிகம் ஆகும். முன்னதாக அலிபாபவின் பேடிஎம் வாட்ஸ்அப் யுபிஐ பேமென்ட் தளம் முறையான பாதுகாப்பு கொண்டிருக்கவில்லை என குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சோனி நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்திருந்த X9000F 4K HDR ஆன்ட்ராய்டு டிவி சீரிஸ் 65 இன்ச் மற்றும் 85 இன்ச் மாடல்களின் இந்திய விற்பனை துவங்கியது.
புதுடெல்லி:
சோனி நிறுவனம் X9000F சீரிஸ் 4K ஹெச்டிஆர் டிவிக்கள் இம்மாத துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. முன்னதாக இந்த டிவி இந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய சோனி டிவி மாடல்களில் X1 எக்ஸ்ட்ரீம் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ஸ்டிரைக்கிங் ஹைலைட்கள், டீப்பர் டார்க் மற்றும் வைப்ரன்ட் கலர்களை பிரதிபலிக்கிறது. இத்துடன் ஆப்ஜக்ட் சார்ந்த ஹெச்டிஆர் ரீமாஸ்டர், சூப்பர்பிட் மேப்பிங் 4K ஹெச்டிஆர் மற்றும் டூயல் டேட்டாபேஸ் பிராசஸிங் வழங்கப்பட்டுள்ளது.
ஆன்ட்ராய்டு டிவி வெர்ஷன் 7.0 மற்றும் சோனியின் பிரத்யேக யூசர் இன்டர்ஃபேஸ் (UI) மற்றும் க்ரோம்காஸ்ட் பில்ட்-இன் வசதியை வழங்குகிறது. இதன் டிரைலூமினஸ் டிஸ்ப்ளே சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறங்களை மிகவும் கச்சிதமாக பிரதிபலிக்கிறது. X டென்ட் செய்யப்பட்ட டைனமிக் ரேஞ்ச் PRO ஹெச்டிஆர் மற்றும் ஹெச்டிஆர் அல்லாத தரவுகளை தனியே வித்தியாசப்படுத்தி, பின்னணி நிறங்களை தானாக மாற்றியமைத்து XDR கான்ட்ராஸ்ட் தரத்தில் வீடியோக்களை வழங்குகிறது.
சோனியின் டைரக்ட் எல்இடி லோக்கல் டிம்மிங் மற்றும் பேக்லைட் பூஸ்டிங் அல்காரிதம் கொண்டு X-மோஷன் கிளேரிட்டி அம்சம் வேகமான ஆக்ஷன் படங்களை மிகவும் நேர்த்தியாகவும், தெளிவாகவும் காட்சிப்படுத்துகிறது. இதனால் புகைப்படங்கள் அதிக தரம் பெறுவதோடு பிரைட்னஸ் அளவில் எவ்வித இழப்பும் ஏற்படாது.

சோனி பிரேவியா X9000F சிறப்பம்சங்கள்:
- 55/65/85-இன்ச் 3840x2160 பிக்சல் 4K HDR டிரைலூமினஸ் டிஸ்ப்ளே
- X-மோஷன் கிளேரிட்டி
- 4K ஹெச்டிஆர் பிராசஸர் X1 எக்ஸ்ட்ரீம்
- டைனமிக் கான்ட்ராஸ்ட் என்ஹான்சர்
- ஆப்ஜக்ட் சார்ந்த ஹெச்டிஆர் ரீமாஸ்டர்
- X-டென்ட் செய்யப்பட்ட டைனமிக் ரேஞ்ச் ப்ரோ
- 4K X-ரியாலிட்டி ப்ரோ
- 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
- ஆன்ட்ராய்டு டிவி 7.0
- க்ரோகாஸ்ட் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் பில்ட் இன் வசதி
- வாய்ஸ் சர்ச் வசதி
- வைபை, ப்ளூடூத், யுஎஸ்பிx3, 1xஈத்தர்நெட்
- 10 W+10 W ஸ்பீக்கர், டால்பி டிஜிட்டல்
- டால்பி டிஜிட்டல் பிளஸ், டால்பி பல்ஸ்
- டிடிஎஸ் டிஜிட்டல் சரவுன்ட்
சோனி KD-85X9000F மற்றும் KD-65X9000F மாடல்கள் இந்தியாவில் முறையே ரூ.1,29,900 மற்றும் ரூ.3,39,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை இந்தியா முழுக்க இயங்கி வரும் அனைத்து சோனி விற்பனை மையங்களிலும், மற்ற மின்சாதன விற்பனை மையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. 55 இன்ச் சோனி பிரேவியா X9000F விலை ரூ.2,39,900 என நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் விற்பனை ஏற்கனவே துவங்கி தற்சமயம் நடைபெற்று வருகிறது.
ஆப்பிள் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் இலவசமாக ஐ-கிளவுட் ஸ்டோரேஜ் வழங்குவதாக அறிவித்துள்ளது.
கலிஃபோர்னியா:
ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் பயன்படுத்துவோர் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று ஐகிளவுட் ஸ்டோரேஜ் விரைவில் நிரம்பி விடுவது தான் எனலாம்.
ஐபோன் புகைப்படங்களை பேக்கப் செய்யும் போது இடையே: உங்களது ஐபோனினை பேக்கப் செய்ய ஐகிளவுடில் போதுமான ஸ்டோரேஜ் இல்லை என்ற தகவல் திரையில் தோன்றி பயனர்களை பதற்றத்தில் ஆழ்த்தும். நீண்ட காலமாக வாடிக்கையாளர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைக்கு தீர்வை ஆப்பிள் வழங்கியுள்ளது.
அதன்படி வாடிக்கையாளர்கள் ஒருமாதத்திற்கு ஐகிளவுட் ஸ்டோரேஜ் பயன்படுத்தலாம் என ஆப்பிள் அறிவித்துள்ளது. முன்னதாக அனைத்து ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கு 5 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. 5 ஜிபி ஐ-கிளவுட் ஸ்டோரேஜ் திட்டம் 2011-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் டேட்டா பயன்பாடு சமீப காலங்களில் அதிகரித்து இருக்கும் நிலையில் டேட்டா அளவு கடந்த சில ஆண்டுகளில் நீட்டிக்கப்படாதது ஏன் என்பது மர்மமாகவே இருந்தது. ஆப்பிள் சார்பில் வழங்கப்படும் 5 ஜிபி டேட்டாவில் வாடிக்கையாளர்கள் அனைத்து வித டேட்டாக்களையும் பேக்கப் செய்ய வேண்டும் என்பதால், வாடிக்கையாளர்கள் அதிகளவு டேட்டாவை பேக்கப் செய்ய கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருந்து வருகிறது.
ஆப்பிள் இவ்வாறு இருக்க மறுபுறம் கூகுள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை அன்லிமிட்டெட் புகைப்படங்களை அதிக தரத்தில் பேக்கப் செய்ய வழி செய்கிறது. இதற்கு கூகுள் சார்பில் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. கூகுள் போட்டோஸ் செயலியில் இதற்கு அன்லிமிட்டெட் ஸ்பேஸ் வழங்கப்படுகிறது.
ஆப்பிள் தற்சமயம் அறிவித்து இருக்கும் ஐ-கிளவுட் ஸ்டோரேஜ் ஒரு மாதத்திற்கு மட்டுமே இலவசமாக வழங்கப்படுகிறது.
சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவிக்கள் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பீஜிங்:
சியோமி நிறுவனத்தின் நான்கு புதிய Mi டிவி 4 மாடல்கள் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து டிவி மாடல்களிலும் ஆன்ட்ராய்டு ஓஎஸ் சார்ந்த பேட்ச்வால் யூசர் இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டுள்ளது. இது டீப் லேர்னிங் எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்குகிறது.
4K டிவியுடன் Mi ரிமோட் கன்ட்ரோல் கொண்டுள்ளது. இன்ஃப்ராரெட் தொழில்நுட்பத்துடன் ப்ளூடூத் கொண்டுள்ளதால் வீட்டின் பல்வேறு சாதனங்கள், செட் டாப் பாக்ஸ் மற்றும் குரல் அங்கீகார வசதியை கொண்டுள்ளது.

சியோமி Mi டிவி 4எஸ் (55 இன்ச் கர்வ்டு) சிறப்பம்சங்கள்:
- 55 இன்ச் 3840x2160 பிக்சல் 4K கர்வ்டு எல்இடி டிஸ்ப்ளே
- 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் கார்டெக்ஸ்-A53 சிப்செட்
- மாலி-450 MP3 GPU
- 2 ஜிபி ரேம்
- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
- MIUI டிவி சார்ந்த ஆன்ட்ராய்டு
- வைபை 802.11 ac (2.4 / 5GHz), ப்ளூடூத் 4.2 LE, 3 x HDMI, AV, 2 x USB, 1 x ஈத்தர்நெட்
- ஹெச்டிஆர் 10 மற்றும் HLG,H.264, H.265, Real, MPEG1/2/4, WMV3, VC-1
- 2 x 8 வாட் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ / DTS- HD ஆடியோ டூயல் கோடிங்

சியோமி Mi டிவி 4X (55-இன்ச்) சிறப்பம்சங்கள்:
- 55 இன்ச் 3840x2160 பிக்சல் 4K எல்இடி டிஸ்ப்ளே
- 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் கார்டெக்ஸ்-A53 சிப்செட்
- மாலி-450 MP3 GPU
- 2 ஜிபி ரேம்
- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
- MIUI டிவி சார்ந்த ஆன்ட்ராய்டு
- வைபை 802.11 ac (2.4 / 5GHz), ப்ளூடூத் 4.2 LE, 3 x HDMI, AV, 2 x USB, 1 x ஈத்தர்நெட்
- ஹெச்டிஆர் 10 மற்றும் HLG,H.264, H.265, Real, MPEG1/2/4, WMV3, VC-1
- 2 x 8 வாட் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ / DTS- HD ஆடியோ டூயல் கோடிங்

சியோமி Mi டிவி 4S (43-இன்ச்) சிறப்பம்சங்கள்:
- 43-இன்ச் 3840x2160 பிக்சல் 4K எல்இடி டிஸ்ப்ளே
- 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் கார்டெக்ஸ்-A53 சிப்செட்
- மாலி-450 MP3 GPU
- 1 ஜிபி ரேம்
- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
- MIUI டிவி சார்ந்த ஆன்ட்ராய்டு
- வைபை 802.11 ac (2.4 / 5GHz), ப்ளூடூத் 4.2 LE, 3 x HDMI, AV, 2 x USB, 1 x ஈத்தர்நெட்
- ஹெச்டிஆர் 10 மற்றும் HLG,H.264, H.265, Real, MPEG1/2/4, WMV3, VC-1
- 2 x 6 வாட் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ / DTS- HD ஆடியோ டூயல் கோடிங்

சியோமி Mi டிவி 4சி (32-இன்ச்) சிறப்பம்சங்கள்:
- 32 இன்ச் 1366x768 பிக்சல் ஹெச்டி எல்சிடி டிஸ்ப்ளே
- 1.5 ஜிகாஹெர்ட்ஸ் மல்டிகோர் 64-பிட் பிராசஸர்
- மால்டிகோர் GPU
- 1 ஜிபி ரேம்
- 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
- MIUI டிவி சார்ந்த ஆன்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால்
- வைபை 802.11 ac (2.4 / 5GHz), 2 x HDMI, AV, 2 x USB, 1 x ஈத்தர்நெட், S/PDIF போர்ட்
- 2 x 8 வாட் ஸ்பீக்கர், DTS- HD ஆடியோ
சியோமி Mi டிவி 4எஸ் (55-இன்ச்) கர்வ்டு, Mi டிவி 4X 55 இன்ச், Mi டிவி 4எஸ் 43 இன்ச் மற்றும் Mi டிவி 4சி 32 இன்ச் மாடல்களின் விலை முறையே 3299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.34,990), 2799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.29,690), 1799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.19,085) மற்றும் 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,600) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் புதிய Mi டிவி விற்பனை மே 31-ம் தேதி முதல் துவங்குகிறது.
வாட்ஸ்அப் செயலியில் புதிய பிழை கண்டறியப்பட்டுள்ளது. இது என்ன செய்யும் என்ற தகவலை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
வாட்ஸ்அப் செயலியில் புதிய பிழை கண்டறியப்பட்டுள்ளது. இது செயலியில் நீங்கள் பிளாக் செய்தவர்களையும் உங்களுக்கு குறுந்தகவல் அனுப்ப வழி செய்கிறது.
தற்சமயம் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய பிழை வாட்ஸ்அப் செயலியில் நீங்கள் பிளாக் செய்த கான்டாக்ட்கள், எப்படியோ உங்களுக்கு குறுந்தகவல் அனுப்ப முடிகிறது. புதிய பிழையை வாட்ஸ்அப் உறுதி செய்யவோ இதை சரி செய்வதற்கான அப்டேட் வழங்குவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
எனினும் நீங்கள் பிளாக் செய்தவர்கள் உங்களுக்கு குறுந்தகவல் அனுப்பாமல் இருக்க இந்த வழிமுறையை பின்பற்றலாம். முதலில் நீங்கள் பிளாக் செய்த கான்டாக்ட்-ஐ அன்பிளாக் செய்து பின் மீண்டும் பிளாக் செய்யலாம். இவ்வாறு செய்தால் பிளாக் செய்த கான்டாக்ட் உங்களுக்கு அனுப்பும் குறுந்தகவல்கள் எதுவும் வராது.
பிளாக் செய்த கான்டாக்ட்களுக்கு குறுந்தகவல் அனுப்புவதோடு இந்த பிழை அவர்களின் ஸ்டேட்டஸ், ப்ரோஃபைல் தகவல் உள்ளிட்ட தகவல்களையும் பார்க்க வழி செய்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பிளாக் செய்த கான்டாக்ட், பிளாக் செய்யாத கான்டாக்ட் பெறும் அனைத்து அம்சங்களையும் பெற முடிகிறது. இந்த பிழை ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்ட அப்டேட் வாட்ஸ்அப் க்ரூப்களில் டிஸ்க்ரிப்ஷன் சேர்ப்பது, க்ரூப் அட்மின்களுக்கு கூடுதலாக புதிய வசதிகள், மென்ஷன்ஸ் அம்சம் மற்றும் க்ரூப்களில் உள்ளவர்களை தேடும் அம்சங்களை வழங்கியது. சமீபத்தில் க்ரூப் வீடியோ காலிங் அம்சம் சர்வர் சார்ந்த அப்டேட் மூலம் வழங்கப்பட்டது.
ரேசர் நிறுவனத்தின் ரேசர் பிளேடு லேப்டாப் மற்றும் கோர் X தன்டர்போல்ட் 3 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கலிஃபோர்னியா:
ரேசர் நிறுவனத்தின் ரேசர் பிளேடு லேப்டாப் மற்றும் கோர் X தன்டர்போல்ட் 3 அறிமுகம் செயய்ப்பட்டது. புதிய ரேசர் பிளேடு லேப்டாப் 15.6 இன்ச் டிஸ்ப்ளே, 8-ம் தலைமுறை இன்செல் கோர் பிராசஸர் கொண்டுள்ளது. 15.6 இன்ச் அளவில் உலகின் சிறிய கேமிங் லேப்டாப் மாடலாக ரேசர் பிளேடு இருக்கிறது.
ரேசர் பிளேடு லேப்டாப் 15.6 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே, இதன் 4K டிஸ்ப்ளே வேரியன்ட் மல்டி டச் வசதி, 4.9 மில்லிமீட்டர் அளவு மெல்லிய பெசல்களை கொண்டுள்ளது. அடக்கமான வடிவமைப்பு, ஸ்கிராட்ச் ரெசிஸ்டண்ட் அனோடைஸ் செய்யப்பட்ட பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.
ரேசர் கோர் X என்பது தன்டர்போல்ட் 3 எக்ஸ்டெர்னல் கிராஃபிக்ஸ் ஆகும். இது கேமிங் திறனை அதிகப்படுத்தும் வசதி கொண்டுள்ளது. ரேசர் கோர் சீரிஸ் எக்ஸ்டெர்னல் கிராஃபிக்ஸ் கோர் வி2 மற்றும் கோர் X தன்டர்போல்ட் 3 வசதி கொண்ட மேக் லேப்டாப்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இன்டிகிரேட் செய்யப்பட்ட கிராஃபிக்ஸ் லேப்டாப்-ஐ டெஸ்க்டாப் தர கேமிங் இயந்திரங்களாக மாற்றும். இது விண்டோஸ் மற்றும் மேக் சாதனங்களுடன் இணைந்து வேலை செய்யும் வசதியை கொண்டுள்ளது. அதிகபட்சம் 3-ஸ்லாட் அகலமான டெஸ்க்டாப் கிராஃபிக்ஸ் கார்டுகளை தாங்குவதோடு சமீபத்திய டெஸ்க்டாப் PCle கிராஃபிக்ஸ் கார்டுகளையும் சப்போர்ட் செய்யும்.

ரேசர் பிளேடு கேமிங் லேப்டாப் சிறப்பம்சங்கள்:
- 15.6 இன்ச் 1920x1080 பிக்சல் அதிகபட்சம் 144Hz / 4K 3840x2160 டிஸ்ப்ளே
- இன்டெல் கோர் i7-8750H (8th Gen) பிராசஸர்
- 2.2 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 4.1 ஜிகாஹெர்ட்ஸ் வரை டர்போ பூஸ்ட்
- NVIDIA GeForce GTX 1060 Max-Q / NVIDIA GeForce GTX 1070 Max-Q
- அதிகபட்சம் 32 ஜிபி ரேம்
- அதிகபட்சம் 512 ஜிபி PCIe SSD, 2000 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
- விண்டோஸ் 10
- 1 எம்பி வெப்கேமரா
- வைபை, ப்ளூடூத், தன்டர்போல்ட் 3 (யுஎஸ்பி-சி) x 1, யுஎஸ்பி 3.1x 3
- மினி டிஸ்ப்ளே போர்ட் 1.4 x 1
- 3 செல்கள் 48 Whrs பேட்டரி

விலை மற்றும் விற்பனை:
ரேசர் பிளேடு லேப்டாப் 15.6 இன்ச் ஃபுல் ஹெச்டி 60 ஜிகாஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே கொண்ட மாடலின் விலை 1899.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,29,138) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே மாடலின் 144 ஜிகாஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே மாடல் விலை 2199.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,49,610) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரேசர் பிளேடு லேப்டாப் 4K டிஸ்ப்ளே கொண்ட மாடலின் விலை 2899.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,97,213) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முதறகட்டமாக ரேசர் கோர் X லேப்டாப் அமெரிக்கா, கனடா, லண்டன், ஃபிரான்ஸ், ஜெர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் மற்ற நாடுகளில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ காலிங் செய்யும் வசதி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் வழங்கப்படுகிறது.
கலிஃபோர்னியா:
வாட்ஸ்அப் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் க்ரூப் வீடியோ காலிங் வசதி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் வழங்கப்படுகிறது.
புதிய அப்டேட் மூலம் வாடிக்கையாளர்கள் க்ரூப் வீடியோ கால் மேற்கொள்ள முடியும். பிப்ரவரி மாத வாக்கில் வாட்ஸ்அப் வெர்ஷன் 2.18.39 ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் க்ரூப் வீடியோ காலிங் வசதி வழங்கப்படுவதற்கான அறிகுறிகள் காணப்பட்டன.
வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ காலிங் வசதியில் க்ரூப்களில் இருக்கும் அதிகபட்சம் நான்கு பேருடன் வீடியோ கால் ஒரே சமயத்தில் பேச முடியும். புதிய அம்சம் ஏற்கனவே 2.18.145 பதிப்பில் வழங்கப்படுகிறது. புதிய அப்டேட் பெற்றவர்கள் மட்டுமின்றி இந்த அம்சத்தை பெற அதிர்ஷ்டம் இருக்க வேண்டும்.

புகைப்படம்: நன்றி WABetaInfo
க்ரூப் வீடியோ கால் அம்சம் தற்சமயம் சர்வெர் சார்ந்த அப்டேட் மூலம் வெளியிடப்பட்டு இருப்பதால் அனைவருக்கும் இந்த அம்சம் வழங்கப்படாமல் சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புதிய அம்சத்தை குறைந்தளவு வாடிக்கையாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
வாட்ஸ்அப் சோதனை செய்து வரும் மற்ற அம்சங்களை போன்று இல்லாமல் புதிய வசதியை இன்வைட் மூலமாக ஆக்டிவேட் செய்ய முடியாது. இதே நிலை ஐஓஎஸ் தளத்துக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ் தளத்தில் வாட்ஸ்அப் வெர்ஷன் 2.18.52 க்ரூப் வீடியோ காலிங் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
புதிய க்ரூப் காலிங் செய்ய வாட்ஸ்அப் செயலியில் நீங்கள் வீடியோ கால் செய்ய வேணடிய கான்டாக்ட்-ஐ தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது புதிய க்ரூப் காலிங் வசதி உங்களுக்கு வழங்கப்பட்டு இருந்தால், Add participant என்ற பட்டன் திரையில் தெரியும், இந்த பட்டன் தெரியாதபட்சத்தில் வீடியோ காலிங் செய்ய முடியாது.






