என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • புதிய P4 5G ஸ்மார்ட்போன் 7000mAh டைட்டன் பேட்டரியால் இயக்கப்படுகிறது.
    • ஸ்மார்ட்போனை 25 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்துவிடும்.

    ரியல்மி நிறுவனம் தனது P4 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை நாளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், ரியல்மி இந்தியாவின் தலைமை அதிகாரி பிரான்சிஸ் வோங், புதிய ஸ்மார்ட்போனின் விலை ரூ. 17,499 இல் இருந்து தொடங்கும் என்று அறிவித்து இருக்கிறார்.

    முன்னதாக ரியல்மி P3 5G ஸ்மார்ட்போன் ரூ. 16,999 இல் தொடங்கியது. மேலும் ரூ. 2000 வங்கி சலுகையுடன் ரூ. 14,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது.

    புதிய ரியல்மி P4 மாடல் இரட்டை-சிப்செட் கட்டமைப்பையும் கொண்டிருக்கும். இதில் மீடியாடெக் டிமென்சிட்டி 7400 அல்ட்ரா 5ஜி பிராசஸர் (SoC) மற்றும் பிரத்யேக பிக்சல்வொர்க்ஸ் விஷுவல் ப்ராசஸரை ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போனில் 6.77-இன்ச் FHD+ 144Hz HyperGlow AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

    புதிய P4 5G ஸ்மார்ட்போன் 7000mAh டைட்டன் பேட்டரியால் இயக்கப்படுகிறது. இத்துடன் 80W அல்ட்ரா சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இது ஸ்மார்ட்போனை 25 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்துவிடும். இந்த ஸ்மார்ட்போன் AI ஸ்மார்ட் சார்ஜிங், கேமிங்கிற்கான பைபாஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் போன்ற அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

    ரியல்மி P4 5G ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைடு லென்ஸ் மற்றும் 16MP IMX480 செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ரியல்மி P4 ஸ்மார்ட்போன்: ஸ்டீல் கிரே, எஞ்சின் புளூ மற்றும் ஃபோர்ஜ் ரெட் என மூன்று வண்ண வகைகளில் வழங்கப்படும். இது IP65 + IP66 தரச் சான்று பெற்ற டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் வருகிறது.

    நாளை (ஆகஸ்ட் 20) இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ரியல்மி P4 சீரிஸ் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா வலைதளங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.

    • ஆப்பிள் மியூசிக் ஆப்பில் 100 மில்லியனுக்கும் அதிகமான பாடல்கள் உள்ளது.
    • வாடிக்கையாளர்கள் MY Airtel APPல் சென்று இதை சரிபார்க்கலாம்.

    Prepaid வாடிக்கையாளர்களுக்கு 6 மாத இலவச Apple Music சேவையை ஏர்டெல் நிறுவனம்.வழங்க முடிவு செய்துள்ளது.

    Prepaid வாடிக்கையாளர்களுக்கு 6 மாத இலவச Apple Music சேவையை ஏர்டெல் நிறுவனம்.வழங்க முடிவு செய்துள்ளது.

    வாடிக்கையாளர்கள் MY Airtel APPல் சென்று இதை சரிபார்க்கலாம். ஆப்பிள் மியூசிக் ஆப்பில் 100 மில்லியனுக்கும் அதிகமான பாடல்கள் உள்ளது.

    மேலும், 6 மாதங்களுக்கு பிறகு Apple Music சேவை தொடர் வேண்டும் என்றால் மாதம் ரூ. 119 கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த HiOS 15 உடன் வருகிறது.
    • 18W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் வசதியும் உள்ளது.

    பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களில் அதிநவீன உயர்தர அம்சங்கள் வழங்கப்படுவது மிகவும் குறைவு தான். திரை பெரியதாக இருந்தால், ரிப்ரெஷ் ரேட்டில் சமரசம் இருக்கும். பேட்டரி பெரியதாக இருந்தால், சார்ஜிங் வேகம் குறைவாக இருக்கும். இருப்பினும், இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் கொஞ்சம் வித்தியாசமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய இன்ஃபினிக்ஸ் ஹாட் 60i 5G அதிக ரிப்ரெஷ் ரேட் கொண்ட பெரிய திரையைக் கொண்டுள்ளது மட்டுமல்லாமல், மிகப்பெரிய பேட்டரி மற்றும் அதிவேக சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் அருமையான AI அம்சங்களுடன் வருகிறது.

    இன்ஃபினிக்ஸ் ஹாட் 60i 5G அம்சங்கள்:

    புதிய இன்ஃபினிக்ஸ் ஹாட் 60i 5G ஒரு விசித்திரமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.75-இன்ச் HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. இது கேமிங் மற்றும் ஸ்க்ரோலிங்கில் மென்மையான அனுபவத்தை வழங்குகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 6400 சிப் கொண்டுள்ளது. இது 4 ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இவை மல்டி-டாஸ்கிங் செய்யும் போது சீரான அனுபவத்தை வழங்குகிறது. இதன் சிறப்பம்சங்களில் ஒன்று 6,000mAh பேட்டரி ஆகும், இது ஒரு முழு நாள் பயன்பாட்டை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 18W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் வசதியும் உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த HiOS 15 உடன் வருகிறது. கேமராவை பொருத்தவரை 2K வீடியோ பதிவு செய்யும் திறன் கொண்ட 50 MP பிரைமரி கேமரா, முன்பக்கத்தில் 5 MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் IP64 தர வாட்டர் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் வசதி கொண்டுள்ளது. பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 3.5mm ஹெட்போன் ஜாக் கொண்டுள்ளது.

    விலையைப் பொறுத்தவரை, இன்ஃபினிக்ஸ் ஹாட் 60i 5G 4 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை ரூ.9,299 ஆகும். இருப்பினும், வாங்குபவர்கள் ப்ரீ-பெய்டு கார்டு சலுகைகளுடன் முதல் விற்பனையில் ரூ.8,999க்கு அதைப் பெறலாம்.

    • கர்ப்ப ரோபோக்கள் தற்போது கிடைக்கும் இன்குபேட்டர்களுடன் தொடர்புடையவை அல்ல.
    • கருத்தரித்தல் முதல் பிரசவம் வரை முழு செயல்முறையும் கர்ப்ப ரோபோவின் கருப்பையில் நடைபெறுகிறது.

    கர்ப்பம் தரித்து, 10 மாதங்கள் குழந்தையை சுமந்து, பிரசவிக்கக்கூடிய மனித உருவ ரோபோக்களை சீன விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.

    சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜாங் கெஃபெங் தலைமையிலான குழு உலகின் முதல் 'கர்ப்ப ரோபோவை' உருவாக்கி வருகிறது.

    சீன ஊடக அறிக்கைகளின்படி, கர்ப்ப ரோபோக்கள் தற்போது கிடைக்கும் இன்குபேட்டர்களுடன் தொடர்புடையவை அல்ல. இந்த கர்ப்ப ரோபோக்கள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயற்கையாக உருவாக்கப்பட்ட கருப்பைகளைக் கொண்டுள்ளன.

    செயற்கை அம்னோடிக் திரவத்தால் நிரப்பப்பட்ட இந்த செயற்கை கருப்பை, மனித கருப்பை போலவே செயல்படுகிறது.

    நிஜ வாழ்க்கையில், கருத்தரித்தல் முதல் பிரசவம் வரை முழு செயல்முறையும் கர்ப்ப ரோபோவின் கருப்பையில் நடைபெறுகிறது.

    கருப்பையில் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் குழாய்கள் மூலம் வழங்கப்படுகின்றன.

    உண்மையில், இந்த செயற்கை கருப்பை ஒரு புதிய முறை அல்ல என்று டாக்டர் ஜாங் கூறினார்.

    விஞ்ஞானிகள் முன்பு பயோ பேக் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட செயற்கை கருப்பையின் உதவியுடன் ஒரு ஆட்டுக்குட்டியைப் பெற்றெடுத்ததாக அவர் விளக்கினார்.

    இந்த பயோ பேக் தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்துவதன் மூலம் கர்ப்ப ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

    கர்ப்ப ரோபோக்களின் மாதிரி அடுத்த ஆண்டு தயாராக இருக்கும் என்றும், இதற்கு ரூ. 12.96 லட்சம் வரை செலவாகும் என்றும் ஜாங் கூறினார். 

    • இது Perplexity நிறுவனத்தின் மதிப்பை விட 2 மடங்கு அதிகம் ஆகும்.
    • பல முதலீட்டாளர்கள் ஏற்கனவே ஒப்பந்தத்திற்கு முழு நிதி ஆதரவை வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

    உலகின் பிரபலமான தேடல் தலமான கூகுள் குரோமை வாங்க செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்அப் நிறுவனமான பெர்ப்ளெக்ஸிட்டி (Perplexity) முன்வந்துள்ளது.

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தலைமையிலான Perplexity நிறுவனம், குரோமுக்கு 34.5 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ. 3.02 லட்சம் கோடி) சலுகையை வழங்கியுள்ளது.

    இது Perplexity நிறுவனத்தின் மதிப்பை விட 2 மடங்கு அதிகம் ஆகும்.

    அமெரிக்க அரசாங்கத்தின், நம்பகத்தன்மை இன்மை குற்றச்சாட்டுகளால் கூகிள் தற்போது கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்கிறது.

    தேடுபொறி சந்தையில் ஏகபோகத்தைத் தடுக்க குரோமை விற்க வேண்டும் என்று அமெரிக்க நீதித்துறை பரிந்துரைத்து வரும் நேரத்தில், பெர்ப்ளெக்ஸிட்டி இந்த மிகப்பெரிய சலுகையை வழங்கி உள்ளது.

    இந்த ஒப்பந்தத்திற்குத் தேவையான நிதி வெளிப்புற முதலீட்டாளர்கள் மூலம் திரட்டப்படும் என்று பெர்ப்ளெக்ஸிட்டி தலைமை வணிக அதிகாரி டிமிட்ரி ஷெவெலென்கோ தெரிவித்தார்.

    ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, பல முதலீட்டாளர்கள் ஏற்கனவே ஒப்பந்தத்திற்கு முழு நிதி ஆதரவை வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

    சலுகையை உறுதிப்படுத்திய பெர்ப்ளெக்ஸிட்டி, ஒப்பந்தம் வெற்றியடைந்தால் குரோமில் முக்கிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படாது என்று விளக்கம் அளித்தது.

    பெர்ப்ளெக்ஸிட்டி தற்போது அதன் AI உடன் இயங்கும் 'காமெட்' (Comet) என்ற browser ஐ இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    • கைபேசியின் பேட்டரி 100W (வயர்டு) மற்றும் 50W (வயர்லெஸ்) வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது.
    • முன்பக்கத்தில், இது 32-மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.

    ஒப்போ நிறுவனத்தின் ஃபைண்ட் X9 அல்ட்ரா அதன் முந்தைய வெர்ஷனான ஃபைண்ட் X8 அல்ட்ராவை விட அதிக திறன் கொண்ட இரட்டை செல் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்படும் என்று டிப்ஸ்டர் தெரிவித்துள்ளார். ஒப்போ நிறுவனம் இந்த ஆண்டு மாடலில் இந்த மேம்படுத்தலை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் மெலிதான டிசைனையும் தக்க வைத்துக் கொள்ளும்.

    புதிய ஒப்போ ஃபைண்ட் X9 மற்றும் ஃபைண்ட் X9 ப்ரோ ஸ்மார்ட்போன்களுடன் வரும் மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் நான்கு கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. சமீபத்திய தகவல்களின்படி, இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    ஒப்போ ஃபைண்ட் X9 அல்ட்ரா எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெய்போவில் வெளியிட்ட தகவல்களில், ஒப்போ ஸ்மார்ட்போன் இரண்டு 3,425mAh செல்களைக் கொண்ட இரட்டை செல் 7,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி 100W (வயர்டு) மற்றும் 50W (வயர்லெஸ்) ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது.

    புதிய ஒப்போ ஃபைண்ட் X9 அல்ட்ரா அதன் முந்தைய ஸ்மார்ட்போனை போலவே ஒரு தட்டையான தோற்றத்தை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது SM8850 என்ற மாடல் நம்பர் கொண்ட பிராசஸர் மூலம் இயக்கப்படலாம். இது விரைவில் வெளியாக இருக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட் ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    • இது பாரம்பரிய கற்பித்தல் மாதிரியையே தலைகீழாக மாற்றுகிறது.
    • சீனாவில் மாணவரின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப கற்றல் செயல்முறை இருக்கிறது.

    20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து இந்தியாவை விட சீனா மிக வேகமாக முன்னேறியுள்ளது.

    கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக நிலைகளில் இரு நாடுகளுக்கும் இடையில் பெரிய இடைவெளி உள்ளது.

    உலக அரங்கில் சீனாவின் எழுச்சிக்கு பெரும்பாலும் செயல்முறை கல்வி (Practical education) மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதே காரணம் என்று பல கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    கல்வியை நவீனமயமாக்குவது சீனாவை நவீனமயமாக்குவதற்கு மிக முக்கியமானது. குறிப்பாக சமீப காலங்களில் கல்வியில் மனப்பாடம் செய்யும் கற்றல் முறையை குறைத்துள்ளது.

    அதை தாண்டி, நிஜ உலக சூழ்நிலைகளுக்குப் பொருந்தக்கூடிய திறன்களை வளர்ப்பதற்கு அதிகளவில் செயல்முறை கற்றலுக்கு சீன கல்விமுறை முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி உள்ளது.


    விவசாயம், கைவினைப்பொருட்கள் செய்தல் முதல் தொழில்நுட்ப திறன்கள் வரை செயல்முறையாக கற்றுத் தரப்படுகிறது. கல்விச் சுற்றுலாக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

    மாணவர்களின் கற்றல், விமர்சன ரீதியாக சிந்திக்கும் திறன், புதுமைகளை உருவாக்குதல் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனை வளர்ப்பதே இதன் குறிக்கோள்.

    இது பாரம்பரிய கற்பித்தல் மாதிரியையே தலைகீழாக மாற்றுகிறது. ஆசிரியர்கள் வகுப்பில் பாடம் நடத்தி, மாணவர்கள் வீட்டில் வீட்டுப்பாடம் செய்யும் வழக்கமான முறைக்குப் பதிலாக, மாணவர்கள் வீட்டிலேயே பாடம் கற்க ஊக்குவிக்கப்படுகிறது. ஆன்லைன் விரிவுரைகள் மூலம் இது சாத்தியப்படுகிறது.

    அதே நேரத்தில் வகுப்பறை நேரம், விவாதங்கள், சிக்கல்களை தீர்க்கும் திறன் மற்றும் கற்றுக்கொண்டதை நடைமுறைப்படுத்துவது குறித்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

    அடுத்ததாக கேமிஃபிகேஷன். இது கற்பித்தல் செயல்பாட்டில் விளையாட்டு கூறுகளை இணைப்பதாகும். சீனாவில், ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி இரண்டிலும் கேமிஃபிகேஷன் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

    மாணவர்களை ஊக்குவிக்கவும் அவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தவும் புள்ளிகள், நிலைகள் மற்றும் வெகுமதிகள் போன்றவை இதன் மூலம் நிர்ணயிக்கப்படுகின்றன. 

    டிஜிட்டல் கருவிகள் மற்றும் தளங்களின் வளர்ச்சியுடன், கற்றல் செயல்பாட்டில் மாணவர்களை ஈடுபடுத்த ஆசிரியர்கள் புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர்.

    தொழில்நுட்பம் வகுப்பறை அனுபவத்தை மேம்படுத்துவதோடு கற்றலை மேலும் அணுகக்கூடியதாகவும் ஆக்குகிறது.

    சீனாவில் குறிப்பாக  மாணவரின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப கற்றல் செயல்முறை இருக்கிறது.

    இந்த தனிப்பட்ட கற்றல் அனுபவங்களை வழங்க செயற்கை நுண்ணறிவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு மாணவரின் தேவைகளுக்கும் ஏற்ப கற்றல் உள்ளடக்கத்தையும், கற்றலின் வேகத்தையும் மாற்றியமைக்கும் வழிமுறைகள் பயன்படுத்துகின்றன. 


    மென்பொருளின் உதவியுடன், ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் கற்றல் பாணிகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பாடத்திட்டத்தை வடிவமைக்கின்றனர். 

    தொழில்நுட்பங்களால் வேகமாக மாறி வரும் உலகில் அதற்கு தகவமைத்து கொள்ளும் வகையில் அடுத்த தலைமுறையை சீனா  முனைப்புடன் உருவாக்கி வருகிறது. 

    • முக்கிய தகவல்கள் திருடப்படும் அபாயம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • ஆப்பிள் பாதுகாப்பு அப்டேட்களை உடனே புதுப்பிக்கும்படி பயனர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    ஆப்பிள் சாதனங்கள் (iPhone, iPad, MacBook, Apple Watch) உலகளவில் மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகின்றன. ஆனால் முழுமையான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    இந்த நிலையில், இந்தியாவில் செயல்படும் ஐபோன் உள்பட அனைத்து ஆப்பிள் பொருட்களும் ஹேக் செய்யப்படும் அபாயம் இருப்பதாக இந்திய இணைய பாதுகாப்பு அமைப்பான CERT- In அதி தீவிர எச்சரிக்கையை விடுத்துள்ளது.

    iOS, iPadOS, macOS, watchOS, TVOS/ visionOS 2 இருந்து முக்கிய தகவல்கள் திருடப்படும் அபாயம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஆப்பிள் பாதுகாப்பு அப்டேட்களை உடனே புதுப்பிக்கும்படி பயனர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

    • மேக்-இன் இந்தியா தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாடு முழுவதும் ஒரு லட்சம் 4ஜி தளங்களை பி.எஸ்.என்.எல். நிறுவி வருகிறது.
    • ஒவ்வொரு இந்தியருக்கும் இந்த உள்நாட்டு நெட்வொர்க்கை 30 நாட்களுக்கு இலவசமாக சோதித்து பார்க்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

    நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி பி.எஸ்.என்.எல். நிறுவனம் 4ஜி சேவைகளை ஒரு மாதத்திற்கு இலவசமாக சோதித்து பார்க்க வரையறுக்கப்பட்ட காலத்திற்கு ரூ.1 விலையில் வாய்ப்பை வழங்குகிறது.

    இந்தியாவில் உருவாக்கப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்தை இலவசமாக அனுபவிக்க பொதுமக்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது.

    இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகள் (உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி.) தினமும் 2 ஜி.பி. அதிவேக டேட்டா கிடைக்கும். 100 எஸ்.எம்.எஸ். செய்யலாம். ஒரு பி.எஸ்.என்.எல். சிம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

    "ஆத்ம நிர்பார் பாரத்" திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள பி.எஸ்.என்.எல். 4ஜி சேவையின் மூலம் இந்தியா தனது சொந்த தொலைத்தொடர்பு கட்டமைப்பை உருவாக்கிய ஒரு சில நாடுகளில் ஒன்றாக இருப்பதில் பெருமை அடைகிறது.

    பி.எஸ்.என்.எல். சுதந்திர தின திட்டம் ஒவ்வொரு இந்தியருக்கும் இந்த உள்நாட்டு நெட்வொர்க்கை 30 நாட்களுக்கு இலவசமாக சோதித்து பார்க்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

    மேக்-இன் இந்தியா தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாடு முழுவதும் ஒரு லட்சம் 4ஜி தளங்களை பி.எஸ்.என்.எல். நிறுவி வருகிறது. மேலும் இந்த முயற்சி பாதுகாப்பான, உயர்தர மற்றும் மலிவான மொபைல் இணைப்பின் மூலம் டிஜிட்டல் இந்தியாவிற்கு அதிகாரம் அளிக்கும் ஒரு முக்கிய மைல் கல்லாகும்.

    பொதுமக்கள் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது மேளா இடங்களுக்கு சென்று இந்த சுதந்திரதின திட்டத்தை பெறலாம் என்று தமிழ்நாடு பி.எஸ்.என்.எல். தெரிவித்து உள்ளது.

    • இன்ஸ்டாகிராம், உலகளவிலும் இந்திய அளவிலும் மிகப்பெரிய சமூக ஊடகமாக உருவாகி வருகிறது.
    • இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களே இளைஞர்களின் உலகை ஆட்சி செய்கிறது.

    இன்றைய டிஜிட்டல் உலகில், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்களே இளைஞர்களின் உலகை ஆட்சி செய்கிறது.

    உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த சமூக ஊடகங்களில் தங்கள் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளையும், சம்பவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

    கடந்த சில ஆண்டுகளில், சமூக ஊடக தளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம், உலகளவிலும் இந்திய அளவிலும் மிகப்பெரிய சமூக ஊடகமாகவும், வணிகத் தளமாகவும் உருவாகி வருகிறது.

    இந்நிலையில், இன்ஸ்டாவில் உள்ள லைவ் வசதியை அனைவரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதாவது இனிமேல், குறைந்தபட்சம் 1,000 Followers கொண்ட பொது கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே லைவ் வீடியோக்களை வெளியிட முடியும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    • புதிய ஸ்மார்ட்போன்களின் இந்திய வேரியண்ட்கள் அவற்றின் சீன வெர்ஷன்களை போல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் மற்றும் ஓப்போ இந்தியா இ-ஸ்டோர் மூலம் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.

    ஓப்போ K13 டர்போ மற்றும் K13 டர்போ ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ஜூலை மாதத்தின் நான்காவது வாரத்தில் சீனாவில் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது அவற்றின் இந்திய வெளியீடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    புதிய ஸ்மார்ட்போன்களின் இந்திய வேரியண்ட்கள் அவற்றின் சீன வெர்ஷன்களை போல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, புதிய ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 11-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். இந்த ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் மற்றும் ஓப்போ இந்தியா இ-ஸ்டோர் மூலம் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.

    ஓப்போ K13 டர்போ ஸ்மார்ட்போன் IPX6, IPX8 மற்றும் IPX9 தரச்சான்று பெற்ற வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இத்துடன் 7,000mAh பேட்டரி கொண்டுள்ளன. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 8450 சிப்செட் வழங்கப்படுகிறது. இதன் ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 பிராசஸர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    இத்துடன் 6.80 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளேக்கள், 50MP டூயல் கேமரா சென்சார், 16MP செல்ஃபி லென்ஸ் வழங்கப்படுகிறது.

    • இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல்வேறு நாடுகளும் இன்ஸ்டாவில் மூழ்கி இருக்கிறது.
    • மக்கள் தொகை, அதிக இணைய ஊடுருவல் விகிதம் மற்றும் வீடியோக்களை ஆதரிக்கும் பழக்கமே அதற்கு காரணமாகும்.

    இன்றைய டிஜிட்டல் உலகில், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்களே இளைஞர்களின் உலகை ஆட்சி செய்கிறது.

    உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த சமூக ஊடகங்களில் தங்கள் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளையும், சம்பவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

    கடந்த சில ஆண்டுகளில், சமூக ஊடக தளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம், உலகளவில் மிகப்பெரிய சமூக ஊடகமாகவும், வணிகத் தளமாகவும் உருவாகி வருகிறது.

    இந்தியாவில், அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் மட்டுமல்ல... உலகின் பல்வேறு நாடுகளும் இன்ஸ்டாவில் மூழ்கி இருக்கிறது. சரி..! எந்த நாட்டு மக்கள், இன்ஸ்டாகிராமை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்து கொள்வோமா..?

    1. இந்தியா

    இந்தியாதான் உலகிலேயே அதிகமாக இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் சுமார் 413 மில்லியன் (41.3 கோடி) மக்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறார்கள். அதில் 33.1 சதவிகிதம் பெண் பயனர்கள், 66.9 சதவிகிதம் ஆண் பயனர்கள். இந்த அதிக எண்ணிக்கைக்குக் காரணம் அதன் மிகப்பெரிய மக்கள் தொகைதான். அவர்களில் பெரும்பாலானவர்கள் 2-கே கிட்ஸ்கள். இந்தியாவில் ஸ்மார்ட்போனை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாகும்.



    2. அமெரிக்கா

    உலக வல்லரசான அமெரிக்கா, இன்ஸ்டாகிராமை அதிகமாக பயன்படுத்தும் இரண்டாவது நாடாக இருக்கிறது. அங்கு 172.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறார்கள். அங்கு ஆண்களை விட பெண்கள் அதிகமாக இன்ஸ்டாகிராமை கையாளுகிறார்கள்.

    3. பிரேசில்

    இன்ஸ்டாகிராம் பயன்பாட்டில் பிரேசில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அங்கு 141.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறார்கள். இங்கு 58 சதவிகிதம் பெண்களும், 42 சதவிகிதம் ஆண்களும் இன்ஸ்டாகிராமில் மூழ்கி கிடக்கிறார்கள். இணைய வசதிகள் மற்றும் இன்ஸ்டாகிராம் தரும் பொழுதுபோக்கே இதற்கு முக்கிய காரணாமாக இருக்கிறது.

    4. இந்தோனேசியா

    இந்தோனேசியாவில் 90.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்ஸ்டாகிராமில் பொழுதை போக்குகிறார்கள். அதில் பெண்கள் 54 சதவிகிதம் பேர், ஆண்கள் 46 சதவிகிதம் பேர். இந்தோனேசிய மக்களின் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டிற்கு அதன் மக்கள் தொகை மற்றும் அதிகரித்து வரும் சமூக ஊடக கலாசாரம் காரணமாக விளங்குகிறது.

    5. துருக்கி

    58.3 மில்லியன் பயனர்களுடன் துருக்கி ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதில் 47.1 சதவிகிதத்தினர் பெண்கள் மற்றும் 52.9 சதவிகிதத்தினர் ஆண்கள். மக்கள் தொகை, அதிக இணைய ஊடுருவல் விகிதம் மற்றும் வீடியோக்களை ஆதரிக்கும் பழக்கமே அதற்கு காரணமாகும்.

    இந்த டாப்-5 நாடுகளை தொடர்ந்து, ஜப்பான் 6-வது இடத்திலும், மெக்சிகோ 7-வது இடத்திலும், இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களையும் பிடிக்கின்றன.

    ×