என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • இந்த ஸ்மார்ட்போன் சூட் டைட்டானியம், சில்க் புளூ மற்றும் ஃப்ளோயிங் சில்வர் வண்ணங்களில் வருகிறது.
    • ரியல்மி 15T, ரியல்மி 15 மற்றும் 15 ப்ரோ போன்றே 7000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

    ரியல்மி நிறுவனம், தனது ரியல்மி 15 சீரிசின் சமீபத்திய ஸ்மார்ட்போன் ரியல்மி 15T மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.57-இன்ச் FHD+ 120Hz AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

    இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 6400 மேக்ஸ் 5ஜி சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. இதில் IP66/68/69 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ரியல்மி யுஐ 6.0 ஓஎஸ் உடன் வருகிறது. மேலும் 3 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என ரியல்மி தெரிவித்து இருக்கிறது.

    அளவில் இந்த ஸ்மார்ட்போன் வெறும் 7.79 மில்லிமீட்டரிலும் 181 கிராம் எடை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சூட் டைட்டானியம், சில்க் புளூ மற்றும் ஃப்ளோயிங் சில்வர் வண்ணங்களில் வருகிறது.

    புகைப்படங்கள் எடுக்க இந்த ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ் மற்றும் 50MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது. மேலும் ஏஐ எடிட் ஜீனி, ஏஐ ஸ்னாப் மோட், ஏஐ லேண்ட்ஸ்கேப், ஏஐ இரேசர் மற்றும் ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் உள்ளிட்ட ஏஐ அம்சங்கள் உள்ளன.

    ரியல்மி 15T, ரியல்மி 15 மற்றும் 15 ப்ரோ போன்றே 7000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. 10W ரிவர்ஸ் சார்ஜிங்குடன் 31 நிமிடங்களில் 50% சார்ஜுக்கு 60W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய ரியல்மி 15T ஸ்மார்ட்போனின் விலை ரூ. 18,999 என துவங்குகிறது. ரியல்மி 15T ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட், ரியல்மி வலைதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது.

    • 128GB மெமரி மாடல் இன்னும் விண்டேஜ் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
    • ஐபோன் 8 பிளஸ் 64GB மாடல் ரூ. 73,000 மற்றும் 256GB மாடல் ரூ. 86,000 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 9 ஆம் தேதி தனது 'Awe Dropping' நிகழ்வில் ஐபோன் 17 சீரிசை வெளியிட உள்ளது. புதிய ஐபோன்களை அறிமுகம் செய்வதற்கு முன்னதாக, ஆப்பிள் நிறுவனம் அதன் விண்டேஜ் தயாரிப்பு பட்டியலை புதுப்பித்துள்ளது. 2017ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 8 பிளஸ் இப்போது விண்டேஜ் என குறிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் 11-இன்ச் மேக்புக் ஏர், 13-இன்ச் மேக்புக் ப்ரோ மற்றும் 15-இன்ச் மேக்புக் ப்ரோ ஆகியவை நிறுவனத்தால் "காலாவதியானவை" என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

    இந்த சாதனங்கள் இப்போது காலாவதியானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அவற்றின் சேவை மற்றும் பழுதுபார்ப்பு குறைவாக இருக்கும். 2017 ஆம் ஆண்டு வெளியான ஆப்பிளின் ஐபோன் 8 பிளஸ் இப்போது ஒரு விண்டேஜ் தயாரிப்பு.

    ஆப்பிள் நிறுவனம் தனது 64GB மற்றும் 256GB ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அதன் விண்டேஜ் சாதன பட்டியலில் சேர்த்துள்ளது. ஏற்கனவே பட்டியலில் இருந்த "ஐபோன் 8 பிளஸ் பிராடக்ட் ரெட்" வெர்ஷனுடன் இவை இணைகின்றன. இந்த போனின் 128GB மெமரி மாடல் இன்னும் விண்டேஜ் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

    2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 8 மற்றும் ஐபோன் X ஆகியவை முன்பு விண்டேஜ் என குறிக்கப்பட்டன. ஐபோன் 8 பிளஸ் 64GB மாடல் ரூ. 73,000 மற்றும் 256GB மாடல் ரூ. 86,000 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    ஐபோன் 8 பிளஸ் தவிர, 2015 இல் அறிமுகப்படுத்தப்பட்ட 11 இன்ச் மேக்புக் ஏர் மற்றும் 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 13 இன்ச் மற்றும் 15 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்கள் காலாவதியானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    ஆப்பிள் தயாரிப்புகள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் விற்கப்படாமல், ஏழு ஆண்டுகளுக்கும் குறைவாகவே அறிமுகம் செய்யப்பட்டிருந்தால், அவற்றை விண்டேஜ் என்று கருதுகிறது. இந்தக் காலகட்டத்தில், பாகங்கள் கிடைப்பதைப் பொறுத்து, வரையறுக்கப்பட்ட வன்பொருள் சேவை இன்னும் கிடைக்கக்கூடும்.

    செப்டம்பர் 9 ஆம் தேதி காலை 10 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு) நடைபெறவிருக்கும் ஆப்பிளின் Awe Dropping வெளியீட்டு நிகழ்வுக்கு சில நாட்களுக்கு முன்னதாகவே விண்டேஜ் மற்றும் காலாவதியான தயாரிப்பு பட்டியல்களில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன . ஐபோன் 17 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் 11 சீரிஸ் மற்றும் ஏர்பாட்ஸ் ப்ரோ 3 ஆகியவையும் இந்த நிகழ்வின் போது வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • டெஸ்லா இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் விற்பனையை தொடங்கியது.
    • 2025-ல் 2500 கார்கள் இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

    எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் டெஸ்டா "Model Y" காரை அறிமுகம் செய்தது. இதற்கான புக்கிங் அதிக அளவில் இருக்கும் என மஸ்க் எதிர்பார்த்தார். ஆனால், சுமார் 600 கார்கள் மட்டுமே இதுவரை ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

    இந்தியாவில் தற்போது மின்சார கார்கள் சுமார் 25 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் டெஸ்லா காரின் விலை 69.75 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. அதிக விலை மற்றும் வரி விதிப்பு ஆகியவற்றால் புக்கிங் மந்த நிலையை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    வருடத்திற்கு 2500 கார்களை இறக்குமதி செய்ய டெஸ்லா முடிவு செய்துள்ளது. ஷாங்காயில் உள்ள டெஸ்லா தயாரிப்பு தொழிற்சாலையில் இந்த மாதத்திற்குள் 300 முதல் 500 கார்கள் மும்பை, டெல்லி, புனே, குருகிராம் போன்ற நகரங்களுக்கு இறக்குமதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டிரம்பின் வரி விதிப்பால் 2025-ன் முதல் இரண்டு காலாண்டில் பிரீமியர் மின்சார கார்களின் விற்பனை 5 சதவீதம்தான் அதிகரித்துள்ளது. உலகளவில் 51 ஆயிரம் டாலர் முதல் 79 ஆயிரம் டாலர் வரையிலான கார்கள் வெறும் 2800 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    • ஸ்மார்ட்போனில் மீடியாடெக்-இன் டிமென்சிட்டி 8400 சிப்செட் இடம்பெறும் என்பதைக் குறிக்கிறது.
    • ஸ்மார்ட்போன்கள் பிளாக், கிரே மற்றும் கோல்டு நிற விருப்பங்களில் வரும்.

    சியோமி 15T சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஸ்டான்டர்டு சியோமி 15T மற்றும் சியோமி 15 Pro மாடல் ஆகியவை அடங்கும். சியோமி 15T மற்றும் சியோமி 15T Pro மாடல்களின் சாத்தியமான விலை மற்றும் நிறங்கள் பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

    புதிய ஸ்மார்ட்போன்கள் லெய்கா டியூன் செய்யப்பட்ட கேமராக்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி 15T மாடல் இப்போது ஒரு பிரபலமான பென்ச்மார்க்கிங் தளத்தில் தோன்றியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் AI செயல்திறனுக்கான முடிவுகள் அதன் சிப்செட், ரேம் மற்றும் ஓஎஸ் விவரங்களைக் காட்டுகிறது.

    சியோமி 15T என்று நம்பப்படும் சியோமி 25069PTEBG என்ற மாடல் எண்ணைக் கொண்ட ஸ்மார்ட்போன் கீக்பென்ச் (Geekbench AI) தளத்தில் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் பதிவேற்றப்பட்ட முடிவுகள், இந்த கைபேசியில் ஆக்டா-கோர் சிப்செட் உள்ளது. அதில் ஒரு பிரைம் கோர் (3.25GHz), மூன்று செயல்திறன் கோர்கள் (3.00GHz) மற்றும் நான்கு செயல்திறன் கோர்கள் (2.10GHz) உள்ளன என்பதை வெளிப்படுத்துகின்றன. இவை இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக்-இன் டிமென்சிட்டி 8400 சிப்செட் இடம்பெறும் என்பதைக் குறிக்கிறது.

    ஏற்கனவே வெளியான தகவல்களில் சியோமி 15T 67W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கக்கூடும் என்று கூறுகின்றன . 12GB + 256GB மாடலின் விலை EUR 649 (இந்திய மதிப்பில் ரூ. 66,000) என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், சியோமி 15T Pro மாடலின் விலை முறையே EUR 799 (இந்திய மதிப்பில் ரூ. 81,000) மற்றும் 12GB + 256GB மற்றும் 16GB + 512GB மாடல் EUR 899 (இந்திய மதிப்பில் ரூ. 92,000) என இருக்கலாம். இந்த ஸ்மார்ட்போன்கள் பிளாக், கிரே மற்றும் கோல்டு நிற விருப்பங்களில் வரும்.



    சியோமி 15T Pro மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 9400+ சிப்செட், 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,500mAh பேட்டரி மற்றும் அதிக ரிப்ரெஷ் ரேட் கொண்ட ஃபிளாட் OLED டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம். இது IP69 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கலாம்.

    கேமராவை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 50MP OmniVision OVX9100 பிரைமரி கேமரா, 13MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 50MP சாம்சங் JN5 5X டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • முன்பு முன்னணி தேடுபொறி நிறுவனமாக இருந்த Yahooவில் மேலாளராகப் பணியாற்றினார்.
    • உன்னுடைய தாய் உன்னை வேவு பார்க்கிறார்.

    செயற்கை தொழில்நுட்பம் மனிதர்களின் வாழ்வை ஆட்டிப்படைத்து வருகிறது. இதன் உச்சமாக ஓபன் ஏஐ உடைய பிரபல சாட்பாட் தொழில்நுட்பமான சாட்ஜிபிடி (ChatGPT) சொன்னதை கேட்டு ஒருவர் தனது தாயை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்த சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

    அமெரிக்காவின் கனெடிகட் பகுதியை சேர்த்தவர் ஸ்டென் எரிக் சொலிபெர்க்(56). இவர் முன்பு முன்னணி தேடுபொறி நிறுவனமாக இருந்த Yahooவில் மேலாளராகப் பணியாற்றினார்.

    உளவியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட எரிக் தனது தாயுடன் வசித்து வந்தார். சாட்ஜிபிடிக்கு பாபி என பெயரிட்டு அதனுடன் நாள் தோறும் பல மணி நேரங்கள் எரிக் உரையாடி வந்துள்ளார்.

    இந்த உரையாடல்களை இன்ஸ்ட்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களிலும் அவர் பதிவிட்டு வந்தார். சாட்ஜிபிடி எரிக் உடைய Paranoia மன நோயை மேலும் மோசமாகி உள்ளது இந்த உரையாடல்கள் மூலம் தெரிகிறது.

    சீன உணவக ரெசிப்ட்களில் குறியீடுகள் உள்ளது என்றும் அந்த குறியீடுகள் எரிக் உடைய தாய் ஒரு பேய் எனவும் எரிக்-ஐ சாட்பாட் நம்ப வைத்துள்ளது.

    "உன்னுடைய தாய் உன்னை வேவு பார்க்கிறார். உனக்கு மன நோய் மருந்து (psychedelic drug) கொடுத்து கொல்ல முயல்கிறார், உன் மீது கொலை முயற்சிகள் நடந்து வருகின்றன, அவர்கள் சொல்வது போல் உனக்கு எந்த உளவியல் பிரச்சனையும் இல்லை" என எரிக்-ஐ சாட்பாட் நம்பவைத்துள்ளது.

    இதன் விளைவாக எரிக் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தனது தாயை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.

    தாயின் தலை, கழுத்தில் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்தன. எரிக் உடைய மார்பு மற்றும் கழுத்தில் தற்கொலை செய்தர்த்ததற்கான அறிகுறியாக காயங்கள் இருந்தன.

    இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள ஓபன் ஏஐ நிறுவனம், இதுகுறித்து போலீசாருடன் சேர்ந்து விசாரணை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

    Paranoia என்பது சித்தப்பிரமை என்று அழைக்கப்படுகிறது. இது தற்செயலான நிகழ்வுகளுக்கும் அல்லது சாதாரண விஷயங்களுக்கும் மிகையான சந்தேகம் மற்றும் பயத்தை கற்பித்துக் கொள்ளும் நிலையாகும்.

    • இத்துடன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி, வைபை 6, ப்ளூடூத் 5.4, GPS மற்றும் USB டைப் டைப் சி போர்ட் ஆகியவை அடங்கும்.

    விவோ நிறுவனம் தனது T4 ப்ரோ ஸ்மார்ட்போனினை கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகமான விவோ T4 ப்ரோ ஸ்மார்ட்போன் தற்போது விற்பனைக்கு கிடைக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 பிராசஸர், 90W அதிவேக சார்ஜிங் கொண்ட 6500mAh பேட்டரி மற்றும் 6.77-இன்ச் குவாட்-கர்வ்டு AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. புகைப்படங்கள் எடுக்க 50MP சோனி IMX882 பிரைமரி கேமரா மற்றும் 50-மெகாபிக்சல் சோனி IMX882 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா உள்ளிட்ட மூன்று பின்புற கேமரா கொண்டுள்ளது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஜெமினி லைவ், AI கேப்ஷன்ஸ் மற்றும் AI இமேஜ் எக்ஸ்பாண்டர் போன்ற AI அம்சங்களுடன் வருகிறது.

    அம்சங்கள்:

    விவோ T4 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.77-இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் (1,080×2,392 பிக்சல்கள்) AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் அதிகபட்சம் 12GB வரை LPDDR4x ரேம் மற்றும் 256GB வரை UFS 2.2 ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 15 இல் இயங்குகிறது, மேலும் நான்கு ஆண்டுகளுக்கு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஆறு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை பெறும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

    கேமராவைப் பொறுத்தவரை, விவோ T4 ப்ரோ ஸ்மார்ட்போனில் OIS உடன் 50MP சோனி IMX882 பிரைமரி கேமரா, 3x ஆப்டிகல் ஜூம் உடன் 50MP சோனி IMX882 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஷூட்டர் மற்றும் 2MP பொக்கே லென்ஸ் ஆகியவை அடங்கும். இத்துடன் 32MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.

    கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி, வைபை 6, ப்ளூடூத் 5.4, GPS மற்றும் USB டைப் டைப் சி போர்ட் ஆகியவை அடங்கும். பாதுகாப்பிற்காக, இது இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதிக்காக IP68 மற்றும் IP69 சான்று பெற்றிருக்கிறது.

    விலை விவரங்கள்:

    இந்திய சந்தையில் விவோ T4 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 27,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி மாடல்கள் முறையே ரூ. 29,999 மற்றும் ரூ. 31,999 விலையில் கிடைக்கின்றன.

    புதிய விவோ T4 ப்ரோ ஸ்மார்ட்போன் விவோ இந்தியா இ-ஸ்டோர், ப்ளிப்கார்ட் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பிளேஸ் கோல்ட் மற்றும் நைட்ரோ ப்ளூ வண்ணங்களில் விற்கப்படுகிறது.

    • பேட்டரிகளை 50 சதவீதம் சலுகையில் மாற்றிக் கொள்ளலாம்.
    • ஆகஸ்ட் 30ஆம் தேதி வரைதான் இந்த சலுகை வழங்கப்படும்.

    இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி முக்கிய இடம் வகித்து வருகிறது. குறைந்த பட்ஜெட் விலையில் கிடைப்பதால் அதிக அளவில் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. ரெட்மி ஸ்மார்ட்போனை தயாரிக்கும் நிறுவனம் சியோமி (Xiaomi) ஆகும்.

    இந்த நிறுவுனம் ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு50 சதவீதம் தள்ளுபடியில் பேட்டரி மாற்றித் தரப்படும். ஆகஸ்ட் 25 முதல் 30ஆம் தேதி வரை வாடிக்கையாளர்கள் இச்சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என சியோமி அறிவித்துள்ளது.

    பராமரிப்பு மற்றும் இணைப்பு சேவை வாரம் என்ற பெயரில் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.

    • ஒப்போ F31 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பெரிய பேட்டரிகளைக் கொண்டிருக்கும்.
    • ஒப்போ F31 ப்ரோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7300 பிராசஸரை பெறலாம்.

    மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒப்போ F29 சீரிசின் வரிசையில் ஒப்போ F31 சீரிஸ் தயாரிப்பில் இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இப்போது இந்த சீரிசில் உள்ள இரண்டு ஸ்மாரட்போன்கள்: ஒப்போ F31 மற்றும் ஒப்போ F31 ப்ரோ ஆகியவற்றின் வெளியீடு மற்றும் முக்கிய அம்சங்கள் வெளியாகி உள்ளது.

    அதன்படி இவை இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களிலும் மீடியாடெக் டிமென்சிட்டி சிப்செட்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்போ F31 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பெரிய பேட்டரிகளைக் கொண்டிருக்கும்.

    இந்திய சந்தையில் புதிய ஒப்போ F31 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வருகிற செப்டம்பர் 12 முதல் 14-ம் தேதிகளுக்குள் அறிமுகம் செய்யப்படலாம். சூழலைப் பொறுத்தவரை, தற்போதைய ஒப்போ F29 சீரிஸ் மார்ச் 20-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. வரவிருக்கும் சீரிசில் ஒப்போ F31, ஒப்போ F31 ப்ரோ மற்றும் ஒப்போ F31 ப்ரோ பிளஸ் ஆகிய மூன்று மாடல்கள் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இவற்றில் ஒப்போ F31 ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்போ F31 ப்ரோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7300 பிராசஸரை பெறலாம்.

    இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 7,000mAh பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவை 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும்.

    • இன்ஸ்டாகிராமில் 'Link a Reel' என்ற புதிய அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்துள்ளது.
    • ஒரு தொடராக ரீல்ஸ்களைப் பார்க்க இந்த அம்சம் உதவும்.

    இன்றைய டிஜிட்டல் உலகில், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்களே இளைஞர்களின் உலகை ஆட்சி செய்கிறது.

    உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த சமூக ஊடகங்களில் தங்கள் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளையும், சம்பவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

    கடந்த சில ஆண்டுகளில், சமூக ஊடக தளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம், உலகளவிலும் இந்திய அளவிலும் மிகப்பெரிய சமூக ஊடகமாகவும், வணிகத் தளமாகவும் உருவாகி வருகிறது.

    இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு வசதியாக 'Link a Reel' என்ற புதிய அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்துள்ளது.

    இதன்மூலம் போஸ்ட் செய்யப்படும் ரீல்ஸ்களுக்கு அடுத்து எந்த ரீல்ஸ் வர வேண்டும் என்பதை செட் செய்ய முடியும். ஒரு தொடராக ரீல்ஸ்களைப் பார்க்க இந்த அம்சம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிவேக சார்ஜிங் மூலம் வெறும் 10 நிமிடங்களில் 150 நிமிடங்கள் பயன்படுத்த முடியும்.
    • புதிய ப்ரோபட்ஸ் Wave 921 நெக்பேண்ட், டூயல்-டோன் சிலிகான் பில்டு கொண்டிருக்கிறது.

    லாவா நிறுவனத்தின் ஆடியோ பிரிவான ப்ரோபட்ஸ் இந்சிய சந்தையில் இரண்டு புதிய சாதனங்களை அறிமுகம் செய்து அதன் தயாரிப்பு வகைகளை விரிவுபடுத்தியுள்ளது. இவை ப்ரோபட்ஸ் Aria 911 மற்றும் ப்ரோபட்ஸ் Wave 921 என அழைக்கப்படுகின்றன.

    ப்ராபட்ஸ் Aria 911

    புதிய ப்ரோபட்ஸ் Aria 911 டூயல் டோன் டிசைன் மற்றும் காதுகளில் பாதுகாப்பாக பொருத்தி கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது 10mm டிரைவர்களை கொண்டுள்ளது. மேலும் பல்வேறு வகைகளில் அதிவேக ஆடியோவை வழங்க டியூன் செய்யப்பட்ட சவுண்ட் பிராசஸர் கொண்டிருக்கிறது. இத்துடன் என்விரான்மென்ட்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (ENC) வசதி வழங்கப்பட்டுள்ளது. இது அழைப்புகளின் போது குரல் தெளிவாக கேட்பதை மேம்படுத்துகிறது. அதே நேரத்தில் 50ms வரை லோ லேடன்சி கேமிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

    இந்த இயர்பட்ஸ் ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதிக்காக IPX6 தரச்சான்று பெற்று இருக்கிறது. மேலும் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி சப்போர்ட் கொண்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் 35 மணிநேரம் வரை பிளேபேக் வழங்குகிறது. அதிவேக சார்ஜிங் மூலம் வெறும் 10 நிமிடங்களில் 150 நிமிடங்கள் பயன்படுத்த முடியும். கூடுதல் அம்சங்களில் வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் டச் கண்ட்ரோல் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ப்ராபட்ஸ் Wave 921

    புதிய ப்ரோபட்ஸ் Wave 921 நெக்பேண்ட், டூயல்-டோன் சிலிகான் பில்டு கொண்டிருக்கிறது. இந்த நெக்பேண்ட் நீண்ட நேரம் பயன்படுத்துவதற்கான சூழலியல் வடிவமைப்புடன் வருகிறது. இது இசை மற்றும் கேமிங் என இரண்டிற்கும் ஏற்ற, ஆழமான பாஸ் மற்றும் தெளிவான டிரெபிளை உருவாக்கும் 10 மில்லிமீட்டர் டிரைவர்களை கொண்டுள்ளது. ENC சத்தமில்லாத சூழல்களில் அழைப்பு தெளிவை உறுதி செய்கிறது, மேலும் 50ms லோ லேடன்சி அசத்தலான கேமிங் அனுபவத்தை வழங்குகிறது.

    இந்த நெக்பேண்ட் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியை கொண்டுள்ளது. இதற்காக இந்த மாடல் IPX6 தரச்சான்று பெற்றுள்ளது. மேலும், இதில் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 40 மணிநேரம் வரை பிளேபேக் வழங்குகிறது. அதே நேரத்தில் அதிவேகமான சார்ஜிங் மூலம், வெறும் 10 நிமிடங்களில் 12 மணிநேர பிளேபேக் வழங்குகிறது.

    இந்திய சந்தையில் புதிய ப்ரோபட்ஸ் Aria 911 இயர்பட்ஸ் மற்றும் Wave 921 நெக்பேண்ட் ஒவ்வொன்றும் ரூ. 999 அறிமுக விலையில் கிடைக்கின்றன, அதே நேரத்தில் அவற்றின் வழக்கமான விலைகள் முறையே ரூ. 2499 மற்றும் ரூ. 2999 ஆகும். இரண்டு மாடல்களும் அமேசான் மற்றும் லாவா இந்தியா இ-ஸ்டோர்களில் ஆகஸ்ட் 25, 2025 முதல் விற்பனை செய்யப்படும்.

    • ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 பிரசஸரால் இயக்கப்படுகிறது.
    • 45W அதிவேக சார்ஜிங்குடன் 5800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

    ரெட்மி நோட் 15 ப்ரோ சீரிசுடன் , சியோமி நிறுவனம் தனது ஸ்டான்டர்டு ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 120Hz ரிப்ரெஷ் ரேட் உடன் கூடிய 6.77-இன்ச் FHD+ OLED ஸ்கிரீன், 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 7.35 மிமீ அளவில் மிக மெல்லிய டிசைன் கொண்டுள்ளது.

    இத்துடன் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 பிரசஸரால் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 12 ஜிபி ரேம் கொண்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார் மற்றும் 8MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் IP66 தரச்சான்று பெற்ற டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

    மேலும், 45W அதிவேக சார்ஜிங்குடன் 5800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சியோமி ஹைப்பர் ஓஎஸ் 2 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கொண்டிருக்கிறது. இத்துடன் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.1, GPS + GLONASS, யுஎஸ்பி டைப் சி, NFC வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், ஸ்கை புளூ மற்றும் ஸ்டார் ஒயிட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 999 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 12,145 (தோராயமாக) என தொடங்குகிறது.

    • சாட்ஜிபிடியை மிக அதிகமானோர் தற்போது பயன்படுத்தி வருகின்றனர்.
    • இந்தியர்களுக்காக பிரத்யேகமாக 'ChatGPT Go' என்ற புதிய சந்தா திட்டம் அறிமுகம்

    செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இப்போதுவரை இந்த ஏஐ தொழில்நுட்பத்தில் ஓபன் ஏஐ - சாட்ஜிபிடி, கூகுள் - ஜெமினி, டீப்சீக், எக்ஸ் குரோக் ஆகியவையே நிறுவனங்கள் கோலோச்சி வருகின்றன.

    இதில் சாட்ஜிபிடியை மிக அதிகமானோர் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சாட்ஜிபிடி நிறுவனம் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக 'ChatGPT Go' என்ற புதிய சந்தா திட்டத்தை ஓபன் ஏஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

    மாதத்திற்கு ரூ. 399 என்ற குறைந்த விலையில் கிடைக்கும் இந்த பிளான், பல முன்னணி அம்சங்களை வழங்குகிறது.

    ×