என் மலர்
தொழில்நுட்பம்
- இயர்பட்ஸ் இரண்டு வண்ணங்களில் வழங்கப்படும்.
- சீன நிறுவனம் ஏற்கனவே வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் சில அம்சங்களை உறுதிப்படுத்தியுள்ளது.
ஐகூ Z10 டர்போ பிளஸ் மற்றும் ஏர் 3 ப்ரோ இயர்பட்ஸ்-இன் வெளியீட்டு தேதியை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னர் பகிரப்பட்ட டீஸரில், வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் சில அம்சங்களை நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. இப்போது, அதன் வண்ண விருப்பங்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போன் மற்றும் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) உடன், சீனாவில் ஒரு பவர் பேங்க் வெளியிடப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்த புதிய சாதனங்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா, இல்லையா என்பதை ஸ்மார்ட்போன் நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை.
சீன சமூக வலைதளமா வெய்போவில் ஐகூ Z10 டர்போ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 7 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று ஐகூ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் போலார் கிரே, கிளவுட் ஒயிட் மற்றும் டெசர்ட் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் தவிர, நிறுவனம் சீனாவில் மேலும் இரண்டு சாதனங்களை வெளியிட உள்ளது. ஐகூ ஏர் 3 ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மற்றும் 10,000mAh பவர் பேங்க் ஆகியவை அதே தேதியில் அறிமுகம் செய்யப்படும். இந்த இயர்பட்ஸ் இரண்டு வண்ணங்களில் வழங்கப்படும். ஸ்டார் டயமண்ட் ஒயிட் மற்றும் ஸ்டார் யெல்லோ, அதே நேரத்தில் பவர் பேங்க் எக்ஸ்ட்ரீம் யெல்லோ என்ற ஒற்றை வண்ண விருப்பத்தில் வரும்.
எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
சீன நிறுவனம் ஏற்கனவே வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் சில அம்சங்களை உறுதிப்படுத்தியுள்ளது. ஐகூ Z10 டர்போ பிளஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 9400+ சிப் மூலம் இயக்கப்படும். இது 8,000mAh பேட்டரி வழங்கப்படும். இதன் டிஸ்ப்ளே 2,000 nits வரை பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கும்.
ஏற்கனவே லீக் ஆன தகவல்களின் படி ஐகூ Z10 டர்போ பிளஸ் ஸ்மார்ட்போன் 144Hz ரிப்ரெஷ் ரேட் உடன் 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று பரிந்துரைத்தன. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, இது 50MP பிரைமரி கேமராவையும், 8MP அல்ட்ரா-வைடு லென்ஸ் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. முன்பக்கத்தில், இது 16MP செல்ஃபி கேமராவுடன் வரலாம். இந்த ஸ்மார்ட்போனஅ ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கொண்டிருக்கும்.
ஐகூ ஏர் 3 ப்ரோ மாடலில் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் செமி-இன்-இயர் வடிவமைப்பை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், 10,000mAh பவர் பேங்க் 22.5W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும்.
- கோல்ட்மேன் சாக்ஸ், சோடியாக் ஏரோஸ்பேஸ் மற்றும் டெஸ்லா போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
- சாட்ஜிபிடியில் `ஏஐ மூளை’ என்ற செல்லமான பட்டப்பெயருடன் அழைக்கப்பட்டார்.
மார்க் ஜுக்கர்பெர்க்கின் மெட்டா நிறுவனத்திடமிருந்து வந்த 1 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 8,757 கோடி) சம்பள வேலை வாய்ப்பை நிராகரித்து கவனம் பெற்றுள்ளார் ஓபன்ஏஐ முன்னாள் ஊழியர் மீரா முராதி (36 வயது)
அல்பேனியாவை சேர்ந்த மீரா முராதி (Mira Murati) மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்றவர்.
ஓபன்ஏஐ நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பு, அவர் கோல்ட்மேன் சாக்ஸ், சோடியாக் ஏரோஸ்பேஸ் மற்றும் டெஸ்லா போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
2018 ஆம் ஆண்டு ஓபன்ஏஐ நிறுவனத்தில் சேர்ந்த அவர், குறுகிய காலத்தில் அதன் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக உயர்ந்தார்.
சாட்ஜிபிடி, டால்-இ மற்றும் கோடெக்ஸ் போன்ற உலகை மாற்றியமைத்த திட்டங்களை வழிநடத்தியதில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு.
சாம் ஆல்ட்மேன் ஓபன்ஏஐ நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டபோது, மீரா முராதி மூன்று நாட்களுக்கு இடைக்கால தலைமை செயல் அதிகாரியாகவும் பணியாற்றினார்.
சாட்ஜிபிடியில் `ஏஐ மூளை' என்ற செல்லமான பட்டப்பெயருடன் அழைக்கப்பட்டு வந்த மீரா, சமூகப் பொறுப்புடன் ஏஐ செயலிகளை உருவாக்க வேண்டும் வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு ஓபன்ஏஐ நிறுவனத்திலிருந்து விலகிய மீரா முராதி, தனது "திங்கிங் மெஷின்ஸ் லேப்" Thinking Machines Lab) நிறுவனத்தை தொடங்கினார்.
- சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் ஆகியவற்றிற்கு மட்டுமே 2 பில்லியன் டாலர்கள் செலவிடப்படும்.
- இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கூகிள் இந்த முதலீட்டைச் செய்கிறது.
ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் 6 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 50,000 கோடி) முதலீட்டில், 1 ஜிகாபைட் திறன் கொண்ட தரவு மையத்தை (data center) கூகுள் நிறுவனம் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக ஆந்திரப்ரதேச அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் இவ்வளவு பெரிய தொகையை கூகிள் முதலீடு செய்வது இதுவே முதல் முறை. மேலும், ஆசியாவில் இவ்வளவு பெரிய தரவு மையம் இவ்வளவு அதிக செலவில் கட்டப்படுவது இதுவே முதல் முறை.
இந்த தரவு மையத்திற்கு மின்சாரம் வழங்க, சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் ஆகியவற்றிற்கு மட்டுமே 2 பில்லியன் டாலர்கள் செலவிடப்படும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள கூகிள் இந்த முதலீட்டைச் செய்கிறது.
நேற்று முன் தினம் சிங்கப்பூரில் நடைபெற்ற வணிக வட்டமேசை மாநாட்டில் ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ், கூகிள் கிளவுட் இயக்குனர் ட்ரூ பெய்ன்ஸை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
- ஆன்லைனில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைப் பார்த்த 37 சதவீத குழந்தைகள் அதை YouTube-ல் பார்த்ததாகக் கண்டறியப்பட்டது.
- சைபர் புல்லிங், ஆபாசமான உள்ளடக்கம், அதிகப்படியான திரை நேரம் ஆகியவை கவலைக்குரியவை என்று அவர் கூறினார்.
ஆஸ்திரேலிய அரசாங்கம் 16 வயதுக்குட்பட்டவர்கள் இனி YouTube சேனல்களை நடத்த தடை விதித்துள்ளது.
இந்தப் புதிய விதி டிசம்பர் முதல் அமலுக்கு வரும். TikTok, Instagram மற்றும் Snapchat போன்ற சமூக ஊடக தளங்களிலும் ஆஸ்திரேலியா ஏற்கனவே இதே போன்ற விதிகளை அமல்படுத்தி வருகிறது.
YouTube ஒரு வீடியோ தளமாக இருந்தாலும், வழக்கமான சமூக ஊடகங்களின் அபாயங்கள் இங்கும் இருப்பதாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
ஆன்லைனில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைப் பார்த்த 37 சதவீத குழந்தைகள் அதை YouTube-ல் பார்த்ததாகக் கண்டறியப்பட்டது.
டிஜிட்டல் உலகில் குழந்தைகளின் பாதுகாப்பு தனது அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமானது என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறினார்.
சைபர் புல்லிங், ஆபாசமான உள்ளடக்கம், அதிகப்படியான திரை நேரம் ஆகியவை கவலைக்குரியவை என்று அவர் கூறினார்.
குழந்தைகள் யூடியூப்பை பயன்படுத்த முடியும், ஆனால் அவர்களுக்கென தனி யூடியூப் சேனல்களை வைத்திருக்க அனுமதி கிடையாது. பத்தில் ஒன்பது ஆஸ்திரேலியர்கள் இந்த முடிவை ஆதரிக்கின்றனர்.
எதிர்காலத்தில் இதேபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்த மற்ற நாடுகளுக்கு இது ஒரு முன்மாதிரியாக அமையும்.
- மேல், வலது மற்றும் இடது விளிம்புகளில் சமமான பெசல்களைக் கொண்டதாகத் தெரிகிறது.
- செவ்வக கேமரா ஐலேண்ட் பின்புற பேனலின் மற்ற பகுதிகளை விட சற்று உயரமாக உள்ளது.
சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி 15 பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனாக உருவாகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகிறது. அந்த வகையில், ரெட்மி 15 ஸ்மார்ட்போன் தொடர்பாக கசிந்த ரெண்டர்களில் புது தகவல்கள் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக டிப்ஸ்டர் பகிர்ந்து கொண்ட புகைப்படங்களின்படி, இந்த ஸ்மார்ட்போன் மூன்று வண்ண விருப்பங்களில் வரக்கூடும். ரெட்மி 15 ஸ்மார்ட்போன் மூன்று கேமரா அமைப்புடன் வரும் என்று தெரிகிறது. ரெட்மி பிராண்ட் சமீபத்தில் அதன் வலைத்தளத்தில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை உணர்த்தும் டீசர்களை வெளியிட்டது. அதன்படி விரைவில் ரெட்மி 15 மற்றும் ரெட்மி 15C ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.
வடிவமைப்பு, அம்சங்கள்:
ரெட்மி 15 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் ஆர்சீன் லூபின் என்ற டிப்ஸ்டரால் கசிந்துள்ளன. இதிலுள்ள முதல் ரெண்டர் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே காட்டுகிறது. இது மேல், வலது மற்றும் இடது விளிம்புகளில் சமமான பெசல்களைக் கொண்டதாகத் தெரிகிறது.
டிப்ஸ்டர் பகிர்ந்துள்ள மற்ற மூன்று ரெண்டர்களில், ரெட்மி 15 ஸ்மார்ட்போன் பர்பில், கோல்டு மற்றும் பிளாக் என மூன்று வண்ணங்களில் இருப்பதை காட்டுகின்றன. ரெட்மி 15 ஸ்மார்ட்போனின் மூன்று ரெண்டர்களிலும், பின்புற பேனலின் மேல் இடது மூலையில் அமைந்துள்ள மூன்று பின்புற கேமரா அமைப்பையும் காணலாம்.
இந்த கேமராக்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளன. மேலும் முதல் கேமரா வளையத்தின் வலதுபுறத்தில் ஒரு LED ஃபிளாஷ் அமைந்துள்ளது. செவ்வக கேமரா ஐலேண்ட் பின்புற பேனலின் மற்ற பகுதிகளை விட சற்று உயரமாக உள்ளது.
இதுதவிர இத்தாலிய சில்லறை விற்பனையாளரின் வலைத்தளத்தில் ரெட்மி 15 ஸ்மார்ட்போனிற்கான பட்டியலில், இந்த மாடல் 4ஜி வெர்ஷனை கொண்டுள்ளது என்றும் இது 6.9-இன்ச் LCD ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இத்துடன் 108MP பிரைமரி கேமரா, ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் 2 கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் 7,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இது வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியை வழங்கும் IP64 தரச்சான்று பெற்றிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ரெட்மி 15 அறிமுகத்தை நிறுவனம் வெளிப்படையாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், சமீபத்தில் நாட்டில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களின் வருகையை அறிவித்தது.
- உங்களில் பலர் சமீபத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்டதைப் பற்றியும் நான் பேச விரும்புகிறேன்.
- இன்று நாம் நிற்கும் அடித்தளத்தை உருவாக்க உதவுகின்றன.
சத்யா நாதெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட், இந்த ஆண்டு 15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்து தொழில்நுட்ப உலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பணிநீக்கங்களுக்கு முக்கிய காரணம், நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (AI) நோக்கி விரைவாக மாறுவதே என்று தலைமை நிர்வாக அதிகாரி நாதெல்லா தெரிவித்துள்ளார்.
ஊழியர்களுக்கு அவர் அனுப்பிய செய்தியில், "வேறு எதற்கும் முன், என்னை மிகவும் பாதித்து வரும் விஷயத்தைப் பற்றியும், உங்களில் பலர் சமீபத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்டதைப் பற்றியும் நான் பேச விரும்புகிறேன்.
இந்த முடிவுகள் நாம் எடுக்க வேண்டிய மிகக் கடினமான முடிவுகளில் ஒன்றாகும். வெளியேறியவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர்களின் பங்களிப்புகள் ஒரு நிறுவனமாக நாம் யார் என்பதை வடிவமைத்துள்ளன, இன்று நாம் நிற்கும் அடித்தளத்தை உருவாக்க உதவுகின்றன. அதற்காக, நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட 9,000 ஊழியர்களையும் சேர்த்து, இந்த ஆண்டு 15,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மைக்ரோசாப்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இந்த கடினமான முடிவுகள் தவறல்ல என்று நாதெல்லா கூறுகிறார்.
இந்த பணிநீக்கங்களால் மைக்ரோசாப்டின் கேமிங் பிரிவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் AI தொழில்நுட்பத்தில் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. நிறுவனம் AI உள்கட்டமைப்பில் 80 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இலக்கு வைத்துள்ளது. இந்த முதலீடுகள் AI தொழில்நுட்பங்களை உருவாக்கவும், அவற்றை அதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் ஒருங்கிணைக்கவும் பயன்படுத்தப்படும்.
- ஐகூ Z10 டர்போ பிளஸ் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக வெய்போ தளத்தில் ஐகூ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
- ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9400+ சிப், 16GB ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கொண்டுள்ளது.
ஐகூ Z10 டர்போ பிளஸ் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய டர்போ சீரிஸ் வெளியீட்டை ஐகூ நிறுவனம் நேற்று சீனாவில் அறிவித்தது. இதில் புதிய ஸ்மார்ட்போனின் சிப்செட் மற்றும் பேட்டரி திறனையும் வெளிப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் ஐகூ Z10 டர்போ பிளஸ் தற்போதுள்ள Z10 டர்போ சீரிசில் இணையும். இது தற்போது ஐகூ Z10 டர்போ மற்றும் Z10 டர்போ ப்ரோ மாடல்களைக் கொண்டுள்ளது.
ஐகூ Z10 டர்போ பிளஸ் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக வெய்போ தளத்தில் ஐகூ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் நிறுவனத்தின் டிமென்சிட்டி 9400+ சிப்செட் மூலம் இயக்கப்படும் மற்றும் 8,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும்.
இந்த ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இல்லை என்றாலும், அது சமீபத்தில் கீக்பென்ச் தள்தில் விவோ V2507A என்ற மாடல் எண்ணின் கீழ் தோன்றியது. இது ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9400+ சிப், 16GB ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கொண்டுள்ளது.
இதுவரை வெளியான தகவல்களின்படி, ஐகூ Z10 டர்போ பிளஸ் ஸ்மார்ட்போன் 90W அதிவேக சார்ஜிங்கை ஆதரிக்கும். இது 144Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் வரும் என்று கூறப்படுகிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா சென்சார் மற்றும் 8MP அல்ட்ரா-வைடு லென்ஸ் இடம்பெறக்கூடும். இது 16MP செல்பி கேமரா கொண்டிருக்கும்.
- கேலக்ஸி S சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் எப்போதும் ஒரே திறன் கொண்ட பேட்டரியைக் கொண்டுள்ளன.
- முந்தைய மாடலான கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலை போலவே 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் சாம்சங் கேலக்ஸி S26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. புதிய கேலக்ஸி S26 அல்ட்ரா மாடலில் பேட்டரி மேம்படுத்தப்பட்டு, அதிக திறன் கொண்ட புது யூனிட் இடம்பெறும் என்று பலமுறை தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், கேலக்ஸி S26 Ultra ஸ்மார்ட்போனில் பேட்டரி அப்கிரேடு வழங்கப்படுவது சந்தேகம் தான் என்று தகவல் வெளியாகி உள்ளது. தொடக்கத்தில் இருந்தே கேலக்ஸி S சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் எப்போதும் ஒரே திறன் கொண்ட பேட்டரியைக் கொண்டுள்ளன. இருப்பினும், மென்பொருள் மற்றும் யுஐ மூலம் சாம்சங் நிறுவனம் பயனர்களுக்கு நல்ல அனுபவத்தை வழங்கி வருகிறது.
கேலக்ஸி S26 அல்ட்ரா பேட்டரி:
டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ் (@UniverseIce) எக்ஸ் தள பதிவில் சாம்சங் கேலக்ஸி S26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரியை பெறும் என்று கூறியிருந்தார். இது உண்மையாக இருந்தால், 2026 ஆம் ஆண்டு சாம்சங் அதன் கேலக்ஸி S அல்ட்ரா மாடலின் பேட்டரி அளவை அதிகரிக்காத ஆறாவது ஆண்டாக இருக்கும்.
தற்போது சாம்சங் விற்பனை செய்து வரும் ஃபிளாக்ஷிப் S சீரிஸ் ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா, அதன் முந்தைய மாடலான கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலை போலவே 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 2020-இல் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி S20 அல்ட்ரா ஸ்மார்ட்போனும் 5,000mAh பேட்டரியை கொண்டிருந்தது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, சாம்சங் கேலக்ஸி S26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது TSMC இன் 3 நானோமீட்டர் முறையில் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சமீபத்திய அறிக்கையின்படி, இந்த ஸ்மார்ட்போன் மிகமெல்லிய பெசல்களுடன் 6.89 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கலாம்.
- புதிய குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் "லைட்" அல்லது "T" பிராண்டிங்கைக் கொண்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
- தற்போதுள்ள மாடல்கள் சந்தையில் சிறப்பாக செயல்படவில்லை.
நத்திங் நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் நத்திங் போன் 3a சீரிசை அறிமுகம் செய்தது. இந்த மாத தொடக்கத்தில் நத்திங் போன் 3 மாடலை வெளியிட்டது. இங்கிலாந்தை தளமாகக் கொண்ட OEM விரைவில் அதன் ஸ்மார்ட்போன்கள் பிரிவை விரிவுபடுத்தி, மலிவு விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என்று டிப்ஸ்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதிய குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள் "லைட்" அல்லது "T" பிராண்டிங்கைக் கொண்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. டிப்ஸ்டர் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, தற்போதுள்ள மாடல்கள் சந்தையில் சிறப்பாக செயல்படவில்லை. சியோமி, ரியல்மி மற்றும் ஒன்பிளஸ் என மற்ற ஸ்மார்ட்போன் பிரான்டுகள் விற்பனையை அதிகரிக்க இதேபோன்ற பெயரில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்கின்றன.
மலிவான 'லைட்' அல்லது 'T' பிராண்டு ஸ்மார்ட்போன்களை நத்திங் வெளியிடலாம் என்று டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் (@heyitsyogesh) எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். புதிய குறைந்த விலை ஸ்மார்ட்போன் மாடல்களில் "லைட்" அல்லது "T" பிரான்டிங் இருக்கலாம்.
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மற்றும் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல்களின் விலை முறையே ரூ. 79,999 மற்றும் ரூ. 89,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நத்திங் போன் 3a மற்றும் போன் 3a ப்ரோ ஆகியவை முறையே ரூ. 22,999 மற்றும் ரூ. 27,999 விலையில் தொடங்குகின்றன.
அம்சங்களை பொருத்தவரை நத்திங் போன் 3 மாடலில் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 SoC, 5500mAh பேட்டரி, 6.67-இன்ச் 120Hz 1.5K AMOLED டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமரா, 50MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த நத்திங் ஓஎஸ் 3.5 கொண்டுள்ளது. மேலும், புதிய கிளிம்ஃப் மேட்ரிக்ஸ், கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்புடன் கூடிய டிரான்ஸ்பேரன்ட் பேக் பேனல் மற்றும் IP68 சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.
- கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு ரெண்டர்களை ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் பகிர்ந்துள்ளது.
- பிக்சல் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மேட் பை கூகுள் நிகழ்வில் வெளியிடப்படும்.
கூகுள் பிக்சல் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அறிமுகத்திற்கு முன்னதாக, வரவிருக்கும் போன்களின் விலை உட்பட பல தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்திய அறிக்கைகள் ஸ்மார்ட்போன்களின் எதிர்பார்க்கப்படும் வண்ண விருப்பங்களையும் பரிந்துரைத்துள்ளன.
புதிய ஸ்மார்ட்போன் சீரிசில் பேஸ் மாடலான பிக்சல் 10 புதிய ரெண்டர்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன, அவை புதுப்பிக்கப்பட்ட கேமரா ஐலேண்ட் மற்றும் புதிய வண்ண விருப்பங்களைக் காட்டுகின்றன. பிக்சல் 9 இல் காணப்படுவது போல் இரட்டை பின்புற கேமரா அமைப்பிற்கு பதிலாக, வரவிருக்கும் பிக்சல் 10 டெலிஃபோட்டோ சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா யூனிட்டைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
கூகுள் பிக்சல் 10 வடிவமைப்பு ரெண்டர்கள்
கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு ரெண்டர்களை ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் பகிர்ந்துள்ளது. அதிகாரப்பூர்வமாகத் தோன்றும் ரெண்டர்கள் இண்டிகோ, ஃப்ரோஸ்ட், லிமோன்செல்லோ மற்றும் அப்சிடியன் என சந்தைப்படுத்தப்படும் நான்கு வண்ண விருப்பங்களை பரிந்துரைக்கின்றன.
இதுவரை வெளியான தகவலில், பிக்சல் 10 ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா ஐலேண்ட், பிக்சல் 9 மாடலில் உள்ளதைப் போலவே தெரிகிறது. இருப்பினும், இரண்டு சென்சார்களுக்குப் பதிலாக, கசிந்த பிக்சல் 10 வடிவமைப்பு ரெண்டர், மூன்று கேமராக்கள் கொண்ட அமைப்பைக் காட்டுகிறது. சேர்க்கப்பட்ட மூன்றாவது கேமரா ஒரு டெலிஃபோட்டோ சென்சாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் அதன் முந்தைய மாடலை விட பிக்சல் 10 இல் சிறிய கேமரா சென்சார்களைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனில் 48MP பிரைமரி கேமரா மற்றும் 12MP அல்ட்ரா-வைடு சென்சார் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை பிக்சல் 9a இல் பயன்படுத்தப்படும் அதே சென்சார்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது . இதற்கிடையில், மூன்றாவதாக 10.8MP டெலிஃபோட்டோ சென்சார், பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டில் பயன்படுத்தப்படும் அதே கேமராவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
பிக்சல் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மேட் பை கூகுள் நிகழ்வில் வெளியிடப்படும். பிக்சல் 10 மாடலுடன், வரிசையில் பிக்சல் 10 ப்ரோ, 10 ப்ரோ எக்ஸ்எல் மற்றும் 10 ப்ரோ ஃபோல்ட் மாடல்களும் அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்த ஸ்மார்ட்போன் செவ்வக வடிவிலான இரட்டை பின்புற கேமரா பம்ப் தங்க நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் ஸ்டாக் ஆண்ட்ராய்டு 15 உடன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
லாவா பிளேஸ் டிராகன் ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, லாவா பிளேஸ் AMOLED 2 அதே மாதத்தில் நாட்டில் வெளியிடப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. லாவா பிளேஸ் டிராகனின் வெளியீட்டு தேதி அதன் வடிவமைப்பு மற்றும் கிடைக்கும் விவரங்களுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், லாவா பிளேஸ் டிராகனுக்கான கசிந்த விவரங்கள் ஆன்லைனில் வெளியாகியுள்ளன. இது அதன் முக்கிய எதிர்பார்க்கப்படும் அம்சங்களைக் குறிக்கிறது. லாவா பிளேஸ் AMOLED 2 வெளியீட்டு தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
புதிய லாவா பிளேஸ் டிராகன் ஜூலை 25 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அமேசான் மைக்ரோசைட் உறுதிப்படுத்துகிறது. இந்த ஸ்மார்ட்போன் நாட்டில் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் என்பதை இது குறிக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் செவ்வக வடிவிலான இரட்டை பின்புற கேமரா பம்ப் தங்க நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. இதில் 50MP AI வசதி கொண்ட பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 SoC மூலம் இயக்கப்படும் என்றும் 128 ஜிபி UFS 3.1 மெமரி கொண்டிருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்டாக் ஆண்ட்ராய்டு 15 உடன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
லாவா பிளேஸ் டிராகன் 4 ஜிபி ரேம், 128ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. புகைப்படங்களை எடுக்க முன்பக்கத்தில் 8MP சென்சார் வழங்கப்படும் என்று தெரிகிறது. மேலும், இதில் 18W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
- ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- டார்க் புளூ ஐபோன் 15 ப்ரோவின் ப்ளூ டைட்டானியம் நிறத்தால் ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது.
ஐபோன் 17 சீரிஸ் மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த நிலையில், புதிய ஐபோன்கள் பற்றிய விவரங்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வெளியாகி வருகிறது. வருகிற செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்த நிலையில், புதிய ஐபோன்களின் வண்ண விருப்பங்கள் குறித்து சமீபத்தில் பல தகவல்கள் வந்துள்ளன. இப்போது, ஒரு புதிய அறிக்கை இந்த தகவல்களை உறுதிப்படுத்துகிறது. இதில் ஐபோன் 17 ப்ரோ மாடல் நான்கு வண்ண விருப்பங்களை கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளது. புதிய மாடல்கள் ஆப்பிள் சாதனத்திற்கான பிளாக் மற்றும் வைட் என பாரம்பரிய வண்ணங்களைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல டிப்ஸ்டர் மஜின் பு வெளியிட்டுள்ள சமீபத்திய வலைப்பதிவில், ஐபோன் 17 ப்ரோ பிளாக், டார்க் புளூ, ஆரஞ்சு மற்றும் சில்வர் வண்ணங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இத்துடன் புதிய ஐபோன்களின் ரெண்டர்களையும் பகிர்ந்துள்ளார். இதில் பிளாக் மற்றும் வைட் நிறங்கள் ஐபோன் 16 ப்ரோ சீரிசின் பிளாக் டைட்டானியம் மற்றும் வைட் டைட்டானியம் வண்ணங்களை ஒத்தி உள்ளன.

டார்க் புளூ ஐபோன் 15 ப்ரோவின் ப்ளூ டைட்டானியம் நிறத்தால் ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. ஐபோன் 17 ப்ரோ மாதிரிகள் புதிய பெரிய கேமரா பார் வடிவமைப்பை LED ஃபிளாஷ் மற்றும் LiDAR சென்சார் வலது பக்கத்தில் அமைக்கப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன.
நான்கு வண்ணங்களுக்கு கூடுதலாக, ஆப்பிள் மற்றொரு நிறத்தை சோதித்து வருவதாக மஜின் பு கூறுகிறார். இருப்பினும் இது எந்த சாதனத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஐபோன் 17 ப்ரோவின் அலுமினியம் ஃபிரேமை பூர்த்தி செய்ய புதிய வண்ணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று டிப்ஸ்டர் கூறினார்.
சமீபத்திய அறிக்கையின்படி, ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ஐபோன் ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் பிளாக், டார்க் புளூ, கிரே, ஆரஞ்சு மற்றும் வைட் என ஐந்து வண்ணங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 17 ஸ்மார்ட்போன் பிளாக், கிரீன், லைட் புளூ, பர்பில், ஸ்டீல் கிரே மற்றும் வைட் என ஆறு வண்ணங்களில் கிடைக்கும் என்றும், ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போன் பிளாக், லைட் புளூ, லைட் கோல்டு மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகியவை ஐபோன் 17 மற்றும் ஐபோன் 17 ஏர் மாடல்களுடன் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.






