என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • ஸ்மார்ட்போனின் விற்பனை மே 29 ஆம் தேதி துவங்க இருக்கிறது.
    • விற்பனை ரியல்மி, அமேசான் இந்தியா வலைதளங்களில் நடைபெறவுள்ளது.

    ரியல்மி நிறுவனம் தனது GT 6T ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக ரியல்மி GT 6T ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை மே 29 ஆம் தேதி துவங்க இருக்கிறது.

    இந்த நிலையில், புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் வாங்க விரும்புவோருக்காக நாளை (மே 28) Early Access முறையில் ரியல்மி GT 6T மாடல் விற்பனை செய்யப்பட உள்ளது. அந்த வகையில், ரியல்மி GT 6T மாடலின் சிறப்பு விற்பனை நாளை மதியம் 12 மணிக்கு துவங்கி மதியம் 2 மணி வரை நடைபெற இருக்கிறது. விற்பனை ரியல்மி மற்றும் அமேசான் இந்தியா வலைதளங்களில் நடைபெற உள்ளது.

     


    விலை விவரங்கள்:

    ரியல்மி GT 6T 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி ரூ. 30 ஆயிரத்து 999

    ரியல்மி GT 6T 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி ரூ. 32 ஆயிரத்து 999

    ரியல்மி GT 6T 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி ரூ. 35 ஆயிரத்து 999

    ரியல்மி GT 6T 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி ரூ. 39 ஆயிரத்து 999

    புதிய ஸ்மார்ட்போன் வாங்குவோர் வங்கி சலுகைகள் மற்றும் கூப்பன்களை சேர்க்கும் போது ரூ. 6 ஆயிரம் வரையிலான தள்ளுபடி பெற முடியும்.

    ரியல்மி GT 6T மாடலில் 6.78 இன்ச் 1.5K 8T LTPO AMOLED ஸ்கிரீன் கொண்ட ப்ரோ XDR டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி, 9-லேயர் கூலிங் சிஸ்டம், ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ரியல்மி யு.ஐ. 5, 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் 5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 129 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    • 17 சதவீதம் வரை குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
    • 22.62 டாலர்களில் இருந்து 18.59 டாலர்கள் ஆக சரிந்துள்ளது.

    ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச், ஹெட்போன், இயர்பட்ஸ் என மின்னணு சாதனங்கள் சந்தை உலகளவில் எப்படி செயல்பட்டு வருகிறது என்பதை ஆய்வு செய்து அறிக்கை மூலம் அறிவிக்கும் அமைப்பு தான் சர்வதேச டேட்டா கார்ப்பரேஷன் (ஐ.டி.சி.).

    ஒவ்வொரு சாதனமும் எந்த அளவுக்கு விற்பனையாகின்றன, அவற்றின் விலை எப்படி இருக்கிறது, பயனர்கள் அதை வாங்கும் விதம் என மின்னணு சாதனங்கள் விற்பனை குறித்த ஒவ்வொரு விவரமும், ஐ.டி.சி. வெளியிடும் அறிக்கையில் துல்லியமாக இடம்பெற்று இருக்கும்.

    அந்த வரிசையில், ஐ.டி.சி. சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்மார்ட்வாட்ச், இயர்பட்ஸ் விற்பனை மற்றும் அவற்றின் விலை குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதில், உலகளவில் அணிக்கூடிய சாதனங்கள் (Wearables) விலை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 17 சதவீதம் வரை குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

     


    ஒட்டுமொத்தத்தில் அணியக்கூடிய சாதனங்களின் சராசரி விற்பனை விலை 2024 ஆண்டின் முதல் காலாண்டில் 22.62 டாலர்களில் இருந்து 18.59 டாலர்கள் ஆக சரிந்துள்ளது. இந்த விலை இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் குறைவு ஆகும். ஆன்லைனில் அதிகப்படியான ஸ்டாக் இருப்பு மற்றும் குறைந்தளவு புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டதே விலை குறைப்புக்கு முக்கிய காரணம் ஆகும்.

    ஸ்மார்ட்வாட்ச்களின் சராசரி விற்பனை விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 29.24 டாலர்களில் இருந்து 20.65 டாலர்களாக சரிந்துள்ளது. இதேபோன்று மேம்பட்ட ஸ்மார்ட்வாட்ச்களின் பங்கு 2.0 சதவீதத்தில் இருந்து 3.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்திய அணியக்கூடிய சாதனங்கள் சந்தை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 2.1 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

    ஐ.டி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அணியக்கூடிய சாதனங்கள் சந்தையில் போட், நாய்ஸ், பயர்-போல்ட், பௌல்ட் மற்றும் ஒப்போ உள்ளிட்டவை முன்னணி இடத்தில் உள்ளன. கடந்த ஆண்டும் இதே நிறுவனங்கள் முன்னணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • மற்றொரு நிகழ்வில் மடிக்கக்கூடிய சாதனங்களையும் அறிமுகம் செய்கிறது.
    • சற்றே குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்.

    சாம்சங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் மற்றும் இதர சாதனங்களை கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. ஆண்டிற்கு இருமுறை நடைபெறும் கேலக்ஸி அன்பேக்டு விழாவில்- ஒருமுறை சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களும், மற்றொரு நிகழ்வில் மடிக்கக்கூடிய சாதனங்களையும் அறிமுகம் செய்து வருகிறது.

    இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S24 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அந்த வரிசையில், இந்த ஆண்டிற்கான அடுத்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு ஜூலை 10 ஆம் தேதி பாரிஸ் நகரில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அதிகாரப்பூர்வ பார்டனராக சாம்சங் நிறுவனம் இருக்கிறது. அந்த வகையில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க இரு வாரங்களுக்கு முன்பு கேலக்ஸி அன்பேக்டு நிகவ்வை நடத்த சாம்சங் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி Z ஃபோல்டு 6 மற்றும் கேலக்ஸி Z ப்ளிப் 6 மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    சாம்சங்கின் இரு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படுகிறது. இந்த முறை வழக்கமான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் தவிர கேலக்ஸி Z ஃபோல்டு FE மற்றும் Z ஃப்ளிப் FE மாடல்கள் சற்றே குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இவற்றுடன் கேலக்ஸி ரிங் சாதனத்தின் விலை விவரங்கள் இந்த நிகழ்வில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. முன்னதாக இந்த சாதனம் கேலக்ஸி S24 அறிமுக நிகழ்வில் அறிவிக்கப்பட்டு, 2024 சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை புதிய போக்கோ F6 பெற்றது.
    • இந்த ஸ்மார்ட்போனிற்கு 3 ஓ.எஸ். அப்டேட் வழங்கப்படுகிறது.

    போக்கோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய F6 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய போக்கோ F6 5ஜி மாடலில் 6.67 இன்ச் 1.5K Crystal ResFlow 120Hz AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை புதிய போக்கோ F6 5ஜி பெற்றுள்ளது.

    இத்துடன் அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி, IP64 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஆண்ட்ராய்டு 14 சார்ந்த சியோமி ஹைப்பர் ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு மூன்று ஓ.எஸ். அப்டேட்களும், நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களும் வழங்குவதாக சியோமி தெரிவித்து இருக்கிறது.

     


    புகைப்படங்களை எடுக்க டூயல் 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 20MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 90 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை 35 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும்.

    போக்கோ F6 5ஜி ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் டைட்டானியம் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 33 ஆயிரத்து 999 ஆகும். விற்பனை மே 29 ஆம் தேதி ப்ளிப்கார்ட் வலைதளத்தில் துவங்குகிறது.

    • இந்தியாவில் ப்ளிப்கார்ட் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
    • ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் விற்பனை செய்யப்படுகிறது.

    விவோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய X போல்டு 3 ப்ரோ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஜூன் 6 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. முன்னதாக மார்ச் மாத வாக்கில் இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியா வரவிருக்கிறது.

    புதிய விவோ X போல்டு 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், செய்ஸ் பிராண்டு கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் உள்புறம் 8 இன்ச் அளவில் மடிக்கக்கூடிய ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5700 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

     


    இந்தியாவில் விவோ நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலாக விவோ X போல்டு 3 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விவோ இந்தியா மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    சீனாவில் விவோ X போல்டு 3 ப்ரோ மாடலின் விலை CNY 9,999 இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 16 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதன் இந்திய விலை ரூ. 1 லட்சம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். தற்போது விவோ தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை சீனாவில் மட்டுமே விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.



    • இதன் உண்மை விலை ரூ. 39 ஆயிரத்து 999 ஆகும்.
    • இதன் விலை ரூ. 3 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் 12R ஸ்மார்ட்போனிற்கு ப்ளிப்க்ராட் வலைதளத்தில் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஒன்பிளஸ் 12R மாடலுக்கு தற்போது சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஒன்பிளஸ் சாதனங்களை ஆன்லைனில் அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்யும் தளமாக அமேசான் உள்ளது.

    இந்த நிலையில், ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போனின் 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 36 ஆயிரத்து 366 என குறிப்பிடப்பட்டு இருககிறது. இந்த ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ. 39 ஆயிரத்து 999 ஆகும். அந்த வகையில், இதன் விலை ரூ. 3 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.

     


    அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போனை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி பெற முடியும். இதனால், ஒன்பிளஸ் 12R விலை ரூ. 37 ஆயிரத்து 999 என மாறிவிடும்.

    அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 12R மாடலில் 6.78 இன்ச் 120Hz AMOLED ஸ்கிரீன், குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜி.பி. ரேம், 50MP பிரைமரி கேமரா, 5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஆக்சிஜன் ஓ.எஸ். 14 உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    குறிப்பு: ஸ்மார்ட்போனின் விலை எவ்வளவு நேரம் குறைக்கப்பட்டு இருக்கும் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை. ஸ்டாக் இருப்புக்கு ஏற்ப இதன் விலை எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம்.

    • இந்த ஸ்மார்ட்போன் 5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
    • நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக ரியல்மி அறிவித்துள்ளது.

    ரியல்மி நிறுவனத்தின் முற்றிலும் புதிய GT 6T ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் மூலம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய சந்தையில் GT சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருக்கிறது.

    புதிய ரியல்மி GT 6T மாடலில் 6.78 இன்ச் 1.5K 8T LTPO AMOLED ஸ்கிரீன் கொண்ட ப்ரோ XDR டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி, 9-லேயர் கூலிங் சிஸ்டம், ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ரியல்மி யு.ஐ. 5, 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

     


    இத்துடன் 120 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இதை கொண்டு ஸ்மார்ட்போனை பத்து நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும். இந்த ஸ்மார்ட்போனிற்கு 3 ஆண்ட்ராய்டு அப்டேட்கள், நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக ரியல்மி அறிவித்துள்ளது.

    புதிய ரியல்மி GT 6T ஸ்மார்ட்போன் புளூயிட் சில்வர் மற்றும் ரேசர் கிரீன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் நானோ மிரர் டிசைன் கொண்டிருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 30 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 32 ஆயிரத்து 999 என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 35 ஆயிரத்து 999 என்றும் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 39 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ரியல்மி GT 6T ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெற இருக்கிறது. இதன் ஆஃப்லைன் விற்பனை மே 29 ஆம் தேதி துவங்க இருக்கிறது. 

    • இந்த ஸ்மார்ட்போனில் 64MP பிரைமரி கேமரா, OIS வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    விவோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய Y200 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது விவோ நிறுவனத்தின் புதிய Y சீரிஸ் ஸ்மார்ட்போனாக அறிமுகமாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் FHD+ வளைந்த AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஓ.எஸ். 14 கொண்டிருக்கும் விவோ Y200 ப்ரோ 5ஜி மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. வரை எக்ஸ்டென்டட் ரேம், 64MP பிரைமரி கேமரா, OIS, 2MP டெப்த் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

     விவோ Y200 ப்ரோ 5ஜி அம்சங்கள்:

    6.78 இன்ச் 2400x1080 பிக்சல் Full HD+ கர்வ்டு AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

    அட்ரினோ 619 GPU

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

    அட்ரினோ 619 GPU

    8 ஜ.பி. ரேம்

    128 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஓ.எஸ். 14

    64MP பிரைமரி கேமரா

    2MP போர்டிரெயிட் கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    இந்திய சந்தையில் புதிய விவோ Y200 ப்ரோ ஸ்மார்ட்போன் சில்க் கிரீன் மற்றும் சில்க் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 24 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    • அதிகபட்சம் 12 ஜி.பி. வரையிலான ரேம் வழங்கப்படுகிறது.
    • புகைப்படங்களை எடுக்க 108MP பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படுகிறது.

    ஹெச்.எம்.டி. நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புதிய ஹெச்.எம்.டி. ஸ்மார்ட்போன் ஃபேபுலா போன்ற டிசைன் கொண்டிருக்கிறது.

    இவை தோற்றத்தில் நோக்கியாவின் லூமியா சீரிஸ் போன்றே காட்சியளிக்கிறது. புதிய ஹெச்.எம்.டி. ஸ்மார்ட்போன்களின் புகைப்படத்துடன் இதன் வெளியீடு பற்றிய தகவல்களும் லீக் ஆகியுள்ளது. அதன்படி லூமியா ஸ்டைலிங் கொண்ட முற்றிலும் புதிய ஹெச்.எம்.டி. ஸ்மார்ட்போன் ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

     


    இந்த ஸ்மார்ட்போன் ஹெச்.எம்.டி. டாம்கேட் என்ற பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. வரையிலான ரேம் வழங்கப்படுகிறது.

    இத்துடன் புகைப்படங்களை எடுக்க 108MP பிரைமரி கேமரா சென்சார், அல்ட்ரா வைடு லென்ஸ், டெப்த் சென்சார் மற்றும் 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. மெமரியை பொருத்தவரை இந்த மாடலில் அதிகபட்சம் 256 ஜி.பி. ஸ்டோரேஜ் வழங்கப்படலாம். ஹெச்.எம்.டி. டாம்கேட் மாடலில் Full HD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓ.எஸ். வழங்கப்படுகிறது.

    4900 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் ஹெச்.எம்.டி. டாம்கேட் மாடலில் ப்ளூடூத் 5.2, 3.5mm ஆடியோ ஜாக், என்.எஃப்.சி. கனெக்டிவிட்டி, டூயல் ஸ்பீக்கர்கள், பியூர்வியூ மற்றும் OZO ஆடியோ சப்போர்ட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் IP67 தரச் சான்று பெற்றிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    • ஐபோன் 15-ஐ விட அளவில் சிறியதாக இருக்கும்.
    • ஐபோன் ப்ரோ மேக்ஸ் வேரியண்டை விட அதிகமாக இருக்கும்.

    ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டு ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

    இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் ஐபோன் 17 சீரிஸ் பற்றிய விவரங்கள் வெளியாக துவங்கியுள்ளன. அதன்படி ஆப்பிள் நிறுவனம் 2025 ஆண்டு முதல் ஐபோன் சீரிசில் "பிளஸ்" மாடலை நிறுத்திவிட்டு, புதிதாக "ஸ்லிம்" மாடல் ஐபோனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய ஸ்லிம் மாடல் அடுத்த ஆண்டு "ஐபோன் 17 ஸ்லிம்" எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது ஆப்பிள் அறிமுகம் செய்யும் புதிய ஐபோன்களில் விலை உயர்ந்த மாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், இதன் விலை ஐபோன் ப்ரோ மேக்ஸ் வேரியண்டை விட அதிகமாக இருக்கும்.

    தற்போது வரை ஆப்பிள் அறிமுகம் செய்யும் புதிய ஐபோன்களில் ப்ரோ மேக்ஸ் வேரியண்ட் விலை தான் அதிகளவில் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 15 பிளஸ் விலை அதன் பேஸ் வேரியண்ட் ஐபோன் 15 மாடலை விட ரூ. 10 ஆயிரம் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் விலை இதைவிட ரூ. 70 ஆயிரம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

     

    கோப்புப்படம்

    கோப்புப்படம்


    சமீபத்தில் நடைபெற்ற ஆப்பிள் "லெட் லூஸ்" நிகழ்ச்சியில் அந்நிறுவனம் இதுவரை தான், அறிமுகம் செய்ததில் மிக மெல்லிய ஐபேட் ப்ரோ மாடலை அறிமுகம் செய்தது. இதே பாணியை ஐபோன் மாடல்களிலும் பின்பற்ற ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆப்பிள் வெளியிட்டதில் மிகவும் மெல்லிய ஐபோன்களில் ஒன்றாக ஐபோன் 6 மாடல் இருந்தது.

    ஐபோன் 6 மாடல் அளவில் 6.9 மில்லிமீட்டர் அளவு தடிமனாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. அந்த வரிசையில், ஐபோன் 17 ஸ்லிம் மாடல் ஆப்பிள் டிசைனிங்கில் ஐபோன் X அளவுக்கு அசாத்திய அப்டேட்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. ஐபோன் X மாடலில் ஆப்பிள் நிறுவனம் நாட்ச் மற்றும் பெசல் லெஸ் டிசைன் உள்ளிட்டவைகளை அறிமுகம் செய்து இருந்தது, நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இது புதிய டிரெண்ட் ஆகவும் மாறியது.

    இந்த வரிசையில், ஐபோன் 17 ஸ்லிம் மாடல் இதுவரை வெளியான ஐபோன் மாடல்களில் மிக மெல்லிய டிசைன் கொண்டிருக்கும் என்றும் இதில் அலுமினியம் சேசிஸ் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. எனினும், இந்த ஐபோனின் டிசைன் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை என்று தெரிகிறது. இந்த மாடல் ஐபோன் 15-ஐ விட அளவில் சிறியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    ஐபோன் பிளஸ் மாடல்களின் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறாது தான், இந்த மாடல் நிறுத்தப்படுவதற்கு காரணமாக இருக்கும் என்று தெரிகிறது. இதற்கு மாற்றாக அறிமுகம் செய்யப்படும் "ஸ்லிம்" மாடல் பயனர்களுக்கு புதிதான கண்ணோட்டத்தை கொடுக்கும் என்றும் இதன் மூலம் பலர் புதிய ஐபோன் ஸ்லிம் மாடலை வாங்க வாய்ப்புகள் அதிகம் ஆகும்.

    • தனது அனுபவத்தை இரண்டாவதாக சிப் பொருத்திக் கொள்பவரிடம் தெரிவிப்பார்.
    • எண்ணங்கள் மூலமாக மொபைல் போன், கணினியை கட்டுப்படுத்தலாம்.

    உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் சமூக வலைதளம் மற்றும் நியூராலிங்க் என பல்வேறு நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார். இவரது நியூராலிங்க் நிறுவனம் கை, கால் போன்ற உடல் உறுப்புகள் செயலிழந்தவர்கள் மொபைல், கணினி போன்ற சாதனங்களை எண்ணங்கள் மூலம் இயக்க செய்யும் சிப் ஒன்றை உருவாக்கி இருக்கிறது.

    இந்த சிப் மனித மூளையில் பொருத்தி கொண்டால், பயனர்கள் கை, கால் உதவியின்றி எண்ணங்களாலேயே கர்சர் மூலம் மொபைல் போன் மற்றும் கணினி உள்ளிட்டவைகளை இயக்கிவிட முடியும். முதற்கட்டமாக விலங்குகளில் இந்த சோதனை நடத்தப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் நியூராலிங்க் உருவாக்கிய சிப்-ஐ மனித மூளையில் பொருத்தி சோதனை செய்வதற்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்தது.

    அந்த வகையில், இந்த ஆண்டு துவக்கத்தில் நியூரிங்க் உருவாக்கிய டெலிபதி சிப் நோலன் ஆர்பா என்ற நபரின் மூளையில் பொருத்தப்பட்டது. இந்த நிலையில், டெலிபதி சிப் பொருத்திக் கொள்ள இரண்டாவது நபர் தற்போது விண்ணப்பிக்கலாம் என்று நியூராலிங்க் அறிவித்து இருக்கிறது.

    "எங்களின் டெலிபதி சைபர்நெடிக் சிப் கொண்டு நீங்கள் உங்களது மொபைல் போன் மற்றும் கணினி போன்ற சாதனங்களை எண்ணங்கள் மூலமாகவே கட்டுப்படுத்த முடியும்," என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மேலும், மூளையில் சிப் பொருத்திக் கொண்ட நோலன் தனது அனுபவத்தை இரண்டாவதாக சிப் பொருத்திக் கொள்பவரிடம் தெரிவிப்பார்.

    இம்மாத துவக்கத்தில் சிப் பொருத்தி 100 நாட்களை கடந்த நிலையில் நோலன், தற்போது எண்ணங்கள் மூலமாக மொபைல் போன், கணினி மற்றும் ஐபேட் உள்ளிட்டவைகளை இயக்கி கேம்களை விளையாடுவதோடு பிரவுசிங் செய்கிறார்.

    • ஆப்பிள் அந்த விளம்பர வீடியோவுக்கு மன்னிப்பு கோரியது.
    • கேலக்ஸி டேப் மாடலுக்கு விளம்பரமாக அமைந்துள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தான் மேம்பட்ட ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்தது. மேலும், புதிய ஐபேட் ப்ரோ மாடலுக்கான விளம்பர வீடியோ ஒன்றை ஆப்பிள் வெளியிட்டது.

    இந்த வீடியோவில் கணினிகள், லேப்டாப்கள், பெயிண்ட், இசை கருவிகள் என கலை சார்ந்த பொருட்கள் அனைத்தையும் அழகாக அடுக்கி வைத்து, அவற்றை ராட்சத நசுக்கு இயந்திரம் கொண்டு நசுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த விளம்பர வீடியோவுக்கு பலத்தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஆப்பிள் அந்த விளம்பர வீடியோவுக்கு மன்னிப்பு கோரியது.

    ஐபேட் ப்ரோ மாடலுக்கான ஆப்பிள் விளம்பர வீடியோ தொடர்பான சர்ச்சை சற்று ஓய்ந்துள்ளது. இந்த நிலையில், சாம்சங் நிறுவனம் ஐபேட் ப்ரோ விளம்பர விவகாரத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இது ஆப்பிள் வெளியிட்ட வீடியோவுக்கு பதில் அளிக்கும் வகையிலும், கேலக்ஸி டேப் மாடலுக்கு விளம்பரமாகவும் அமைந்துள்ளது.

    சாம்சங் தற்போது வெளியிட்டுள்ள விளம்பர வீடியோவில், கீழே உடைந்து இருக்கும் ஏராளமான பொருட்களில் பெண் ஒருவர் இசைக்கருவியை எடுத்து வந்து இருக்கையில் அமர்கிறார். பிறகு அருகில் உள்ள டேப் ஒன்றில் இசைக்கருவியை இயக்கும் குறிப்புகளை பார்த்துக் கொண்டே இசைக்கருவியை வாசிக்க ஆரம்பிக்கிறார்.

    வீடியோவில் அந்த பெண் பயன்படுத்தும் டேப்லெட் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் மாடல் ஆகும். இந்த வீடியோ முடிவில் கிரியேடிவிட்டியை நசுக்கிவிட முடியாது (creativity can never be crushed) எனும் வாசகமும் இடம்பெறுகிறது. இத்துடன் கேலக்ஸி டேப் S9 அல்ட்ரா மாடலும் காண்பிக்கப்படுகிறது. சாம்சங் வெளியிட்ட புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


    ×