search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசாகப்பட்டினம்"

    • இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது.
    • முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் குவித்தது.

    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி ஜெய்ஸ்வாலின் அதிரடியால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் சேர்த்தது.

    இந்நிலையில் இந்த போட்டியில் உணவு இடைவேளை விடப்பட்டது. இதனையடுத்து இரு அணி வீரர்களும் உணவு சாப்பிட சென்றனர். மைதானத்தில் குவிந்திருந்த ரசிகர் - ரசிகைகளும் உணவு மற்றும் குளிர்பானம் அருந்துவதற்கு சென்றனர்.

    ஆனால் இங்கிலாந்து ரசிகர் - ரசிகைகள் ஸ்டேடியத்துக்கு வெளியே சென்று அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடைக்குள் புகுந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

    • இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.
    • விசாகப்பட்டினத்தில் பிறந்த இவர், 11 வயதில், ஆந்திராவின் உள்நாட்டு (domestic) அணியுடன் பயிற்சி செய்யத் தொடங்கினார்.

    இந்தியா -இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எஸ்.பாரத் ஆந்திர கிரிக்கெட் சங்கத்தால் கவுரவிக்கப்பட்டார்.

    அவர் தனது சொந்த ஊர் மைதானத்தில் இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடியதால் கௌரவிக்கப்பட்டுள்ளார். சொந்த ஊர் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் மாநிலத்தின் இரண்டாவது கிரிக்கெட் வீரர் பரத் ஆவார்.

     

    விசாகப்பட்டினத்தில் பிறந்த இவர், 11 வயதில், ஆந்திராவின் உள்நாட்டு (domestic) அணியுடன் பயிற்சி செய்யத் தொடங்கினார். 2005-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஒருநாள் போட்டி நடந்தபோது, அந்த போட்டியில் கே.எஸ்.பாரத் பால் யாயாக (Ball boy) இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவருக்கு முன்னர் இரு ஆந்திர வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடி உள்ளனர். அவர்கள் விஹாரி, எம்எஸ்ஏகே பிரசாத் ஆகியோர் ஆவர்.

    • கடற்கரை விமானங்கள் வானத்தில் வட்டமிட்டபடி குறுக்கும் நெடுக்கமாக சென்று சாகசத்தில் ஈடுபட்டனர்.
    • சாகச நிகழ்ச்சியில் போர் விமானங்கள் மற்றும் 3 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.

    திருப்பதி:

    கடற்படை தினத்தை முன்னிட்டு ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் ராமகிருஷ்ணா கடற்கரையில் நேற்று முதல் முறையாக கடற்படை வீரர்களின் சாகச ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

    நேற்று மாலை 4 மணி அளவில் சூரியன் மறையும் பின்னணியில் கடற்கரை விமானங்கள் வானத்தில் வட்டமிட்டபடி குறுக்கும் நெடுக்கமாக சென்று சாகசத்தில் ஈடுபட்டனர்.

    சாகச நிகழ்ச்சியை கடற்கரை வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வீட்டின் மாடி மற்றும் பால்கனிகளில் இருந்து பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

    ஹெலிகாப்டர்களில் ராணுவ வீரர்கள் தாழ்வாக பறந்து வந்து சாகசத்தில் ஈடுபட்ட நிகழ்ச்சியை அங்கிருந்த பொதுமக்கள் தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    ஏரோ பாட்டிக்ஸ் கமாண்டோ படை வீரர்கள் விமானத்தில் பறந்து வந்து ஸ்கை டைவிங் செய்தபடி விமானத்தில் இருந்து குதித்து பாராசூட் மூலம் கடற்கரை மணலில் இறங்கினர். இந்த சாகச நிகழ்ச்சியில் போர் விமானங்கள் மற்றும் 3 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.

    மேலும் போர்க்கப்பல்களும் நீர்மூழ்கி கப்பல்களும் கடற்கரை சாலையை நெருங்கி வந்து தீப்பிழம்பை கொட்டியது.

    கடற்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் பொது மக்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.

    மீண்டும் டிசம்பர் 2-ந்தேதி மற்றும் இறுதி சாகச நிகழ்ச்சி டிசம்பர் 6-ந் தேதி நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் சட்டப் பேரவை கூட்டத்தொடர் இன்று கூடியது.
    • ஆந்திர சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை துவங்குகிறது.

    விஜயதசமி முதல் ஆந்திர பிரதேச மாநிலத்தின் தலைநகராக விசாகப்பட்டினம் செயல்படும் என்று அம்மாநில சட்டமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் இன்று ஆந்திர பிரதேச சட்டமன்ற கூட்டம் கூடியது.

    ஆந்திர பிரதேச மாநிலத்தின் மழைகால கூட்டத் தொடர் நாளை (செப்டம்பர் 21) துவங்க இருக்கும் நிலையில், இன்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில், புதிய தலைநகர் பற்றிய அறிவிப்பு வெளியானது. நவம்பர் 2-ம் தேதி துவங்கும் விஜயதசமி நாள் முதல் முதலமைச்சர் அலுவலகம் விசாகப்பட்டினத்திற்கு மாறுகிறது.

    இதே போன்று மற்ற அமைச்சர்களும் விசாகப்பட்டினத்தில் இருந்து பணியாற்ற தயாராக வேண்டும். ஆந்திர பிரதேச மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் தனியே பிரிந்ததில் இருந்து, ஆந்திரா மாநில தலைநகராக அமராவதி நகரம் செயல்பட்டு வருகிறது. இம்மாநிலத்தின் மிகப் பெரிய நகரம் விசாகப்பட்டினம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடித்தார்.
    • 10,000 மேற்பட்ட விவசாயிகள் அமராவதியில் தலைமை செயலகம் அறிவிக்க வேண்டும் என மாநிலம் முழுவதும் நடைபயணம் சென்றனர்.

    திருப்பதி:

    கடந்த தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்தபோது ஆந்திராவை, ஆந்திரா, தெலுங்கானா என இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டன.

    அப்போது ஆட்சியில் இருந்த சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் தலைநகரமாக அமராவதியை அறிவித்து விவசாயிகளிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்தி தலைமைச் செயலகம் கட்டுப்பணி நடைபெற்று வந்தது.

    அதன் பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடித்தார்.

    அவர் ஆட்சிக்கு வந்ததும் ஆந்திராவில் நிர்வாக வசதிக்காக 3 தலைநகரங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார். அவரது அறிவிப்புக்கு தெலுங்கு தேசம், பாஜக, காங்கிரஸ், ஜனசேனா உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் அமராவதியில் தலைமைச் செயலகம் கட்ட நிலம் கொடுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் 10,000 மேற்பட்ட விவசாயிகள் அமராவதியில் தலைமை செயலகம் அறிவிக்க வேண்டும் என மாநிலம் முழுவதும் நடைபயணம் சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நடந்தது.

    வரும் மார்ச் மாதம் 3 அல்லது 4 தேதியில் ஆந்திராவின் தலைநகராக விசாகப்பட்டினம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

    அவரது அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் மாநில பொறுப்பாளர் அச்சம் நாயுடு கூறுகையில்:-

    கடந்த 2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆந்திராவில் ஒரே தலைநகரம் அமராவதி என தேர்தல் நேரத்தில் பேசி வந்த ஜெகன்மோகன் ரெட்டி தற்போது விசாகப்பட்டினம் தலைநகரம் என அறிவித்து நாட்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்தி மாநிலத்தை பிரிக்க பார்ப்பதாக குற்றம்சாட்டினார்.

    ×