என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வந்தே மாதரம்"

    • நாடு சுதந்திரம் பெற்றபோது மோடி பிறக்கவே இல்லை
    • உங்கள் உணர்வுகளை நான் மதிக்கிறேன் என்றார் மோடி

    வந்தே மாதரம் பாடலை எழுதிய பங்கிம் சந்திர சட்டோபாத்யாயை 'பங்கிம் டா' என்று கூறி பிரதமர் நரேந்திர மோடி அவமதித்தற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியறுத்தி உள்ளார்.

    நேற்று, கூச் பெஹார் மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய மம்தா, நாடு சுதந்திரம் பெற்றபோது மோடி பிறக்கவே இல்லை, ஆனால் வங்காளத்தின் முக்கிய கலாச்சார முகங்களில் ஒருவரை அவர் குறைத்து மதிப்பிட்டார்.

    அவருக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய குறைந்தபட்ச மரியாதையையும் காட்டவில்லை. இதற்காக நீங்கள் நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தின் கலாச்சாரம், மொழி மற்றும் பாரம்பரியத்தை அது அழித்துவிடும்" என்று மம்தா கூறினார்.

    தேசிய பாடலான 'வந்தே மாதரம்' பாடலின் 150வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் திங்களன்று மக்களவையில் நடந்த விவாதத்தின் போது, கவிஞர் பங்கிம் சந்திராவைப் பற்றி பிரதமர் குறிப்பிட்டதில் இருந்து இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

    பங்கிம் உடன் 'டா' சேர்ப்பதை எதிர்த்த மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த எம்.பி. சவுகதா ராய், 'பங்கிம் பாபு' என்று சொல்லுமாறு மோடியை வலியுறுத்தினார்.

    மோடி உடனடியாக, "நான் பங்கிமை 'பாபு' என்று அழைக்கிறேன். நன்றி, உங்கள் உணர்வுகளை நான் மதிக்கிறேன்" என்றார். அதே நேரத்தில், ராய்-ஐ 'தாதா' என்று அழைக்கலாமா என்று மோடி சந்தேகம் கேட்டார். டா என்பது வங்காள மொழியில் சாதாராண சம்பாஷணையின்போது குறிப்பிடும் விளிச் சொல்லாகும். 

    • பாஜக எப்போதும் சுதந்திரப் போராட்டங்களுக்கும் தேசபக்தி பாடல்களுக்கும் எதிரானது.
    • அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை சீன அதிகாரிகள் தடுத்து வைத்து அவமதித்த சம்பவம் குறித்து மோடி தனது மௌனத்தைக் கலைக்க வேண்டும்

    மக்களவையில் வந்தே மாதரம் மீதான விவாதம் திங்கள்கிழமை மக்களவையில் நடைபெற்ற நிலையில் நேற்று மாநிலங்களவையில் நடைபெற்றது.

    தேசிய கீதமாக வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்தது காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியலை மேற்கொண்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார்.

    இதற்குப் பிறகு, பேசிய கார்கே "வந்தே மாதரம்" என்ற முழக்கத்தை எழுப்பி தனது உரையைத் தொடங்கினார்.

    அவர் பேசியதாவது, பாஜக எப்போதும் சுதந்திரப் போராட்டங்களுக்கும் தேசபக்தி பாடல்களுக்கும் எதிரானது. 1921 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியபோது, காங்கிரஸின் லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் வந்தே மாதரம் பாடலைப் பாடி சிறைக்குச் சென்றனர். நீங்கள் என்ன செய்தீர்கள்? நீங்கள் ஆங்கிலேயர்களுக்காக வேலை செய்து கொண்டிருந்தீர்கள்.

    இப்போது நீங்கள் எங்களுக்கு தேசபக்தியை குறித்து பாடம் எடுக்கிறீர்கள். சுதந்திர இயக்கத்தை ஆதரிக்க நீங்கள் பயந்தீர்கள். நீங்கள் ஆங்கிலேயர்களுக்காக வேலை செய்தீர்கள் என்று கூறினார்.

    காங்கிரஸ் காரியக் கமிட்டி, இந்தப் பாடலின் இரண்டு பத்திகளை மட்டுமே பாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த முடிவை எடுத்தது நேரு மட்டும் அல்ல. இந்த முடிவு எடுக்கப்பட்டபோது மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், மதன் மோகன் மாளவியா மற்றும் ஆச்சார்யா ஜே.பி. கிருபளானி போன்ற தலைவர்கள் கூட்டத்தில் இருந்தனர் என்று கார்கே கூறினார்.

    நீங்கள் இந்த உயர்மட்டத் தலைவர்கள் அனைவரையும் அவமதிக்கிறீர்கள். அது அவர்களின் ஒருங்கிணைந்த முடிவு. ஏன் நீங்கள் நேருவை மட்டும் குறிவைக்கிறீர்கள்?.

    ஜவஹர்லால் நேருவை அவமதிக்கும் எந்த வாய்ப்பையும் பிரதமர் நரேந்திர மோடி ஒருபோதும் தவறவிடுவதில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அதே பாதையைப் பின்பற்றுகிறார். பாஜகவின் மூதாதையர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, முஸ்லிம் லீக்குடன் சேர்ந்து வங்காளத்தில் அரசாங்கத்தை நடத்தி வந்தபோது உங்கள் தேசபக்தி எங்கே இருந்தது? பாஜக அதன் வரலாற்றைப் படிக்க வேண்டும்.

    சீனாவின் ஷாங்காயில் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை சீன அதிகாரிகள் தடுத்து வைத்து அவமதித்த சம்பவம் குறித்து மோடி தனது மௌனத்தைக் கலைக்க வேண்டும்" என்று தெரிவித்தார். 

    • திரித்துக் கூறுவதில் மாஸ்டரான பிரதமர் மோடி இதற்கு பதிலளிப்பாரா?..
    • 2005-ஆம் ஆண்டு கராச்சிக்குச் சென்ற அத்வானி, ஜின்னாவின் கல்லறையில் பார்வையாளர் புத்தகத்தில் எழுதிய வார்த்தைகள் இவை

    பாராளுமன்றத்தில் 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு நிறைவு குறித்த விவாதத்தின்போது ஜவஹர்லால் நேரு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகளுக்கு, காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

    அவர் தனது எக்ஸ் பதிவில்,நேரு திருப்திப்படுத்தும் அரசியல் செய்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், திரித்து பேசுவதில் மாஸ்டரான பிரதமர் மோடி இதற்கு பதிலளிப்பாரா?..

    1940 மார்ச் மாதம் லாகூரில் பாகிஸ்தான் தீர்மானத்தை முன்மொழிந்த நபருடன் எந்த இந்தியத் தலைவர் கூட்டணி அமைத்தார்? அது பாஜகவின் சியாம பிரசாத் முகர்ஜிதான்.

    2005 ஜூன் மாதம் கராச்சியில் ஜின்னாவை எந்த இந்தியத் தலைவர் பாராட்டினார்? அது எல்.கே. அத்வானிதான்.

    2009-ஆம் ஆண்டு தனது புத்தகத்தில் ஜின்னாவைப் புகழ்ந்த இந்தியத் தலைவர் யார்? அவர் பாஜகவின் ஜஸ்வந்த் சிங்" என்று பதிவிட்டுள்ளார்.

    2005-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் கராச்சிக்குச் சென்ற அத்வானி, ஜின்னாவின் கல்லறையில் பார்வையாளர் புத்தகத்தில் எழுதிய வார்த்தைகள் இவை, "வரலாற்றில் அழியாத முத்திரையைப் பதித்தவர்கள் பலர் உள்ளனர்.

    ஆனால், உண்மையில் வரலாற்றை உருவாக்கியவர்கள் மிகச் சிலரே. முகமது அலி ஜின்னா அத்தகைய அரிதானவர்களில் ஒருவர்.

    பாகிஸ்தான் அரசியலமைப்புச் சபையில் அவர் ஆற்றிய உரை ஒரு கிளாசிக். ஒவ்வொரு குடிமகனும் தங்கள் மதத்தைப் பின்பற்ற சுதந்திரம் உள்ள ஒரு மதச்சார்பற்ற தேசத்தை அவர் வலியுறுத்தினார்" என்று எழுதியிருந்தார். 

    • ஆளும் தரப்பில் உள்ளவர்கள், தங்களுக்குச் சற்றும் தொடர்பில்லாத தலைவர்களைத் தமதாக்கிக் கொள்ள மீண்டும் மீண்டும் முயல்கிறார்கள்
    • சவர்க்கர் சிறையில் இருந்தபோது கருணை மனுக்களை எழுதி, தனக்கான விடுதலையைப் பெற்றார். ஆனால், அந்த நேரத்தில் அந்தமான் சிறையில் இருந்த 585 கைதிகளில் 398 வங்காளிகள், தங்களின் தனிப்பட்ட விடுதலையை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தியாவின் சுதந்திரத்திற்காகத் தங்களை அர்ப்பணித்தனர்.

    பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய 'வந்தே மாதரம்' குறித்து நாடாளுமன்றத்தில் இன்று 10 மணி நேரம் நடைபெற்ற விவாதம், ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளிடையே பெரும் வார்த்தைப் போருக்கு வழிவகுத்தது.

    சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் இப்போது வந்தே மாதரத்தை நாட்டில் பிளவை ஏற்படுத்த ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

    இதன்போது வந்தே மாதரம் தேசிய கீதம் ஆகாததற்கு நேருவே காரணம் என மக்களவையில் மோடி வசை பாடினார்.

    இதற்கிடையில் சமாஜ்வாடி கட்சித் தலைவரும் எம்.பியுமான அகிலேஷ் யாதவ் பேசுகையில், பிளவுபடுத்தும் சக்திகள் வந்தே மாதரத்தை பிரிவினையை உருவாக்கப் பயன்படுத்துகின்றனர் என்றும், இந்த நபர்கள் இன்றும் ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய அதே பிரித்தாளும் கொள்கையைப் பின்பற்றுகிறார்கள் என்றும் பாஜகவை விமர்சித்தார்.

    மேலும் "சுதந்திர போராட்டத்தால் பங்கேற்காதவர்கள் இன்று வந்தே மாதரம் பற்றி பேசுகிறார்கள். ஆளும் தரப்பில் உள்ளவர்கள், தங்களுக்குச் சற்றும் தொடர்பில்லாத தலைவர்களைத் தமதாக்கிக் கொள்ள மீண்டும் மீண்டும் முயல்கிறார்கள்" என்று அவர் குற்றம் சாட்டினார்.

    இதற்கிடையே மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. காகோலி கோஷ் தஸ்திதார் பேசுகையில், வந்தே மாதரம் இந்தியாவின் தேசியப் பாடல் மட்டுமல்ல, சுதந்திரப் போராட்டத்திற்கு உந்துசக்தி அளித்த மில்லியன் கணக்கான மக்களால் பாடப்பட்ட ஒரு பாரம்பரியச் சொத்து.

    உதாரணமாக, சவர்க்கர் சிறையில் இருந்தபோது கருணை மனுக்களை எழுதி, தனக்கான விடுதலையைப் பெற்றார். ஆனால், அந்த நேரத்தில் அந்தமான் சிறையில் இருந்த 585 கைதிகளில் 398 வங்காளிகள், தங்களின் தனிப்பட்ட விடுதலையை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தியாவின் சுதந்திரத்திற்காகத் தங்களை அர்ப்பணித்தனர்.

    இளம் வயதில் குதிராம் போஸ் தன் உயிரைத் தியாகம் செய்தபோது, இன்று உள்ள ஆளும் கட்சியின் மூதாதையர்கள் கருணை மனுக்களை எழுதுவதில் மும்முரமாக இருந்தனர்" என்று விமர்சித்தார்.

    இந்த விவாதத்தை அரசு நடத்துவதற்கு மேற்கு வங்கத்தில் நடக்க உள்ள தேர்தலே காரணம் என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்தார். 

    • வந்தே மாதரம் என்பதற்கு தாய் மண்ணே தலை வணங்குகிறேன் என்பது பொருள்.
    • இந்தியாவின் போர் முழக்க பாடலாக வந்தே மாதரம் இருக்க வேண்டும்.

    பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. வருகிற 19-ந் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது.

    நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு இன்று கொண்டாடப்படுவதால் அதன் வரலாறு குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது.

    வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி பாராளுமன்றத்தின் சிறப்பு விவாதம் நடைபெற்றது. மாநிலங்களவையில் வந்தே மாதரம் பாடல் சிறப்பு விவாதத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

    மக்களவையில் விவாதத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * புனித பாடல் குறித்த விவாதத்தை தொடங்கி வைப்பதில் பெருமை அடைகிறேன்.

    * இந்திய நாட்டின் விடுதலைக்கு முக்கியப் பங்காற்றிய பாடல் வந்தே மாதரம்.

    * வந்தே மாதரம் என்பதற்கு தாய் மண்ணே தலை வணங்குகிறேன் என்பது பொருள்.

    * தலைமுறைகளைக் கடந்து உத்வேகம் அளித்து வருகிறது வந்தே மாதரம் பாடல்.

    * வந்தே மாதரம் பாடலில் நூற்றாண்டு விழா, நெருக்கடி நிலையின்போது தற்செயலாக அமைந்து விட்டது.

    * வந்தே மாதரம் பாடலால் தான் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது.

    * இந்த விவாதத்தின் மூலம், எதிர்கால சந்ததியினர் வந்தே மாதரம் குறித்து கற்பிக்கப்படுவர்.

    * இந்தியாவின் போர் முழக்க பாடலாக வந்தே மாதரம் இருக்க வேண்டும்.

    * God Save the Queen பாடலை இந்தியர்கள் பாட வேண்டும் என பிரிட்டிஷார் விரும்பினர்.

    * பிரிட்டிஷாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வந்தே மாதரம் பாடல் அமைந்தது.

    * இந்தியர்களின் உறுதியை பறைசாற்றும் பாடலாக வந்தே மாதரம் விளங்குகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு இன்று கொண்டாடப்படுகிறது.
    • பிரதமர் மோடி இன்று 10 மணி நேர சிறப்பு விவாதத்தை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்

    பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. வருகிற 19-ந் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது.

    SIR குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் சில நாட்களுக்கு பாராளுமன்றம் முடங்கியது. திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது.

    இந்நிலையில், நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு இன்று கொண்டாடப்படுவதால் அதன் வரலாறு குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது.

    'வந்தே மாதரம்' இயற்றப்பட்டதன் 150வது அண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மக்களவையில் பிரதமர் மோடி இன்று 10 மணி நேர சிறப்பு விவாதத்தை தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார்

    இதன் மூலம் வந்தே மாதரம் பாடல் குறித்து பல்வேறு முக்கியமான, அறியப்படாத தகவல்கள் தெரியவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வந்தே மாதரம் பாடலில் இருந்து முக்கிய வரிகள் கடந்த1937-ம் ஆண்டு நீக்கப்பட்டதே இந்தியாவின் பிரிவினைக்கு காரணம் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் மோடி 'வந்தே மாதரம்' பாடலின் நினைவு தபால்தலை-நாணயத்தை வெளியிட்டார்.
    • இசை நிகழ்ச்சியை பிரதமர் மோடி பார்த்து இசைக்கு ஏற்றபடி தலையை அசைத்து ரசித்தார். கைகளை தட்டி தாளமும் போட்டார்.

    இந்திய சுதந்திர போராட்டத்தில் "வந்தே மாதரம்" பாடல் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும்.

    'வந்தே மாதரம்' பாடலை மேற்கு வங்காள கவிஞரான பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றியுள்ளார். இந்த பாடல் முதல் முதலாக 1875-ம் ஆண்டு நவம்பர் 7-ந்தேதி பங்காதர்ஷன் என்ற இலக்கிய இதழில் வெளியிடப்பட்டது.

    'வந்தே மாதரம்' பாடல் தேசத்தை தட்டி எழுப்பிய ஒரு உணர்வுப்பூர்வமான கீதம் ஆகும். 'வந்தே மாதரம்' தேசிய பாடலின் 150 ஆண்டு கள் கொண்டாட்டம் புது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கில் இன்று காலையில் நடைபெற்றது.

    இதில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி, வந்தே மாதரம் ஒற்றை நாதம், ஓராயிரம் வடிவங்கள் சிறப்பு பொருட் காட்சி, வந்தே மாதரம் வர லாறு குறித்த குறும்படம், கலாச்சார நிகழ்ச்சிகள், நினைவு அஞ்சல் தலை மற்றும் நாணயம் வெளியீட்டு விழா ஆகியவையும் நடந்தது.

    இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மத்திய அமைச்சர் கஜேந்தி ரசிங் ஷெகாவத், டெல்லி துணைநிலை ஆளுனர் வினய்குமார் சக்சேனா, டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் பங்கேற்ப தற்காக பிரதமர் மோடி காலை 9.30 மணியளவில் வந்தார். அங்கு நடைபெற்று வரும் பொருட்காட்சியில் வந்தே மாதரம் பாடலின் இசைத் தட்டுகள்இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு கால கட்டத்திலும் வந்தே மாதரம் பாடல் என்னென்ன இசைத் தட்டு வடிவங்களில் கிடைத்தன என்பது பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

    இதில் பலவிதமான இசைக் தட்டுகளும் இடம் பெற்றிருந்தன. அவை அனைத்தையும் பிரதமர் மோடி ஒவ்வொன்றாக பார்த்து அதனை பற்றி அறிந்து கொண்டார்.

    மேலும், வந்தே மாதரம் பாடல் கொண்ட இசைத் தட்டு ஒன்றை கிராம போன் மூலம் பிரதமர் மோடி ஒலிக்க விட்டார். கண்காட்சி யை பார்வையிட்ட பிறகு பிரதமர் மோடி காலை 9.50 மணியளவில் வந்தார். பின்னர் நிகழ்ச்சிகள் தொடங்கின. முதலில் 'வந்தே மாதரம்' பாடலை பாடகிகள் உணர்வுப்பூர்வமாக பாடினார்கள்.

    அவர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவருமே எழுந்து நின்று 'வந்தே மாதரம்' பாடலை பாடினார்கள். பாடல் முடிந்ததும் 'வந்தே மாதரம்' என அனைவரும் குரல் எழுப்பினார்கள்.

    அதன் பிறகு விழாவில் பிரதமர் மோடிக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் தெடர்ந்து ஒரு வருடம் கொண்டாடப்பட உள்ளது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    அதன் பிறகு 'வந்தே மாதரம்' பாடலின் 150 ஆண்டுகள் நினைவாக 150 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். பின்னர் "வந்தே மாதரம்" பாடலின் நினைவு தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். 

    பின்னர் 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு களை கொண்டாடும் வகையில் vandemataram 150.in என்ற இணையதளத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதில் பொது மக்கள் 'வந்தே மாதரம்' பாடலை தங்களின் தனித்து வமான குரலில் பாடி பதி வேற்றம் செய்வது தொடர் பான நடைமுறைகள் விளக் கப்பட்டன. பின்னர் 'வந்தே மாதரம்' பாடலின் தனித்துவ தத்தை விளக்கும் குறும் படம் ஒன்றும் வெளியிடப் பட்டது.

    அதனைத் தொடர்ந்து பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் இசைக் கலைஞர்கள் ஏராளமானோர் இசையமைக்க பாடகர்கள் மற்றும் 'வந்தே மாதரம்' பாடலின் முழு தொகுப்பையும் பாடினார்கள். அதை பிரதமர் மோடி பார்த்து இசைக்கு ஏற்றபடி தலையை அசைத்து ரசித்தார். கைகளை தட்டி தாளமும் போட்டார்.

    அதன் பிறகு பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது:-

    இந்தியாவின் சுதந்திர வேட்கைக்கான எழுச்சி யூட்டிய பாடல்களில் பிர தானமானது 'வந்தே மாதரம்' பாடலாகும். 'வந்தே மாதரம்' ஒரு பாடல் மட்டு மல்ல, அது ஒரு மந்திரமாகும். 'வந்தே மாதரம்' பாடல் இந்தியர்களுக்கு ஊக்க மளிக்கிறது. இந்தியர்களாகிய நாம் அடைய முடியாத இலக்குகள் என்று எதுவும் இல்லை.

    வந்தே மாதரம் இந்தியா வின் சுதந்திர போராட்டத் தின் குரலாக இருந்தது. வந்தே மாதரம் இந்தியாவின் ஒற்றுமையின் சின்னமாகும். ஏனென்றால் அது தலை முறைகளுக்கு உத்வேகம் அளித்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் எனது இந்திய சகோதர-சகோதரி களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 'வந்தே மாதரம்' பாடலின் 150 ஆண்டுகளை இன்று நாம் கொண்டாடும் வேளை யில் இது நமக்கு புதிய உத்வேகத்தை தருகிறது.

    மேலும், நாட்டு மக்களுக்கும் புதிய ஆற்றலை அளிக்கிறது. 'வந்தே மாதரத்தின் முக்கியமான உணர்வு பாரதம். இந்தியா ஒரு தேசமாக உருவானது. இந்தியாவின் கருத்துருவிற்கும், நாட்டின் சுதந்திரத்திற்கான ஏக்கத்துக்கும் பின்னால் உள்ள கருத்தியல் சக்தியை இந்த பாடல் உள்ளடக்கியுள்ளது.

    இதயத்தின் ஆழத்தில் இருந்தும், உணர்ச்சிகளில் இருந்தும் 'வந்தே மாதரம்' போன்ற ஒரு பாடல் வெளிப்படுகிறது. அடிமைத்தனத்தின் அந்த கால கட்டத்தில் 'வந்தே மாதரம்' பாடல் இந்திய சுதந்திரத்தின் பிரகடனத்தை பற்றியதாக மாறியது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மிசோரமைச் சேர்ந்த 7 வயது சிறுமி எஸ்தர் நாம்தே வந்தே மாதரம் பாடலை பாடினார்.
    • அவரைப் பாராட்டிய அமித்ஷா அந்தச் சிறுமிக்கு கிடார் ஒன்றை பரிசளித்து மகிழ்ந்தார்.

    புதுடெல்லி:

    மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 7 வயதான எஸ்தர் நாம்தே என்ற சிறுமி தனது வசீகர குரலில் வந்தே மாதரம் பாடலை பாடினார். இவரது பெயரில் யூ டியூப் சேனல் இயங்கிவருகிறது. எஸ்தரின் வந்தே மாதரம் ஆல்பத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மிசோரம் முதல் மந்திரி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அந்தச் சிறுமியைப் பாராட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று மிசோரம் மாநிலம் சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ்தர் நாம்தே என்ற சிறுமி வந்தே மாதரம் பாடலை பாடியதை கேட்டு நெகிழ்ந்துள்ளார்.

    அவரைப் பாராட்டிய அமித்ஷா எஸ்தர் நாம்தேவை வரவழைத்து கிடார் ஒன்றையும் பரிசளித்து மகிழ்ந்தார்.

    இதுதொடர்பாக, அமித்ஷா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பாரதத்தின் மீதான அன்பு நம் அனைவரையும் ஒருங்கிணைக்கிறது. மிசோரமின் அதிசய குழந்தை எஸ்தர் லால்துஹாவ்மி நாம்தேவை அய்ஸ்வாலில் வந்தே மாதரம் பாடலைப் பாடுவதைக் கேட்டு மிகவும் நெகிழ்ச்சி அடைந்தேன். பாரத மாதா மீதான 7 வயது சிறுமியின் அன்பு அவளது பாடலில் வெளிப்பட்டது. அவர் பாடக் கேட்பது ஒரு மயக்கும் அனுபவமாக மாறியது. அவருக்கு ஒரு கிடார் பரிசாக அளித்து, அற்புதமான எதிர்காலம் அமைய வாழ்த்தினேன் என பதிவிட்டுள்ளார்.

    • இந்தியா 5-4 என்ற புள்ளி கணக்கில் குவைத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
    • 9-வது முறையாக இந்தியாவுக்கு சாம்பியன் பட்டம் கிடைத்து உள்ளது.

    பெங்களூரு:

    14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவும், குவைத்தும் நேற்று மோதின. இந்த போட்டியில் இரு அணியினரும் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக விளையாடினர். இதனால், கோல் அடிக்க முடியாமல் வீரர்கள் திணறினர். இரு அணிகளும் தலா ஒரு புள்ளிகளுடன் (1-1) போட்டி முடிவின்போது, சமநிலையில் இருந்தன.

    இதனால், பெனால்டி ஷூட்அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில், இந்திய அணியின் கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சந்து ஒரு கோலை அடிக்க விடாமல் தடுத்து அணி வெற்றி பெற உதவினார். போட்டியில் இந்தியா 5-4 என்ற புள்ளி கணக்கில் குவைத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதனால், 9-வது முறையாக இந்தியாவுக்கு சாம்பியன் பட்டம் கிடைத்து உள்ளது.

    இந்திய அணி கோப்பையை வென்ற நிலையில் அந்த அரங்கம் முழுவதிலும் இருந்த ரசிகர்கள் வந்தே மாதரம் என முழுக்கமிட்டனர். அப்போது இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரியும் அவர்களுடன் சேர்ந்து வந்தே மாதரம் என முழக்கமிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ராஜஸ்தான் ராயல் அணியின் நிர்வாகமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 

    • கயானாவில் உள்ள காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
    • சரஸ்வதி வித்யா நிகேதன் மாணவர்கள் வந்தே மாதரம் பாடல் பாடி பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    ஜார்ஜ் டவுன்:

    பிரதமர் நரேந்திர மோடி 3 நாடுகளுக்கான அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். முதலில் நைஜீரியா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபரை சந்தித்தார். நைஜீரியா பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.

    பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதையடுத்து, பிரேசில் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி கயானா சென்றார்.

    கயானா தலைநகர் ஜார்ஜ் டவுன் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கயானா அதிபர் முகமது இர்பான் அலியை பிரதமர் மோடி சந்தித்தார். இரு நாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    இந்நிலையில், கயானா தலைநகர் ஜார்ஜ் டவுனில் அமைந்துள்ள சரஸ்வதி வித்யா நிகேதன் பள்ளிக்கு பிரதமர் மோடி சென்றார். அங்குள்ள மாணவர்கள் வந்தே மாதரம் மற்றும் தேசபக்திப் பாடல்களைப் பாடி பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    தொடர்ந்து அங்குள்ள வகுப்பறைக்குச் சென்ற பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார். நடன பயிற்சியையும் பார்வையிட்டார்.

    முன்னதாக, ஜார்ஜ் டவுனில் உள்ள புரோமெனிடா பூங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    • ஹலோ என்ற சம்பிரதாய வார்த்தை மேற்கத்திய கலாச்சாரம்.
    • மகாத்மா காந்தி கூட வந்தே மாதரத்தை ஆதரித்தார்.

    மும்பை:

    மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி மகாராஷ்டிரா மாநிலம் வார்தா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அம்மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் சுதிர் முங்கந்திவார் தெரிவித்துள்ளதாவது:

    உத்தியோகபூர்வ அல்லது தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகளின் போது அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், "ஹலோ" என்பதற்குப் பதிலாக "வந்தே மாதரம்" என்று தெரிவிக்க வேண்டும். அரசுத் துறைத் தலைவர்கள் தங்கள் ஊழியர்களை அவ்வாறு செய்ய ஊக்குவிக்க வேண்டும். "ஹலோ" என்ற சம்பிரதாய வார்த்தை மேற்கத்திய கலாச்சாரத்தை சித்தரிக்கிறது. அதற்கு எந்த உணர்வும் இல்லை.

    வந்தே மாதரம் என்றால், நாங்கள் எங்கள் தாய்க்கு தலைவணங்குகிறோம் என்று பொருள். எனவே, பொதுமக்களும் "ஹலோ" என்பதற்குப் பதிலாக வந்தே மாதரம் என்று சொல்லுங்கள். சுதந்திரப் போராட்டத்தின் போது மகாத்மா காந்தி கூட வந்தே மாதரத்தை ஆதரித்தார்.

    வந்தே மாதரம் கூட கட்டாயமில்லை. 'ஜெய் பீம்' அல்லது 'ஜெய் ஸ்ரீ ராம்' என்றும் சொல்லலாம், தங்கள் பெற்றோரின் பெயரைக் குறிப்பிடலாம். ஆனால் தொலைபேசி அழைப்பைப் பெறும்போது ஹலோ சொல்வதை தவிர்க்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள். இவ்வாறு அவர் கூறினார்.

    இதனிடையே, விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், "ஜெய் பலிராஜா" ( (விவசாயிக்கு வாழ்த்துக்கள்) மற்றும் "ராம் ராம்" என்ற வார்த்தைகளை பயன்படுத்துமாறு காங்கிரஸ தொண்டர்களை மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படேல் கேட்டுக் கொண்டுள்ளார்.

    நமது நாடு விவசாயப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லும் போது 'ஜெய் பலிராஜா', 'ராம் ராம்' என்று சொல்வோம் என்பதே எங்களது நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டார்.

    ×