search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இந்தியா- வந்தே மாதரம் என முழங்கிய ஸ்டேடியம்- வைரலாகும் வீடியோ
    X

    சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இந்தியா- வந்தே மாதரம் என முழங்கிய ஸ்டேடியம்- வைரலாகும் வீடியோ

    • இந்தியா 5-4 என்ற புள்ளி கணக்கில் குவைத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
    • 9-வது முறையாக இந்தியாவுக்கு சாம்பியன் பட்டம் கிடைத்து உள்ளது.

    பெங்களூரு:

    14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவும், குவைத்தும் நேற்று மோதின. இந்த போட்டியில் இரு அணியினரும் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக விளையாடினர். இதனால், கோல் அடிக்க முடியாமல் வீரர்கள் திணறினர். இரு அணிகளும் தலா ஒரு புள்ளிகளுடன் (1-1) போட்டி முடிவின்போது, சமநிலையில் இருந்தன.

    இதனால், பெனால்டி ஷூட்அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில், இந்திய அணியின் கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சந்து ஒரு கோலை அடிக்க விடாமல் தடுத்து அணி வெற்றி பெற உதவினார். போட்டியில் இந்தியா 5-4 என்ற புள்ளி கணக்கில் குவைத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதனால், 9-வது முறையாக இந்தியாவுக்கு சாம்பியன் பட்டம் கிடைத்து உள்ளது.

    இந்திய அணி கோப்பையை வென்ற நிலையில் அந்த அரங்கம் முழுவதிலும் இருந்த ரசிகர்கள் வந்தே மாதரம் என முழுக்கமிட்டனர். அப்போது இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரியும் அவர்களுடன் சேர்ந்து வந்தே மாதரம் என முழக்கமிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ராஜஸ்தான் ராயல் அணியின் நிர்வாகமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    Next Story
    ×