search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி உரிமையாளர்கள்"

    • வருகிற 9-ந்தேதி, காலை 6மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
    • போராட்டத்துக்கு முன்னேற்பாடாக ரெயில் நிலைய கூட்ஸ்ெஷட், சபாபதிபுரம் பகுதியில் லாரிகளில் வேலை நிறுத்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

    திருப்பூர்:

    காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், ஆன்லைன் வழக்கு விதிப்பதை ரத்து செய்ய வேண்டும், அரசு மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 9-ந்தேதி, காலை 6மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் அறிவித்துள்ளது.

    இந்த போராட்டத்தில் திருப்பூர் மாவட்ட லாரி உரிமையாளர் சங்கம் பங்கேற்கிறது. போராட்டத்துக்கு முன்னேற்பாடாக ரெயில் நிலைய கூட்ஸ்ெஷட், சபாபதிபுரம் பகுதியில் லாரிகளில் வேலை நிறுத்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது.ஓரிரு நாளில் மாவட்ட லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கூடி போராட்டத்தில் பங்கேற்பது, லாரிகளை நிறுத்துவது குறித்து ஆலோசித்து அறிவிப்பு வெளியிட உள்ளனர்.

    • லாரி உரிமையாளர்கள் போதுமான வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள்.
    • மீண்டும் சுங்க கட்டண உயர்வால் லாரி வாடகை உயர்த்தப்பட்டால் விலைவாசி மேலும் உயரும் அபாய நிலை உள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் 1997 முதல் தனியார் மூலம் சுங்கசாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முதலில் 34 சுங்கசாவடிகளில் கட்டணம் அமல்படுத்தப்பட்ட நிலையில் 2004-2008 கால கட்டத்தில் சுங்க சாவடிகளின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்தது.

    தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 63 சுங்கசாவடிகள் உள்ளன. இவற்றுக்கு ஆண்டிற்கு 2 பிரிவுகளாக ஏப்ரல் 1 மற்றும் செப்டம்பர் 1-ந் தேதி ஆகிய நாட்களில் கட்டண உயர்வை அமுல்படுத்தி கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

    அதன்படி இன்று நள்ளிரவு முதல் 20 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் மேட்டுப்பட்டி, நத்தக்கரை, ஓமலூர், வைகுந்தம், கரூர் மாவட்டத்தில் வேலன் செட்டியூர், மணவாசி, தர்மபுரியில் பாளையம், ஈரோட்டில் விஜயமங்கலம் மற்றும் விக்கிரவாண்டி, கொடைரோடு, பொன்னம்பலப்பட்டி, சமயபுரம், திருப்பராய்த்துறை, மொரட்டாண்டி, புதூர் பாண்டியபுரம், உளுந்தூர் பேட்டை, செங்குறிச்சி, திருமாந்துறை, வாழவந்தான் கோட்டை, எலியார்பத்தி ஆகிய சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்கிறது.

    அதன்படி ஓமலூர் சுங்க சாவடியில் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒரு முறை சென்று வர பழைய கட்டணம் 90-ல் இருந்து 95 ரூபாய், பல முறை சென்று வர 130-ல் இருந்து 145 ரூபாய், மாத கட்டணம் 2 ஆயிரத்து 600-ல் இருந்து 2 ஆயிரத்து 870 ரூபாய், இலகு ரக வாகனங்கள் ஒரு முறை சென்று வர 155-ல் இருந்து 165 ஆகவும், பல முறை சென்று வர 230-ல் இருந்து 250 ஆகவும், மாத கட்டணம் 4 ஆயிரத்து 520-ல் இருந்து 5020 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

    கன ரக வாகனங்கள் ஒரு முறை சென்று வர 300-ல் இருந்து 335, பல முறை சென்று வர 480-ல் இருந்து 500, மாத கட்டணம் 9640-ல் இருந்து 10,040 ரூபாய், 2 அச்சு மிக கன ரக வாகனங்கள் ஒரு முறை சென்று வர 480-ல் இருந்து 540, பல முறை சென்று வர 750-ல் இருந்து 805 மாத கட்டணம் 15ஆயிரத்து 100ல் இருந்து 16 ஆயிரத்து 135 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    ஏற்கனவே டீசல், பெட்ரோல் விலை உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வு உள்பட மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் மற்றும் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் சுங்க கட்டண உயர்வால் லாரி வாடகை உயர்த்தப்பட்டால் விலை வாசி மேலும் உயரும் அபாய நிலை உள்ளது.

    இந்த சுங்க கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள், அதன் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சுங்க கட்டண உயர்வால் லாரி உள்பட அனைத்து வாகனங்களுக்கும் கூடுதல் செலவு ஏற்படும் என்பதால் வாடகை உயரும் அபாயம் உள்ளது. வாடகை உயரும் பட்சத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் சுங்க கட்ட ண உயர்வை குறைக்க வேண்டும் என்பது அனை வரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இது குறித்து லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் தன்ராஜ் கூறியதாவது-

    தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 6 லட்சம் லாரிகள் இயங்கின. தொடர்ந்து டீசல் விலை ஏற்றம், காப்பீட்டு கட்டண உயர்வு, லோடு கிடைக்காமை, ஆன்லைன் அபராதம், போக்குவரத்து அதிகாரிகள் கெடுபிடி உள்பட பல்வேறு காரணங்களால் 1.5 லட்சம் லாரிகள் தற்போது இயங்கவில்லை.

    4.5 லட்சம் லாரிகள் மட்டும் இயங்கி வருகிறது. இதில் 1 லட்சம் லாரிகள் வட மாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது. மற்ற லாரிகள் தமிழகத்திற்குள் இயக்கப்படுகிறது. லாரி தொழில் லோடு கிடைக்காததால் நாளுக்கு நாள் நலிந்து வருகிறது. இதனால் லாரி உரிமையாளர்கள் போதுமான வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட சுங்கச்சவாடிகள் உள்பட நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட சுங்க சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் சேலத்தில் இருந்து டெல்லிக்கு செல்ல அதிக பட்சமாக ஒரு லாரிக்கு 1500 ரூபாயும், சேலம் சென்னைக்கு 300 ரூபாயும், கன்னியாகுமரி-சென்னைக்கு 500 ரூபாய் வரையும் சுங்க கட்டணம் உயருகிறது. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு கூடுதல் செலவாகிறது.

    ஏற்கனவே லாரி வாடகை உயர்வால் லோடு கிடைக்காத நிலையில் மேலும் வாடகையை உயர்த்தினால் லாரி தொழில் மேலும் பாதிக்கும் நிலை உள்ளது. இதனால் லாரி வாடகையை உயர்த்தும் எண்ணம் இல்லை. எனவே மத்திய அரசு காலாவதியான சுங்கசாவடிகளை நீக்க வேண்டும், கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், வாகனங்களிலும் வசூல் செய்யும் தனியார் நிறுவனங்கள் சாலைகளை பராமரிப்பதில் அக்கரை காட்டுவதில்லை.

    குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிகள் படி கழிப்பறை, ஓய்வறை, வாகன நிறுத்தம் உள்பட எந்த வசதிகளையும் செய்வதில்லை. தமிழகத்ததில் உள்ள 63 சுங்க சாவடிகளில் 1997-ல் ஏற்படுத்தப்பட்ட 14 சுங்க சாவடிகள் அதன் திட்ட மதிப்பீட்டை தாண்டி மக்கள், வாகன உரிமையாளர்களிடம் வசூல் வேட்டை நடத்தி விட்டன.

    இது குறித்து மத்திய தரை வழி போக்குவரத்து துறை அமைச்சர் பார்வைக்கு இந்திய மோட்டார் காங்கிரஸ் கொண்டு சென்ற நிலையில் தன்னிறைவு சுங்க சாவடிகள் அகற்றப்படும் என அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்த போதும் வசூல் வேட்டை தொடர்கிறது. இந்த நிலையில் சுங்க சாவடிகளில் கட்டண உயர்வை அமல் படுத்துவது மோட்டார் தொழிலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    இதனால் தன்னிறைவு எட்டிய சுங்க சாவடிகளை அகற்ற வேண்டும், கட்டண அதிகரிப்பை ரத்து செய்ய வேண்டும், கியாஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது போல டீசல், பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்க வேண்டும், மாநில அரசு டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் அப்போது தான் நலிவடைந்துள்ள லாரி தொழிலை கொஞ்சமாவது பாதுகாக்க முடியும். இதற்கு மத்திய மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏற்கனவே லாரிகளுக்கு போதுமான லோடு கிடைக்காத நிலையில் தற்போது சுங்க சாவடி கட்டணம் உயர்வதால் வாடகை கட்டணத்தை உயர்த்த லாரி உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

    • லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் அறிவிக்கப்பட்டது
    • எங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளோம்

    ஈரோடு

    தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்குவாரி, கிரஷர் மற்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதுகுறித்து, சங்கத்தின் ஈரோடு மாவட்டத் தலைவர் சுப்பிரமணி கூறியதாவது:- எங்களது சங்கத்தின் மா நில நிர்வாக குழுக் கூட்டத்தின் முடிவின்படி, எங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.

    ஈரோடு மாவட்டத்தில் 16 கல்குவாரிகள், 1,500 லாரிகள் உள்ளன.இத்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. எனவே, எங்களது கோரிக்கையை அரசு பரிசீலித்து இத்தொழிலையும், அதை நம்பியுள்ளோரையும் பாதுக்காத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • நாடு முழுவதும் காலாவதியான நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று பல முறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்கவில்லை.
    • லாரிகளை தடுத்த நிறுத்தி, அதிக பாரம் ஏற்றியுள்ளதாக ரூ. 40 ஆயிரம் வரை அபராதம் விதிக்கின்றனர்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் இயக்கப்படும் லாரிகள், டிரெய்லர்கள், டேங்கர் லாரிகள், கண்டெய்னர் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால், செய்யாத குற்றத்திற்கு அபராதம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. வாகனங்கள் தமிழ்நாட்டில் இயக்கப்படும் போது வேறு மாநிலத்தில் இயக்கப்படுவது போல ஆன்லைனில் அபராதம் விதிக்கப்படுகிறது.

    வெளி மாநிலங்களில் இயக்கப்படும் லாரிகளுக்கு தமிழகத்தில் அபராதம் விதிக்கப்படுகிறது. போலீசார் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து அலுவலர்கள் வாகன எண்ணைக்கூட சரியாக பார்க்காமல் ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கின்றனர். இதன்மூலம் கடந்த ஓராண்டாக லாரி உரிமையாளர்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.

    நாடு முழுவதும் காலாவதியான நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று பல முறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்கவில்லை. லாரிகளில் ஓவர்லோடு தடை செய்யப்பட வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்து வந்துள்ளது.

    இந்நிலையில் லாரிகளை தடுத்த நிறுத்தி, அதிகபாரம் ஏற்றியுள்ளதாக ரூ. 40 ஆயிரம் வரை அபராதம் விதிக்கின்றனர். இதை முறைப்படுத்த வேண்டும். லாரி உரிமையாளர்களின் பிரச்சினைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ் நாடு முழுவதும் அந்தந்த மாவட்ட போலீஸ் எஸ்.பி மற்றும் கமிஷனர்களிடம் லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

    மேலும் தமிழக டிஜிபியை நேரில் சந்தித்து முறையிட்டோம். ஆனால் ஆன்லைன் அபராதம் விதிப்பது தொடர்கதையாக உள்ளது. ஆன்லைன் அபராதத்தால் லாரி உரிமையாளர்கள் மட்டுமின்றி பொது மக்களும் பாதிக்கின்றனர்.

    இதனை கண்டித்து சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் வருகிற ஜூன் 6-ந் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஒன்றிணைந்து மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதில் லாரி, டிரெய்லர், டேங்கர், மினி லாரி, மணல் லாரி, தண்ணீர் டேங்கர் லாரி உள்ளிட்ட அனைத்து சரக்கு வாகன உரிமையாளர்கள் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொள்ள உள்ளனர்.

    இது அடையாள உண்ணாவிரதப் போரட்டம் தான். அதன் பின்னரும் மத்திய, மாநில அரசுகள், லாரி உரிமையாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவ டிக்கை எடுக்காவிட்டால், அகில இந்திய மோட்டார் டிரன்ஸ்போர்ட் காங்கிரஸ் சேர்மன் டாக்டர் சண்முகப்பா ஆலோசனையின் பேரில், காலவரையற்ற லாரி நிறுத்தப் போராட்ட த்தில் ஈடுபட உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. மாநில தலைவர் தன்ராஜ் தலைமை வகித்தார். சம்மேளன செயலாளர் ராமசாமி, பொருளா ளர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில அரசின் நெடுஞ்சாலைகளில் ஏராளமான சுங்கச்சாவடிகள் உள்ளன.
    • பல இடங்களில், முழுமையாக கட்டணம் வசூலித்து காலாவதியான சுங்கச்சாவடிகளை மத்திய அரசு மூடாமல் வைத்துள்ளது.

    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் ஓடுகின்றன. இதில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் வட மாநிலங்களுக்கு சென்று வருகின்றன.

    சுங்க கட்டணம் மற்றும் டீசல் உயர்வு, இன்சூரன்ஸ் கட்டண உயர்வால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சுங்க கட்டணம் உயர்வு மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதால் லாரி உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ், செயலாளர் ராமசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில அரசின் நெடுஞ்சாலைகளில் ஏராளமான சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் பல ஆண்டுகளாக அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதனால் லாரி உரிமையாளர்களுக்கு, பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.

    பல இடங்களில், முழுமையாக கட்டணம் வசூலித்து காலாவதியான சுங்கச்சாவடிகளை மத்திய அரசு மூடாமல் வைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், சுங்கச்சாவடிகளில் வருமானம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

    இந்த நிலையில் சுங்கக் கட்டணத்தை குறைப்பதற்கு பதிலாக, ஒவ்வொரு ஆண்டும், சுங்க கட்டணத்தை, தனியார் சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் உயர்த்தி வருகின்றனர். இதைக்கண்டித்து, வரும் ஏப்ரல் 1-ந் தேதி 11 மணிக்கு, தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    அதன்படி, அனைத்து உறுப்பு சங்க நிர்வாகிகளும், தங்களுடைய கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் தங்கள் பகுதியில் உள்ள லாரி உரிமையாளர்களுடன், தங்களது பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் திரளாக கலந்துகொண்டு, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி, சம்மேளனத்தின் ஒற்றுமையையும், லாரி உரிமையாளர்களின் பலத்தையும் நிரூபித்து, ஆர்ப்பாட்டம் வெற்றி பெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • திருச்சி முதலியார் சத்திரம் குட்ஷெட்டில் 300 லாரிகள் இயங்கி வருகின்றன.
    • திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், சேலம் உள்ளிட்ட 20 மாவட்டங்களுக்கு அரிசி, சிமெண்ட், உரம், கோதுமை உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் லாரி மூலமாக எடுத்து சென்று சப்ளை செய்யப்படுகிறது

    திருச்சி,

    திருச்சி முதலியார் சத்திரம் குட்ஷெட்டில் 300 லாரிகள் இயங்கி வருகின்றன. இங்கு சரக்கு ெரயில்களில் வரும் அத்தியாவசிய பொருட்கள் இந்த லாரிகள் மூலம் 20 மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த நிலையில் ரோடு வசதி மற்றும் பார்க்கிங் வசதி கேட்டு தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், குட்செட் லாரி உரிமையாளர்கள் சங்கம், மலைக்கோட்டை லாரி உரிமையாளர்கள் சங்கம், காண்ட்ராக்டர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் இணைந்து இன்று முதல் குட்ஷெட் லாரி உரிமையாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

    இதில் 300-க்கும் மேற்பட்ட லாரி டிரைவர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் எம்.சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஜி. கே.முருகேசன், சேகர் மாரி செல்வம் சத்தியமூர்த்தி உள்ளிட்ட சங்க பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். பின்னர் குட்ஷெட் தலைமை கூட்ஸ் பொறுப்பாளர் ஜான்சனிடம் மனு அளித்தனர்.

    இதுபற்றி சங்கர் கூறும்போது, முன்பு ெரயில்வே இடத்தில் லாரிகளை பார்க்கிங் செய்தோம். இப்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் குட்செட் லாரி உரிமையாளர்கள் செய்வதறியாமல் திகைக்கின்றோம். நாங்கள் இங்கிருந்து திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், சேலம் உள்ளிட்ட 20 மாவட்டங்களுக்கு அரிசி, சிமெண்ட், உரம், கோதுமை உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் லாரி மூலமாக எடுத்து சென்று சப்ளை செய்கிறோம்.

    நாளைய தினம் வட மாநிலத்தில் இருந்து இரும்பு கொண்டுவரப்படுகிறது. அதனை நாளைக்கு மறித்து போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றோம். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றார்.

    டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி வருகிற 18-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
    சென்னை:

    டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அகில இந்திய தரைவழி சரக்கு போக்குவரத்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரஜிந்தர் சிங், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் சுகுமார் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது:-

    மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. குறிப்பாக டீசல் விலை கடந்த 6 மாதத்தில் 7 ரூபாய் 40 காசு அதிகரித்துள்ளது. 3-ம் நபர் காப்பீட்டு தொகை கட்டணமும் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. சுங்கச்சாவடி கட்டணமும் ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் லாரி தொழில் நலிவடைந்து வருகிறது.

    டீசல் விலையை குறைக்க அதனை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், 3-வது நபர் காப்பீட்டு தொகை, சுங்கக் கட்டணம் ஆகியவற்றை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய பெட்ரோலியத்துறை மந்திரிக்கு கடந்த ஏப்ரல் மாதம் கடிதம் அனுப்பி இருந்தோம்.

    இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கையும் செய்தோம். எனினும் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

    எனவே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக வேறு வழியின்றி 18-ந் தேதி காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் ஓடாது. தமிழ்நாட்டில் 7 லட்சம் லாரிகள் இயங்காது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கும் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படும்.
    பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து வருகிற 17-ந் தேதி முடிவு எடுக்க உள்ளனர். #lorrystrike
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகப்பா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் தற்போது ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் கச்சாப் பொருட்களின் விலை குறைந்த போதிலும் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. மத்திய, மாநில அரசுகளின் வரி விதிப்புதான் இதற்கு காரணம். பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.யில் சேர்க்க மத்திய அரசு மறுத்து வருகிறது.


    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சரக்கு வாகனங்களின் கட்டணம் உயர்த்தப்பட்டு அதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். இதையெல்லாம் மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளாத நிலை இருந்து வருகிறது.

    எனவே பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைக்கக்கூடாது. 6 மாதத்துக்கு ஒரு முறை மாற்றியமைக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறைதான் சுங்கவரி வசூலிக்க வேண்டும்.

    உயர்த்தப்பட்ட வாகனங்களுக்கான 3-ம் நபர் காப்பீட்டு தொகையை ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    வருகிற 17-ந் தேதி டெல்லியில் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் நடக்கிறது. அதில் எப்போது வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்பது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும்.

    இவ்வாறு சண்முகப்பா கூறினார். #petrol #diesel #lorrystrike
    ×