search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லஷ்கர் இ தொய்பா"

    • 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் அப்துல் கரீம் துண்டாவை போலீசார் கைதுசெய்தனர்.
    • இந்த வழக்கில் இருந்து லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அப்துல் கரீம் துண்டா விடுவிக்கப்பட்டார்.

    மும்பை:

    1993-ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் தேடப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அப்துல் கரீம் துண்டா, 2013 ஆகஸ்டில் நேபாள எல்லையான பன்பாஸாவில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே, இன்று காலை 11.15 மணியளவில் துண்டா, இர்ஃபான், ஹமீதுதின் ஆகியோரை பலத்த பாதுகாப்புடன் தடா நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    இந்நிலையில், 1993-ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அப்துல் கரீம் துண்டா விடுவிக்கப்பட்டுள்ளார். துண்டாவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி தடா நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. ஆனாலும், அவருடன் குற்றம்சாட்டப்பட்ட இர்பான், ஹமீதுதீன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    • சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதி அட்னான் அகமது லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தில் மிக முக்கியமானவராக திகழ்ந்து வந்தான்.
    • அட்னான் அகமது இந்தியாவில் தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்று உள்ளான்.

    கராச்சி:

    இந்தியாவில் பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட வெளிநாட்டை சேர்ந்த பயங்கரவாத கும்பல் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அவ்வப்போது இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதலும் நடத்தி வருகின்றனர்.

    பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் கராச்சியில் அந்த அமைப்பை சேர்ந்த முக்கிய பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். அவனது பெயர் அட்னான் அகமது என்கிற அபு ஹன்சாலா சம்பவத்தன்று இவனை வீட்டின் அருகே மர்மநபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் தலை, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது.

    இதனால் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அட்னான் அகமது உடனடியாக ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டான். அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். அவனை சுட்டுக்கொன்றது யார்? என்று தெரியவில்லை.

    சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதி அட்னான் அகமது லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தில் மிக முக்கியமானவராக திகழ்ந்து வந்தான். அந்த அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீதுவின் நெருங்கிய கூட்டாளியாகவும், வலது கரமாகவும் இருந்து வந்தான். ஹபீஸ் சயீது காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரில் நடந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மீதான தாக்குதலில் மூளையாக செயல்பட்டவன் ஆவான்.

    கடந்த 2015-ம் ஆண்டு உத்தம்பூரில் எல்லைப் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 2 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

    13-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு (என்.ஐ.ஏ) அதிகாரிகள் ஹபீஸ் சயீதுவை தேடி வருகின்றனர். இந்த நிலையில் தான் அவனது முக்கிய கூட்டாளி அட்னான் அகமது சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளான். இந்தியாவில் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்துவதற்கும், பயங்கரவாதிகளை ஊடுருவ செய்வதற்கும், அட்னான் அகமதுவுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ மற்றும் அந்நாட்டு ராணுவம் உதவி செய்து வந்தது.

    தாக்குதல் நடத்துவதற்கு தேவையான பயிற்சிகள் மற்றும் பணம் உள்ளிட்ட உதவிகளை அவர்கள் செய்து வந்தாக கூறப்படுகிறது.

    2016-ம் ஆண்டு பாம்பேர் பகுதியில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் அட்னான் அகமது முக்கிய பங்காற்றினான்.

    இந்த தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் படுகாயம் அடைந்தனர். அட்னான் அகமது இந்தியாவில் தேடப்பட்டு வரும் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்று உள்ளான்.

    பாகிஸ்தானை பொறுத்தவரை சமீப காலமாக பல பயங்கரவாதிகள் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டு வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது.

    கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியான மவுலானா மசூத் அசாரின் நெருங்கிய கூட்டாளியான தாவூத் மாலிக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐம்முகாஷ்மீரில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித் திட்டம்.
    • பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் வாய்ப்பை தேடி வந்தனர்.

    சோபூர்:

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் குறித்த தேடுதல் வேட்டையில் மாநில காவல்துறையினர், ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் உள்ளிட்டோர் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நடத்திய சோதனையின் போது ​​கோரிபுராவில் இருந்து போமை பகுதி நோக்கி வந்த மூன்று சந்தேகத்திற்குரிய நபர்களை தடுத்து நிறுத்த முற்பட்டனர்.

    ஆனால் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர், இருப்பினும், பாதுகாப்புப் படையினர் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையின் போது அவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஷாரிக் அஷ்ரப், சக்லைன் முஷ்டாக் மற்றும் தவ்பீக் ஹசன் ஷேக் என அடையாளம் காணப்பட்டனர்.

    மேலும் நடத்தப்பட்ட சோதனையில், பயங்கரவாதிகள் வைத்திருந்த பாகிஸ்தான் கொடிகள், மூன்று கை எறிக்குண்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் உட்பட பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பை அந்த பயங்கரவாதிகள் தேடி வந்தது முதல்கட்ட விசாரணை முடிவில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து மூன்று பேரும் கைது செய்யப்பட்டு, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாட்டில் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் ஹைபிரிட் பயங்கரவாதியை இந்திய ராணுவம் கைது செய்துள்ளது.
    • கடந்த மே 10-ந்தேதி ஹைபிரிட் பயங்கரவாதிகள் 4 பேரை போலீசார் கைது செய்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகர் போலீசார் மற்றும் இந்திய ராணுவத்தின் 2 ஆர்.ஆர். படை பிரிவினர் இணைந்து கூட்டு வேட்டை நடத்தினார்கள். இதில் நாட்டில் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் ஹைபிரிட் பயங்கரவாதியை இந்திய ராணுவம் கைது செய்துள்ளது.

    கைதான நபர் சங்கம் புத்காம் பகுதியை சேர்ந்த ஆர்ஷித் அகமது என்பது தெரிய வந்துள்ளது. அவரிடம் இருந்து 5 கை துப்பாக்கிகள், 5 தோட்டா உறைகள், 50 தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 2 கையெறி குண்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

    இதுதொடர்பாக ஷால்தெங் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த ஹைபிரிட் பயங்கரவாதிகள் பட்டியலில் இருப்பதில்லை. அவர்களை பயங்கரவாத குழுவினர் ஒன்று அல்லது 2 முறை மட்டுமே தாக்குதல் நடத்த பயன்படுத்திக்கொள்வார்கள்.

    கடந்த 2021-ம் ஆண்டில் காஷ்மீரில் பொதுமக்கள், போலீசார், அரசியல் கட்சி தொண்டர்கள் மற்றும் சிறுபான்மை சமூக மக்கள் என பலரை இலக்காக கொண்டு 20-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களில் இதுபோன்ற ஹைபிரிட் வகை பயங்கரவாதிகளே ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    கடந்த மே மாதம் 1-ந் தேதி குல்காம் போலீசாருடன் இணைந்து காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி வேட்டையில் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி யாமின் யூசப்பட் கைது செய்யப்பட்டார்.

    அவர் பாகிஸ்தான் நாட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாதிகள் மற்றும் உள்ளூர் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட பணியமர்த்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    இதேபோன்று கடந்த மே 10-ந்தேதி லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் ஹைபிரிட் பயங்கரவாதிகள் 4 பேரை போலீசார் கைது செய்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.

    இந்த ஹைபிரிட் பயங்கரவாதிகளை அடையாளம் காண்பதும், பயங்கரவாத குழுவினர் அவர்களை பயன்படுத்துவதை தடுத்து நிறுத்துவதும் பெரும் சவாலான பணியாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ×