என் மலர்

    நீங்கள் தேடியது "LeT"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐம்முகாஷ்மீரில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித் திட்டம்.
    • பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் வாய்ப்பை தேடி வந்தனர்.

    சோபூர்:

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் குறித்த தேடுதல் வேட்டையில் மாநில காவல்துறையினர், ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் உள்ளிட்டோர் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நடத்திய சோதனையின் போது ​​கோரிபுராவில் இருந்து போமை பகுதி நோக்கி வந்த மூன்று சந்தேகத்திற்குரிய நபர்களை தடுத்து நிறுத்த முற்பட்டனர்.

    ஆனால் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர், இருப்பினும், பாதுகாப்புப் படையினர் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையின் போது அவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஷாரிக் அஷ்ரப், சக்லைன் முஷ்டாக் மற்றும் தவ்பீக் ஹசன் ஷேக் என அடையாளம் காணப்பட்டனர்.

    மேலும் நடத்தப்பட்ட சோதனையில், பயங்கரவாதிகள் வைத்திருந்த பாகிஸ்தான் கொடிகள், மூன்று கை எறிக்குண்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் உட்பட பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பை அந்த பயங்கரவாதிகள் தேடி வந்தது முதல்கட்ட விசாரணை முடிவில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து மூன்று பேரும் கைது செய்யப்பட்டு, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சுதந்திர தின விழாவை பயங்கரவாதிகள் சீர்குலைக்க திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், டெல்லியில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். #Delhi #IndependenceDay #MilitantArrest
    புதுடெல்லி:

    இந்தியாவின் சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்த சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகவும், எல்லை பாதுகாப்பு வீரர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மும்முரமாக செயல்படுமாறும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில், டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த ஹபிபுர் ரஹ்மான் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய புலனாய்வு அமைச்சகம் தெரிவித்துள்ள இந்த தகவலில், ஒடிசாவில் வசித்து வரும் ஹபிபுர் ரஹ்மான், ஷேக் அப்துல் நயீம் என்பவருடன் இணைந்து இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தீட்டி வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் ஷேக் அப்துல் நயீம் என்ற பயங்கரவாதி 2 முறை தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டு தப்பிச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. #Delhi #IndependenceDay #MilitantArrest
    ×