search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோடி அரசு"

    • உலக பொருளாதாரத்தில் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது- மத்திய அரசு.
    • மன்மோசன் சிங் ஆட்சி கால பொருளாதர சூழ்நிலை குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை தாக்கல்.

    பொருளாதார வளர்ச்சி என்பது விவசாயத்திலிருந்து தொழில் நிறுவனங்கள், சேவைகள் வரை வேலைவாய்ப்பைப் பன்முகப்படுத்துவதாகும். இதைத்தான் உலக நாடுகள் செய்து வருகிறது. இதுவரை நாமும் பின்பற்றி வருகிறோம் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் அடைந்த முன்னேற்றம், தற்போது பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பின்னோக்கி செல்கிறது. தற்போதைய ஆட்சியின் "தவறான நிர்வாகம்" பொருளாதார மாற்றத்தை 20 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளியுள்ளது எனவும் விமர்சனம் செய்துள்ளார்.

    விவசாயப் பணிகளில் உள்ள பணியாளர்களின் எண்ணிக்கை 2004-05-ம் ஆண்டை காட்டிலும், 2017-2018-ம் ஆண்டில் 6.7 கோடியாக சரிந்துள்ளது. விவசாயத்துறையில் உள்ள சம்பளத்தை விட உற்பத்தி மற்றும் சேவைகள் துறைகளில் கவர்ச்சிகரமான சம்பளம் கிடைப்பதால் அந்தத் துறைகளை பணியாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.

    நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இந்தியாவின் மாற்றத்தில் இதுதான் மோடி அரசின் மிகப்பெரிய வரலாற்று சாதனை என ஜெய்ராம் ரமேஷ் கிண்டலாக தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி உலக பொருளாதாரத்தில் இந்தியா சவால் விடும் நாடாக மாறி வருகிறது. தற்போது உலக பொருளாதாரத்தில் இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 3-வது இடத்திற்கு கொண்டு வருவதுதான் எங்களது இலக்கு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

    மன்மோகன் சிங் தலைமையிலான அரசின் பொருளாதார கொள்கை குறித்து மோடி அரசு பாராளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார்.
    • கடந்த 10 ஆண்டில் நடந்த சமூக அநீதிகளை மனதில் கொண்டு இந்த யாத்திரை மேற்கொள்ளப்படும் என்றார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரை வெற்றியடைந்த நிலையில், அடுத்து நாட்டின் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு பகுதி வரையிலான யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ளார்.

    அதன்படி மணிப்பூர் முதல் மும்பை வரையிலான இந்த பாத யாத்திரையை இன்று ராகுல் காந்தி தொடங்க உள்ளார். இந்த யாத்திரைக்கு 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை' என பெயரிடப்பட்டுள்ளது. மொத்தம் 6,713 கி.மீ. தூரம் கொண்ட இந்த யாத்திரை பேருந்துகளிலும், நடைபயணத்திலும் மேற்கொள்ளப்படும். 110 மாவட்டங்களையும், சுமார் 100 மக்களவைத் தொகுதிகளையும், 337 சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    ராகுல் காந்தி தொடங்க உள்ள 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை' நரேந்திர மோடி அரசின் கடந்த 10 ஆண்டு கால அநியாயங்களை முன்னிலைப்படுத்தும். இந்த யாத்திரை தேர்தலுக்கானது அல்ல. இது கொள்கை ரீதியிலானது.

    'அமிர்த காலம்' குறித்த கனவுகளை நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி ஏற்படுத்துகிறார். ஆனால் கடந்த 10 வருடங்களின் உண்மை நிலவரம் என்ன? அது ஓர் அநியாய காலம்.

    கடந்த 10 ஆண்டுகளில் நடந்த அரசியல், பொருளாதார மற்றும் சமூக அநீதிகளை மனதில் கொண்டு இந்த யாத்திரை மேற்கொள்ளப்படும். இது ராகுல் காந்தியின் முந்தைய யாத்திரையைப் போல் மாற்றத்தை நிகழ்த்தும் யாத்திரையாக இருக்கும் என தெரிவித்தார்.

    • தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதியை குறைத்து, சமஸ்கிருத மொழிக்கு அதீக நிதி ஒதுக்கீடு.
    • தமிழ் மொழியை அழித்தொழிக்கும் செயலை அண்ணாமலை ஏற்பாரா? என மக்கள் கேள்வி.

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    பிரதமர் மோடியும், பாஜகவும் தமிழ்நாட்டில் அரசியல் ஆதாயம் தேட பல்வேறு சாகசங்களை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டுக்கு வந்தால் தமிழில் இரண்டொரு வார்த்தைகள் பேசுவது, மகாகவி பாரதியார் கவிதைகள், திருக்குறள் உள்ளிட்ட தலைசிறந்த படைப்புகளில் சிலவற்றை மேற்கோள் காட்டி பேசுவது, அண்மையில் காசியில் தமிழ் சங்கம் விழா எடுத்தது என்ற பல நிகழ்ச்சிகளை நடத்தி, ஆரவார வாய்ச்சவாடல் அடித்து வருகின்றனர்.

    ஆனால் தமிழ் மொழியை அழித்தொழிக்கும் வஞ்சகச் செயலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் அரசியல் அமைப்பு சட்டப்படி அங்கீகரிக்கபட்ட 22 மொழிகளை சமமாக அணுக வேண்டிய மத்திய அரசு, தமிழ்மொழி உட்பட பல மாநில மொழிகளை புறக்கணித்து, சமஸ்கிருத மொழியை திணித்து, ஏற்குமாறு நிர்பந்தித்து வருகிறது.

    குறிப்பாக தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதியை வெட்டி குறைத்து, சமஸ்கிருத மொழிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ் மொழி வளர்ச்சி தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வித் துறை இணை மந்திரி அளித்த எழுத்து மூலமான பதிலில் சமஸ்கிருதத்துக்கு ரூ.199 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.12 கோடிக்கும் குறைவாக நிதி ஒதுக்கியிருக்கும் தகவலை தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டு வளர்ச்சி, மக்கள் நலன் குறித்து நீலிக் கண்ணீர் வடித்து வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாய் திறந்து பேசுவாரா? எட்டுக் கோடிக்கும் அதிகமான மக்கள் பேசும் மொழியான தமிழுக்கு, தொன்மை சிறப்பும், இலக்கிய செறிவும் கொண்ட செம்மொழியாம் தமிழ் மொழியை அழித்தொழிக்கும் செயலை வாய் பொத்தி, கைகட்டி, முதுகை வளைத்து பணிந்து ஏற்பாரா? என தமிழக மக்கள் வினா எழுப்பி வருகின்றனர். தமிழ்மொழிக்கு வஞ்சகம் செய்யும், மோடி அரசை, அதிகாரத்தில் இருந்து நீக்குவது மட்டுமே தமிழ்மொழிக்கு பாதுகாப்பாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×