என் மலர்
நீங்கள் தேடியது "பாரதிய ஜனதா கட்சியினர்"
- பெரியார் பல்கலைக்கழகத்தில் சர்ச்சைக்குரிய கேள்வி கேட்டதை கண்டித்து ஈரோட்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஈரோடு:
பெரியார் பல்கலை க்கழகத்தில் சர்ச்சைக்குரிய கேள்வி கேட்டதை கண்டித்து ஈரோட்டில் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி தெற்கு மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சி தெற்கு மாவட்ட தலைவர் எஸ். டி. செந்தில்குமார் தலைமை தாங்கினார். பட்டியல் அணி மாநில செயலாளர் அய்யாசாமி, பட்டியல் அணி மாநில பொதுச்செயலாளர் விநாயகமூர்த்தி, தெற்கு மாவட்ட தலைவர் சக்திவேல், வடக்கு மாவட்ட தலைவர் நடராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் தயாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட துணை தலைவர்கள் குணசேகரன், சின்னத்துரை, மகளிர் அணி மாவட்ட தலைவர் புனிதம், அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு தலைவர் ஏ.ஜே.சரவணன்,மாவட்ட பொதுச்செயலாளர்கள் எஸ்.எம்.செந்தில், வேதா னந்தம் , சிவகாமி, ஈஸ்வர மூர்த்தி.
ஊடக பிரிவு தலைவர் அண்ணாதுரை, விவசாய அணி தங்கராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, ரகுபதி, சிபி சக்கரவர்த்தி, தேசிய செய்தி தொடர்பாளர் சரவணன் , பொருளாளர் சுதர்சனம், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் கார்த்திக் செயலாளர் பாலமுரளி உள்பட பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தாரகை கத்பர்ட் எச்சரிக்கை
- குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்து ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி கொண்டிருக்கிறார்கள்.
கன்னியாகுமரி:
காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் தாரகை கத்பர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாட்டில் பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதை அவர் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி தமிழகத்தில் காலூன்ற முடியுமா என்ற நட்பாசையுடன் பாஜக அரசியல் செய்து கொண்டிருக்கிறது. பாஜக மக்கள் மத்தியில் மதத்தை வைத்து மறுப்பு அரசியல் செய்து கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட கட்சியால் எப்படி நாட்டில் ஒற்றுமையை கொண்டு வர முடியும். ஒவ்வொரு மாநிலத்திலும் பண பலத்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்து அங்கு குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்து ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி கொண்டிருக்கிறார்கள்.
பாஜகவின் மோசமான ஆட்சியினால் இன்றைக்கு பொருளாதாரம் படுபாதாளத்தில் சென்றுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் பெருகி கொண்டிருக்கிறது.கேஸ் விலை எங்கோ சென்று விட்டது.
அதை முதலில் குறைத்து பெண்கள் நிம்மதியாக வாழ வழிவகை செய்யுங்கள்.ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100 ஐ தாண்டி விட்டது அதை சரி செய்யுங்கள்.
மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியை தேவையில்லாமல் அவதூறாக பேசினால் பாஜக கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- பாரதிய ஜனதா கட்சியினருக்கு கண்டனம்
- அமைச்சர் மனோதங்கராஜ் பற்றி அவதூறு பரப்புவோர் மீது வழக்கு
நாகர்கோவில்:
குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மக்களால் தேர்வு செய்யப்பட்டு பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து 2-வது முறையாக வெற்றி பெற்று, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மந்திரிசபையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக உள்ள மனோ தங்கராஜ் கடந்த சில தினங்களுக்கு முன்பு குமாரகோவில் முருகன் கோவிலில் தேர் திருவிழாவில் வடம் பிடிக்க சென்ற போது வேண்டுமென்றே பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது கண்டிக்கத்தக்கது.
கடந்த ஆட்சியில் திருக்கோவில்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட இந்த ஆட்சியில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதை பொறுத்துக் கொள்ள முடியாமல் பா.ஜனதா கட்சியினர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தி.மு.க. ஆட்சியில் ரூ.43 கோடி குமரி மாவட்டத்தி லுள்ள திருக்கோயில்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக பிரசித்திபெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு மூலவருக்கு தங்க கவசம் செய்ய ரூ10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் நாகர்கோவில் நாகராஜா கோயில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிதாங்கோடு மகாதேவர் கோவில் உள்பட பல்வேறு கோயில்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இந்த ஆண்டு இதுவரை 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் குமரி மாவட்டத்திற்கு மட்டும் ரூ.43 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதை பாரதிய ஜனதாவினரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் வீண் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். தி.மு.க. ஆட்சி இந்துக்களுக்கு எதிரான ஆட்சி என்று பரப்பி வந்தவர்களால் அதிக நிதி ஒதுக்கியதால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
இதை வைத்து அரசியல் செய்கிறார்கள். அமைச்சர் பற்றி வீண் வதந்திகளை பரப்புவோர் மீது முறையாக புகார் கொடுத்து வழக்கு தொடர்வோம். தமிழகத்தில் தற்போது பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நாகர்கோவில் மாநகராட்சியை பொருத்த மட்டில் அரசின் கொள்கை முடிவு படி தான் வரி உயர்த்தப்பட்டுள்ளது. மண்டலங்கள் மாற்றப்படவில்லை.
நாகர்கோவில் நகரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைபணிகள் கடந்த மாதம் 31ம் தேதி முடிப்பதாக தெரிவித்தனர்.
ஆனால் சில பணிகளின் காரணமாக பணிகள் முடிக்கப்படவில்லை. தற்பொழுது சவேரியார் ஆலயம் முதல் செட்டிகுளம் சந்திப்பு வரை உள்ள சாலையில் பாதாள சாக்கடை பணிகள் மற்றும் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும்.
இன்னும் 2 மாத காலத்துக்குள் பணிகள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் .இவ்வாறு அவர் கூறினார்.
- மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசால் மாநில உரிமைகள் அனைத்தும் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது.
- தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தாங்கள்தான் எதிர்க்கட்சி என பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.
பெரியகுளம்:
தேனிமாவட்டம் பெரியகுளத்தில் திராவிட கழக தலைவர் கீ.வீரமணி தலைமையில் மாநில உரிமைகள் மீட்பு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கி. வீரமணி பேசியதாவது, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசால் மாநில உரிமைகள் அனைத்தும் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது. எனவே இதனை மீட்டு எடுப்பதே திராவிட மாடல் ஆட்சி ஆகும்.
மாநிலம் என்றால் மக்கள், மக்கள் உரிமை, மனித உரிமை என்பதே, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தாங்கள்தான் எதிர்க்கட்சி என பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்கள் எப்போதும் தமிழகத்தில் ஒரு கட்சியாக தான் இருக்க முடியும்.
எதிர்க்கட்சியாகவோ, ஆளுங்கட்சியாகவோ வர முடியாது. சொந்தக்காலில் நிற்கும் கட்சிகள் தான் தமிழகத்தில் எதிர்க்கட்சியாகவும், ஆளும் கட்சியாகவும் இருக்க முடியும். மிஸ்டு காலில் கட்சி நடத்துபவர்கள் எப்பொழுதும் எதிர்க்கட்சியாக வர முடியாது . சமத்துவ சிந்தனை, மூடநம்பிக்கைகள் ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி உள்ளிட்ட பெரியாரின் சிந்தனையால் தமிழகம் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக உள்ளது.
100 ஆண்டுகள் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தி.மு,க வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன், நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் அன்புக்கரசன் மற்றும் திராவிட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
- திருச்சியில் நாளை நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொள்கிறார்.
- பாரதிய ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள், அணி பிரிவினர் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு மாநகர் மாவட்ட தலைவர் அழைப்பு
திருச்சி:
திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக் கூட்டம் நாளை (7-ந்தேதி, செவ்வாய்க்கிழமை) திருச்சி புத்தூர் நால்ரோட்டில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
கூட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் எஸ்.ராஜசேகரன் தலைமை தாங்குகிறார். புறநகர் மாவட்ட தலைவர் ஆர்.அஞ்சா நெஞ்சன் வரவேற்கிறார். திருச்சி பெருங்கோட்ட பொறுப்பாளரும், மாநில பொதுச் செயலாளருமான கருப்பு முருகானந்தம் எஸ்.சி. அணி மாநில தலைவர் பெரியசாமி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்ரமணியம்,
விவசாய அணி மாநில துணைத்தலைவர கோவிந்த ராஜன், திருச்சி நகர் மாவட்ட முன்னாள் தலைவர்கள் தனபால், திருமலை, பார்த்திபன், தங்க.ராஜைய்யன், ராஜேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஒண்டிமுத்து, காளீஸ்வரன், பொன்.தண்டபாணி, பாபு மகாராஜன், அன்பில் சபரி, பொன்னுவேல், ராமச்சந்திரன், முத்தமிழ் செல்வன், ஜெயபால் மற்றும் மாவட்ட பொருளாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், மண்டல தலைவர்கள், அணி பிரிவு தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். முடிவில் பெரம்பலூர் மாவட்ட தலைவர் வி.பி.செல்வராஜ் நன்றி கூறுகிறார்.
இதற்கிடையே திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் எஸ்.ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் நாளை (7.6.2022) மாலை 5 மணிக்கு புத்தூர் நால்ரோடு பகுதியில் நடைபெற உள்ளது. பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே.அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.
ஆகவே பாரதிய ஜனதா கட்சியின் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள், அணி பிரிவினர் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெறும் மூன்று தொகுதி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் வரும் பத்தாம் தேதி கூடும் கட்சி மேலிடக் கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். #Yeddyurapparubbishes #Modicontesting #LSpolls #ModicontestingfromKarnataka






