search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாசில்தார் அலுவலகம்"

    • மன்னார்குடியில் தாசில்தார் அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆய்வு கூட்டம் நடந்தது.
    • உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இப்பகு தியில் சோதனை செய்ய வேண்டும்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தாசில்தார் அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆய்வு கூட்டம் நடந்தது கூட்டத்திற்கு உதவி கலெக்டர் நேர்முக உதவியாளர் ஜீவானந்தம் வட்ட வழங்க அலுவலர் மகேஷ் கூட்டுரவு சார் பதிவாளர் பிரபா ஆகியோர் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் மன்னார்குடி பகுதியில் முக்கிய ரேஷன் கடைகளில் மண்ணெ ண்ணெய் தட்டுப்பாடு, கோதுமை தட்டுப்பாடு கடை தெருவில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் சோதனையை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மன்னார்குடி நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத் தலைவர் பத்மநாபன்.

    நிர்வாகி வேல்முருகன் ஆகியோர் பேசினர்.

    உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இப்பகு தியில் சோதனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர் கடந்த மாதம் கூறப்பட்ட புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடி க்கை குறித்தும் விவாதிக்க ப்பட்டது.

    • தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.
    • தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய மாநாடு கட்சி அலுவலகத்தில் நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய மாநாடு கட்சி அலுவலகத்தில் நடந்தது. முருகேசன் தலைமை தாங்கினார். பாக்கியம் கொடி ஏற்றி வைத்தார்.

    விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தங்கமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கண்ணகி, விவசாய தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் சாத்தையா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் சங்கையா, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கணேசன் உள்ளிட்ட பலர் பேசினர்.

    விவசாய தொழிலாளர் சங்கத்தின் மானாமதுரை ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். செயலா ளராக கணேசன், தலைவராக முருகேசன், பொரு ளாளராக சோனையா, துணைச் செயலாளராக நாகேந்திரன், துணைத் தலைவராக அரியமுத்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் நாகராஜன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் முருகேசன் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்தை நிறுத்தும் நிலையை தடுக்க வேண்டும், மானாமதுரை ஒன்றியம் பதினெட்டான் கோட்டை கிராமத்தில் ஆதி திராவிடர்களுக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் நடந்துள்ள முறைகேடு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். புத்தனேந்தல் கிராமத்தில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்ய ப்பட்டதையும், இங்குள்ள மயானத்தை பிற கிராமத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • மயிலாடுதுறை நகராட்சியில் பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • ராஜன் தோட்டத்தை சுற்றியுள்ள பகுதியில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அன்னை இந்திரா நகரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனைபட்டாவழங்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன்பு மாநில குழு உறுப்பினர் பாபுசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், மயிலாடுதுறை நகராட்சியில் பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மயிலாடுதுறை ராஜன் தோட்டத்தை சுற்றியுள்ள பகுதியில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    • பிஏபி. பாசன கிளை வாய்க்காலின் மூலம் தண்ணீா் பெற்று விவசாயம் செய்து வருகிறாா்.
    • காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்துள்ளாா்.

    காங்கயம் :

    காங்கயம் அருகே உள்ள சிவன்மலை ஊராட்சிக்கு உள்பட்ட சிக்கரசம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சாந்தாமணி (வயது 55). இவருக்குச் சொந்தமாக 4 ஏக்கா் விவசாய நிலம் உள்ளது. பிஏபி. பாசன கிளை வாய்க்காலின் மூலம் தண்ணீா் பெற்று விவசாயம் செய்து வருகிறாா்.

    இந்நிலையில் வாய்க்காலில் இருந்து தண்ணீா் வரும் பாதையை பக்கத்து நிலத்துக்காரா் அடைத்து வைத்துவிட்டதாகக் கூறி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சாந்தாமணி புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சாந்தாமணி காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்துள்ளாா். பின்னா் மனுவை வாங்கி வைத்துக் கொண்டு முறையாக விசாரிக்கவில்லை எனக் கூறி, சாந்தாமணி திடீரெனெ வட்டாட்சியா் அலுவலகம் முன்பு பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தாா். அப்போது அங்கிருந்த துணை வட்டாட்சியா் மற்றும் போலீசார் அவரிடமிருந்த பெட்ரோல் பாட்டிலை பறித்தனா். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து வட்டாட்சியா் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்வதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து சாந்தாமணி மற்றும் அவரது குடும்பத்தினா் திரும்பிச் சென்றனா்.

    • அவினாசி, தாராபுரம், காங்கயம், வெள்ளகோவில், மடத்துக்குளம், பல்லடம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.
    • முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கைரேகை பதிவு ஆகாமல் ரேஷன் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கைரேகை பயன்படுத்தி ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுகிறது. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கைரேகை பதிவு ஆகாமல் ரேஷன் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் நன்மைக்காக நாளை 9-நதேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆதார் பதிவில் கைரேகை புதுப்பித்தல் சிறப்பு முகாம் தாசில்தார் அலுவலகங்களில் நடக்கிறது.

    அதன்படி அவினாசி தாலுகாவில் தாசில்தார் அலுவலகத்திலும், தாராபுரம் தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகத்திலும், காங்கயம் தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், வெள்ளகோவில் நகராட்சி அலுவலகம், மடத்துக்குளம் தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், பல்லடம் தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், நகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.

    திருப்பூர் வடக்கு தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், தொட்டிப்பாளையம் மண்டல அலுவலகம், திருப்பூர் தெற்கு தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், கலெக்டர் அலுவலகம், நல்லூர் மண்டல அலுவலகம், மாநகராட்சி மைய அலுவலகம், உடுமலை தாலுகாவில் தாசில்தார் அலுவலகம், உடுமலை நகராட்சி அலுவலகம், ஊத்துக்குளி தாலுகாவில் தாசில்தார் அலுவலகத்திலும் சிறப்பு முகாம் நடக்கிறது.

    இந்த முகாமில் பங்கேற்று ஆதார் கார்டில் கைரேகை பதிவை புதுப்பித்து, சிரமம் இல்லாமல் பொருட்களை வாங்கி பயன்பெறலாம் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    ×