search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்மொழி"

    • தாய்மொழி தமிழ் மொழியை பாதுகாப்போம் என்று உறுதியேற்கப்பட்டது.
    • முடிவில் கல்லூரி அறங்காவலர் பொறியாளர் விடுதலைவேந்தன் நன்றி கூறினார்.

    தஞ்சாவூர்:

    தனித்தமிழ் ஆர்வலர், தமிழாசிரியர் முதுமுனைவர் பி.விருத்தாசலனார் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று காலை தஞ்சாவூர் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி அறங்காவலர் முனைவர் இளமுருகன் தலைமை வகித்தார்.

    தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை இணை இயக்குனர் (ஓய்வு) முனைவர் குணசேகரன் வரவேற்புரை நிகழ்த்தினார் . நாட்டார் கல்லூரி ஆட்சி குழு செயலாளர் கலியபெரு மாள், கல்லூரி முதல்வர் தமிழ்ச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழக மக்கள் ஒருங்கிணைப்பு மேடை மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன் மதச்சார்பின்மை, சோசலிசம், குடியரசு என்ற தலைப்பிலும், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு மக்களுக்கான கல்வி என்ற தலைப்பிலும் கருத்துரையாற்றினார்கள். இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதி தேர்வில் தமிழ் புலவர்களும் தமிழ் பண்டிதர்களும் தேர்வு எழுத அரசாணை வெளியிட வேண்டும்.

    தமிழ் வழியில் படித்த வர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    தொடர்ந்து புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கூடாது, தாய் மொழி தமிழ் மொழியை பாதுகாப்போம் என்று உறுதியேற்கப்பட்டது.

    நினைவேந்தல் நிகழ்ச்சியில் அனைத்து கட்சி ,இயக்க நிர்வாகிகள், தமிழ் ஆர்வலர்கள், பேரா சிரியர்கள், அலுவ லர்கள்,மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியினை பேராசிரியர்கள் பாரி, தமிழ்ச்செல்வன், மருத்துவர் தென்றல் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    முடிவில் கல்லூரி அறங்காவலர் பொறியாளர் விடுதலைவேந்தன் நன்றி கூறினார்

    • மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்கு கொத்தடிமை ஆக்கும் எதேச்சதிகார முயற்சி
    • தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும்...

    மத்திய மாநில அலுவல் மொழிகள் குறித்த 38-வது பாராளுமன்ற கூட்டத் தொடர் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி இந்தி மற்றும் பிற அனைத்து இந்திய மொழிகளையும் உலக அரங்கில் பெருமைப் படுத்தி வருகிறார். மாநில மொழிகளுடன் இந்தி போட்டியிடவில்லை. அனைத்து மாநில மொழிகளையும் வலுப்படுத்துவதன் மூலமாகவே நமது நாடு வலிமை அடையும்.

    தமிழ், மராத்தி, குஜராத்தி ஆகிய மொழிகளுக்கு இந்தி மொழி போட்டியாக கொண்டு வருவதாக கூறப்படுவது தவறு. அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வதற்கான தேவையை நாம் உருவாக்க வேண்டும்.

    அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வது சட்டம் மூலமாகவோ, சுற்றறிக்கை மூலமாகவோ இருக்கக் கூடாது. அது நல்ல முயற்சியின் மூலமாக வரவேண்டும். பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளை பிரதான 10 மாநில மொழிகளில் தொடங்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் இதற்கான பாடத்திட்டங்கள் வெளியாகும்.

    பிரதமர் மோடி ஒருமுறை கூட பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தியதில்லை. மத்திய மந்திரிகளும் இந்திய மொழிகளில் உரை நிகழ்த்த முயற்சிக்கின்றனர். இது பல்வேறு மொழிகளை இணைக்கும் முயற்சிற்கு அதிக வேகத்தை அளிக்கிறது.

    இந்திய மொழிகளும் அவற்றின் அகராதிகளும் ஆட்சி செய்த காலகட்டத்திற்குப் பிறகும் அப்படியே இருந்தன. இது ஒரு பெரிய சாதனை. மொழிகள் நாட்டை ஒன்றிணைக்க பாடுபட்டுள்ளன.

    மொழியின் மரியாதை இல்லாமல் பாரம்பரியத்தின் மரியாதை முழுமையடையாது. உள்ளூர் மொழிகளுக்கு அனைவரும் மரியாதை கொடுக்கும்போதுதான் அலுவல் மொழி ஏற்றுக்கொள்ளப்படும். அலுவல் மொழியின் வேகம் மெதுவாக இருந்தாலும் எந்தவித எதிர்ப்பும் இன்றி அதற்கு ஏற்புணர்வை வளர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை மந்திரி அமித்ஷாவின் பேச்சு மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சதிகார முயற்சியாகும். இதைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல.

    தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம்.

    இந்தித் திணிப்பை இப்போது மேற்கு வங்கம், கர்நாடகம் எனப் பல மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருப்பதை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உணர வேண்டும்.

    1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.

    • 22 மாநிலங்களை சோ்ந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தங்கி பணியாற்றி வருகின்றனா்.
    • புலம் பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகள் 300க்கும் மேற்பட்டோா் பங்கேற்கவுள்ள

    திருப்பூர்:

    புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகளுக்கான 'தமிழ்மொழி கற்போம்' திட்டத்தை திருப்பூரில் பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று தொடங்கிவைக்கிறாா்.

    பின்னலாடை நகரமான திருப்பூரில் பிகாா், ஒடிசா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், ராஜஸ்தான் உள்ளிட்ட 22 மாநிலங்களை சோ்ந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தங்கி பணியாற்றி வருகின்றனா். திருப்பூரில் குடும்பத்துடன் வசிக்கும் தொழிலாளா்களின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படித்து வருகின்றனா்.

    இந்த நிலையில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு 'தமிழ்மொழி கற்போம்' திட்டத்தை திருப்பூா் ஆத்துப்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில்மகேஸ் பொய்யாமொழி இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் தொடங்கி வைக்கிறாா்.

    இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் உள்ளிட்ட பலா் பங்கேற்கவுள்ளனா். தொடக்க விழாவில் புலம் பெயா்ந்த தொழிலாளா்களின் குழந்தைகள் 300க்கும் மேற்பட்டோா் பங்கேற்கவுள்ளதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக இந்தி அல்லது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியை அறிவிக்க குடியரசு தலைவருக்கு அதிகாரம் உள்ளது.
    • கீழமை நீதிமன்றங்களில் மாநில மொழிகள் வழக்காடு மொழியாக உள்ளன.

    திருப்பூர்:

    இந்திய உயர்நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது . கீழமை நீதிமன்றங்களில் மாநில மொழிகள் வழக்காடு மொழியாக இருக்கின்ற நிலையில் உயர் நீதிமன்றங்களிலும் அந்தந்த மாநில மொழிகள் வழக்காடு மொழிகளாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது .

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாக இந்தி அல்லது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியை அறிவிக்க குடியரசு தலைவருக்கு அதிகாரம் இருப்பதால் உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்வு, நடப்பாண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    • அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 1 மாணவர்கள் பங்கேற்கலாம்.

    திருப்பூர் :

    தமிழ் இலக்கிய வாசிப்பில் மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில், தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்வு, நடப்பாண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இதில் அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 1 மாணவர்கள் பங்கேற்கலாம்.இத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் முதல் 1,500 பேருக்கு, பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ஆயிரத்து 500 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இதில் 50 சதவீத இடங்கள் அரசுப்பள்ளி மாணவர்களுக்கும், மீதமுள்ள 50 சதவீத இடங்களில், அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.10-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து, அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் இடம்பெறும். இத்தேர்வு வரும் அக்ேடாபர் மாதம் 1ம் தேதி நடைபெறவுள்ளது.

    இதில் பங்கேற்க 22ந் தேதி முதல் வரும் செப்டம்பர் 9ந் தேதி வரை, www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்துப்பள்ளி மாணவர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    • பள்ளி மாணவ- மாணவிகள் தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்தி கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வி ஆண்டு முதல் தமிழ்மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழக அரசு உத்தர–விட்டுள்ளது.
    • அதன்படி இந்த தேர்வை அரசு தேர்வுகள் இயக்ககம் நடத்த உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இங்கு மாணவ- மாணவிகள் ஆங்கில வழியிலும், தமிழ் வழியிலும் கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில் பள்ளி மாணவ- மாணவிகள் தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்தி கொள்ளும் வகையில் 2022-2023-ம் கல்வி ஆண்டு முதல் தமிழ்மொழி இலக்கியத் திறனறிவுத் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்த தேர்வை அரசு தேர்வுகள் இயக்ககம் நடத்த உள்ளது.

    இந்த தேர்வில் 1500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பள்ளி கல்வித்துறை வழியாக மாதம் ரூ.1500 வீதம் 2 வருடங்களுக்கு வழங்கப்படும். எனவே அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, மாணவ- மாணவிகள் வருகிற 22-ந்தேதி முதல் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்குமாறும், தமிழ்நாடு அரசின் 10-ம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும் என கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×