search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடம் புரண்டது"

    • அதிகாலை ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை மார்க்கமாக ரேனிகுண்டா செல்லும் சரக்கு ரெயில் வந்தது.
    • தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட சக்கரங்களை தூக்கி நிறுத்தும் எந்திரம் வரவழைக்க ஏற்பாடு செய்தனர்.

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே மகேந்திரவாடி ரெயில் நிலையம் உள்ளது. இங்கு அதிகாலை ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை மார்க்கமாக ரேனிகுண்டா செல்லும் சரக்கு ரெயில் வந்தது.

    அதிகாலை 4.20 மணி அளவில் மகேந்திரவாடி ரெயில் நிலையம் லூப் லைன் வழியாக வரும்பொழுது சரக்கு ரெயிலின் கடைசி பெட்டியின் 4 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டன.

    இதையடுத்து, தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட சக்கரங்களை தூக்கி நிறுத்தும் எந்திரம் வரவழைக்க ஏற்பாடு செய்தனர்.

    லூப் லைனில் சக்கரங்கள் தடம் புரண்டதால் பிரதான தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிப்பு இல்லை.

    • ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து தடம் புரண்ட என்ஜீனை பளுதூக்கும் வாகனத்தின் உதவியுடன் சரிசெய்தனர்.
    • என்ஜீனை பொன்னேரி ரெயில் நிலையத்தில் உள்ள 1-வது நடைமேடையில் நிறுத்தி வைத்தனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரில் இருந்து பொன்னேரி ரெயில் நிலையத்திற்கு இன்று அதிகாலை 3.50 மணிக்கு தண்டவாளம் மற்றும் மின்வயர்களை சரிபார்த்து ஆய்வு செய்ய என்ஜின் வந்தது. லூப் தண்டவாளத்தில் இருந்து முதல் நடைமேடைக்கு சென்ற போது திடீரென ரெயில் என்ஜீனின் 2 சக்கரங்கள் தடம் புரண்டது. இதையடுத்து ஆய்வு செய்ய வந்த என்ஜீன் அந்த தண்டவாளத்திலேயே நிறுத்தப்பட்டது.

    இதுபற்றி உடனடியாக பொன்னேரி ரெயில்வே நிலைய அதிகாரிகளுக்கும், கொருக்குப்பேட்டை ரெயில்வேபணிமனைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து தடம் புரண்ட என்ஜீனை பளுதூக்கும் வாகனத்தின் உதவியுடன் சரிசெய்தனர். பின்னர் அந்த என்ஜீனை பொன்னேரி ரெயில் நிலையத்தில் உள்ள 1-வது நடைமேடையில் நிறுத்தி வைத்தனர்.

    இதனால் இன்று காலை சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் அதிகாலையில் சுமார் அரை மணி நேரம் தாமதமாக சென்றன. அதிகாலை நேரம் என்பதால் பெரிய அளவில் ரெயில்சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை.

    ஏற்கனவே நேற்று காலை சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த மின்சார ரெயில் பேசின் பிரிட்ஜ் அருகே வந்தபோது அதன் ஒரு பெட்டி தடம் புரண்டது குறிப்பிடத்தக்கது.

    • தடம் புரண்ட பெட்டியின் வலது பக்க பகுதி தண்டவாளத்தை விட்டு வெளியேறி காணப்பட்டது.
    • பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    ஒடிசா ரெயில் விபத்து சம்பவத்துக்கு பிறகு நாடு முழுவதும் ரெயில்வே ஊழியர்கள் உஷாராக பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளை இறக்கி விட்டுவிட்டு பேசின்பிரிட்ஜ் யார்டுக்கு சென்றபோது தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அதில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலையில் பயணிகளுடன் சென்ற மின்சார ரெயில் திடீரென தடம் புரண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 9.30 மணி அளவில் திருவள்ளூர் நோக்கி மின்சார ரெயில் புறப்பட்டு சென்றது. 9 பெட்டிகளை கொண்ட இந்த ரெயிலில் கடைசி பெட்டி பெண்கள் பெட்டியாகும்.

    அதற்கு முன்பு உள்ள ரெயில் பெட்டி பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையம் அருகே சென்றபோது திடீரென தடம் புரண்டது. அந்த ரெயில் பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது.

    இதில் ரெயில் பெட்டி பலத்த சத்தத்துடன் குலுங்கியது. இதனால் உஷாரான என்ஜின் டிரைவர் சாதுர்யமாக ரெயிலை நிறுத்தினார். தடம் புரண்ட பெட்டியின் வலது பக்க பகுதி தண்டவாளத்தை விட்டு வெளியேறி காணப்பட்டது.

    இதனால் பெட்டியின் இடது பகுதி தண்டவாளத்துக்கு நடுவே போய் நின்றது. இதனால் பெட்டியில் இருந்த பயணிகள் பதட்டம் அடைந்தனர். அவர்கள் ஏதோ பெரிய அசம்பாவிதம் நடந்து விட்டதாக நினைத்து கூச்சல் போட்டனர். பின்னர் தடம் புரண்ட பெட்டியில் இருந்த அனைவரும் அலறியடித்துக்கொண்டு கீழே இறங்கினார்கள்.

    தடம் புரண்ட ரெயில் நின்று கொண்டிருந்த தண்டவாளம் வழியாக மற்ற ரெயில்களும் வந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் சிலர் தங்களிடம் இருந்த சிகப்பு கலர் கர்சிப், துப்பட்டா உள்ளிட்டவைகளை காட்டி மற்ற ரெயில்களை நிறுத்தினார்கள். இதனால் பெரும் விபத்தும் உயிர் சேதமும் தவிர்க்கப்பட்டது. விபத்து பற்றி தகவல் அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து சென்று தடம் புரண்ட ரெயில் பெட்டியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டது. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    மின்சார ரெயில் தடம்புரண்டதால் சென்னை சென்ட்ரலில் இருந்து மின்சார ரெயில்கள் புறப்படுவதில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகி உள்ளது. இதனால் ஆவடி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் அவதியடைந்தனர்.

    • பெங்களூரில் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று தடம் புரண்டது
    • தாமதமாக ரெயில் வந்ததால் பயணிகள் தவிப்பிற்கு ஆளானார்கள்.

    நாகர்கோவில் :

    பெங்களூரில் எக்ஸ்பிரஸ்  ரெயில் நேற்று தடம் புரண்டது. இதையடுத்து பெங்களூரில் இருந்து நேற்று மாலை நாகர்கோவிலுக்கு புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட் டது. இன்று காலை 7.30 மணிக்கு நாகர்கோவில்ரெயில் நிலையத்திற்கு வந்து சேர வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் தாமதமாக 9.30 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. 2 மணி நேரம் தாமதமாக ரெயில் வந்ததால் பயணிகள் தவிப்பிற்கு ஆளானார்கள்.

    ×