search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை பாதுகாப்பு"

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் , விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு கோட்ட பொறியாளர் ஸ்ரீ காந்த் தலைமை தாங்கினார். கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் சிவசேனா முன்னிலை வகித்தார். உதவி கோட்ட பொறியாளர் தனராஜன் வரவேற்றார் .

    டோல் பிளாசாவை கடந்த வாகன ஓட்டிகளிடம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை நெடுஞ்சாலை துறையினர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் . உதவி பொறியாளர்கள் வசந்த பிரியா, கவுதம், ராஜ ஸ்வேதா, சாலை ஆய்வாளர்கள் சாந்தி, அருள்மொழி, பழனியம்மாள் , டோல் பிளாசா பி.ஆர்.ஓ., தண்டபாணி,துணை மேலாளர் சொர்ணமணி, போக்குவரத்து காவல் சப்–இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் சாலை பணியாளர்கள், டோல் பிளாசா ஊழியர்கள் பங்கேற்றனர் .

    • காரைக்குடியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இணைந்து நடத்தினர்

    காரைக்குடி

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட நெடுஞ்சாலைத்துறை மற்றும் அழகப்பா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்பு ணர்வு பேரணியை காரைக் குடியில் நடத்தினர்.நெடுஞ் சாலைத் துறை கோட்டப் பொறியாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.

    அழகப்பா அரசு கலைக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) துரை, உதவி கோட்டப் பொறியாளர் அரிமுந்தன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக காரைக் குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, நகர்மன்ற தலை வர் முத்துதுரை, உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத் தனர்.

    நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் பேர ணியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் பதாகைகளை ஏந்தி நகரில் வலம் வந்தனர். இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜய்குமார், நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் பூமிநாதன், சாலை ஆய்வாளர்கள், பணியா ளர்கள், கல்லூரி பேராசிரி யர்கள் திரளாக கலந்து கொண்டனர்.ஒருங்கிணைப்பாளர் சித்ரா தேவி நன்றி கூறினார்.

    • நெடுஞ்சாலை துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
    • நம்பியூர் அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து பஸ் நிலையம் வரை சென்றனர்.

    நம்பியூர்:

    நம்பியூரில் நெடுஞ்சாலை துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். பேரணியை நெடுஞ்சாலைத் துறை கோபி கோட்ட பொறியாளர் ஜெய லட்சுமி தொடங்கி வைத்தார்.

    பேரணியில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு வேண்டும் உள்ளிட்ட வசங்களுடன் பதாகைகளை ஏந்தி நம்பியூர் அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து நம்பியூர் பேரூராட்சி அலுவலகம் வழியாக பஸ் நிலையம் வரை சென்றனர்.

    பேரணியில் நம்பியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், நெடுஞ்சாலை த்துறை உதவி கோட்ட பொறியாளர்கள் விஜய லட்சுமி, கதிர்வேல், உதவி பொறி யாளர்கள் சந்தோஷ், வேந்தன் மற்றும் சாலை ஆய்வாளர்கள், சாலை பணியா ளர்கள், போலீசார், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • திருச்சுழி உட்கோட்ட பகுதியை சேர்ந்த சாலைப் பணியாளர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பூமிநாதர் கோவில் வாசலில் இருந்து தொடங் கிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை திருச்சுழி நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறி யாளர் கணேசன் தொடங்கி வைத்தார்.

    இந்த விழிப்புணர்வு பேரணியில் போக்குவரத்து சின்னங்களை பின்பற்றுதல், மது அருந்தி வாகனம் ஓட்டா தே, தலைக்கவசம் அணிவ தன் அவசியம் என்பது போன்ற பல்வேறு வாசகங் கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி விழிப்புணர்வு வாசகங்களை முழக்கமிட்ட வாறு முக்கிய வீதிகள் வழி யாக ஊர்வலமாக வந்தனர்.

    மேலும் சாலையில் தலை கவசம் அணிந்து சாலை விதிகளையும், பாதுகாப்பு அம்சங்களோடு பின்பற்றி வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு கோஷங்கள் மற்றும் சாலை பாதுகாப்பு ஆண்டுக்கான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங் கப்பட்டன.

    இந்த விழிப்புணர்வு பேரணி பூமிநாதர் கோவி லில் இருந்து தொடங்கி திருச்சுழி நெடுஞ் சாலைத் துறை உட்கோட்ட அலுவல கம் வரை நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு பேரணி யில் உதவிப்பொறியாளர் சுந்தரபாண்டியன், சாலை ஆய்வாளர்களான முத்து செல்வம், சுந்தர வள்ளி மற் றும் திருச்சுழி உட்கோட்ட பகுதியை சேர்ந்த சாலைப் பணியாளர் கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு- இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் எம்.எல்.ஏ.க்கள் செந்தில்நாதன், மாங்குடி பங்கேற்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கை வட்டார போக்குவரத்து துறை சார் பில், அனைத்து வகையான வாகனங்களின் ஓட்டுனர்க ளுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற் றும் இலவச கண் சிகிச்சை முகாம், சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்திலுள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வ.மோகனச்சந்திரன் மற்றும் சிவகங்கை சட்டமன்ற உறுப் பினர் பிஆர்.செந்தில்நாதன், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்து, பார்வை யிட்டனர். அப்போது வட்டா ரப் போக்குவரத்து அலுவ லர் மூக்கன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம் மற்றும் கரைக் குடி மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்நிகழ்ச்சியில், இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாக னங்கள் மற்றும் அரசு பேருந்துகள் ஆகியவைக ளின் ஓட்டுனர்க ளுக்கு, சாலை பாதுகாப்பு தொடர் பான பல்வேறு விழிப்பு ணர்வு கருத்துக்கள் எடுத்து ரைக்கப்பட்டு, அவர்களின் நலன் காக்கின்ற வகையில், ரத்த அழுத்த பரிசோதனை, இலவச கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத் துவ பரிசோதனைகள் இம் முகாமில் மேற்கொள்ளப் பட்டது.

    இதில், மாவட்டம் முழு வதும் 500-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பங்கேற்றனர். இம்முகாமினை, சிவ கங்கை வட்டார போக்குவ ரத்து அலுவலகம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தியது.

    • முன்னாள் உதவி ஆளுநர் சுதன் பவர் டெக் பூங்குன்றன் வாழ்த்துரை ஆற்றினார்.
    • இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்டோர் தலைக்கவசம் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கடலூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். உதவி ஆளுநர் சுரேஷ்பாபு வரவேற்றார். மோட்டார் சைக்கிள் பிரச்சாரத்தை கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னாள் உதவி ஆளுநர் சுதன் பவர் டெக் பூங்குன்றன் வாழ்த்துரை ஆற்றினார்.

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திட்ட இயக்குனர் கார்த்திகேயன், சங்க செயலாளர் ஏர்டெல் ரவி, பொருளாளர் வேல்முருகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தனர். இதில் உறுப்பினர்கள் மதியழகன், சிவக்கொழுந்து, சிவகுருநாதன், ஞானமணி, மகேஷ், அருள், தினேஷ்குமார், விஜயன்பிள்ளை, கலைச்செல்வம், கல்கி ஸ்ரீதர், ஆனந்த்ராஜா, சிவானந்தம், கிருபாநிதி, சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஜவான் பவன் சந்திப்பில் இருந்து முதல் டவுன்ஹால் வரை நடந்த இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்டோர் தலைக்கவசம் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
    • முடிவில் நாட்டுநல பணித்திட்டதிட்ட அலுவலர் வரேந்திரா நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதுரை நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு அலகு சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. தலைமை ஆசிரியர் இனிகோ எட்வர்ட் ராஜா தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் விஜயரங்கன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் வரவேற்றார். இந்த கருத்தரங்கில் சாலை பாதுகாப்பு கோட்டபொறியாளர் (பொறுப்பு) வரலட்சுமி, உதவிக்கோட்டபொறியாளர் சாந்தினி, உதவிபொறியாளர்கள் காவியமீனா, கீதா ஆகியோர் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்ற வேண்டிய வழி முறைகள் பற்றி விளக்கி பேசினர். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படம் காண்பிக்கப்பட்டது.

    இதில் ஆசிரியர்கள் தங்கழகு, விவசாயஆசிரியர் சுரேஷ், ஸ்டாலின், கணினிஆசிரியர் செந்தில்குமரன் உள்பட மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நாட்டுநல பணித்திட்டதிட்ட அலுவலர் வரேந்திரா நன்றி கூறினார்.

    • கலெக்டர் வளர்மதி தலைமையில் உறுதி மொழி ஏற்பு
    • மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

    ராணிப்பேட்டை:

    வாலாஜாவில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    கருத்தரங்கை கலெக்டர் வளர்மதி தொடங்கி வைத்து, சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை மாணவிகளுக்கு வழங்கி பேசினார். பின்னர் கல்லூரி மாணவிகள் அனைவரும் சாலை பாதுகாப்பு குறித்த உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி முன்னிலை வகித்து பேசினார். கல்லூரி முதல்வர் சீனிவாசன் வரவேற்று பேசினார்.

    சாலைப் பாதுகாப்பில் ராணிப்பேட்டை என்ற தலைப்பில் நெடுஞ்சாலை துறை கோட்டபொறியாளர் செல்வகுமார் பேசினார்.

    கருத்தரங்கில் சாலை பாதுகாப்பு அலகு கோட்டப் பொறியாளர் ஸ்ரீகாந்த், உதவி கோட்ட பொறியாளர் பாலாஜி சிங், ராணிப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இராமலிங்கம் ஆகியோர் சாலை பாதுகாப்பு குறித்து பேசினர். பின்னர் தோழன் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இதில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் பாலாஜி, அதிகாரிகள் சரவணன், சத்திய சாய், நிதின் உள்பட கல்லூரி பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கிருஷ்ணா புரத்தில் தொடங்கிய இந்த பேரணி கடையநல்லூர் புதிய பஸ் நிலையத்தில் முடிவு பெற்றது.
    • பேரணியில் பங்கேற்றவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றனர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூரில் மக்கா அறக்கட்டளை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    அறக்கட்டளை நிறுவனத்த லைவர் ஜாகிர் உசேன் தலைமை தாங்கி னார். அறக்கட்டளை செய லாளர் சம்சுதீன், அறக்கட்ட ளை பொறுப்பா ளர்கள் ஹீரா, காஜாமைதீன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். கடையநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு பேரணியை கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக வார்டு கவுன்சிலர்கள் கண்ணன் என்ற பாலசுப்பிரமணியன், சுபா ராஜேந்திர பிரசாத், பூங்கோதை கருப்பையா தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். கிருஷ்ணா புரத்தில் தொடங்கிய இந்த பேரணி கடையநல்லூர் புதிய பஸ் நிலையத்தில் முடிவு பெற்றது. பேரணியில் பங்கேற்றவர்கள் போதை தடுப்பு விழிப்பு ணர்வு மற்றும் விபத்து தடுப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்றனர். இதில் அறக்கட்டளை நிர்வாகிகள் ஷேக் மைதீன், யாசின், பைசல் அமீர்கான் உட்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.முடிவில் அறக்க ட்டளை பொறு ப்பாளர் மீராசா இப்ராஹிம் நன்றி கூறினார்.

    • வள்ளியூர் புதிய பஸ் நிலையத்திலிருந்து தொடங்கப்பட்ட பேரணியானது நீதிமன்ற வளாகம் வரை நடைபெற்றது.
    • இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கான விதிமுறைகள் மாணவர்கள் மூலமாக எடுத்துரைக்கப்பட்டது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் வேதிக் வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்களால் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் சாலை பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. டி.எஸ்.பி. யோகேஷ் குமார் மற்றும் ஆர்.டி.ஓ. பெருமாள் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். வள்ளியூர் புதிய பஸ் நிலையத்திலிருந்து தொடங்கப்பட்ட பேரணியானது நீதிமன்ற வளாகம் வரை நடைபெற்றது. முன்னதாக சாலை பாதுகாப்பு கருத்தரங்க நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சாலையில் செல்வோர் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கான விதிமுறைகள் மாணவர்கள் மூலமாக பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து மற்றும் பள்ளியின் தாளாளர் துரைச்சாமி, தலைமை ஆசிரியை அனு மற்றும் பள்ளி நிர்வாக அலுவலர் மகாராஜன், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • 21 முக்கிய அம்சங்கள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா? என்று சோதனை செய்யப்பட்டது.
    • விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். தவறும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொன்னேரி:

    தனியார் பள்ளி வாகனங்கள் விதிமுறைகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை இயக்குகின்றனவா? என்பதை ஆய்வு செய்ய வருவாய்த் துறை, காவல்துறை, கல்வித் துறை மற்றும் போக்குவரத்துதுறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு கோடை விடுமுறையில் வாகனங்களை தணிக்கை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் பொன்னேரியை அடுத்த பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்களை சிறப்பு தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.

    பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் பள்ளி வாகனங்களில் மாணவர்களின் பாதுகாப்புக்காக அரசு அறிவித்துள்ள வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள், படிக்கட்டு வசதி, அவசர கால கதவு, முதலுதவி பெட்டி, ஜன்னல் பாதுகாப்பு வசதி, கண்காணிப்பு கேமரா, ஜி.பி.எஸ். கருவி உள்ளிட்ட 21 முக்கிய அம்சங்கள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா? என்று சோதனை செய்யப்பட்டது.

    மொத்தம் 208 வாகனங்களை சோதனை செய்ததில் தகுதியுடைய 178 வாகனங்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன. விதிமுறைகளை கடைபிடிக்காமல் குறைபாடுகள் கண்டறியப்பட்ட 30 வாகனங்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டு அவை திருப்பி அனுப்பப்பட்டன. குறைபாடுகள் கண்டறியப்பட்ட வாகனங்களில் அவற்றை சரி செய்து மீண்டும் தணிக்கை குழுவினரிடம் சான்று பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது.

    முன்னதாகபள்ளி வாகனங்களில் திடீரென தீப்பிடித்தால் அதனை எவ்வாறு கையாள்வது? தீயணைப்பு கருவியை பயன்படுத்துவது எப்படி? என்பது போன்ற தத்ரூப ஒத்திகையை தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர்.

    தொடர்ந்து தனியார் பள்ளி டிரைவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை இயக்க கூடாது எனவும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக் கூடாது உள்ளிட்ட சாலை பாதுகாப்பு விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் எனவும், தவறும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

    இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இள முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருப்பையன், ராஜராஜேஸ்வரி, கல்வித் துறை அலுவலர் சுப்ரமணி உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • இருச்சக்கர வாகனங்களாலேயே அதிக விபத்துக்கள் நடக்கிறது
    • மாணவர்கள் போட்டிப்போட்டு ஓட்டக்கூடாது

    நாகர்கோவில், மே.10-

    நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரி கலையரங்கில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசியதாவது:-

    சாலை விபத்துகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளவர்களை மீட்டு முதலுதவி மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு முதல்வரின் இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்கள் மீண்டு வந்துள்ளனர். இதுபோன்ற இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற இளைஞர்களாகிய நீங்கள் அனைவரும் முன்வரவேண்டும்.

    தங்களது பகுதியிலுள்ள பொதுமக்கள், உறவினர்கள், நண்பர்கள் வாயிலாக சாலை பாதுகாப்பு குறித்து போதிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதோடு, மாணவர்களாகிய நீங்கள் அவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட கல்லூரி மாணவர்கள் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் எடுத்திருக்க வேண்டும்.

    இருசக்கர வாகனம் ஓட்டும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். கல்லூரி மாணவர்கள் சாலையில் வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும். மேலும் நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட்பெல்ட் அணிய வேண்டும். குமரி மாவட்டத்தில் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுவதற்கு இரு சக்கர வாகனங்களே காரணம். அதிக அளவு வேகத்தில் செல்வதால் விபத்து ஏற்படுகிறது.

    குறிப்பாக நெடுஞ்சாலைகளில் கனரக வாகனங்கள் அதிகளவில் வருவதால் விபத்து ஏற்படுகிறது. இவ்வாறு விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்க சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்த காவல்துறை, வட்டார போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் முன்வர வேண்டும்.

    இரு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே செல்ல வேண்டும். விபத்துகளை தவிர்க்க பேருந்துபடிகட்டுகளில் பயணம் செய்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அதிவேகமாக இரு சக்கர வாகனங்கள் போட்டிப்போட்டு ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த உறுதிமொழியினை கல்லூரி மாணவர்கள் எடுத்துக்கொண்டனர். பின்னர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் பொறியியல் கல்லூரி வளாக த்தில் கலெக்டர் ஸ்ரீதர் மரக்கன்றுளை நட்டார்.

    நிகழ்ச்சியில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமரலிங்கம், கோட்டப்பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) பாஸ்கரன், கோணம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் நாகராஜன், நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலர் சசி, உதவி கோட்ட பொறியாளர் (சாலை பாதுகாப்பு) சசிகலா, ஓய்வுபெற்ற இணை இயக்குநர் (சாலை போக்குவரத்து நிறுவனம்) ஜோஸ் பேட்ரிஸ், உசூர் மேலாளர் சுப்பிரமணியம், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ், கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×