search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஆய்வு கூட்டம்
    X

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தபோது எடுத்த படம் 

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஆய்வு கூட்டம்

    • நோ-பார்க்கிங்கில் வாகனம் நிறுத்தினால் நடவடிக்கை
    • கலெக்டர் உத்தரவு

    நாகர்கோவில்:

    அடிக்கடி விபத்துகள் நடைபெறும் இடங்களில் கூட்டாக ஆய்வு நடத்த வேண்டும் என்று அதிகா ரிகளுக்கு கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த மாதாந்திர ஆய்வு கூட் டம் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் கலெக்டர் அர விந்த் தலைமையில் நடந் தது. குமரி மாவட்ட எஸ்.பி ஹரிகிரண் பிரசாத் முன் னிலை வகித்தார். கடந்த அக்டோபர் மாதம் நடந்த கூட்டத்தில் மேற்கொள் ளப்பட வேண்டிய சாலை பராமரிப்பு மற்றும் முன் னெச்சரிக்கை நடவடிக் கைகள் குறித்து மாவட்ட கலெக்டரால் ஆய்வு செய் யப்பட்டது.

    அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இடங்களில் அவற்றை தவிர்த்திடும் வகையில் நிரந்தர தீர்வு காண்பது குறித்து காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை வட்டார போக் குவரத்து அலுவலர்கள் கூட்டாக ஆய்வு செய்து அறிக்கை செய்ய அறிவு றுத்தப்பட்டது.

    முக்கிய சாலைகளில் மின் விளக்குகள் மற்றும் பழுதுபார்க்கப்பட வேண் டிய சாலைகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைப்பது குறித்து நெடுஞ் சாலைத்துறை, உள்ளாட்சி துறை மற்றும் மாநகராட்சி அலுவலர்களிடம் எடுத்து ரைக்கப்பட்டது.

    இரு சக்கர வாகனங்க ளில் செல்பவர்கள் ஹெல் மெட் அணிவது மற்றும் நான்கு சக்கர வாகனங்க ளில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட் டாயமாக பின்பற்றப்பட வேண்டும் என்று கலெக்ட ரால் தெரிவிக்கப்பட்டது.

    நெரிசல் மிகுந்த நகர பகுதிகளில் நோ பார்க் கிங் பகுதியில் அல்லது சாலையில் இடையூறாக நிறுத்தும் வாகன ஓட்டி கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினருக்கு மாவட்ட கலெக்டரால் தெரிவிக்கப்பட்டது. ஆபத்தான மின் கம்பங்கள் மற்றும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட இடங்களில் உள்ள ஏற்கனவே இருந்த மின்கம்பங்களை மாற்றி இடையூறு இல்லாமல் சாலை போக்குவரத்து மேம்பட நடவடிக்கை மேற்கொள்ள மின் துறை அலுவலர்களிடம் தெரி விக்கப்பட்டது.

    மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது கடு மையான நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.பத்மநாப புரம் சப் கலெக்டர் கவுசிக், மாநக ராட்சி ஆணையர், ஆனந்த்மோகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பொது வீராசாமி, நாகர்கோவில் ஆர்.டி.ஒ. சேதுராம லிங்கம், நாகர்கோவில்- மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர், துணை காவல் கண்கா ணிப்பாளர்கள், நெடுஞ் சாலைத்துறை கோட்ட பொறியாளர், மருத்துவ பணிகள் துணை இயக் குநர் டாக்டர் மீனாட்சி, தாசில்தார்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உள் ளிட்ட பல்துறை அலுவ லர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×