search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிண்டி பல்நோக்கு மருத்துவமனை"

    • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை இதுவரை கட்டவில்லை.
    • திறப்பு விழாவிற்கு வர விடாமல் குடியரசு தலைவரை தடுத்துவிட்டனர்.

    சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.240 கோடியில் 1000 படுக்கை வசதியுடன் கூடிய கலைஞர் நினைவு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

    மொத்தம் 4.89 ஏக்கர் நிலப்பரப்பில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளன. இங்கு இதயம், நரம்பு, இரைப்பை, சிறுநீரகம், புற்றுநோய் உள்ளிட்ட உயர் சிகிச்சைகளுக்கு மருத்துவம் பார்க்கப்படுகிறது. மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் நிறுவப்பட்ட நிலையில், கடந்த 5-ந்தேதியே இந்த மருத்துவமனையை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது.

    இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 6 மணியளவில் திறந்து வைத்தார்.

    பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

    மறைந்த பின்னும் தமிழ் சமுதாயத்திற்காக பயன்படுபவர் தான் கருணாநிதி.

    15 மாதங்களில் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. ஒரு செங்கல் கதை உங்கள் அனைவருக்கும் தெரிந்து இருக்கும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை இதுவரை கட்டவில்லை.

    கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் இதயம், நரம்பு, இரைப்பை, சிறுநீரகம், புற்றுநோய் உள்ளிட்டவைகளுக்கு உயர் சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

    ஏழை எளிய மக்களின் மருத்துவராக இருந்தவர் கருணாநிதி.

    திறப்பு விழாவிற்கு வர விடாமல் குடியரசு தலைவரை தடுத்துவிட்டனர்.

    மருத்துவ கட்டமைப்பில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. நாட்டிற்கே பல முன்மாதிரியான திட்டங்களை திமுக கொண்டு வந்துள்ளது. எம்பிபிஎஸ் மருத்துவ இடங்களில் தமிழகம் முன்னிலையில் உள்ளது.

    மக்களை தேடி மருத்துவம் மூலம் 1.46 கோடி பேர் பயனடைந்துள்ளனர். இருசக்கர அவசர ஊர்தி, பச்சிளம் குழந்தைகளுக்கான அவசர ஊர்தி என பல்வேறு திட்டங்கள் உள்ளது.

    கருணாநிதி வழியில் சோதனைகளை சாதனைகளாக மாற்றுவோம்.

    வேலூரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தங்கும் விடுதி கட்டப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மொத்தம் 4.89 ஏக்கர் நிலப்பரப்பில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளன.
    • இதயம், நரம்பு, இரைப்பை, சிறுநீரகம், புற்றுநோய் உள்ளிட்ட உயர் சிகிச்சைகளுக்கு மருத்துவம் அளிக்கப்படுகிறது.

    சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.240 கோடியில் 1000 படுக்கை வசதியுடன் கூடிய கலைஞர் நினைவு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

    மொத்தம் 4.89 ஏக்கர் நிலப்பரப்பில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளன.

    இங்கு இதயம், நரம்பு, இரைப்பை, சிறுநீரகம், புற்றுநோய் உள்ளிட்ட உயர் சிகிச்சைகளுக்கு மருத்துவம் அளிக்கப்படுகிறது.

    மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் நிறுவப்பட்ட நிலையில், கடந்த 5-ந்தேதியே இந்த மருத்துவமனையை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது.

    இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 6 மணியளவில் திறந்து வைத்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.240 கோடியில் 1000 படுக்கையுடன் உயர் சிறப்பு மருத்துவமனை
    • 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளன

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் ''கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வெளியிட்டு, அடிக்கல் நாட்டிய பதினைந்தே மாதங்களில் இன்று திறப்பு விழா காண்கிறது 'கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை'!'' என பதிவிட்டுள்ளார்.

    சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.240 கோடியில் 1000 படுக்கை வசதியுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

    மொத்தம் 4.89 ஏக்கர் நிலப்பரப்பில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளன. மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் நிறுவப்பட்ட நிலையில், கடந்த 5-ந்தேதியே இந்த மருத்துவமனையை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று மாலை 6 மணிக்கு திறப்பு விழா நடைபெற இருக்கிறது. இதற்கான அழைப்பிதழை வெளியிட்டு இந்த கருத்தை பதிவு செய்துள்ளார்.

    • கடந்த 5-ந்தேதியே மருத்துவமனையை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது.
    • வருகிற 15-ந்தேதி கலைஞர் நினைவு பல்நோக்கு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ.240 கோடியில் 1000 படுக்கை வசதியுடன் கூடிய கலைஞர் நினைவு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 4.89 ஏக்கர் நிலப்பரப்பில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளன.

    மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் நிறுவப்பட்ட நிலையில், கடந்த 5-ந்தேதியே இந்த மருத்துவமனையை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது.

    இந்த நிலையில், வருகிற 15-ந்தேதி கலைஞர் நினைவு பல்நோக்கு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்த வாரம் தெலுங்கானா செல்வது மட்டுமே இறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மருத்துவமனை திறப்பு விழாவை ஒத்திவைக்குமாறு ஏற்கெனவே எங்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.
    • நாடாளுமன்ற திறப்பு விழா சர்ச்சைகளுக்கும், இதற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் ஆய்வக நிலைய வளாகத்தில் ரூ. 230 கோடியில் 1,000 படுக்கை வசதியுடன் கூடிய பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

    4.89 ஏக்கர் நிலத்தில் தரைத்தளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 51,429 சதுர மீட்டரில் இந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது.

    முதல் கட்டிட மான 'ஏ' பிளாக்கில் ரூ.78 கோடியில் 16,736 சதுர மீட்டர் பரப்ப ளவில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மற்றும் நிர்வாகக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

    'பி' பிளாக் ரூ.78 கோடி மதிப்பீட்டில் 18,725 சதுர மீட்ட ரில் அறுவை சிகிச்சை வளாகம், தீவிர சிகிச்சை பிரிவுடன் கட்டப்பட்டுள்ளது.

    மூன்றாவது கட்டிடமான 'சி' பிளாக்கில் ரூ.74 கோடியில் 15,968 சதுர மீட்டரில் கதிரியக்க நோய் கண்டறிதல் பிரிவு மற்றும் வார்டுகளுடன் கட்டப்பட்டுள்ளது. மருத்துவக் கருவிகள் நிறுவும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஜூன் 5-ந் தேதி அந்த மருத்துவமனையை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக இருந்தது. இதற்கான அழைப்பிதழ்களும் அரசு சார்பில் அச்சிடப்பட்டு, விழா ஏற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

    இந்நிலையில், திட்டமிட்ட தேதியில் ஜனாதிபதியின் சென்னை வருகை ரத்தாகி உள்ளது. நாடாளுமன்ற புதிய கட்டிடத் திறப்பு விழாவை தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்ததையடுத்து ஜனாதிபதியின் பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஜூன் முதல் வாரத்தில் வெளிநாட்டுப் பயணம் மேற் கொள்கிறார். எனவே, மருத்துவமனை திறப்பு விழாவை ஒத்திவைக்குமாறு ஏற்கெனவே எங்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

    அதன் அடிப்படையில் அந்த விழா ஒத்திவைக்கப் பட்டு, ஜூலை முதல் வாரத்துக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற திறப்பு விழா சர்ச்சைகளுக்கும், இதற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    ×