search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள ஆய்வு"

    • சீவலப்பேரி குளம் உள்ளிட்ட இடங்களில் சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
    • கட்டளை குடியிருப்பு-பூலாங்குடியிருப்பு சாலையை சீரமைக்கும் பணிகள் குறித்து குழுவினர் நேரடியாக ஆய்வு செய்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவின் ஆய்வுக்கூட்டம் குழுவின் தலைவரும், அரசு கொறடாவுமான கோவி செழியன் தலைமையில் நடந்தது.

    சட்டமன்ற உறுப்பி னர்கள், கடலூர் அய்யப்பன், சூலூர் கந்தசாமி, சேந்தமங்கலம் பொன்னுசாமி, விருத்தாச்சலம் ராதாகிருஷ்ணன், வாசு தேவநல்லூர் சதன்திரு மலைக்குமார், தென்காசி பழனிநாடார் மற்றும் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவினர், கோரிக்கை மனுக்கள் குறித்து கட்டளை குடியிருப்பு, பூலாங்குடியிருப்பு சாலை, இலத்தூர், நயினாரகரம் அப்துல்கலாம் தெரு, சங்குபுரம் பகுதி, சாம்பவர் வடகரை பேரூராட்சி வித்தன்கோட்டை கிராமம், தென்காசி நகரத்தின் மையப்பகுதியிலுள்ள சீவலப்பேரி குளம் உள்ளிட்ட இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும், செங்கோட்டை என்.எச். சாலையில் இருந்து கட்டளை குடியிருப்பு-பூலாங்குடியிருப்பு சாலையை சீரமைக்கும் பணிகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்தனர்.

    அப்போது செங்கோட்டை நகராட்சி மூலம் சாலை அமைப்ப தற்கான நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என குழுவினர் தெரிவித்தனர்.

    கூட்டத்தில் டி.ஆர்.ஓ. பத்மாவதி, மாவட்ட வன அலுவலர் முருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) ஷேக், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அழகர்சாமி, இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பிரேமலதா, தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் , துணைத் தலைவர் சுப்பையா, சாம்பவர்வடகரை பேரூராட்சி தலைவர் சீதாலட்சுமி முத்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அனைவருக்கும் திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகளையும் வழங்கினார்.
    • சூரியநல்லூர் கிராமத்தில் தரிசு நிலத்தொகுப்பில் தேர்வு செய்யப்பட்ட புளியங்கன்று நடவு செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

    குண்டடம்:

    குண்டடம் வட்டாரத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் டாக்டர் ஆர்.பிருந்தா தேவி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட தரிசு நிலத் தொகுப்புகளில் கள ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது தரிசு நிலத் தொகுப்பு விவசாயிகளிடம் திட்ட செயல்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடல் மேற்கொண்டார். மேலும் தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் அனைவருக்கும் திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகளையும் வழங்கினார்.

    இது குறித்து குண்டடம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ச. சசிகலா தெரிவித்துள்ளதாவது:-

    குண்டடம் வட்டாரத்தில் வேளாண்மை துறை அலுவலர்களால் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2021-22 நிதியாண்டில் சூரியநல்லூர், சங்கரண்டாம் பாளையம் மற்றும் பெருமாள் பாளையம் ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் தரிசு நிலத் தொகுப்புகள் உருவாக்கப்பட்டது. மேலும், தொடர்புடைய தரிசு நிலத் தொகுப்பு விவசாயிகள் பயன்படுத்துவதற்காக, மானிய முறையில் ஆழ்துளைக்கிணறு அமைக்கப்பட்டு, மின்மோட்டார் மற்றும் மின் இணைப்பு முழு மானியத்தில் பெறப்பட்டு மற்றும் தரிசு நிலங்களில் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.

    தரிசு நிலத்தொகுப்பு விவசாயிகளின் விருப்பத்திற்கிணங்க பல்லாண்டு காய்கறிப் பயிர்கள் மற்றும் பழமரச் செடிகள் தோட்டக்கலைத் துறையினால் முழு மானியத்தில் வழங்கப்பட்டு நடவு செய்யும் பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

    தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் இந்த திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றம் குறித்த கள ஆய்வினை சூரியநல்லூர், சங்கரண்டாம் பாளையம் மற்றும் பெருமாள் பாளையம் ஆகிய தரிசு நிலத்தொகுப்புகளில் மேற்கொண்டார். இதில் வேளாண்மை இணை இயக்குனர், தோட்டக்கலை துணை இயக்குனர் (பொறுப்பு) மற்றும் வட்டார தோட்டக்கலை, வேளாண்மை, வேளாண் பொறியியல் துறை பிற அரசு துறை அலுவலர்கள் மற்றும் நுண்ணீர் பாசன நிறுவனத்தினர் கலந்துகொண்டனர். சூரியநல்லூர் கிராமத்தில் தரிசு நிலத்தொகுப்பில் தேர்வு செய்யப்பட்ட புளியங்கன்று நடவு செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

    இதில் விவசாயிகள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • குமரி மாவட்டத்தில் 4 லட்சத்து 27 ஆயிரம் பேர் உரிமை திட்ட தொகைக்காக விண்ணப்பித்திருந்தனர்.
    • 2 லட்சம் விண்ணப்பங்கள் கள ஆய்வு செய்யப்பட்டன

    நாகர்கோவில் :

    கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கு ஏராள மானோர் விண்ணப்பித்தனர்.

    நாளை தொடக்க விழா

    இந்த விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணி கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தது. குமரி மாவட்டத்தில் 4 லட்சத்து 27 ஆயிரம் பேர் உரிமை திட்ட தொகைக்காக விண்ணப்பித்திருந்தனர்.

    இதில் 2 லட்சம் விண்ணப்பங்கள் கள ஆய்வு செய்யப்பட்டன. வருவாய் துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அந்த விண்ணப்பங்கள் சென்னைக்கு அனுப்பப் பட்டன.

    இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் தொடக்க விழா நாளை (15-ந் தேதி) நடக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை தொடங்கி வைக்கி றார்.

    தமிழகம் முழுவதும் காணொலி காட்சி மூலம் அவர் திட்டத்தை தொடங்கி வைக்கி றார். குமரி மாவட்டத்தில் திருவிதாங்கோட்டில் தொடக்கவிழா நடக்கிறது. அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் முதல் கட்டமாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமை திட்ட உதவித் தொகை வழங்கப்படுகிறது

    • ஊழியர்கள் பணம் வாங்குவதாக குற்றச்சாட்டு
    • குமரியில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் வீடுகளில் ஆய்வு

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப படி வங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. 5 லட்சத்து 77 ஆயிரத்து 127 ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப் பட்டு இருந்தது. முதல் கட்டமாக 400 ரேஷன் கடைகளில் விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டது.

    முதல் கட்ட முகாமில் 2,03,268 பேர் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினார்கள். இதைத்தொடர்ந்து மீதமுள்ள 367 ரேஷன் கடைகளில் 2-வது கட்டமாக விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டது. இதில் 1 லட்சத்து 93 ஆயிரத்து 752 பேர் விண்ணப்ப படிவங்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து சிறப்பு முகாம்கள் கடந்த மாதம் 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடந்தது. இதில் 22 ஆயிரத்து 631 பேர் விண்ணப்ப படிவங்களை வழங்கி உள்ள னர். குமரி மாவட்டத்தில் கலைஞர் உரிமை திட்டத்தில் 4 லட்சத்து 19 ஆயிரத்து 659 பேர் பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர். 1 லட்சத்து 57 ஆயிரத்து 487 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பிக் கவில்லை. பூர்த்தி செய்து வழங்கப்பட்ட விண்ணப்ப படிவங்களில் சில குளறுபடிகள் இருப்பது தெரி யவந்துள்ளது. இதையடுத்து அவற்றை கள ஆய்வு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் சுமார் 70 ஆயிரம் விண்ணப்பங்களை கள ஆய்வு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    70,000 விண்ணப்பங்கள் ஆய்வு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பெரும்பாலான விண்ணப் பங்களில் உள்ள குளறுபடி கள் சரி செய்யப்பட்டது. 10 சதவீத விண்ணப்ப படி வங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மேலும் 1 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பங்களை கள ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த விண்ணப்ப படி வங்களை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் ரேஷன் கடை களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    இந்த விண்ணப்ப படிவங்களையும் நேரடியாக வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்ய அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதற்கான ஆய்வு பணி தற்போது தொடங்கப் பட்டுள்ளது. வீடு வீடாக சென்று அதிகாரிகள் குழுவினர் கள ஆய்வு பணியை தொடங்கி உள்ள னர். ஒவ்வொரு ரேஷன் கடைகள் உட்பட்ட பகுதிகளிலும் 200-க்கும் மேற்பட்ட விண்ணப்ப படிவங்கள் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கள ஆய்வு பணியை முடிப்பதற்கு இன்னும் தாமதமாகலாம் என்று தெரிகிறது.

    இதற்கிடையில் குமரி மேற்கு மாவட்ட பகுதியில் கள ஆய்வுக்கு வரும் ஊழியர்கள் விண்ணப்ப தாரர்களிடம் பணம் வாங்குவதாக புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் விண்ணப்பித்த 50 சதவீத விண்ணப்பங்கள் கள ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ள நிலையில் மீதமுள்ள விண்ணப் பங்களை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த விண்ணப்ப படிவங்களை சென்னை யில் உள்ள மின் ஆளுமை மையத்தில் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கள ஆய்வு மேற்கொண்டு வரும் விண்ணப்ப படிவங்களை அடுத்த கட்டமாக அனுப்பவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்னனர்.

    • கள ஆய்வில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் 2 நாள் பயணமாக நேற்று சேலம் வந்தார்.
    • அப்போது பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    சேலம்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் 2 நாள் பயணமாக நேற்று சேலம் வந்தார். காமலாபுரம் விமான நிலையத்திற்கு விமானத்தில் வந்த அவர், திடீரென ஓமலூர் தாலுகா அலுவலகத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அந்த கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்த முதல்-அமைச்சர் உடனடியாக அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அதன்படி, கொல்லப்பட்டியை சேர்ந்த ராஜம்மாள் என்பவருக்கு இலவச வீட்டு மனை பட்டாவை நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து வழங்கினார். முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்த முரளிதரன் என்பவருக்கு கிராம நத்தம் கூட்டுப்பட்டாவிலிருந்து பட்டா மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.

    இதேபோல் தீண்டமங்கலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கோமதி என்பவருக்கு தையல் எந்திரம், செல்லப்பிள்ளை குட்டையை சேர்ந்த கணவரால் கைவிடப்பட்ட சித்ரா என்பவருக்கு உதவி தொகைக்கான ஆணையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    இது குறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் எதிர்பார்க்காத வகையில் முதல்-அமைச்சர் வந்தார். அவரிடம் மனுக்களை கொடுத்தோம். காலையில் மனுக்களை பெற்றுவிட்டு மாலையில் தொடர்பு கொண்டு நலத்திட்ட உதவிகளை பெற வருமாறு அழைத்தனர். இதனை நாங்கள் எதிர்பார்க்க வில்லை. முதல்-அமைச்சர் நலத்திட்டத்தையும் வழங்கினார். இது எங்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளது என தெரிவித்தனர்.

    • பேராசிரியர் ரமேஷ், மற்றும் பட்ட ஆய்வாளர் இம்மானுவேல் ஆகியோர் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனர்.
    • சங்க கால பெண்கள் அணிந்த சுடுமண்ணாலான காதணி கள் கண்டெடுக்கப்பட்டது.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே உள்ள உளுந்தாம்பட்டு மற்றும் எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ரமேஷ், மற்றும் பட்ட ஆய்வாளர் இம்மானுவேல் ஆகியோர் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனர், அப்பொ ழுது சங்ககால பெண்கள் அணிந்த சுடுமண்ணாலான காதணியை கண்டறிந்தார்கள். இதை குறித்து அவர்கள் கூறியதாவது:- 

    ஏற்கனவே பண்ருட்டி பகுதி தென்பெண்ணை யாற்றங்கரையில் மேற்புர களஆய்வின் போது சுடு மண் பொம்மை, வட்ட சில்லு, சுடுமண் புகை பிடிப்பான், சுடுமண் அகல்விளக்கு ஆகியவை கண்டெடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஆற்று படுக்கையில் ஆய்வு மேற்கொண்ட போது சங்க கால பெண்கள் அணிந்த சுடுமண்ணாலான காதணி கள் கண்டெடுக்கப்பட்டது கண்டெடுக்கப்பட்ட காதணிகள் வட்ட வடிவம் மற்றும் தோடு போன்ற வடிவத்தையும் கொண்டதாக உள்ளது. தோடு போன்ற அமைப்பினைக்கொண்ட காதணியின் மேற்புறத்தில் அழகாக கோட்டு ருவம் போன்று வரை யப்பட்டுள் ளது. இந்த கோட்டுஉருவம் அக்கால மக்களின் கலை நுணுக்கங்களை காட்டு வதாக உள்ளது, சுடுமண் பொருட்கள் காலத்தால் அழியாதது. எளிதில் சேத மடையாது என்பதால் பண்டைய காலத்தில் சுடுமண் காதணிகள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. இதுபோன்ற சுடுமண்ணா லான காதணிகள் மதுரை கீழடியில் நடந்த அகழ்வாய்வு களில் கிடைத்துள்ளது என்று கூறினார்கள்.

    • வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு இணைந்து, உலக மரபு வாரத்தை கொண்டாடி வருகிறது.
    • நடுகற்களின் வகைகள், அவற்றின் தோற்றம் ஆகியவை குறித்து எடுத்துரைத்தனர்.

    கிருஷ்ணகிரி,

    தமிழக தொல்லியல் துறை, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு இணைந்து, உலக மரபு வாரத்தை கொண்டாடி வருகிறது. அதன்படி, காவேரிப்பட்டணம் அடுத்த அகரம் கிராமத்தில், வேலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய தருமபுரி மாணவ, மாணவிகள் கள ஆய்வு மேற்கொண்டனர்.

    இக்களப்பயணத்தில், அகரம் அடுத்த தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் தென்னந்தோப்பில் அமைந்துள்ள பலவகையான நடுகற்கள் குறித்து, மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், தொல்லியல் அலுவலர் பரந்தாமன், வரலாற்று ஆய்வுக்குழுத் தலைவர் நாராயணமூர்த்தி, வரலாற்று ஆய்வாளர்கள் சதானந்த கிருஷ்ணகுமார், சரவணகுமார், ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர், நடுகற்களின் வகைகள், அவற்றின் தோற்றம் ஆகியவை குறித்து எடுத்துரைத்தனர்.

    இங்கு மாடுபிடி சண்டையில் இறந்த வீரர்களுடன் உடன்கட்டை ஏறிய பெண்கள் போன்ற பல காரணங்களுக்காக உயிரிலந்த நமது முன்னோர்களின் நடுகற்கள் காணப்பட்டன. இவற்றின் பொருள் என்ன, இவற்றை எவ்வாறு பாதுகாப்பது, போன்ற நமது மரபுச் செல்வங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.

    இதில், பேராசிரியர்கள் கிருத்திகா, சரண்யா உள்பட, 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • வேளாண் துறையினர் விளக்கம் மற்றும் ஆய்வு நடத்துகின்றனர்.
    • கூடுதல் மகசூல் பெறுதல், மானியம் பெறுதல் உள்ளிட்டவை குறித்து விளக்கினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் காரிப் பருவ பயிராக நிலக்கடலை ஏறத்தாழ 6 ஆயிரம் ஹெக்டர், சோளப் பயிர் 5 ஆயிரம் எக்டர் என்ற அளவில் பயிரிடப்படுகிறது.திருப்பூர் மற்றும் ஊத்துக்குளி சுற்றுப்பகுதியில் மானாவாரி விவசாயிகள் இப்பயிர்களை பெருமளவு விதைக்கின்றனர். இதில் விளை நிலங்களின் பரப்பை அதிகரித்தல் மற்றும் கூடுதல் மகசூல் பெறும் முறை குறித்து வேளாண் துறையினர் விளக்கம் மற்றும் ஆய்வு நடத்துகின்றனர்.

    இதில் புது ரகங்களை விதைப்பண்ணை அமைத்து சான்று விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தேசிய உணவு பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன் மற்றும் அலுவலர்கள் கள ஆய்வு செய்தனர்.அவ்வகையில் நெருப்பெரிச்சல் பகுதியில் நிலக்கடலை தரணி ஆதார நிலை விதைப் பண்ணை, செட்டிபாளையத்தில் சோளம் பயிருக்கான விதைப் பண்ணை ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஆய்வு செய்த அலுவலர்கள், கூடுதல் மகசூல் பெறுதல், மானியம் பெறுதல் உள்ளிட்டவை குறித்து விளக்கினர்.

    ×