search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Field study"

    • அனைவருக்கும் திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகளையும் வழங்கினார்.
    • சூரியநல்லூர் கிராமத்தில் தரிசு நிலத்தொகுப்பில் தேர்வு செய்யப்பட்ட புளியங்கன்று நடவு செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

    குண்டடம்:

    குண்டடம் வட்டாரத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் டாக்டர் ஆர்.பிருந்தா தேவி, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட தரிசு நிலத் தொகுப்புகளில் கள ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது தரிசு நிலத் தொகுப்பு விவசாயிகளிடம் திட்ட செயல்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடல் மேற்கொண்டார். மேலும் தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் அனைவருக்கும் திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகளையும் வழங்கினார்.

    இது குறித்து குண்டடம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ச. சசிகலா தெரிவித்துள்ளதாவது:-

    குண்டடம் வட்டாரத்தில் வேளாண்மை துறை அலுவலர்களால் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2021-22 நிதியாண்டில் சூரியநல்லூர், சங்கரண்டாம் பாளையம் மற்றும் பெருமாள் பாளையம் ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் தரிசு நிலத் தொகுப்புகள் உருவாக்கப்பட்டது. மேலும், தொடர்புடைய தரிசு நிலத் தொகுப்பு விவசாயிகள் பயன்படுத்துவதற்காக, மானிய முறையில் ஆழ்துளைக்கிணறு அமைக்கப்பட்டு, மின்மோட்டார் மற்றும் மின் இணைப்பு முழு மானியத்தில் பெறப்பட்டு மற்றும் தரிசு நிலங்களில் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.

    தரிசு நிலத்தொகுப்பு விவசாயிகளின் விருப்பத்திற்கிணங்க பல்லாண்டு காய்கறிப் பயிர்கள் மற்றும் பழமரச் செடிகள் தோட்டக்கலைத் துறையினால் முழு மானியத்தில் வழங்கப்பட்டு நடவு செய்யும் பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

    தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் இந்த திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றம் குறித்த கள ஆய்வினை சூரியநல்லூர், சங்கரண்டாம் பாளையம் மற்றும் பெருமாள் பாளையம் ஆகிய தரிசு நிலத்தொகுப்புகளில் மேற்கொண்டார். இதில் வேளாண்மை இணை இயக்குனர், தோட்டக்கலை துணை இயக்குனர் (பொறுப்பு) மற்றும் வட்டார தோட்டக்கலை, வேளாண்மை, வேளாண் பொறியியல் துறை பிற அரசு துறை அலுவலர்கள் மற்றும் நுண்ணீர் பாசன நிறுவனத்தினர் கலந்துகொண்டனர். சூரியநல்லூர் கிராமத்தில் தரிசு நிலத்தொகுப்பில் தேர்வு செய்யப்பட்ட புளியங்கன்று நடவு செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

    இதில் விவசாயிகள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்யும் பணி இன்று தொடங்கி உள்ளது.
    • விண்ணப்பத்தில் விடு பட்டுள்ள விவரங்களை கேட்டு அதை பதிவு செய்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந்தேதியில் இருந்து செயல்படுத்தப்பட உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

    இதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 63 லட்சம் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி வழியாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் உண்மையாக உள்ளதா? என்பதை கண்டறியவும், விடுபட்ட விவரங்களை விண்ணப்பதாரர்களிடம் கேட்டு பெறவும் அரசு முடிவு செய்துள்ளது.

    இதற்காக வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்யும் பணி இன்று தொடங்கி உள்ளது. இதற்காக நியமிக்கப்பட்ட தன்னார்வலர்கள், மற்றும் கல்வித்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பதாரர்களிடம் விசாரித்து வருகின்றனர். வீடு சொந்த வீடா? வாடகை வீடா? என்ன வேலை பார்க்கிறார்கள். கார் இருக்கிறதா? மாத வருமானம் எவ்வளவு? மின்சார பயன்பாடு 2 மாதத்திற்கு எவ்வளவு பயன்படுத்தப்பட்டு உள்ளது என்பதையும் பார்க்கிறார்கள்.

    விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களும், விசாரிக்கும்போது கிடைக்கும் விவரங்களும் சரிவர ஒத்துப்போகிறதா? என்பதையும் பார்க்கிறார்கள். விண்ணப்பத்தில் விடு பட்டுள்ள விவரங்களை கேட்டு அதை பதிவு செய்து கொள்கிறார்கள்.

    பெரும்பாலான வீடுகளில் மின்சார பயன்பாடு பற்றி விண்ணப்பத்தில் குறிப்பிடப்படாமல் உள்ளதால் மின்சார யூனிட் எவ்வளவு உபயோகப்படுத்தி உள்ளனர் என்பதையும் பார்த்து தெரிந்து கணக்கிட்டு கொள்கிறார்கள்.

    இதுபற்றி உயர் அதிகாரி கூறுகையில், தகுதியான நபர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதற்காகத்தான், வீடுவீடாக சரிபார்க்கும் பணி தொடங்கி உள்ளதாகவும், விண்ணப்பத்தில் சரிவர பூர்த்தி செய்யாத விவரங்களை கேட்டு பெற்று பதிவு செய்து வருகிறார்கள் என்றும் தெரி வித்தார். இந்த தரவுகள் அனைத்தும் முழுமையாக கிடைத்ததும் இதற்கென உருவாக்கப்பட்டு உள்ள சாப்ட்வேர் செயலி மூலம் ஒவ்வொரு விண்ணப்பமும் சரிபார்க்கப்படும். அதில் எந்ததெந்த விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் என்பது தானாகவே தெரிந்து விடும்.

    அந்த பட்டியல் இந்த மாத இறுதிக்குள் தயாராகி விடும். அதன்மூலம் யார்-யாருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்பது தெரிந்து விடும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

    • கள ஆய்வில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் 2 நாள் பயணமாக நேற்று சேலம் வந்தார்.
    • அப்போது பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    சேலம்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் 2 நாள் பயணமாக நேற்று சேலம் வந்தார். காமலாபுரம் விமான நிலையத்திற்கு விமானத்தில் வந்த அவர், திடீரென ஓமலூர் தாலுகா அலுவலகத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அந்த கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்த முதல்-அமைச்சர் உடனடியாக அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அதன்படி, கொல்லப்பட்டியை சேர்ந்த ராஜம்மாள் என்பவருக்கு இலவச வீட்டு மனை பட்டாவை நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து வழங்கினார். முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்த முரளிதரன் என்பவருக்கு கிராம நத்தம் கூட்டுப்பட்டாவிலிருந்து பட்டா மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.

    இதேபோல் தீண்டமங்கலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கோமதி என்பவருக்கு தையல் எந்திரம், செல்லப்பிள்ளை குட்டையை சேர்ந்த கணவரால் கைவிடப்பட்ட சித்ரா என்பவருக்கு உதவி தொகைக்கான ஆணையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    இது குறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் எதிர்பார்க்காத வகையில் முதல்-அமைச்சர் வந்தார். அவரிடம் மனுக்களை கொடுத்தோம். காலையில் மனுக்களை பெற்றுவிட்டு மாலையில் தொடர்பு கொண்டு நலத்திட்ட உதவிகளை பெற வருமாறு அழைத்தனர். இதனை நாங்கள் எதிர்பார்க்க வில்லை. முதல்-அமைச்சர் நலத்திட்டத்தையும் வழங்கினார். இது எங்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளது என தெரிவித்தனர்.

    • பேராசிரியர் ரமேஷ், மற்றும் பட்ட ஆய்வாளர் இம்மானுவேல் ஆகியோர் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனர்.
    • சங்க கால பெண்கள் அணிந்த சுடுமண்ணாலான காதணி கள் கண்டெடுக்கப்பட்டது.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே உள்ள உளுந்தாம்பட்டு மற்றும் எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ரமேஷ், மற்றும் பட்ட ஆய்வாளர் இம்மானுவேல் ஆகியோர் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனர், அப்பொ ழுது சங்ககால பெண்கள் அணிந்த சுடுமண்ணாலான காதணியை கண்டறிந்தார்கள். இதை குறித்து அவர்கள் கூறியதாவது:- 

    ஏற்கனவே பண்ருட்டி பகுதி தென்பெண்ணை யாற்றங்கரையில் மேற்புர களஆய்வின் போது சுடு மண் பொம்மை, வட்ட சில்லு, சுடுமண் புகை பிடிப்பான், சுடுமண் அகல்விளக்கு ஆகியவை கண்டெடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஆற்று படுக்கையில் ஆய்வு மேற்கொண்ட போது சங்க கால பெண்கள் அணிந்த சுடுமண்ணாலான காதணி கள் கண்டெடுக்கப்பட்டது கண்டெடுக்கப்பட்ட காதணிகள் வட்ட வடிவம் மற்றும் தோடு போன்ற வடிவத்தையும் கொண்டதாக உள்ளது. தோடு போன்ற அமைப்பினைக்கொண்ட காதணியின் மேற்புறத்தில் அழகாக கோட்டு ருவம் போன்று வரை யப்பட்டுள் ளது. இந்த கோட்டுஉருவம் அக்கால மக்களின் கலை நுணுக்கங்களை காட்டு வதாக உள்ளது, சுடுமண் பொருட்கள் காலத்தால் அழியாதது. எளிதில் சேத மடையாது என்பதால் பண்டைய காலத்தில் சுடுமண் காதணிகள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. இதுபோன்ற சுடுமண்ணா லான காதணிகள் மதுரை கீழடியில் நடந்த அகழ்வாய்வு களில் கிடைத்துள்ளது என்று கூறினார்கள்.

    • வேளாண் துறையினர் விளக்கம் மற்றும் ஆய்வு நடத்துகின்றனர்.
    • கூடுதல் மகசூல் பெறுதல், மானியம் பெறுதல் உள்ளிட்டவை குறித்து விளக்கினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் காரிப் பருவ பயிராக நிலக்கடலை ஏறத்தாழ 6 ஆயிரம் ஹெக்டர், சோளப் பயிர் 5 ஆயிரம் எக்டர் என்ற அளவில் பயிரிடப்படுகிறது.திருப்பூர் மற்றும் ஊத்துக்குளி சுற்றுப்பகுதியில் மானாவாரி விவசாயிகள் இப்பயிர்களை பெருமளவு விதைக்கின்றனர். இதில் விளை நிலங்களின் பரப்பை அதிகரித்தல் மற்றும் கூடுதல் மகசூல் பெறும் முறை குறித்து வேளாண் துறையினர் விளக்கம் மற்றும் ஆய்வு நடத்துகின்றனர்.

    இதில் புது ரகங்களை விதைப்பண்ணை அமைத்து சான்று விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தேசிய உணவு பாதுகாப்பு திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன் மற்றும் அலுவலர்கள் கள ஆய்வு செய்தனர்.அவ்வகையில் நெருப்பெரிச்சல் பகுதியில் நிலக்கடலை தரணி ஆதார நிலை விதைப் பண்ணை, செட்டிபாளையத்தில் சோளம் பயிருக்கான விதைப் பண்ணை ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஆய்வு செய்த அலுவலர்கள், கூடுதல் மகசூல் பெறுதல், மானியம் பெறுதல் உள்ளிட்டவை குறித்து விளக்கினர்.

    ×