என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நத்தம் விசுவநாதன்"

    • பணம் இருந்தால் வெற்றி பெற்று விடலாம் என நினைக்கின்றனர்.
    • திருமாவளவன் ஒரு நாளைக்கு ஒரு நிலைப்பாடு எடுப்பவர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசியதாவது:-

    தமிழக மக்கள் மனதில் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். எனவே அ.தி.மு.க.வுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. எனவே நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்ற வேண்டும். உங்களால் சரியாக உழைக்க முடியவில்லை என்றால் ஒதுங்கிக் கொள்ளுங்கள். உழைப்பவர்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும். வீடுதோறும் நிர்வாகிகள் சென்று அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். குறிப்பாக இளைஞர்களை கட்சியில் இணைக்க முயல வேண்டும். விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி, போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும் என்றார்.

    அதன் பின் நத்தம் இரா.விசுவநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க.வுக்கு தமிழகத்தில் 10 சதவீத வாக்கு வங்கி கூட கிடையாது. கூட்டணி மற்றும் சிறுபான்மையினரின் ஆதரவை வைத்துக் கொண்டு தங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என கூறி வருகின்றனர். விஜய் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறுவரா? என்பதை தற்போது கூற இயலாது. அரசியல் களத்தில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.

    தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்பதை வைத்து தமிழகத்தில் எதிர்கட்சிகள் பல்வேறு அரசியல் செய்து வருகின்றனர். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் அனைத்து கட்சிகளும் கூட்டணியில் இடம்பெறும். வருகிற தேர்தலிலும் இந்த கூட்டணிதான் மகத்தான வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்பார்.

    பணம் இருந்தால் வெற்றி பெற்று விடலாம் என நினைக்கின்றனர். அப்படி இருந்தால் டாடா பிர்லா போன்ற தொழிலதிபர்கள் பணத்தை வாரி இறைத்து வெற்றி பெற்று இருக்கலாம். திருமாவளவன் ஒரு நாளைக்கு ஒரு நிலைப்பாடு எடுப்பவர். அவர் கூறுவதையெல்லாம் ஏற்க முடியாது. அ.தி.மு.க. கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த சிலர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அது ஒரு போதும் நடக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. எதிர்த்து இருந்தால் நீட் வந்திருக்காது.
    • ஏமாற்று வேலைதான் திராவிட மாடல் என்றால் உண்மையிேலயே இந்த அரசு திராவிட மாடல் அரசுதான்.

    ஆட்சியில் இருக்கும் போது ஒரு திட்டத்தை கொண்டு வருவதும், அதன் பிறகு அதே திட்டத்தை எதிர்ப்பதும் இந்தியாவில் தி.மு.க.வால் மட்டுமே செய்ய முடியும். அதனால்தான் அந்த கட்சியை பார்த்து நாடே சிரிக்கிறது என்றார் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன்.

    தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் இருந்த போதுதான் நீட் தேர்வுக்கான மசோதா கொண்டு வரப்பட்டது. அப்போதே தி.மு.க. எதிர்த்து இருந்தால் நீட் வந்திருக்காது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி வேறு வழியில்லாமல் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டது.

    மசோதா வரும்போது விட்டுவிட்டு நீட் தேர்வை ரத்து செய்யும் சூட்சுமம் தங்களுக்கு தெரியும் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள். இப்போது பயிற்சி வகுப்புகளையும் ரத்து செய்து விட்டு போராடுகிறார்கள்.

    அதேபோல்தான் கச்சத்தீவையும் எழுதி கொடுத்து விட்டு இலங்கையிடம் இருந்து திருப்பி வாங்குங்கள் என்று போராடுகிறார்கள். இவை எதுவும் நடக்காது என்று தெரிந்தும் மக்களை ஏமாற்றுகிறார்கள். ஏமாற்று வேலைதான் திராவிட மாடல் என்றால் உண்மையிேலயே இந்த அரசு திராவிட மாடல் அரசுதான்.

    • அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
    • அமைச்சர்கள் முன்னிலையில் கைகலப்பாக மாறி அடிதடியில் முடிந்தது.

    மதுரை:

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கள ஆய்வுக்கூட்டம் இன்று காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். இதில் கள ஆய்வுக்குழு நிர்வாகிகளாக துணைப் பொதுச்செயலாளர் நத்தம் விசுவநாதன், முன்னாள் அமைச்சர் செம்மலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டம் தொடங்கியதும் பேசிய நத்தம் விசுவநாதன், மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வின் வளர்ச்சி பணிகள் குறித்து தொண்டர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம்.

    தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் தலைமை பார்த்துக்கொள்ளும். எனவே ஆக்கப்பூர்வமான கருத்துகளை நிர்வாகிகள், தொண்டர்கள் கூறலாம் என்றார்.

    அப்போது கூட்டத்தில் பங்கேற்ற மதுரை பைக்காரா செழியன், ராமச்சந்திரன், முனிச்சாலை சரவணன் உள்ளிட்டோர் தங்களது இருக்கையில் இருந்து எழுந்து மேடையை நோக்கி முன்னேறி சென்றனர்.

    அவர்கள், கடந்த பாராளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் அ.தி.மு.க. மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதுபற்றி நாங்கள் பேசவேண்டும். மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பெரும் தொய்விலும், அதிருப்தியிலும் உள்ளனர் என்று தொடர்ந்து பேசினர்.

    அத்துடன் அவர்கள் மேடையில் ஏறினர். உடனே மேடையில் இருந்தவர்கள் அவர்களை கீழே தள்ளி விட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் உருவானது.

    இதில் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டதால் முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் கைகலப்பாக மாறி அடிதடியில் முடிந்தது. அவர்கள் சரமாரியாக கைகளால் தாக்கிக் கொண்டனர்.

    உடனே மைக்கில் குறுக்கிட்டு பேசிய நத்தம் விசுவநாதன், அமைதியாக இருங்கள், ஒற்றுமையுடன் இருந்து மீண்டும் எடப்பாடியார் ஆட்சி தமிழகத்தில் மலர பணியாற்றுங்கள் என்றார்.

    இருந்தபோதிலும் கூட்ட அரங்கில் பரபரப்பு சற்றும் குறையவில்லை. தொடர்ந்து கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் தங்களிடம் முறையாக கருத்துகள் கேட்கவில்லை என கூச்சலிட்டனர். இதனால் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.

    ×