search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வி உபகரணங்கள்"

    • அரசு தொடக்கப்பள்ளிக்கு ரூ.2½ லட்சம் கல்வி உபகரணங்களை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்.
    • திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி. உதய குமாரிடம் கோரிக்கை வைத்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே கண்டுகுளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ெதாடக்கப்பள்ளி உள்ளது. இதில் கிராமத்தைச் சுற்றி யுள்ள 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கிராமப்புற பகுதி என்பதால் அரசு தொடக்கப் பள்ளியில் கல்வி பயில்வதற்காக பள்ளிக் குழந்தைகள் உட்காருவதற்காக மேஜை, நாற்காலிகள் இல்லாமல் தரையில் அமர்ந்து கல்வி பயின்று வந்துள்ளனர்.

    இது தொடர்பாக திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி. உதய குமாரிடம் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து கண்டுகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஆர்.பி. உதயகுமார் நேரில் வருகை புரிந்தார்.

    தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தேசிய கொடி ஏற்றி வைத்தார். மேலும் கிர்டிட் அக்ஸஸ் கிராமீன் லிமிடெட் சார்பில் ரூ.2½ லட்சம் மதிப்பிலான இருக்கைகள் மேஜைகள் மற்றும் கல்வி உபகரண பொருட்களை சட்டமன்ற ஆர்.பி. உதய குமார் பள்ளிக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியின் போது நிர்வாகிகள் முருகன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன், ஒன்றிய செய லாளர் அன்பழகன், டிரஸ்ட் மண்டல மேலாளர் ஸ்ரீனிவாச ஆஞ்சிநேய ரெட்டி பிரிவு மேலாளர் பாஸ்கரன், திட்டமிடல் கண்காணிப்பு குழு பிரசாந்த், ராம்குமார், பிரதீப், நிர்வாகத்துறை வேலு உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மஞ்சமேடு அரசு பள்ளியில் அப்துல் கலாமின் நினைவு நாளை யொட்டி கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் புன்னகை சமூக நல அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே மஞ்சமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அப்துல் கலாமின் நினைவு நாளை முன்னிட்டு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் புன்னகை சமூக நல அறக்கட்டளை நிறுவனர் நாகராணி, வெங்கடேசன், ஈச்சம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வெள்ளையன், ஓய்வு பெற்ற மாவட்ட தீயணைப்பு அலுவலர் மதியழகன், மஞ்சமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகர், உதவி ஆசிரியர் சாந்தி, மக்கள் நல பணியாளர் காமாட்சி, கொசு ஒழிப்பு பணியாளர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் சின்னமணி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மக்கள் முன்னேற்ற பொது நல சங்கத்தின் சார்பில் பள்ளி மாணவிகள் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
    • பண்டா ரவடை, சியாத்தமங்கை எரவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் சீராகுளம் அருகில் வசித்து வரும் மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை மக்கள் முன்னேற்ற பொது நல சங்கத்தின் சார்பில் அதன் மாநில தலைவர் என்.விஜயராகவன் வழங்கினார்.

    நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் சீராகுளம் அருகே மக்கள் முன்னேற்ற பொது நல சங்கத்தின் சார்பில் பொருளாதாரத்தில் நலிவடைந்த ஏழை எளிய மற்றும் தாய் தந்தையை இழந்த பள்ளி மாணவிகள் கிருஷ்ணவேணி, ஸ்வேதா ஆகியோருக்கு புத்தகப்பை, எழுதுகோல், சீருடை மற்றும் கல்வி உபகரணங்களை சங்கத்தின் மாநில தலைவர் என்.விஜயராகவன் தலைமையில் வழங்கப்பட்டது.

    இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல் மற்றும் நிர்வாகிகள் பழனிவேல் தினேஷ்குமார், ராஜீவ் காந்தி கார்த்திக் வாணி கோகிலா அபிராமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    அதேபோல் பண்டா ரவடை, சியாத்தமங்கை எரவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகளுக்கும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    • தமிழகம் முழுவதும் கடுமையான வெயில் நிலவி வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளி போடப்பட்டிருந்தது.
    • வளையல், கம்மல் உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் மாணவிகள் அதிக அளவில் செல்கின்றனர்.

     திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் கடுமையான வெயில் நிலவி வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளி போடப்பட்டிருந்தது. தற்போது 6 முதல் பிளஸ்-2 வரைக்கும் நாளையும்(திங்கட்கிழமை), 1 முதல் 5-ம் வகுப்பு வரைக்கும் வருகிற 14-ந்தேதியும்(வியாழக்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனால் பள்ளி செல்வதற்கு தேவையான புத்தகப்பை, நோட்டுகள், உள்ளிட்ட பல்வேறு வகையான கல்வி உபகரணங்களை வாங்குவதற்கு திருப்பூரில் கடைகளுக்கு பொதுமக்கள் சென்றவண்ணம் உள்ளனர். இந்த பொருட்கள் விற்பனை செய்யப்படும் பெரியகடை வீதி உள்பட மாநகரின் பல கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இதேபோல் பள்ளிகளின் சீருடைகளை தைப்பதற்காக சிலர் தையல் கடைகளுக்கு செல்கின்றனர். சிலர் ரெடிமேடாக விற்பனை செய்யப்படும் சீருடைகளை வாங்கி செல்கின்றனர். இதனால் துணிக்கடைகளிலும், தையல் கடைகளிலும் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

    இதேபோல், புது ஷூ மற்றும் காலனிகள் வாங்குவதற்காகவும் காலனி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. மேலும், வளையல், கம்மல் உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் மாணவிகள் அதிக அளவில் செல்கின்றனர்.

    பள்ளி திறப்பையொட்டி திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தூய்மைப்பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பள்ளிகளின் வகுப்பறைகள் சுத்தம் செய்தல், மேஜை, இருக்கைகள் சுத்தம் செய்தல், கழிப்பிடங்கள், சுற்றுப்புற வளாகம், கரும்பலகைகளுக்கு வர்ணம் பூசுதல், மின் இணைப்பு சரி செய்தல், குடிநீர் தொட்டிகள் தூய்மை செய்தல், கதவு-ஜன்னல்கள் சரி செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பணிகளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர்.

    • கல்வி உரிமை சட்டத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு அரசு தான் கட்டணம் செலுத்த வேண்டும்
    • ஆர்.டி.இ சட்டத்தில் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கான செலவை அரசு தான் ஏற்க வேண்டும்.

    சென்னை:

    கல்வி உரிமை சட்டத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு அரசு தான் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    வேலூரில் சீருடை, புத்தகங்களுக்காக ரூ.11,977 கட்டணமாக செலுத்த தனியார் பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டதை அடுத்து ஆர்.டி.இ-ல் சேர்ந்த மாணவரின் தந்தை மகாராஜா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ஆர்.டி.இ சட்டத்தில் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கான செலவை அரசு தான் ஏற்க வேண்டும். மாணவர்களுக்கு புத்தகம், சீருடை கட்டணங்களையும் வழங்க வேண்டியது அரசின் கடமை என்று கூறியுள்ளது. மேலும் இது தொடர்பாக அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை 2 வாரங்களில் பிறப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

    • ரூ.11 லட்சம் மதிப்புள்ள பொருட்களையும், உபகரணங்களையும் ஐ.வி.டி.பி. நிறுவன தலைவரும், ராமன் மகசேசே விருது பெற்றவருமான குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்
    • விளையாட்டுகளிலும் முதன்மையான மாணவர்களாக திகழ்ந்து மேன்மேலும் வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும்

    கிருஷ்ணகிரி,

    மகளிரின் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்காக சுய உதவிக்குழுக்களை அமைத்து செயல்பட்டு வரும் ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனம் மூலம் ஏராளமான கல்வி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் கர்நாடக மாநிலம், பெலகோலா பகுதியில் உள்ள மான்போர்ட் செவித்திறன் குறைந்த மற்றும் பேசும் திறனற்ற குழந்தைகளுக்காக இயங்கி வரும் சிறப்பு பள்ளியில் 120-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகிறார்கள்.

    அவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்டும், அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் வகையில் ஐ.வி.டி.பி. நிறுவனம் அந்த பள்ளியில் படிக்க கூடிய 120 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள், சீருடைகள், படுக்கை விரிப்புகள், தலையணைகள், போர்வைகள், காலணிகள் மற்றும் சுகாதாரம் தொடர்பான பொருட்கள் என மொத்தம் ரூ.11 லட்சம் மதிப்புள்ள பொருட்களையும், உபகரணங்களையும் ஐ.வி.டி.பி. நிறுவன தலைவரும், ராமன் மகசேசே விருது பெற்றவருமான குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசும் போது இந்த கல்வி உபகரணங்களையும், அத்தியாவாசிய பொருட்களையும் மாண வர்களின் நலனுக்காகவும், அவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் ஐ.வி.டி.பி. நிறுவனம் வழங்கி உள்ளதாகவும், இதை நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியிலும், விளையாட்டுகளிலும் முதன்மையான மாணவர்களாக திகழ்ந்து மேன்மேலும வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

    • நோட்டுப் புத்தகம், திருக்குறள் புத்தகம் ஆகியவை வழங்கப்பட்டது.
    • தலைமை ஆசிரியர் ரத்தினவேல் தலைமை தாங்கினார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் சந்திரப்பட்டி பஞ்சாயத்து வேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இருளர் இன மாணவ ர்களுக்கு கல்வி உபகரண ங்கள் நோட்டுப் புத்தகம், திருக்குறள் புத்தகம் ஆகியவை வழங்கப்பட்டது.

    இவ்விழாவிற்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ரத்தினவேல் தலைமை தாங்கினார்.

    இதில் அண்ணாமலை, ராமு, கீதா, சத்தியவாணி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா, துணைத்தலைவி சரண்யா, இல்லம் தேடி கல்வி ஆசிரியர் சரண்யா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் பள்ளி ஆசிரியை நதியா நன்றி கூறினார்.

    • மின்வாரிய அதிகாரி வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் கந்திலி ஒன்றியம் நத்தம் ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் பி.அருணகிரி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜானகிராமன் அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக வெங்கடாஜலம் கலந்து கொண்டார். சி.செல்வராஜ், தமிழ்ஆசிரியர் கே.விமலா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மின்வாரிய பொறியாளர் எஸ்.பி. விஜயகுமார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினர்.

    நிகழ்ச்சியில் பொருளாளர் தேவராஜன், நிர்வாகச் செயலாளர்பி. சோமு, கே.எம்.சுப்பிரமணியம், கே.எம் டி.சுபாஷ்வக்கீல் ஆர். ஆர். மனோகரன், கலந்து கொண்டு பேசினார்கள் .

    நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இறுதியில் செயலாளர் பாரதி நன்றி கூறினார்.

    • எண்ணும் எழுத்தும் திட்டம் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • மாணவர்களுக்கு வண்ணக் கிரையான்களும், வண்ண பென்சில்களும் வழங்கப்பட்டன.

    உடுமலை : 

    எண்ணும் எழுத்தும் திட்டம் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிக்கொணரும் பொருட்டு வரைந்து வண்ணம் தீட்டுதலுக்காக வண்ண கிரையான்கள் மற்றும் வண்ண பென்சில்கள் வருடம் தோறும் அரசாங்கம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு வண்ணக் கிரையான்களும், வண்ண பென்சில்களும் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் சாவித்திரி ,ஆசிரியர் கண்ணபிரான் கலந்து கொண்டனர்.

    • உடுமலையில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
    • பாய், தலையணை, நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள் வழங்கப்பட்டது.

    உடுமலை :

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்எம்.பி.யின் மணிவிழா பிறந்தநாளையொட்டி உடுமலையில் மாணவர்களுக்கு பாய், தலையணை ,நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள், மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

    இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதீஸ்குமார் தலைமை தாங்கினார். மடத்துக்குளம் தொகுதி செயலாளர் பொன்ஈஸ்வரன்முன்னிலை வகித்தார்.கிருத்துவ சமூக நீதி பேரவையின் மாநில துணைச்செயலாளர் டேவிட் பால்,துப்புரவு பணியாளர்கள் மேம்பாட்டு மையம் மாநில துணைச்செயலாளர் விடுதலை மணி, கிருத்துவ சமூக நீதி பேரவையின் மாவட்ட அமைப்பாளர் இம்மானுவேல், அருண்குமார், கடத்தூர் முகாம் செயலாளர் சிவராமன்,கணியூர் முகாம் பொருளாளர் தங்கவேல் கலந்து கொண்டனர். முடிவில் விடுதி காப்பாளர் முருகேஸ்வரன் நன்றி தெரிவித்தார்.

    • குன்னூர் அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளி மாணவர்களை தேனி மேலப்பேட்டை இந்துநாடார்கள் உறவின்முறை நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரி தத்தெடுத்துள்ளது.
    • இங்கு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    தேனி:

    தேனி மாவட்டம் குன்னூர் அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளி மாணவர்களை தேனி மேலப்பேட்டை இந்துநாடார்கள் உறவின்முறை நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரி தத்தெடுத்துள்ளது. இங்கு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. உறவின்முறை தலைவர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார்.

    துணைத்தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் நிக்சன் அனைவரையும் வரவேற்றார். இதில் தத்தெடுக்கப்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    செயலாளர் குணசேகரன், இணைச்செயலாளர் மணிமாறன், கல்லூரி முதல்வர் பியூலாராஜினி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளி உதவி தலைைமஆசிரியர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    • கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சி.
    • 10ம் வகுப்பு படிக்கும் 100 குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு திருப்பூர் கே.வி.ஆர். நகர் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 100 குழந்தைகளுக்கு திருப்பூர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜ் கல்வி உபகரணங்களை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் ரமேஷ், பகுதி கழக துணை செயலாளர் பிரிண்டிங் ரமேஷ், 42 வது வட்ட பிரதிநிதிகள் செல்வக்குட்டி, காமாட்சி ,அவைத் தலைவர் மும்மூர்த்தி, துணை செயலாளர் பால்ராஜ், முனியாண்டி, ஓதியப்பன், இளைஞர் அணி நிர்வாகிகள் கார்த்திக் , சுஜீத்குமார், கணேசன், செல்லம்நகர் சிவா ,கே.வி.ஆர். நகர் லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    ×