என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய்"

    • காயிதே மில்லத் பெயரில் நூலக பணிகளை விரைந்து நடத்தி அதனை திறக்க வேண்டும்.
    • எங்களுடைய கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிப்போம்.

    நெல்லை வண்ணார்பேட்டை கொக்கிரகுளத்தில் உள்ள தனியார் மஹாலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பூத் கமிட்டி மாநாடு இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் பூத் கமிட்டி கட்டமைப்பை வலுப்படுத்த முயற்சி செய்து வருகிறோம். 2026 சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கணக்கை தொடங்குகிற விதத்தில் எங்கள் பணிகள் தொடங்கி இருக்கிறது. வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் சட்டசபையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள் குரல் எழுப்புவார்கள்.

    தாமிரபரணியை காக்க அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். ஆணயத்தை அமைக்க வேண்டும். பொருநை அருங்காட்சியகம் நெல்லைக்கு பெருமை. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திறந்து வைத்தார். அவருக்கு நன்றி, பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல காயிதே மில்லத் பெயரில் நூலக பணிகளை விரைந்து நடத்தி அதனை திறக்க வேண்டும்.

    எங்களுடைய கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிப்போம். தமிழகத்தில் முழுவதுமாக மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். நடிகர் விஜய்யின் தாக்கம் தேர்தல் முடிந்த பிறகு தான் தெரியும். அரசியல் பொதுவெளியில் செய்யக்கூடிய விஷயம். அதை வீட்டுக்குள் இருந்து கொண்டு செய்ய முடியாது. நடிகர் விஜய்க்கு கட்டுப்பாடுகள் விதிப்பது சரிதான்.

    பா.ஜ.கவால் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழகத்தில் வர முடியவில்லை என்ற காரணம் என்னவென்றால் மக்கள் அனைத்தும் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். மாநில பொதுக்குழுவைக் கூட்டி தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தப் புத்தாண்டு எப்படி இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்கள்.
    • பலர் தமிழக வெற்றிக்கழக கொடிகளோடு திரண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதையும் காண முடிந்தது.

    சென்னை மாநகரப் பகுதிகளில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களும், இளம் பெண்களும் புது வருடம் பிறந்தவுடன் மிகுந்த உற்சாகத்தோடு ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    இளம் பெண்களும், இளைஞர்களும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது அவர்களிடம் நள்ளிரவில் பத்திரிகையாளர்கள் இந்தப் புத்தாண்டு எப்படி இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்கள்.

     

    இதற்கு பதிலளித்த இளம்பெண்கள் பலர் புத்தாண்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வர வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஓட்டு போடுங்கள் என்று கூறினார்கள்.

    பலர் தமிழக வெற்றிக்கழக கொடிகளோடு திரண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதையும் காண முடிந்தது.

    • படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது.
    • ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.

    விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'ஜன நாயகன்' தான் விஜயின் கடைசி படம் என்று கூறப்படுவதால் இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அண்மையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது.

    இதனை தொடர்ந்து, ஆங்கில புத்தாண்டையொட்டி 'ஜன நாயகன்' படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள போஸ்டரில், 'நல்லா இருப்போம்... நல்லா இருப்போம்... எல்லோரும் நல்லா இருப்போம்...' என்று வரிகளுடன் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். 



    • இந்த 2026ஆம் ஆண்டு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் என்பதை மக்கள் நிரூபிக்கப் போவது நிச்சயம்.
    • வளமான, நலமான, பலமான தமிழகம் ஒளிரப் போகிறது.

    ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டு நிறைவடைந்து 2026-ம் ஆண்டு பிறந்துள்ளது.

    புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின. தலைநகர் டெல்லி முதல் சென்னை வரை கொண்டாட்டங்களில் மக்கள் மூழ்கினர்.

    புத்தாண்டையொட்டி இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகாலையில் இருந்து வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    மேலும், ஆங்கில புத்தாண்டையொட்டி மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

    தமிழக அரசியலின் நேர்மைமிகு நம்பிக்கை ஒளியாய், நாளைய தலைமுறைகளின் தலைசிறந்த வழியாய் நாமே மாறுவோம்.

    புதிதாகப் பிறக்கும் இந்த 2026ஆம் ஆண்டு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் என்பதை மக்கள் நிரூபிக்கப் போவது நிச்சயம்.

    வாகை சூடும் வரலாறு திரும்பப் போகிறது.

    வளமான, நலமான, பலமான தமிழகம் ஒளிரப் போகிறது.

    மக்களுடன் மக்களாக இணைந்து

    அதை நம் தமிழக வெற்றிக் கழகம்தான் நிகழ்த்திக் காட்டப் போகிறது.

    வெற்றிச் சரித்திரம் படைக்கப் போகும் அந்த உறுதியை மனதிலும் செயலிலும் ஏற்று

    இப்புத்தாண்டை வரவேற்போம்.

    அனைவருக்கும் ஒளிமிக்க ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். 



    • ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணி நிர்வாகிகளை விஜய் நியமனம் செய்தார்.
    • புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகள் என தெரிவித்தார்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகத்தில் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணி நிர்வாகிகளை அக்கட்சி தலைவர் விஜய் நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    தமிழக வெற்றிக் கழகத்தில் அணிகளின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணியில் பின்வரும் முறையில் நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.

    பொறுப்பாளர்:

    ராஜ்மோகன், துணைப் பொதுச் செயலாளர்

    ஒருங்கிணைப்பாளர்கள்:

    எஸ்.ரமேஷ், செங்கல்பட்டு

    ஜே.கேத்ரின் பாண்டியன், திருநெல்வேலி

    தேசியச் செய்தித் தொடர்பாளர்கள்:

    பெலிக்ஸ் ஜெரால்டு, சென்னை

    வழக்கறிஞர் எம்.சத்தியகுமார், சென்னை

    எம்.கே.தேன்மொழி பிரசன்னா, மதுரை

    மாநிலச் செய்தித் தொடர்பாளர்கள்:

    முகில் வீரப்பன் (எ) மு. சு.சிவகுமார். புதுக்கோட்டை

    அமலன் சாம்ராஜ் பிரபாகர், சென்னை

    க.சி.தி. அனந்தஜித் மகியா. திருவள்ளூர்

    மு. ஞான செல்வின் இன்பராஜ், செங்கல்பட்டு

    முகமது இப்ராஹிம், சென்னை

    ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல், சென்னை

    புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். கழகத்தின் ஆக்கப்பூர்வப் பணிகள் குறித்து. எனது உத்தரவு மற்றும் ஆலோசனையின்படியும் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வழிகாட்டுதலின்படியும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுடன் இணைந்து இந்தப் புதிய நிர்வாகிகள் பணிகளை மேற்கொள்வார்கள். கட்சியினர் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    பாலையா நடித்துள்ள பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்தான் ஜனநாயகன் என வதந்தி பரவி வருகிறது.

    பாலையா நடித்துள்ள பகவந்த் கேசரி-யின் தமிழ் ரீமேக்தான் ஜனநாயகன் என்று தகவல்கள் பரவி வருகின்றன. இது தொடர்பாக பகவந்த் கேசரி படத்தின் இயக்குநர் அனில் ரவிப்புடியிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ஜனநாயகன் விஜய் சார் படம் என்று இயக்குநர் கூறியிருக்கிறார். எனவே படம் வெளியாகும் வரை அப்படித் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    விஜய் சாருடைய கடைசிப் படத்தில் எனக்கு ஏதேனும் பங்கு இருக்கிறதா என்பது படம் திரைக்கு வந்த பின்புதான் தெரியும். வாரிசு படப்பிடிப்பு தளத்தில் விஜய் சாரை சந்தித்து பேசியிருக்கிறேன். அவர் ஒரு அற்புதமான மனிதர் என்று தெரிவித்துள்ளார்.

    ஜனவரி 2-ந்தேதி ஜனநாயகன்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது. அதன் மூலம் இந்த விவகாரம் முடிவுக்கு வரும் என தெரிகிறது. ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கவுதம் மேனன், பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜனநாயகன்'. கே.வி.என் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் அனிருத் இசையமைத்துள்ளார்.

    பகவந்த் கேசரியின் ரீமேக் என வதந்தி பரவி வரும் நிலையில் ஜனநாயகன் பட இயக்குநர் ஹெச். வினோத் கூறுகையில் "ஜனநாயகன் படத்திற்காக நாங்கள் 6 மாறுபட்ட வெர்சனில் கதை எழுதினோம். இந்த கதை முக்கியமாக விஜய், பாபி தியோல், மமிதா பைஜு ஆகியவரை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    படத்தை பார்த்த பின், இந்த படத்திற்கு ஏன் ஜனநாயகன் டைட்டில் வைக்கப்பட்டது என்பதை புரிந்து கொள்வீர்கள். விஜய் அரசியலுக்குள் நுழைந்ததில் இருந்து, கதையில் அரசியல் தொடர்பான தகவலை சேர்த்தேன். சற்று தயக்கத்துடன் தயாரிப்பாளரிடம் இந்த விசயத்தை சொன்னேன். ஆனால், அவர் மிகவும் சந்தோசம் அடைந்தார். அரசியல் தொடர்பான கருத்துகள் குறித்து உறுதியான சில ஆலோசனைகளும் வழங்கினார்.

    இது தளபதி படம். ரசிகர்கள் முதல் காட்சிக்காக காத்திருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். வரவிருக்கும் டீசர், டிரெய்லர், பாடல்கள் மற்றும் ஸ்கீரின் மூலம் படத்தின் அடையாளம் குறித்து வதந்திகளுக்கு விடை கிடைக்கும். அத்துடன மேற்கொண்டு தெளிவும் கிடைக்கும்" என்றார்.

    ஆனால், ரீமேக் குறித்து வதந்தி வருகிறதே, என்ற கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என நேரடியாக பதில் அளிக்கவில்லை.

    • கடைசி படம் என்று கூறப்படுவதால் இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
    • மலேசியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது.

    ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.

    விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'ஜன நாயகன்' தான் விஜயின் கடைசி படம் என்று கூறப்படுவதால் இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

    அண்மையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது.

    இந்நிலையில் இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஜீ 5 தொலைக்காட்சியில் வரும் ஜனவரி 4ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஏற்கனவே ஜனநாயகன் உடன் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் மோதுகிறது.

    ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'ஜன நாயகன்' தான் விஜயின் கடைசி படம் என்று கூறப்படுவதால் இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

    அண்மையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்து முடிந்தது. ஏற்கனவே ஜனநாயகன் உடன் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்த பராசக்தி படம் மோதுகிறது.

    இந்த சூழலில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மங்காத்தா படத்தை ஜனநாயகனுக்கு போட்டியாக ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்தின் 50வது படமான மங்காத்தா 2011 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் வீடியோவை வெளியிட்டுள்ள சன் பிக்சர்ஸ் stay tuned என தெரிவித்துள்ளது. இதனால் மங்காத்தா ஜனநாயகனுக்கு போட்டியாக ரீரிலீஸ் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

    இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். எனவே குட் பேட் அக்லிக்கு பின் வறட்சியில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு இது விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே அஜித்தின் அட்டகாசம் படம் அண்மையில் ரீ ரிலீஸ் ஆனது. அதேபோல அமர்க்களம் படமும் பிப்ரவரியில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை அரசு முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவில்லை.
    • தமிழகத்தில் இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டுசெல்லும் திட்டங்கள் இல்லை.

    தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

    சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரயிலில் இளைஞர்கள் சிலர், நேற்று மற்றொரு இளைஞரைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம், தமிழகம் எத்தகைய அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது என்ற அச்சத்தையும் அதிர்வலைகளையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.

    இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை அரசு முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவில்லை. இளைஞர்கள் எக்கேடும் கெட்டு வீணாய்ப் போனால் நமக்கென்ன என்ற ஆளும் அரசின் அலட்சியத்தையும் பொறுப்பின்மையையுமே இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.

    சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. தமிழகத்தில் இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டுசெல்லும் திட்டங்கள் இல்லை. இளைஞர்கள் நல்ல முறையில் கல்வி கற்க, ஏற்ற சூழல் இல்லை.

    தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் இல்லை. புத்தாக்கம் இல்லை. புதிய முயற்சிகளுக்கு ஊக்கம் இல்லை. இவை எவற்றையும் ஏற்படுத்திக் கொடுக்காமல், யாருக்காக இந்த ஆட்சியை நடத்துகிறீர்கள்? எஞ்சியிருக்கக் கூடிய ஆட்சிக் காலத்திலாவது போதைப் பொருட்கள் புழக்கத்தை முழுவதுமாகக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கபட நாடக அரசை வலியுறுத்துகிறேன்.

    • களத்தில் இல்லாதவர்களை பற்றி பேச மாட்டேன் என்ற விஜய்க்கு கடும் எச்சரிக்கை விடுத்த செல்லூர் ராஜூ.
    • நாங்கள் களத்தில் இருக்கிறோமா, இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

    மதுரை செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

    இங்கே இருக்கும் அதிகாரிகளுக்கு சொல்கிறேன், 2026-ல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனதும், தவறு செய்யும் அதிகாரிகள், அவர்கள் ஐஏஎஸ் ஆக இருந்தாலும் சரி, எந்த அதிகாரிகளாக இருந்தாலும் சரி சிறைச் சாலை செல்வது உறுதி.

    நாங்கள் களத்தில் இருக்கிறோமா, இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

    எழுதி வைத்து கொள்ளுங்கள், 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர்.

    நேற்று வந்த விஜய்க்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

    வடிவேலு, நயன்தாரா வந்தால்கூடதான் கூட்டம் கூடும். நடிகர் என்றால் கூட்டம் கூடதான செய்யும். அதற்காக எல்லோரும் எம்ஜிஆர் ஆக மாற முடியாது.

    அதிமுக களத்தில் இல்லை என பேச எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்.

    அதிமுக களத்தில் இல்லை என பேசுவது முட்டாள் தனமானது. விஜய் நாவை அடக்கி பேச வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் குவிந்ததால் மலேசியாவே குலுங்கியது.
    • ‘ஜன நாயகன்’ படம் வெளியாவதற்கு இன்னும் 11 நாட்களே உள்ளது.

    ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'ஜன நாயகன்' தான் விஜயின் கடைசி படம் என்று கூறப்படுவதால் இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

    இதனிடையே நேற்று முன்தினம் மலேசியாவில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது. உலகமெங்கும் இருந்து விஜயின் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் குவிந்ததால் மலேசியாவே குலுங்கியது.

    இந்த நிலையில், 'ஜன நாயகன்' படம் வெளியாவதற்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், கேரளாவில் 'ஜன நாயகன்' படத்தின் முதல் நாள் முதல் காட்சி காலை 6 மணிக்கு ஒளிப்பரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எஸ்.எஸ்.ஆர். எண்டர்டெயின்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கேரளாவில் 'ஜன நாயக'னின் முதல் நாள் முதல் காட்சியை அதிகாலை 4:00 மணிக்கு நடத்துவதற்கு நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டோம். ஆரம்பத்தில், அதிகாலை 4:00 மணி நிகழ்ச்சிக்கான அனுமதி தயாரிப்பாளரிடமிருந்து வழங்கப்பட்டது. இருப்பினும், தற்போதைய சூழ்நிலை மற்றும் தமிழ்நாட்டில் எழுந்த சில சிக்கல்கள் காரணமாக, அதிகாலை 4:00 மணி நிகழ்ச்சிக்கான அனுமதி வழங்கப்படவில்லை.

    எனவே, கேரளாவில் 'ஜன நாயக'னின் முதல் நாள் முதல் காலை 6:00 மணிக்கு ஒளிப்பரப்படும். அனைத்து கேரள தளபதி ரசிகர்களிடமும் நாங்கள் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது. 



    • த.வெ.க தலைவர் விஜய் வரலாற்று நாயகனாக தமிழகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
    • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை காணுவதைப் போல இன்று தமிழகத்தில் ஒரு மாற்றம் உருவாகி இருக்கிறது.

    கோவை:

    தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    த.வெ.க தலைவர் விஜய் ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக மலேசியா சென்றிருந்தார். அங்கு அவருக்கு கூடிய கூட்டத்தை பார்த்து அண்டை நாடுகளே வியந்து போய் இருக்கின்றன. அந்த அளவுக்கு அந்த நிகழ்ச்சியானது உலக நாடுகளை திரும்பி பார்க்கும் வகையில் நடந்துள்ளது.

    இதுவரை மலேசியாவில் பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள் தான் ரோடு ஷோ சென்றுள்ளனர். ஆனால் இந்த முறை இவருக்கு ரோடு ஷோ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    த.வெ.க தலைவர் விஜய் வரலாற்று நாயகனாக தமிழகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார். எதிர்கால தமிழகத்தை ஆள்வதற்கு அவருடைய தலைமை தான் தேவை என தமிழகத்தில் உள்ள பெண்கள், இளம் வயதினர் என அனைவரும் ஒருமனதாக குரல் கொடுக்கும் காட்சியை நாம் பார்த்து வருகிறோம்.

    நான் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது அங்கு ஆர்ப்பரித்து வரக்கூடிய கூட்டத்தை பார்க்கும் போது 1972-ம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் 88-ம் ஆண்டில் ஜெயலலிதா ஆகியோருக்கு திரண்ட கூட்டத்தை போன்று தற்போது தமிழகத்தில் விஜய்க்கு கூட்டம் வருவதை பார்க்க முடிகிறது.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை காணுவதைப் போல இன்று தமிழகத்தில் ஒரு மாற்றம் உருவாகி இருக்கிறது. இந்த மாற்றமானது எதிர்காலத்தில் தமிழகத்தின் வரலாற்றில், விஜய் தமிழ்நாட்டு முதலமைச்சராக அமர்வதை மக்கள் சக்தியோடு இணைந்து அந்த பணியை நிறைவேற்றுவோம்.

    த.வெ.கவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பல இடங்களில் கருத்துக்களை பரிமாறி வருகிறார்கள். இதுவரையிலும் அந்த கருத்துக்கள் என்னை போன்றவர்களின் கவனத்துக்கு வரவில்லை. கவனத்திற்கு வந்தால் தான் அதற்கு பதில் அளிக்க முடியும்.

    ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு கருத்துக்களை சொல்வர். பொதுவாக ஒரு புதிய இயக்கம் தொடங்கி இருக்கிறது. ஒரு வரலாறு படைக்கிற இயக்கம். எது வேண்டுமானாலும் மக்கள் கோரிக்கை வைக்கும் போது அந்த கோரிக்கைக்கு ஏற்ப எப்படி நாம் நிறைவேற்ற வேண்டும் என்பதை ஆராய்ந்து அந்த பணிகளை மேற்கொள்வோம்.

    எங்களை பொறுத்தவரை தெளிவாக இருக்கிறோம். த.வெ.க தலைவரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்பவர்களுடன் தான் கூட்டணி இணைய முடியும் என தெளிவாக சொல்லிவிட்டோம்.

    த.வெ.க., பா.ஜ.க மீது எந்த விமர்சனமும் வைக்கவில்லை என்ற திருமாவளவனின் கருத்து வேறு. இதே தி.மு.க வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்தபோது என்ன செய்தார் என்பதை திருமாவளவன் தான் விளக்க வேண்டும்.

    எங்கள் தலைவர் ஈரோடு பொதுக்கூட்டத்தில் பேசும் போது 2 கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த மக்களும் அதற்கு கரகோஷம் அளித்தனர். கொள்கை ரீதியாக நாங்கள் எதிர்க்கிறோம். யாரை அப்படின்னு அவர் கேட்டபோது மக்கள் சொன்னார்கள். மக்கள் உணர்வை தான் அவர் பிரதிபலிக்கிறார். எல்லோருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்.

    த.வெ.கவில் எந்தெந்த தலைவர்கள் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். ஜனவரி முதல் வாரத்துக்குள் அத்தனையும் உங்களுக்கு தெரியும் என்றார். 

    ×