search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊரக வளர்ச்சி"

    • விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
    • வெகுஜன ஊடக பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டப்பிரிவில் ஊரக பகுதிகளில் சுகாதா ரம், திட, திரவக்கழிவு மேலாண்மை பணிகள் மற்றும் தகவல், கல்வி, தொடர்பு பணிகளை மேற்கொள்ள புறச்சேவை நிறுவனம் மூலம் ஒப்பந்த முறையில் பணிபுரிய தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து மாவட்ட திட்ட மேலாண்மை அலகிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதாரத்தில் 2 பணியிடங்களும், திரவக்கழிவு மேலாண்மை ஒரு பணியிடமும் உள்ளன. இளங்கலை சுற்றுச்சூழல் பொறியியல் அல்லது இளங்கலை கட்டிட பொறி யாளர் விண்ணப்பிக்கலாம்.

    தகவல், கல்வி தொடர்பு குழு 2 பணியிடங்கள் உள்ளன. கல்வி தகுதி வெகுஜன தொடர்பு, வெகுஜன ஊடக பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

    விண்ணப்பிக்க நாளை (18-ந்தேதி) கடைசி நாள் ஆகும். நேர்முக தேர்வு அக்டோபர் 25-ந்தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும். விண்ணப்பங்களை திட்ட இயக்குநர், மாவட்ட திட்ட மேலாண்மை அலகு, தூய்மை பாரதம் இயக்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நாகர்கோவில்-1 என்ற முகவரியில் அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு drdakkmspare@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளதால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் கூறினர்.
    • அரசின் சார்பில் வீடுகட்டும் பணிகள், சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தேர்வுநிலை, சிறப்பு நிலை உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் ஊராட்சி செயலர்களுக்கு வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், 100 நாள் திட்ட கணினி உதவியாளர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும், மக்கள் தொகை அடிப்படையில் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை பிரிக்க வேண்டும், அனைத்து நிலை பதவி உயர்வுகளையும், உரிய காலத்தில் வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த போராட்டத்தின் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, சென்னிமலை, பெருந்துறை, பவானி, அம்மாபேட்டை, அந்தியூர், டி.என்.பாளையம், பவானிசாகர், தாளவாடி, சத்தியமங்கலம், நம்பியூர், கோபி உள்ளிட்ட 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளிட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலக ஊழி யர்கள் மற்றும் ஊராட்சி உதவியாளர்கள் என 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளதால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் கூறினர்.

    இது குறித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில துணை தலைவர் பாஸ்கர் பாபு கூறியதாவது:-

    16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நாளை அனைத்து வட்டாரங்களிலும் ஆர்பாட்டம் நடத்தப்படுகிறது. 19-ம் தேதி மறியல் போராட்டம், 22-ம் தேதி சென்னை ஊரக வளர்ச்சிதுறை இயக்குநர் அலுவலகம் முற்றுகை போன்ற போராட்டங்கள் நடத்தப்படும். ஊரக வளர்ச்சிதுறை போராட்டம் காரணமாக ஊராட்சி பகுதிகளில் குடிநீர், 100 நாள் திட்டப் பணிகள், அரசின் சார்பில் வீடுகட்டும் பணிகள், சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி யூனியன் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மதிய உணவு இடைவேளையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் நரிக்குடி ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜசேகர், வாசுகி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    திருச்சுழியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க செயலாளர் ராஜசேகரன்,சத்துணவு சங்க கிளை செயலாளர் கோவிந்தன்,துணை தலைவர் அர்ச்சுனன்,மாவட்ட இணை செயலாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி நடைபயணம் தொடங்குகிறது.
    • சி.பி.எஸ். இயக்கத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ஊரக வளர்ச்சி துறை விஜயகுமார் கூறி உள்ளார்.

    ராமநாதபுரம்

    சி.பி.எஸ்.இயக்கத்தின் மாநில இணை ஒருங்கி ணைப்பாளர் ஊரக வளர்ச்சி துறை விஜயகுமார் கூறியதாவது:-

    தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்கள், சீருடைப் பணியாளர்களுக்கு 1.4.2003 முதல் புதிய ஓய்வூதியத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இதுவரை சுமார் 6 லட்சம் ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    மாதாந்திர ஓய்வூதியம் உள்ளிட்ட ஓய்வு கால பலன்கள் இந்த திட்டத்தில் இல்லாததால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் இயக்கங்கள் பல கட்ட போராட்டங்கள் மூலமாக தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி வந்தது.

    அதன் அடிப்படையில் 2016, 2021 சட்டமன்றத் தேர்தல்களில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவி த்தார்.

    பங்களிப்பு ஓய்வூதியச் சட்டத்தின்படி ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்துடன் புரிந்து ணர்வு ஒப்பந்தம் மாநில அரசுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிலையில் இன்று வரை தமிழக அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

    மேலும், இந்த திட்டத்தில் சேருவது மாநில அரசுகளின் விருப்புரிமையைப் பொறுத்தது. வாக்குறுதி வழங்காத ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் மாநில முதலமைச்சர்கள் மாநில அரசு ஊழியர்களுக்கு கேடு விளைவிக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து அந்தந்த மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு கால வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து உள்ளனர்.

    இவர்களைத் தொடர்ந்து பஞ்சாப் மாநில முதல்வரும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துள்ளார். புதிய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய போதிலும் மத்திய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கும், பணியின் போது இறந்தவர்களுக்கும் பணிக்கொடை வழங்கி உள்ளனர்.

    ஆனால் தமிழகத்தில் அவ்வாறு பணிக் கொடையும் வழங்கவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில் பல கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளோம். தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி நீதி கேட்டு 3 நாட்கள் நடை பயணம் மேற்கொள்கிறோம்.

    இதில் 100-க்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருமருகல் ஒன்றியத்தில் 209 கிராமங்களில் தினசரி குடிநீர் வழங்கப்படுவதில்லை.
    • ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் இடிக்கப்பட்ட பழுதடைந்த கட்டடங்களை விரைந்து கட்டவேண்டும்.

    நாகப்பட்டினம்:

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில், நாகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    அதில் எம்.எல்.ஏ ஷா நவாஸ் பேசியதாவது,

    அமைச்சர் அடுத்த முறை நாகப்பட்டினம் வரும்போது நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் மற்றும் நாகை ஒன்றியத்தில் ஆய்வு செய்ய வேண்டும். திருமருகல் ஒன்றியத்தில் 209 கிராமங்களில் தினசரி குடிநீர் வழங்கப்படுவதில்லை. ஒருநாள் விட்டு ஒருநாள் தான் குடிநீர் கிடைக்கிறது. குடிநீருக்காக மக்கள் போராட்டம் நடத்த வேண்டிய நிலை உள்ளது. பொதுவாகவே, குடிநீர் வசதி, சாலை வசதி, இருப்பிட வசதி போன்ற அடிப்படை தேவைகளுக்காக மக்களை போராடும் நிலைக்கு தள்ளக்கூடாது. அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

    ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் இடிக்கப்பட்ட பழுதடைந்த கட்டடங்களை விரைந்து கட்டவேண்டும். குளங்களுக்குசுற்றுச்சுவர் அமைத்து நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்.100 நாள் வேலைதிட்டம் முறையாக செயல்படு த்தப்பட வேண்டும். நாகப்ப ட்டினம் பேரிடர்களால் பாதிக்கப்படும் பகுதி என்பதால், அதுபோன்ற காலங்களில் மக்களுக்கு மீட்பு மையங்களாக சமுதாயக் கூடங்கள் தான் பெரிதும் பயன்படுகின்றன. எனவே சமுதாயக் கூடங்கள் அதிகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வேண்டும்.

    குப்பைகள் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது. திடக்கழிவு மேலாண்மை முறையாக செய்யப்பட வேண்டும்.திட்டங்களுக்கு நிதி ஒதுக்க ப்பட்டவுடன் அவற்றை காலதாமதம் இன்றி நிறைவேற்ற அதிகாரிகள் முனைப்பு காட்ட வேண்டும். இவ்வாறு பேசினார்.

    ஆய்வுக் கூட்டத்தில், அரசு முதன்மைச் செயலர் பெ.அமுதா, தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மேலாண்மை இயக்குநர் எஸ்.திவ்யதர்ஷிணி கலெக்டர் அருண்தம்புராஜ், மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன், தாட்கோ தலைவர் உ.மதிவாணன், நாகை மாலி எம்.எல்.ஏ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    • ரங்கப்பனூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
    • ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளி கட்டிடம், அங்கன்வாடி பள்ளி கட்டிடம் பழுதடைந்ததையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே ரங்கப்பனூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் ரெத்தின மாலா கணக்குகளை ஆய்வு செய்தார். தற்பொழுது நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை மேல் தேக்க தொட்டி, மற்றும் ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளி கட்டிடம், அங்கன்வாடி பள்ளி கட்டிடம் பழுதடைந்ததையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக சரி செய்கிறோம் என்று உறுதி அளித்தனர். இந்த ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜன், துணை தலைவர் ராதிகா பாஸ்கரன், ஊராட்சி செயலர் திருமால்வளவன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ×