

திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி யூனியன் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மதிய உணவு இடைவேளையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் நரிக்குடி ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜசேகர், வாசுகி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சுழியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க செயலாளர் ராஜசேகரன்,சத்துணவு சங்க கிளை செயலாளர் கோவிந்தன்,துணை தலைவர் அர்ச்சுனன்,மாவட்ட இணை செயலாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.