search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல் கருகி பலி"

    • தீ எதிர்பாராத விதமாக இந்துமதி சேலை மீது பட்டு வேதனையால் அவர் அலறினார்.
    • வயிறு, முதுகு ஆகிய பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டு இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் ஆர்.என்.புதூர் அமராவதி நகர், மகாத்மா டெக்ஸ் தெருவை சேர்ந்தவர் இந்துமதி (24). இவரது கணவர் முருகேசன். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். முருகேசன் கட்டிட கூலி தொழிலாளி.

    இந்நிலையில் சம்பவ த்தன்று மதியம் 12 மணி அளவில் இந்துமதி வீட்டில் சமைப்பதற்காக மண்ணெ ண்ணைய் ஸ்டவ்வை பற்ற வைத்த போது ஸ்டவ்வில் இருந்து தீ எதிர்பாராத விதமாக இந்துமதி சேலை மீது பட்டு வேதனையால் அவர் அலறினார்.

    அருகில் இருந்தவர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் இந்துமதியை சிகிச்சை க்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். 2 கை, வயிறு, முதுகு ஆகிய பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டு இருந்தது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக நசியனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்துமதி அனுமதிக்கப்ப ட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த இந்துமதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்து ஏற்பட்டு தீ மளமளவென பிடித்துள்ளது.
    • மூதாட்டி தங்காள் தீ விபத்தில் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சிகோவில், கவுண்ட ன்பாளையம் சக்தி நகர் காலனியை சேர்ந்தவர் குண சேகரன். இவர் பெருந்துறை யில் உள்ள சிப்காட் நிர்வாகத்தில் சி.சி.டி.வி. கேமிரா ஆப்பரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது தாய் தங்காள் (60). மகனுடன் வசித்து வந்தார்.

    கடந்த ஒரு வருடமாக தங்காள் உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக கிடந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குணசேகரன் தனது மனைவியுடன் வெள்ள கோவிலில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டில் மூதாட்டி தங்காள் மட்டும் இருந்துள்ளார்.

    பின்னர் திடீரென மூதாட்டி வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறுவதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மூதாட்டி தங்கிருந்த வீடு குடிசை வீடாகும். இதனால் விபத்து ஏற்பட்டு தீ மளமளவென பிடித்துள்ளது. மூதாட்டியால் எழுந்திருக்க முடியாததால் அவரும் தீ விபத்தில் சிக்கிக்கொண்டார்.

    உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து உள்ளே சென்று பார்த்த போது மூதாட்டி தங்காள் தீ விபத்தில் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி மூதாட்டி தங்காள் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து காஞ்சி கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் தீப்பிடித்து சங்கமேஸ்வரன் உடல் கருகினார்.
    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அணைத்தனர்.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அருகேஉள்ஓடத்துறை நரிக்காடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சங்கமேஸ்வரன் (82). ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரி. இவரது மனைவி சரஸ்வதி (66).

    இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு சங்கமேஸ்வரன் ஓட்டு வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். மற்றவர்கள் அருகில் இருந்த மற்றொரு வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர்.

    அப்போது ஓட்டு வீட்டில் தீப்பிடித்து சங்கமேஸ்வரன் உடல் கருகினார். இதுப்பற்றி தெரியவந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அணைத்தனர்.

    அப்போது வீட்டில் உடல் கருகி இறந்த நிலையில் சங்கமேஸ்வரன் மீட்கப்பட்டார்.

    • சேலம் பழைய சூரமங்கலம் அடுத்த போடிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ராஜகோபால் மனைவி பத்மாவதி.
    • அங்கு 2 நாட்கள் பணிபுரிந்த நிலையில், ரியாத் பகுதியில் நேர்ந்த திடீர் தீ விபத்தில் எனது மகன் உட்பட இந்தியாவை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.

    சேலம்:

    சேலம் பழைய சூரமங்கலம் அடுத்த போடிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ராஜகோபால் மனைவி பத்மாவதி. இவர் இன்று தனது உறவினர்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, அதிகாரிகளிடம் மனு ஒன்றை அளித்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, எனது மகன் சீதாராமன், சவுதி அரேபியாவில் ரியாத் என்ற பகுதிக்கு பெட்ரோல் என்ஜினீயர் பணிக்காக, கடந்த திங்கட்கிழமை சேலத்தில் இருந்து மும்பை வழியாக சவுதி அரேபியாவிற்கு சென்றார்.

    அங்கு 2 நாட்கள் பணிபுரிந்த நிலையில், ரியாத் பகுதியில் நேர்ந்த திடீர் தீ விபத்தில் எனது மகன் உட்பட இந்தியாவை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். அதில் எனது மகன் உட்பட 2 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.

    மகன் சவுதி அரேபியாவுக்கு சென்று ஒரு வாரத்திற்குள்ளே தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த தகவல் நேற்று தான் எங்களுக்கு தெரியவந்தது.

    எனது மகன் உடல் எப்போது தமிழ்நாட்டிற்கு வரும் என்று தெரியவில்லை. எனவே மாவட்ட கலெகடர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, எனது மகனின் உடலை மீட்டு தர வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    • எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீ பட்டு உடல் முழுவதும் பரவத் தொடங்கியது
    • சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த காளிங்க ராயன் பாளையம், கவுந்த ப்பாடி ரோடு பாரதிநகரை சேர்ந்தவர் அன்னை பவானி (64). மகளுடன் வசித்து வருகிறார்.

    மகள் வீட்டின் மேல் தளத்திலும் அன்னை பவானி கீழ்த ளத்தில் வசித்து வந்தார். அன்னை பவானியின் கணவர் பூபதி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். கணவரின் புகைப்படத்திற்கு தினமும் அன்னைபவானி விளக்கேற்றி பூ வைத்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்த ன்றும் வழக்கம் போல் காலை அன்னை பவானி கணவரின் புகைப்படத்திற்கு விளக்கு ஏற்றி பூ வைத்து வழிபட்டார்.

    விளக்கேற்றி விட்டு பூ போட்டு கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீ பட்டு உடல் முழுவதும் பரவத் தொடங்கியது. வேதனையால் அன்னை பவானி அலறினார்.

    அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஊற்றி தீயை அனைத்தனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக பவானியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அன்னை பவானி சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • தனம்மாள் வயது முதிர்வு காரணமாக நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக உள்ளார்.
    • மூதாட்டி தனம்மாள் சம்பவஇடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

    கோவை,

    கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள மீனாட்சி நகரை சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மனைவி தனம்மாள் (வயது 75).

    இவர் வயது முதிர்வு காரணமாக நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக உள்ளார். தனம்மாளை அவரது மகள் ஜெயசித்ரா என்பவர் கவனித்து வந்தார்.மூதாட்டிக்கு கொசு கடிக்காமல் இருக்க அவரது படுக்கைக்கு அருகில் கொசு வர்த்தியை பற்றி வைப்பது வழக்கம். சம்பவத்தன்று இரவு ெஜயசித்ரா தனது தாயின் படுக்கைக்கு அருகே கொசு வர்த்தியை பற்ற வைத்து விட்டு சென்றார். நள்ளிரவு தனம்மாள் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தார். அப்போது கொசு வர்த்தி சுருள் படுக்கையின் மீது விழுந்தது.

    கண்இமைக்கும் நேரத்தில் படுக்கையில் தீ பிடித்து படுத்த படுக்கையாக இருந்த மூதாட்டி மீதும் தீ பரவியது. இதில் உடல் கருகிய மூதாட்டி தனம்மாள் சம்பவஇடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

    இதனை பார்த்து அவரது மகள் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடல் கருகி இறந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • சகுந்தலா வீட்டின் பின்புறம் குளிப்பதற்காக விறகு அடுப்பை பற்ற வைத்து தண்ணீரை காய வைத்து கொண்டு இருந்தார்.
    • அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீ பற்றி கொண்டது.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பா ளையம் வடக்கு சின்ன மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி சகுந்தலா (வயது 85). கோவிந்தசாமி ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகன், 5 மகள்கள் உள்ளனர். மகன் வீட்டில் சகுந்தலா வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று மதியம் சகுந்தலா வீட்டின் பின்புறம் குளிப்பதற்காக விறகு அடுப்பை பற்ற வைத்து தண்ணீரை காய வைத்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீ பற்றி கொண்டது.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது உறவின ர்கள், அக்கம் பக்கத்தினர் தீயை அனைத்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சகுந்தலாவை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் சகுந்தலா பரிதாபமாக இறந்தார். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சமையல் செய்வதற்காக ஸ்டவ்வை பற்ற வைத்தபோது எதிர்பாராத விதமாக மண்எண்ணை சுடிதாரில் பட்டு தீப்பிடித்தது.
    • சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சித்தோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் வாய்க்கால் மேடு எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் சந்திரன் (52). தறிப்பட்டறை தொழிலாளி. இவரது மூத்த மகள் சரண்யா (32). கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சரண்யா, ரவி என்பவரை திருமணம் செய்து கொண்டு பெரியசேமூர் அடுத்த மாயாபுரம் ராஜீவ் நகரில் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று மாலை ரவி வீட்டில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். சரண்யா சமையல் செய்வதற்காக ஸ்டவ்வை பற்ற வைத்தபோது எதிர்பாராத விதமாக மண்எண்ணை அவரது சுடிதாரில் பட்டு தீப்பிடித்து கொண்டது. இதனால் வலி தாங்காமல் சரண்யா அலறினார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு ரவி எழுந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார்.

    பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தகவல் தெரிவித்து சரண்யாவை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி சரண்யா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×