search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீ விபத்தில் மூதாட்டி உடல் கருகி பலி
    X

    தீ விபத்தில் மூதாட்டி உடல் கருகி பலி

    • விபத்து ஏற்பட்டு தீ மளமளவென பிடித்துள்ளது.
    • மூதாட்டி தங்காள் தீ விபத்தில் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சிகோவில், கவுண்ட ன்பாளையம் சக்தி நகர் காலனியை சேர்ந்தவர் குண சேகரன். இவர் பெருந்துறை யில் உள்ள சிப்காட் நிர்வாகத்தில் சி.சி.டி.வி. கேமிரா ஆப்பரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது தாய் தங்காள் (60). மகனுடன் வசித்து வந்தார்.

    கடந்த ஒரு வருடமாக தங்காள் உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக கிடந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று குணசேகரன் தனது மனைவியுடன் வெள்ள கோவிலில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டில் மூதாட்டி தங்காள் மட்டும் இருந்துள்ளார்.

    பின்னர் திடீரென மூதாட்டி வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறுவதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மூதாட்டி தங்கிருந்த வீடு குடிசை வீடாகும். இதனால் விபத்து ஏற்பட்டு தீ மளமளவென பிடித்துள்ளது. மூதாட்டியால் எழுந்திருக்க முடியாததால் அவரும் தீ விபத்தில் சிக்கிக்கொண்டார்.

    உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து உள்ளே சென்று பார்த்த போது மூதாட்டி தங்காள் தீ விபத்தில் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி மூதாட்டி தங்காள் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து காஞ்சி கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×