search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teen burns"

    • சமையல் செய்வதற்காக ஸ்டவ்வை பற்ற வைத்தபோது எதிர்பாராத விதமாக மண்எண்ணை சுடிதாரில் பட்டு தீப்பிடித்தது.
    • சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சித்தோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் வாய்க்கால் மேடு எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் சந்திரன் (52). தறிப்பட்டறை தொழிலாளி. இவரது மூத்த மகள் சரண்யா (32). கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சரண்யா, ரவி என்பவரை திருமணம் செய்து கொண்டு பெரியசேமூர் அடுத்த மாயாபுரம் ராஜீவ் நகரில் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று மாலை ரவி வீட்டில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். சரண்யா சமையல் செய்வதற்காக ஸ்டவ்வை பற்ற வைத்தபோது எதிர்பாராத விதமாக மண்எண்ணை அவரது சுடிதாரில் பட்டு தீப்பிடித்து கொண்டது. இதனால் வலி தாங்காமல் சரண்யா அலறினார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு ரவி எழுந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார்.

    பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தகவல் தெரிவித்து சரண்யாவை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி சரண்யா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×