search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்திரேலிய அணி"

    உலக கோப்பையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெல்லும் என்று அந்த அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே நம்பிக்கை தெரிவித்தார்.
    லண்டன்:

    உலக கோப்பை போட்டி குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கடந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்படாததால் உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி சோபிக்காது என்று பலரும் எழுதுகிறார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலிய அணி நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி வருகிறது. முந்தைய கால ஆஸ்திரேலிய அணியை போல் எந்த இடத்திலும், எந்த அணியையும் வெல்லும் அளவுக்கு முன்னேற்றம் கண்டு இருக்கிறது.

    இந்த உலக கோப்பை போட்டியை இந்தியா, இங்கிலாந்து அணிகள் வெல்ல வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் ஒரு நாள் போட்டியில் அவர்கள் சமீபகாலங்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். கடந்த கால வரலாறுகளை புரட்டி பார்த்தால் உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி எவ்வளவு சிறப்பாக விளையாடி இருக்கிறது என்பது தெரியும். ஆஸ்திரேலிய அணி கடந்த உலக கோப்பையை வென்றது. கடைசி 6 உலக கோப்பை போட்டிகளில் 4-ல் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த உலக கோப்பை போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி நிச்சயம் பட்டம் வெல்லும் என்று நான் நம்புகிறேன்.

    இவ்வாறு ஷேன் வார்னே கூறினார்.

    ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய வீரர்கள் தேர்வு மும்பையில் நாளை நடக்கிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு கூடி வீரர்களை தேர்வு செய்கிறது. #AustraliaSeries #indiateam #viratkohli

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இந்த சுற்றுப்பயணம் வெற்றி கரமாக அமைந்தது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கிலும் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி புதிய சாதனை படைத்தது. 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

    நியூசிலாந்து பயணத்தில் ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் முதல் முறையாக வென்றது. 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.

    இதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்து இரண்டு 20 ஓவர் போட்டி, மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    20 ஓவர் ஆட்டம் வருகிற 24 மற்றும் 27-ந்தேதிகளில் விசாகப்பட்டினம், பெங்களூரில் நடக்கிறது. ஒருநாள் போட்டிகள் மார்ச் 2, 5, 8, 10 மற்றும் 13-ந்தேதிகளில் ஐதராபாத், நாக்பூர், ராஞ்சி, மொகாலி, டெல்லி ஆகிய இடங்களில் முறையே நடக்கிறது.

    ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய வீரர்கள் தேர்வு மும்பையில் நாளை நடக்கிறது. எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு கூடி வீரர்களை தேர்வு செய்கிறது.

    இந்த தொடரில் முன்னணி வீரர்கள் பலருக்கு ஓய்வு கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது. துணை கேப்டன் ரோகித்சர்மா தொடர்ந்து விளையாடி வருவதால் 20 ஓவர் போட்டியில் ஓய்வு அளிக்கப்படலாம்.


    இதேபோல தவானுக்கும், சில ஆட்டங்களில் ஓய்வு கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இடத்தில் கே.எல்.ராகுல், ரகானேக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

    நியூசிலாந்து பயணத்தில் பாதியில் ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் வீராட்கோலி அணிக்கு மீண்டும் திரும்புவார். 2-வது விக்கெட் கீப்பரை தேர்வு செய்வதில் ரி‌ஷப் பண்ட்டுக்கும், தினேஷ் கார்த்திக்குக்கு இடையே போட்டி நிலவுகிறது. ரி‌ஷப் பாண்ட்டுக்கு அதிக வாய்ப்பு உள்ளது.

    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடரில் விளையாடாத பும்ரா அணிக்கு மீண்டும் திரும்புகிறார். வேகப்பந்து வீரர்களும், சுழற்பந்து வீரர்களும் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். #AustraliaSeries #indiateam #viratkohli

    ஆஸ்திரேலிய அணி மீண்டும் உலக கோப்பையை வெல்லும் என்று முன்னாள் கேப்டனும், உதவி பயிற்சியாளருமான ரிக்கிபாண்டிங் கூறியுள்ளார். #RickyPonting
    சிட்னி:

    10 அணிகள் பங்கேற்கும் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை வலுப்படுத்தும் விதமாக அந்த அணியின் உதவி பயிற்சியாளராக ரிக்கிபாண்டிங் நியமிக்கப்பட்டு இருக்கிறார். ரிக்கிபாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 2003 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் உலக கோப்பையை வென்று இருந்தது.

    இந்த நிலையில் ரிக்கிபாண்டிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கடந்த முறை நாங்கள் உலக கோப்பையை வென்றோம். இந்த முறையும் எங்களால் உலக கோப்பையை நிச்சயம் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன். தற்சமயம் உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இந்தியாவும், இங்கிலாந்தும் முன்னணியில் இருக்கின்றன. ஆனால் ஸ்டீவன் சுமித்தும், டேவிட் வார்னரும் திரும்பியதும், எங்கள் அணியும் பலம் வாய்ந்ததாக உருவெடுத்து விடும். சுமித்தும், வார்னரும் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள். அனுபவசாலிகள். நெருக்கடியான சூழலை திறம்பட கையாளக்கூடியவர்கள். அவர்கள் வந்ததும் உடனடியாக எங்கள் அணியை பார்க்க வலுமிக்கதாக தெரிய தொடங்கி விடும்.

    உலக கோப்பை போட்டி நடக்கும் இங்கிலாந்தில் உள்ள சீதோஷ்ண நிலை, எங்களது ஆட்ட பாணிக்கு சாதகமானது. அதனால் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள பிரதான அணிகளில் ஒன்றாக ஆஸ்திரேலியாவும் இருக்கும்.

    வேகப்பந்து வீச்சாளர்கள் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் காயத்தால் அவதிப்படுவது குறித்து கேட்கிறீர்கள். பொதுவாக, அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு தங்களை எப்படி தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தெரியும். அதனால் அதுபற்றி எங்களுக்கு அதிகமாக கவலையில்லை. எங்களது கவலை சுமித், வார்னர், ஹேசில்வுட், ஸ்டார்க் ஆகிய வீரர்களை அணிக்குள் கொண்டு வந்து ஒருங்கிணைப்பதில் தான் இருக்கிறது. திட்டமிட்டப்படி எல்லாமே சரியாக அமைந்து விட்டால் எங்கள் அணி சவால்மிக்க அணியாக விளங்கும்.

    இவ்வாறு பாண்டிங் கூறினார். #RickyPonting

    ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் கூறியுள்ளார். #AUSvIND #SteveWaugh

    சிட்னி:

    வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 6-ந்தேதி அடிலெய்டுவில் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. இந்த முறையாவது தொடரை வெல்லுமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இதனால் இந்த டெஸ்ட் தொடர் மீது அதிக எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இரு நாட்டு முன்னாள் வீரர்களும் இந்த டெஸ்ட் போட்டித் தொடர் குறித்து தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் கணித்துள்ளார். இது தொடர்பாக இணைய தளத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    ஆஸ்திரேலிய தொடருக்காக இந்திய அணி தன்னை நல்ல முறையில் தயார் படுத்தி உள்ளது. இதனால் இந்திய அணிக்கு கனிசமான வாய்ப்பு இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடர் உண்மையிலேயே மிகுந்த பரபரப்புடன் இருக்கும் என்று நினைக்கிறேன்.

    விராட்கோலி மிக சிறந்த பேட்ஸ்மேன். தெண்டுல்கர், லாராவை போன்று அவரும் மிகப் பெரிய வீரர்.


    இந்த டெஸ்ட் தொடரில் யார் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    இவ்வாறு ஸ்டீவ்வாக் கூறியுள்ளார்.

    ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் கூறியதாவது:-

    விராட்கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. இதனால் இந்தியா மிகப் பெரிய ஸ்கோரை குவிக்கும். ஆஸ்திரேலிய பேட்டிங்குக்கு சவால் விடும் வகையில் இருக்கும்.

    அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு நன்றாக இருக்கிறது. கும்மின்ஸ், ஸ்டார்க், ஹாசல வுட் ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்த கூடியவர்கள். அவர்கள் திறமை வாய்ந்த வேகப்பந்து வீரர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீரர் லாசன் கூறும் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு நன்றாக இருக்கிறது. 3 வேகப்பந்து வீரர்கள், ஒன்று அல்லது 2 சுழற்பந்து வீரர்களுடன் இந்திய அணி களம் இறங்கும் என்றார். #AUSvIND #SteveWaugh

    ஆக்ரோஷமாக ஆடுவதை கைவிட்டால் ஒரு ஆட்டத்தில் கூட ஆஸ்திரேலிய அணியால் வெற்றி பெற முடியாது என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். #MichaelClarke #AUSvIND
    அடிலெய்டு:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி தற்போது தடையை அனுபவித்து வருகிறார்கள். இந்த சம்பவத்துக்கு பிறகு ஆஸ்திரேலிய வீரர்களின் அணுகுமுறையில் நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. மைதானத்திலும், வெளியிலும் கட்டுக்கோப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர்.

    வழக்கமாக ஆஸ்திரேலிய அணியினர், எதிரணியுடன் வார்த்தை போரில் ஈடுபட்டு சீண்டுவது உண்டு. இதனால் எதிரணி வீரர்கள் கோபத்தில் தவறு செய்வார்கள், அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது அவர்களது யுக்திகளில் ஒன்றாகும். ஆனால் தற்போது அவர்கள் சற்று சாந்தமாக ஆடுவது போல் தோன்றுகிறது. இது ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கை எரிச்சலூட்டியுள்ளது.

    இது தொடர்பாக கிளார்க் நேற்று அளித்த பேட்டியில் ‘மற்றவர்கள் நம்மை விரும்புவார்களா? இல்லையா? என்ற கவலையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் விட்டுவிட வேண்டும். மாறாக மதிக்கத்தக்க அணியாக இருக்க வேண்டும். அதன் மீது தான் நம் கவலை இருக்க வேண்டும். உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ? ஆக்ரோஷமாகவும், கடினமான முறையிலும் விளையாடுவது தான் ஆஸ்திரேலியாவின் அணுகுமுறை. அது ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று. இந்த பாணியில் இருந்து வெளியேறி, மென்மையான போக்கை கடைபிடித்தால் உலகில் எல்லோருக்கும் பிடித்தமான அணியாக ஆஸ்திரேலியா இருக்கும். ஆனால் ஒரு ஆட்டத்தில் கூட நிச்சயம் வெற்றி பெற முடியாது. எல்லோரும் வெற்றியைத்தான் விரும்புகிறார்கள்’ என்றார்.

    ‘எதிரணி வீரர்களுடன் வார்த்தை யுத்தத்தில் ஈடுபட்டதை நினைத்து நான் ஒரு போதும் கவலைப்பட்டதில்லை. ஸ்டீவ்வாக் போன்ற வீரர்களுக்கு இது மிகவும் பிடிக்கும்’ என்றும் கிளார்க் குறிப்பிட்டார்.

    கிளார்க்கின் விமர்சனத்துக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ‘எதிரணியினர் எங்களை விரும்ப வேண்டும் என்று நாங்கள் விவாதிக்கவில்லை. ஆஸ்திரேலிய மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியை ரசிகர்கள் நேசிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி தான் பேசுகிறோம். மற்றபடி எதிரணி எங்களை விரும்புகிறார்களா? இல்லையா? என்பது பற்றி சிறிது கூட கவலையில்லை. மைக்கேல் கிளார்க் கூறுவது போல் தான், நாங்கள் கடினமாகவும், ஆக்ரோஷமாகவும் வரிந்து கட்டி நிற்கப்போகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. துபாயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் மிக கடினமாக போராடினோம். அதே போன்று தொடர்ந்து ஆடுவோம். ஹேசில்வுட், ஸ்டார்க், கம்மின்ஸ் போன்ற மூத்த வீரர்கள் வருகை தந்துள்ளனர். இதனால் நம்பிக்கை அதிகரிக்கும்’ என்றார்.

    இதற்கிடையே மைக்கேல் கிளார்க்குக்கு எதிராக குரல் கொடுத்துள்ள ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சைமன் கேடிச், ‘பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் நாம் கையும் களவுமாக சிக்கிக்கொண்டோம் என்பதை கிளார்க் மறந்து விட்டார். தவறுகளை திருத்திக்கொண்டு முடிந்த வரைக்கும் சீக்கிரமாக ஆஸ்திரேலிய அணி மீதான நல்லெண்ணத்தை மீட்டெடுக்க வேண்டும். அதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்’ என்றார்.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இதற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. #MichaelClarke #AUSvIND
    பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. #WomenT20 #WorldCup #Ireland #Australia
    புரோவிடென்ஸ்:

    பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. புரோவிடென்சில் நேற்று முன்தினம் நடந்த ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய அணி, அயர்லாந்தை எதிர்கொண்டது.



    ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, ஆஸ்திரேலிய வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 93 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக கிம் காரத் 24 ரன்கள் எடுத்தார். பின்னர் 94 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 9.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



    ஆஸ்திரேலிய தொடக்க வீராங்கனை அலிசா ஹீலி 31 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 56 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றதுடன், ஆட்டநாயகி விருதையும் பெற்றார். ஆஸ்திரேலிய அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். முதல் ஆட்டத்தில் 52 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது.
    20 ஓவர் போட்டி அணிகளின் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றினால், 130 புள்ளிகளுடன் முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு முன்னேறும். #PAKvAUS
    அபுதாபி:

    பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஆடுகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி அபுதாபியில் இன்று நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    20 ஓவர் போட்டி அணிகளின் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி (123 புள்ளிகள்) இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றினால், 130 புள்ளிகளுடன் முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு முன்னேறும். மாறாக ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே பாகிஸ்தான் அணியால் (132 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்க முடியும். ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றால் இந்திய அணியை (124 புள்ளிகள்) பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தை பிடிக்கும்.  #PAKvAUS
    ×