என் மலர்
நீங்கள் தேடியது "ரோகித் சர்மா"
- விஜய் ஹசாரே டிராபியில் ரோகித், விராட் மீண்டும் வந்தபோது மக்கள் நேரில் வந்து பார்த்தனர்.
- கிரிக்கெட் வீரரை விட விளையாட்டு பெரியது என எப்போதும் கூறுவேன் என்றார் அஸ்வின்.
புதுடெல்லி:
முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசியதாவது:
2027 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருநாள் போட்டி வடிவம் குறித்து உறுதியாக எதுவும் சொல்ல முடியாது. அதைப் பற்றி நான் கவலைப்படுகிறேன்.
ரசிகர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இன்னும் ஒரு இடம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன், ஆனால் ஒருநாள் போட்டிகளுக்கு இடமில்லை என்று நினைக்கிறேன்.
விஜய் ஹசாரே டிராபியில் ரோகித் மற்றும் விராட் மீண்டும் வந்தபோது மக்கள் நேரில் வந்து பார்த்தார்.
கிரிக்கெட் வீரரை விட விளையாட்டு பெரியது என எப்போதும் கூறுவேன். இவர்கள் ஓய்வு பெறும்போது என்ன நடக்கும்?
ஐ.சி.சி. பிபாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். கால்பந்தில் பல லீக்குகள் உள்ளன. ஆனால் பிபா 4 ஆண்டுக்கு ஒருமுறை உலகக் கோப்பையை நடத்துகிறது. உலகக் கோப்பைக்கு மதிப்பு உண்டு.
ஒருநாள் போட்டியை முக்கியமானதாக மாற்ற விரும்பினால், உலகக் கோப்பையை 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும்.
ஒருநாள் தொடருக்குப் பதிலாக, டி20 தொடர்களை விளையாட வேண்டும். இது உள்நாட்டுப் போட்டியில் சிறப்பாகச் செயல்படும் வீரர்களைத் தேர்ந்தெடுக்க வாரியத்திற்கு உதவும் என தெரிவித்தார்.
- கம்பீர், அகார்கர் வந்த பிறகு இந்திய வீரர்கள் தேர்வு குறித்து பல எதிர்மறையாக கருத்துக்கள் வந்தது.
- தொடக்க வீரராக 3 சதங்கள் விளாசிய சாம்சனை நீக்கி விட்டு சுப்மன் கில்லை களமிறங்கினார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவராக அஜித் அகார்கர் உள்ளனர். இருவரும் வந்த பிறகு இந்திய வீரர்கள் தேர்வு குறித்து பல எதிர்மறையாக கருத்துக்கள் வந்த வண்ணம் இருந்து வருகிறது.
ஒருநாள் மட்டும் டெஸ்ட் போட்டிகளில் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டது. 3 வடிவ கிரிக்கெட்டுக்கும் ஒரே கேப்டன் தான் இருக்க வேண்டும் என கூறி டி20 அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். தொடக்க வீரராக 3 சதங்கள் விளாசிய சாம்சனை நீக்கி விட்டு சுப்மன் கில் களமிறங்கினார். இப்படி பல மாற்றங்களை தொடர்ந்து செய்து வந்துள்ளனர்.
டெஸ்ட் போட்டிகளில் திறமையான வீரர்கள் இருந்தும் குறிப்பிட்ட வீரர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் கருத்து வெளியாகி வந்தது.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு இருந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் சுப்மன் கில் அந்த அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அஜித் அகார்கர், கவுதம் கம்பீர் திருந்தி விட்டார்களாக என ரசிகர்கள் கேள்வி எழுப்பி பல்வேறு கருத்துகளை கூறி வந்தனர்.
ஆனால் இதற்கெல்லாம் அவர்கள் காரணம் இல்லை. தேர்வுக்குழுவில் இருந்த அந்த இரண்டு பேர் முக்கிய காரணமாக இருந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதன்படி தேர்வுக்குழுவில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களாக ஆர்பி சிங், ஓஜா இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் தான் சமீபத்தில் இந்திய அணியில் ஏற்பட்ட மாற்றத்துக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளனர். டி20 அணியில் கில் வேண்டாம் என்றும் சஞ்சு சாம்சனே தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.
இதுமட்டுமில்லாமல் கில்லை ஒருநாள் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக ஒருநாள் போட்டியின் கேப்டனாக ரோகித் சர்மாவை மீண்டும் நியமிக்க அவரிடம் ஆர்பி சிங் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதற்கு ரோகித் சர்மாவிடம் எந்தவொரு பதிலும் வரவில்லை என தெரிகிறது.
அவர் இதற்கு சரி என்றால் 2027-ம் ஆண்டு நடக்கும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும்.
அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பையுடன் தேர்வுக்குழு தலைவரான அஜித் அகார்கரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. அந்த இடத்திற்கு ஓஜா அல்லது ஆர்பி சிங் ஆகிய இருவரில் ஒருவர்தான் அடுத்த தேர்வுக்குழு தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் போட்டியில் ரோகித் 94 பந்தில் 155 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன.
இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பி.சி.சி.ஐ. அறிவுறுத்தி உள்ளது. இதனால் இந்த தொடரில் விராட், ரோகித், பண்ட் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் விளையாடுகின்றனர்.
இந்த தொடரில் ரோகித் சர்மா மும்பை அணிக்காகவும் விராட் கோலி டெல்லி அணிக்காகவும் விளையாடி வருகின்றனர். முதல் போட்டியில் ரோகித் 94 பந்தில் 155 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதில் 18 பவுண்டரிகளும் 9 சிக்சர்களும் அடங்கும்.
விராட் கோலி 101 பந்தில் 133 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 14 பவுண்டரிகளும் 3 சிக்சர்களும் அடங்கும்.
இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை - உத்தரகாண்ட் அணிகள் விளையாடி வருகின்றனர். முதலில் பேட்டிங் செய்த மும்பையில் தொடக்க வீரர் ரோகித் சர்மா தான் சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார். இது ரோகித் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
மற்றொரு போட்டியில் டெல்லி- குஜராத் அணிகள் மோதி வருகின்றனர். இதில் முதலில் பேட்டிங் செய்து வரும் டெல்லி அணியின் வீரர் விராட் கோலி 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசி 6 போட்டிகளில் விராட் கோலி 3 சதம் 3 அரைசதம் விளாசி செம பார்மில் உள்ளார்.
- மும்பை அணிக்காக விளையாடிய ரோகித் 94 பந்தில் 155 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- டெல்லி அணிக்காக விளையாடிய விராட் கோலி 83 பந்து சதம் அடித்துள்ளார்.
இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் இன்று முதல் ஜனவரி 18-ந் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன.
இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பி.சி.சி.ஐ. அறிவுறுத்தி உள்ளது. இதனால் இந்த தொடரில் விராட், ரோகித், பண்ட் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் விளையாடுகின்றனர்.
இந்த தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடும் போட்டிகளில் ரசிகர்கள் அதிக அளவில் வந்துள்ளனர்.
இந்நிலையில் சீக்கிம்- மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 61 பந்தில் சதம் விளாசிய மும்பை வீரர் ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 17 ஆண்டுகளுக்கு பிறகு ரோகித் சர்மா சதம் விளாசியுள்ளார். ரோகித் 94 பந்தில் 155 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதில் 18 பவுண்டரிகளும் 9 சிக்சர்களும் அடங்கும்.
மற்றொரு ஆட்டத்தில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி 83 பந்தில் சதம் விளாசி அசத்தினார். ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா தொடரை தொடர்ந்து விஜய் ஹசாரே தொடரிலும் இருவரும் அசத்தி வருகின்றனர்.
- மும்பை அணிக்காக ரோகித் சர்மா விளையாடுகிறார்.
- டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடுகிறார்.
இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் நாளை முதல் ஜனவரி 18-ந் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன.
இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பி.சி.சி.ஐ. அறிவுறுத்தி உள்ளது. இதனால் இந்த தொடரில் விராட், ரோகித், பண்ட் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் விளையாட உள்ளனர்.
இந்த தொடரில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி 2 அல்லது 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுகின்றனர். இதனால் அவர்கள் விளையாடுவதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இதனால் அவர்கள் விளையாடும் போட்டிகளில் அதிக அளவில் ரசிகர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடரின் ஒரு லீக் போட்டியில் மும்பை - சிக்கீம் அணிகள் நாளை மோதுகிறது. இந்த போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் ரோகித் சர்மா மும்பை அணியில் இடம்பெற்றுள்ளதால் ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரோகித் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.
அதேசமயம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் விஜய் ஹசாரே போட்டியில் விராட் கோலி பங்கேற்கிறார். விராட் கோலியை காண ரசிகர்கள் அதிகளவில் கூடுவதை தடுக்க, மைதானத்திற்குள் ரசிகர்களை அனுமதிக்க கூடாது என கர்நாடக அரசு அம்மாநில கிரிக்கெட் வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கோலி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- இறுதிப் போட்டி தோல்வியால் அனைவரும் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர்.
- இனி விளையாட விரும்பாமல் ஓய்வு பெற நினைத்தேன்.
புதுடெல்லி:
இந்திய அணியின் சீனியர் பேட்ஸ்மேன் ரோகித் சர்மா. 3 வடிவிலான போட்டிகளிலும் கேப்டனாக பணியாற்றிய அவர் டெஸ்ட், 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார்.
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த உலக கோப்பையை கைப்பற்றிய பிறகு ரோகித் சர்மா 20 ஓவர் போட்டியில் இருந்து விடை பெற்றார். அதைத் தொடர்ந்து இங்கிலாந்து பயணத்துக்கு முன்பு டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
மற்றொரு சீனியர் வீரரான விராட் கோலியும் இதே பாணியில் 20 ஓவர், டெஸ்ட்டில் விடை பெற்று இருந்தார். இருவரும் தற்போது ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்கள். 2027 உலக கோப்பையில் விளையாடுவதை இருவரும் இலக்காக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் 2023 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற பிறகு ஓய்வு பெற முடிவு செய்ததாக ரோகித் சர்மா புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
ரோகித் கூறியதாவது:-
2023 உலக கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு நான் முற்றிலும் மனமுடைந்து போனேன். இந்த விளையாட்டு என்னடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டதால் இனி விளையாட விரும்பாமல் ஓய்வு பெற நினைத்தேன். என்னிடம் எதுவும் மிச்சமில்லை என்று தோன்றியது. அதில் இருந்து மீள சிறிது காலம் ஆனது.
இறுதிப் போட்டி தோல்வியால் அனைவரும் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர். என்ன நடந்தது என்பதை எங்களால் நம்பவே முடியவில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் கடினமான நேரமாக இருந்தது. ஏனென்றால் அந்த உலக கோப்பைக்காக நான் 2 ,3 மாதங்களுக்கு முன்பு மட்டு மல்ல 2022-ல் கேப்டன் பதவியை ஏற்றதில் இருந்தே எல்லாவற்றையும் அர்ப்பணித்து இருந்தேன்,
20 ஓவர் உலககோப்பையாக இருந்தாலும் சரி, 2023 உலக கோப்பையாக இருந்தாலும் சரி, உலக கோப்பையை வெல்வது மட்டுமே எனது ஒரே இலக்காக இருந்தது. அது நடக்காத போது நான் முற்றிலும் நிலைகுலைந்து போனேன். எனது உடலில் எந்த சக்தியும் இல்லை. அதில் இருந்து மீண்டு பழைய நிலைக்குத் திரும்ப 2 மாதங்கள் ஆனது.
இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.
2023 உலக கோப்பை இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. அவரது தலைமையில் 2024-ல் 20 ஓவர் உலக கோப்பை கிடைத்தது. ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அவர் அதில் மட்டும் தற்போது ஆடி வருகிறார்.
- மும்பை அணிக்காக ரோகித் சர்மா களமிறங்குகிறார்.
- ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியில் விராட் கோலி விளையாட உள்ளார்.
விஜய் ஹசாரே டிராபி தொடர் வரும் 24-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி ஒருநாள் தொடராக நடைபெற உள்ளது. இந்த தொடர் பிளேட், எலைட் என்ற இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பிளேட் பிரிவில் மேகாலயா, மிசோரம், அருணாச்சல பிரதேசம், பீகார், மணீப்பூர், நாகலாந்து இடம் பெற்றுள்ளது.
எலைட் பிரிவில் தமிழ்நாடு, புதுச்சேரி, குஜராத், ஆந்திரா, டெல்லி, ஹரியானா, ரெயில்வேஸ், ஒடிசா, சவுராஸ்ட்ரா, பஞ்சாப், மகாராஷ்டிரா, சண்டிகர், கோவா, ஹிமாசல் பிரதேசம், உத்திரகாண்ட், மும்பை, சிக்கீம், பெங்கால், விதர்பா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, திரிபுரா, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், அசாம், பரோடா, ஐதராபாத், உத்தர பிரதேசம் ஆகிய அணிகள் இந்த பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் விஜய் ஹசாரே தொடரில் இந்திய அணியின் ஜாம்பவான்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் விளையாட உள்ளனர். அதன்படி மும்பை அணிக்காக ரோகித் சர்மா களமிறங்குகிறார். அவர் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியில் விராட் கோலி விளையாட உள்ளார்.
இவர்கள் இருவரும் மீண்டும் உள்ளூர் போட்டிகளில் விளையாட உள்ளதால் ரசிகர்கள் இடையே பெரும் எதிர் பார்ப்பு உள்ளது.
- அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கிறார்.
புஷ்பா 2 படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வருகிறார். இப்படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. ரூ.800 கோடி செலவில் பான் இந்தியா அளவில் இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், ரோகித் சர்மாவுடன் அவரது சகோதரர் அல்லு சிரிஸ் நடித்துள்ள விளம்பர வீடியோவை அல்லு அர்ஜுன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். இந்த இன்சூரன்ஸ் விளம்பர வீடியோவில் ரோகித் சர்மா மற்றும் அவரது மனைவி ரித்திகாவுடன் அல்லு சிரிஸ் இணைந்து நடித்துள்ளார்.
அல்லு அர்ஜுன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், "என்ன ஒரு இன்ப அதிர்ச்சி.. வாவ்! சிரிஸ்... உன்னை நினைத்து ரொம்ப சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்கு. இதுக்கு எல்லாருக்கும் வாழ்த்துக்கள், ரோகித்திற்கு என் சிறப்பு மரியாதை" என்று தெரிவித்துள்ளார்.
- ரோகித் சர்மா 2015 ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி ரித்திகாவை திருமணம் செய்து கொண்டார்.
- இந்த தம்பதிக்கு சமைரா என்ற பெண் குழந்தையும் ஆஹான் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 2015 ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி ரித்திகாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2018 ஆண்டு சமைரா என்ற பெண் குழந்தையும் 2024 இல் ஆஹான் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது.
நேற்று ரோகித் சர்மா - ரித்திகா தம்பதி தங்களது 10 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர். இந்நிலையில், தங்களது திருமண நாளை இருவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை ரோகித் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
- ஏ பிளஸ் வரிசையில் இருப்பவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 7 கோடி வழங்கப்பட்டு வருகிறது.
- 3 வடிவ போட்டிகளிலும் விளையாடி வரும் சுப்மன் கில், ஏ பிளஸ் கிரேடுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ. ) வீரர்களை ஏ பிளஸ், ஏ, பி மற்றும் சி என 4 கிரேடுகளாக பிரித்து ஒப்பந்தம் செய்து சம்பளம் வழங்கி வருகிறது.
டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆகிய 3 வடிவ போட்டிகளில் விளையாடுபவர்கள் மட்டுமே ஏ பிளஸ் கிரேடில் இருப்பார்கள்.
சீனியர் வீரர்களான விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார்கள். 20 ஓவர், டெஸ்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டனர்.
இந்த நிலையில் இருவரையும் ஏ பிளஸ் கிரேடில் இருந்து ஏ வரிசைக்கு தரமிறக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏ பிளஸ் வரிசையில் இருப்பவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 7 கோடி வழங்கப்பட்டு வருகிறது. ஏ நிலைக்கு கீழிறக்கப்பட்டால் கோலி, ரோகித் சர்மாவின் ஊதியத்தில் ரூ. 2 கோடி குறைக்கப்பட்டு, ரூ. 5 கோடி மட்டுமே வழங்கப்படும்.
அதே நேரத்தில் ஜடேஜா 20 ஓவர் ஆட்டத்தில் ஓய்வு பெற்று விட்டாலும் டெஸ்டில் தீவிரமாக விளையாடுவதால் ஏ பிளஸ் கிரேடில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
ஒப்பந்தம் தொடர்பாக வருகிற 22-ந்தேதி நடைபெறும் பி.சி.சி.ஐ.யின் வருடாந்திர பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
3 வடிவ போட்டிகளிலும் விளையாடி வரும் சுப்மன் கில், ஏ பிளஸ் கிரேடுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.
- முதல் 2 போட்டிகளிலும் ரன்கள் எடுக்காததால் கடைசி ஒருநாள் போட்டியில் பதட்டமாக இருந்தேன்.
- நான் எப்படி விளையாடலாம், என்ன செய்ய வேண்டும் என்று ரோகித் என்னிடம் விளக்கிக்கொண்டே இருந்தார்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் பெரிய அளவில் விளையாடாத தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.
இந்நிலையில் கடைசி ஒருநாள் போட்டியில் பேட்டிங் செய்ய தொடங்கிய போது பதட்டமாக இருந்ததாகவும் ரோகித் அடிக்கடி என்னிடம் பேசி விளக்கி கொண்டே இருந்ததாக ஜெய்ஸ்வால் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கடந்த இரண்டு போட்டிகளிலும் ரன்கள் எடுக்காததால் கடைசி ஒருநாள் போட்டியில் நான் பேட்டிங் செய்ய தொடங்கியபோது, பதட்டமாக இருந்தேன். அந்த இன்னிங்சில், நான் எப்படி விளையாடலாம், என்ன செய்ய வேண்டும் என்று ரோகித் என்னிடம் விளக்கிக்கொண்டே இருந்தார்.
நிறைய டாட் பந்துகளை ஆடியதால் அழுத்தத்தில் இருந்தேன், மேலும் ஒரு நல்ல ஸ்ட்ரைக் ரேட்டை பராமரிக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டியிருந்தது. அப்போது ரோகித் என்னிடம், 'நீ நிதானமாக விளையாடு, நான் ரிஸ்க் எடுக்கிறேன்' என்று சொன்னார். நான் நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்பதற்காக, அவரே பெரும்பாலான ரிஸ்க்குகளை எடுத்துக்கொண்டார்.
என ஜெய்ஸ்வால் கூறினார்.
- பேட்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர் ரோகித் சர்மா (781 புள்ளிகள்) முதலிடத்தில் தொடர்கிறார்.
- விராட் கோலி (773 புள்ளிகள்) இரு இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
துபாய்:
இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.
இந்த தொடரில் 2 சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் மொத்தம் 302 ரன்கள் குவித்து அசத்திய விராட் கோலி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஒருநாள் பேட்டர்களுக்கான வீரர்கள் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் பேட்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர் ரோகித் சர்மா (781 புள்ளிகள்) முதலிடத்தில் தொடர்கிறார். தென் ஆப்பிரிக்க தொடரில் அசத்திய விராட் கோலி (773 புள்ளிகள்) இரு இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
இதன் காரணமாக டேரில் மிட்செல் ஒரு இடம் சரிந்து 3-வது இடத்திற்கும், இப்ராஹிம் சத்ரன் ஒரு இடம் சரிந்து 4-வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர். இந்தியா தரப்பில் சுப்மன் கில் 5-வது இடத்திலும், ஷ்ரேயஸ் ஐயர் 10-வது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ரஷித் கான் மாற்றமின்றி முதலிடத்திலும் ஆர்ச்சர் 2-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக இந்தியாவின் குல்தீப் யாதவ் கிடுகிடுவென 3 இடங்கள் எகிறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியா தரப்பில் இவர் மட்டுமே டாப்-10 இடத்திற்குள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் கிரிக்கெட் ஆல் ரவுண்டர்கள் வரிசையில் மாற்றமில்லை. அஸ்மத்துல்லா ஓமர்சாய் முதலிடத்தில் தொடர்கிறார். இந்திய தரப்பில் அக்சர் படேல் 10-வது இடத்தில் உள்ளார்.






