என் மலர்
நீங்கள் தேடியது "பிரதமர் மோடி"
- டெல்லி சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
- பிரான்ஸ், அமெரிக்க நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி சென்று திரும்பியுள்ளார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
இதற்கிடையே, டெல்லியில் பா.ஜ.க. பதவியேற்பு விழா நாளை நடைபெறும் என தகவல்கள் வெளியாகின.
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்றுவிட்டு திரும்பி உள்ளார்.
இந்நிலையில், டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி நேற்று மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பான புகைப்படங்களை ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ளது.
- இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வருகின்றன.
- கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி இந்தியாவுக்கு 2-வது முறையாக வருகிறார்.
தோகா:
கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி 2 நாள் அரசுமுறை பயணமாக நாளை இந்தியா வருகிறார். அவர் 17, 18-ந்தேதிகளில் இந்தியாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி இந்தியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரது பயணம் எங்கள் வளர்ந்து வரும் பன்முக கூட்டாண்மைக்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும்.
கத்தார் மன்னருக்கு 18-ந்தேதி ஜனாதிபதி மாளிகையில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்படும். அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் கலந்துரையாடுவார். அப்போது மன்னருக்கு விருந்து அளிக்கப்படும். பின்னர் கத்தார் மன்னர்-பிரதமர் மோடி இருதரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்களைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
இந்தியாவும் கத்தாரும் நட்பு, நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் ஆழமான வேரூன்றிய வரலாற்று உறவுகளைக் கொண்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வருகின்றன. கத்தாரில் வசிக்கும் இந்திய சமூகம் கத்தாரின் மிகப்பெரிய வெளிநாட்டு சமூகத்தை உருவாக்குகிறது என்று தெரிவித்துள்ளது.
கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானி இந்தியாவுக்கு 2-வது முறையாக வருகிறார். இதற்குமுன்பு கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவுக்கு வந்திருந்தார்.
- காசி தமிழ் சங்கமம் இதுபோன்ற நினைவுகளை புதுப்பிப்பிக்கிறது.
- தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையேயான தொடர்பை மேலும் வலுப்படுத்தும்.
புதுடெல்லி:
காசி தமிழ்ச் சங்கமம் 3.0வில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் அடங்கிய முதல் குழு வாரணாசி சென்றடைந்துள்ளது.
இந்நிலையில், வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் மூன்றாவது பதிப்பு நடைபெற இருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் மூன்றாவது பதிப்பு நடைபெற இருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
மகா கும்பமேளா நடைபெறும் இந்த வேளையில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் இது கூடுதல் சிறப்பு பெறுகிறது.
தமிழ்நாட்டிற்கும் காசிக்கும், காவேரிக்கும் கங்கைக்கும் இடையிலான நீடித்த இணைப்பு பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
முந்தைய இரண்டு பதிப்புகளின் போது ஏற்பட்ட மக்களின் இணக்கமான உணர்வுகளும், அனுபவங்களும் இந்தியாவின் பன்முக கலாசாரத்தின் அழகையும், இரு பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு இடையேயான வலிமையான இணைப்புகளையும் காட்சிப்படுத்தின.
காசி தமிழ் சங்கமம் இதுபோன்ற நினைவுகளை புதுப்பிப்பது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையேயான தொடர்பை மேலும் வலுப்படுத்தும்.
அகத்திய முனிவர் பாரம்பரிய மருத்துவ முறைக்கும், செம்மொழி தமிழ் இலக்கியத்திற்கும் அளித்த பங்களிப்புகள் இந்த ஆண்டு நிகழ்வில் கொண்டாடப்பட இருப்பதை அறிந்து புளகாங்கிதம் அடைகிறேன்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் மகா கும்பமேளாவில் பங்கேற்பதுடன் அயோத்தி ஸ்ரீ ராமர் ஆலயத்திற்கும் செல்வார்கள் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். இதுபோன்ற ஆன்மீக தலங்களுக்கு பயணிப்பதன் வாயிலாக பங்கேற்பாளர்கள் அனைவரும் ஆசி பெற்றதாக உணர்வார்கள் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.
வளர்ந்த பாரதத்தைக் கட்டமைக்கும் தொலைநோக்குப் பார்வையுடன் நாடு முன்னேறி வரும் நிலையில், நமது ஒற்றுமையை வலுப்படுத்துவதில் காசி தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகள் முன்னோடியாகத் திகழும்.
தமிழ்நாட்டிலிருந்து காசிக்குப் பயணிக்கும் மக்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத சிறந்த நினைவுகளை தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டுமென விழைகிறேன் என தெரிவித்துள்ளார்.
- டெல்லி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
- கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.
புதுடெல்லி:
உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் புனித நீராட விடுமுறை நாட்களில் அதிக கூட்டம் காணப்படுகிறது.
அந்த வகையில், டெல்லி ரெயில் நிலையத்தில் நேற்று இரவு பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. உத்தர பிரதேசம் செல்லும் ரயிலில் ஏற ஒரே நேரத்தில் பயணிகள் முண்டியடித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்
இந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், புதுடெல்லி ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது அறிந்து துன்பமடைந்தேன். தங்கள் அன்புக்கு உரியவர்களை இழந்த அனைவருடன் என் எண்ணங்கள் உள்ளன. காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த நெரிசலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதிகாரிகள் உதவி வருகின்றனர் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- கல்வி, பாரம்பரியமான பட்டு வகைகள் ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்று உள்ளன.
- தொடர்ந்து 10 நாட்கள் நிகழ்ச்சி நடக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்டது. 3-வது ஆண்டாக இந்த ஆண்டு இன்று மாலையில் தொடங்கியது.
தொடக்க விழாவில் உத்தரபிரதேச முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத், மத்திய கல்வி மந்திரிகள் தர்மேந்திர பிரதான், எல்.முருகன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். தொடர்ந்து 10 நாட்கள் நிகழ்ச்சி நடக்கிறது.
இதில் 80 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கல்வி, கலாச்சாரம், மொழியின் பெருமை, கைத்தொழில்கள், பாரம்பரியமான பட்டு வகைகள் ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்று உள்ளன. விற்பனை, கண்காட்சி, செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்படும்.
இந்த ஆண்டு தமிழ் முனிவரான அகத்தியரை முன்னிலைப்படுத்துகிறார்கள். இதற்காக அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தில் அகத்தியரின் சிலை இடம் பெற்றுள்ளது. மேலும் அவரை பற்றிய புத்தகங்கள், ஓலை சுவடிகள் ஆகியவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தின் பெருமைக்குரிய பெரியவர்கள் பலரை பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்டு உள்ள அரங்கில் திருவள்ளுவர், அவ்வையார், காரைக்கால் அம்மையார், தில்லையாடி வள்ளியம்மை, முத்து லெட்சுமி ரெட்டி, வீரமங்கை வேலுநாச்சியார், எம்.எஸ்.சுவாமிநாதன், சி.வி.ராமன், டாக்டர் அப்துல்கலாம், ஜி.டி.நாயுடு உள்பட பலரது புகைப்படங்கள் அவர்களது சிறப்புகள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது.
தமிழ் திரையுலக பிரபலங்கள் வரிசையில் நடிகர் அஜித்குமார், இயக்குனர் மணிரத்னம், ஏ.ஆர்.ரகு மான், விஜய் சேதுபதி, மறைந்த சிவாஜி, ஜெயலலிதா உள்ளிட்டோரின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.
வாரணாசியில் முகாமிட்டுள்ள மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குனர் ஆர்.சந்திரசேகரன் கூறியதாவது:-
தமிழ் மொழியின் பெருமை, இலக்கியங்களின் வளமை ஆகியவற்றை நாடு முழுவதும் எல்லோரும் அறிந்து கொள்ளும் வகையில் கடந்த ஆண்டு திருக்குறளும், தொல்காப்பியமும் இந்தியில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டு 41 சங்க இலக்கிய நூல்களை இந்தியில் மொழி பெயர்த்து இன்று வெளியிடுகிறோம்.
முக்கியமாக யூடியூப் சானல் மூலம் இந்தி வழியாக தமிழை கற்றுக் கொள்ளும் பயிற்சி வகுப்பும் இன்று தொடங்கப்பட்டது. ரூ.300 கட்டணம் செலுத்த இந்தி பயிற்சி வகுப்பில் சேரலாம். 90 நாட்கள் வகுப்பு நடக்கும். இதில் சேருபவர்களுக்கு இந்தி மூலம் 30 நாளில் தமிழில் பேச, எழுத, படிக்க முடியும் என்ற 2 தொகுதி புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும்.
இதன் மூலம் இந்தி பேசும் வட மாநில மக்கள் இனிமையான தமிழ் மொழியை எளிதில் கற்றுக் கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
#WATCH | Uttar Pradesh CM Yogi Adityanath inaugurates the 3rd edition of Kashi Tamil Sangamam, in Varanasi
— ANI (@ANI) February 15, 2025
Union Minister Dharmendra Pradhan is also present. pic.twitter.com/9qlnhQIkQT
- அதிபர் டிரம்பை சந்தித்த பிரதமர் மோடி பல்வேறு முக்கிய அம்சங்களை குறித்து விவாதித்தார்.
- போர்பன் என்பது சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை அமெரிக்க விஸ்கி ஆகும்.
பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் அரசுமுறை பயணமாக பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
கடந்த 10-ம் தேதி பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி தலைநகர் பாரீசில் நடந்த சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இதையடுத்து, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானையும் பிரதமர் மோடி சந்தித்தார். இச்சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு 2 நாள் பயணமாக சென்றடைந்தார். அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதிபர் டிரம்பை சந்தித்த பிரதமர் மோடி பல்வேறு முக்கிய அம்சங்களை குறித்து விவாதித்தார். அதனை தொடர்ந்து பரஸ்பர வரிவிதிப்பு முறை அறிமுகம் படுத்தப்பட்டது.

இந்தியா மீது பரஸ்பர வரிகளை விதிக்கும் திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததன் எதிரொலியால், போர்பன் விஸ்கி மீதான வரியை 150%-லிருந்து 100%-ஆகக் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது
அமெரிக்க 'போர்பன் விஸ்கி' தயாரிப்பு நிறுவனங்களான JIM BEAM, FOUR ROSES, MAKER'S MARK 2 இந்த வரி குறைப்புகள் பயனளிக்கும் என கூறப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் மற்ற அனைத்து மதுபானங்களும் தொடர்ந்து 100 சதவீத இறக்குமதி வரியை கொண்டு இருக்கும்.
போர்பன் விஸ்மி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதால் மதுபான பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
போர்பன் என்பது சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை அமெரிக்க விஸ்கி ஆகும். இது அதன் லேசான இனிப்பு சுவைக்கு பெயர் பெற்றது.
- அதிபர் டிரம்புடன் அதானி விவகாரம் குறித்து பேசவில்லை என்றார் பிரதமர் மோடி.
- அமெரிக்காவில் கூட மோடிஜி அதானியின் ஊழல்களை மறைக்கிறார் என்றார் ராகுல் காந்தி.
புதுடெல்லி:
தொழிலதிபர் அதானி மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அந்நாட்டு ஜனாதிபதி டிரம்புடன் இது குறித்து பேசவில்லை என தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், தனிப்பட்ட விவகாரங்கள் குறித்து இரு நாடுகளின் தலைவர்கள் பேசுவது இல்லை என விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் இந்தக் கருத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அதானி விவகாரம் குறித்து இந்தியாவில் நீங்கள் கேள்வி எழுப்பினால், மவுனமே பதிலாக இருக்கும். வெளிநாட்டில் கேள்வி கேட்டால் அது தனிப்பட்ட விவகாரமாகி விடும். அமெரிக்காவில் கூட மோடிஜி அதானியின் ஊழல்களை மறைக்கிறார் என பதிவிட்டுள்ளார்.
- அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
- அப்போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் அரசுமுறை பயணமாக பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
கடந்த 10-ம் தேதி பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி தலைநகர் பாரீசில் நடந்த சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இதையடுத்து, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானையும் பிரதமர் மோடி சந்தித்தார். இச்சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு 2 நாள் பயணமாக சென்றடைந்தார். அங்கு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை இந்திய நேரப்படி நேற்று அதிகாலையில் சந்தித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதிபர் டிரம்பை சந்தித்த பிரதமர் மோடி பல்வேறு முக்கிய அம்சங்களை குறித்து விவாதித்தார்.
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உள்ளிட்ட தொழிலதிபர்களையும் பிரதமர் மோடி சந்தித்து ஆலோசித்தார்.
இந்நிலையில், அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி நேற்று நள்ளிரவு தலைநகர் டெல்லி திரும்பினார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.
- இந்தியாவில் அமைதி, வெளிநாட்டில் தனிப்பட்ட விசயம்.
- அமெரிக்காவில் கூட அதானியின் ஊழலை மறைத்தார் என ராகுல் காந்தி விமர்சனம்.
இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து இருநாட்டு உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையின்போது 26/11 பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்த ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க சம்மதம் தெரிவித்துள்ளது. மேலும், பல்வேறு விசயங்கள் இடம் பிடித்தன.
உங்களுக்கும் டொனால்டு டிரம்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் அதானி ஊழல் தொடர்பான பிரச்சினை இடம் பெற்றதா? என்ற கேள்விக்கு, வாஷிங்டனில் டிரம்புடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசியபோது பிரதமர் மோடி கூறியதாவது:-
இந்தியா ஒரு ஜனநாயக நாடு, நமது கலாச்சாரம் உலகம் ஒரே குடும்பம் (Vasudhaiva Kutumbakam- வசுதைவ குடும்பகம்). உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக நாங்கள் கருதுகிறோம். ஒவ்வொரு இந்தியரும் என்னுடையவர் என்று நான் நம்புகிறேன். இரண்டு நாடுகளின் இரண்டு முக்கிய தலைவர்கள் இதுபோன்ற தனிப்பட்ட பிரச்சினைகளைப் பற்றி ஒருபோதும் விவாதிப்பதில்லை.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்க பதிவில் "நீங்கள் இந்தியாவில் வைத்து கேள்வி கேட்டால், அங்கே மவுனம்தான். நீங்கள் வெளிநாட்டில் கேள்வி கேட்டால், அது தனிபட்ட விசயம்! அமெரிக்காவில் கூட மோடி அதானியின் ஊழலை மறைத்தார்" எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பாஜக-வின் தேசிய செய்தி தொடர்பான ஷேசாத் பூனவல்லா பதில் கொடுத்துள்ளார். ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த பூனவல்லா "26/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ராணாவை இந்தியா கொண்டு வரப்படுகிறார். இதற்காக அமெரிக்காவை சம்மதிக்க வைத்துள்ளார் பிரதமர் மோடி. இது இந்தியாவிற்கான மிகப்பெரிய ராஜாங்க ரீதியிலான வெற்றி.

தாக்கத்தை ஏற்படுத்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம், இந்தியா- அமெரிக்க உறவுகளை முன்னெப்போதும் இல்லாத வகையில் வலுப்படுத்தியது. பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தோடு குற்றம் கண்டுபிடிப்பது காங்கிரசின் பழக்கமாகிவிட்டது" என்றார்.
- டெல்லி சட்டமன்ற தேர்தல் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
- தேர்தல் முடிவு வெளியாகி 6 நாட்கள் ஆகியும் முதல்வர் யார் என்பது குறித்து பாஜக முடிவு எடுக்கவில்லை.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த 8-ந்தேதி முடிவுகள் வெளியான நிலையில் இன்னும் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை. இதற்கு முக்கிய காரணம் முதல்வர் யார்? அவருடைய அமைச்சரவையில் இடம் பெறுவது யார்? என்பதை இன்னும் பாஜக மேலிடம் முடிவு செய்யவில்லை.
அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா (இவர் இரண்டு முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது) முதலமைச்சராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவருடன் மேலும் 4 பேர் முதலமைச்சர் வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளனர்.
இந்த நிலையில்தான பிரதமர் மோடி கடந்த 10-ந்தேதி பிரான்ஸ் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். மூன்று நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா சென்றார். அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்திய நேரப்படி இன்று காலை அமெரிக்காவில் இருந்து இந்தியா புறப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் முதலமைச்சர், அவருடைய அமைச்சரவையில் இடம பெறுபவர்கள், சபாநாயகர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் இருந்து 15 பேர் கொண்ட பட்டியலை பாஜக மேலிடம் தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் இருந்து 9 பேரை தேர்வு செய்ய வேண்டுமாம். இந்த 9 பேரும் பிரதமர் ஒப்புதலுடன் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இதனால் பிரதமர் அமெரிக்கா சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்புவதற்காக பாஜக மேலிடம் காத்திருக்கிறது.
பிரதமர் மோடி இந்தியா திரும்பியதும், டெல்லியில் ஆட்சி அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்குள் டெல்லி முதல்வர் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் டெல்லி மாநில பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தி தேர்வு செய்வார்கள் எனக் கூறப்படுகிறது.
அவ்வாறு முடிவு எடுக்கப்பட்ட உடன், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 17 அல்லது 18-ந்தேதி நடைபெற வாய்ப்புள்ளது. பிப்ரவரி 20 அல்லது 21-ந்தேதி புதிய முதல்வர் பதவி ஏற்க வாய்ப்புள்ளது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தையும், ராமேசுவரத்தையும் இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் உறுதி தன்மை குறித்து தொடர் ஆய்வுகள் நடை பெற்று வருகின்றன.
ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் நடத்திய ஆய்வின் போது கண்டறியப்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டன. தொடர்ந்து இரும்பால் ஆன இணைப்பு பகுதியை செங்குத்தாக மேலே தூக்கி இறக்கி கப்பல்கள், ரெயில்களை இயக்கி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையில் பொது மக்கள் விரைவில் புதிய ரெயில் பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பாம்பன் புதிய ரெயில் பாலம் இந்த மாத இறுதியில் பிரதமர் மோடி திறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து பாம்பன் பாலத்தில் இறுதிகட்ட ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இன்று காலை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் மற்றும் அதிகாரிகள் மண்டபம் வந்தனர். அங்கிருந்து புதிய ரெயில் பாலத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாலத்தின் உறுதித்தன்மை, தூக்கு பாலத்தின் தரம் உள்ளிட்ட வைகளை இறுதி கட்டமாக ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து ராமேசுவரம் ரெயில் நிலையத்திலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதற்கிடையே பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பிரதமர் அலுவலகம் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
திறப்பு விழாவில் பங்கேற்க உள்ள நிலையில் மண்டபம் மற்றும் பாம்பனில் அதற்கான ஏற்பாடுகளை ரெயில்வே அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
- தொழிலதிபர் விவேக் ராமசாமியை பிரதமர் மோடி சந்தித்தார்.
- அதிபர் டிரம்புடன் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
இந்தியாவில் இருந்து இரண்டு நாடுகள் பயணமாக பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி இந்தியா புறப்பட்டார். கடந்த புதன்கிழமை பிரான்சில் இருந்து அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ சந்தித்தார். முன்னதாக உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்தார்.
அமெரிக்க பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிபர் டொனால்டு டிரம்புடன் உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
அப்போது, பல முக்கியமான துறைகளில் தங்கள் மூலோபாய உறவுகளை விரிவுபடுத்துவதில் இந்தியாவும் அமெரிக்காவும் முடிவு செய்துள்ளன. இரு தரப்பினரும் பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்தும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் தள பதிவிவில், அதிபர் டிரம்புடன் "சிறந்த" சந்திப்பை நடத்தியதாகவும், அவர்களின் பேச்சுவார்த்தை "இந்திய-அமெரிக்க நட்புறவுக்கு குறிப்பிடத்தக்க உத்வேகத்தை சேர்க்கும்" என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
"அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி MAGA பற்றிப் பேசுகிறார். இந்தியாவில், நாங்கள் ஒரு விக்சித் பாரதத்தை நோக்கிச் செயல்படுகிறோம். இது அமெரிக்க சூழலில் MIGA என மொழி பெயர்க்கப்படுகிறது. மேலும், இந்தியா-அமெரிக்கா ஒன்றாக செழிப்புக்காக ஒரு MEGA கூட்டாண்மையைக் கொண்டுள்ளன!" என்று மோடி எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.
மோடியுடனான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இராணுவ விநியோகங்களை அதிகரிக்கும் நோக்கில், வாஷிங்டன் புது தில்லிக்கு F-35 போர் விமானங்களை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.