என் மலர்
நீங்கள் தேடியது "9 பேர் பலி"
- தாசில்தார் அலுவலகத்திற்குள் அத்து மீறி நுழைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தமைக்காகவும் ஒருமையில் பேசியதற்காகவும் 9 பேர் மீது வழக்கு பதிவு.
மாத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த குள்ளம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ், இவருடைய மகன்கள் சரண்ராஜ் (33) குமரவேல் (35) ஆகியோர் தங்களுக்கு சொந்தமான 5 சென்ட் நிலம், பட்டா வழங்கியதில் தவறு நடந்திருப்பதாகவும் அதனை மாற்றி கொடுக்கும்படி போச்சம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த மனுவின் மீது தாசில்தார் அலுவலகத்தில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி நேற்று குமரவேல், சரண்ராஜ், முருகேசன், உள்ளிட்ட 9 பேர் தாசில்தார் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடத்தில் துணை வட்டாட்சியர் சீனிவாசன் தங்கள் கோரிக்கைகளை பரிசிளிப்பதாகவும் கலைந்து செல்லும்படியும் வலியுறுத்தி உள்ளார்.
ஆனால் போராட்டக்காரர்கள் தகாத வார்த்தைகளால் ஒருமையாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததை அடுத்து அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 9 நபர்கள் மீது தாசில்தார் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்தது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தமைக்காகவும், ஒருமையில் பேசியதற்காகவும், 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஈரோட்டில் 4 நாட்களில் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
- பொதுமக்கள் பொது இடங்களுக்கு வரும்போது சமூக இடைவெளியை கடைபிடித்து முககவசம் அணிந்து வரவேண்டும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக 3-வது அலை ஏற்பட்டு தினசரி பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருந்தது. பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியது.
கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பின் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்தது. இருப்பினும், அவ்வப்போது ஓரிருவருக்கு தொற்று ஏற்பட்டு, அவர்கள் குணமடைந்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவரும் மே மாதம் 4-ந் தேதி குணமடைந்தார். அதன்பின் தொற்று இல்லாத மாவட்ட மானது ஈரோடு.
பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ந் தேதி முதல் அடுத்தடுத்த நாளில் தொற்று ஏற்பட்டு 5 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்கள் அடுத்தடுத்த நாட்களில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் இருந்த ஒருவரும் 30-ந் தேதியுடன் குணமடைந்து வீடு திரும்பினார்.
இதையடுத்து மீண்டும் ஈரோடு கொரோனா இல்லாத மாவட்டமாக இருந்து வந்தது. கிட்டத்தட்ட 6 நாட்களுக்கு பிறகு கடந்த 5-ந் தேதி 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து 6-ந் தேதி மேலும் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. நேற்று சுகாதார துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்த 4 நாட்களில் மட்டும் 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 685 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 942 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் மீண்டும் மெல்ல மெல்ல கொரோனா வேகம் எடுக்க தொடங்கி உள்ளது.
இதனால் பொது மக்கள் மீண்டும் பொது இடங்களுக்கு வரும்போது சமூக இடைவெளியை கடைபிடித்து முககவசம் அணிந்து வரவேண்டும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கோம்பி மாகாணத்தில் சபோன்-லாயி என்ற இடத்தில் செயின்ட் பீட்டர் ஆங்கிலிகன் தேவாலயம் உள்ளது.
கடந்த ஞாயிறு மாலை ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி ஏராளமானவர்கள் இங்கு திரண்டிருந்தனர். சிறுவர்கள் உள்பட பலர் தேவாலயத்துக்கு வெளியே கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, போலீஸ் அதிகாரி ஒருவர் ஓட்டி வந்த கார் திடீரென அவரின் கட்டுப்பாட்டை இழந்து, தேவாலயம் முன் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டும், கார் சக்கரத்தில் சிக்கியும் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதனால், கடும் ஆத்திரம் அடைந்த மக்கள் காரை ஓட்டி வந்த போலீஸ் அதிகாரியையும், அவருடன் இருந்த மற்றொரு போலீஸ்காரரையும் சரமாரியாக தாக்கினர். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். #Nigerian #BrutalAttack
மத்திய இடைநிலை கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ.) பள்ளிகளின் பாடத்திட்டத்தை தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சிக்குழு தயாரிக்கிறது.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் ‘சாதி முரண்பாடு ஆடை விவகாரம்’ என்ற தலைப்பிலான பாடத்தில் நாடார் சமுதாயம் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் இடம் பெற்று இருந்தன.
இதற்கு நாடார் சமுதாயம் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. நாடார் சமுதாயம் சம்பந்தப்பட்ட அந்த தவறான தகவல்களை நீக்க வேண்டும் என்று மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.
போராட்டமும் நடத்தப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.
இதற்கிடையே, சமூக நீதிக்கான வக்கீல்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், சர்ச்சைக்குரிய பாடம் குறித்து ஆய்வு செய்து 3 மாதங்களுக்குள் தகுந்த உத்தரவை தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சிக்குழு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நாடார் சமுதாயம் குறித்த சர்ச்சைக்குரிய பகுதி, பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும், அந்த பகுதியில் இருந்து எந்த கேள்வியும் தேர்வில் கேட்கப்படாது என்றும் சி.பி.எஸ்.இ. தனது இணையதளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சுற்றறிக்கை வெளியிட்டது.
அதன்படி, மேற்படி பாடத்தில் இருந்து எந்த கேள்வியும் தேர்வில் கேட்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய அந்த கருத்துகளை முற்றிலும் நீக்கம் செய்து, புதிய பாடப்புத்தகம் அச்சிடும் பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
இந்த பாடத்துடன் கிரிக்கெட் உள்ளிட்ட மேலும் சில பாடங்கள் என மொத்தம் 70 பக்கங்கள் நீக்கப்பட்டு புதிய பாடங்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சிக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலியா நாட்டில் இயங்கிவரும் அல் ஷபாப் பயங்கரவாதிகள், இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கத்தில் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்நாட்டின் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் இவர்கள் அவ்வப்போது வன்முறை தாக்குதல்களை நடத்தி பலரை கொன்று குவித்தும் வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் மொகடிஷுவில் உள்ள மார்க்கெட் பகுதியில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.
மொகடிஷு மால் அருகே நிகழ்ந்த இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்ததாகவும் அப்பகுதியில் உள்ள சில கட்டிடங்கள் பலத்த சேதமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #Ninekilled #Somalimarket #carbombing #Somalibombing
ஜோலார்பேட்டை அருகே உள்ள பாய்ச்சல் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் மோனிஷ்குமார் (வயது 24). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மேகநாதன் என்பவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
சம்பவத்தன்று மோனிஷ்குமார் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மேகநாதனுக்கும் மோனிஷ்குமாருக்கும் வாய்தகராறு ஏற்பட்டு கை கலப்பாக மாறியது.
பின்னர் அங்கிருந்து சென்ற மேகநாதன் தனது உறவினர்களுடன் மோனிஷ்குமார் வீட்டிற்குள் புகுந்து சரமாறியாக தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர்.
இதில் மோனிஷ்குமார் பலத்தகாயமடைந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
இது குறித்து மோனிஷ்குமார் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் மேகநாதன், ரவிச்சந்திரன், சத்தியமூர்த்தி, யுகேஷ், கிஷோர், சசிகலா, உமா, தனலட்சுமி, சரஸ்வதி உள்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் வால்டிவியா மாகாணத்தின் தலைநகர் வால்டிவியா மற்றும் மாபில் நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது.
இந்த காரில் 10 மாத பச்சிளம் குழந்தை உள்பட 3 பேர் இருந்தனர். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய கார் ஒரு லாரி மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி எதிர் திசைக்கு சென்ற லாரி அந்த வழியாக வந்த வேன் மீது மோதியது.
சங்கிலி தொடர் போல நிகழ்ந்த இந்த கோர விபத்தில் 10 மாத குழந்தை உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 11 பேர் பலத்த காயம் அடைந்தனர். #Chile #RoadCrash

கோவை:
கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக சிறுமியின் வயிறு பெரிதாக காணப்பட்டதோடு அடிக்கடி உடல்நலக்குறைவும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் சிறுமியை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் செல்வபுரம் மற்றும் மாநகர மேற்கு பிரிவு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
