என் மலர்
நீங்கள் தேடியது "பலி"
- ஜனனி (வயது 21) இவர் மெடிக்கலில் பணிபுரிந்து வருகிறார். தன்னு டன் பணிபுரியும் மணி கண்டனுடன் வீட்டிற்கு செல்ல இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்தபோது,எதிர்பா ராத விதமாக 2 இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள் ளானது
- இதில்5 பேரும் படுகாயம் அடைந்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள திம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகள் ஜனனி (வயது 21) இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள மெடிக்கலில் பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் பணியை முடித்துக் கொண்டு தன்னு டன் பணிபுரியும் மணி கண்டனுடன் திம்மாபுரம் கிரா மத்தில் உள்ள வீட்டிற்கு செல்ல இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்தார். சின்னசேலம் மின்சார அலுவலகம் அருகே சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர்
அப்போது தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் தனது இருசக்கர வாகனத்தின் பின்னால் பேரக்குழந்தைகளான பார்கவி (வயது 12)வெற்றி மாறன் (வயது 7)ஆகியோ ருடன் இருசக்கர வாக னத்தில் வந்தார். எதிர்பா ராத விதமாக 2 இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள் ளானது. இதில்5 பேரும் படுகாயம் அடைந்தனர். 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 5பேரும் சேர்க்கப்பட்டனர். ன்னர் ஜனனியை மட்டும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை ஜனனி பரிதாப மாக இறந்து போனார். இது குறித்து ஜனனி தந்தை சின்ன துரை கொடுத்த புகாரின் அடிப்படையில் சின்ன சேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பத்தலப்பள்ளி மார்க்கெட் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.
- பைக் மோதியதில் ஆனந்தப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள பேடரப்பள்ளியை சேர்ந்த கூலித்தொழிலாளி விஜய் (வயது46), அவரது தந்தை ஆனந்தப்பா 2 பேரும் மோட்டார் சைக்கிளில் பெங்களூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நகைகடை அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது இவர்களுக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் பைக் மோதியதில் ஆனந்தப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதே போல் ஓசூர் அருகே உள்ள சென்னத்தூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்ப்பா (வயது57) இவர் கிருஷ்ணகிரி- ஓசூர் தேசிய நெடுஞ்சாலை பத்தலப்பள்ளி மார்க்கெட் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிரி வந்த வாகனம் இவர் மீது மோதி வெங்கடேசப்பா படுகாயம் அடைந்தார் உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
போகும் வழியில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நெடுஞ்சாலையை கடந்த போது விபத்து
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
கரூர்,
குளித்தலை அருகே திம்மாச்சிபுரம், குடித்தெருவை சேர்ந்தவர் பாக்கியம், (வயது 71). இவர், காவிரி ஆற்றுக்கு சென்று விட்டு, வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்தபோது, கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற பைக், அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பாக்கியத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து பாக்கியம் மகன் பெரியசாமி புகாரின் படி, லாலாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
- பைக்கில் தனியாக சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி விழுந்தவர் பலி
- போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
கரூர்,
குளித்தலை அருகே, அய்யம்பாளையம் பஞ்., குருணிகுளத்துப்பட்டியை சேர்ந்தவர் மும்முடிவேந்தன் (வயது 34), கூலி தொழிலாளி, இவர், ஃபேஷன் ப்ரோ' பைக்கில் குருணிகுளத்துப்பட்டி தேவர்மலை நெடுஞ்சாலையில் முனியப்பன் கோவில் அருகே, சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம டைந்த மும்முடிவேந்தனை, அருகில் இருந் தவர்கள் மீட்டு, கரூர் அரசு மருத்துவம னைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மும்முடிவேந்தன் ஏற்கனவே இறந்துவிட்ட தாக தெரிவித்தனர். இது குறித்து அவரது தாய் கண்ணம்மாள், புகாரின்படி, சிந்தா மணிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
- செந்தில்குமார் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
- போலீசார் அஜாக்கிரதையாக பாதுகாப்பு உபகரணம் இன்றி தொழிலாளியை பணிக்கு அமர்த்திய கட்டிட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை,
கோவை எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, ராமசாமி தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (37). கட்டிட தொழிலாளி. இவர் எஸ்ஓசியில் உள்ள கட்டுமான கட்டிடத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வழக்கம்போல கட்டிடத்தின் 2-வது தளத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இரும்பு கம்பிகளை எடுத்துச் சென்றபோது, கட்டிடத்தின் அருகே சென்ற உயர்அழுத்த மின்கம்பியின் மீது இரும்பு கம்பி உரசியது. இதில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி செந்தில்குமார் படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து செந்தில்குமார் மனைவி காமாட்சி (25) போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் அஜாக்கிரதையாக பாதுகாப்பு உபகரணம் இன்றி தொழிலாளியை பணிக்கு அமர்த்தியதாக கட்டிட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மத்திய பிரதேசத்தின் மொரீனா மாவட்டத்தில் சம்பல் ஆற்றில் இறங்கி நடந்து சென்று உள்ளனர்.
- ஆற்றின் குறுக்கே பாலம் எதுவும் இல்லாத சூழலில், வேறு வழியின்றி கோவிலுக்கு ஆற்றில் இறங்கி சென்று உள்ளனர்.
மத்திய பிரதேசம் மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள சிலாவாத் கிராமத்தில் வசித்து வரும் குஷ்வாஹா சமூகத்தினர் சிலர் ஆண்கள், பெண்கள் என கைலா தேவி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய புறப்பட்டனர்.
அவர்கள் மத்திய பிரதேசத்தின் மொரீனா மாவட்டத்தில் சம்பல் ஆற்றில் இறங்கி நடந்து சென்று உள்ளனர். அவர்கள் ஆதரவாக ஒருவருக்கு ஒருவர் கையை பிடித்தபடி தண்ணீரில் நடந்து உள்ளனர். இந்த ஆற்றில் முதலைகள் அதிகம் உள்ளன என கூறப்படுகிறது.
அப்போது திடீரென ஒரு முதலை அவர்களை தாக்கி உள்ளது. இதனால் பயந்து போன அவர்கள் நீரில் மூழ்கி உள்ளனர். ஆற்றில் நீரோட்டமும் அதிகளவில் இருந்து உள்ளது. இதில், 8 பேர் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். மற்ற 9 பேர் நீந்தி கரை சேர்ந்து விட்டனர்.
ஆற்றின் குறுக்கே பாலம் எதுவும் இல்லாத சூழலில், வேறு வழியின்றி கோவிலுக்கு ஆற்றில் இறங்கி சென்று உள்ளனர். போலீசார் இதுவரை தேவகிநந்தன் (வயது 50), என்ற ஆண், கல்லோ பாய் என்ற பெண் மற்றும் அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவர் என 3 பேரின் உடல்களை மீட்டு உள்ளனர். மீதமுள்ள 5 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்து இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
- பிரேக்கர் எந்திரம் மூலம் உடைத்தபோது சம்பவம்
- வழக்கு பதிந்து போலீசார் விசாரணை
திருச்சி,
மன்னச்சநல்லூர் மேற்கு சமயபுரம் எஸ். கண்ணனூர் ஹரிஜனதெரு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் தினேஷ்குமார் (வயது 27) இவர் சமீபத்தில் பிரேக்கர் எந்திரம் ஒன்று வாங்கியுள்ளார்.
இதனைக் கொண்டு பழைய வீடுகள் மற்றும் சுவர்களை உடைக்கும் பணிகளுக்கு சென்று வந்தார். வழக்கம்போல் எடுமலை முஸ்லிம் தெருவில் உள்ள ஒருவரது வீட்டில் அந்த பிரேக்கர் எந்திரம் மூலம் சுவற்றினை உடைத்துக் கொண்டு இருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து தினேஷ்குமார் கீழே விழுந்தார். இதில் அவரது தலை மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு தினேஷ் குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக அவரது தாயார் சகுந்தலா சிறுகனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திடீரென லிப்ட் கதவு மூடப்பட்டு மேலே சென்றது. அங்கிருந்து பலத்த சத்தம் எழுப்பியபடி வேகமாக கீழே விழுந்தது.
- அங்கிருந்த தொழிலாளர்கள் லிப்டை உடைத்து 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், என்.டி.ஆர். மாவட்டம், கொண்டப்பள்ளியில் உள்ள நர்லா தட்டாராவில் அனல் மின் நிலையம் உள்ளது.
இங்கு 5-ம் கட்ட என்டிபிஎஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக 800 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனுமின் நிலைய கட்டுமானப் பணி நடந்து வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சில நாட்களாக வேலை செய்து வருகின்றனர்.
70 மீட்டர் உயரத்தில் வேலை செய்ய தொழிலாளர்கள் 310 டிகிரி கொண்ட லிஃப்டில் ஏறினர். ஜிதேந்திரசிங், சோட்டூசிங் உள்ளிட்ட 20 தொழிலாளர்கள் லிப்டில் மேலே சென்று கட்டுமான பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் மீண்டும் லிப்டில் கீழே வந்தனர். லிப்ட் கதவு திறக்காததால், தொழிலாளர்கள் உள்ளேயே சிக்கினர். சாவியை போட்டு லிப்டை திறந்தனர்.
அப்போது 20 தொழிலாளர்களில் 18 பேர் வெளியே வந்தனர். மேலும் 2 பேர் வர முற்பட்ட போது, திடீரென லிப்ட் கதவு மூடப்பட்டு மேலே சென்றது. அங்கிருந்து பலத்த சத்தம் எழுப்பியபடி வேகமாக கீழே விழுந்தது. இந்த விபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஜித்தேந்திரா சிங், சோட்டு சிங் ஆகியோர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தனர்.
அங்கிருந்த தொழிலாளர்கள் லிப்டை உடைத்து 2 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வரும்வழியிலேயே அவர்கள் 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரே குடும்பத்தை ேசர்ந்த 3 குழந்தைகளும் பலியானதால் கிராமம் சோகத்தில் மூழ்கியது.
- குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா உலகம்பட்டி ஊராட்சி படமிஞ்சி கிராமத்தை சேர்ந்தவர்கள் லட்சுமணன், நாகராஜன். இவர்கள் இருவரும் சகோதரர்கள். இதில் லட்சுமணன் சமீபத்தில் இறந்துவிட்டார். அவரது மனைவி தனம் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இவர்க ளின் குழந்தைகள் மகேந்தி ரன் (7), சந்தோஷ்(4), நாகராஜன் தம்பதியின் மகள் யாமினி என்ற மீனாட்சி (10).
இவர்களின் பெற்றோர் நேற்று வேலைக்கு சென்று விட்ட நிலையில் 3 குழந்தை களும் அருகில் உள்ள செட்டி ஊரணியில் குளித்த னர். அப்போது அடுத்தடுத்து 3 குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி விட்டனர்.
இந்த நிலையில் வீடு திரும்பிய பெற்றோர்கள் குழந்தைகளை தேடினர். அப்போது ஊரணியில் மூழ்கி 3 குழந்தைகளும் பலியானது தெரியவந்தது. பின்னர் பலியான 3 குழந்தைகளின் உடல்களும் மீட்கப்பட்டன.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் உலகம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான 3 குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றி பொன்னமராவதியில் உள்ள வலையப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் 3 குழந்தைகளின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன்-தம்பியின் குழந்தைகள் 3 பேர் பலியான சம்பவம் படமிஞ்சி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உளளது.
பாதிக்கப்பட்ட குழந்தை களின் குடும்பங்களுக்கு அரசு நிதி உதவி வழங்குவ தோடு பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பண்ருட்டி அருகே மதில் சுவரில் மோதி முதியவர் பலியானார்.
- தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
கடலூர்:
பண்ருட்டி தாலுகா காடாம்புலியூர் பி.ஆண்டிகுப்பத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 57). இவர் நேற்றிரவு 10 மணிக்கு மாம்பட்டு வினித் கார்டன் எதிரே மெயின் ரோட்டில் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி வினித் கார்டன் எதிரே உள்ள பள்ளத்தில் விழுந்து, மதில் சுவரில் மோதி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிர் இழந்தார்.
இது பற்றி தகவலறிந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து கமலக்கண்ணன் உடலை கைப்பற்றி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
- எல்வோரா மாகாணத்தில் பலர் இடிபாடுகளி