என் மலர்
நீங்கள் தேடியது "சேலம்"
- சிலையில் முருகனின் முக அமைப்பு, உடல் அமைப்பு சரியில்லை என்று விமர்சனம் எழுந்தது
- முருகன் சிலை சுமார் 40 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே ராஜ முருகன் கோவிலில் 56 அடி உயரத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் முருகன் சிலை அமைக்கப்பட்டது. இந்த முருகன் சிலையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
முருகன் சிலையில் முருகனின் முக அமைப்பு, உடல் அமைப்பு சரியில்லை என்று சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சனம் செய்தனர்.
இது குறித்து சிலை வடிவமைத்தவரிடம் கேட்டதற்கு "இதுவரை முருகன் சிலை எங்கும் வடிவமைத்தது கிடையாது. எனக்குத் தெரிந்தது எல்லாம் முனீஸ்வரன் சிலை மட்டுமே. அதைத்தான் இதுவரை வடிவமைத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.
இதையடுத்து, சுமார் ரூ.40 லட்ச மதிப்பில் கட்டப்பட்ட இந்த முருகன் சிலையை பக்தர்களின் கோரிக்கைக்கிணங்க கோவில் நிர்வாகம் புனரமைத்தது.
இந்நிலையில், சிலை மாற்றியமைக்கப்பட்ட நிலையில், இன்று முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- சிலையில் முருகனின் முக அமைப்பு, உடல் அமைப்பு சரியில்லை என்று விமர்சனம் எழுந்தது
- முருகன் சிலை சுமார் 40 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே ராஜ முருகன் கோவிலில் 56 அடி உயரத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் முருகன் சிலை அமைக்கப்பட்டது. இந்த முருகன் சிலையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
முருகன் சிலையில் முருகனின் முக அமைப்பு, உடல் அமைப்பு சரியில்லை என்று சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சனம் செய்தனர்.
இது குறித்து சிலை வடிவமைத்தவரிடம் கேட்டதற்கு "இதுவரை முருகன் சிலை எங்கும் வடிவமைத்தது கிடையாது. எனக்குத் தெரிந்தது எல்லாம் முனீஸ்வரன் சிலை மட்டுமே. அதைத்தான் இதுவரை வடிவமைத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.
இதையடுத்து, சுமார் ரூ.40 லட்ச மதிப்பில் கட்டப்பட்ட இந்த முருகன் சிலையை பக்தர்களின் கோரிக்கைக்கிணங்க புனரமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.
இந்நிலையில், இந்த முருகன் சிலை புனரமைக்கப்ட்டுள்ளது. சிலை மாற்றியமைக்கப்பட்ட நிலையில், இன்று முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது
- 2 பேரின் உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.
- குட்டையில் காணாமல் போன மூதாட்டிகள் பாவாயி, பெரியம்மாள் ஆகியோர் பிணமாக கிடப்பதாக மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சேலம்:
சேலம் இளம்பிள்ளை அருகேயுள்ள இடங்கணசாலை நகராட்சிக்குட்பட்ட தூதனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாவாயி (70) விவசாய கூலி தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் பெரியம்மாள் (75) ஆடுகளை வளர்த்து வாழ்ந்து வந்தார். இவர்கள் 2 பேரும் நேற்று காலை 9 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றனர். பின்னர் அவர்கள் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து 2 பேரின் உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்கள் காணவில்லை. இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தூதனூர் பகுதியில் அம்மாசி என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் உள்ள தண்ணீர் குட்டையில் காணாமல் போன மூதாட்டிகள் பாவாயி, பெரியம்மாள் ஆகியோர் பிணமாக கிடப்பதாக மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மகுடஞ்சாவடி போலீசார் தீயணைப்பு துறை வீரர்கள் உதவியோடு 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மூதாட்டிகள் அணிந்திருந்த நகைகள் காணாமல் போனதால் நகைக்காக 2 மூதாட்டிகளையும் மர்ம நபர்கள் கொலை செய்து கல்குவாரி தண்ணீரில் வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- ஸ்ரீ சென்றாய பெருமாள் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
- எடப்பாடி பழனிசாமிக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், அதிமுக சார்பில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்கிற பிரசார பயணத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளி ஒன்றியத்தில் உள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், இபிஎஸ் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
தொடர்ந்து, சூரப்பள்ளி அருகே, நொரச்சிவளவு பகுதியில் உள்ள ஸ்ரீ காளியம்மன் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, எடப்பாடி பழனிசாமிக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
- தமிழகத்தின் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கி கடந்த 30-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.
- சேலம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் இயல்பான அளவு 406.4 மி.மீ. ஆகும்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளதால் 70 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பியே உள்ளனர். இங்கு மேட்டூர் அணை இருந்தாலும் நேரடி பாசனம் குறைந்த அளவிலேயே உள்ளது. தற்போது சரபங்கா நீரேற்று திட்டம் மூலம் சேலம் மேற்கு மாவட்ட பகுதிகளில் ஒரு பகுதி பாசன வசதி பெற்றுள்ளது. ஆனாலும் ஓமலூர், காடையாம்பட்டி மற்றும் சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளுக்கு மேட்டூர் அணை தண்ணீர் செல்லாததால் இந்த பகுதிகள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளது.
இந்தநிலையில் தமிழகத்தின் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 1-ந் தேதி தொடங்கி கடந்த 30-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் அதனை எதிர்பார்த்து விவசாயிகள் உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையின் இயல்பான அளவு 406.4 மி.மீ. ஆகும். ஆனால் நடப்பாண்டில் 339.2 மி.மீ. மழையே பதிவாகி உள்ளது. இது வழக்கத்தை விட 67.2 மி.மீ. குறைவாகும். இதனால் நடப்பாண்டில் வழக்கத்தை விட 17 சதவீதம் தென்மேற்கு பருவமழை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் நீர் நிலைகளில் வழக்கத்தை விட குறைந்த அளவே தண்ணீர் இருப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். ஆனாலும் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்பதால் அந்த மழை கூடுதலாக பெய்து தங்களுக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.
- துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் பங்கேற்று அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
- 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
சேலம்:
தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கி கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி வருகிற 16-ந் தேதி காலை 10 மணிக்கு சேலம் கருப்பூரில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது.
இதில் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் பங்கேற்று அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதே போல மற்ற இடங்களுக்கும் காணொலி வாயிலாக இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
பிற்பகல் 3 மணியளவில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மறு சீராய்வு கூட்டத்தில் பங்கேற்கும் அவர் மாவட்டத்தில் ஏற்கனவே செய்துள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். தொடர்ந்து இனி வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த நிகழ்வுகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி, எம்.பி.க்கள் டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர். சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க நாளை மறுநாள் 15-ந் தேதி மாலை துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் சேலம் வருகிறார். அப்போது அமைச்சர் ராஜேந்திரன், எம்.பி.க்கள் டி.எம். செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் தலைமையில் கட்சியினர் பல ஆயிரம் பேர் திரண்டு உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
மேலும் அவர் வந்து செல்லும் பகுதிகளில் மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி, போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் ஆகியோர் தலைமையில் 1000-த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
- ஏத்தாப்பூர், வீரகனூர், கரியகோவில் உள்பட பல பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை.
- மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.
குறிப்பாக சேலம் கிழக்கு மாவட்ட பகுதிகளான வாழப்பாடி, ஏத்தாப்பூர், வீரகனூர், கரியகோவில் உள்பட பல பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
ஏற்காட்டில் நேற்று பெய்த சாரல் மழையால் அங்கு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் அங்கு ரம்மியமான சூழல் நிலவியதால் அங்கு வசிக்கும் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர்.
சேலம் மாநகரில் நேற்றிரவு 7 மணியளவில் தொடங்கிய மழை சாரல் மழையாக அரை மணி நேரம் பெய்தது . மழையை தொடர்ந்து சேலம் மாநகரிலும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக வாழப்பாடியில் 28 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 8.4, ஏற்காடு 12.8, வாழப்பாடி 28, ஆனைமடுவு 17, ஆத்தூர்11.6, கெங்கவல்லி 10, தம்மம்பட்டி 15, ஏத்தாப்பூர் 27, கரியகோவில் 22, வீரகனூர் 20, நத்தக்கரை 15, ஓமலூர் 1.5, டேனீ ஷ்பேட்டை 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 189.80 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
- தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.
- ஏற்காட்டில் நேற்று மாலை 1 மணிநேரத்திற்கும் மேல் கன மழை பெய்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது . அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது.
குறிப்பாக சங்ககிரி, தம்மம்பட்டி, மேட்டூர், ஆத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. சிற்றோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் ஏரி, குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏற்காட்டில் நேற்று மாலை 1 மணிநேரத்திற்கும் மேல் கனமழை பெய்தது. சேலம் மாநகரில் நேற்று மாலை 5 மணியளவில் அரை மணி நேரம் மழை பெய்தது. மழையயை தொடர்ந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சங்ககிரியில் 25.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
சேலம் மாநகர் 10.4, ஏற்காடு 9.8, வாழப்பாடி 2.6, ஆனைமடுவு 12, ஆத்தூர் 15, கெங்கவல்லி 11, தம்மம்பட்டி 18, கரியகோவில் 1, வீரகனூர் 12, எடப்பாடி 4, மேட்டூர் 14.6, ஓமலூர் 1.5 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 137.1 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
இதேபோல் நாமக்கல் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அதேபோல் நேற்றும் மங்களபுரம், ராசிபுரம், கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. நாமக்கல் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
எருமப்பட்டி-3, குமாரபாளையம்-9.20, மங்களபுரம்-23.60, நாமக்கல்-8, புதுச்சத்திரம்-17.30, ராசிபுரம்-10, சேந்தமங்கலம்-4, திருச்செங்கோடு-4, கொல்லிலை செம்மேடு-15, கலெக்டர் அலுவலகம்-2.50 என மாவட்டம் முழுவதும் 96.60 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.
- நீர்மட்டம் 113.69 அடியாகவும், நீர் இருப்பு 83.76 டி.எம்.சி,யாகவும் உள்ளது.
- அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 16,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சேலம்:
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பருவமழையின் காரணமாக கர்நாடக அணைகளான கபினி,கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது கடந்த 2 நாட்களாக மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 16,361 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை 18,220 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 113.69 அடியாகவும், நீர் இருப்பு 83.76 டி.எம்.சி,யாகவும் உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 16,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- அன்று இரவு அங்கேயே தங்குகிறார்.
- டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (புதன்கிழமை) சேலம் மாவட்டம் செல்கிறார்.
மாலை மேட்டூர் செல்லும் அவர் 11 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும் 'ரோடு ஷோ'வில் பங்கேற்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறார்.
தொடர்ந்து மேட்டூரில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆய்வு மாளிகையில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார். அன்று இரவு அங்கேயே தங்குகிறார்.
நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சேலம் வருகிறார்.
காலை 11 மணிக்கு இரும்பாலை பகுதியில் உள்ள மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
- எடப்பாடி பழனிசாமியின் சேலம் வீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது
- மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் வீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
கடந்த மாதம் இதேபோன்று சென்னையில் உள்ள இபிஎஸ் இல்லத்திற்கு மிரட்டல் வந்தபோது சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
- நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
குறிப்பாக மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு 10 மணியளவில் தொடங்கிய மழை அதிகாலை 3 மணி வரை சுமார் 5 மணி நேரம் கன மழையாக கொட்டியது. இடைவிடாது பெய்த இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் சிற்றோடைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் ஏரிகளுக்கும் தண்ணீர் வர தொடங்கி உள்ளது.
இதே போல சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான ஆனைமடுவு, ஆத்தூர், தம்மம்பட்டி, கரியகோவில், எடப்பாடி, ஏற்காடு உள்பட பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டியது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
குறிப்பாக ஏற்காட்டில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவில் கன மழையாக கொட்டியது. தொடர்ந்து இன்று காலை வரை சாரல் மழையாக பெய்து வருகிறது. மழையை தொடர்ந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுவதால் அங்கு தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்துள்ளனர்.
சேலம் மாநகரில் நேற்றிரவு 9 மணிக்கு தொடங்கிய மழை அதிகாலை 1 மணி வரை சாரல் மழையாக பெய்தது. இந்த மழையால் மாநகரில் நெத்திமேடு, அன்னதானப்பட்டி, லைன்மேடு, அம்மாப்பேட்டை ஜோதி தியேட்டர், கிச்சிப்பாளையம் நாராயண நகர், சத்திரம் உள்பட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து ஓடியது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
சேலம் மாநகர் மற்றும் புறநகரில் பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இந்த மழை விவசாய பயிர்களுக்கும் உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் அதிக பட்சமாக மேட்டூரில் 100.6 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் 39.4, ஏற்காடு 30, வாழப்பாடி 16.6, ஆனைமடுவு 58, ஆத்தூர் 46, கெங்கவல்லி 29, தம்மம்பட்டி 55, ஏத்தாப்பூர் 20, கரியகோவில் 40, வீரகனூர் 29, நத்தக்கரை 27, சங்ககிரி 4.3, எடப்பாடி 30.6, ஓமலூர் 18, டேனீஸ்பேட்டை 23 மி.மீ. மழையும் மாவட்டம் முழுவதும் 566.5 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான சந்திரசேகரபுரம், குருசாமிபாளையம், புதுப்பட்டி, வடுகம், காக்காவேரி, முத்துக்காளிப்பட்டி, ஆண்டகளூர் கேட், மங்களபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக ராசிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை தொடர்ந்து கன மழையாக கொட்டியது. இந்த தொடர் மழையால் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளிக்கிறது. மழையை தொடர்ந்து அந்த பகுதியில் குளிர்ச்சியான சீதோஷ்ன நிலை நிலவி வருகிறது.
கனமழை காரணமாக வயல்களிலும் பள்ளமான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ராசிபுரம் நகரில் உள்ள சாக்கடை கால்வாய்களிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகள் உள்பட எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளித்தது. நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரத்தில் அதிகபட்சமாக 12 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது.
நாமக்கல் நகர பகுதியில் நேற்று மாலை தொடங்கிய மழை அதிகாலை வரை கனமழையாக கொட்டியது. இந்த மழையால் சேலம் சாலை, பரமத்தி சாலை, திருச்செங்கோடு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஒட்டிகள் தவித்தனர்.
எருமப்பட்டியில் 60 மி.மீ., குமாரபாளையம் 34.2, மங்களபுரம் 18.4, மோகனூர் 29, நாமக்கல் 118, பரமத்தி 7, புதுச்சத்திரம் 82, சேந்தமங்கலம் 51, திருச்செங்கோடு 10, கலெக்டர் அலுவலகம் 39.2, கொல்லி மலை 56 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 624.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.






