என் மலர்tooltip icon

    வழிபாடு

    • பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    • தெருக்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

    விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.

    அதன்படி, நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதல் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.


    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மக்கள், தங்கள் வீடுகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை அலங்கரித்து வைத்து பூஜைகள் செய்தனர். மேலும் பூஜைப்பொருட்களையும், விநாயகருக்கு மிகவும் பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல் மற்றும் உணவு வகைகளை படைத்து நைவேத்தியம் செய்தனர். மேலும், தெருக்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.


    விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 



    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷகம்.
    • மதுரை ஸ்ரீ சோமசுந்தரர் நாரைக்கு முக்தி அருளிய காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-11 (புதன்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சதுர்த்தி பிற்பகல் 3.52 மணி வரை பிறகு பஞ்சமி

    நட்சத்திரம் : அஸ்தம் காலை 7.07 மணி வரை பிறகு சித்திரை

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று விநாயகர் சதுர்த்தி, சுபமுகூர்த்த தினம், விநாயகருக்கு 18 படி அரிசியால் கொழுக்கட்டை படைத்தல்

    இன்று ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி. சுபமுகூர்த்த தினம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷகம். மதுரை ஸ்ரீ சோமசுந்தரர் நாரைக்கு முக்தி அருளிய காட்சி. விருதுநகர் ஸ்ரீ சொக்கநாதர் உற்சவம் ஆரம்பம். பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், திருச்சி உச்சிபிள்ளையார் ஸ்ரீ மாணிக்க விநாயகர், மதுரை ஸ்ரீ முக்குறுணி பிள்ளையார், உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகப் பெருமான் கோவில்களில் ஹோமம், அபிஷேகம்.

    மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் ஸ்ரீ முக்குறுணி விநாயகருக்கு 18 படி அரிசியால் செய்யப்பட்ட பெரிய கொழுக்கட்டை படைத்தல். கரூரில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சனம். விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலையில் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பரிவு

    ரிஷபம்-மாற்றம்

    மிதுனம்-தனம்

    கடகம்-நன்மை

    சிம்மம்-வெற்றி

    கன்னி-அசதி

    துலாம்- ஊக்கம்

    விருச்சிகம்-உவகை

    தனுசு- இன்பம்

    மகரம்-ஆதரவு

    கும்பம்-ஆசை

    மீனம்-அமைதி

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    காரிய வெற்றிக்கு கணபதியை வழிபட வேண்டிய நாள். புதிய மனிதர்களின் சந்திப்பு உண்டு. பொருளாதார நிலை உயரும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.

    ரிஷபம்

    நிதிநிலை உயரும் நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். சொத்துகள் வாங்குவதில் இருந்த தடை அகலும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

    மிதுனம்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். ஆதாயம் தரும் வேலை ஒன்றில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு.

    கடகம்

    விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். பொதுநலத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணம் பலன் தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றிய தகவல் உண்டு.

    சிம்மம்

    எதிரிகள் உதிரியாகும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். இனத்தார் பகைமாறும். ஆரோக்கியம் தெளிவு பெறும். கடன் பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள்.

    கன்னி

    நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். குழந்தைகளின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். இடம், பூமியால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். பாதியில் நின்ற கட்டிடப் பணி மீதியும் தொடரும்.

    துலாம்

    தொட்டது துலங்கும் நாள். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். சொத்து விற்பனையால் லாபம் உண்டு. அயல்நாட்டிலிருந்து அனுகூலத்தகவல் கிடைக்கும்.

    விருச்சிகம்

    வெற்றிகள் குவிய விநாயகரை வழிபட வேண்டிய நாள். தொழிலில் எதிர்பார்த்த நன்மை உண்டு. நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்துமுடிப்பீர்கள்.

    தனுசு

    அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு.

    மகரம்

    வளர்ச்சி கூடும் நாள். திட்டமிட்ட காரியம் ஒன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியம் ஒன்று நடைபெறும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

    கும்பம்

    சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். மறதியால் சில பணிகளில் தாமதம் ஏற்படும். உடல் நலனுக்காக செலவிடுவீர் உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    மீனம்

    லாபகரமான நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்துமுடிப்பீர்கள். தொழில்மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். அன்னிய தேசத்திலிருந்து அழைப்புகள் வரலாம்.

    • 21 வகையான இலைகளால் அர்ச்சித்தல் சிறப்பு.
    • அருகம்புல் அர்ச்சனை செய்தால் அதற்கான பலன் ஏராளம் என சொல்லப்படுகிறது.

    வீடுகளில் நாம் அவரவர் சக்திக்கு தக்கவாறு வழிபாடுகளை செய்யலாம். கோலம் போட்ட மனையில் அச்சுமண் பிள்ளையாரை வாங்கி வந்து, அதனை மண்டபத்தில் சின்ன வாழைக்கன்று கட்டி, மாவிலை தோரணங்கள் கட்டி, மலர்களால் அலங்காரம் செய்வார்கள்.

    பின்னர் மண் பிள்ளையாருக்கு சந்தனம், குங்குமம் இட்டு, எருக் கம்பூ மாலை, அருகம்புல் மாலை ஆகியவை அணிவித்து அலங்காரம் செய்வார்கள். விநாயகருக்கு மிகவும் பிரியமான பத்ரம், வன்னிபத்ரம், அருகம்புல் இவைகள் கொண்டு அர்ச்சனை செய்தால் அதற்கான பலன் ஏராளம் என சொல்லப்படுகிறது.

    மேலும் 21 வகையான இலைகளால் அர்ச்சித்தல் சிறப்பு. அந்த இலைகளின் பெயர், அர்ச்சனை செய்தால் கிடைக்கும் பலன்கள் விவரம் வருமாறு: -

    1) முல்லை-அறம், 2) கரிசலாங்கண்ணி-இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள், 3) வில்வம்-இன்பம்; விரும்பியவை அனைத்தும், 4) அருகம்புல் - அனைத்துப் பாக்கியங்களும், 5) இலந்தை - கல்வி, 6) ஊமத்தை - பெருந்தன்மை, 7) வன்னி - இவ்வுலகில் வாழும் காலத்திலும் சொர்க்கத்திலும் பல நன்மைகள், 8) நாயுருவி - முகப்பொலிவு, அழகு, 9) கண்டங்கத்திரி - வீரம், 10) அரளி-வெற்றி.

    11) எருக்கம் கருவில் உள்ள சிசுவுக்கு பாதுகாப்பு, 12) மருதம் - குழந்தை பேறு, 13) விஷ்ணுக்ராந்தி - நுண்ணறிவு, 14) மாதுளை- பெரும்புகழ், 15) தேவதாரு - எதையும் தாங்கும் இதயம், 16) மருவு - இல்லறசுகம், 17) அரசு - உயர் பதவி, மதிப்பு, 18) ஜாதி மல்லிகை -சொந்த வீடு, பூமி பாக்கியம், 19) தாழம் இலை - செல்வச்செழிப்பு, 20) அகத்திக் கீரை - கடன் தொல்லையில் இருந்து விடுதலை, 21) தவனம் - நல்ல கணவன்-மனைவி அமைதல்.

    இந்த 21 இலைகளைத் தவிர நெல்லி, மருக்கொழுந்து, நோச்சி, கரிசலாங்கண்ணி, மாவிலை, துளசி, பாசிப்பச்சை ஆகிய இலைகளாலும் விநாயகருக்கு அர்ச்சனை செய்யலாம். அர்ச்சனை செய்தபின் பலவிதமான கனிகள், முக்கியமாக நாவல் பழம், மாதுளம் பழம், கொய்யாப்பழம், விளாம்பழம் ஆகியவையால் நைவேத்யம் செய்ய வேண்டும்.

    மேலும் பிள்ளையாருக்கு பாயாசம், வடை, அப்பம் ஆகியவைகளும் முக்கியமாக கொழுக்கட்டை பிடித்தமானது.

    • செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி நாள் மிகவும் விசேஷமானதாகச் சொல்லப்படுகிறது.
    • அனுஷ்டித்து விநாயகப் பெருமானை வணங்கித் துதிப்பவருக்கு அவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும்.

    சதுர்த்தி திதி விநாயகப் பெருமானுக்குரிய விரத தினங்களுள் முக்கியமானதாகும். அதில் தேய்பிறை சதுர்த்தியில் அனுசரிக்கப்படும் 'சங்கடஹர சதுர்த்தி விரதம்' தலை சிறந்தது என்று போற்றப்படுகிறது. நவக்கிரகங்களில் ஒன்றான அங்காரகனுக்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாள். அதிலும், செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி நாள் மிகவும் விசேஷமானதாகச் சொல்லப்படுகிறது.

    அங்கராக பகவானுக்கு சதுர்த்தி நாள் எப்படி விசேஷமானது என்பதை பார்க்கவ புராணம் நமக்கு விளங்குகிறது. பரத்வாஜ முனிவரால் கைவிடப்பட்ட குழந்தை பூமியில் கிடந்தது. அதை அதிசயத்துடன் பார்த்த பூமிதேவி வாரி அணைத்துக்கொண்டாள். தனக்கு ஆண்டவனால் அளிக்கப்பட்ட வரப்பிரசாதம் என்று மகிழ்ந்தாள். அந்த குழந்தையின் உடல் மாலை நேரத்தில் செவ்வானம் போல் சிவந்து ஒளியுடன் விளங்கியதால் அங்காரகன் என்று பெயரிட்டு பிரியமுடன் வளர்த்து வந்தாள். குழந்தை அங்காரகன் வளர்ந்து சிறுவனானான். தனது தந்தையைப் பார்க்க விரும்பினான். பூமிதேவி பரத்துவாஜரிடம் கொண்டு போய் ஒப்படைத்தாள். அழகு பொருந்திய தன் மைந்தனை அன்போடு அணைத்துக் கொண்டார் மகரிஷி.

    உரிய காலத்தில் அங்காரகனுக்கு உபநயனம் செய்வித்து, வேதத்தை அவனுக்கு போதித்தார். மேலும் தனது இஷ்ட தெய்வமான விநாயகப் பெருமானின் மூலமந்திரத்தையும் உபதேசம் செய்தார். அங்காரகன் தந்தை காட்டிய வழியில் தனித்திருந்து தவ வாழ்க்கை மேற்கொண்டான். விநாயகப்ெபருமானின் பாத கமலங்களையே சரணம் என்று தியானித்து ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக கடுந்தவம் புரிந்தான்.

    அங்காரகனின் தவம் பலித்தது. அங்காரகனுக்கு விநாயகப் பெருமான் காட்சியளித்து அருள்புரிந்தார்.

    வானில் சந்திரன் உதயமாகும் நேரம் அது செவ்வாய்க்கிழமை, மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி நாள். அங்காரகன் அருள் பெற்ற அந்த புனித நாளில் விரதம் அனுஷ்டித்து விநாயகப் பெருமானை வணங்கித் துதிப்பவருக்கு அவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும்.

    சங்கடங்கள் எல்லாம் பறந்தோடும் பக்தர்களது துயர் நீங்கும் வாழ்க்கை வளம் பெருகும். எனவே அங்காரகனின் நாளான செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி மற்ற சதுர்த்திகளை விட விநாயகருக்கு மிகவும் மகிழ்ச்சித் தரவல்லதாகக் கருதப்படுகிறது. அங்காரகனால் துவங்கப்பட்ட இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்தைக் கடைபிடித்து வருபவர்கள் அடையும் நற்பலன்கள் ஏராளம். கடன், வியாதி, பகை அகலும், செல்வச் செழிப்பு, வித்தை, செல்வாக்கு ஓங்கும். மகப்பேறு கிடைக்கும்.

    • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் நாரைக்கு மோட்சம் கொடுத்தல்.
    • திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    இந்த வார விசேஷங்கள் (26-8-2025 முதல் 1-9-2025 வரை)

    26-ந் தேதி (செவ்வாய்)

    * திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதியம்மன் ரிஷப வாகனத்தில் பவனி.

    * உப்பூர் விநாயகர் ரத உற்சவம்.

    * சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் புறப்பாடு.

    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ரத உற்சவம்.

    * சமநோக்கு நாள்.

    27-ந் தேதி (புதன்)

    * முகூர்த்த நாள்.

    * விநாயகர் சதுர்த்தி.

    * மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் நாரைக்கு மோட்சம் கொடுத்தல்.

    * திருவலஞ்சுழி சுவேத விநாயகர் ரத உற்சவம்.

    * விருதுநகர் சொக்கநாதர் விழா தொடக்கம்.

    * சமநோக்கு நாள்.

    28-ந் தேதி (வியாழன்)

    * முகூர்த்த நாள்.

    * திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * சமநோக்கு நாள்.

    29-ந் தேதி (வெள்ளி)

    * முகூர்த்த நாள்.

    * மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தருமிக்கு பொற்கிழி அருளுதல்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் பவனி.

    * சமநோக்கு நாள்.

    30-ந் தேதி (சனி)

    * திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.

    * திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    31-ந் தேதி (ஞாயிறு)

    * குறுக்குத்துறை முருகப்பெருமான் பவனி.

    * விருதுநகர் சுவாமி குதிரை வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * சமநோக்கு நாள்.

    1-ந் தேதி (திங்கள்)

    * மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் வளையல் விற்ற திருவிளையாடல்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * சமநோக்கு நாள்.

    • சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
    • திருநாரையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-10 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : திருதியை பிற்பகல் 2.21 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம் : அஸ்தம் (முழுவதும்)

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருத்தேரில் வீதி உலா, திருத்தணி, வடபழனி உள்ளிட்ட முருகர் கோவில்களில் அபிஷேகம்

    இன்று சாமவேத உபாகர்மா. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஆவணி பெருவிழா தொடக்கம். கருங்குருவிக்கு உபதேசம் செய்தருளிய காட்சி. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பகவிநாயகர் மாலை திருத்தேரில் திருவீதி உலா. உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகப் பெருமான் ரதோற்சவம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். குரங்கணி ஸ்ரீ முத்து மாலையம்மன் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    திருநாரையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மாற்றம்

    ரிஷபம்-சாந்தம்

    மிதுனம்-மகிழ்ச்சி

    கடகம்-விவேகம்

    சிம்மம்-சிரத்தை

    கன்னி-ஆர்வம்

    துலாம்- ஆதரவு

    விருச்சிகம்-கவனம்

    தனுசு- ஊக்கம்

    மகரம்-கடமை

    கும்பம்-ஓய்வு

    மீனம்-பரிவு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    சமயோசித புத்தியால் சாதனை படைக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். பிரபலமானவர்களின் சந்திப்பு உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டும்.

    ரிஷபம்

    யோகமான நாள். காரிய வெற்றிக்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர். திருமணப் பேச்சுகள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

    மிதுனம்

    பக்கத்தில் உள்ளவர்களின் பாசமழையில் நனையும் நாள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசியவர்களை கண்டு கொள்வீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

    கடகம்

    புதிய பாதை புலப்படும் நாள். பூமி வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் குதூகலப் பயணங்கள் உண்டு. பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்திப்பீர்கள்.

    சிம்மம்

    வளர்ச்சி கூடும் நாள். வருமானத்தடை அகலும். மறதியால் நின்ற பணியை மீண்டும் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    கன்னி

    தனவரவு திருப்தி தரும் நாள். மனதில். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் பணிபுரிவீர்கள். வாகனப் பழுதுகளால் விரயம் ஏற்படும். உறவினர்கள் கேட்ட உதவிகளைச் செய்வர்.

    துலாம்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். தொழிலில் புதிய பங்குதாரர்களை சேர்க்கும் எண்ணம் உருவாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    விருச்சிகம்

    தொட்டது துலங்கும் நாள். தனவரவு தாராளமாக வந்து சேரும். எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டுவந்து சேர்ப்பர்.

    தனுசு

    சொந்த பந்தங்களால் வந்த துயர் விலகும் நாள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். தேக ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றும். தொழில் தொடங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.

    மகரம்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். ஆதாயமற்ற அலைச்சல்களை சந்திக்க நேரிடும். தொழிலில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையும்.

    கும்பம்

    பிறரை விமர்ச்சிப்பதன் மூலம் பிரச்சனைகள் ஏற்படும் நாள். எதிலும் தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். வரவு வருவதற்கு முன்னே செலவு காத்திருக்கும்.

    மீனம்

    புகழ்மிக்கவர்களை சந்தித்து மகிழும் நாள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். அஸ்திவாரத்துடன் நின்ற கட்டிடப் பணி தொடரும் ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும்.

    • பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் குதிரை வாகனத்தில் உலா.
    • மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-9 (திங்கட்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : துவிதியை நண்பகல் 1.15 மணி வரை பிறகு திருதியை

    நட்சத்திரம் : உத்திரம் நாளை விடியற்காலை 5.05 மணி வரை பிறகு அஸ்தம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் குதிரை வாகனத்தில் உலா, திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மாட வீதி புறப்பாடு

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ விநாயகப்பெருமான் புறப்பாடு. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் குதிரை வாகனத்தில் உலா. உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் திருக்கல்யாணம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மாட வீதி புறப்பாடு.

    மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட் நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சோமவார அபிஷேகம். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலை அலங்கார திருமஞ்சனம். கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அன்பு

    ரிஷபம்-நிம்மதி

    மிதுனம்-நன்மை

    கடகம்-வெற்றி

    சிம்மம்-பாசம்

    கன்னி-முயற்சி

    துலாம்- நிறைவு

    விருச்சிகம்-ஆதரவு

    தனுசு- கீர்த்தி

    மகரம்-கவனம்

    கும்பம்-போட்டி

    மீனம்-சிந்தனை

    • மிதுனம்: மனச்சுமை குறையும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும்.
    • கடகம்: வைராக்கியத்தோடு செயல்பட்டு வாக்குறுதியை நிறைவேற்றும் நாள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழிவகை செய்து கொள்ளும் நாள். பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

    ரிஷபம்

    ஆதாயம் எதிர்பார்த்தபடி வந்து சேரும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு. வரன்கள் வாயில் தேடி வரும்

    மிதுனம்

    மனச்சுமை குறையும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். மற்றவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.

    கடகம்

    வைராக்கியத்தோடு செயல்பட்டு வாக்குறுதியை நிறைவேற்றும் நாள். தொழில் வளர்ச்சி கருதிப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

    சிம்மம்

    நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்க்கும் நாள். நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும். புதிய முயற்சியில் வெற்றி உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

    கன்னி

    வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும் நாள். உள்ளம் மகிழும் செய்தி ஒன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம். நீண்ட நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும்.

    துலாம்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். மதியத்திற்குமேல் விரயம் உண்டு. வெளிவட்டார பழக்க வழக்கத்தில் விழிப்புணர்ச்சி தேவை. கொள்கைப் பிடிப்பை தளர்த்திக்கொள்ள நேரிடும்.

    விருச்சிகம்

    யோகமான நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் உண்டு.

    தனுசு

    வரவு திருப்தி தரும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் உண்டு. உத்தியோகத்தில் பதவி உயர்வு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து பணிபுரியும் சூழ்நிலை உருவாகும்.

    மகரம்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். மருத்துவச் செலவு உண்டு. மறைமுக எதிர்ப்புகள் உண்டு.

    கும்பம்

    ஆதாயத்தைவிட விரயம் கூடும் நாள். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. திடீர் செலவுகளைச் சமாளிக்க பிறரிடம் கைமாத்து வாங்கக்கூடிய சூழ்நிலை அமையும்.

    மீனம்

    கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். நண்பர்களிடம் சாமர்த்தியமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வராமல் இருந்த பணவரவு ஒன்று இன்று வரலாம்.

    • இந்த ஆண்டு தசரா திருவிழா அடுத்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் அக்டோபர் 2-ந் தேதி நடக்கிறது.

    இந்தியாவில் மைசூர் தசரா திருவிழாவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா சிறப்பு பெற்றது.

    இந்த ஆண்டு தசரா திருவிழா அடுத்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் அக்டோபர் 2-ந் தேதி நடக்கிறது.

    மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் பக்தர்கள் தொழில் அமைதல், முன்னேற்றம், வேலைவாய்ப்பு, திருமண தடங்கல் நிவர்த்தி, தீராத நோய்கள், மனநலம் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகள் நீங்க வேண்டி அம்மனுக்கு நேர்ச்சையாக ராஜா, ராணி, போலீஸ், பெண் வேடம், குறவன், குறத்தி, குரங்கு, கரடி, புலி, கிரிக்கெட் வீரர் உட்பட 100-க்கு மேற்பட்ட வேடம் அணிவார்கள்.

    இதில் விநாயகர், பார்வதி, பரமசிவன், அம்மன், கிருஷ்ணன், முருகன், ராமன், பண்டாரம் போன்ற சுவாமி வேடங்கள் அணிபவர்கள் குறைந்தது 21 நாட்கள் விரதம் இருப்பார்கள். காளி வேடம் அணிபவர்கள், தீச்சட்டி, எடுப்பவர்கள், வேல் குத்தி வருபவர்கள் 61,41, 31,21 நாட்கள் என தங்கள் வசதிக்கேற்ப விரதம் தொடங்குவார்கள்.

    இன்று(ஞாயிற்றுக்கிழமை) விடுமுறைநாள் என்பதாலும் 41-வது நாள் விரதம் தொடங்குவதாலும் இன்று அதிகாலையிலே பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் வந்து குவிந்தனர்.

    கோவில் நடை காலை 6 மணிக்கு தான் திறக்கும் என்பதல் அதற்கு முன்னரே கடலில் நீராடிவிட்டு கடற்கரையில் விற்கும் துளசி மாலை மற்றும் பாசிமாலை வாங்கி கடல்நீரில் கழுவி சுத்தம் செய்து கொண்டு வந்து கோவில் பட்டர் அய்யப்பனிடம் கொடுத்துமாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

     

    ஏராளமான பக்தர்கள் சிகப்பு ஆடை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள் காலை, இரவு இளநீரு, மதியம் மண்பானையில் சமைக்கப்பட்ட பச்சரிசி சோறு, தாளிக்காத பருப்பு கலந்த உணவு சாப்பிட்டு வருவார்கள். காளி வேடத்தில் 100 சடை, 200 சடை முடி என அணியும் பக்தர்கள் தனியாக தென்னம் ஓலையில் ஊரில்குடில் அமைத்து அதில் முத்தாரம்மன் படம் வைத்து தாங்கள் வேடம் அணிய பயன்படுத்தும் பொருட்களை வைத்து தினமும் காலை, மாலை பூஜை செய்து வழிபடுவார்கள். உடன்குடி, குலசை பகுதியில் காளி வேடம் அணியும் பக்தர்கள் சிலர் இரவில் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசித்து விட்டு இரவில் தங்கி விட்டு காலை யில் வழக்கம் போல் தங்கள் பணிக்கு செல்வார்கள்.

    தற்போது காளி வேடத்திற்கான சடை முடி, கிரிடம், சூலாயுதம், நெற்றி பட்டை,வீரப்பல் போன்ற பொருட்கள் தயாரிக்கும் பணியில் கடந்த 2 மாதமாக ஏராளமான தொழிலாளர் ஈடுபட்டு வருகின்றனர். தசரா திருவிழா அடுத்த மாதம் 23-ந் தேதி தொடங்குவதால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தற்போதிலிருந்தே உடன்குடிக்கு வர தொடங்கி உள்ளதால் உடன்குடி பகுதி கட்ட தொடங்கி உள்ளது. தசரா திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவவர் வள்ளி நாயகம், அறங்காவலர் குழுத் தலைவர் கண்ணன் மற்றும் அறங்காவலர்கள் ஆலய ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • சூரியனார்கோவில் ஸ்ரீசூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை.
    • காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி, சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-8 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : பிரதமை நண்பகல் 12.37 மணி வரை பிறகு துவிதியை

    நட்சத்திரம் : பூரம் பின்னிரவு 3.32 மணி வரை பிறகு உத்திரம்

    யோகம் : சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    காஞ்சி காமாட்சியம்மன், இருக்கன்குடி, சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் காலை பால் அபிஷேகம்

    இன்று சந்திர தரிசனம். சூரியனார்கோவில் ஸ்ரீசூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் மயில் வாகனத்தில் புறப்பாடு. சோழசிம்மபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மப் பெருமாள் வீதியுலா. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர் பவனி. திருச்செந்தூர் ஸ்ரீ முருகப்பெருமான் கேடயச் சப்பரத்தில் பவனி. மிலட்டூர், திண்டுக்கல் கோவில்களில் ஸ்ரீ விநாயகப் பெருமான் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம்.

    திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வத வர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கு காலை சிறப்பு அபிஷேகம். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி, சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உயர்வு

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-மேன்மை

    கடகம்-ஆக்கம்

    சிம்மம்-நட்பு

    கன்னி-பாராட்டு

    துலாம்- சாதனை

    விருச்சிகம்-இரக்கம்

    தனுசு- மாற்றம்

    மகரம்-வாழ்வு

    கும்பம்-லாபம்

    மீனம்-பரிசு

    ×