என் மலர்
வழிபாடு
- வசந்த பஞ்சமி. சஷ்டி வரதம்.
- திருப்போரூர் முருகப்பெருமான் பால் அபிஷேகம்
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு தை-21 (திங்கட்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பஞ்சமி காலை 10.12 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம்: நேரவதி பின்னிரைவு 2.30 மணி வரை பிறகு அஸ்வினி.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: மாலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
வசந்த பஞ்சமி. சஷ்டி வரதம். சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் வெள்ளி சிம்மாசனத்தில் புறப்பாடு. திருச்சேறை ஸ்ரீசாரநாதர் உற்சவம் ஆரம்பம். கலிகம்ப நாயனார் குருபூஜை. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதார் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிரிகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்கசுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ காபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்னகிரீஸ்வரர் தலங்களில் காலை சோமவார அபிஷேகம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருப்போரூர் முருகப்பெருமான் பால் அபிஷேகம்
இன்றைய ராசிபலன்
மேஷம்-தீரம்
ரிஷபம்-வரவு
மிதுனம்-பக்தி
கடகம்-மகிழ்ச்சி
சிம்மம்-சுகம்
கன்னி-முயற்சி
துலாம்- செலவு
விருச்சிகம்-உயர்வு
தனுசு- நட்பு
மகரம்-ஜெயம்
கும்பம்-லாபம்
மீனம்-அன்பு
- சண்முகர் ஆண்டு விழா வருகிற 10-ந்தேதி நடக்கிறது.
- சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்டு 370 வருடங்கள் ஆகிறது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருச்செந்தூர் கோவில் உற்சவரான சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்டு 370 வருடங்கள் ஆகிறது. அதை கொண்டாடும் வகையில் சண்முகர் ஆண்டு விழா வருகிற 10-ந்தேதி நடக்கிறது. அதை முன்னிட்டு அன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்,10 மணிக்கு சண்முகர் அபிஷேகம்,மாலை 3 மணிக்கு பிரதோஷ அபிஷேகம், 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா வந்து கோவில் சேர்தல், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
வருகிற 11-ந் தேதி (செவ்வாய் கிழமை) தைப்பூச திருவிழா நடக்கிறது. தைப்பூசத்தை முன்னிட்டு அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்,காலை 6 மணியில் இருந்து 6.30 மணிக்குள் தீர்த்தவாரி நடக்கிறது.
10 மணிக்கு சண்முகர் அபிஷேகம், பகல் 1 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் தைப்பூச மண்டபத்துக்கு புறப்படுதல், மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அம்மன் மர கேடயத்தில் மேளதாளங்கள் முழங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.
- காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று கொடிமரத்திற்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
மண்ணச்சநல்லூர்:
சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். தமிழ்நாட்டு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர்.
இந்நிலையில் இக்கோயில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாகள் கொண்டாடபடும். அதில் தைப்பூச திருவிழா, பூச்சொரிதல் விழா, சித்திரை தேரோட்டம், ஆகியவை வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் இந்த தைப்பூச திருவிழாவை யொட்டி இன்று காலையில் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் மர கேடயத்தில் மேளதாளங்கள் முழங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.
பின்னர் அம்மனின் திருஉருவப்படம் வரையப்பட்ட துணியாலான கொடியை தங்க கொடிம ரத்தில் கோவிலின் குருக்கள் காலை 7.30 மணிக்கு ஏற்றினர். அதைத்தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்று கொடிமரத்திற்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கோயிலின் அறங்காவல் குழு தலைவர் இளங்கோவன், இணை ஆணையர் பிரகாஷ், உறுப்பினர்கள் சுகந்தி, லட்சுமணன் பிச்சை மணி மற்றும் கிராம முக்கிய ஸ்தர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- இன்று வர சதுர்த்தி விரதம்.
- திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு தை-20 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சதுர்த்தி நண்பகல் 12.29 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம்: உத்திரட்டாதி நாளை விடியற்காலை 4.07 மணி வரை பிறகு ரேவதி.
யோகம்: அமிர்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று வர சதுர்த்தி விரதம். சுபமுகூர்த்த தினம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. காஞ்சி உலகளந்த பெருமாள், குன்றக்குடி ஸ்ரீ முருகப் பெருமாள் கோவில்களில் உற்சவம் ஆரம்பம். மிரட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் பவனி. பழனி ஸ்ரீ ஆண்டவர் தேரெழுந்தூர் ஸ்ரீ ஞான சம்பந்தர் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேைவ. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்லமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-கடமை
ரிஷபம்-வெற்றி
மிதுனம்-நன்மை
கடகம்-பொறுமை
சிம்மம்-ஆதரவு
கன்னி-தெளிவு
துலாம்- சுகம்
விருச்சிகம்-ஆக்கம்
தனுசு- பணிவு
மகரம்-லாபம்
கும்பம்-பெருமை
மீனம்-நன்மை
- குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் திருமஞ்சன அலங்கார சேவை.
- திருவானைக்காவல் ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு தை-19 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திருதியை பிற்பகல் 2.36 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம்: சதயம் காலை 6.58 மணி வரை பிறகு பூரட்டாதி மறுநாள் விடியற்காலை 5.21 மணி வரை பிறகு உத்திரட்டாதி.
யோகம்: அமிர்த, மரணயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 8 மணி வரை
குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் திருமஞ்சன அலங்கார சேவை. திருவானைக்காவல் ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆகிய கோவில்களில் திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர், திரச்சேறை ஸ்ரீ சாரநாதப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி திருமஞ்சன அலங்கார சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தாமதம்
ரிஷபம்-வரவு
மிதுனம்-சுகம்
கடகம்-சிரமம்
சிம்மம்-முயற்சி
கன்னி-மாற்றம்
துலாம்- நட்பு
விருச்சிகம்-தாமதம்
தனுசு- களிப்பு
மகரம்-இன்பம்
கும்பம்-மகிழ்ச்சி
மீனம்-பணிவு
- கருடசேவை உற்சவம் விடிய, விடிய கோலாகலமாக நடந்தது.
- 11 பெருமாள்களும் ஒன்றன்பின் ஒன்றாக முக்கிய வீதிகளை அணிவகுத்து வந்தன.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருநாங்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 11 பெருமாள் கோவில்கள் ஒரே தொகுப்பாக அமைந்துள்ளன. இந்த கோவில்கள் 108 திவ்ய தேச தலங்களாக விளங்குகிறது.
ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் 11 கோவில்களில் இருந்தும் பெருமாள்கள் திருநாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் எழுந்தருளி கருடசேவை உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான கருடசேவை உற்சவம் நேற்று காலை தொடங்கி விடிய, விடிய கோலாகலமாக நடந்தது.
இதனை யொட்டி நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் நடந்த கருடசேவையில் நாராயண பெருமாள், குடமாடு கூத்தர், செம்பொன்னரங்கர், பள்ளிகொண்ட பெருமாள், அண்ணன் பெருமாள், புருஷோத்தம்மன் பெருமாள், வரதராஜன் பெருமாள், வைகுந்தநாதன் பெருமாள், மாதவன் பெருமாள், பார்த்தசாரதி பெருமாள், கோபாலன் பெருமாள் ஆகிய 11 பெருமாள்களும் ஒன்றன்பின் ஒன்றாக முக்கிய வீதிகளை அலங்கரித்தவாறு அணிவகுத்து வந்தன.
அப்போது கிராமமக்கள் 11 பெருமாள்களுக்கும், பட்டு அணிவித்து அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து, நேற்று நண்பகல் முதல் மணிமாடக் கோவில் மண்டபத்தின் முன்பு அனைத்து பெருமாள்களும் எழுந்தருளினர்.
முன்னதாக நாராயணப் பெருமாள் எதாஸ்தானத்தில் இருந்து எழுந்தருளி, மணிமாடக் கோவிலுக்கு வந்த பெருமாள்களை எதிர்கொண்டு அழைக்கும் 'எதிர்சேவை நிகழ்ச்சி' வெகு விமரிசையாக நடந்தது.
அதனைத் தொடர்ந்து, மணவாள மாமுனிகள் சகிதம் திருமங்கை ஆழ்வார் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது பெருமாள்கள் குறித்த பாடல்களை பட்டாச்சாரியர்கள் மற்றும் பக்தர்களால் பாடப்பெற்று திருப்பாவை, மங்களாசாசனம் வைபவம் நடைபெற்றது.
பின்னர், நள்ளிரவு 12 மணியளவில் தங்க கருட வாகனத்தில் வெண்பட்டு குடைகளுடன் சிறப்பு அலங்காரத்தில் நாராயணப் பெருமாள் கோவில் வாயில் முன்பு எழுந்தருளிய 11 பெருமாள்களுக்கும், ஆழ்வாருக்கும் ஒரே நேரத்தில் பாசுரங்கள் பாடி மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்த தங்க கருடசேவை நிகழ்ச்சியை காண மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அலை, அலையாக திரண்டு கோவிந்தா.. கோவிந்தா... கோஷம் முழங்க மனமுருகி வழிபட்டனர்.
பக்தர்கள் வெள்ளத்தில் அணிவகுத்த 11 பெருமாள்களும் நாராயணன் பெருமாள் வீதி, வைகுந்தநாதர் வீதி, கீழ வீதி, நாராயண பெருமாள் தெற்கு வீதி ஆகிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் விடிய, விடிய திருவீதியுலா காட்சி நடைபெற்றது. இரவு முழுவரும் நடைபெற்ற நிகழ்ச்சியால் நகரமே விழாக்கோலம் பூண்டது.
விழாவையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மயிலாடுதுறை, சிதம்பரம், சீர்காழி ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாமும், நாங்கூர் ஊராட்சி சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது.
- மேற்குவங்காளத்தில் குழந்தைகளின் கல்வியைத் தொடங்குகிறார்கள்.
- சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் வண்ண ஆடைகளை அணிவித்து வழிபடுவார்கள்.
ஆடி அமாவாசைக்கு பிறகு வரும் பஞ்சமியை 'கருட பஞ்சமி' என்றும், ஆவணி மாதம் விநாயகர் சதுர்திக்கு மறுநாள் வரும் பஞ்சமியை ரிஷி பஞ்சமி' என்றும் வழிபடுவார்கள்.
அதுபோலவே தை அமாவாசைக்கு பின் வரும் பஞ்சமி திதியை 'வசந்த பஞ்சமி' என்று போற்றும் வழக்கம் உள்ளது. இது தமிழ்நாட்டில் மிகக்குறைவு என்றாலும், வட மாநிலங்களில் இந்த வழிபாடு மிகவும் பிரசித்திப் பெற்றது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சரஸ்வதியை வழிபடும் தினமாக, புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி இருக்கிறது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் கடைசி மூன்று நாட்களில் தான் சரஸ்வதியை போற்றி கொண்டாடுவார்கள்.
ஆனால் வடநாட்டில் இந்த நவராத்திரி நாட்களில் துர்க்கையை விதவிதமாக அலங்கரித்து வழிபாடு செய்வார்கள். அதேநேரம் வசந்த பஞ்சமி தினத்தில் சரஸ்வதியை வழிபடும் வழக்கம் வடநாட்டில் உள்ளவர்களுக்கு இருக்கிறது.
இந்த வசந்த பஞ்சமியானது, முன் காலத்தில் காமன் பண்டிகை' என்ற பெயரில் தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டதாக சொல்லப்படுகிறது.
உலகத்தில் எல்லா விசித்திரமான உயிரினங்களையும் படைத்த பிரம்மனுக்கு, தன் படைப்பின் மீது பரிபூரணமான திருப்தி ஏற்படவில்லை. ஏனெனில் அப்போது உலகமானது, மிகவும் அமைதியாக, ஒலிகள் இன்றி நிசப்தமாக இருந்தது. இது பிரம்மதேவனின் மனதில் வருத்தத்தை உண்டாக்கியது.

அப்போது அவரது கையில் இருந்த கமண்டலத்தில் இருந்து சில துளி நீர் கீழே சிந்தியது. அதில் இருந்து ஒரு பெண் சக்தி வெளிப்பட்டது. அந்த சக்தியானவள், தனது கையில் சுவடிகளையும், ஸ்படிக மாலையையும் தாங்கியிருந்தாள்.
தன்னுடைய வலது காலை மடித்து வைத்து, இடது காலை தொங்க விட்ட நிலையில் வெண் தாமரை மீது அமர்ந்திருந்த அந்த பெண் சக்தி, தன்னுடைய மடியில் வீணை ஒன்றையும் வைத்திருந்தாள். அந்த வீணையை தன்னுடைய மென் கரங்களால் மீட்டத் தொடங்கினாள்.
அப்போது அதில் இருந்து வெளிப்பட்ட தெய்வீக இசை, பிரம்மனின் படைப்புகள் அனைத்திற்கும் ஒசை நயத்தை வழங்கின.
நதி, மரங்கள் அசைந்து காற்றுடன் ஓசையை உண்டாக்கின. கடல் பேரிரைச்சலுடன் அலைகளை வெளிப்படுத்தின. உயிரினங்கள் சத்தமிட்டன. இப்படி இந்த பிரபஞ்சம் முழுமையும் ஒலியை நாதமாகக் கொண்டதாக மாறியது.
இதைக் கண்ட பிரம்மதேவன் மகிழ்ச்சி அடைந்தார். அந்த பெண் சக்தியை பலவிதமாக போற்றினார். அந்த பெண்ணை தன்னுடைய நாக்கில் இருத்திக் கொண்டார். அவளுக்கு 'சரஸ்வதி' என்று பெயரிட்டார். அந்த சரஸ்வதி தேவி தோன்றிய தினமே 'வசந்த பஞ்சமி' என்று கருதப்படுகிறது.
இந்த நாளில் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்து வந்தால், ஞானத்தில் சிறந்து விளங்கலாம். வட மாநிலங்களில் ஒன்றான மேற்குவங்காளத்தில், வசந்த பஞ்சமி அன்றுதான், குழந்தைகளின் கல்வியைத் தொடங்குகிறார்கள்.
அந்த நேரத்தில் குழந்தைகளின் முன்பாக பென்சில், பேனா, சிறிய தொழில்நுட்ப கருவிகள் என்று பலவிதமான பொருட்களை வைப்பார்கள். அதில் இருந்து குழந்தை எதை எடுக்கிறதோ, அதில் அந்த குழந்தைகளுக்கு ஆர்வமும், எதிர்காலமும் அமையும் என்பது அந்த பகுதி மக்களின் நம்பிக்கை.
பஞ்சாப், அரியானா, ஜம்மு-காஷ்மீர், அசாம், திரிபுரா, ஒடிசா ஆகிய பகுதிகளிலும் வசந்த பஞ்சமி அன்று நடைபெறும் சரஸ்வதி வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது.
வசந்த பஞ்சமி தினத்தில் சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் வண்ண ஆடைகளை அணிவித்து வழிபடுவார்கள். அன்று ஒருநாள் மட்டும் மஞ்சள் நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். சரஸ்வதிக்கு மஞ்சள் நிற ஆடை, மஞ்சள் நிற மலர் மாலை அணிவிப்பார்கள்.
பூஜையில் வைக்கப்படும் பிள்ளையாரையும் மஞ்சளில் பிடித்துதான் வைப்பார்கள். சரஸ்வதிக்கு படைக்கப்படும் லட்டு உள்ளிட்ட நைவேத்தியங்களும், மஞ்சள் நிறம் கொண்டதாகவே இருக்கும்.
பஞ்சாப் பகுதிகளில் இந்த காலகட்டத்தில்தான் கடுகு செடியில் மஞ்சள் நிறப்பூக்கள் பரவலாக பூத்துக்குலுங்கும். அதனை அடிப்படையாகக்கொண்டே. அனைத்திலும் மஞ்சள் வண்ணம் பயன்படுத்தப்படுகிறது. இல்லங்களில் கூட அனைவரும் மஞ்சள் நிற ஆடை களையே அணிவார்கள்.
- மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் தெப்போற்சவ உற்சவம் ஆரம்பம்.
- இன்று சுபமுகூர்த்த தினம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு தை-18 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை.
திதி: துவிதியை மாலை 4.30 மணி வரை. பிறகு திருதியை.
நட்சத்திரம்: அவிட்டம் காலை 8.07 மணி வரை. பிறகு சதயம்.
யோகம்: சித்தயோகம்.
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் தெப்போற்சவ உற்சவம் ஆரம்பம். கற்பக விருட்ச சிம்ம வாகனத்தில் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் அன்னை வாகன வீதியுலா. திருவானைக்காவல் ஸ்ரீசிவபெருமாளுக்கு உற்சவம் ஆரம்பம். ஆப்பூதி நாயனாருக்கு குரு பூஜை. திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப்பெருமாளுக்கு தொட்டி திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சனம், ஊஞ்சல் சேவை. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் பல்லக்கில் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீவாகன வெங்கட்ராமன் சுவாமிக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரன், படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்த ரிஷிஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வெற்றி
ரிஷபம்-லாபம்
மிதுனம்-ஆதரவு
கடகம்-ஆக்கம்
சிம்மம்-வரவு
கன்னி-போட்டி
துலாம்-நன்மை
விருச்சிகம்-சுகம்
தனுசு- வாழ்வு
மகரம்-நட்பு
கும்பம்-உவகை
மீனம்- உண்மை
- மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கோவில் முழுவதும் விழாக்கோலம் பூண்டது.
- விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் 108 வைணவ தளங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்று தற்போது 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் 2023-ம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் கும்பாபிஷேகம் 2-ந்தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது. இந்த நிலையில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று மூலவர் சன்னிதானம் மூடப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கோவில் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. இதனைத் தொடர்ந்து வருகிற 2-ந்தேதி கும்பாபிஷேகம் முடிவடைந்து சாமி தரிசனம் செய்ய வழக்கம் போல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
முன்னதாக காலை புண்யாக வாசனம், வாஸ்து சாந்தி, மகா சாந்தி ஹோமம் நடைபெற்றது. பின்னர் மாலையில் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் நேரில் வந்தார். தொடர்ந்து திருப்பதி, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 75 பட்டாச்சாரியார்கள் கலந்து கொண்டு வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜை தொடங்கியது.
தொடர்ந்து அங்குரார்ப் பணம், வேத திவ்யபிரபந்த தொடக்கம் மற்றும் பூர்ணாஹதி நடைபெற்றது. இதில் ஜி.ஆர்.கே.குழும நிறுவன இயக்குநர் ஜி.ஆர்.துரைராஜ், இயக்குனர் கோமதி துரைராஜ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இன்று (30-ந்தேதி) அக்னி பாராயணம், நித்ய ஹோமங்கள் நடைபெற்றது. இன்று மாலை மற்றும் நாளை (31-ந் தேதி) கும்ப ஆராதனம் நடைபெறுகிறது. பிப்ரவரி (1-ந் தேதி) காலை அதிவாஸத்ரய ஹோமம், மஹா சாந்தி திருமஞ்சனம், கடம் புறப்பாடு, மாலை சயனா திவாஸம் மற்றும் பூர்ணாஹதி நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து சிகர விழாவான கும்பாபிஷேக விழா வருகிற 2-ந்தேதி நடைபெற உள்ளது. அன்று காலை விஸ்வரூபம் தரிசனம், பிரதான ஹோமம், மகா பூர்ணாஹதி நடைபெற்று கும்ப புறப்பாடு ஊர்வலமாக சென்று கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
இதனை தொடர்ந்து வேத, திவ்ய பிரபந்த சாற்று முறை, பிரம்ம கோஷம் நடைபெற்று பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இரவு தங்க விசேஷ வாகனத்தில் தேவநாதசுவாமி உபய நாச்சியாருடன் வீதியுலா நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- அம்மன் தங்கக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
- அடுத்த மாதம் மயானக்கொள்ளை நடைபெற இருப்பதால் ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு தை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது.
இதை முன்னிட்டு நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலஸ்தா னத்தில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி குங்குமம், இளநீர் பஞ்சாமிர்தம்,தேன், பன்னீர் உள்ளிட்ட பூஜைப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து தங்ககவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். உற்சவ அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு ராஜராஜேஸ்வரி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார். இரவு 11 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.
அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி அங்காளம்மா, ஓம் சக்தி அங்காளம்மா, என கோஷத்துடன அம்மனை வழிபட்டனர். இரவு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து உற்சவர் அம்மன் கோவிலின் உட்பிரகாரத்துக்குச் சென்றார். ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அடுத்த மாதம் அமாவாசை அன்று மயானக் கொள்ளை விழா நடைபெறுவதாலும் அன்று இரவு அம்மன் ஆண் பூத வாகனத்தில் வீதி உலா வருவதாலும் அன்று இரவு ஊஞ்சல் விழா நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
- பீஷ்மர் இறுதி வரை பிரம்மச்சரியத்தை கடைபிடித்தவர்.
- மனதாலும், உடலாலும் மற்றொருவருக்கு செய்வது மட்டுமே தீமை, அநீதி என்றாகாது.
குருச்சேத்திர போர்க்களத்தில் உடல் முழுவதும் அம்புகள் துளைக்கப்பட்டு, அந்த அம்புகளே படுக்கைகளாக மாறிய நிலையில் படுத்திருந்தார், பீஷ்மர். அவரது உடல் முழுவதும் வேதனையில் துடித்தது.
பீஷ்மரின் தந்தை, நீ விரும்பும் நேரத்தில் தான் உன் உயிர் பிரியும்' என்ற வரத்தை பீஷ்மருக்கு அளித்திருந்தார். ஆனால் தற்போது அவர் உடல் அடையும் வேதகனையால், தன் உயிர் இப்போதே பிரிந்தால் என்ன என்ற எண்ணம் அவருக்கு வந்தது.

அப்போது அங்கு வந்த வியாசரிடம், தன்னுடைய இந்த நிலைக்கு என்ன காரணம்? என்று கேட்டார். அதற்கு வியாசர். "ஒருவர் மனதாலும், உடலாலும் மற்றொருவருக்கு செய்வது மட்டுமே தீமை, அநீதி என்றாகாது.
நம் முன்பாக ஒரு கெட்ட செயல் நடக்கும்போது, அதனை தடுக்காமல் இருப்பதும் கூட பாவம் தான். அதற்கான தண்டனையையும் அந்த நபர் அனுபவித்தே ஆக வேண்டும். அதைத்தான் இப்போது நீ அனுபவிக்கிறாய்" என்றார்.
சிறந்த புத்திசாலியான பீஷ்மர், கவுரவ சபையில் திரவுபதிக்கு அநீதி நிகழ்ந்த போது, அதனை கண்டும் காணாமல் இருந்ததால், தனக்கு ஏற்பட்ட விளைவு இது என்பதை உடனடியாக உணர்ந்து கொண்டார். அதனால் வியாசரிடம். "இதற்கு பரிகாரம் ஒன்றும் இல்லையா?" என்று கேட்டார்.

உடனே வியாசர், "ஒருவர், 'தான் செய்தது மகா பாவம்' என்று உணர்ந்து வருந்தும்போதே, அவரது பாவம் அகன்றுவிடும். அதேநேரம் திரவுபதி, கவுரவ சபையில் அனைவரும் முன்னிலையில் காப்பாற்றும்படி கதறும் போது, கேட்காதது போல் இருந்த உன் செவிகள், பாராததுபோல் இருந்த உன் கண்கள். இது அநீதி என்று சொல்லத் தவறிய உன் வாய், அளப்பரிய வீரம் இருந்தும் உபயோகமின்றி இருந்த உன் வலுவான தோள்கள், வாள் எடுத்து எச்சரிக்காத உன் கைகள், இருக்கையில் இருந்து எழாமல் இருந்த உன் கால்கள், நல்லது எது? கெட்டது எது? என்று சிந்திக்கத் தவறிய உன் புத்தி இருக்கும் தலை ஆகியவற்றிற்கு தண்டனை உண்டு. அந்த வேதனையைப் போக்க சூரியனின் அனுக்கிரகம் தேவை" என்றார்.

பின்னர் எருக்கம் இலைகளைக் கொண்டுவரச் செய்து, பீஷ்மரின் கண், காது, வாய், கை,கால், தோள், தலை ஆகிய 7 அங்கங்களையும் அந்த எருக்கம் இலை வேதனை குறைந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மன அமைதி அடைந்த பீஷ்மர், தான் நினைத்த நொடியிலேயே தன்னுடைய உயிரைத் துறந்தார்.
அப்படி அவர் மரணித்த தினம், ரத சப்தமிக்கு மறுதினமான 'அஷ்டமி திதி' ஆகும். எனவே அதனை 'பீஷ்மாஷ்டமி என்பார்கள்.
பீஷ்மர் இறுதி வரை பிரம்மச்சரியத்தை கடைபிடித்தவர். எனவே பீஷ்மாஷ்டமி அன்று, புனித நீர் நிலைகளுக்குச் சென்று பீஷ்மருக்கும், தன் முன்னோர்களுக்கும் தர்ப்பணம் செய்பவர்களுக்கு எண்ணிய வாழ்க்கை அமையும், வாழ்வில் இன்பம் நிலைபெறும் என்பது ஐதீகம்.
- தியானம், யோகாவைத் தொடங்க ரத சப்தமி சிறந்த தினமாக பார்க்கப்படுகிது.
- 7 எருக்கம் இலைகளை தலையில் வைத்து நீராடுவது மிகவும் அவசியம்.
அமாவாசைக்கு பிறகு வரும் 7-வது நாள் திதியை 'சப்தமி' என்பார்கள். இது சூரியன் அவதரித்த தினம் என்பதால், இதனை ரத சப்தமி' என்று போற்றுகிறார்கள்.

காசியப முனிவருக்கு பல மனைவிகள் உண்டு. அவர்களில் ஒருவர், அதிதி. ஒரு முறை அவர் தன் கணவரான காசியபருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். அப்போது வாசலில் யாசகம் கேட்டு ஒரு அந்தணர் வந்து நின்றார். அப்போது அதிதி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால், மெதுவாக நடந்து சென்று அந்தணருக்கான உணவை எடுத்துக் கொண்டு வந்தார்.
அப்போது யாசகம் கேட்டு வந்த அந்தணர், "உணவு எடுத்துவர இவ்வளவு தாமதமா? நீ என்னை உதாசீனப்படுத்தி விட்டாய். எனவே உன் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான்" என்று சாபம் கொடுத்து விட்டுச் சென்றார்.
பயந்து போன அதிதி, இதுபற்றி தனது கணவரிடம் தெரிவித்தார். காசியபரோ, "நீ வருந்த வேண்டாம். தேவர் உலகத்தில் இருந்து அழிவில்லாத ஒரு மகன் நமக்கு கிடைப்பான்" என்று கூறினார்.
அதன்படியே பிரகாசமான ஒளியுடன் சூரியன், அதிதிக்கு மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த தினமே 'ரத சப்தமி' ஆகும். அன்றைய தினம் சூரியனை நாம் வழிபாடு செய்தால், எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.
அன்றைய தினம் செய்யும் தர்மங்களுக்கு அதிக புண்ணியம் வந்துசேரும். அதேபோல் இந்நாளில் தொடங்கும் தொழில், சிறப்பான வளர்ச்சியைப் பெறும். கணவனை இழந்த பெண்கள், இந்த வழிபாட்டை மேற்கொண்டால் அடுத்த பிறவியில் இந்த நிலை வராது என்கிறது புராணங்கள்.
தியானம், யோகாவைத் தொடங்க ரத சப்தமி சிறந்த தினமாக பார்க்கப்படுகிது. ரத சப்தமி அன்று சூரியனுக்கு சிவப்பு நிற ஆடை அணிவித்து, சிவப்பு நிற மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து, நெய் விளக்கேற்றி வழிபட்டால் சூரியனால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
சூரியனுக்கு உகந்த தானியம், கோதுமை. எனவே ரத சப்தமி அன்று சூரியனுக்கான நைவேத்தியத்தில் கோதுமையால் செய்யப்பட்ட உணவு இருப்பது பெரும் புண்ணியம் தரும்.
ரத சப்தமி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு, சூரியனை வணங்க வேண்டும். பின்னர் சூரியனுக்குரிய துதிகளைச் சொல்ல வேண்டும். ரத சப்தமி அன்று சூரியனுக்கு அர்க்கியம் விடுவது முக்கியத்துவம் வாய்ந்தது.

சூரியனுக்கு உகந்த நைவேத்தியம், சர்க்கரைப் பொங்கல். அதனை சூடாக இருக்கும் போதே நைவேத்தியம் செய்துவிட வேண்டும். வழிபாட்டிற்குப் பிறகு அந்த சர்க்கரைப் பொங்கலை, மற்றவர்களுக்கு வழங்கி நாமும் சாப்பிட வேண்டும்.
ரத சப்தமி நாளில் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தேர்க்கோலம் போடுங்கள். சூரியனுக்கு உகந்த பத்ரம் (இலை), எருக்கம் இலை ஆகும். ரத சப்தமி அன்று ஏழு எருக்கம் இலைகளை தலையில் வைத்து நீராடுவது மிகவும் அவசியம். இதனால் ஆரோக்கியமும் செல்வ வளமும் பெருகும்.
நீராடும் போது ஏழு என்ற எண்ணிக்கையில் எருக்கம் இலைகளை எடுத்து அடுக்கிவைத்து, அதன் மீது அட்சதை, எள் வைக்க வேண்டும். ஆண்கள் என்றால் அதனுடன் விபூதியும், பெண்கள் என்றால் அதனுடன் மஞ்சளும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த இலை அடுக்கை, தலை மீது வைத்து நீராட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக, மின்சாரம் எப்படி உலோகக் கம்பி வழியே பாய்கிறதோ. அப்படி சூரியனின் ஏழு வகைக் கதிர்களும் அன்று மட்டும் எருக்கன் இலை வழியே இழுக்கப்பட்டு, நம் உடலில் பாய்ந்து,உடல் உபாதைகளையும், நோய்களையும் நீக்கும் என்பது ஐதீகம்.
சூரியன், நாராயணரின் அம்சம் என்பதால், ரத சப்தமி தினம் அன்று, பெருமாள் கோவில்களில் அவர் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குவார். சூரியன் வழிபாட்டை தினமும் கூட செய்யலாம்.
இப்படி தினமும் அதிகாலை நீராடி சூரியனை வழிபடுவதன் மூலமாக செல்வந்தராக உயரும் வாய்ப்பு கிடைக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.






