என் மலர்
ஆன்மிகம்
- அமாவாசை நாளில் பிரம்ம முகூர்த்தத்தில் கண் விழிப்பது என்பது விசேஷ சக்திகளை கொடுக்கும்.
- உங்களுக்கு தெரிந்த சிறு சிறு மந்திரங்களை கூட அமாவாசை நாளில் உச்சரித்து பாருங்கள்.
முன்னோர்களின் ஆன்மாக்களை யாரும் பார்க்க முடியாது, ஒவ்வொருவரையும் தனித்தனியாக வணங்கவும் முடியாது. எனவே பஞ்ச பூதங்களையும், நவக்கிரகங்களையும் முன் நிறுத்தி உரிய மந்திரங்களோடு செய்யப்படும் 'தில ஹோமம்', எத்தகைய ஆத்மாவையும் சாந்தி அடைய செய்துவிடும். ஹோமம் செய்ய முடியாதவர்களுக்கு நாளைய அமாவாசை வழிபாடு நல்ல பலன் தரும்.
முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்யாதவனுக்கு 'பித்ரு தோஷம்' ஏற்படும். ஒரு வேளை அதிகமான புண்ணிய பலத்தால், ஒருவன் தன் வாழ்நாளில் பித்ரு தோஷத்தை அனுபவிக்காமல் போகலாம். ஆனால் அந்த பித்ரு தோஷம் அவனது வம்சத்தினரை பாதிக்கும். ஒருவர் தன் தலைமுறைக்கு சொத்து சேர்க்காவிட்டாலும் பரவாயில்லை, பித்ரு தோஷத்தை மட்டும் விட்டுச் செல்லக்கூடாது.
அமாவாசை அன்று முன்னோர்கள் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் திதி, தர்ப்பண பூஜையானது, நம்முடைய வம்சாவழியினருக்கு பெரிதும் நலம் தரும். தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு, வலது ஆள் காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையில் உள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியாக நீரை வார்த்து தரப்படுவதாகும். இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி, மேல்நோக்கி எழும்பிச் சென்று, பல கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடையும். ஒவ்வொரு அமாவாசையன்றும், இந்த சக்தியானது மிகவும் அபரிமிதமாக பெருகுகிறது.
எனவே அமாவாசை தோறும் கட்டாயம் பித்ரு தர்ப்பணம் கொடுப்பது உங்களுக்கு மட்டுமல்லாமல், உங்களுடைய சந்ததியினருக்கும் நல்ல பலன்களை வாரி வழங்கக் கூடியது ஆகும். பித்ரு தர்ப்பணம் செய்ய மறந்தவர்கள் பித்ரு சாபத்திற்கு ஆளாக நேரிடும். இதனால் குடும்பத்தில் பிரச்சனைகளும், நிம்மதி இன்மையும் ஏற்படும். எனவே தவறாமல் ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் உங்கள் முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்து எளிதாக வீட்டிலேயே கூட பூஜை செய்து வழிபட வேண்டும்.
அமாவாசையில் உணவு எதுவும் உண்ணாமல் மந்திரங்களை உச்சரித்து விரதமிருந்து வழிபட்டு வந்தால் சகல பாக்கியங்களும் உண்டாகும் என்கிறது சாஸ்திரம்.
அமாவாசை நாளில் பிரம்ம முகூர்த்தத்தில் கண் விழிப்பது என்பது விசேஷ சக்திகளை கொடுக்கும். இது உங்களிடம் இருக்கும் கெட்ட சக்திகளை விலகி ஓட செய்யும். வீட்டை சுத்தம் செய்ய அன்றைய நாளில் தண்ணீருடன் சிறிது அளவு கல் உப்பு சேர்த்து துடைத்து எடுக்கலாம். காலை, மாலை இரு வேளையும் பூஜை அறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும்.
குறிப்பாக அமாவாசை நாளில் விரதம் இருப்பவர்கள், விரதம் இல்லாதவர்கள் என்று யாராக இருந்தாலும் அசைவ உணவைத் தவிர்ப்பது நல்லது. அமாவாசை நாளின் போது அசைவம் உணவு உண்ணும் பொழுது உடம்பில் ஒருவித அசவுகரியம் உண்டாகும். இது அறிவியல் ரீதியாகவும் உண்மை என்பதால் அமாவாசை தினத்தில் அசைவ உணவு சாப்பிடாமல் இருப்பது நல்லது.
வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்க அன்றைய நாளில் மந்திர ஸ்லோகங்களை உச்சரிக்க வேண்டும். அல்லது ஒலிக்க விடுவதும் செய்ய வேண்டும். உங்களுக்கு தெரிந்த சிறு சிறு மந்திரங்களை கூட அமாவாசை நாளில் உச்சரித்து பாருங்கள். நல்ல பலன்கள் எல்லாம் கிடைக்கும்.
பொன், பொருள் சேரவும், சகல சம்பத்தும் கிடைக்கவும், குலதெய்வ அருள் பெறவும் குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது. ஒரு மண்பானையில் அல்லது செம்பு, பித்தளை கலசத்தில் தண்ணீரை வைத்து பூஜை அறையில் வையுங்கள். அதில் குலதெய்வத்தை நினைத்து ஆவாகனம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு விளக்கு ஏற்றி தீப வழிபாடு செய்வது குலதெய்வ வழிபாட்டை நிறைவு செய்கிறது. உங்களால் முடிந்தால் நைவேத்தியம் வைத்து வழிபடவும், அப்படி இல்லை என்றால் சிறிதளவு கற்கண்டு வைத்து வழிபடுங்கள்.
அமாவாசை தினத்தன்று காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது "ஓம் ஸ்ரீம் என்று சொல்லி உங்கள் குலதெய்வத்தின் பெயரை சொல்லி நமஹ" என்று சொல்லவும். அதாவது குலதெய்வத்தின் பெயர் சுப்பிரமணி என்றால் "ஓம் ஸ்ரீம் சுப்பிரமணி நமஹ" என்று 108 முறை கூற வேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு குலதெய்வம் என் வீட்டிற்கு எழுந்தருள வேண்டும் என்று மனதார வழிபாடு செய்து கொள்ள வேண்டும். அன்று நண்பகல் 12 மணியிலிருந்து 1 மணிக்குள் சைவ உணவுகளை தயார் செய்து கொள்ள வேண்டும்.
ஒரு வாழை இலையை விரித்து அதில் சைவ உணவுகளை படையலாக போட்டு அந்த வாழை இலைக்கும் முன்பாக ஒரு சிறிய கண்ணாடியை வைக்க வேண்டும். அந்த கண்ணாடிக்கு சந்தனம் குங்குமம் வைத்து அதை குலதெய்வமாகவும் நம்முடைய முன்னோர்களாகவும் பாவித்து வழிபாடு செய்ய வேண்டும். பிறகு தேங்காய் உடைத்து பழம் வைத்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி அந்த கண்ணாடியை பார்த்தவாறு குலதெய்வத்திடம் பேசுவது போல் பேசி வீட்டிற்கு எழுந்தருள வேண்டும் என்று பேச வேண்டும்.

பிறகு இந்த படையலில் இருந்து சாதத்தை சிறிதளவு எடுத்து காக்கைக்கு உணவாக வைத்துவிட்டு வழிபாட்டை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த முறையில் அமாவாசை தினத்தன்று குலதெய்வத்தை நினைத்தும் முன்னோர்களை நினைத்தும் சைவப்படையல் இட்டு வழிபாடு செய்பவர்களுக்கு குலதெய்வத்தின் அருளும் முன்னோர்களின் ஆசீர்வாதமும் பரிபூரணமாக கிடைக்கும். அதன் மூலம் நம் வாழ்க்கை சிறந்து விளங்கும்.
குலதெய்வ ஆலயம் செல்ல முடியாதவர்கள் வீட்டிலே வழிபாடு செய்யலாம். அதற்கு மாலை வேலையில் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு குலதெய்வ படத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள் உங்கள் குலதெய்வத்திற்கு பிடித்த நெய்வேத்தியத்தை வைத்து விட்டு நீங்கள் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து கொண்டு உங்கள் குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
இப்படி பிரார்த்தனை செய்யும் நேரத்தில் உங்கள் குலதெய்வத்தின் பெயரை சொல்லி வசி வசி என்ற வார்த்தையும் சேர்த்து சொல்லுங்கள். குலதெய்வமே தெரியாது என்பவர்கள் ஓம் குலதெய்வமே வசி வசி என்ற இந்த மந்திரத்தை மட்டும் சொன்னால் போதும். இதை எத்தனை முறை உங்களால் சொல்ல முடியுமோ அத்தனை முறை சொல்லுங்கள்.
குலதெய்வம் தெரியாதவர்கள் மேல்மலையனூர் அங்காளம்மனை குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு வழிபாடு செய்யலாம். ஏனென்றால் அகிலம் பிறக்கும் முன்பு பிறந்த அங்காளம்மனே அனைத்து சக்திகளுக்கும் ஆதாரமாய் விளங்குகிறாள் அவளே குலதெய்வங்களுக்கெல்லாம் மூல தெய்வமாக காட்சியளிக்கிறாள்.
இவ்வாறு அங்காளம்மனை குலதெய்வமாக ஏற்று வழிபாடு செய்வதனால் தொட்ட காரியங்கள் அனைத்தும் நன்மையில் முடியும், தடைபட்டு வந்த சுப காரியங்கள் விரைவில் நிறைவேறும், வாழ்வில் நிம்மதி ஏற்படும், குடும்பத்தில் அமைதியான சூழல் ஏற்பட்டு, தோஷங்கள் நிவர்த்தி ஆகி, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும்.
குலதெய்வ கோவில்களுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டில் இருந்தவாறு குலதெய்வ வழிபாடு செய்து ஏதேனும் ஒரு ஏழைக்கு உணவளித்த பின் உண்ண வேண்டும். இவ்வாறு வழிபட குலதெய்வ கோவில் சென்று வந்த புண்ணியத்தை பெற முடியும்.
- ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்து வருகிறது.
- சுவாமி சண்முகர் வள்ளி- தெய்வானையுடன் வெள்ளை சாத்தி கோலத்தில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்து வருகிறது.
8-ம் திருவிழாவான இன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.
இன்று அதிகாலை சுவாமி சண்முகர் பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 7.30 மணிக்கு சப்பரம் மேல் கோவில் வந்து சேரவேண்டும். ஆனால் இன்று காலதாமதமாக காலை 8.30 மணிக்கு சப்பரபவனி தொடங்கியது.
சுவாமி சண்முகர் வள்ளி- தெய்வானையுடன் வெள்ளை சாத்தி கோலத்தில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். தொடர்ந்து 11.30 மணிக்கு மேல கோவிலில் இருந்து சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் விஷ்ணு அம்சமாக பச்சை கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. அன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 7 மணியில் இருந்து 7.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 2-ந்தேதி (வியாழக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு கடற்கரையில் பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.
- அக்டோபர் 4-ந்தேதி தசரா பெருந்திருவிழா நிறைவு பெறும்.
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாகவும் தமிழ்நாட்டில் முதலிடம் வகிக்கும் தசரா பெரும் திருவிழா தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டு தோறும் 12 நாட்கள் நடக்கும். இதில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டு தசரா பெரும் திருவிழா அடுத்த மாதம் மாதம் 23-ந்தேதி (செவ்வாய்கிழமை) கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 2-ந்தேதி (வியாழக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு கடற்கரையில் பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது. அக்டோபர் 4-ந்தேதி தசரா பெருந்திருவிழா நிறைவு பெறும்.
திருவிழாவில் பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற தங்கள் வசதிக்கு ஏற்றவாறு 41 நாள், 31 நாள், 21 நாள், 11 நாள், 3 நாள் என விரதம் இருந்து கோவிலில் கொடியேறியதும், கோவிலில் இலவசமாக வழங்கப்படும் மஞ்சள் கயிறான காப்பு வாங்கி வலது கையில் கட்டி தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து கோவிலில் கொண்டு சேர்ப்பதே தசராவின் சிறப்பு அம்சமாகும்.
அந்த வகையில் 61 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் கடந்த 4-ந்தேதியும், 51 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் கடந்த 14-ந் தேதியும், 48 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் கடந்த 17-ந்தேதியும் மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் 41 நாட்கள் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை அணிந்து விரதம் தொடங்க உள்ளனர்.
அதேபோல் 31 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் வருகிற 3-ந் தேதியும், 21 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் 13-ந் தேதியும், 11 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் அடுத்தமாதம் 23-ந்தேதியும் மாலை அணிகிறார்கள்.
விரதம் தொடங்கும் முன் பக்தர்கள் கடலில் நீராடி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துமாலை அணிவித்து விரதம் தொடங்கி வருகின்றனர். பெரும்பாலான மக்கள் வெள்ளி, செவ்வாய் நாட்களில் விரதம் தொடங்கி வருகின்றனர்.
விரதம் தொடங்கியபின் வீட்டில் முத்தாரம்மன் படம் வைத்து சின்னகுடில் அமைத்து தினசரி காலை, மாலை பூஜை செய்து வருவார்கள். தசரா திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்கள் விரதம் தொடங்க தினசரி கோவிலுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். தசரா திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம், அறங்காவலர் குழுத் தலைவர் தாண்டவன்காடு கண்ணன் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். தொழில் ரீதியாகப் புதிய முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள். பிரதிபலன் பார்க்காமல் நீங்கள் செய்த உதவிக்கு நன்றி கிடைக்கும்.
ரிஷபம்
மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வழிபிறக்கும். உத்தியோகத்தில் புதிய வேலையை விட பழைய வேலைக்கே திரும்பி செல்லலாம் என்று நினைப்பீர்கள்.
மிதுனம்
சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் அடையும் நாள். தனவரவு திருப்தி தரும். தக்க விதத்தில் நண்பர்கள் உதவி செய்வர். உறவினர் வழியிலும் உதவிகள் கிடைக்கும்.
கடகம்
காரிய வெற்றி ஏற்படும் நாள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். புகழ் கூடும். புதிய உத்தியோக முயற்சியில் அனுகூலம் கிட்டும். நேற்று பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும்.
சிம்மம்
சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாள். பழைய நண்பர்களின் மூலம் பணத்தேவைகள் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றத்திற்கு முக்கிய புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள்.
கன்னி
உடன் பிறப்புகளின் உதவி கிடைக்கும் நாள். தேங்கிய காரியங்கள் சிறப்பாக நடைபெறும். உடல்நலம் சீராக ஒரு தொகையை செலவிடுவீர்கள். பயணத்தால் பலன் கிடைக்கும்.
துலாம்
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் அரசு பணிக்காக செய்த முயற்சியில் அனுகூலம் உண்டு.
விருச்சிகம்
நல்ல வாய்ப்பு இல்லம் தேடி வரும் நாள். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். தனவரவு திருப்தி தரும். தொழில் ரீதியாகச் சில முக்கிய முடிவெடுப்பீர்கள்.
தனுசு
திட்டமிட்ட காரியம் திசைமாறிச் செல்லும் நாள். கூட்டாளிகளிடம் யோசித்துப் பேசுவது நல்லது. வரவேண்டிய பாக்கிகள் வருவதில் தாமதப்படும். உடல் நிலையில் சோர்வு ஏற்படும்.
மகரம்
விரயங்களை சமாளிக்க வேண்டிய நாள். நாகரீகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடந்த இரண்டு நாட்களாக நடைபெறாத காரியங்கள் இன்று துரிதமாக நடைபெறும்.
கும்பம்
யோகமான நாள். சொத்துகள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். அயல்நாட்டிலிருந்து உத்தியோகம் சம்பந்தமாக எதிர்பார்த்த தகவல் வரலாம். வரன்கள் முடிவாகும்.
மீனம்
ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும் நாள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு. வியாபார விருத்தி ஏற்படும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
- மாத சிவராத்திரி. சுபமுகூர்த்த தினம்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆவணி-5 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : திரயோதசி நண்பகல் 1.45 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம் : பூசம் நள்ளிரவு 1.45 மணி வரை பிறகு ஆயில்யம்
யோகம் : அமித்த, சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
மாத சிவராத்திரி, திருவல்லிக்கேணி ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம், தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்
மாத சிவராத்திரி. சுபமுகூர்த்த தினம். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கமல வாகன பவனி. உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் மயில் வாகனத்தில் புறப்பாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. செறுத்துணை நாயனார் குரு பூஜை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு அபிஷேகம்.
ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சந்திர வல்லப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சனம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நலம்
ரிஷபம்-ஓய்வு
மிதுனம்-சுபம்
கடகம்-செலவு
சிம்மம்-வரவு
கன்னி-ஈகை
துலாம்- நன்மை
விருச்சிகம்-வெற்றி
தனுசு- அமைதி
மகரம்-முயற்சி
கும்பம்-உயர்வு
மீனம்-இன்பம்
- குரு புஷ்ய யோகம் தெய்வீக வலிமையைக் கொண்டுள்ளது.
- புதிய தொழில்களைத் தொடங்குவதற்கும் நாளைய நாள் ஏற்றது.
நாளை (வியாழக்கிழமை) குரு புஷ்ய யோக தினமாகும்.
குரு புஷ்ய யோகம் தினம் என்பது அட்சய திரிதியையை விட அபூர்வமான தினமாகும்.
குருவுக்குரிய வியாழக்கிழமையும், பூச நட்சத்திரமும் எப்போது இணைகிறதோ அந்த நாளே குரு புஷ்ய யோக நாள். புஷ்யம் என்பது பூசம் நட்சத்திரத்தின் வடமொழி பெயர்.
அட்சய திரிதியை ஆண்டுக்கு ஒரு முறையே வரும். குரு புஷ்ய யோகம் ஆண்டின் இரண்டு, மூன்று நாட்களில் வரும். கடந்த ஜூலை மாதம் 24-ந்தேதி மாலை 6.12 மணி முதல் 25-ந்தேதி மாலை 5.57 மணி வரை இந்த யோகம் இருந்தது.
ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி காலை 6.11 மணி முதல் மறுநாள் மதியம் 12.08 மணி வரை 30 மணி நேரம் இந்த யோகம் வருகிறது. இதையடுத்து செப்டம்பர் 18-ந்தேதி மட்டும் காலை 6.09 மணி முதல் 9.28 மணி வரை 3 மணி நேரம் மட்டும் இந்த யோகம் இருக்கிறது.
அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்கினால் பல்கிப் பெருகும் என்ற நம்பிக்கை எவ்வாறு உள்ளதோ அதை விட சிறந்த நாளாக குரு புஷ்ய யோக நாள் அமைகிறது. குருவுக்குரிய நிறம் மஞ்சள். இதனால் மஞ்சள் நிற தங்கம் வாங்குவது மிக மிக யோகம்.
லட்சுமி தாயார், பூசம் நட்சத்திரத்தை தேர்ந்தெடுத்து, அந்த நட்சத்திரத்தில் பிறந்த நாள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். குரு புஷ்ய யோக நாளில் தங்கம் வாங்குவது மிக மிக சிறப்பு என பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவ்வாறு வாங்கும் தங்கம் எதிர்காலத்தில் அவர்களை உச்சத்துக்கு உயர்ந்த அடிப்படையாக அமையும் என்கின்றனர்.
இந்த நாளில் குரு கோவில்களான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், தென்குடித் திட்டை குரு கோவில், சிவகங்கை மாவட்டம், பட்டமங்கலம் குரு கோவில் உள்ளிட்டவற்றுக்கு சென்று வரலாம்.
இது தவிர ஏராளமான குரு கோவில்கள் தமிழகத்தில் உள்ளன. முக்கியமாக இந்த நாளில் திருச்செந்தூரில் முருகப் பெருமானையும், சுற்றுப் பிரகாரத்தில் உள்ள குருவையும் வணங்குவது மிக மிக நலம் தருவதாக இருக்கும்.
செந்தூர் முருகனை, தேவர்களின் குருவான பிரகஸ்பதியே வழிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தந்தைக்கே பாடம் சொன்ன குருநாதனான முருகனை, குருவே வழிபட்டதால் இது இரட்டை குரு தலமாக விளங்குகிறது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளை விட செந்தூர் முருகனை வணங்க ஏற்ற நாள், வியாழன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலங்குடி குருபகவானுக்கு 24 நெய் தீபங்கள் ஏற்றி உட்பிரகாரத்தை 24 முறை மவுனமாக வலம் வந்தால் குருபகவான் திருவருள் கிட்டும்.
சோழவந்தானை அடுத்து குருவித்துறை உள்ளது. இங்கு குருபகவான் தனி சந்நதி கொண்டு அருள்வது அற்புதம். இந்த குருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் ஊற வைத்த கொண்டக்கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து அவருருள் பெறுகின்றனர்.
திருவாரூர் கமலாம்பிகை, குருபகவானின் அம்சமாக அருள்கிறார். குருபெயர்ச்சி அன்று இந்த அம்பிகையை தரிசித்தால் குருதோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.
காரைக்குடியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள பட்டமங்கலத்தில் குருபகவான் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்கிறார். இத்தலத்தில் மட்டுமே ஆலமரத்தோடு அமர்ந்த குருபகவானை தரிசிக்கலாம். இங்குள்ள ஐம்பொன்னாலான குரு பகவானின் திருவுருவை குரு பெயர்ச்சி மற்றும் விசேஷ நாட்களில் மட்டுமே தரிசிக்க முடியும்.
புஷ்ய யோகம் என்பது ஜோதிடத்தில் மிகவும் நல்ல சேர்க்கைகளில் ஒன்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமான பணிகள், முதலீடுகள் அல்லது ஆன்மீக நடைமுறைகளைத் தொடங்க இந்தநாள் மிகவும் சாதகமான காலமாக கருதப்படுகிறது.
புதிய சிகிச்சைகள் அல்லது உடற்பயிற்சி நடைமுறைகளைத் தொடங்குவதற்கும் குரு புஷ்ய யோகம் தினம் முக்கியமானதாக உள்ளது.
குரு புஷ்ய யோகம் என்பது ஜோதிடத்தில் மிகவும் புனிதமான காலமாகும், இது வியாழன் (குரு) மற்றும் புஷ்யா என்ற விண்மீன் கூட்டத்தின் அதன் சக்திவாய்ந்த கலவைக்காக மதிக்கப்படுகிறது.
ஜோதிடத்தில், வியாழன் ஞானம், அறிவு, ஆன்மீகம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை குறிக்கும் மிகவும் நன்மை பயக்கும் கிரகமாக கருதப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தில் வியாழன் செல்வாக்கு வலுவாக இருக்கும்போது, அது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க நேர்மறையான மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.
புஷ்ய நட்சத்திரம் என்பது ஜோதிடத்தில் உள்ள 27 விண்மீன்களில் ஒன்றாகும். இது ஊட்டச்சத்து மற்றும் வளர்ப்பு குணங்களுடன் தொடர்புடையது. இந்த நட்சத்திரத்திற்கு தலைமை தாங்கும் தெய்வம் பிரஹாஸ்பதி (வியாழன்) ஆவார். இது வியாழன் உடன் இணைந்திருக்கும் போது அதன் நல்ல தன்மையை மேலும் பெருக்குகிறது.
புஷ்ய நட்சத்திரத்தின் விண்மீன் கூட்டத்தின் வழியாக வியாழன் வரும்போது, இந்த காலம் குரு புஷ்ய யோகக் காலம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த காலம் திருமண விழாக்கள் அல்லது சொத்து வாங்கும் பொருட்கள் போன்ற தனிப்பட்ட மைல்கற்களுக்கும் ஏற்றதாக கருதப்படுகிறது.
நீங்கள் ஒரு புதிய முயற்சியைத் தொடங்க விரும்பினாலும் அல்லது உங்கள் ஆன்மீக பயிற்சியை ஆழப்படுத்த விரும்பினாலும், குரு புஷ்ய யோகக் காலத்தை புரிந்துகொள்வதும் பயன்படுத்துவதும் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்க முடியும்.

ஜோதிட பாரம்பரியத்தின் படி, திதி நட்சத்திரம் மற்றும் கிழமை ஆகியவற்றின் சில சேர்க்கைகள் மிக உன்னதமான நல்ல நாளாக கருதப்படுகின்றன. எனவே சில செயல்களைச் செய்ய அல்லது புதிய செயலைத் தொடங்குவதற்கு ஏற்றதாக இந்த நாட்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
இந்த குரு பூசம் யோகம் தினம் லட்சுமி தேவியிடம் பிரார்த்தனை செய்வதற்கும் அவரது ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும் மிகவும் புனிதமான நாளாக கருதப்படுகிறது.
நட்சத்திர மண்டலத்தில் குரு (வியாழன்) புனிதமான சுப கிரகமாகும். கடவுள்களால் ஆசீர்வதிக்கப்பட்ட பூசம் நட்சத்திர அதிபதி சனி. பூசம் நட்சத்திரத்தை குருவால் ஆளப்படும் தினம் புனிதமாகிறது, இந்த பூச நட்சத்திரம் இடம்பெற்றிருக்கும் கடக ராசிக்கு அதிபதி சந்திரன், இதன் விளைவாக, குரு மற்றும் சந்திரனின் சாதகமான கலவையானது இந்த நட்சத்திர கூட்டத்திற்குள் உருவாகிறது. எனவே பூசம் நட்சத்திரம் எந்தவொரு புனிதமான செயலையும் செய்ய சிறந்ததாக கருதப்படுகிறது.
அதன்படி தங்கம் வாங்குவதற்கும், முதலீடு செய்வதற்கும், புதிய தொழில்களைத் தொடங்குவதற்கும் நாளைய நாள் ஏற்றது.
நாளை தங்க நகை வாங்கினால் யோகம் பெருகும் என்பது நம்பிக்கை.
நிலம், சொத்து, முதலியன வாங்குவதற்கும் நல்லது.
நிலம், சொத்து, வெள்ளி, மின்னணு பொருட்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல வகையான பொருட்கள் கொள்முதல் செய்ய இந்த நாள் சிறந்த நாளாக பயன்படுத்தப்படுகிறது.
குரு புஷ்ய யோக நாள் மேலும் எதற்கெல்லாம் புனிதமானதாக பார்க்கப்படுகிறது தெரியுமா?
1) புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுதல்
2) மந்திரம் மற்றும் தந்திரத்தை கற்றுக்கொள்வது மற்றும் உங்கள் பெரியவர்கள், குரு அல்லது ஆசிரியரிடம் அறிவைப் பெறுதல், ஆசி பெறுதல்
3) ஒரு புதிய வணிக நிறுவனம் தொடங்க
4) இந்த காலகட்டத்தில் தங்கம் அல்லது வெள்ளி வாங்குவதால் நல்ல அதிர்ஷ்டத்தை அளிப்பதாகக் கருதப்படுகிறது
5) புதிய வாகனம் வாங்குவது
6) புதுமனை புகுவிழா நடத்த, செல்வமும் செழிப்பும் என்றென்றும் நிலைத்திருக்க சனியின் ஆதிக்கத்தைப் பெற்றிருக்கும் பூச நட்சத்திரம் குருவுக்கு உகந்த வியாழக்கிழமை அமையும் போது, மங்களகரமாகிறது. இந்த நாளில் புனித செயல்கள் செய்யலாம்.
இந்த தினத்தில் வாங்கும் சொத்து அல்லது பொருள் பல மடங்கு பெருகும். அதே போல் செய்யும் தர்மம், தானம் பெருகும் என்பது ஐதீகம்.
குரு புஷ்ய யோகம் தெய்வீக வலிமையைக் கொண்டுள்ளது. நாளைய தினம் நீங்கள் எடுக்கும் முயற்சி 99.99 சதவீதம் வெற்றியைத் தருவது உறுதி.
ஆன்மீக மற்றும் மத செயல்களைப் பின்பற்றுபவருக்கு குரு புஷ்ய அமிர்த யோகம் மிகவும் பயனளிக்கிறது. இது பல்வேறு வகையான விஷயங்களைத் தொடங்குவதற்கு மிகவும் நல்ல முகூர்த்த தினமாக கருதப்படுகிறது.
இந்த நாளில் எடுக்கப்பட்ட எந்த வகையான ஆன்மிக சிந்தனை, பூஜை, ஹோமம், யாகம் அதற்குரிய வெற்றியைத் தருகிறது, அதனால் இந்த புண்ணிய நாளின் நல்ல அதிர்ஷ்டம், சிறந்த யோகத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
- டயானாவின் மரணம், சீனாவின் வளர்ச்சி பற்றியும் முன்கூட்டியே கணித்தவர்.
- 2033-ம் ஆண்டு காலநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயரும்.
பல்கேரிய ஆன்மீகவாதியான பாபா வாங்கா, 1911-ம் ஆண்டு பிறந்தார். கண் பார்வையற்ற இவர் எதிர்காலத்தை கணித்துச் சொல்வதில் மிகவும் பிரபலமானவர்.
இவர் எதிர்காலத்தை பற்றி கூறிய பல தகவல்கள் அப்படியே அரங்கேறியுள்ளது.
இவரது கணிப்புகள் பல நேரங்களில் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது. இவரது ஆதரவாளர்கள் இவரை ஒரு தீர்க்கத்தரிசியாகவே நம்புகின்றனர்.
பாபா வாங்கா 1996-ம் ஆண்டே இறந்துவிட்டாலும் இவர் எதிர்காலத்தை பற்றி கணித்து சொன்ன செய்திகள் இன்றும் மக்களிடையே பரவி வருகிறது. அவரது கருத்துகள் மற்றும் எதிர்கால கணிப்புகள் இன்றும் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
உதாரணமாக இவர் 1980 ஆண்டு ரஷ்யாவின் குர்ஸ்க் நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கும் என கணித்துச் சொன்னார். அதேபோல் 2000-ம் ஆண்டில் ரஷ்ய நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்சி 118 பேர் உயிரிழந்தனர்.
1989 -ம் ஆண்டு எக்குப் பறைவகள் அமெரிக்காவை தாக்கும் என கணித்துச் சொன்னார். அதேபோல் 2001-ம் ஆண்டு இரட்டை கோபுரங்கள் விமானம் மூலம் தாக்கப்பட்டது. 1984-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தியின் படுகொலையை கூட கணித்துச் சொன்னார்.
டயானாவின் மரணம், சீனாவின் வளர்ச்சி பற்றியும் முன்கூட்டியே கணித்தவர்.
இப்படி எதிர்காலத்தைப் பற்றி அவர் கணித்துச் சொன்ன பல சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த நிலையில் 2025-ம் ஆண்டு முதல் 5079-ம் ஆண்டு வரை அவர் சொன்ன கணிப்புகள் தற்போது பேசு பொருளாகியுள்ளது.
2025-ம் ஆண்டில் ஐரோப்பாவில் குறிப்பிடத்தக்க மோதல்களால் நிலையற்ற தன்மை ஏற்படும். உலகம் முழுக்க பூகம்பங்கள் மற்றும் வெள்ளம் உள்ளிட்ட ஏராளமான இயற்கை பேரழிவுகள் உலகை உலுக்கும். மனிதர்கள் வேற்று கிரகவாசிளுடன் தொடர்பு கொள்ளுவர் எனவும் அவர் கணித்து கூறியுள்ளார்.
இதேபோல் 2028-ம் ஆண்டு மனிதர்கள் வீனசிற்கு செல்வார்கள்.
2033-ம் ஆண்டு காலநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயரும். 2046-ம் ஆண்டு செயற்கை உறுப்புகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும். 2066-ம் ஆண்டு அமெரிக்கா சுற்றுசூழலை அழிக்கும் ஆயுதத்தை கண்டுபிடிக்கும். 2084-ம் ஆண்டு இயற்கை தன்னை புதுப்பிக்க தொடங்கும்.
2111-ம் ஆண்டு மனிதர்கள் எந்திரங்களாக மாறுவார்கள். 2154-ம் ஆண்டு விலங்குகள் மனிதர்களாக பரிணாமா வளர்ச்சி அடையும். 2170-ம் ஆண்டு பூமி வறண்டு பாலைவனமாகும். 2288-ம் ஆண்டு மனிதனுக்கும் வேற்று கிரகவாசிகளுடன் தொடர்புகள் வலுப்படும். 2341-ம் ஆண்டு விண்கல்லால் பூமிக்கு ஆபத்து வரும்.
3805-ம் ஆண்டு போர்களால் மக்கள் தொகை சரியும். 3854-ம் ஆண்டு மனித குலம் மீண்டும் பழங்குடிமுறைக்கு திரும்பும்.
இப்படியாக 5079-ம் ஆண்டுவரை அவர் பல்வேறு கணிப்புகளை கூறியுள்ளார்.
தற்போது குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கான கணிப்புகள் மற்றும் வரவிருக்கும் கால கட்டத்தில் அவர்களின் வாழ்க்கையில் பணம் மற்றும் செல்வத்தின் அடிப்படையில் என்ன நடக்கும் பற்றி அவர் கணித்து கூறியுள்ளார்.
மேஷ ராசி
மேஷ ராசியை செவ்வாய் ஆட்சி செய்கிறது. இந்த ராசியில் பிறந்தவர்களின் தைரியமும் உறுதியும் அவர்களை விரும்பிய இலக்குகளை அடைய உதவும். நல்ல முதலீட்டு தேர்வுகளை செய்வது தொழில் மாற்றம் செய்வது மற்றும் புதிய தொழிலை தொடங்குவது ஆகியவை வரும் மாதங்களில் இவர்களுக்கு கணிசமான நிதி வளர்ச்சியை ஏற்படும்.
ரிஷப ராசி
சுக்ரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்காரர்கள் நிலையாக இருப்பதால் நல்ல அதிர்ஷ்டத்தை ஈட்டுகிறார்கள். தற்போதைய நிதி நிலைமையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அவர்களின் ஆளும் கிரகம் எதிர்க்காலத்திற்கான விவேகமான முதலீடுகளை செய்ய அவர்களை தூண்டுகிறது. அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு தங்கள் நற்பெயரை உயர்த்தி கொள்ளவும். தங்களின் கடின உழைப்பின் நன்மைகளை பெற வேண்டும். 2025-ம் ஆண்டு கடினமான காலத்திற்கு பிறகு உங்கள் ராசிக்கு புதிய நிலைத்தன்மை உணர்வை தருகிறது.
மிதுனம் ராசி
மிதுன ராசிக்காரர்களை புதன் கிரகம் ஆட்சி செய்கிறது. அவர்கள் எதிர்க்காலத்தை திட்டமிடுவதில் சிறந்து விளங்குகிறார்கள். வரவிருக்கும் மாதங்கள் இவர்களுக்கு பலன் அளிக்கும். எதிர்பாராத வாய்ப்புகள் மன தெளிவு நிறைந்ததாக இருக்கும். எதிர்ப்பாராத விதமாக வெற்றி கிடைக்கும்.
சிம்ம ராசி
சிம்ம ராசிக்காரர்களை சூரியன் ஆளும் கிரகமாக இருப்பதால் அவர்கள் வரும் மாதங்களில் நிறுவனத்தை தொடங்குவார்கள். பல நல்ல சாத்திய கூறுகளின் விளைவாக அவர்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் நீண்ட கால நிதி இலக்குகளை அடைய உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.
இன்று உங்கள் இலக்கை நிர்ணயித்தால் விரைவில் அடுத்த சில மாதங்களுக்குள் தொழில் முறை சாதனை மற்றும் நிதி ஆதாயம் மூலம் நீங்கள் கோடீஸ்வரராக மாறிவீர்கள்.
இவ்வாறு 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் பணக்கார வாழ்க்கை கிடைக்கும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார்.
- தற்போது பிள்ளைகள் பெற்றோர்களுக்கு தமது திருமணத்தை தெரிவிக்கும் காலம் வந்துவிட்டது.
- ஒரு ஜாதகர் பிறந்த அன்றே அவருடைய வாழ்க்கைத் துணை யார் என்று நிர்ணயிக்கப்பட்டு விடும்.
ஒரு காலத்தில் ஆண்கள் மட்டும் சம்பாதித்தார்கள் குடும்பப் பொறுப்பு ஆண்களைச் சார்ந்ததாகவே இருந்தது. ஆனால் தற்காலத்தில் இருபாலரும் சம்பாதித்தால் மட்டுமே குடும்பம் நடத்தக்கூடிய சூழ்நிலைகள் சமுதாயத்தில் நிலவி வருகிறது. ஆண்களுக்கு இணையாக பெண்களும் சகல துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். அதனால் தங்களது திருமண வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை ஜாதகரே தீர்மானிக்கிறார்கள். இந்த சமுதாய மாற்றம் வரவேற்கத்தக்கதாகும். இந்த சமுதாய மாற்றமே பலரின் திருமண வாழ்க்கைக்கு கேள்விக்குறியாக உள்ளது. தற்போது பிள்ளைகள் பெற்றோர்களுக்கு தமது திருமணத்தை தெரிவிக்கும் காலம் வந்துவிட்டது.
திருமணத் தடைக்கு சமுதாய ரீதியான காரணங்கள் என்றால் திருமண வயது வந்தாலும் பலர் நிலையான தொழில், உத்தியோகம் அமைந்த பிறகு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள் அல்லது வாழ்க்கைத் துணை பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இளைய தலைமுறையினர் திருமணத்திற்கு முன்பாக தேவையில்லாத வீண் கற்பனைகளை வளர்த்துக் கொள்வதும், எதிர்பார்ப்புகளை உருவாக்கி கொள்வதுடன் பொறுமையும், சகிப்புதன்மையும் இல்லாததும் ஒரு முக்கிய காரணமாகும்.
ஒரு ஜாதகர் பிறந்த அன்றே அவருடைய வாழ்க்கைத் துணை யார் என்று நிர்ணயிக்கப்பட்டு விடும். தங்கள் ஜாதகரீதியாக தமக்கு வரக்கூடிய வாழ்க்கை துணை எப்படி இருப்பார் என்று தெரிந்து கொண்டு வரன் பார்த்தால் திருமண தடை இருக்காது.
பரிகாரம்: திருமணத்தடை நீங்கி நல்ல வாழ்க்கை துணை அமைய சாஸ்திரத்தில் கூறப்பட்ட ஒரு சிறப்பு பூஜை சுயம்வர பார்வதி ஹோமம் ஆகும்.
திருமணம் ஆனவர்கள் தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், ஒற்றுமையையும் அதிகரிக்க இந்த ஹோமத்தை செய்யலாம். பார்வதி தேவியின் அருளைப் பெற்றால் திருமணத்தடை நிச்சயம் அகலும். இந்த ஹோமத்தை செய்வதன் மூலம் திருமணத்தடை அகன்று ஏற்ற துணையை விரைவில் அடைய முடியும்.
தமிழ்நாட்டில் தொன்மையான பல்வேறு திருமணத்தடை நீக்கும் தலங்கள் உள்ளது. இதில் சென்னை மாநகரத்தை ஆட்சி செய்யும் பாரிமுனை பகுதியில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு அதிக சக்தி உள்ளது.
- வீரராகவன் விறகை வீட்டிற்குள் எடுத்து வந்து, சந்தனம், குங்குமம் பூசி, பூஜை செய்யத் தொடங்கினான்.
- கிராம மக்கள் அனைவரும் அம்மன் சுட்டிக்காட்டிய இடத்தைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டனர்.
செங்கழுநீர் அம்மன் கோவில்
புதுச்சேரியில் வீராம்பட்டினம் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது செங்கழுநீர் அம்மன் கோவில். பல பெருமைகளை கொண்ட இக்கோவிலில் நடக்கும் தேர்த் திருவிழா மிகவும் விசேஷமானதாகும். இக்கோவிலை பற்றி இங்கு பார்ப்போம்.
தல வரலாறு
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு, வீராம்பட்டினம் என்ற கிராமத்தில் வீரராகவன் என்ற மீனவன் வசித்து வந்தான். இவன் அதீத தெய்வ பக்தி கொண்டவன். ஒரு நாள் காலை வேளையில், அருகிலுள்ள ஓடையில் மீன்பிடிக்கச் சென்றான். காலையில் இருந்து மீன் பிடிப்பதற்கு வலை வீசியும் சூரியன் மறையும் வரை ஒரு மீன் கூட கிடைக்கவில்லை. இதனால் மிகவும் வருத்தம் அடைந்தான்.
வீடு திரும்புவதற்கு முன்பு இறுதியாக ஒருமுறை ஓடையில் வலையை வீசினான். அவன் வலையை இழுக்கும்போது, வலை கனமாக இருப்பதை உணர்ந்தான். வலையில் சிக்கி இருப்பது ஒரு மீன் தான் என்று மகிழ்ச்சியுடன் வலையை இழுத்தான். ஆனால் வலையில் ஒரு பெரிய மரத்துண்டு இருப்பதை பார்த்து ஏமாற்றம் அடைந்தான். அவன் அந்த மரத்துண்டை வீட்டிற்கு எடுத்துச் சென்று கொல்லைப்புறத்தில் போட்டான்.
ஒரு நாள் அவரது மனைவிக்கு சமையல் செய்வதற்கு விறகு கிடைக்கவில்லை. அதனால் கொல்லைப்புறத்தில் போட்ட விறகுத்துண்டை எடுத்து கோடரியால் வெட்ட முயன்றான். ஆனால் கோடரியால் வெட்டியும் மரத்துண்டு பிளக்கவில்லை. கோடரி பட்ட இடத்தில் இருந்து ரத்தம் பீரிட்டது. இதை பார்த்ததும் அவரும், அவர் மனைவியும் அதிர்ந்து போனார்கள்.
உடனே வீரராகவன், கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தான். இதைக் கேட்டதும் ஆச்சரியப்பட்ட ஊர் மக்கள் இந்த அதிசயத்தை வந்து பார்த்து வியந்தனர். இதையடுத்து வீரராகவன் விறகை வீட்டிற்குள் எடுத்து வந்து, சந்தனம், குங்குமம் பூசி, பூஜை செய்யத் தொடங்கினான். இந்த சம்பவத்துக்கு பிறகு அவனது வாழ்க்கையில் மகிழ்ச்சியும், வளமும் ஏற்பட்டது.
சில நாட்களுக்குப் பிறகு, வீரராகவனின் கனவில் தோன்றிய அம்மன், ''பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தெய்வீக அருள் பெற்ற ரேணுகைதான் நான். நான் அன்னை பராசக்தியின் அம்சம். இந்த பகுதியில் வாழும் மக்கள் செய்த தவத்தின் பயனாக, இங்கு கோவில் கொண்டு மக்களுக்கு அருள் வழங்க வந்துள்ளேன். என்னுடைய வருகையை உணர்த்தவே, எனது அடையாளமாக உனக்கு இந்த மரத்துண்டு கிடைத்தது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த சித்தர்பீடம் ஒன்று உள்ளது. அதுவே எனக்கு ஏற்ற இடம். அங்கு இந்த மரத்துண்டை வைத்து, அதன்மேல் எனது திருவுருவை பிரதிஷ்டை செய்யுங்கள். என்னை செங்கழுநீர் அம்மன் என்று அழைத்து வழிபட்டு வாருங்கள்'' என்று கூறி மறைந்தார்.
மறுநாள் வீரராகவன், தான் கண்ட கனவுப் பற்றி கிராம மக்களுக்குத் தெரிவித்தான். உடனே கிராம மக்கள் அனைவரும் அம்மன் சுட்டிக்காட்டிய இடத்தைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டனர். அப்போது ஒரு அடர்ந்த புதர் பகுதியில் ஒரு எறும்புப் புற்று இருப்பதை கண்டனர். அதிலிருந்து ஒரு பாம்பு வெளியே வந்து, படம் எடுத்து தரையில் மூன்று முறை அடித்து, சிலையை நிறுவ வேண்டிய இடத்தைக் காட்டியது. அதன்பின் ஊர் மக்கள் அந்த இடத்தை தோண்டி சுத்தம் செய்தனர். அதைத் தொடர்ந்து வலையில் இருந்து எடுக்கப்பட்ட மரத்துண்டு கொண்டு வரப்பட்டு பீடம் அமைத்தனர். அதன்மேல், அம்மன் சிரசை நிறுவி அம்மனை எழுந்தருள செய்து, 'செங்கழுநீர் அம்மன்' என்ற திருநாமம் இட்டு அழைத்து வருகின்றனர்.
ஆலயம் அமைய வேண்டிய இடத்தைச் சுட்டிக்காட்டிய அந்த பாம்பு, புற்றுக்கும் கோவிலுக்கும் இடையே போய்வந்துகொண்டிருந்தது. அடிக்கடி அன்னையின் திருமேனியில் ஏறி அணிகலன் போல் சுற்றிக்கொண்டும் காட்சி தந்தது. இதனால் அந்த நாகத்தையும் தெய்வச் சின்னமாகவே கருதி மக்கள் வழிபட்டு வந்தனர். சில காலங்கள் கழிந்த பிறகு, பீடமும் சிரசும் பிரதிஷ்டை செய்யப்பட்ட கருவறையில் தேவதாரு மரத்தால் தேவியின் முழு உருவமும் அமைக்கப்பட்டது.
கோவில் அமைப்பு
பல நூற்றாண்டுகளாக ஒரு சிறிய குடிசையிலிருந்த இந்தக் கோவில், படிப்படியாக வளர்ச்சியடைந்து ஒரு பெரிய கோவிலாக உருவெடுத்தது. கோவில், முன் கோபுரம், சுற்று மதில்கள், பிரகார மண்டபம், அழகிய சுதைச் சிற்பங்கள் என்று அழகுற காட்சி தருகிறது. அன்னை நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் கிழக்கு திசை பார்த்தவாறு அருள்பாலிக்கிறார். அன்னையின் திருக்கரங்களில் உடுக்கை, கபாலம், வாள், கப்பரை ஆகியவை உள்ளன. தொடக்கத்தில் இந்த செங்கழுநீர் அம்மனை மீனவ இன மக்கள் மட்டுமே வணங்கி வழிபட்டு வந்தனர். பின்னர், புதுச்சேரி மற்றும் தமிழகத்திலுள்ள மக்களும் செங்கழுநீர் அம்மனை தங்கள் குலதெய்வமாக வணங்கி வருகின்றனர்.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, ஒரு கோவில் தேர் உருவாக்கப்பட்டது, மேலும் புதுச்சேரி மாகாணத்தில் கோவில் தேர் கொண்ட முதல் கோவில் இது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு நடக்கும் தேர்த் திருவிழாவை புதுச்சேரி கவர்னர் தேர் வடத்தை இழுத்து தொடங்கிவைப்பது இன்றும் வழக்கத்தில் இருக்கிறது.
தீராத நோய்கள் அகலவும், கண் பார்வைக் கோளாறு நீங்கவும், திருமணப் பேறு, குழந்தைப் பேறு கிடைக்க வேண்டியும் வருபவர்களுக்கு கண்கண்ட தெய்வமாக இந்த அம்மன் விளங்குவதால், அன்னையை நாடி வரும் பக்தர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகிறது.
திருவிழா
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையில் இருந்து தொடர்ச்சியாக ஆறு வெள்ளிக்கிழமைகள் வீராம்பட்டினமே திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். ஐந்தாம் வெள்ளியன்று தேர்த்திருவிழா நடைபெறும். ஆறாம் வெள்ளியன்று முத்துப் பல்லக்கு திருவிழா நடைபெறும். அலங்கரிக்கப்பட்ட தேரில் செங்கழுநீர் அம்மன் திருவீதி உலா வருவார்.
ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
அமைவிடம்
புதுச்சேரி - கடலூர் நெடுஞ்சாலையில் உள்ளது அரியாங்குப்பம். இங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் வீராம்பட்டினம் உள்ளது. புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இருந்து வீராம்பட்டினத்திற்கு டவுன் பஸ் வசதியும் உண்டு.
- கோவிலில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் அழகுற காட்சி அளிக்கிறது.
- வடமேற்கில் வள்ளி தெய்வானை சமேத முருகன் கிழக்கு நோக்கியபடி உள்ளார்.
சங்கர ராமேஸ்வரர் கோவில் தோற்றம்
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது, சுமார் 500 ஆண்டுகள் பழமையான சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயத்தின் மூலவர் சங்கர ராமேஸ்வரர், அம்பிகை பாகம்பிரியாள்.
தல வரலாறு
தூத்துக்குடியின் பழம்பெயர் 'திருமந்திர நகர்' என்பதாகும். இங்குதான் சிவபெருமான் பிரணவ மந்திரத்தை பார்வதி தேவிக்கு வரையறுத்ததாக நம்பப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த இடம் 'திருமந்திர நகர்' என்று அழைக்கப்பட்டது. திருச்செந்தூர் வந்த காசியப முனிவர் பசுமை நிறைந்த இவ்வூரைக் கண்டு மகிழ்ந்து இங்கு ஒரு சிவலிங்கத்தை எழுந்தருளச்செய்து வழிபாடு நிகழ்த்தினார். அதுவே இந்த சங்கர ராமேஸ் வரர் கோவில் என்று கூறப்படுகிறது. இத்தல இறைவனை காசியப முனிவர், கவுதமர், பரத்துவாஜர், அத்திரி போன்ற முனிவர்கள் வணங்கி அருள்பெற்றுள்ளனர்.
பிற்கால குறுநில மன்னரான சங்கரராம பாண்டியன் கயத்தாறை தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்து வந்தார். இவருக்கு குழந்தை பேறு இல்லை. இதனால் மனம் வருந்திய மன்னன், காசி போன்ற புண்ணிய திருத்தலங் களுக்குச் சென்று புனித நீராடி வந்தார். ஒரு சமயம் மன்னன் தனது பரிவாரங்களுடன் புனித நீராடச் செல்லும்போது, இறைவனது குரல் "பாண்டியா, திருமந்திர நகரில் உள்ள காசிக்கு நிகரான வாஞ்சா புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி, அங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டு வா'' என அசரீரியாக ஒலித்தது. இதையடுத்து சங்கரராம பாண்டியன் வாஞ்சா புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி காசியப முனிவர் உருவாக்கிய சிவலிங்கத்திற்கு திருக்கோவில் ஒன்றை எழுப்பினார்.
கோவில் அமைப்பு
கோவிலில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் அழகுற காட்சி அளிக்கிறது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. இக்கோவிலை ஒட்டி பெருமாள் கோவிலும் உள்ளது. இறைவன் சன்னிதி முன்பு அர்த்தமண்டபம், மகாமண்டபம் உள்ளன. இத்தல இறைவன் லிங்க மூர்த்தியாக உள்ளார். அம்பிகை தெற்கு நோக்கியபடி இரண்டு திருக் கரங்களில் ஒரு கரத்தில் தாமரை ஏந்தியும், மற்றொரு கரத்தை இடையோடு தொங்க விட்டபடியும் பார்க்க ஒரு நாட்டிய மங்கைபோல் காட்சி அளிக் கிறார்.
இறைவன் எதிரில் உயர்ந்த கொடி மரம், நந்தி உள்ளன. அதனை கடந்தவுடன் வாசலின் இருபுறமும் சூரியன், சந்திரன் உள்ளனர். சூரியனை ஒட்டி அதிகார நந்தி கைகூப்பியபடி உள்ளார். கருவறை வாசலில் அழகிய விநாயகர் தனிச் சன்னிதியில் அருள்கிறார். கருவறை கோட்டத்தில் தென்முகன், லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். பிரகார சன்னிதிகளாக தென்புறம் அறுபத்துமூவர், தென்மேற்கில் விநாயகர், அடுத்து புறச்சுற்றில் கிழக்கு நோக்கிய பஞ்ச லிங்கங்கள் உள்ளன. எதிரில் சிறிய நந்திகளும் உள்ளன.
வடமேற்கில் வள்ளி தெய்வானை சமேத முருகன் கிழக்கு நோக்கியபடி உள்ளார். அருகில் தெற்கு நோக்கியபடி உற்சவ திருமேனியுடன் முருகன் சன்னிதியும் உள்ளது. வடப்புற சுற்றில் தெற்கு நோக்கிய இரு மாடங்களில் சரஸ்வதியும், மகாலட்சுமியும் உள்ளனர். அதே சுற்றில் தெற்கு நோக்கிய சனிபகவான் சன்னிதி உள்ளது.
அழகிய மண்டபத்தில் வடகிழக்கில் நடராஜர் சிவகாமியுடன் உள்ளார். அருகில் நவக்கிரக சன்னிதி உள்ளது. அதில் சனிபகவான் கையில் வில் அம்புடன் உள்ளார். மற்ற கிரகங்களும் கையில் ஆயுதங்களுடன் வாகனத்தில் உள்ளனர்.
இரண்டாம் பிரகாரத்தில் கன்னி விநாயகர், முருகன், ஐயப்பன் சன்னிதிகள் உள்ளன. இக்கோவிலில் உள்ள 'வாஞ்சா புஷ்கரணி' என்ற தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் பிள்ளை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆண்டுதோறும் சித்திரை தேரோட்டம், வைகாசியில் சண்முகருக்கு புஷ்பாஞ்சலி, புரட்டாசியில் நவராத்திரி மற்றும் பாரிவேட்டை, ஐப்பசியில் திருக்கல்யாணம், கார்த்திகையில் சொக்கபனை ஏற்றுதல், மார்கழி திருப்பள்ளி எழுச்சி, தை மாதத்தில் தைப்பூசம் மற்றும் தெப்பத் திருவிழா, மாசியில் மகா சிவராத்திரி, பங்குனி மாதம் காரைக்கால் அம்மையார் சிவபெருமானிடம் மாங்கனி பெற்ற நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.
காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடை திறக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
வருமானம் திருப்தி தரும் நாள். வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டம் வெற்றி பெறும். மாற்றினத்தவர்களால் மகிழ்ச்சிக்குரிய சம்பவமொன்று நடைபெறும்.
ரிஷபம்
போட்டிகளை சமாளித்து வெற்றி காணும் நாள். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சிகளுக்கு மாற்றினத்தவர்கள் கைகொடுத்து உதவுவர்.
மிதுனம்
விடிகாலையிலேயே வியக்கும் தகவல் வந்து சேரும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். அயல்நாட்டிலிருந்து அனுகூலத் தகவல் வரலாம்.
கடகம்
நட்பு பகையாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய நாள். வாங்கல், கொடுக்கல்களில் கவனம் தேவை. தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் அலைச்சல்களை சந்திக்க சந்திக்க நேரிடும்.
சிம்மம்
சிவாலய வழிபாட்டால் சிறப்புகள் வந்து சேரும் நாள். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். பயணங்கள் பலன் தரும். ஆரோக்கியம் சீராகும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
கன்னி
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
துலாம்
புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். எந்த காரியத்தையும் எடுத்தோம். முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு.
விருச்சிகம்
இன்னல்கள் தீர இறைவனைப் பணிய வேண்டிய நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.
தனுசு
மகிழ்ச்சி கூடும் நாள். மங்கலச் செய்தி வந்து சேரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களும் ஒத்துழைப்புத் தருவர்.
மகரம்
புதிய பாதை புலப்படும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். திட்டமிட்ட காரியமொன்று நடைபெறாவிட்டாலும் திட்டமிடாத காரியம் நடைபெறும். வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள்.
கும்பம்
சச்சரவுகள் அகன்று சமாதானம் அடையும் நாள். இடமாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். எடுத்த காரியத்தை முடிக்க அதிக அலைச்சல் ஏற்படலாம்.
மீனம்
நேற்றைய பிரச்சனைகள் இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். அன்னிய தேச அழைப்புகளை ஏற்றுக் கொள்ளலாமா என்று சிந்திப்பீர்கள். குடும்ப ஒற்றுமை பலப்படும்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
- திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆவணி-4 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : துவாதசி பிற்பகல் 3.03 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம் : புனர்பூசம் பின்னிரவு 2.06 மணி வரை பிறகு பூசம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்றைய சுபமுகூர்த்த தினம், பிரதோஷம் சிவன் கோவில்களில் அபிஷேகம்
இன்று பிரதோஷம். சுபமுகூர்த்த தினம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகர் சிம்ம வாகனத்தில் திருவீதியுலா. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் பூத வாகனத்தில் பவனி. திருச்செந்தூர் ஸ்ரீ முருகப்பெருமான் உருகு சட்டச் சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலையில் அபிஷேகம்.
ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் திருமஞ்சனம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவ திருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருமயிலை, திருவான்மியூர், திருசாவூர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பெருமை
ரிஷபம்-வரவு
மிதுனம்-செலவு
கடகம்-நிறைவு
சிம்மம்-தெளிவு
கன்னி-மேன்மை
துலாம்- மாற்றம்
விருச்சிகம்-களிப்பு
தனுசு- உறுதி
மகரம்-பயணம்
கும்பம்-திடம்
மீனம்-கண்ணியம்






