என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • கிராம மக்களுக்கு நல்வழி காட்டி அறிவுரை சொல்லும் வழக்கத்தையும் வைத்திருந்தார்.
    • தில்லைவாழ் சிதம்பரனே என்று மனமுருகி பாடல்கள் பாடி நடராஜர் பெருமானிடம் தனது மனக் குறைகளை வெளியிட்டார்.

    திருச்செந்தூர் முருகனால் ஆட்கொள்ளப்பட்ட புலவர்களில் ஒருவர் படிக்காசுப் புலவர். ஆதிகாலத்தில் தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்ட தமிழகத்தின் வட பகுதியில் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் பொன்விளைந்த களத்தூர் என்ற ஊரில் பிறந்தார். ஆதிகாலத்தில் இந்த ஊர் பொற்களந்தை என்று அழைக்கப்பட்டது.

    சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இவர் திருவாரூர் வைத்தியநாத நாவலரிடம் இலக்கண இலக்கியம் கற்று தமிழில் மிகச்சிறந்த புலமை மிக்கவராக மாறினார். அவர் இயற்றிய "தொண்டை மண்டல சதகம்" மற்றும் "தண்டலையார் சதகம்" ஆகிய நூல்கள் மிகவும் புகழ் பெற்றவை.

    இளம் வயதில் இவர் ஊர் ஊராக போய் ஆலயங்களை தொழுவதை வழக்கத்தில் வைத்திருந்தார். அதோடு கிராம மக்களுக்கு நல்வழி காட்டி அறிவுரை சொல்லும் வழக்கத்தையும் வைத்திருந்தார். சிலர் ஏற்றுக் கொண்டனர். பெரும்பாலானவர்கள் அவரை கிண்டல் செய்தனர். என்றாலும் படிக்காசுப் புலவர் மனம் தளர்ந்தது இல்லை.

    "ஒளி வீசும் விளக்கை அணைத்து விட்டு இவர்கள் வெளிச்சத்தை தேடி அலைகிறார்கள்" என்று பதில் அளித்து விட்டு அடுத்த ஊருக்கு சென்று விடுவார். அப்படி ஊர் ஊராக சென்ற அவர் ஒருமுறை சிதம்பரத்துக்கு சென்றார். அங்கு தில்லைவாழ் சிதம்பரனே என்று மனமுருகி பாடல்கள் பாடி நடராஜர் பெருமானிடம் தனது மனக் குறைகளை வெளியிட்டார்.

    அப்போது அருகில் இருந்த அன்னை சிவகாம சுந்தரியிடமும் தனது ஏழ்மை நிலையை சொல்லி வருந்தி வேண்டுகோள் விடுத்தார். முருகருக்கு வேல் கொடுத்தாய். திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்தாய். மன்மதனுக்கு செங்கோல் கொடுத்தாய். ஆனால் எனக்கு மட்டும் எதுவும் தரவில்லையே ஏன்? என்று உரிமையோடு அன்னையிடம் பாடல்களில் கேள்வி கேட்டார்.

    அவர் பாடி முடித்த அடுத்த நிமிடம் சிதம்பரம் பஞ்சாட்சரப் படிகளில் 5 தங்க காசுகளை அன்னை சிவகாம சுந்தரி எடுத்து போட்டாள். இதை கண்டதும் புலவர் உள்பட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். இந்த நிகழ்வுக்கு பிறகுதான் அவருக்கு படிகாசுப் புலவர் என்ற பெயர் ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து அவர் தமிழகத்தில் உள்ள மற்ற தலங்களுக்கும் யாத்திரை சென்றார். அங்குள்ள மக்களுக்கு தனது அருட்கவியால் மகிழ்ச்சி அடைய செய்தார். அவரது பாடல்களையும் வாக்குகளையும் மக்கள் தெய்வ வாக்காக கருதி வரவேற்றனர்.

    • முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்கிறார்.
    • பக்தர்கள் தங்களது வாகனங்களில் வருவதை தவிர்த்து அரசு பஸ்களை பயன்படுத்த வேண்டும்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா செப்டம்பர் மாதம் 24 -ந் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 2-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழா நாட்களில் ஏழுமலையான் தினமும் காலை, இரவு என 4 மாட வீதிகளில் உலா வருகிறார்.

    பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு செப்டம்பர் 24-ந் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது. கொடியேற்றம் நடைபெறும் அன்று மாநில அரசு சார்பில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்கிறார்.

    பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான செப்டம்பர் 28-ந் தேதி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பிரம்மோற்சவ விழா நிறைவு நாளான அக்டோபர் 2-ந் தேதி அங்குள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்த வாரி நடைபெற உள்ளது.

    பிரமோற்சவ விழாவை காண நாடு முழுவதிலும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பிரம்மோற்சவ விழா முன்னேற்பாடுகள் குறித்து நேற்று அன்னமய்யா பவனில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் வெங்காய சவுத்ரி, திருப்பதி கலெக்டர் வெங்கடேஷ் வரலு, போலீஸ் சூப்பிரண்டு ஷர்ஷ வர்தன் மற்றும் அதிகாரிகள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் தன்னார்வலர்கள் மூலம் பக்தர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்குவது, போலீசார் உடன் இணைந்து தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது பக்தர்களை நெறிமுறைபடுத்துவது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.

    மேலும் பிரம்மோற்சவ விழா நாட்களில் பக்தர்கள் தங்களது வாகனங்களில் மலைக்கு வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே பக்தர்கள் தங்களது வாகனங்களில் வருவதை தவிர்த்து அரசு பஸ்களை பயன்படுத்த வேண்டும். அலிபிரி வாகன சோதனை சாவடியில் வாகனங்களின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

    • திருச்செந்தூர் முருகப் பெருமான் கோ ரத உற்சவம்.
    • பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் பூத வாகனத்தில் பவனி.

    இந்த வார விசேஷங்கள் 

    19-ந் தேதி (செவ்வாய்)

    * சர்வ ஏகாதசி.

    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் பவனி.

    * திருச்செந்தூர் முருகப் பெருமான் கோ ரத உற்சவம்.

    * திருவலஞ்சுழி சுவேத விநாயகர் விழா தொடக்கம்.

    * மிலட்டூர், தேவகோட்டை, திண்டுக்கல் தலங்களில் விநாயகர் பவனி.

    * மேல்நோக்கு நாள்.

    20-ந் தேதி (புதன்)

    * முகூர்த்த நாள்.

    * பிரதோஷம்.

    * மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் சந்திரசேகரர் உற்சவம் ஆரம்பம்.

    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் பூத வாகனத்தில் பவனி.

    * சமநோக்கு நாள்.

    21-ந் தேதி (வியாழன்)

    * முகூர்த்த நாள்.

    * நெல்லை நகரம் சந்தி விநாயகர் வருசாபிஷேகம்.

    * திருமயம் சத்திய மூர்த்தி புறப்பாடு.

    * பெருவயல் முருகப் பெருமான் பவனி.

    * மேல்நோக்கு நாள்.

    22-ந் தேதி (வெள்ளி)

    * அமாவாசை.

    * திருச்செந்தூர் முருகப் பெருமான் தங்க கைலாய பர்வத வாகனத்திலும், இரவு வெள்ளி கமல வாகனத்திலும் பவனி.

    * சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் திருபவித்ர உற்சவம் ஆரம்பம்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்

    * பாவாடை தரிசனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    23-ந் தேதி (சனி)

    * திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி ரத உற்சவம்.

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆவணி உற்சவம்.

    * திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    24-ந் தேதி (ஞாயிறு)

    * திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி

    * தெப்ப உற்சவம். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மயில் வாகனத்தில் புறப்பாடு.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    25-ந் தேதி (திங்கள்)

    * திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி மஞ்சள் நீராடல்.

    * உப்பூர் விநாயகப் பெருமான் திருக்கல்யாணம்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * மேல்நோக்கு நாள்.

    • 6-ம் நாளான வருகிற 23-ந்தேதி, கஜமுக சூரசம்ஹாரம் நடக்கிறது.
    • ஆண்டுக்கு ஒரு முறைதான் மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறும்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இந்த ஆண்டுக்கான சதுர்த்தி விழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரம் அருகே உற்சவர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சண்டிகேசுவரர் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    விழா நாட்களில் இரவில் விநாயகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். நேற்று இரவு மூஷிக வாகனத்தில் வீதி உலா வந்தார். இன்று இரவு சிம்ம வாகனத்திலும், நாளை பூத வாகனத்திலும் உலா வருகிறார்.

    6-ம் நாளான வருகிற 23-ந்தேதி, கஜமுக சூரசம்ஹாரம் நடக்கிறது.

    9-வது நாளான வருகிற 26-ந்தேதி மாலையில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.

    இதற்கிடையே அன்று மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் கற்பகவிநாயகர், சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சி அளிப்பார். ஆண்டுக்கு ஒரு முறைதான், மூலவருக்கு இந்த சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறும். 10-ம் நாளான வருகிற 27-ந்தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பக விநாயகர் எழுந்தருள்கிறார். அதன் பின்னர் கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது. தொடர்ந்து உச்சிகால சிறப்பு பூஜைகள் மற்றும் மூலவருக்கு முக்குறுணி கொழுக்கட்டை படையல் நடக்கிறது.

    • நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள்.
    • பல நாட்களாக நினைத்த காரியம் இன்று எளிதில் முடியும்.

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    ஆதாயம் தரும் செயல்களில் அக்கறை காட்டும் நாள். பக்குவமாகப்பேசி காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

    ரிஷபம்

    நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். நம்பிக்கைக்குரியவிதம் நண்பர்கள் நடந்துகொள்வர். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் போட்டிகள் அகலும்.

    மிதுனம்

    ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு உண்டு.

    கடகம்

    மனக்கலக்கம் ஏற்படும் நாள். எதிலும் கூடுதல் கவனம் தேவை. தொழில் ரீதியாக மறைமுகப் போட்டிகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் நீண்ட தூரத்திற்கு மாறுதல் வரலாம்.

    சிம்மம்

    தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். பயணத்தில் பிரியமானவர்களின் சந்திப்பு கிட்டும். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வந்து சேரும்.

    கன்னி

    விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். கனவுகள் நனவாகும். வருமானம் திருப்தி தரும். விண்ணப்பித்த வேலை விரைவில் கிடைப்பதற்கான தகவல் வந்து சேரும்.

    துலாம்

    பகை அகலும் நாள். பல நாட்களாக நினைத்த காரியம் இன்று எளிதில் முடியும். வாங்கல், கொடுக்கல்களில் ஆதாயம் உண்டு. நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள்.

    விருச்சிகம்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு நன்மை செய்யப்போய் அது தீமையாகத் தெரியும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி உண்டு.

    தனுசு

    இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். மனக்குழப்பம் அகலும். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். பதவி உயர்வு காரணமாக குடும்பத்தை விட்டு வேறு ஊருக்குச் செல்ல நேரிடலாம்.

    மகரம்

    பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக்கொள்ளும் எண்ணம் ஏற்படும்.

    கும்பம்

    வாங்கல் கொடுக்கல்கள் ஒழுங்காகும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். பொது வாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். விவாக பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.

    மீனம்

    வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வரும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்தி தரும்.

    • சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-3 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : ஏகாதசி மாலை 4.42 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம் : திருவாதிரை பின்னிரவு 2.50 மணி வரை பிறகு புனர்பூசம்

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்

    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாகயர் காலை வெள்ளி கேடயத்திலும், இரவு சின்ன வாகனத்திலும் புறப்பாடு. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை கோவில்களில் அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுத வல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-இன்பம்

    ரிஷபம்-இரக்கம்

    மிதுனம்-மகிழ்ச்சி

    கடகம்-சாந்தம்

    சிம்மம்-உண்மை

    கன்னி-உவகை

    துலாம்- அனுகூலம்

    விருச்சிகம்-நன்மை

    தனுசு- சுகம்

    மகரம்-செலவு

    கும்பம்-லாபம்

    மீனம்-நிறைவு

    • பெண்களுக்கு குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை சேரும்.
    • பெண்களுக்கு பொருளாதார நிலை உயரும்.

    தனுசு

    தனுசு ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு சுக்ரனும் இணைந்திருக்கிறார். இரண்டு முரண்பாடான கிரகங்களின் பார்வையும் உங்கள் ராசியில் பதிகிறது. எனவே திடீர் திடீரென மாற்றங்களும், ஏற்றங்களும் வந்துசேரும். குருவின் பார்வை இருப்பதால் காரியங்கள் துரிதமாக நடைபெறும். கல்யாண முயற்சிகள் கைகூடும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

    கடக - சுக்ரன்

    ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். 6-க்கு அதிபதி 8-ல் வருவது நல்ல நேரம்தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, எதிர்பாராத சில நல்ல சம்பவங்கள் நடைபெறும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்துசேரும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரப் பொறுப்புகள் கிடைக்கும். புனிதப் பயணம் செல்லும் வாய்ப்பும் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். உங்களுக்கு இடையூறு செய்த உயர் அதிகாரி மாறுதலாகிச் செல்வார். கடன் சுமை குறைய நீங்கள் கையாண்ட நூதன யுக்திகள் பலன் தரும்.

    சிம்ம - புதன்

    ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், புதன். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வரும்போது, எல்லா வழிகளிலும் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். பிள்ளைகளால் வந்த பிரச்சினைகள் அகலும். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்துசேரும். பெற்றோரின் ஆதரவு திருப்தி தரும். 'வாழ்க்கைத் துணைக்கு இதுவரை நல்ல வேலை அமையவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது வேலை கிடைக்கும். உத்தியோகத்தில உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பர். ஒரு சிலர் பணிபுரியும் இடத்தில் இருந்து விருப்ப ஓய்வில் வெளிவந்து, சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர்.

    துலாம் - செவ்வாய்

    ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்போது, சொத்துகளால் லாபம் உண்டு. பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகள் முடிவிற்கு வரும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரும் யோகம் உண்டு. பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அவர் களின் மேற்படிப்பு சம்பந்தமாகவோ அல்லது வெளிநாடு சென்று பணிபுரிவது சம்பந்தமாகவோ முயற்சி செய்தால் அனுகூலம் உண்டு.

    சிம்ம - சுக்ரன்

    ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிக்கு லாபாதிபதியான சுக்ரன், பாக்கிய ஸ்தானத்திற்கு வரும்போது பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்ரன், குருவிற்கு பகைக்கிரகம் என்பதால், திடீர் திடீரென லாபம் வருவதுபோலவே, திடீர் திடீரென விரயங்களும் வந்து கொண்டேயிருக்கும். யாரையும் நம்பி எதையும் செய்ய இயலாது. சுபவிரயம் அதிகரிக்கும். இடமாற்றம் இனிமை தரும் விதத்தில் அமையும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு போட்டிகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தலைமைப் பதவிகள் தேடிவரும். கலைஞர்களுக்கு கவுரவம் உயரும். மாணவ- மாணவிகளுக்கு நல்ல மதிப்பெண் கிடைக்கும். பெண்களுக்கு குடும்பச் சுமை கூடினாலும் அதை சமாளிப்பீர்கள். வருமானம் போதுமானதாக இருக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 23, 24, 28, 29, செப்டம்பர்: 5, 6, 9, 10.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.

    மகரம்

    மகர ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி தன ஸ்தானத்தில் வக்ரம் பெற்று சஞ் சரிக்கிறார். அவரோடு கூட ராகுவும் இணைந்திருக்கிறார். ராகுவைப் போல கொடுப்பானுமில்லை என்பார்கள். அந்த அடிப்படையில் வருமானம் திருப்திகரமாக இருந்தாலும் ராசிநாதன் வக்ர இயக்கத்தில் இருப்பதால் செலவுகள் நிறைய ஏற்படும். சுபச் செலவுகளாக செய்வது நல்லது. இடர்பாடுகளுக்கு நடுவில் முன்னேற்றம் ஏற்படும். என்றாலும் வருமானப் பற்றாக்குறை ஏற்படாது. இதுபோன்ற வக்ர காலங்களில் இல்லத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவது நல்லது.

    கடக - சுக்ரன்

    ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சப்தம ஸ்தானத்திற்கு வரும்போது, புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். புகழ் கூடும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த தொல்லைகள் அகலும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கி வந்த உங்களுக்கு, தொடர்ந்து வருமானம் வந்து கொண்டேயிருக்கும். நல்ல சந்தர்ப்பங்களை நழுவவிட வேண்டாம். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து, சுய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்திகரமாக இருக்கும்.

    சிம்ம - புதன்

    ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். 6-க்கு அதிபதி 8-ல் வருவது நல்ல நேரம்தான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கேற்ப, மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். ஒரு சிலருக்கு இடமாற்றம், ஊர்மாற்றம் அமையலாம். வெளிநாடு சென்று பணிபுரியவேண்டும் என்று விரும்பு பவர்களுக்கு, அதில் கொஞ்சம் தாமதம் ஏற்படும். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர். பொதுவாழ்வில் மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். இதுவரை எதிர்பார்த்த பொறுப்புகள் இப்பொழுது கிடைக்கும்.

    துலாம் - செவ்வாய்

    ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதி பதியானவர் செவ்வாய். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வருவதால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். எதிர்காலத்தை பற்றிய பயம் அகலும். வியாபாரம் வெற்றி நடைபோடும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவு தருவர். வளர்ச்சி அதிகரிக்கும் நேரம் இது. இடம் வாங்குவது, பூமி வாங்குவது போன்றவற்றில் ஆர்வம் காட்டுவீர்கள். கட்டிடம் கட்டும் பணி தொடரும்.

    சிம்ம - சுக்ரன்

    ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் அஷ்டமத்திற்கு வரும் இந்த நேரத்தில், கொஞ்சம் கவனமாகச் செயல்பட வேண்டும். விரயங்கள் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். அன்பு நண்பர்களின் ஆதரவு குறையும். தொழிலில் யாரையும் நம்பிச் செயல்பட இயலாது. தொழில் போட்டிகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குத் தலைமையின் ஆதரவு உண்டு. கலைஞர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் கூடும். பணவரவு திருப்தி தரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கவனம் கூடும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 17, 18, 20, 25, 26, 30, 31, செப்டம்பர்: 1, 7, 8, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

    கும்பம்

    கும்ப ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். பகைக் கிரகமான சூரியன் அவரைப் பார்க்கிறார். மேலும் சனியோடு, ராகுவும் இணைந்து சஞ்சரிப்பதால் இம்மாதம் கொஞ்சம் கவனத்தோடு செயல்பட வேண்டிய மாதமாகும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. இனம்புரியாத கவலை மேலோங்கும். வீண்பழிகள் வீடு தேடி வரலாம். பிறருக்கு உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் முடியலாம். அதோடு அஷ்டமத்தில் செவ்வாயும் சஞ்சரிப்பதால் வாகனத்தாலும் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். குலதெய்வ வழிபாடு நன்மையை வழங்கும்.

    கடக - சுக்ரன்

    ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் கடகத்திற்கு வரும்போது உத்தியோகத்தில் சில மாற்றங்களும், ஏற்றங்களும் வரலாம். 'புத சுக்ர யோகம்' ஏற்படும் இந்த நேரத்தில் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். வருமான உயர்விற்கு வழிபிறக்கும். பழைய கடன்களைக் கொடுத்து மகிழ்வீர்கள். உடல்நலம் சீராக மாற்று மருத்துவம் கை கொடுக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து லாபத்தை வரவழைத்துக் கொடுக்க முன்வருவர்.

    சிம்ம - புதன்

    ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு பஞ்சம - அஷ்டமாதிபதியானவர் புதன். அவர் சிம்மத்திற்கு வரும்போது, பிள்ளைகள் வழியில் சில விரயங்கள் ஏற்படலாம். அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து மாறுதல்கள் வரலாம். வெளிநாடு சென்று படிக்க விரும்புகிறவர்களுக்கு அது கைகூடும். வீடு மாற்றம் திருப்திகரமாக அமையும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்த வீடு வாங்கிச் செல்லும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இதுவரை தாமதமான இடமாற்றம் இப்போது கிடைக்கும். சில முக்கிய முடிவுகளை அனுபவஸ்தர்களை கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. சிம்மத்தில் இருக்கும் சூரியனோடு புதன் சேருவதால் 'புத ஆதித்ய யோகம்' உருவாகிறது. எனவே அரசியல் உலகில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரியின் நிர்ப்பந்தத்தின் காரணமாக தடைப்பட்ட பதவி உயர்வு இப்பொழுது கிடைப்பதுடன் இடமாற்றமும் சேர்ந்து வரலாம்.

    துலாம் - செவ்வாய்

    ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வருவது நல்லநேரம் தான். இடம், பூமி வாங்குவது போன்றவற்றில் இருந்த தடை அகலும். இல்லம் கட்டிக் குடியேற வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடம் இப்பொழுது அதிக விலைக்கு விற்கும். அதன் மூலம் வருகின்ற லாபத்தை தொழிலுக்கான மூலதனமாக்குவீர்கள். நீண்ட நாட்களாக பஞ்சாயத்து செய்தும் முடிவடையாத சொத்துப் பிரச்சினை இப்பொழுது முடிவிற்கு வரும். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து இணைவர். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

    சிம்ம - சுக்ரன்

    ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம்தான். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள். திருமணத் தடை அகலும். தெய்வீக சிந்தனை மேலோங்கும். பெற்றோர் வழியில் இருந்த பிரச்சினை அகலும். பிரபலங்களின் ஒத்துழைப்போடு இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு நட்பால் நன்மை உண்டு. மாணவ - மாணவி களுக்கு மதிப்பெண் அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை சேரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 17, 18, 28, 29, செப்டம்பர்: 2, 3, 9, 10.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.

    மீனம்

    மீன ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் குரு அர்த்தாஷ்டம குருவாக சஞ்சரிக்கிறார். அவரோடு சுக்ரனும் இணைந்திருப்பதால் மனக்குழப்பம் அதிகரிக்கும். மாற்று கருத்துடையோரின் எண்ணிக்கை கூடும். கூட்டுத் தொழில்புரிவோர் தனித்து இயங்க முற்படுவர். ஆனால் பிரச்சினைகளை அதிகம் சந்திக்க நேரிடும். பொதுவாழ்விலே எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்காது. புதிய முயற்சிகளில் தடைகளும், தாமதங்களும் வந்து அலைமோதும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. இதுபோன்ற நேரங்களில் உடல்நிலையிலும் கவனம் தேவை. உடன் இருப்பவர்களிடமும் கவனத்தோடு இருப்பது நல்லது.

    கடக - சுக்ரன்

    ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அவர் உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். அவர் பஞ்சம ஸ்தானம் வரும்பொழுது பிள்ளைகளால் சில பிரச்சினைகள் ஏற்படலாம். விரயங்கள் அதிகரிக்கும். வீடு வாங்குவது, இடம் வாங்குவது போன்ற வற்றில் கவனம் செலுத்துவீர்கள். சொத்துகள் வாங்கும் பொழுது வில்லங்கம் பார்த்து வாங்க வேண்டும். இல்லையேல் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பூர்வீக சொத்துக்களை பிரித்துக் கொள்வதில் தகராறுகள் அதிகரிக்கும். 'பஞ்சாயத்துகள் இழுபறி நிலையில் இருக்கிறதே' என்று கவலைப்படுவீர்கள். 'தொழில் போட்டிகளை சமாளிக்க இயலவில்லையே' என்று வருத்தப்படுவீர்கள். பிறரிடம் எந்தப் பொறுப்பை ஒப்படைத்தாலும் அது நடைபெறாமல் போகலாம்.

    சிம்ம - புதன்

    ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 6-ம் இடத்திற்கு வரும்பொழுது, சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்கு கிறார். எனவே மேல் படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றிபெறும். வெளிநாட்டில் வேலை பார்க்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு அது கைகூடும். தைரியமும், தன்னம்பிக்கையும் கொஞ்சம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவிகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

    துலாம் - செவ்வாய்

    ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் அஷ்டமத்திற்கு வரும் பொழுது, தன் வீட்டைத் தானே பார்ப்பதால் 2-ம் இடம் புனிதமடைகிறது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். பணத்தேவை எளிதில் பூர்த்தியாகும். பக்கபலமாக இருப்பவர்கள் உங்கள் சிக்கல்கள் தீர வழிவகுத்துக் கொடுப்பர்.

    சிம்ம - சுக்ரன்

    ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 6-ம் இடத்திற்கு வருவது அற்புதமான நேரமாகும். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கு ஏற்ப, நற்பலன்கள் ஏராளமாக நடைபெறும். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். உத்தியோக மாற்றங்கள் உறுதியாகலாம். தொழில் வளர்ச்சி உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வருமானம் உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்மட்ட அதிகாரிகளால் ஏற்பட்ட தொல்லை அகலும். கலைஞர்களுக்கு ஆதரவு கூடும். மாணவ - மாணவிகளுக்கு சாதனைகள் நிகழ்த்தும் நேரம் இது. பெண்களுக்கு பொருளாதார நிலை உயரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 19, 20, 29, 30, 31, செப்டம்பர்: 1, 5, 6, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்: கிரே.


    • சுவாமி புறப்பாடு வெகுவிமரிசையாக நடைபெற்றது.
    • வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை மனம் உருகி தரிசித்தனர் .

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வர் .

    மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். அதில் ஆவணி பெருந் திருவிழா சிறப்பு வாய்ந்தது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான ஆவணிப் பெருந்திரு விழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை மூலவருக்கு சிறப்பு மலர் அலங்காரமும் சகஸ்ரநாம அர்ச்சனையும் தீபாராதனையும் நடைபெற்றது.

    இரவில் உற்சவர் முத்து மாரியம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் சுவாமி புறப்பாடு வெகுவிமரிசையாக நடைபெற்றது.

    இந்த வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை மனம் உருகி தரிசித்தனர் .

    ஆவணி பெருந்திரு விழாவில் செப்டம்பர் 14 ஆம் தேதி திருத்தேரோட்டம், 16 ஆம் தேதி தேதி கொடியிறக்கம், விடையாற்றி அபிஷேகம், அக்டோபர் 5 ஆம் தேதி தெப்பத் திருவிழா, 7-ந் தேதி தெப்ப விடையாற்றி விழா ஆகியவை நடைபெறவுள்ளன.

    • பெண்களுக்கு வருமானம் உயரும்.
    • குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர்.

    சிம்மம்

    சிம்ம ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். இது யோகம்தான். ஆனால் அவரை பார்க்கும் சனி மற்றும் ராகு ஆகிய கிரகங்கள் பகைக் கிரகங்கள். எனவே இடர்பாடுகளுக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. எதிர்பார்ப்புகள் நிறை வேறுவதில் தடைகளும், தாமதங்களும் வந்து கொண்டேயிருக்கும். யாரையும் நம்பி எதையும் செய்ய இயலாது. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. தொழிலில் கூட்டாளிகளால் அடிக்கடி தொல்லைகள் வந்து கொண்டேயிருக்கும். தொழிலில் திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகள் திருப்தியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

    கடக - சுக்ரன்

    ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியா னவர் சுக்ரன். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும்பொழுது தொழில் மாற்ற சிந்தனைகள் மேலோங்கும். வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டுமென்று ஆசைப்பட்டவர்களுக்கு, அதற்காக எடுத்த முயற்சி கைகூடும். குறிப்பாக கடகத்தில் சஞ்சரிக்கும் புதனோடு சுக்ரன் இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குவதால் தேவைக்கேற்ற பொருளாதாரம் வந்துசேரும். திடீர் மாற்றம் மன வருத்தத்தை உருவாக்கும். பெண் வழிப் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கலாம். உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். தொழில் கூட்டாளிகள் உங்களை விட்டு விலகினாலும், புதிய கூட்டாளிகள் வந்திணையும் வாய்ப்பு உண்டு.

    சிம்ம - புதன்

    ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 2, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். தன - லாபாதிபதியான புதன், உங்கள் ராசி யிலேயே சஞ்சரிக்கும் நேரம் ஒரு உன்னதமான நேரமாகும். பணவரவு திருப்தி தரும். கொடுக்கல் - வாங்கல் சீராகவும், சிறப்பாகவும் இருக்கும். உறவினர்களோடு இருந்த கருத்து வேறுபாடு அகலும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். குடும்ப உற வினர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். வெளிநாடு செல்லும் யோகமும், அதற்காக எடுத்த முயற்சியில் வெற்றியும் கிடைக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்திணைவர். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். குறிப்பாக வருமானம் உயரும். இந்த நேரத்தில் கடன்சுமை குறைய வழிபிறக்கும். வாங்கிய கடனை கொடுத்து மகிழ்வீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும்.

    துலாம் - செவ்வாய்

    ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சகாய ஸ்தானத்திற்கு வருவது நல்ல நேரம்தான். உடன்பிறப்புகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு இருந்த குறுக்கீடுகள் விலகும். வாடகை கட்டிடத்தில் உள்ள தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.

    சிம்ம - சுக்ரன்

    ஆவணி 30-ந் தேதி சிம்ம ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் உங்கள் ராசிக்கு வருவது யோகம்தான். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். ஸ்தம்பித்து நின்ற தொழில் தானாக நடைபெறும். தொழிலை விரிவு செய்ய வள்ளல்களின் ஒத்துழைப்பும், வங்கிகளின் ஒத்துழைப்பும் கிடைக்கும். தனித்து இயங்கும் ஆற்றல் பிறக்கும் நேரம் இது. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு, போட்டிக்கடை வைத்தோர் விலகுவர். உத்தி யோகத்தில் உள்ளவர்களிடம் மேலதிகாரிகள் ஆதரவாக நடந்துகொள்வர். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவ - மாணவிகளுக்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு நன்மையைத் தரும். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விரயங்கள் கொஞ்சம் அதிகரிக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 18, 19, 25, 26, 30, 31, செப்டம்பர்: 1, 11, 12, 16.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    கன்னி

    கன்னி ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அதே நேரம் அஷ்டமாதிபதியான செவ்வாய் உங்கள் ராசியில் இருக்கிறார். எனவே பணம் ஒருபுறம் வந்தாலும், மறுபுறம் விரயங்களும் வந்தபடியே இருக்கும். இழப்புகளும் எதிர்பாராத குறுக்கீடுகளும் வந்து கொண்டே இருக்கும். யாரையும் நம்பி எதையும் செய்ய இயலாது. திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிச் செல்லும். திடீர், திடீரென சோதனைகள் வரலாம். சொன்ன சொல்லை காப்பாற்ற இயலாது. துணிவும், தன்னம்பிக்கையும் குறையும். வரவைக் காட்டிலும் செலவு கூடும்.

    கடக - சுக்ரன்

    ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் லாப ஸ்தானத்திற்கு வருவது மிகவும் அற்புதமான நேரமாகும். பொதுவாக தனாதிபதி வலுவாக இருப்பதால் எந்த காரியமும் செய்யலாம். அந்த அடிப்படையில் தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். உயர்மட்டத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ள அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு வழிபிறக்கும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உண்டு.

    சிம்ம - புதன்

    ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கும், 10-ம் இடத்திற்கும் அதிபதியானவர் புதன். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும்போது பல வழி களிலும் விரயங்கள் ஏற்படும். பயணங்கள் அதிகரிக்கும். காலையில் ஒரு ஊர், மதியம் ஒரு ஊர், மாலையில் ஒரு ஊர் என்று செல்லும் விதத்தில் அலைச்சல் அதிகரிக்கும். இதனால் ஆரோக்கியச் சீர்கேடுகள் உருவாகும். நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள் உங்களைவிட்டு விலகலாம். நாடு மாற்றம் செய்ய நினைத்தவர்களுக்கு அது தாமதப்படும். வெளிநாட்டில் உள்ளவர்களின் வேலையில் மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால் அது விரும்பும் விதத்தில் அமையாது. அரசியல் களத்தில் உள்ளவர்கள் மக்கள் செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள இயலாது.

    துலாம் - செவ்வாய்

    ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் தன ஸ்தானத்திற்கு வந்து, தன் வீட்டைத் தானே பார்க்கப்போகிறார். எனவே சொந்தங்களாலும் நன்மை கிடைக்கும். துணிந்து எடுத்த முடிவுகளால் மற்றவர்கள் ஆச்சரியப்படுவர். எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காண்பீர்கள். வருமானப் பற்றாக்குறை அகலும். சொத்து விற்பனையால் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவர்.

    சிம்ம - சுக்ரன்

    ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் விரய ஸ்தானத்திற்கு வரும்போது விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், ஊர் மாற்றம் உறுதியாகலாம். கொடுக்கல்- வாங்கல்களில் ஏற்பட்ட இடையூறு அகலும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படலாம். அதில் இருந்து விடுபட அனுபவஸ்தர்களின் ஆலோசனை கைகொடுக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த நற்பலன்கள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு, பழைய வியாபாரம் லாபத்தைப் பெற்றுத் தரும். உத்தியோகஸ்தர்களுக்கு, உயர் அதிகாரியிடம் நல்ல பெயர் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல திருப்பம் ஏற்படும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பெண்களுக்கு உடல்நிலையில் சிறு சிறு பிரச்சினைகள் வரலாம். கவனம் தேவை. உடன்பிறப்புகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 17, 18, 21, 22, 28, 29, செப்டம்பர்: 2, 3, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.

    துலாம்

    துலாம் ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் பாக்கிய ஸ்தானத்தில் குருவோடு இணைந்து சஞ்சரிக்கிறார். பொதுவாக 9-ம் இடம் பலம்பெறும்பொழுது பொன், பொருள் சேர்க்கை, பொருளாதார நிலையில் உயர்வு போன்றவை ஏற்படும். மேலும் குரு பார்வை உங்கள் ராசியில் பதிவதால், சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். கல்யாணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதில் இருந்த தடை அகலும். பெற்றோரின் ஆதரவு திருப்தி தரும். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கும்.

    கடக - சுக்ரன்

    ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். அவர் 10-ம் இடம் எனப்படும் தொழில் ஸ்தானத்திற்கு வரும்பொழுது, தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும். சென்ற மாதத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த முயற்சி பலன்தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு உண்டு. ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீண்ட நாளாக துன்புறுத்தி வரும் நோய் அகலும். பிள்ளை களின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சியில் இருந்த தடை அகலும். வீடு வாங்குவது, இடம் வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.

    சிம்ம - புதன்

    ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும்போது எதிர்பாராத திருப்பங்களை சந்திப்பீர்கள். தொழில் வெற்றி நடைபோடும். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும். 'புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும்' என்ற எண்ணம் நிறைவேறும் வகையில் புனித யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சம்பள உயர்வுடன் புதிய வேலை கிடைத்து மகிழ்ச்சி காண்பர். சனி - சூரியன் பார்வை இருப்பதால் சுய ஜாதக அடிப்படையில் திசாபுத்தி பலம் பார்த்து செயல்படுவது நல்லது. இந்த நேரத்தில் 'புத ஆதித்ய யோக'மும் நடைபெறுவதால், கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும்.

    துலாம் - செவ்வாய்

    ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு செவ்வாய் வருவது நல்ல நேரம்தான். தன - சப்தமாதிபதியாக விளங்கும் செவ்வாய், உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புகழ்பெற்ற மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். சொத்துக்களால் வந்த பிரச்சினை அகலும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத சில காரியங்கள், இப்பொழுது ஒவ்வொன்றாக நடைபெறத் தொடங்கும்.

    சிம்ம - சுக்ரன்

    ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாக விளங்கும் சுக்ரன், லாப ஸ்தானத்திற்கு வருவதால் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மனதளவில் நினைத்ததை மறுகணமே செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும். அரசியல்வாதியாக இருந்தால் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பங்குச்சந்தையில் லாபம் உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல தகவல் வந்துசேரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகள் உண்டு. கலைஞர்களுக்கு ஆதரவு கூடும். மாணவ-மாணவியர்களுக்கு போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு வருமானம் உயரும். இல்லம் தேடி நல்ல தகவல் வரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 19, 20, 23, 24, 31, செப்டம்பர்: 1, 5, 6, 15, 16.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

    விருச்சிகம்

    விருச்சிக ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குருவின் பார்வை தன ஸ்தானத்தில் பதிகின்றது. எனவே தொட்டது துலங்கும். தொழிலில் லாபம் கிடைக்கும். வெற்றிச் செய்திகள் வீடு வந்துசேரும். இடம், பூமி சேர்க்கையும், எடுத்த காரியங்களில் வெற்றியும் கிடைக்கும். பொதுவாழ்வில் புகழ் பரவும். வருமானம் பெருக வழியமைத்துக் கொள்வீர்கள். உடல் நலம் சீராகி உற்சாகத்துடன் இயங்கு வீர்கள். குடும்பத்தில் எதிர்பார்த்த சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல விதமாக முடியும். நாடாளும் நபர்களின் நட்பால் புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி காண்பீர்கள்.

    கடக - சுக்ரன்

    ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வரும்போது சகல பாக்கியங்களும் உங்களுக்கு கிடைக்கும். வாகன யோகம் முதல் வளர்ச்சி தரும் யோகம் வரை அனைத்தும் வந்து சேரும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். உதிரி வருமானங்கள் பெருகும். 'புத சுக்ர யோகம்' இருப்பதால் சுபச்செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. உத்தியோகத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் தானாக வந்துசேரும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைந்து பொருளாதார நிலை உயர வழிவகுத்துக் கொடுப்பர்.

    சிம்ம - புதன்

    ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டம - லாபாதிபதியானவர் புதன். லாபாதிபதி புதன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பது அற்புதமான நேரமாகும். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். கிளைத் தொழில்கள் தொடங்கவும் முயற்சி செய்வீர்கள். செய்யும் முயற்சி கைகூடும். புதிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்தபடியே ஒருசிலருக்கு சுயதொழில் செய்யும் சூழலும் உருவாகும். உடன்பிறப்புகளும், உடனிருப்பவர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். இனிய பலன்கள் ஏராளமாக நடை பெறும் நேரம் இது. குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர்.

    துலாம் - செவ்வாய்

    ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கும், 6-ம் இடத்திற்கும் அதிபதியாக இருப்பவர் செவ்வாய். அவர் 12-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது 'விபரீத ராஜயோக' அடிப்படையில் எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். வருமானம் உயரும். வீடு கட்டுவது அல்லது வீடு வாங்குவது பற்றிய சிந்தனை மேலோங்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு அதிகார அந்தஸ்து கிடைக்கும். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும்.

    சிம்ம - சுக்ரன்

    ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும்போது வளர்ச்சி கூடும். வாழ்க்கைத் துணை வழியே நல்ல தகவல் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். புகழ் பெற்றவர்களின் சந்திப்பால் வளர்ச்சி கூடும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு, அதை விரிவு செய்யும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் சில நுணுக்கங்களை கற்றுக்கொடுப்பர். கலைஞர்களுக்கு புகழ் கூடும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு வரன்கள் வாசல் தேடி வரும் நேரம் இது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 20, 21, 22, 26, 27, 28, செப்டம்பர்: 2, 3, 4, 7, 8, 9.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்.

    • கல்யாணக் கனவுகள் நனவாகும்.
    • 'குரு மங்கள யோகம்' இருப்பதால் இல்லத்தில் மங்கல ஓசை கேட்க வழிபிறக்கும்.

    மேஷம்

    மேஷ ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். அஷ்டமாதிபதியாகவும் விளங்கும் செவ்வாய் 6-ம் இடத்திற்கு வரும்பொழுது, 'விபரீத ராஜயோக' அடிப்படையில் சில நல்ல பலன்கள் உங்களுக்கு நடைபெறும். தொழில் வளர்ச்சி, உத்தியோகத்தில் உயர்வு, கடன் சுமை குறைதல் போன்றவை ஏற்படும். சென்ற மாதத்தில் நடைபெறாத சில காரியங்கள் இப்போது நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். பஞ்சம ஸ்தானாதிபதி சூரியன், பஞ்சம ஸ்தானத்திலேயே பலம்பெற்று சஞ்சரிப்பதால் தேக்கநிலை மாறும். தெளிவு பிறக்கும். ஊக்கமும், உற்சாகமும் அதிகரித்து உடனுக்குடன் காரியங்களைச் செய்து முடிப்பீர்கள்.

    கடக - சுக்ரன்

    ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், மகிழ்ச்சி அதிகரிக்கும். பழைய வாகனங்களைக் கொடுத்து விட்டு, புதிய வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆபரணச் சேர்க்கை உண்டு. 'அதிக விலைக்கு வாங்கிப் போட்ட இடத்தை குறைந்த விலைக்கு கேட்கிறார்களே' என்ற கவலை அகலும். பூமி விற்பனையில் வரும் லாபத்தைக் கொண்டு தொழிலை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள். இக்காலத்தில் 'புத சுக்ர யோகம்' இருப்பதால் நல்ல சம்பவங்கள் பலவும் நடை பெறும்.

    சிம்ம - புதன்

    ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்திற்கு வரும்பொழுது பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்சினைகள் அகலும். படித்து முடித்து வேலை கிடைக்காமல் இருக்கும் பிள்ளைகளாக இருந்தால் அவர்களுக்கு வேலை கிடைக்கும். உத்தியோக மாற்றத்திற்கோ அல்லது வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டுமென்றோ உங்கள் பிள்ளைகள் விரும்பினால், அதற்காக எடுத்த முயற்சி கைகூடும். உடன் பிறப்புகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும். ஒற்றுமை பலப்படும். பூர்வீக சொத்துகளை பிரித்துக்கொள்வதில் சிக்கல் நீங்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகள் கிடைக்கும். புத-ஆதித்ய யோகம் இருப்பதால் அரசுவழியில் அனுகூலம் உண்டு.

    துலாம் - செவ்வாய்

    ஆவணி 29-ந் தேதி துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கின்றார். உங்கள் ராசிக்குஅதிபதி செவ்வாய் 7-ம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது, அவர் பார்வை உங்கள் ராசியிலேயே பதிகின்றது யோகம்தான். கல்யாணக் கனவுகள் நனவாகும். இழப்புகளை ஈடு செய்ய எடுத்த புது முயற்சியில் வெற்றி கிடைக்கும். இடம், பூமி விற்பனையால் லாபம் உண்டு. வீடுகட்டுவது அல்லது கட்டிய வீட்டை பழுதுபார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள்.

    சிம்ம - சுக்ரன்

    ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். தனாதிபதியான சுக்ரன், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது தனவரவு தாராளமாக வந்துசேரும். இனத்தார் பகை மாறும். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு மாதத்தின் முற்பகுதி செழிப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பிரச்சினைகள் வரலாம். கலைஞர் களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் அக்கறை கூடும். பெண்களுக்கு குடும்பச்சுமை கூடினாலும் அதை சமாளிக்கும் ஆற்றல் உண்டு.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 17, 18, 21, 22, செப்டம்பர்: 2, 3, 7, 8, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    ரிஷபம்

    ரிஷப ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் தன ஸ்தானத்தில் குருவோடு இணைந்து சஞ்சரிக்கிறார். முரண்பாடான இந்தக் கிரகச் சேர்க்கையின் காரணமாக ஏற்றமும், இறக்கமும் கலந்த சூழ்நிலை உருவாகும். ஒரு சமயம் மிதமிஞ்சிய பொருளாதார நிலை இருக்கும். மற்றொரு சமயம் வறட்சி நிலை நிலவும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர், திடீரென மாற்றங்கள் வந்து தேவையைப் பூர்த்தி செய்து கொடுக்கும். அசுர குரு, தேவ குரு ஆகிய இரண்டு கிரகங்களின் சேர்க்கையும் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால், குடும்பத்தில் பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும்.

    கடக - சுக்ரன்

    ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3-ம் இடமான சகாய ஸ்தானத்தில், உங்கள் ராசிநாதன் சுக்ரன் சஞ்சரிப்பது உங்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும். அவர் அங்குள்ள புதனோடு இணைவதால் 'புத சுக்ர யோகம்' செயல்படுகிறது. எனவே பூமி வாங்கும் யோகமும், பூர்வீக சொத்துகளால் லாபமும் உண்டு. உடன்பிறப்புகளின் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். வழக்குகள் சாதகமாக அமையும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். தொழில் நடத்துபவர்களுக்கு நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த மூலதனம் ஏற்படலாம்.

    சிம்ம - புதன்

    ஆவணி 9-ந் தேதி சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் 4-ம் இடத்திற்கு வருவது யோகம்தான். அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தையும் உருவாக்குகிறார். எனவே கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். கடமையில் இருக்கும் தொய்வு அகலும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். அதன்மூலம் வரும் உதிரி வருமானத்தில் குடும்பச்சுமை கொஞ்சம் குறையும். 'வீடு கட்டியும் நீண்ட நாட்களாக வாடகைக்கு விட முடியவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது நல்ல தகவல் கிடைக்கும். தாயின் உடல்நலம் சீராகும். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும்.

    துலாம் - செவ்வாய்

    ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு விரயாதிபதியான செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பது யோகம்தான். எதிர்பாராத விதத்தில் இனிமை தரும் மாற்றங்கள் வந்துசேரும். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். துணிந்து நீங்கள் எடுத்த முடிவுகளைக் கண்டு அருகில் இருப்பவர்கள் ஆச்சரியப்படுவர். பூமி பிரச்சினை அகலும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டு. மேல்அதிகாரிகளால் ஏற்பட்ட மனக்குழப்பம் மாறும். கேட்ட நிதியுதவி கிடைக்கும்.

    சிம்ம - சுக்ரன்

    ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதி சுக ஸ்தானத்திற்கு செல்லும் இந்த நேரத்தில் மகிழ்ச்சி வந்து சேரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வெளிநாட்டு முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நிலவி வந்த குழப்பம் அகலும். கொடுக்கல் - வாங்கல்கள் சிறப்பாக இருக்கும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வரவேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி நீடிப்பு கிடைக்கும். கலைஞர்களுக்கு முயற்சியில் வெற்றி உண்டு. மாணவ - மாணவி களுக்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு திருப்தி தரும். பெண்களுக்கு வாழ்க்கைத் தரம் உயரும். வசதி பெருகும். நல்ல தகவல் கிடைக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 19, 20, 23, 24, செப்டம்பர்: 5, 6, 9, 10, 15, 16.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    மிதுனம்

    மிதுன ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு 2-ம் இடமான தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே பணப்புழக்கம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் படிப்படியாக நடைபெறும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். ராசியிலேயே குரு சுக்ர சேர்க்கை இருப்பதால் திடீரென சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். சனி வக்ர இயக்கத்தில் இருப்பதாலும், அதை குரு பார்ப்பதாலும் தாமதப்பட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறும். பயணங்கள் பலன்தரும்.

    கடக - சுக்ரன்

    ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். புத்திர ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு அதிபதியான சுக்ரன், தன ஸ்தானத்திற்கு வருவதால் பிள்ளைகளால் விரயங்கள் ஏற்படலாம். அவர்களின் எதிர்கால நலன்கருதி திட்டமிட்டு செயல்படுவது நல்லது. 'புத சுக்ர யோகம்' இருப்பதால் பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவோ அல்லது வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டுமென்ற அவர்களின் எண்ணத்தைப் பூர்த்தி செய்வதற்காக எடுத்த முயற்சி கைகூடும். மாமன், மைத்துனர் வழியில் மனதிற்கினிய சம்பவம் நடைபெறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சம்பள உயர்வு உண்டு. அதே நேரத்தில் இடமாற்றம் அல்லது இலாகா மாற்றம் பற்றி சிந்தித்தவர்களுக்கு அதுவும் கைகூடும்.

    சிம்ம - புதன்

    ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் இருப்பவர் புதன். சுக ஸ்தானாதிபதி, சகாய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் எல்லாவிதமான சவுகரியங்களும் உங்களுக்கு கிடைக்கும். குறிப்பாக ஆரோக்கிய பாதிப்புகள் அகலும். அடுத்தடுத்து நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். 'புத ஆதித்ய யோகம்' இருப்பதால் பொருளாதாரத்தில் உச்ச நிலையை அடைவீர்கள். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை பங்கிட்டுக் கொள்வதில் இருந்த பிரச்சினைகள் அகலும். பெற்றோர் வழியில் சில நல்ல காரியங்கள் நடைபெறும்.

    துலாம் - செவ்வாய்

    ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் புதிய திருப்பங்கள் ஏற்படும். குறிப்பாக என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப்போட்ட இடம் இப்பொழுது அதிக விலைக்கு விற்று லாபத்தைக் கொடுக்கும். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். 'குரு மங்கள யோகம்' இருப்பதால் இல்லத்தில் மங்கல ஓசை கேட்க வழிபிறக்கும்.

    சிம்ம - சுக்ரன்

    ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சகாய ஸ்தானத்திற்கு வரும் பொழுது பிள்ளைகளால் பெருமை சேரும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்க வேண்டும், அங்கு வேலை பார்க்க வேண்டும், கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்று கனவு கண்டவர்களுக்கு இப்பொழுது கனவுகள் நனவாகும் நேரமாகும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மாதத்தின் மையப் பகுதி மகிழ்ச்சி தரும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு துணிந்து எடுத்த முடிவுகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவி உண்டு. கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ- மாணவிகளுக்கு மறதி விலகும். மதிப்பெண் கூடும். பெண்களுக்கு விரயங்கள் ஏற்படும் நேரம் என்பதால், சுப விரயமாக மாற்ற முயற்சிப்பது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 21, 22, 26, 27, 28, செப்டம்பர்: 7, 8, 11, 12.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

    கடகம்

    கடக ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசியில் விரயாதிபதி புதன் சஞ்சரிக்கிறார். மேலும் அஷ்டமத்தில் சனியும், ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். சனி வக்ரம் பெற்றிருப்பதால் ஓரளவிற்கு நன்மை கிடைக்கும் என்றாலும் விரயங்களைக் கட்டுப்படுத்த இயலாது. திட்டமிட்டபடி காரியங்களை முடிக்க பெரும் பிரயாசை எடுக்கும் சூழ்நிலை உண்டு. இடமாற்றம், வீடு மாற்றம் எதிர்பாராத விதம் அமையும். குருவின் பார்வை சுக ஸ்தானத்தில் பதிவதால் குரு வழிபாட்டை முறையாக மேற்கொண்டால், உங்களுக்குரிய பாக்கியங்களும், அனைத்து நலன்களும் வந்துசேரும். ராகு-கேதுக்களுக்குரிய வழிபாடுகளை முறையாக மேற்கொண்டால் தடைகள் விலகும்.

    கடக - சுக்ரன்

    ஆவணி 5-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11-க்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் புதனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்கும் இந்த நேரம் பொருளாதார நிலை உயரும். புதிய திருப்பங்கள் ஏற்படும். வெளிநாடு சென்று சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களுக்கு அது கைகூடி வருவதற்கான அறிகுறிகள் தென்படும். ரண சிகிச்சையில் சிக்கித் தவித்தவர்களுக்கு இப்பொழுது விடிவு காலம் பிறக்கப்போகிறது. மாற்று மருத்துவங்கள் ஒரு சிலருக்கு கைகொடுக்கும். கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்தியங்க முற்படுவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அடகுவைத்த நகைகளை மீட்டுக்கொண்டுவரும் வாய்ப்பு உருவாகும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மக்கள் செல்வாக்கும், அதன் மூலம் நல்ல பொறுப்புகளும் கிடைக்கும்.

    சிம்ம - புதன்

    ஆவணி 9-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் தன ஸ்தானத்திற்கு வரும் பொழுது உடன்பிறப்புகளால் விரயம் ஏற்படும். அவர்களின் கடன்சுமை குறைய வழிவகுத்துக் கொடுப்பீர்கள். அல்லது அவர்களின் கல்யாணம் போன்றவற்றை முன்னின்று நடத்த செலவிடுவீர்கள். நாடு மாற்றம் பற்றியும், வீடு மாற்றம் பற்றியும் சிந்திக்கும் நேரம் இது. நாகரிகப் பொருட்களை வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களும், மேலதிகாரிகளும் உங்கள் செயல்பாடுகளைக் கண்டு ஆச்சரியப்படுவர். சமூக சேவையில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் பொருளாதார நிலை உயரும்.

    துலாம் - செவ்வாய்

    ஆவணி 29-ந் தேதி, துலாம் ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் செவ்வாய். அவர் சுக ஸ்தானத்திற்கு வரும் பொழுது துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். தொல்லை தந்த எதிரிகளின் பலம் குறையும். நல்ல நிகழ்ச்சிகள் இல்லத்தில் படிப்படியாக நடைபெறும். வீடு கட்டுவது அல்லது வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். சொத்து விற்பனையால் லாபம், வியாபாரப் போட்டிகள் அகலும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும்.

    சிம்ம - சுக்ரன்

    ஆவணி 30-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தன ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் பொருளாதாரம் உச்சநிலை அடையவும், பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தவும், தேக்க நிலையில் இருந்த தொழில் சிறப்பாக நடைபெறும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு மிதமிஞ்சிய லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை பலப்படும். சுபகாரியம் இல்லத்தில் நடைபெறும் நேரம் இது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 17, 18, 23, 24, 28, 29, செப்டம்பர்: 9, 10, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.

    • திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.
    • திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-2 (திங்கட்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : தசமி இரவு 6.39 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம் : மிருகசீரிஷம் பின்னிரவு 3.54 மணி வரை பிறகு திருவாதிரை

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    தேவக்கோட்டை, திண்டுக்கல், உப்பூர், மிலட்டூர், பிள்ளையார்பட்டி கோவில்களில் ஸ்ரீ விநாயகப் பெருமான் உற்சவம் ஆரம்பம்

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. தேவக்கோட்டை, திண்டுக்கல், உப்பூர், மிலட்டூர், பிள்ளையார்பட்டி கோவில்களில் ஸ்ரீ விநாயகப் பெருமான் உற்சவம் ஆரம்பம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் தெப்ப உற்சவம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

    திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சுகம்

    ரிஷபம்-சுபம்

    மிதுனம்-வெற்றி

    கடகம்-கடமை

    சிம்மம்-இன்பம்

    கன்னி-நட்பு

    துலாம்- பணிவு

    விருச்சிகம்-பாசம்

    தனுசு- சாந்தம்

    மகரம்-முயற்சி

    கும்பம்-பெறுமை

    மீனம்-பொறுப்பு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    உன்னத வாழ்வமைய உறவினர்கள் ஒத்துழைப்புச் செய்யும் நாள். சுபச் செய்திகள் வந்து சேரும். வருமானம் திருப்தி அளிக்கும். தொழில் வெற்றி நடைபோடும். கடல்பயண வாய்ப்புகள் கைகூடும்.

    ரிஷபம்

    நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். விண்ணப்பித்த வேலை கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும்.

    மிதுனம்

    பிரச்சனையில் இருந்து விடுபடும் நாள். பிரியமானவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். தொகை வரவு திருப்தி தரும்.

    கடகம்

    வாயிலைத் தேடி வரவு வந்து சேரும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் வளர்ச்சி உண்டு. தொல்லை தந்தவர்கள் விலகுவர். மனக்குழப்பங்கள் அகலும்.

    சிம்மம்

    நிர்வாகத் திறமை பளிச்சிடும் நாள். பொருளாதார நெருக்கடி அகலும். சேமிப்புகள் உயரும். அன்னிய தேசத்திலிருந்து அனுகூல செய்திகள் வந்து சேரும். கல்யாண முயற்சி கைகூடும்.

    கன்னி

    மலைபோல் வந்த துயர் பனிபோல் விலகும் நாள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். கடன் சுமை குறைய எடுத்த புது முயற்சியில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

    துலாம்

    விழிப்புணர்ச்சி அதிகம் தேவைப்படும் நாள். விரயங்கள் அதிகரிக்கும். வி.ஐ.பி.க்களை விரோதித்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் இடையூறுகள் ஏற்படும்.

    விருச்சிகம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் கவனம் தேவை.

    தனுசு

    ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும் நாள். அண்ணன் தம்பிகளின் ஆதரவு கிடைக்கும். பொருளாதார நெருக்கடி அகலும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும்.

    மகரம்

    நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்தபடியே நடைபெறும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் உண்டு.

    கும்பம்

    சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும் நாள். சிக்கல்கள் தீர செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிட்டும். திடீர் பயணங்களால் சில திருப்பங்கள் ஏற்படும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர்.

    மீனம்

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் உங்கள் பிரச்சனைகள் தீர வழிகாட்டுவர். தொழில் வளர்ச்சி உண்டு. அயல்நாட்டிலிருந்து ஆதாயம் தரும் தகவல் வரலாம்.

    ×