என் மலர்
ஆன்மிகம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
உன்னத வாழ்வமைய உறவினர்கள் ஒத்துழைப்புச் செய்யும் நாள். சுபச் செய்திகள் வந்து சேரும். வருமானம் திருப்தி அளிக்கும். தொழில் வெற்றி நடைபோடும். கடல்பயண வாய்ப்புகள் கைகூடும்.
ரிஷபம்
நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். விண்ணப்பித்த வேலை கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும்.
மிதுனம்
பிரச்சனையில் இருந்து விடுபடும் நாள். பிரியமானவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். தொகை வரவு திருப்தி தரும்.
கடகம்
வாயிலைத் தேடி வரவு வந்து சேரும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் வளர்ச்சி உண்டு. தொல்லை தந்தவர்கள் விலகுவர். மனக்குழப்பங்கள் அகலும்.
சிம்மம்
நிர்வாகத் திறமை பளிச்சிடும் நாள். பொருளாதார நெருக்கடி அகலும். சேமிப்புகள் உயரும். அன்னிய தேசத்திலிருந்து அனுகூல செய்திகள் வந்து சேரும். கல்யாண முயற்சி கைகூடும்.
கன்னி
மலைபோல் வந்த துயர் பனிபோல் விலகும் நாள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். கடன் சுமை குறைய எடுத்த புது முயற்சியில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
துலாம்
விழிப்புணர்ச்சி அதிகம் தேவைப்படும் நாள். விரயங்கள் அதிகரிக்கும். வி.ஐ.பி.க்களை விரோதித்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் இடையூறுகள் ஏற்படும்.
விருச்சிகம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் கவனம் தேவை.
தனுசு
ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும் நாள். அண்ணன் தம்பிகளின் ஆதரவு கிடைக்கும். பொருளாதார நெருக்கடி அகலும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும்.
மகரம்
நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். எதிர்பார்த்த காரியங்கள் எதிர்பார்த்தபடியே நடைபெறும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் உண்டு.
கும்பம்
சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும் நாள். சிக்கல்கள் தீர செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிட்டும். திடீர் பயணங்களால் சில திருப்பங்கள் ஏற்படும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர்.
மீனம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் உங்கள் பிரச்சனைகள் தீர வழிகாட்டுவர். தொழில் வளர்ச்சி உண்டு. அயல்நாட்டிலிருந்து ஆதாயம் தரும் தகவல் வரலாம்.
- திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், காபி உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றனர்.
- நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது.
இன்று காலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு செல்லும் வைகுந்தம் அறைகள் மற்றும் நாராயணகிரி கொட்டகை முழுவதும் நிரம்பியது.
பக்தர்கள் ஷீலா தோரணம் வரை 5 கிலோ மீட்டர் தூரம் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.
அதிக அளவில் வாகனங்களில் பக்தர்கள் வந்ததால் மலை அடிவாரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அலிபிரி முதல் கருடன் சிலை வரை வாகனங்கள் நகர முடியாமல் நின்றன. அதனை போலீசார் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், காபி உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 87,759 பேர் தரிசனம் செய்தனர். 42,043பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.16 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
- வார ராசிபலன்கள்
- 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்
மேஷம்
திட்டமிட்டு வெற்றி பெறும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெற்று இருக்கிறார். மனதில் நிறைவும் நெகிழ்ச்சியும் உண்டாகும். கடன் வாங்கி, அட்வான்ஸ் வாங்கி போனசில் கடனை கழித்து வாழ்க்கையை நடத்திய நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் உயரும். மேல் அதிகாரிகளின் அன்பும், ஆதரவும், பாராட்டும் கிடைக்கும்.
கணவன்-மனைவி ஒற்றுமையால் மகிழ்ச்சி கூடும். ஆன்ம பலம் பெருகி ஆரோக்கியத் தொல்லை குறையும். கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்துக்களின் தீர்ப்பு சாதகமாகும். திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள். தங்கம், வெள்ளி, அழகு, ஆடம்பரப் பொருட்கள் அதிகம் சேரும். காரியத்தடை, மன சஞ்சலம் குறையும். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவார்கள்.
உங்களின் கவுரவம், அந்தஸ்து உயரும். பணப் புழக்கம் சரளமாக இருக்கும். சீட்டுப் பணம், ரேஸ், பங்குச் சந்தை மூலம் வருமானம் பெருகும். ஒரு சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய சொத்து வாங்குவார்கள். மறுமணம் கைகூடும். ஸ்ரீ ரங்கநாதரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
ரிஷபம்
வெற்றி மேல் வெற்றி தேடி வரும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் புதுனுடன் வெற்றி ஸ்தானத்தில் இணைந்து உள்ளார். தடைபட்ட அனைத்து முயற்சிகளும் வெற்றியை தரும். எதிர்காலத் தேவைக்காக திட்டமிடுவீர்கள். மனவேதனை மாறும். வாழ்வில் மாற்றம் தரும் இடப்பெயர்ச்சி நடக்கும். வீடு மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம், வேலை மாற்றம் என அவரவர்களின் தசா புத்திக்கு ஏற்ப விரும்பத் தகுந்த மாற்றங்கள் நடக்கும்.
உடன் பிறந்தவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு சீராகி பாகப்பிரிவினை சுமூகமாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். காணாமல் போன பொருட்கள் தென்படும். கமிஷன் அடிப்படையான தொழிலில் லாபம் கூடுதலாகும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும். பழைய கடனை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள்.
புதிய ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆரோக்கியம் சீராகும். பயணங்கள் மிகுதியாகும். கணவர் மற்றும் பிள்ளைகளால் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிரம்பும். வீண் செலவுகளை குறைத்தால் மன அமைதி கூடும். மாமனாரால் சிறு சிறு இன்னல்கள் தோன்றி மறையும். காதல் திருமணத்திற்கு சம்மதம் கிடைக்கும். வெள்ளிக்கிழமைகளில் கோ பூஜை செய்யவும்.
மிதுனம்
இழந்த இன்பங்களை மீட்டுப் பெறும் வாரம். தனஸ்தானத்தில் புதன் சுக்கிரன் சேர்க்கை இருப்பதால் இது லட்சுமி நாராயண யோகமாகும். இது உங்களுக்கு மங்களகரமான பலன்களை வழங்க கூடிய அமைப்பாகும். உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு நீங்கள் காணும் கனவுகள் நிறைவேறும்.
இது சமூகத்தில் பிரபலத்தை ஏற்படுத்தும் யோகமாகும். கலைத் துறையை சார்ந்தவர்களுக்கு மிகச் சிறப்பான காலமாகும். மனதில் சந்தோசமும் அமைதியும் குடிபுகும். நிகழ்கால, எதிர்கால தேவைகள் பூர்த்தியாக கூடிய வகையில் தாராள தன வரவு உண்டாகும். தங்கம், வெள்ளி, அழகு, ஆடம்பரப் பொருட்கள் அதிகம் சேரும்.
அரசு சார்ந்த துறைகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் நிலவிய சங்கடங்கள் விலகும். சிலர் வியாபாரத்தை விரிவு செய்வார்கள்.
அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்கள் பலன் தரும். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் நடத்துவீர்கள். புத்திர பிராப்தம் உண்டாகும். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவார்கள். புதன்கிழமை மகாலட்சுமி சமேத மகாவிஷ்ணுவை வழிப்பட்டால் மன நிம்மதி கூடும்.
கடகம்
உழைத்த உழைப்பிற்கு பலன் கிடைக்கும் வாரம். தன ஸ்தான அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெற்று உள்ளார். வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிப்பீர்கள். தெய்வ நம்பிக்கை கூடும். குடும்ப முன்னேற்றத்திற்கு சுப செலவுகள் செய்வீர்கள். நல்லார் உறவும், நண்பர்கள் ஆதரவும் உறவினர்கள், ஒத்துழைப்பும் அமோகமாக அமையும்.
சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக முனைப்புடன் விடா முயற்சியுடன் செயல்பட்டால் பெரும் லாபம் கிட்டும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். புதிய தொழில் முயற்சிக்கு உகந்த நேரம். சமூக சேவைக்காக அதிக அலைச்சல் மிகுந்த பயணம் செய்ய நேரும்.
சிலர் வாடகைக்கு வசிக்கும் வீட்டை விலைக்கு வாங்குவார்கள். மனைவி மூலம் ஸ்திர சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். பிரிந்த தம்பதிகள் சேர்ந்து வாழத் துவங்குவார்கள். திருமணத் தடை அகலும். கலப்பு திருமணங்கள் அதிகம் நடக்கும். நோய்கள் தீரும். வைத்தியச் செலவு குறையும். சரபேஸ்வரரை வழிபட தன் நிறைவும் நிலையான நிம்மதியும் உண்டாகும்.
சிம்மம்
சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியன் ஆட்சி பெற்று கேது உடன் இணைகிறார். இது கிரகண தோஷ அமைப்பாகும். பணியில் கவனத்துடன் செயல்பட வேண்டும். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. அடிக்கடி கை கால்களில் உடம்புகளில் வலி இருந்து கொண்டே இருக்கும்.
சிலருக்கு புனித தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் ராகு, கேதுக்கள் எதிர்பாராத சறுக்கலையும் ஏற்படுத்தும், வீண் பழிக்கு ஆளாக நேரும் என்பதால் சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்யக்கூடாது. பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
தொழிலில் வெற்றியும், மேன்மையும் லாபமும் உண்டாகும். தேவைக்கு மீறிய கடனை தவிர்க்க வேண்டும். சுய ஜாதக பரிசீலனைக்கு பிறகு வேலை மாற்றம் செய்வது நல்லது. காது, மூக்கு தொடர்பான நீண்ட நாள் பிரச்சிினைகளுக்கு அறுவை சிகிச்சையில் தீர்வு கிடைக்கும். காலதாமத திருமணம் நல்லது. சிவ வழிபாடு செய்தால் சுப பலன்கள் இரட்டிப்பாகும்.
கன்னி
சுப பலன்கள் நடக்கும் வாரம். ராசி அதிபதி புதன் லாப ஸ்தானத்தில் சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றுள்ளார். மனம் விரும்பும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். புதிய தெம்பு மற்றும் தைரியத்துடன் வீர நடைபோடுவீர்கள். நீண்ட காலமாக தொல்லை கொடுத்து வந்த குடும்ப பிரச்சினைகள் படிப்படியாக நல்ல முடிவுக்கு வரும்.
பணக்கவலை குறையும். பாக்கிய பலத்தால் தாராளமான வரவு செலவு, பணப்புழக்கமும் உண்டாகும். கடன்கள் தீர்ந்து மன அழுத்தங்கள் குறையும். கைநிறைய பணம் புரள்வதால் புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். இல்லத்தில் தடைபட்ட சுப நிகழ்வுகள் இனிதே நடைபெறும்.
புது வீடு கட்டலாம். சுப விரைய செலவுகள் ஏற்படும். அரசு வேலை வாய்ப்பு முயற்சி வெற்றி தரும்.
முன்னோர்களின் நல்லாசியும் குல தெய்வ அருளும் உண்டாகும். புத்திர பிராப்தம் கிடைக்கும். சிலர் கம்பெனி செலவில் வெளிநாடு சென்று பணிபுரியும் சந்தர்ப்பம் கிட்டும். காதலர்கள் விட்டுக் கொடுத்து செல்லவும். உடல் ரீதியான மன ரீதியான சங்கடங்கள் குறையும். சிவனுக்கு பச்சை கற்பூரம் அபிசேகம் செய்து வழிபடவும்.
துலாம்
சகாயங்கள் நிறைந்த வாரம். லாப ஸ்தானத்தில் சூரியன் ஆட்சி பலம் பெற்று இருக்கிறார். தடைபட்ட பாக்கிய பலன்கள் சித்திக்கும். மற்றவர்களால் மதிக்கக்கூடிய நிலையை அடைவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும். தொழில் விரிவாக்க கடனும் கிடைக்கும். விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்களுக்கு தொழில் வளர்ச்சி பிரமாண்டமாகும்.
நல்ல வருமானம் வரும். பிள்ளைகளின் கல்வி, திருமணம் என சுப விரயமும் உண்டாகும். கடன் பெற்று அசையும், அசையாச் சொத்து வாங்குவீர்கள். பணியில் இருப்பவர்கள் விரைந்து செயல்படுவதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற முடியும். உங்களை புண்படுத்திய சகோதர சகோதரிகள் மனம் திருந்துவார்கள்.
ஆரோக்கிய குறைபாட்டால் ஏற்பட்ட பாதிப்புகள் அகலும். வழங்குகளில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. 18.8.2025 அன்று மதியம் 2.40 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் கொடுக்கல், வாங்கலில் பெரிய தொகையை கையாள்வதைத் தவிர்க்கவும். காதலர்கள் இடையே சிறிய தவறுகள் பெரும் கருத்து வேறுபாடுகளாக மாறும். ஸ்ரீ தத்தாத்ரேயரை வழிபட வளம் பெருகும்.
விருச்சிகம்
சுதந்திரமாக செயல்படும் வாரம். பொதுவாக ராசி மற்றும் லக்னத்தை எந்த கிரகமும் பார்க்காமல் இருப்பது நல்லது. ராசியை எந்த கிரகமும் பார்க்க வில்லை. எந்தக் மனபாரமும் இல்லாமல் சிந்தித்து நிதானமாக செயல்படுவீர்கள். பிரிந்த உறவுகள் மீண்டும் இணைவார்கள். ஆடம்பர விழாக்களில் கலந்து கொள்வீர்கள்.
நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் வாக்கிற்கு மதிப்பு, மரியாதை உண்டாகும். துணிச்சல் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே நிலவிய சின்னச் சின்ன மன ஸ்தாபங்கள் முடிவிற்கு வரும். புத்திர பாக்கியம் தடைபட்டவர்கள் செயற்கை கருத்தரிப்பு முறையை அணுக உகந்த காலம். நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும்.
பழைய கடன்களையும், சிக்கல்களையும் தீர்க்கும் நிலை உருவாகும். திருமண வாய்ப்பு தேடி வரும். பிள்ளைகளுக்கு கல்வி ஆர்வம் கூடும். ஆயுள் பயம் அகலும். 18.8.2025 அன்று மதியம் 2.40 முதல் 20.8.2025 அன்று மாலை 6.35 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சுத் திறமையால் எதையும் சமாளிக்க முடியும். தேவையற்ற கோபத்தை குறைத்தால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. முருகன் வழிபாட்டால் ஏற்றமான பலன்களை அடைய முடியும்.
தனுசு
அனைத்து விதமான நற்பலன்களும் நடக்கும் வாரம். 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் ஆட்சி பலம் பெறுகிறார். பலருக்கு புதிய தொழில் எண்ணம் வரும். வருமானம் பல மடங்குபெருகும். புதிய தொழில் துவங்கும் விருப்பம் உள்ளவர்கள் கணிதம் சார்ந்த தொழில்கள், வங்கி தொழில், ஜோதிடம், காலி நில விற்பனை, நடிப்பு தொழில், புத்தக விற்பனை, வெளிநாட்டு பொருள் இறக்கு மதி, கமிஷன் தொழில் செய்யலாம்.
வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். சமூக நலச் சங்கங்களில் பதவி கிடைக்கும். பல வருடங்களாக தடைபட்ட திருமண முயற்சியில் சாதகமான திருப்பம் ஏற்படும். மறு விவாக முயற்சி வெற்றி தரும். வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். தந்தையுடன் நல்லுறவு ஏற்படும்.
நண்பர்கள் மூலம் நன்மைகள் உண்டாகும். 20.8.2025 அன்று மாலை 6.35 முதல் 22.8.2025 அன்று காலை 12.16 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அதிர்ஷ்டத்தை நம்பி கால விரயம் செய்வீர்கள். உடல் நலமும் மனநலமும் பாதிக்கப்படலாம். பண விசயத்தில் யாரையும் நம்பாமல் விழிப்புடன் செயல்பட வேண்டும். வியாழக்கிழமை ஸ்ரீ சாய் பாபாவை வழிபடவும்.
மகரம்
திருப்புமுனையான சம்பவங்கள் நடக்கும் வாரம். ராசிக்கு புதன், சுக்ரன் பார்வை உள்ளது. அனைத்து முயற்சிகளும் வெற்றியாக அமையும். மனதில் தைரியம் குடிபுகும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் நட்பு கரம் நீட்டுவார்கள். வாழ்வின் முன்னேற்றப் பாதையை நோக்கி பயணிப்பீர்கள். பொருளாதார பற்றாகுறை அகலும் பூர்வீகச் சொத்துக்களின் மூலம் வருமானம் கிடைக்கும்.
தவிர்க்க முடியாத சுப விரயங்கள் அதிகரிக்கும். தடை, தாமதம், இன்னல்கள் நீங்கி அற்புதமான சுப பலன்கள் நடக்கும். உடன் பிறந்தவர்களின் திருமணம், குழந்தை பேறு போன்ற கடமைகளை முன் நின்று நடத்துவீர்கள். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை மகிழ்ச்சியை அதிகரிக்கும். ஆன்லைன் சாதனங்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.
உத்தியோகம் அல்லது தொழில் மாற்றங்களை சந்திக்க நேரும். பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் கிடைக்கும். 22.8.2025 அன்று காலை 12.16 மணிக்கு சந்தி ராஷ்டமம் ஆரம்பிப்பதால் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடவும். தேவையற்ற எதிர்பார்ப்புகளைக் குறைத்தால் சிரமங்களை எளிதில் கடந்து விடலாம். ஸ்ரீ கால பைரவரை வழிபடவும்.
கும்பம்
மேன்மையான எண்ணங்களும் சீரிய சிந்தனைகளும் பெருகும் வாரம். சம சப்தம ஸ்தானத்தில் சூரியன் ஆட்சி செய்வதால் முட்டுக்கட்டைகள் அகலும். முயற்சிகள் உடனே நிறைவேறும். புகழ், அந்தஸ்து கவுரவம் நம்பிக்கை, நாணயம் உயரும். உங்களின் முயற்சிக்கு வாழ்க்கைத் துணை, பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள்.
இடமாற்றம், தொழில் மாற்றம், வேலை மாற்றம், வெளிநாட்டு வாய்ப்பு என்று நீங்கள் எதிர்பார்த்து காத்து இருந்த மாற்றங்கள் நடக்கும். வேற்று மொழி பேசுபவர்களால் நன்மைகள் தேடி வரும். வேற்று மத நம்பிக்கை கூடும். தம்பதிகள் ஏதேனும் காரணமாகவோ வெவ்வேறு ஊர்களில் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்தாலோ இப்பொழுது ஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தலாம்.
சேமிப்புகள் முதலீடுகள் அதிகரிக்கும். திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். விற்காமல் கிடந்த முன்னோர்கள் சொத்து விற்பனையாகும். புதிய சொத்து வாங்கும் முயற்சி கைகூடும். ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகள் அகலும். சிலர் ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ், போன்ற பாலிசி எடுப்பார்கள். தினமும் ஆதித்ய ஹிருதயம் படிக்கவும்.
மீனம்
தடைகள் விலகும் வாரம். அதிர்ஷ்டம் பற்றி கூறும் பஞ்சம ஸ்தானத்தில் அஷ்டமாதிபதி சுக்கிரன் புதனுடன் இணைந்து நிற்பதால் திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தும். தடைகள் விலகி மன நிம்மதி கூடும். பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் உங்களுக்கு அதிர்ஷ்டமாக செயல்படும். இதுவரை அரசுவழி ஆதாயம், உத்தியோகத்தில் இருந்து வந்த தடை தாமதங்கள் சரியாகி விடும்.
ஏதேனும் காரணத்தால் இதுவரை ஊதியம் வராமல் தடைபட்டு இருந்தால் மொத்தமாக வந்து விடும். மந்தமான தொழில் சூடு பிடிக்கும். இரவு பகல் பார்க்காமல் கடுமையாக உழைப்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும். அதற்கு தகுந்த வரவும் இருக்கும். வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. முன்னோர்களின் பரம்பரை வியாதிகளின் பாதிப்பு இருக்கும்.
உடல் ஆரோக்கியத்தில், உணவு விசயத்தில் அக்கறையும் கவனமும் தேவை. கை, கால் முட்டி வலி வேதனைகள் குறையும். வைத்தியம் பலன் தரும். சகோதரர் வகையில் வரவு உண்டு. திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும். கணவன்-மனைவி ஒற்றுமை கூடும். தினமும் ஸ்ரீ ருத்ரம் கேட்கவும்.
- பக்தர்கள் ஆன்மீக ரீதியான அறிவைப் பெறுவார்கள்.
- இனிப்புகளை காணிக்கையாக்கி, பாவங்கள் மற்றும் கர்மாவில் இருந்து விடுபட வேண்டுங்கள்.
தமிழ் மாதத்தின் ஐந்தாவது மாதமான ஆவணி மாதம் இன்று பிறந்துள்ளது. இந்த மாதத்தின் ஒவ்வொரு திங்களும், மிகவும் சுபத்துவம் வாய்ந்தது. சிவன் கோவில்களில், ஆவணி மாதத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
சிவலிங்கத்திற்கு இரவும், பகலும் தொடர்ந்து நீர் மற்றும் பால் அபிஷேகம் செய்யப்படும். அது மட்டுமின்றி ஆவணி முழுவதும், ஒவ்வொரு திங்களன்றும் சிவபக்தர்கள் வில்வ இலைகள், புனித நீர், பால் மற்றும் பூக்களால் அர்ச்சிக்கின்றனர். பக்தர்களும் காலை முதல் இரவு வரை விரதமிருந்து, இரவு முழுவதும் எரியும் வகையில் ஒற்றை அகல் விளக்கை ஏற்றுவார்.
ஆவணி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சமீபத்தில் திருமணமான பெண்கள், தீய சக்தி மற்றும் துரதிர்ஷ்டம் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க, ஆவணி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மங்கள கெளரி விரதம் கடைபிடிக்கிறார்கள். ஆவணி மாத வெள்ளிக்கிழமைகள் மற்றும் சனிக்கிழமைகளில், திருமணமான பெண்கள் பெருமாளுக்கு விரதம் இருக்கிறார்கள். அதே போல, ஆண்களும், சனிக்கிழமைகளில் பெருமாளுக்கான சடங்குகளை செய்கிறார்கள்.
ஆவணி மாதத்தில் சிவபெருமானை வழிபடுவதற்கான பூஜை முறை :
சிவபெருமானைப் பூஜிக்க, கிழக்கு நோக்கி உட்கார வேண்டும். அதைத் தொடர்ந்து, வலது கையில் ஒரு சில துளிகள் புனித நீரை எடுத்துக் கொண்டு, உங்களுக்கு என்ன தேவையோ அதைக் கேட்க வேண்டும். அதைத் தொடர்ந்து, நீங்கள் தியானம் செய்யும் போது, ஈசனையும் நினைத்துக் கொள்ளவும். கையில் உள்ள நீரை, சிவலிங்கத்தின் மீது ஊற்றவும். 'ஓம் நம சிவாய' என்று கூறிய படி, பஞ்சாமிர்தத்தை சிவலிங்கத்தின் மீது அபிஷேகம் செய்யவும். மீண்டும் தண்ணீர் ஊற்றி, அட்சதைத் தூவவும். பிறகு, ஆர்த்தி எடுக்க வில்வ இல்லை மற்றும் ஊதுபத்தியை ஏற்றி வைக்கவும். இனிப்புகளை காணிக்கையாக்கி, பாவங்கள் மற்றும் கர்மாவில் இருந்து விடுபட வேண்டுங்கள்.

ஆவணி மாதத்தில் திங்கட்கிழமை அன்று சிவபெருமானை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் :
* பக்தர்கள் ஆன்மீக ரீதியான அறிவைப் பெறுவார்கள்
* உடல் மற்றும் மன ரீதியான ஆரோக்கியம் மேம்படும்
* பிரபஞ்சத்தை உருவாக்கியதும், அழிப்பதும் ஈசனே! எனவே, இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவது, நல்ல ஞாபக சக்தியையும், மன உறுதியையும் கொடுக்கும்.
* சிவபெருமான் நல்ல வாழ்க்கைத்துணையை வழங்குவார்
* கூடுதலாக, விரதமிருப்பது, நம் பாதையில் இருக்கும் நச்சுகள் மற்றும் இடையூறுகளை நீக்குகிறது
* விளக்கு ஏற்றி வழிபட்டால், நம்முடைய அறிவு மேம்படும்
* கங்கை நீரால் அபிஷேகம் செய்வது, முக்திக்கு வழிவகுக்கும்
* சிவபெருமானுக்கு விருப்பமான பிரசாதங்களை வழங்குவது, நமக்கு எல்லா விதத்திலும் வெற்றியைப் பெற உதவும். நம்முடைய ஆசைகளும் நிறைவேறும்.
ஜோதிட ரீதியாக ஆவணி மாதத்தின் சிறப்புகள் :
வேத ஜோதிடத்தின் கூற்று படி, சூரியன் சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆகும் நாள், ஆவணி மாதம் தொடக்கம் என்று கூறப்படுகிறது. இந்த கிரகத்தின் பெயர்ச்சி, அனைத்து ராசிகளையும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கிறது. அதனால் தான், பஞ்சாங்கம் இதனை மிகவும் விசேஷமான மாதமாகக் கருதுகிறது.
- சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை.
- ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆவணி-1 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : நவமி இரவு 8.47 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம் : கார்த்திகை காலை 6.48 மணி வரை பிறகு ரோகிணி நாளை விடியற்காலை 4.28 மணி வரை பிறகு மிருகசீரிஷம்
யோகம் : சித்த, அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
காஞ்சி காமாட்சியம்மன், இருக்கன்குடி மாரியம்மன், சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம்
சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன சேவை. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் தெப்ப உற்சவம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கு காலை சிறப்பு அபிஷேகம். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வரவு
ரிஷபம்-மாற்றம்
மிதுனம்-லாபம்
கடகம்-வெற்றி
சிம்மம்-நலம்
கன்னி-நன்மை
துலாம்- ஆதாயம்
விருச்சிகம்-வரவு
தனுசு- உறுதி
மகரம்-இன்பம்
கும்பம்-மேன்மை
மீனம்-நிறைவு
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
சுபச் செய்திகள் வந்து சேரும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். திருமணப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும்.
ரிஷபம்
அதிகாலையிலேயே அனுகூலத் தகவல் வந்து சேரும் நாள். வருங்கால நலன் கருதி புதிய முடிவெடுப்பீர்கள். இடம், பூமி சேர்க்கை உண்டு. கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.
மிதுனம்
தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். தொகை எதிர்பார்த்தபடி வந்து சேரும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கடகம்
அன்றாட பணிகளில் இருந்த தடை அகலும் நாள். ஆரோக்கியப் பாதிப்புகளை தவிர்க்க ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. தொழிலில் பங்குதாரர்களால் நன்மை ஏற்படும்.
சிம்மம்
யோகமான நாள். மறதியால் விட்டுப்போன பணி ஒன்றை இன்று செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சம்பள உயர்வின் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து பணிபுரிய நேரிடும்.
கன்னி
போன் மூலம் பொன்னான செய்திகள் வந்து சேரும் நாள். இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். உங்கள் ஆலோசனைகளைக் கேட்டு நடந்தவர்கள் பாராட்டுவர்.
துலாம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். பயணங்களை மாற்றி அமைப்பீர்கள். ஆதாயம் எதிர்பார்த்தபடி கிடைக்காது. உறவினர் பகை உருவாகும்.
விருச்சிகம்
வெற்றிக் கனியை எட்டிப் பிடிக்கும் நாள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.
தனுசு
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வேலைக்கு முயற்சி செய்வதில் மும்முரம் காட்டுவீர்கள்.
மகரம்
நன்மைகள் நடைபெறும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். உத்தியோகத்தில் பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்பு நல்லவிதம் நிறைவேறும்.
கும்பம்
அலைபேசி மூலம் அனுகூலச் செய்தி வந்து சேரும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். வரவு திருப்தி தரும். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.
மீனம்
காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும் நாள். நண்பர்களின் ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க நேரிடும்.
- கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி இஸ்கான் கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
- ஸ்ரீ ராதாகிருஷ்ணருக்கு பால், நெய், தேன் மற்றும் பழச்சாறுகளால் அபிஷேகம் செய்யப்பட்டது.
திருவான்மியூர்:
கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் உள்ள பல கோவில்களில் இன்று மாலை கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து இன்று காலையில் இருந்தே இஸ்கான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டனர்.
கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி இஸ்கான் கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆன்மிகம், இசை மற்றும் பக்தி நிகழ்ச்சிகள் களை கட்டியது. முன்னதாக நேற்று மாலையில் சந்தியா ஆரத்தி நடந்தது. இரவு 10.30 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஸ்ரீ ராதாகிருஷ்ணருக்கு பால், நெய், தேன் மற்றும் பழச்சாறுகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. நள்ளிரவு 12 மணிக்கு, மகா ஆரத்தி நடந்தது.

பின்னர் இன்று அதிகாலை 4.30 மணிக்கு மங்கள ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து பாகவதம் வகுப்பு, குரு பூஜை மற்றும் அழகாக அலங்கரிக்கப்பட்ட தெய்வங்களின் தரிசனம் நடைபெற்றது. இன்று நாள் முழுவதும் கீர்த்தனை நிகழ்ச்சிகள் நடக்கிறது. கிருஷ்ணரின் அவதாரத்தைக் கொண்டாடும் இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
- ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது வாமணன்.
- வளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது.
விஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் தான் கிருஷ்ண அவதாரம். அவரது 10 அவதாரங்களைப் பின்பற்றி மனிதன் உணர வேண்டிய உலக உண்மைகள் என்னென்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.
1. மச்ச அவதாரம் :
தாயின் வயிற்றில் இருந்து ரத்தத்தோடு ரத்தமாய் நீந்தி வந்து பிறந்தது மீன். அதாவது மனிதர்களின் பிறப்பு நிகழும் முறை.
2. கூர்ம அவதாரம்:
மூன்றாம் மாதம் கவிழ்ந்து தலை தூக்கி பார்ப்பது ஆமை.
3. வராக அவதாரம்: ஆறாம் மாதம் குழந்தையாக தவழ்ந்து, முட்டி போட்டு நான்கு கால்களில் நிற்பது பன்றி.
4. நரசிம்ம அவதாரம்: எட்டாம் மாதம் எழுந்து உட்கார்ந்து, கையில் கிடைத்ததை கிழிப்பது நரசிம்மர்.
5. வாமன அவதாரம்: ஒரு வயதில் அடிமேல் அடி வைத்து நடப்பது வாமணன்.
6. பரசுராம அவதாரம்: வளர்ந்த பின் தாய் தந்தையருக்கு கடமையாற்றுவது.
7. ராம அவதாரம்: திருமணம் ஆகி ஒருவனுக்கு ஒருத்தி என கற்பு நிலையில் இருந்து குடும்பக் கடமைகளை ஆற்றினார்.
8. பலராம அவதாரம்: இல்லறவாசியாய் உடன் பிறந்தோர், சுற்றத்தார், ஊர், உலகோர்க்கு கடமையாற்றுவது.
9. கிருஷ்ண அவதாரம்: முதுமையில் பற்றற்று இறை உணர்ந்து அடுத்த சந்ததிக்கு உபதேசித்து வழிகாட்டுவது.
10. கல்கி அவதாரம்: இறைநிலையில் ஒன்றி கலந்து எல்லாவற்றிலும் தன்னையும், தன்னுள் எல்லாவற்றையும் காணும் அறிவின் முழுமையாம் முக்தி பெறுவது.
- கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான இனிப்பு வகைகள், பலகாரங்கள் ஆகியவற்றை செய்து நைவேத்தியமாக படைக்க வேண்டும்.
- அஷ்டமி நாளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்தியாவில் மிக கோலாகலமாகக் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று கிருஷ்ண ஜெயந்தி. பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தையே கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடி மகிழ்கிறோம். கோகு
லாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி போன்ற பல பெயர்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ணர் அவதரித்தது, துவாபர யுகத்தில் ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியில் என சொல்லப்படுகிறது. இவர் தேவகிக்கும், வசுதேவருக்கும் எட்டாவது குழந்தையாக அவதரித்தார். இதனால் ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி நாளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
ஆனால் இந்த ஆண்டு ஆடி மாதத்திலேயே கிருஷ்ண ஜெயந்தி வருகிறது. அதாவது, ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் தொடங்கும் நாளான ஆகஸ்டு 16-ந்தேதி (சனிக்கிழமை) கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
ஆகஸ்டு 16-ந்தேதி அதிகாலை 1.41 மணி தொடங்கி, அன்று இரவு 11.13 மணி வரை அஷ்டமி திதி உள்ளது. கார்த்திகை நட்சத்திரத்துடன் இணைந்து இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா அமைந்துள்ளது.
ஆகஸ்டு 14-ந் தேதி வியாழக்கிழமையே வீட்டை சுத்தம் செய்து, ஆகஸ்டு 15-ந் தேதி வெள்ளிக்கிழமையே வீட்டை அலங்கரித்து, பூஜைக்கு தேவையான பொருட்களை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான இனிப்பு வகைகள், பலகாரங்கள் ஆகியவற்றை செய்து நைவேத்தியமாக படைக்க வேண்டும்.
கிருஷ்ணரின் சிலை அல்லது படத்தை அழகிய, வாசனை மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பிறகு குழந்தை கிருஷ்ணரை வீட்டிற்குள் அழைப்பதற்காக பச்சரிசி மாவினால் கிருஷ்ணரின் பாதங்களை, வீட்டு வாசல் தொடங்கி பூஜை அறையில் கண்ணன் சிலை அல்லது படம் வைத்திருக்கும் இடம் வரை வரைய வேண்டும். கிருஷ்ணருக்கு உரிய மந்திரங்கள், சுலோகங்கள் ஆகியவற்றை சொல்லி வழிபட வேண்டும்.
- குச்சனூர் ஸ்ரீசனிபகவான் திருமஞ்சன அலங்கார சேவை.
- உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆடி-31 (சனிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : அஷ்டமி இரவு 11.13 மணி வரை. பிறகு நவமி.
நட்சத்திரம் : பரணி காலை 8.26 மணி வரை பிறகு கார்த்திகை.
யோகம் : சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோவிலில் திருமஞ்சன சேவை
இன்று கோகுலாஷ்டமி. கார்த்திகை விரதம். குச்சனூர் ஸ்ரீசனிபகவான் திருமஞ்சன அலங்கார சேவை. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் தெப்போற்சவம். பெருவயல் ஸ்ரீமுருகப் பெருமான் திருவீதி உலா. வேலூர் மாவட்டம் ரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் தங்க ரதக்காட்சி. திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீபரிமளரெங்கராஜ் பெருமாள் புறப்பாடு. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீவைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-செலவு
ரிஷபம்-முயற்சி
மிதுனம்-சிறப்பு
கடகம்-மாற்றம்
சிம்மம்-கடமை
கன்னி-பரிசு
துலாம்- கண்ணியம்
விருச்சிகம்-பக்தி
தனுசு- பணிவு
மகரம்-ஓய்வு
கும்பம்-உழைப்பு
மீனம்-திடம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
நிதி நிலை உயர்ந்து நிம்மதி கூடும் நாள். தக்க சமயத்தில் நீங்கள் செய்த உதவியை நண்பர்கள் பாராட்டுவர். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். நீண்ட தூரப் பயணங்களால் பலன் உண்டு. குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் வந்து சேரும்.
மிதுனம்
கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணி மீதியும் தொடரும்.
கடகம்
தள்ளிப்போன காரியங்கள் தானாக முடிவடையும் நாள். வாகன மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். அலைபேசி வழித்தகவல் நெஞ்சம் மகிழ வைக்கும். வருமானம் திருப்தி தரும்.
சிம்மம்
முக்கியப் புள்ளிகளால் முன்னேற்றம் கூடும் நாள். உடன்பிறப்புகளால் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறலாம். பிரியமான சிலரைத் தேடிச் சென்று சந்திப்பீர்கள்.
கன்னி
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். நினைத்ததை நினைத்தபடி செய்ய இயலாது. சேமிப்பில் சிறிது கரையலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
துலாம்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதிர்பார்ப்புகள் நடைபெறாமல் போகலாம். திடீர் மாற்றங்கள் பயணத்தில் ஏற்படும். விரயங்கள் அதிகரிக்கும். மருத்துவ செலவு உண்டு.
விருச்சிகம்
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். உண்டு. வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். அலைபேசி வழியில் அனுகூலத் தகவல் உண்டு. பொருளாதார நிலை உயரும்.
தனுசு
புதிய பாதை புலப்படும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். நீண்ட நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறும். தொழிலில் கூடுதல் லாபம் வந்து சேரலாம்.
மகரம்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நட்பால் நன்மை உண்டு. தொழில் வளர்ச்சிக்காக புதிய பங்குதாரர்களைச் சேர்க்க முன்வருவீர்கள். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு.
கும்பம்
வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். வருமானம் திருப்தி தரும். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம்.
மீனம்
உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். தடைகள் விலக தைரியமாக முடிவெடுப்பீர்கள். அயல்நாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்.
- ஸ்ரீகிருஷ்ணபாதம் கூறிக்கொண்டே மாக்கோலமிட்டு வரவேற்கலாம்.
- கண்ணனே நேரில் நம் வீட்டுக்கு எழுந்தருள்வதாக ஐதீகம்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று தன்னை அழைக்கும் பக்தர்களின் வீட்டிற்கு கண்ணன் வருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
எனவே கிருஷ்ணஜெயந்தி அன்று வீட்டை சுத்தப்படுத்தி அலங்கரித்து குழந்தை கண்ணனை வரவேற்கும் விதத்தில் வீட்டு வாசலில இருந்து பூஜை அறை வரையில் சின்னக்கண்ணன் நடந்து வருவது போல் அவனது பாதச்சுவடுகளை ஸ்ரீகிருஷ்ணபாதம் கூறிக்கொண்டே மாக்கோலமிட்டு வரவேற்கலாம்.
இதனால் கண்ணனே நேரில் நம் வீட்டுக்கு எழுந்தருள்வதாக ஐதீகம். ஆயர்பாடியில் கண்ணனை வரவேற்க சித்திரக்கோலம் (ரங்கோலி), மலர் அலங்காரம், பூக்கோலமிடுவர். அதை நமது இல்லங்களிலும் செய்து கிருஷ்ணரை வரவேற்க வேண்டும். இதனால் கண்ணனே தன் திருப்பாதங்களை பதித்து நடந்து வந்து பூஜை அறையில் நாம் வைத்துள்ள நைவேத்திய பட்சணங்களை ஏற்றுக் கொள்கிறார் என்பதாகும்.






