என் மலர்tooltip icon

    ராசிபலன்

    weekly rasipalan 5.10.2025 to 11.10.2025: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்
    X

    weekly rasipalan 5.10.2025 to 11.10.2025: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்

    • மிதுனம் சோதனைகள் சாதனைகளாக மாறும் வாரம்.
    • துலாம் அனைத்து விதமான தேவைகளும் நிறைவேறிடும் இன்பமான வாரம்.

    மேஷம்

    அதிகமாக உழைக்க வேண்டிய வாரம். ராசி அதிபதி செவ்வாய் 3,6-ம் அதிபதி புதனுடன் இணைந்து ராசியை பார்க்கிறார். தீபாவளிக்கு தேவையான ஆடை ஆபரணங்கள் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு வீடு மாற்றம் வேலை மாற்றம் நடக்கலாம். சிறு சிறு உடல் நல, மனநல பாதிப்புகள் வரலாம். கடன் வாங்குவது, ஜாமீன் போடுவதை தவிர்க்கவும்.புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வந்தாலும் சிந்தித்து முடிவு செய்ய வேண்டும். பங்குச் சந்தை ஆதாயம் குறையும். குரு பகவான் அதிசாரமாக கடக ராசிக்குள் நுழைகிறார். வீடு வாங்குவது, வீடு கட்டுவது சம்மந்தமான முயற்சிகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் தனித் தன்மையுடன் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலம். சனியின் வக்ர நிவர்த்திக்குப் பிறகு திருமணம் நடைபெறக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளது. முக்கிய காரியங்கள் நிறை வேற்றுவதில் இடையூறுகள், தடைகள் இழுபறிகள் வந்தாலும் தைரியமும், தன் நம்பிக்கையும் குறையாது. குழந்தை பேறு கிடைக்கும். ராஜா அலங்கார முருகன் வழிபாடு நிம்மதியை அதிகரிக்கும்.

    ரிஷபம்

    நீச்ச பங்க ராஜ யோகம் ஏற்படும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நீச்சம் அடைகிறார். புதன். சுக்கிரன் பரிவர்த்த னையில் இருப்பதால் சுக்கிரனுக்கு நீச்ச பங்க ராஜயோகம் கிடைக்கிறது.திட்டமிட்டபடி சுப காரி யங்கள் பிரமாண்டமாக நடந்து முடியும். தீபாவளி போனசில் அழகு ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாகும். காதல் திருமணம் நடக்கும். உயர்கல்வி மற்றும் திருமணத்திற்குத் தேவையான கடன், பொருள் உதவி கிடைக்கும். குலதெய்வ பிரார்த்தனை நிறைவேறும். வீடு, வாகனம், சொத்து போன்ற வற்றில் ஏற்பட்ட இழப்பு, விரயங்களை ஈடு செய்வீர்கள். வீட்டிலும் வேலை பார்க்கும் இடத்திலும் நிம்மதியான சூழல் நிலவும். தாய், தந்தையின் ஆரோக்கியம் மகிழ்சியைத் தரும். மனக்கசப்பில் பிரிந்து சென்ற உறவுகள் உங்களை புரிந்து மீண்டும் உறவை புதுப்பிப்பார்கள்.முறையான திட்டமிடுதல் நிரந்தர வெற்றியைக் குவிக்கும்.வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வழிபட பொருளாதார மேன்மை உண்டாகும்.

    மிதுனம்

    சோதனைகள் சாதனைகளாக மாறும் வாரம்.ராசி அதிபதி புதன் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்கிரனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார். இது நீச்சபங்க ராஜயோகத்தை ஏற்படுத்தும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். தான தர்மங்களில் ஆர்வங்கள் கூடும். பூர்வீகம் சார்ந்த இன்னல்கள் சீராகும்.விற்க முடியாமல் கிடந்த பூர்வீக சொத்துக்கள் விற்றுப் பண மாகும். தடைபட்ட சகோதர சகோதரி களின் திருமண முயற்சி வெற்றியாகும். குரு பகவான் அதிசாரமாக தன ஸ்தானத்திற்கு செல்வதால் ஜென்ம குருவால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். புதிய திட்டங்கள் மற்றும் எண்ணங்களால் தொழி லில் முன்னேற்றம், லாபம் உருவாகும். தொழிலுக்கு அரசின் ஆதரவு கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு வேலை முயற்சிகள் பலன்தரும்.அடகு நகைகளை மீட்கக்கூடிய வகையில் வருமானம் உயரும்.பெண்களுக்கு கணவர் மற்றும் புகுந்த வீட்டாரின் அன்பு மன சஞ்சலத்தைக் குறைக்கும்.தேவைகள் நிறைவேறும்.வீடு மற்றும் பூமி வாங்கும் எண்ணம் நிறைவேறும். வராக் கடனை வசூலிப்பதில் ஆர்வம் கூடும்.மீனாட்சி யம்மன் வழிபாட்டால் சாதகமான பலன்களை பெற முடியும்.

    கடகம்

    விரும்பிய புதிய மாற்றங்கள் உருவாகும் வாரம்.ஜென்ம குருவின் ஆதிக்கம் துவங்கப் போகிறது. குரு பகவான் அதிசாரமாக ராசிக்குள் நுழைந்து உச்சமடைய போகிறார். சுமார் 48 நாட்கள் புதிய மாற்றங்கள் உருவாகலாம்.புதியதாக சுய தொழில் துவங்குவதை விட உத்தியோகமே சிறப்பு. முதலீட்டாளர்கள் புதிய தொழில் ஒப்பந்தத்தில் கவனமாக செயல்பட வேண்டும். தொழில் கூட்டாளிகளிடம் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.புதிய தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள் என புதுப்புது மாற்றங்கள் நிகழும். தடைபட்ட வீடு கட்டும் பணி தொடரும். கணவன்-மனைவி ஒற்றுமை, திருமணம், சுப காரியங்கள் நடப்பது போன்ற நற்பலன்கள் நடக்கும். குடும்பத்தி னரின் ஒத்துழைப்பும் உடல் ஆரோக்கியமும் சிறக்கும். இந்த வாரம் தீபாவளிக்கு புதிய ஆடைகள் வாங்குவீர்கள். சிலருக்கு தாயார் மூலம் கணிசமான தொகை கிடைக்கும். 6.10.2025 அன்று காலை 12.45 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கடன் வாங்குவதையும், கடன் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். திங்கட்கி ழமை சிவ வழிபாடு செய்வதால் உயர்வான நிலையை அடைய முடியும்.

    சிம்மம்

    தெளிவான திட்டமிடுதலும் முயற்சியும் அவசியம். ராசி அதிபதி சூரியன் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரனுடன் சேர்ந்துள்ளார். தம்பதிகளின் அன்பு பரிமாற்றம் மன நிறைவாக இருக்கும். ஆரோக்கிய குறைபாடு அகன்று மருத்துவச் செலவு குறையும்.சிலர் நல்ல வசதியான வீட்டிற்கு இடமாற்றம் செய்யலாம். விரய ஸ்தானத்தில் குருபகவான் உச்சம் அடைவது சுபித்துச் சொல்லக்கூடிய பலன் அல்ல. கவனத்துடன் செயல்பட வேண்டிய காலம். வியாபாரத்தில் சிறு சறுக்கல் தோன்றுவது போல் இருந்தாலும் சமாளிக்க முடியும். திருமணத் தடை நீடிக்கும். தம்பதிகள் தொழில் நிமித்தமாக பிரிந்து வாழலாம். தம்பதிகளிடம் ஒற்றுமை உணர்வு மேலோங்கும். தந்தை-மகன் உறவு பலப்படும். வெளிநாட்டில் வாழும் பிள்ளைகளின் வருகை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். 6.10.2025 அன்று காைல 12.45 முதல் 8.10.2025 அன்று காைல 1.28 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு கை,கால், மூட்டு எலும்பு,நரம்பு, சுகர், பிரஷர் தொடர்பான பிரச்சனைகள் அதிகமாகும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதால் சகல சௌபாக்கிய மும் உண்டாகும்.

    கன்னி

    பொருளாதார மேன்மை உண்டாகும் வாரம்.ராசி அதிபதி புதன் சுக்கிரனுடன் பரிவர்த்தனை பெற்றுள்ளார்.மேலும் லாப ஸ்தானத்தில் குரு பகவான் உச்சமடைய போகிறார். இந்த அமைப்பு அபரிமிதமான சுப பலன்களை வழங்க உள்ள நல்ல நேரமாகும். தொழில், உத்தியோகத்தில் லாபம் சதம் அடிக்கும். புதிய தொழில் ஒப்பந்தம் தேடி வரும். தொழில் கூட்டாளிகளிடம் நிலவிய கருத்து வேற்றுமை மறைந்து ஒற்றுமை ஏற்படும். கைக்கு எட்டி வாய்க்கு எட்டாத நிலை மாறும். தடைபட்ட வாடகை வருமானம் வசூல் ஆகும். விவசாயி களுக்கும் எதிர்பாராத லாபம் உண்டு. வீடு,மனை வாங்க முன்பணம் கொடுப்பீர்கள். வாழ்க்கை துணைக்கு விரும்பிய உத்தியோக மாற்றம் தேடி வரும். திருமணப் பேச்சு வார்த்தை மன நிறைவு தரும்.இந்த வாரம் தீபாவளி போனஸ் கிடைக்கும்.உடல்நிலை சீராகும்.8.10.2025 அன்று காலை 1.28 முதல் 10.10.2025 அன்று காலை 1.23 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நிதானமற்ற அவரச முடிவுகளைத் தவிர்ப்பது அவசியம்.தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பதாலும் கேட்பதாலும் பொருளாதார மேன்மை உண்டாகும்.

    துலாம்

    அனைத்து விதமான தேவைகளும் நிறைவேறிடும் இன்பமான வாரம். ராசி அதிபதி சுக்கிரன் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ளார். ராசிக்கு பத்தாம் இடத்தில் குரு பகவான் உச்சம் பெற போகிறார். இது துலாம் ராசியி னருக்கு சகல ஐஸ்வர்யங்கள் சவுபாக்கியங்களையும் பெற்றுத் தரும் அமைப்பாகும். துலாம் ராசியினருக்கு தீபாவளி விற்பனை நல்ல லாபம் பெற்று தரும்.தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் உயர்வாக இருக்கும். போட்டி, பொறாமைகள் அகலும். நண்பருக்காக பொறுப்பேற்று வாங்கிக் கொடுத்த ஜாமீன் தொகை வந்து சேரும். விவாகரத்து வழக்கு தீர்ப்பு தள்ளிப்போகும். 4ம் அதிபதி சனி வக்ரமாக இருப்பதால் சொத்தில் ஏதேனும் வில்லங்கம் இருக்கிறதா என்பதை சரிபார்த்து விட்டு புதிய சொத்து வாங்க முன்பணம் கொடுக்கவும். உடல்நிலையில் பாதிப்புகள் குறையும். 10.10.2025 அன்று 1.23 காலை சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் அலைச்சல் மிகுந்த பயணங்களை தவிர்க்கவும். தினமும் கனகதாரா ஸ்தோத்திரம் கேட்பதால் அனைத்து விதமான தேவைகளும் நிறைவேறும்.

    விருச்சிகம்

    உழைப்பும் முயற்சியும் பலன் தரும் சாதகமான வாரம். 2, 5-ம் அதிபதி குரு அதிசாரமாக கடக ராசிக்கு சென்று உச்சம் பெறுகிறார்.வேலை இல்லாதவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.தொழில், உத்தியோக முன்னேற்றம் என அனைத்து விதமான நன்மைகளும் நடைபெறும். நம்பிக்கை யான தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். சிலர் மன நிம்மதிக்காக வெளியூர், வெளிநாடு சென்று வரலாம். மாணவர்கள் உயர் கல்விக்காக வெளிநாடு செல்லலாம். நோய் பாதிப்புகள் அகலும். எதிரிகள் தொல்லை குறையும்.விருச்சிக ராசி வயோதிகர்களுக்கு பேரன், பேத்தி. யோகம் கிடைக்கும்.சகோதர சகோதரிகளின் ஆதரவு நிம்மதி தரும். குரு பாதக ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் பெரிய பாதகங்கள் ஏற்படாது என்பதை உறுதியாக கூறலாம். எனினும் புதிய முயற்சிகளில் கவனம் தேவை. பூர்வீகச் சொத்துக்கள் பணமாக மாறலாம்.பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்கவலை அகலும். பெண்கள் தங்க நகைகளை அத்தியா வசியமாக இருந்தால் மட்டும் புதுப்பிக்கவும். தினமும் லட்சுமி நரசிம்மர் வழிபாடு செய்வதன் மூலம் ஏற்றமான பலன்களை அடைய முடியும்.

    தனுசு

    புதிய முதலீடுகள் தவிர்க்க வேண்டிய காலம். ராசி அதிபதி குரு பகவான் அதிசாரமாக அஷ்டம ஸ்தானத்திற்கு சென்று உச்சம் பெறப்போகிறார். கடன், வம்பு, வழக்கு,நோய் தாக்கம், உத்தியோ கத்தில் இடையூறு, போட்டித் தேர்வுகள் போன்றவற்றில் ஏமாற்றங்கள் உருவாகலாம். விரயத்தை தவிர்க்க முடியாத நிலை நீடிக்கும்.வீடு கட்டப் போட்ட பட்ஜெட் திட்டமிடுதலை விட எகிறும். சிலருக்கு காது வலி, ஞாபக மறதி போன்ற அசவுகரியங்கள் தலை தூக்கும். சிலர் முக்தியை போதிக்கும் ஆன்மீக இயக்கம், சங்கங்களில் சேர்ந்து பயனடைவார்கள். 2ம் அதிபதி சனி வக்ரமாக இருப்பதால் சாத்தியமற்ற விசயத்திற்கு யாருக்கும் வாக்கு கொடுத்து வம்பில் மாட்டக் கூடாது. பேச்சை மூலதனமாகக் கொண்டு தொழில் செய்பவர்கள் நிதானமாக சிந்தித்து பேச வேண்டும். பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் நல்ல பொருள் வரவை பெற்றுத்தரும். தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது வெளிநாடு பயணம் செய்ய நேரும். வாரிசுகளின் திருமண முயற்சி வெற்றியாகும். செயற்கை கருத்தரிப் பிற்கான முயற்சியை சிறிது காலம் ஒத்தி வைக்க வும். தினமும் மாலையில் ஸ்ரீ சரபேஸ்வரரை வழிபட இன்னல்கள் விலகும்.

    மகரம்

    சிறிய முயற்சியில் பெரிய வெற்றி கிடைக்கும் வாரம். ராசிக்கு செவ்வாயின் நான்காம் பார்வை உள்ளது. குரு பகவான் அதிசாரமாக கடக ராசியில் சென்று உச்சமடைய போகிறார்.செவ்வாய் சாதகமான இடத்தில் சஞ்சரிப்பதால் பங்கு தாரருடன் இணைந்து தொழிலுக்கு சொந்தமான இடம் வாங்க ஏற்ற நேரம். புதிய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். பரம்பரை சொந்தத் தொழிலில் நீங்கள் பங்குதாராக இணையலாம். நீண்ட நாட்களாக விற்க முடியாத சொத்துக்கள் விற்கும்.அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் வரும். தீபாவளிக்கு தேவையான உடைகளை வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பொன் பொருள் சேரும்.சிலருக்கு தந்தையின் அரசு வேலை கிடைக்கும். பெண்கள் மாமனார், மாமியாரை அனுசரித்துச் செல்ல வேண்டும். திருமணம் நிச்சயமானவர்கள் போனில் தேவையற்ற விசயங்களை தவிர்க்கவும். வரவிற்கும் செலவிற்கும் சரியாக இருக்கும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு மதிப்பு, மரியாதை உயரும். தினமும் காலபைரவரை வழிபடுவதால் காலத்தால் ஏற்படக்கூடிய துன்பங்கள் விலகும்.

    கும்பம்

    விழிப்புடன் செயல்பட வேண்டிய காலம்.அடுத்து வரும் 48 நாட்களுக்கு ராசியில் பதிந்த குருவின் பார்வை விலகப் போகிறது.ராசியில் தனித்த ராகு நிற்பதால் சம்பந்தம் இல்லாத அறிமுகம் இல்லாத நபர்களால் ஏமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணப் பரிவர்த்தனையில் கவனம் தேவை.வரவிற்கு மீறிய செலவு இருக்கும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க உழைக்கவேண்டி வரும். கடன், எதிரி தொல்லை அதிகமாகும் என்பதால் புதிய முயற்சிகள் அதிக முதலீடு ஆகியவற்றில் திட்டமிட்டு செயல்பட வேண்டும். முக்கிய பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்க கூடாது. மூத்த சகோதரம், சித்தப்பாவால் வம்பு, வழக்கு, கடன் உண்டு. சகோதர சகோதரிகள் முன்னுக்கு பின் முரணாக பேசி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தலாம். உறவுகளிடம் வீண் விவாதங்களைத் தவிர்த்தல் நலம். வழக்கு விசாரணை தள்ளிப்போகும். சிலர் தொழில், வேலைக்காக பூர்வீகத்தை விட்டு வெளியூர், வெளிநாட்டிற்கு இடம் பெயரலாம்.சிறு உடல் உபாதைகள் அவ்வப்போது தோன்றும். ஸ்ரீ ராமரை பட்டாபிஷேக கோலத்தில் வழிபட எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

    மீனம்

    வெற்றி மேல் வெற்றி தேடிவரும் அற்புதமான வாரம். அடுத்த 48 நாட்களுக்கு ராசி அதிபதி குரு உச்சம் பெற்று ராசியில் உள்ள சனிபகவானை பார்க்க போகிறார். இது தர்மகர்மாதிபதி யோகம் ஆகும். இதனால் இழுபறியாக இருந்த காரியங்கள் கூட துரித வேகத்தில் நடந்து முடியும். கடன் தொல்லை கட்டுக்குள் இருக்கும். திட்டங்கள், எண்ணங்கள் செயலாக்கம் பெறும். எதற்கும் முடிவு காண முடியாமல் தவித்த நிலை மறையும். தடை தாமதங்கள் அகலும்.கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றமான பலன் உண்டு. வெளிநாட்டு தொடர்பு அல்லது வேற்று மதத்தினர் ஆதரவால் நல்ல வாய்ப்புகள் கிட்டும். திருமணம் பற்றிய நல்ல முடிவுகள் உங்கள் எண்ணம் போல் நிறைவேறும். குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். முன்னோர்களின் நல்லாசியும், குல தெய்வ அருளும் கிடைக்கும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு மதிப்பு, மரியாதை உயரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் சீராகும்.ஸ்ரீ வல்லப கணபதியை வழிபட வளமான வாழ்க்கை உண்டாகும்.

    Next Story
    ×