என் மலர்
ஆன்மிகம்
- கோதானத்தை தத்தம் வாழ்நாளில் தத்தம் கைப்படவே செய்தல் வேண்டும்.
- நம்மால் பராமரிக்க இயலவில்லை என்று அடுத்தவருக்குக் கொடுப்பது தானமாகாது.
*கோதானத்தை தத்தம் வாழ்நாளில் தத்தம் கைப்படவே செய்தல் வேண்டும்.
*நம்மால் பராமரிக்க இயலவில்லை என்று அடுத்தவருக்குக் கொடுப்பது தானமாகாது.
*தலை ஈற்றுப் பசுவை தானம் செய்வது மிகவும் சிறந்தது.
*கறவையுள்ள பசுவைத் தானம் கொடுப்பதே முறை.
*தாயையும்,பால் அருந்தும் கன்றையும் பிரித்து தானம் அளிக்க கூடாது.
*பசுவோடு காளையையும் சேர்த்து தானம் செய்வது மேன்மையாகும்.
*பால் கறப்பதற்கான பாத்திரமும் சேர்த்து கொடுத்தல் வேண்டும்.
*பசுவைத் தானம் செய்யும் போது, குறைந்தது ஒரு வருட உண விற்கும் பராமரிப்புக்கும் பொருளாகவோ, பணமாகவோ வகை செய்வது இன்னும் மேன்மை தரும்.
- நவக்கிரக பீடை, நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் கோபூஜையைச் செய்வது சிறந்த பலனைத்தரும்.
- பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும், கணவன்& மனைவிக்குள் ஒற்றுமை ஓங்கவும் இந்தக் கோபூஜை செய்வது அவசியம்.
குழந்தை பாக்கியம் பெற
கோமாதா பூஜையினால் தரித்திரம், துக்கம் விலகுகின்றன.
கோபூஜை செய்து வந்தால் வியாபாரம் விருத்தியடையும். நிலையான லாபம் கிட்டும்.
குழந்தை பாக்கியம் பெற விரும்புபவர்கள் கோபூஜை, கோதானம் செய்தால் சிறந்த அறிவுள்ள நல்ல குழந்தைகள் பிறப்பர் என்பதற்கு நமது புராணங்களும் வரலாறுகளும் எடுத்துக் காட்டாகும்.
திருமணம் நடைபெற
நவக்கிரக பீடை, நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் கோபூஜையைச் செய்வது சிறந்த பலனைத்தரும்.
விவாகம் நடை பெறாதிருந்தாலும், காலதாமதமாகிக் கொண்டே சென்றாலும், நல்ல வரன் அமையவில்லை என்றாலும் இந்தக் கோமாதா பூஜை அவற்றிற்கு ஒரு நல்ல தீர்வினைத் தரும்.
ஆணுக்கு நல்ல பெண் மனைவியாகவும், பெண்ணுக்குச் சிறந்த நற்குணமுள்ள ஆண் கணவனாகவும் கிடைக்கச் செய்யும் பூஜை இந்தக் கோமாதா பூஜை.
பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும், கணவன்& மனைவிக்குள் ஒற்றுமை ஓங்கவும் இந்தக் கோபூஜை செய்வது அவசியம்.
வியாதி நீங்க:
ரோகம்,வியாதி ஆகியவை கோமாதா பூஜையினால் நீங்கி ஆரோக்கிய வாழ்க்கை உருவாகிறது.
செல்வச் செழிப்பு எற்படுகிறது. தரித்திரம் நீங்குகிறது.
சிறந்த பசுவை, உயர்ந்த பசுவை ஸ்ரீசுக்தம் சொல்லி பூஜை செய்து, தானம் செய்ய வேண்டும்.
இந்தக் கோபூஜையினால்,கோதானத்தினால் கோர்ட் விவகாரங்கள், வழக்குகளில் வெற்றி ஏற்படும்.விரோதம் நீங்கும்.
பிதுர் சாபம் தீர:
பிதுர் சாபம், ரிஷிகள் சாபம், மூதாதையர் சாபம் ஆகியவை நீங்குகிறது. பித்து, பைத்தியம் போன்றவை கோதானத்தினால் குணமாகி நல்ல கதி கிடைக்கிறது.
சனிபகவான் தோஷம் விலக
சனிக்கிரக பீடை, அஷ்டமச்சனி, கண்டச்சனி, ஏழரைச்சனி போன்ற சனிக்கிரகத் தொல்லைகளிலிருந்து விடுபட, கோபூஜையும், கோதானமும் செய்ய வேண்டும்.
இத்தகு அதி விசேஷமான,மகத்துவம் நிறைந்த பூஜை கோபூஜையே ஆகும்.
- ஐஸ்வர்ய லட்சுமியை வணங்கினால் செல்வம் மட்டுமல்ல.. ஆரோக்யம், வெற்றி என 16 வளங்களும் கிடைக்கும்.
- இவளை கன்யாலட்சுமி என்று அழைப்பதும் உண்டு.
வாழ்வில் மகிழ்ச்சி, மன நிம்மதியை தரக் கூடிய மகாலட்சுமியை நம்முடைய வீட்டிற்கு வர வைப்பதற்கும், நம்முடைய வீட்டில் மகாலட்சுமி எப்போதும் வசிப்பதற்கும், அவளின் அருட் பார்வை நம்மீது பட்டுக் கொண்டே இருப்பதற்கு வீட்டில் சில எளிய வழிபாடுகளை தொடர்ந்து செய்து வந்தாலே போதும். என்ன செய்தால் மகாலட்சுமியை நம்முடைய வீட்டிற்கு வர வைக்கலாம் என்பதை பார்ப்போம்
ஒரு சமயம் சுரர் – அசுரர்கள் சேர்ந்து,பாற்கடலை கடைந்தனர். அப்போது, அதிலிருந்து மகாலட்சுமி தோன்றினாள். அவளோடு செழிப்பினை நல்கும் செல்வங்கள் அனைத்தும் தோன்றின.
அந்தச் செல்வங்களோடு உடனாக வந்து லட்சுமிதேவியே, ஐஸ்வர்ய மகாலட்சுமி எனப் போற்றப்பட்டாள். இவளை கன்யாலட்சுமி என்று அழைப்பதும் உண்டு.

பாற்கடலின் மேற்பகுதியில் ஐராவதம் படுத்த நிலையில், அதன் மீது உலகத்தாயான இவள் தோன்றினார். தன் பின் இரு கரங்களில் தாமரைகளைக் கொண்டும், முன் வலக்கரம் அபயம் காட்டியும், முன் இடக்கரம் அமுத கலசத்தினை தாங்கியும் காட்சியளிக்கிறாள்.
பாதங்களில் தேவர்கள் அர்ச்சித்த பொற்காசுகளும் நறுமலர்களும் குவிந்துள்ளன. ஐஸ்வர்ய லட்சுமியின் பின்புறம் கற்பக விருட்சம், விந்திய வாசினி எனும் துர்கை, சந்திரன், அப்சரஸ் ஆகியோர் நிற்கின்றனர்.
இவளின் இடப்பக்கத்தில் நோய்களைப் போக்குத் தன்வந்தரிரி, தெய்விகப் பசுவான காமதேனு, உச்சைச்வரஸ் எனும் தெய்விக குதிரை ஆகியவை இருக்கின்றன.

இந்த ஐஸ்வர்ய லட்சுமியை வணங்கினால் செல்வம் மட்டுமல்ல.. ஆரோக்யம், வெற்றி என 16 வளங்களும் கிடைக்கும்.
செல்வ வளம், சொத்துக்கள், அதிகாரம், அழகு, குழந்தைப்பேறு ஆகியவற்றிற்கு காரணமான தெய்வமாக மகாலட்சுமி கருதப்படுகிறாள். இந்துக்களின் வழிபாட்டு முறையில் விநாயகருக்கு அடுத்தபடியாக மகாலட்சுமி வழிபாட்டிற்கு முக்கிய இடம் அளிக்கப்படுகிறது. ஒரு வீட்டில் அனைத்து விதமான செல்வங்களும் நிறைந்திருக்க அஷ்டலட்சுமிகளின் அருளும் கிடைக்க வேண்டும். எங்கெல்லாம் லட்சுமி தேவி இருக்கிறாளோ அந்த இடங்களில் துன்பம், வறுமை என்பது இருக்கவே இருக்காது. அதனால் அனைத்து வீடுகளிலும் லட்சுமி தேவியின் வழிபாட்டை அவசியம் செய்வதுண்டு.

மகாலட்சுமியின் வழிபாட்டிற்கு ஏற்ற நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. மகாவிஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமி, நவராத்திரியின் நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் நாளுக்குரிய தெய்வமாக கருதி வணங்கப்படுகிறாள். இந்த நாளில் அலை மகளான லட்சுமி தேவியை வழிபட்டால் ஆண்டுதோறும் வீட்டில் செல்வ வளம் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம். மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கு அவரின் படம் அல்லது சிலையை வீட்டில் வைத்து தொடர்ந்து உண்மையான பக்தியுடன் வழிபட்டு வர வேண்டும். இது தவிர எட்டு விதமான விஷயங்களை வீட்டில் செய்து வந்தால் மகாலட்சுமி நம்முடைய வீடு தேடி வருவாள்.
பூஜை அறையில் மகாலட்சுமியின் பாதங்கள் வரைதல், காயத்ரி மந்திர பாராயணம் செய்தல், நெய் விளக்கு ஏற்றுதல், தாமரை தண்டு திரி இட்டு விளக்கு ஏற்றுதல், வலம்புரி சங்கு வைத்து வழிபடுதல், துளசி செடியின் முன்பு விளக்கேற்றி வைத்து வழிபடுதல், புல்லாங்குழலை வீட்டில் வைத்திருத்தல், பசுக்களுக்கு உணவளித்தல் இது போன்ற வழிபாடுகளால் வீட்டின் செல்வ வளம் பெருக வைக்கும். வாழ்க்கையிலும் குடும்பத்திலும் உள்ள அனைத்து விதமான தடைகளும் நீங்கும். பாவங்கள் அனைத்தும் நொறுங்கி சகல ஐஸ்வர்யங்களும் நமக்கு கிடைக்க பெறும்.
- சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சனம்.
- பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆனி-9 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: பிரதமை காலை 6.19 மணி வரை பிறகு துவிதியை மறுநாள்
விடியற்காலை 4.46 மணி வரை
நட்சத்திரம்: பூராடம் இரவு 6.42 மணி வரை பிறகு உத்திராடம்
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சனம். சோழவந்தான் ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் முத்துப் பல்லக்கில் பவனி. திருத்தங்கல் ஸ்ரீ சுவாமி, ஸ்ரீ அம்பாள் கண்ணாடிச் சப்பரத்தில் சூர்ணாபிஷேகம், மஞ்சள் நீராட்டு விழா. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-இன்பம்
ரிஷபம்-ஜெயம்
மிதுனம்-வரவு
கடகம்-பாராட்டு
சிம்மம்-பண்பு
கன்னி-பணிவு
துலாம்- ஆதாயம்
விருச்சிகம்-ஆதரவு
தனுசு- முயற்சி
மகரம்-சுகம்
கும்பம்-சுபம்
மீனம்-உண்மை
- சப்த கன்னிமார்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவில் காசி மற்றும் தஞ்சாவூர் பெரிய கோவிலில் மட்டுமே வாராஹிக்கு தனி சன்னதி உள்ளது.
சைவம், பிராமணியம், வைணவம், சக்தி வழிபாடு ஆகிய நான்கு வழிபாட்டு முறைகளை பின்பற்றுபவர்களும் வழிபடும் தெய்வமாக விளங்கக் கூடியவள் வாராஹி. வாழ்க்கையில் அனைத்தும் முடிந்து விட்டது, கடனாக கொடுத்த பணம் இனி திரும்ப வரவே வராது என்ற நிலையில் இருந்தால் கூட வாராஹியை வழிபட்டால் அந்த நிலைமை மாறும் என்பது பலரும் சொல்லும் அனுபவ உண்மை.
மகா வாராஹி அம்மனுக்கு பலவிதமான ரூபங்கள் உள்ளன. மேலும், சப்த கன்னிமார்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுவாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தான் பெரும்பாலானவர்கள் அம்மன் வழிபாடு செய்வார்கள். ஆனால், ஸ்ரீ வாராஹி அம்மன் வழிபாடு என்று வரும்போது, அமாவாசை, பஞ்சமி ஆகிய திதிகள் விசேஷம். எதிரிகள், செய்வினை, கண் திருஷ்டி, முடக்கம் ஆகியவற்றை நீக்கும், காக்கும் அம்மனாக வாராஹி அம்மன் வழிபாடு செய்யப்படுகிறது. மகா விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் ஸ்ரீ வாராஹி அம்மனை புதன் கிழமைகளில் வழிபாட்டு விளக்கேற்றி வந்தால் கடன் தொல்லை நீங்கும்.
சப்த கன்னியர்களில் ஒருவராக போற்றப்படும் வாராஹி அம்மன், தெய்வீக குணமும், விலங்கின் ஆற்றலும் கொண்டவளாக விளங்குகிறாள். தாயை போன்ற இரக்கமும், தயாள குணம் உடையவளாக இருக்கும் வாராஹி, மூர்க்க குணம் உடையவளாக உள்ளதால் இவளை உக்ர தெய்வமாக வழிபடுகிறார்கள். இவளை வராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவின் பெண் வடிவம் என்றும் சிலர் சொல்வதுண்டு.

சப்த கன்னியர்களான பிரம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கெளமாரி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரில் பன்றியின் முகமும், பெண்ணின் உடலும் கொண்டவள் வாராஹி. எதிரிகள், தீயசக்திகள், கடன்கள் போன்ற துயரங்கள் ஆகியவற்றை அடித்து விரட்டக் கூடிய தெய்வமாக வாராஹி விளங்குகிறாள். வாராஹி வழிபாட்டினை பலரும் மேற்கொண்டாலும் இந்தியாவில் காசி மற்றும் தஞ்சாவூர் பெரிய கோவிலில் மட்டுமே வாராஹிக்கு தனி சன்னதி உள்ளது.
புதன் கிழமை அன்று வாராஹி அம்மனை தொடர்ந்து வழிபாட்டு வருபவர்களுக்கு கடன் தொல்லை தீரும். எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் செலவாகிக் கொண்டே இருக்கிறது, வரவுக்கு மீறி செலவு, கடனை முழுமையாக தீர்க்க முடியாத சூழல், கடனால் ஏற்பட்ட நெருக்கடிகள், தீராத கடன் சுமை போன்ற எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வாக புதன் கிழமை அன்று வாராஹி அம்மனை தரிசித்து வரலாம்.
- மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 14 கோபுரங்கள் உள்ளன.
- வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோவிலில் நடைபெறுவது சிதம்பரத்தில் தான்
திருவண்ணாமலை கோவில்: திருவண்ணாமலை சுவாமி எப்போதும் ராஜகோபுரம் வழியாக வராமல் பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருவார்.

மதுரை மீனாட்சியம்மன் கோவில்: வேறு எந்த கோவிலிலும் இல்லாத அளவுக்கு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 14 கோபுரங்கள் உள்ளன.
திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில்: இந்த கோவில் கும்பகோணம் அருகே உள்ளது. இந்த கோவிலில் தயாரிக்கும் எந்த நைவேத்தியப் பண்டங்களிலும் உப்பு சேர்ப்பதில்லை.

ராமநாத சுவாமி கோவில்: இராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாத சுவாமி கோவில் ஒரு சிவன் கோவில் ஆகும். இங்கு பெருமாள் கோவில்களில் கொடுப்பதுபோல் தீர்த்தம் கொடுக்கப்படுகிறது. மேலும் வேறு எந்த சிவன் கோவிலிலும் இது போன்று தீர்த்தம் கொடுப்பது இல்லை.
சிதம்பரம் நடராஜர் கோவில்: சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் மூலவரே வீதிவலம் வருவம். மேலும் இந்த கோவிலின் அதிசயம் என்னவென்றால் ஒரே இடத்தில் நின்றபடி, ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளையும், ஸ்ரீ நடராஜரையும் தரிசிக்கலாம். அதுபோல் சைவர்களுக்குரிய திருவாதிரையும், வைணவர்களுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோவிலில் நடைபெறுவது சிதம்பரத்தில் தான்.

தக்கலை சிவன் கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கேரளபுரத்தில் சிவபெருமான் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலின் அரச மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் ஒன்று இருக்கிறது. ஆவணி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் வெள்ளை நிறமாகவும், மாசி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் கறுப்பாகவும் மாறி சக்தி அதற்கு உண்டு. இந்த சிலை சந்திர காந்தக் கல்லால் உருவாக்கப்பட்டது.
திருக்கோவிலூர் கோவில்: விழுப்புரத்தில் அமைந்துள்ள இந்த கோவிலில் தான் எல்லாத் திருத்தலங்களிலும் பெருமாளின் இடது கையில் தான் சங்கு காணப்படும். ஆனால் இங்கு மட்டும் தான் வலது கையில் சங்கு இருக்கும்.

பத்ரிநாத்: இமயமலைச் சாரலில் இருக்கும் திருத்தலங்களில் ஒன்று பத்ரிநாத். இங்கு மே மாதம் முதல் வாரம் நடை திறந்து நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மூடுவார்கள். கோவிலை மூடும் போது ஒரு தீபம் ஏற்றுவர். அந்த தீபம் மீண்டும் கோவில் மீண்டும் திறக்கப்படும் வரை அதாவது, ஆறுமாதம் வரை எரிந்துகொண்டே இருக்கும்.
சமயபுரம்: சமயபுரத்திலுள்ள ஸ்ரீமாரியம்மன் உட்கார்ந்த கோலத்தில் இருக்கும். அதுவும் மிகப் பெரிய அளவில் இருக்கும். இவ்வளவு பெரிய ரூபமுள்ள அம்பிகை வேறு எந்த கர்பகிரகத்திலும் இல்லை. இது சில மூலிகைகளால் ஆக்கப்பட்டது.

திருநீர்குகை: இந்த குகை தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிமலையில் உள்ளது. இந்த குகையில் விபூதி அள்ள அள்ள வந்து கொண்டே இருக்கும். இதனால் தான் இந்த குகைக்கு திருநீர்குகை என்று பெயர் வந்தது. மேலும் கதிர்காமம், மருதமலை, திருநீற்று மலை, கங்கை கரையில் உள்ள திருவருணை ஆகிய திருத்தலங்களிலும் திருநீறு தானாகவே விளையும்.
ரத்னகிரி மலை: இந்த மலையில் உள்ள முருகனுக்கு பால் கொண்டு அபிஷேகம் செய்த சிறிது நேரத்திலேயே அது தயிராக மாறிவிடும்.
சென்னிமலை முருகன்: இம்மலையில் உள்ள முருகனுக்கு தயிர் கொண்டு அபிஷேகம் செய்யும் போது அது புளிப்பதில்லை.

வேலப்பர் கோவில்: தேனி மாவட்டம் தெப்பம்பட்டியில் உள்ள இந்த கோவிலில் உள்ள மூலவர் சுயம்பு மூர்த்தி. இந்தக் கோவிலின் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பொங்கி வந்து கொண்டேயிருக்கும்.
ஏகாம்பரநாதர் கோவில்: காஞ்சி அமைந்துள்ள இந்த கோவிலில் அம்மன் சந்நிதி இல்லை.
காசியில் பல்லிகள் இருந்தாலும் அவைகள் ஒலிக்காது. மேலும் இந்நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரை கருடன் பறக்காது.
குளித்தலை, மணப்பாறை வழியில் ஐவர் மலை என்ற ரத்தினகிரி மலை உள்ளது. இம்மலையின் மேல் காகங்கள் பறக்கவே பறக்காது.
நவக்கிரகப் பிரதிஷ்டை கோவில் வடகிழக்குப் பகுதியில்தான் அமைய வேண்டும் என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது.
ஆழ்வார்குறிச்சியில் உள்ள நடராஜர் சிலை ஒரே கல்லினால் கட்டப்பட்டது. அதை தட்டினால் வெண்கல ஓசை அதிலிருந்து வரும்.
- அழகான முன் மண்டபத்தைக் கடந்து இடதுபுறம் திரும்பியதும் அன்னையின் கருவறையைக் காணலாம்.
- அன்னையின் தலையில் அழகிய கிரீடம்.
திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு தெற்குப் பகுதியில் சிறுவாச்சூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது மதுர காளி அம்மன் ஆலயம். சென்னையில் இருந்து சுமார் 280 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த கிராமம்.
அங்கு, இயற்கை எழில் கொஞ்சி விளையாடும் சூழலில் அன்னை மதுர காளியம்மன் அமர்ந்து அருளாட்சி புரிகிறாள்.
அன்னைக்கு நான்கு கரங்கள். இடது காலை மடித்து வலது காலைத் தொங்கவிட்டுக் கொண்டு அமர்ந்திருக்கிறாள். அன்னையின் காலடியில் ஒரு சிம்மம் வாலை உயர்த்திக்கொண்டு பற்கள் எல்லாம் தெரிய கர்ஜித்த நிலையில் ஒரு காலைத் தூக்கி அறையக் காத்திருக்கிறது.
அன்னையின் தலையில் அழகிய கிரீடம். அன்னையின் முகத்தில் புன்னகை இல்லை. கண்களிலும் புன்னகையின் பிரதிபலிப்பைக் காண முடியவில்லை.
தல புராணம் :
ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தின் நாயகி கண்ணகி.தன் கணவனுக்கு அநியாயமாக இழைக்கப்பட்ட கொடுமையை எண்ணி வெகுண்டு புயலாக மாறினாள். மன்னனிடம் தன் கணவன் கோவலன் குற்றமற்றவன் என நிரூபித்தாள். தவறு செய்த மன்னன் இறந்தான். அவள் கோபம் குறையவில்லை. மதுரையை தன் கற்பின் வலிமையால் எரித்தாள். அப்போதும் அவள் சினம் தீரவில்லை. இந்த கண்ணகியே சிறுவாச்சூர் மதுர காளியம்மன் என கோவில் புராணம் கூறுகிறது.
மன அமைதியை இழந்த கண்ணகி வடக்கு நோக்கி இரவு பகலாக நடக்கத் தொடங்கினாள். ஒருநாள் இரவு சிறுவாச்சூர் வந்தடைந்தாள். சிறுவாச்சூரின் வழிபாட்டு தெய்வம் செல்லியம்மன். அந்த ஊரில் இருந்த செல்லியம்மன் ஆலயத்தில் அன்றைய இரவை கழிக்க எண்ணிய கண்ணகி அந்த ஆலயத்தில் தங்கினாள். அவள் அங்கு தங்க வேண்டாம் என செல்லியம்மன் கூற, காரணம் கேட்டாள் கண்ணகி.
தன்னை ஒரு மந்திரவாதி ஆட்டிப்படைப்பதாகவும் அவன் வரும் நேரத்தில் கண்ணகி அங்கிருந்தால் அவளுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் எனக் கூறினாள்.அந்த மந்திரவாதியை தான் கவனித்துக் கொள்வதாக உறுதியளித்த கண்ணகி, அன்று இரவு அங்கு தங்கினாள்.
செல்லியம்மன் சொன்னபடியே இரவு பெருத்த ஆரவாரத்துடன் கோவிலின் உள்ளே நுழைந்தான் மந்திரவாதி. அவனை வதம் செய்து, செல்லியம்மனைக் காப்பாற்றினாள் கண்ணகி.
தன்னை பெரும் துன்பத்திலிருந்து காப்பாற்றிய கண்ணகியை அதே கோவிலில் நிரந்தரமாகத் தங்கும்படி கேட்டுக் கொண்ட செல்லியம்மன் தான் அருகில் உள்ள மலையில் வசிக்கும் தன் அண்ணனான பெரியசாமி கோவிலில் போய்த் தங்கிக் கொள்வதாகக் கூறினாள்.
சொன்னபடியே தனது கோவிலை கண்ணகியிடம் விட்டுவிட்டு மலைக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டாள் செல்லியம்மன்.
மதுரையிலிருந்து வந்த கண்ணகியிடம் கோவிலை விட்டுச் சென்றதால் அது முதல் அந்தக் கோவில் மதுரை காளியம்மன் கோவில் என அழைக்கப்பட்டு வந்தது. பின்னர், அப்பெயர் மருவி 'மதுர காளியம்மன்' கோவில் ஆனது.
தன்னை வேண்டுபவர்களுக்கு மதுரமான (இனிமையான) பலன்களைத் தருவதால் இந்த அம்மனுக்கு மதுர காளியம்மன் என்ற பெயர் வெகு பொருத்தமே என பக்தர்கள் கூறுகின்றனர்.
சிறுவாச்சூருக்கு வெள்ளிக்கிழமை வந்த மதுர காளியம்மன் பக்தர்களுக்கு திங்கட்கிழமை தான் காட்சி தருகிறாள். எனவே, இந்த ஆலயம் வாரத்தில் திங்கள், வெள்ளி என இரண்டு நாட்கள் மட்டுமே திறந்திருக்கும். மற்ற நாட்களில் மதுர காளியம்மன் செல்லியம்மனுடன் தங்குவதற்காக மலைக்கு சென்றுவிடுவதாக ஐதீகம். இந்த இரு நாட்கள் தவிர ஆலய சிறப்பு திருநாட்கள், திருவிழாக் காலங்களில் ஆலயம் திறந்திருக்கும்.
- இப்படியே 7 நாட்களுக்கு ஒருமுறை இலையை எரித்துவிட வேண்டும்.
- நேர்மறையான சிந்தனைகளை ஏற்படுத்தக்கூடியது.
அதிர்ஷ்டம் அபாரமாக கிடைக்க வேண்டுமானால் அதற்கு பிரியாணி இலை பரிகாரம் மிகவும் கை கொடுப்பதாக நம்பப்படுகிறது.
குடும்பத்தில் சிக்கல்கள் நீங்கவும், பணக்கஷ்டம் நீங்கவும், வேண்டுமானால் சில பரிகாரங்கள் அவசியமாகிறது.. ஆனால் நிறைய பணம் செலவு செய்து, பரிகாரங்களை செய்யும் அளவுக்கு பலருக்கும் முடியாது.
ஆனால், எளிமையான முறையில் செய்யக்கூடிய பரிகாரங்கள் குறித்தும் முன்னோர்கள் எழுதிவைத்துள்ளனர்.. இந்த பரிகாரங்கள் பெருத்த பலனை தருவதாகவும் நம்பப்படுகிறது. அதில் ஒன்றுதான் பிரியாணி இலை பரிகாரம். சமையலுக்கு பயன்படுத்தப்படும் பிரியாணி இலைகள் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தவை.. சிறுநீரக கற்களை போக்குவது முதல் உடல் எடை குறைப்பது வரை பிரியாணி இலைகள் உதவியாக உள்ளன.. இந்த இலையின் நறுமணமானது, டென்ஷன், பதற்றத்தை போக்கி மனதுக்கு அமைதி தரக்கூடியது.. நேர்மறையான சிந்தனைகளை ஏற்படுத்தக்கூடியது.

இந்த பிரியாணி இலைகள் பரிகாரத்துக்கும் உதவி செய்கின்றன. அதாவது, இரவில் தூங்குவதற்கு முன்பு, ஒரேயொரு பிரியாணி இலையை தலைகாணிக்கு அடியில் வைத்துவிட்டு படுத்தால், உங்களை துர்சக்திகள் நெருங்காது, கெட்ட கனவுகளும் வராது
கடன் தொகை அதிகமாக இருந்தால், பிரியாணி இலையில், கடன் தொகை எவ்வளவு என்பதை எழுதி, உங்களுடைய பீரோவில் வைத்துவிட வேண்டும். ஆனால், பீரோவில் வைத்து அந்த இலையை 7 நாட்கள் கழித்து எடுத்து நெருப்பில் பொசுக்கி, அந்த சாம்பலை நீரிலோ அல்லது காற்றிலோ கரைத்துவிட வேண்டும். மறுபடியும் புதியதாக ஒரு இலையை எடுத்து கடன்தொகை அடைய வேண்டும் என்று எழுதி பீரோவுக்குள் வைக்க வேண்டும். இப்படியே 7 நாட்களுக்கு ஒருமுறை இலையை எரித்துவிட வேண்டும்.
- பூங்காவனமாக இருந்ததால், இந்த அம்மனை பூங்காவனத்தம்மன் என்றும் பெயர் உண்டு.
- கர்ப்பிணி போல் அருள்பாலிக்கும் பூங்காவனத்தம்மனை தரிசித்தாலே குழந்தை பாக்கியம் உண்டாகும் என நம்பிக்கை இருக்கிறது.
குழந்தை பாக்கியம் வரம் வேண்டுபவர்கள் செல்ல வேண்டுபவர்கள் வணங்க வேண்டிய புட்லூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோயில். இந்த ஆலயத்தில் அம்மன் கர்ப்பிணிகள் பிரசவ காலத்தைப் போல கால் நீட்டி மல்லாந்து படுத்து துடிப்பது போல காட்சியளிக்கிறார். கோயிலில் நுழைந்தாலே ஒரு வித சிலிர்ப்பு ஏற்படுகிறது. அதோடு கோயில் முழுவதும் மஞ்சள் மற்றும் குங்குமத்தின் வாசம் இருக்கிறது.
குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கும், சுபப் பிரசவம் வரம் வேண்டி கர்ப்பிணிகள், குடும்ப பிரச்னைகள் தீர வேண்டும் என பெண்கள் பலர் குவியக்கூடிய ஆலயமாக புட்லூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் விளங்குகிறது.
பெரும்பாலான கோயிலில் அம்மன் நின்ற நிலையிலோ அல்லது அமர்ந்த நிலையிலோ பக்தர்களுக்கு காட்சி தருவார். ஆனால் இந்த ஆலயத்தில் அம்மன் கர்ப்பிணிகள் பிரசவ காலத்தைப் போல கால் நீட்டி மல்லாந்து படுத்து துடிப்பது போல காட்சியளிக்கிறார்.

அம்மனுக்கு பின்புறம் தாண்டவராயன் என்ற பெயரில் நடராஜர், அங்காள பரமேஸ்வரி, விநாயகர் ஆகியோர் உள்ளனர். சன்னதிக்கு எதிரில் நந்தி வாகனம் அமைந்துள்ளது.
குழந்தை பாக்கியம் வரம் வேண்டுபவர்களும், குடும்ப பிரச்னை தீர வேண்டும் என வேண்டுவோருக்கு வேண்டிய வரம் அளிக்கக்கூடிய அம்மனாக திகழ்கிறாள்.
கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் ஆக வேண்டி அவர்களது பெற்றோரோ, கணவரோ, உறவினர் என இங்கு வந்து வேண்டி செல்கின்றனர்.

இந்த கோயிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் மிக அதிகமாக இருக்கும்.
அதே சமயம் ஆடி மாதம் தொடங்கிவிட்டால் எல்லா நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் புட்லூர் அம்மனை தரிசிக்கக் குவிகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக வருகின்றனர்.
இந்த இடம் முன்னர் பூங்காவனமாக இருந்ததால், இந்த அம்மனை பூங்காவனத்தம்மன் என்றும் பெயர் உண்டு.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் செல்லும் புறநகர் ரயிலில் சென்றால், புட்லூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புட்லூர் அங்காளம்மன் திருக்கோயில்.
இந்த கோயிலில் கர்ப்பிணி போல் அருள்பாலிக்கும் பூங்காவனத்தம்மனை தரிசித்தாலே குழந்தை பாக்கியம் உண்டாகும் என நம்பிக்கை இருக்கிறது.
- திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
- ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆனி-8 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பவுர்ணமி காலை 7.19 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம்: மூலம் இரவு 7.03 மணி வரை பிறகு பூராடம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. சோழவந்தான் ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் தீர்த்தவாரி. காைரக் கால் அம்மையார் மாங்கனி திருவிழா. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி பவனி. திருவல்லிக் கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-களிப்பு
ரிஷபம்-கீர்த்தி
மிதுனம்-உவகை
கடகம்-உண்மை
சிம்மம்-பரிவு
கன்னி-பண்பு
துலாம்- பாசம்
விருச்சிகம்-பரிசு
தனுசு- நிம்மதி
மகரம்-திறமை
கும்பம்-மேன்மை
மீனம்-அன்பு
- ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும்.
- நடனக்கலையில் சிறக்கலாம்
திருவாதிரை விரதம்:
நாள் :
மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம்
தெய்வம் :
நடராஜர்
விரதமுறை :
பிரசாதக்களி மட்டும் சாப்பிடலாம்.
பலன் :
நடனக்கலையில் சிறக்கலாம்
சிறப்பு தகவல் :
காலை 4.30 க்கு நடராஜர் திருநடன தீபாராதனையை தரிசித்தல்.
கேதார விரதம்:
நாள் :
புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அல்லது தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் அல்லது தேய்பிறை அஷ்டமி முதல் சதுர்த்தசி வரையான 7நாட்கள்.
இதுவும் முடியாதவர்கள் தேய்பிறை சதுர்த்தசி நாள் மட்டும்.
தெய்வம் :
கேதாரநாதர்
விரதமுறை :
ஆண்கள் 21 இழையால் ஆகிய காப்பை வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும்.
முதல் 20 நாள் ஒருபொழுது உணவு, கடைசிநாள் முழுவதும் உபவாசம் உடல்நிலை சரியில்லாதவர்கள் உப்பில்லாத உணவு சாப்பிடலாம்.
பலன் :
தம்பதிகள் நீண்டநாள் வாழ்வர்
- மூன்று வேளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. தண்ணீர் அல்லது பால் குடிப்பது மத்திமம்.
- இரவில் சிவாலயத்தில் தங்கி நான்கு ஜாம பூஜையிலும் பங்கேற்க வேண்டும்.
தைப்பூச விரதம்:
நாள் :
தை மாத பூச நட்சத்திரம்
தெய்வம் :
சிவபெருமான்
விரதமுறை :
காலையில் மட்டும் சாப்பிடக்கூடாது.
பலன் :
திருமண யோகம்
சிவராத்திரி விரதம்:
நாள் :
மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி
தெய்வம் :
சிவன்
விரதமுறை :
மூன்று வேளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. தண்ணீர் அல்லது பால் குடிப்பது மத்திமம்.
முடியாதவர்கள் பழம் சாப்பிடலாம். உடல் நிலை சரியில்லாதவர்கள் மட்டும் இட்லி முதலான சாத்வீக உணவு வகைகளை சாப்பிடலாம்.
இரவில் சிவாலயத்தில் தங்கி நான்கு ஜாம பூஜையிலும் பங்கேற்க வேண்டும்.
பலன் :
நிம்மதியான இறுதிக்காலம்






