என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • இன்று சங்கடஹர சதுர்த்தி.
    • சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள், தோலுக்கினியானில் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-11 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சதுர்த்தி பின்னிரவு 1.25 மணி வரை பிறகு பஞ்சமி

    நட்சத்திரம்: திருவோணம் மாலை 4.52 மணி வரை பிறகு அவிட்டம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சங்கடஹர சதுர்த்தி. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் ரதம். காஞ்சீபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஜேஷ்டாபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள், தோலுக்கினியானில் பவனி. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் புறப்பாடு. சோழவந்தான் ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் தேரோட்டம். திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில்களில் விநாயகப்பெருமானுக்கு சிறப்பு ஹோமம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பாராட்டு

    ரிஷபம்-நன்மை

    மிதுனம்-ஆசை

    கடகம்-நலம்

    சிம்மம்-செலவு

    கன்னி-மேன்மை

    துலாம்- ஆர்வம்

    விருச்சிகம்-உதவி

    தனுசு- முயற்சி

    மகரம்-உறுதி

    கும்பம்-பக்தி

    மீனம்-தாமதம்

    • கோவிலின் சொத்து மதிப்பு ஏறக்குறைய ஒரு லட்சம் கோடிக்கு மேல் என சொல்லப்படுகிறது.
    • இத்தாலி நாட்டு மார்பிளால் ஆன பளிங்கு கல்லால் செல்லப்பட்ட சாய்பாபாவின் சிலை பல லட்சம் பக்தர்களை ஈர்த்து வருகிறது.

    நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஏராளமான கோவில்களைக் கொண்ட இந்தியா, 'கோயில்களின் பூமி' என்பது மறுக்க முடியாத உண்மை. பல நூற்றாண்டுகள் பழமையான கோவில்கள் முதல், அயோத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராமர் கோவில் வரை என பட்டியலில் கோவில்களை சேர்த்துக் கொண்டே போகலாம். இவை அனைத்தும் எளிமையான, அல்லது சில உலகத்தரம் வாய்ந்த கட்டிடக்கலைகளை உள்ளடக்கியது. இதில் இன்று நாம் பணக்கார கோவில்களான முதலிடத்தில் இருக்கும் நாட்டிலுள்ள சில பணக்காரக் கோயில்களைப் பற்றி பார்க்கலாம்.

    ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவில்

    கேரளா இந்தியாவின் பணக்கார கோவில்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது கேரளாவில் உள்ள பத்மநாப சுவாமி திருக்கோவில். இந்தியா மட்டுமல்ல உலகின் பணக்கார இந்து கோவிலும் இது தான். இந்த கோவிலை அடிப்படையாக வைத்து தான் திருவனந்தபுரம் (திரு+அனந்த+புரம்) என்ற பெயரே உருவானது. இந்த கோவிலின் சொத்து மதிப்பு ஏறக்குறைய ஒரு லட்சம் கோடிக்கு மேல் என சொல்லப்படுகிறது. 2011 ல் திறக்கப்பட்ட ரகசிய அறை ஏ வில் இருந்த தங்கம் உள்ளிட்டவைகளின் மதிப்பு தான் இது. இதுவரை பி அறை திறக்கப்படவில்லை.

    திருப்பதி

    ஆந்திராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஏறக்குறைய 80,000 வரையிலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருக்கும் இக்கோவிலில் தினமும் உண்டியல் காணிக்கையாக மட்டும் ரூ.4.5 கோடி கிடைக்கிறது. இந்த கோவிலில் சொத்து மதிப்பு ரூ.2.5 லட்சம் கோடிக்கு அதிகம் என சொல்லப்படுகிறது.

    ஷீரடி சாய்பாபா மந்திர், மகாராஷ்டிரா

    உலகில் வருடம் முழுவதும் அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் கோவில்களில் ஒன்று ஷீரடி சாய்பாபா கோவில். இத்தாலி நாட்டு மார்பிளால் ஆன பளிங்கு கல்லால் செல்லப்பட்ட சாய்பாபாவின் சிலை பல லட்சம் பக்தர்களை ஈர்த்து வருகிறது. இந்த கோவிலின் சொத்து மதிப்பு ரூ.2000 கோடி என சொல்லப்படுகிறது.

    வைஷ்ணவ தேவி கோவில், ஜம்மு

    அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் கோவிலாகும், அதிக சொத்து மதிப்பையும் கொண்ட கோவில்களில் ஒன்றாகவும் உள்ளது காஷ்மீர் மாதா வைஷ்ண தேவி கோவில். இந்த கோவிலுக்கு வருடத்திற்கு ரூ.500 கோடி வருமானம் வருகிறது. 51 சக்தி பீடங்களில் ஒன்றாக இருக்கும் இந்த குகை கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தின் மதிப்பு மட்டும் 1.2 டன்னுக்கும் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.


    மகாராஷ்டிராவில் உள்ள சித்தி விநாயகர் கோவில்

    இந்தியாவில் உள்ள பணக்கார கோவில்களில் ஒன்றாகும். மிகவும் புகழ்பெற்ற இந்த கோவிலின் சொத்து மதிப்பு சுமார் ரூ.90,000 கோடிக்கும் அதிகமாகும். தங்கம், தங்கம் சிலை, வெள்ளி, வைரம் உள்ளிட்ட பொருட்களும் இதில் அடங்கும்.


    புரி ஜெகந்நாதர் கோயில்

    இந்தியாவின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக இருக்கும் புரி ஜெகந்நாதர் கோவிலில் தினமும் சராசரியாக 30,000 க்கும் அதிகமான பக்தர்கள் வந்த செல்கிறார்கள். இந்த கோவிலின் சொத்து மதிப்பு ரூ.150 கோடி என சொல்லப்படுகிறது. ஆனால் இந்த கோவிலின் கருவூலங்களில் உள்ள ஏழு அறைகளில் இரண்டு மட்டுமே திறக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்டுள்ளது. மற்ற அறைகள் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளன. இவற்றில் தான் பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் தங்கம், வெள்ளி நகைகள் சேமித்து வைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.


    குருவாயூர் கிருஷ்ணன்

    காக்கும் கடவுள் பத்து அவதாரங்கள் எடுத்தாலும் அதில் அனைவருக்கும் பிடித்து கிருஷ்ணன் அவதாரம். பிறந்தது முதல் கீதை உபதேசம் வரை அவரின் லீலைகள் பல. அப்படி குட்டி கிருஷ்ணராக சில லீலைகளை செய்தவராக கேராளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் குருவாயூரப்பனாக காட்சி தருகின்றார். கிருஷ்ணரின் தனிப்பெரும் சிறப்பு மிக்க குருவாயூர் ஸ்ரீ கிருணன் கோயில் பணக்கார கோவில்களில் ஒன்று.


    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவில்

    தமிழ்நாட்டிலேயே அதிக வருவாய் பெறும் கோவிலாக விளங்குகிறது. பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை, பிரசாதம் விற்பனை என ஆண்டுக்கு சுமார் 33 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது.


    காசி விஸ்வநாதர் ஆலயம், வாரணாசி

    இந்தியாவில் புண்ணிய தலங்களில் தலைமை தலமாக உள்ளது காசி விஸ்வநாதர் ஆலயம். இரண்டு தங்கத்தால் ஆன கோபுரங்களைக் கொண்ட இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக இருக்கும் இக்கோவில் வருடத்திற்கு 4 முதல் 5 கோடி வருமானம் கிடைப்பதாக சொல்லப்படுகிறது.


    பஞ்சாபின் பொற்கோயில்

    பஞ்சாப் மாநிலத்தின், அமிர்தசரஸ் நகரத்தில் அமைந்துள்ள குருத்துவார் ஆகும். இதனை பொதுவாக பொற்கோயில் (Golden Temple) என அழைப்பர். சீக்கிய மக்களின் ஒரு முக்கிய கலாச்சார மையமாகும். இந்த கோயில் இந்தியாவின் பணக்கார கோவிலாகும்.

    • ஜாதகத்தில் ராகு கேது பலவீனமானவர்கள் காலில் கருப்பு கயிறு அணிவதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள்.
    • செவ்வாய்கிழமை சனி பகவானை வணங்கி, கருப்பு கயிறில் 9 முடிச்சுகள் போட்டு, அதன் பிறகு அவர்கள் காலில் அணியலாம். இதனால் பணம் வரவு அதிகமாகும் என்பது நம்பிக்கை.

    சுத்திப்போடுவது, திருஷ்டி கழிப்பது போலவே, காலில் கயிறு கட்டுதலையும், நம்முடைய முன்னோர்கள் கடைப்பிடித்தபடியே வந்திருக்கிறார்கள்.. ஆண்கள் வலது கால்களிலும், பெண்கள் என்றால் இடது காலிலும் இப்படி கயிறு கட்டுவார்கள். இதற்கும் அறிவியல் காரணமும் உண்டு, ஆன்மீக காரணமும் உண்டு.

    அறிவியல் காரணம்: பட்டு, தர்ப்பை, அருகம்புல் போன்ற இந்த 3 பொருட்களையும் கயிறு போல திரித்து கையில் அணிந்து கொள்வது பல பலன்களை பெற்றுத்தரும்.. குறிப்பாக, அதிர்வுகளை ஈர்க்கும் தன்மை கொண்டது இந்த 3 பொருட்களுக்கு உண்டு.. அதுபோலவே, நவக்கிரகத்தின் கதிர் வீச்சுகளை, ஈர்க்கும் தன்மை இதுபோன்ற கயிறுகளுக்கும் உண்டு.. காப்புகளுக்கும் உண்டு என்பதால்தான், கைகளில் இவைகளை கட்டுகிறார்கள்..


    அதுமட்டுமல்ல, கருப்பு கயிறு மனதில் நேர்மறை சக்தியை அதிகரிக்கக்கூடியது... இந்த தன்மை , சிவப்பு நிறகயிறுகளுக்கு கிடையாது என்பதாலேயே கருப்பு கலரிலேயே கைகள், மற்றும் கால்களில் கயிறு கட்டுகிறார்கள்.

    உடல்நல கோளாறு: பெரும்பாலும், கருப்பு நிறங்கள், சூரிய ஒளியில் இருந்து வரும் கதிர்களை உள்வாங்கிக் கொள்ளும் தன்மை கொண்டது.. இந்த கறுப்பு கயிறு கட்டுவதால் நீண்ட காலமாக குணமடையாத தீராத நோய், உடல் நல கோளாறுகள் போன்றவையும் குணமாகும்.

    நம்முடைய உடலில் பல்வேறு முடிச்சுகள் உள்ளன. இந்த ஒவ்வொரு முடிச்சுகளும் உடம்பின் ஒவ்வொரு இயக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன. அந்த வகையில் இருக்கும் முக்கிய முடிச்சுப்பகுதி நம்முடைய கணுக்கால் பகுதி. நமது எண்ணங்கள் மற்றும் மனநிலையின் அடிப்படையிலேயே நாடியின் செயல்பாடும் அமைகின்றன. எனவேதான், கணுக்கால் பகுதியில் கயிறு கட்டினாலும் நாடியின் இயக்கம் சீராவதுடன், எண்ணங்களும், மனநிலையும் சரிநேர்க்கோட்டில் அலைபாயாமல் இருக்கும்.

    நிதிநிலைமை: ஜோதிடப்படி, கணுக்காலில் கருப்பு கயிறு கட்டுவதிலும் நிறைய நன்மைகள் சொல்லப்படுகின்றன. கணுக்காலில் கருப்பு கயிறு கட்டினால் நிதிநிலைமை பலப்படும் என்பார்கள். காரணம், சனி பகவான் முதலில் ஒருவரின் கால்களை தான் பற்றுவாராம். ராகு, கேது பாதிப்புகள் ஏற்படாது. கயிறு கட்டும் முன் சனி தேவ மந்திரத்தை 21 முறை ஜபிக்க வேண்டுமாம். அதிலும், பொருளாதார பிரச்சனை இருப்பவர்கள், செவ்வாய்கிழமை சனி பகவானை வணங்கி, கருப்பு கயிறில் 9 முடிச்சுகள் போட்டு, அதன் பிறகு அவர்கள் காலில் அணியலாம். இதனால் பணம் வரவு அதிகமாகும் என்பது நம்பிக்கை.


    எனவே, சனி கிரகத்தின் தாக்கம் குறைவாக இருப்பதுடன், ஜாதகத்தில் ராகு கேது பலவீனமானவர்கள் காலில் கருப்பு கயிறு அணிவதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, கருப்பு கலர் என்றாலே, கெட்ட விஷயங்களை தடுக்கும் ஒரு நிறமாக கருதப்பட்டு வருகிறது. எனவே, கருப்பு கயிறுகளை அணிவது எதிர்மறை ஆற்றல் மற்றும் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஆவிகளை விலக்கி வைக்குமாம். கணுக்காலில் கயிறு கட்டுவது, தடைபட்ட வாழ்க்கையையும் வலுவாக்க உதவுகிறது. கெட்ட விஷயங்களிலிருந்து விலக்கி பாதுகாப்புத்தன்மையை உணரவைக்கிறது. பெண்கள் காலில், கருப்பு கயிறை கட்டுவதானால் பிரம்ம முகூர்த்தத்தில் அல்லது நண்பகல் 12 மணிக்கு கட்டிக்கொள்ளலாம். அதிலும், சனிக்கிழமைகளில் கட்டுவது இன்னும் நல்லது. இந்த 9 முடிச்சுகளும் தனித்தனியாக இருப்பது நல்லது.

    ராசிகள்: கருப்பு தவிர வேறு எந்த நிறக்கயிறும் கட்டக்கூடாதாம். கறுப்புக் கயிற்றை கட்டியதுமே, தினமும் ருத்ர காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வரும்போது, இந்த கயிறுகள், அதிக சக்தி வாய்ந்ததாக மாறிவிடும் என்கிறார்கள். தனுசு, துலாம், கும்பம், ராசி போன்றவர்களுக்கு கருப்பு கயிறு மிகவும் நல்லது என்றும், விருச்சிகம், மேஷ ராசியில் பிறந்தவர்கள் கருப்பு நிறத்தை அணிவது உகந்தது கிடையாது என்றும் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறதாம்.

    • திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் புறப்பாடு.
    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-10 (திங்கட்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: திருதியை பின்னிரவு 3.25 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம்: உத்திராடம் மாலை 5.56 மணி வரை பிறகு திருவோணம்

    யோகம்: மரண, அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று திருவோண விரதம், சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருவீதி உலா. சோழ வந்தான் ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதியுலா. திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடை மருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்கார வழிபாடு

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஜெயம்

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-பணிவு

    கடகம்-பண்பு

    சிம்மம்-குழப்பம்

    கன்னி-வாழ்வு

    துலாம்- ஆசை

    விருச்சிகம்-தனம்

    தனுசு- அன்பு

    மகரம்-ஆர்வம்

    கும்பம்-தெளிவு

    மீனம்-உறுதி

    • அவரது ஆன்மாவிற்கும் கவனம் செலுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    • அந்த வகையில் அவர்கள் ‘ராம’ நாமத்தினை பரிந்துரைக்கின்றார்.

    மந்திரம் சொல்வதற்கென சில முறைகள் கடைப் பிடிக்கப்படுகின்றன.

    * காலை 4 மணிக்கு எழுந்து நாலரை மணிக்குள் தயாராகுங்கள்.

    * கிழக்கு முகமாக அமருங்கள்.

    * ஞான முத்திரை பரிந்துரைக்கப்படுகின்றது.

    * மந்திரத்தினை பொறுமையாய் 108 முறை சொல்லுங்கள்.

    மகாத்மா காந்தி அவர்கள், அவர்களது 'இயற்கை வைத்தியம்' என்ற புத்தகத்தில் 'ஒரு மருத்துவரின் கடமை நோயாளியின் உடலுக்கு கவனம் செலுத்துவது மட்டுமல்ல.

    அவரது ஆன்மாவிற்கும் கவனம் செலுத்த வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    அந்த வகையில் அவர்கள் 'ராம' நாமத்தினை பரிந்துரைக்கின்றார்.

    மேலும் 'ராம' நாமம் அனைத்திற்கும் தீர்வு என்று குறிப்பிடுகின்றார்.

    இந்த நாமத்தினை சொல்பவர்கள் சிறிய முயற்சியிலேயே அரிய செயல்களை சாதிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    'ரா' என்பது 'ஓம் நமோ நாராயணா என்பதிலிருந்தும், 'ம' என்பது 'ஓம் நம சிவாய' என்பதிலிருந்தும் சேர்க்கப்பட்டதால், இரட்டிப்பு பலன் என்றும் கூறப்படுகின்றது.

    கந்தர் சஷ்டி கவசத்தில் கூட 'ரஹன பவச ரரரர, ரிஹண பவச ரிரிரிரி' என சொல்லப்படுகின்றது.

    'ரா' என்ற எழுத்தும் 'ம' என்ற எழுத்தும் உச்சரிக்கப்படும் பொழுது உடலில் ஏற்படும் அதிர்வுகள் அவரது உடல் நலத்தினையும், மன நலத்தினையும் காப்பதாக விளக்கப்படுகின்றது.

    ஆக, மந்திரங்களும் அமிர்த மருந்தே என்பதை அறிவோமாக.

    • 31 நிமிடங்கள் தொடர்ந்து ஜெபிப்பது சுரப்பிகளை சீர்ப்படுத்தும். மூச்சு சீராகின்றது. அனைத்துத் திசுக்களும் சீர்படத் தொடங்குகின்றன.
    • 62 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிக்கும் பொழுது மூளையில் ‘க்ரே’ பகுதியில் மாற்றம் ஏற்படுகின்றது. பிட்யூட்டரி, பீனியல் சுரப்பிகள் நன்கு இயங்குகின்றன.

    * மந்திரத்தைத் தொடர்ந்து 3 நிமிடங்கள் ஜபிப்பது உங்களைச் சுற்றியுள்ள மின்சார காந்த அலைகளை தாக்கும். ரத்த ஓட்டம் சீர்படும்.

    * ஏழு நிமிடம் தொடர்ந்து ஜபிப்பது உங்கள் மூளை செயல் திறனைக் கூட்டும். உடல் வலுவினைக் கூட்டும். உடலைச் சுற்றியுள்ள காந்த அலைகளில் நல்ல மாறுதல்கள் ஏற்படும்.

    * 11 நிமிடம் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பதும், தியானம் செய்வதும் நரம்பு மண்டலத்திலும், சுரப்பிகளிலும் நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தும்.

    * 22நிமிடங்கள் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பதும், தியானம் செய்வதும் ஒருவரின் அழிவுப்பூர்வ, ஆக்கப்பூர்வ இரண்டும் இல்லாத நிலைகளில் தடுமாறும் மனதினை நிலைப்படுத்தி தெளிவாக சிந்திக்க வைக்கும். உள் உணர்வினைக் கூட்டும்.

    * 31 நிமிடங்கள் தொடர்ந்து ஜெபிப்பது சுரப்பிகளை சீர்ப்படுத்தும். மூச்சு சீராகின்றது. அனைத்துத் திசுக்களும் சீர்படத் தொடங்குகின்றன.

    * 62 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிக்கும் பொழுது மூளையில் 'க்ரே' பகுதியில் மாற்றம் ஏற்படுகின்றது. பிட்யூட்டரி, பீனியல் சுரப்பிகள் நன்கு இயங்குகின்றன.

    * இரண்டரை மணிநேரம் தொடர்ந்து ஜெபிக்கும் பொழுது உயர்நிலையினை மனம், மூளை அடைகின்றது. நாள் முழுவதும் ஆக்கப் பூர்வமாகவே செயல்படுவர்.

    மேற்கூறப்பட்டுள்ள கருத்துக்கள் விஞ்ஞான ஆய்வு முடிவுகள் இல்லை. என்றாலும், பல அனுபவ ரீதியான கருத்துக்களாக வெளியிடப்பட்டுள்ளன.

    • ஆனால், இதற்கு மேலும் ஆதாரப்பூர்வம் தேவைப்படுகின்றது.
    • கடந்த சில ஆண்டுகளில் சில வெளிநாடுகளில் காலை 7 மணிக்கு சுமார் 15 நிமிடங்கள் தொடர்ந்து காயத்ரி மந்திரத்தினை ஒலிபரப்புவதாக கூறப்பட்டுள்ளது.

    டாக்டர் ஹெவார்ட் ஸ்டியன் கெரில் என்ற அமெரிக்க விஞ்ஞானி காயத்ரி மந்திர பலன்களாக பல செய்திகளை வெளியிட்டுள்ளார்.

    ஆனால், இதற்கு மேலும் ஆதாரப்பூர்வம் தேவைப்படுகின்றது.

    கடந்த சில ஆண்டுகளில் சில வெளிநாடுகளில் காலை 7 மணிக்கு சுமார் 15 நிமிடங்கள் தொடர்ந்து காயத்ரி மந்திரத்தினை ஒலிபரப்புவதாக கூறப்பட்டுள்ளது.

    இம்மந்திரம் முழுக்க முழுக்க ஒளியினை வணங்குவதும், மனதின் இருளினை நீக்க வேண்டுவதாக அமைந்துள்ளதால், இம் மந்திரம் பெரிதும் வரவேற்கப்படுகின்றது.

    ஒரு மந்திரமோ, தியானமோ, யோகவோ, உடற்பயிற்சியோ ஆரம்பிப்பதற்கு முன்னால் உங்கள் மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம்.

    ஒரு பழக்கம் உங்களை விட்டு நீங்க (உ-ம்) காபி, டீ பழக்கம் போன்றவை நீங்க 40 நாட்கள் ஆகும்.

    த்யானமோ, மந்திரமோ அது பழக்கமாக ஆரம்பிக்கும் பொழுது அது உங்களுக்கு கை கூடி வர, பழக்கப்பட 90 நாட்கள் ஆகும்.

    120 நாட்களில் புதுப்பழக்கம் நன்கு பழகி விடும்.

    120 நாட்களில் கை விட்ட பழக்கமும் நம்மிடம் நன்கு நீங்கி விடும்.

    1000 நாட்களில் நீங்கள் செய்யும் சாதனையோ, கடைப்பிடிக்கும் பழக்கமோ நீங்கள் மாஸ்டர் ஆகி விடுவீர்கள். (உ-ம்) தொடர்ந்து நீங்கள் 1000 நாட்கள் காலை 4 மணிக்கு எழுந்தால், வாழ்நாள் முழுவதும் அவ்வாறே செய்வர்.

    • நற்செயல்களில் ஈடுபடுவர்
    • காந்த சக்தி ஆகியவை உருவாகும்.

    * கம்பீரத் தோற்றம்

    * தரமான பேச்சு

    * வறுமை, குறை நீங்குதல்

    * பாதுகாப்பு வட்டம்

    * கண்ணில் அறிவு தெரிதல்

    * அபாயம், தேவையற்ற சூழ்நிலை நீங்கும்

    * நரம்புகளும், சுரப்பிகளும் ஊக்குவிக்கப்படும்

    மேலும்

    * அமைதியாய் இருப்பர்

    * நற்செயல்களில் ஈடுபடுவர்

    * காந்த சக்தி ஆகியவை உருவாகும்.

    மேலும்

    * வாழ்க்கையில் தடைகளை நீக்கும்

    * மூளையை பிரகாசிக்கச் செய்யும்

    * உள்ளுணர்வினை தெளி வாக்கும்

    * உயர் உண்மைகள் தெரிய வரும்

    - என்றும் கூறப்படுகின்றது.

    • சரஸ்வதி வாக்கின் அதிபதி. ஆக, உண்மையான சிந்தனை, சொல், செயல் இவற்றினை குறிப்பதாக அமைகின்றது.
    • காயத்ரி மந்திரம் வேதத்தின் சாரம். இதனை முழு கவனத்தோடே சொல்ல வேண்டும்.

    இம் மந்திரம் ரிஷி விஸ்வாமித்திரரால் கண்டுபிடிக்கப்பட்டது.

    சூரிய பகவானை நோக்கி வழிபடுவதாக இம் மந்திரம் அமைந்துள்ளது.

    மிக அதிக சக்தி கொண்டது. அதிர்வுகள் மூலம் ஆக்கப்பூர்வ சக்தியினை ஏற்படுத்துவது.

    வேதங்களின் தாய் தான் காயத்ரி தேவி. இம் மந்திரம் சொல்லப்படும் இடங்களில் எல்லாம் இத்தேவி இருப்பாள்.

    இத் தேவிக்கு சாவித்திரி, சரஸ்வதி என்ற பெயரும் உண்டு.

    காயத்ரி ஐம்புலன்களின் அதிபதி. சாவித்திரி ப்ராண சக்தி. சாவித்திரி என்பது உண்மையைக் குறிக்கின்றது.

    சரஸ்வதி வாக்கின் அதிபதி. ஆக, உண்மையான சிந்தனை, சொல், செயல் இவற்றினை குறிப்பதாக அமைகின்றது.

    காயத்ரி மந்திரம் வேதத்தின் சாரம். இதனை முழு கவனத்தோடே சொல்ல வேண்டும்.

    காலை, மாலை இருவேளையும் சொல்லலாம்.

    அனைவரும் சொல்லலாம். இருதயம் சுத்தமாகும்.

    தீய எண்ணங்கள், கவலைகள் நீங்கும். குறிப்பாக, பள்ளி மாணவர் திறமையாகப் படிப்பார்கள்.

    • வேதத்திலிருந்து வந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம் தான் காயத்ரி மந்திரம்.
    • நம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள்.

    வேதத்திலிருந்து வந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம் தான் காயத்ரி மந்திரம்.

    ஓம் - தெய்வீக சக்தி, ஒலி சின்னம்

    ப்பூ - உடல் விமானம்

    புவஹா - நிழலிடா விமானம்

    ஸ்வ - வான விமானம்

    தத் - அந்த தலை தெய்வத்தின்

    ஸவித்து - பிரபஞ்சம் தயையும் சக்தி

    வரேன்யம் - வணங்க வேண்டும்

    பர்கோ - பிரபல

    தேவஸ்ய - பிரகாசமிக்க

    தீமஹி - நம் த்யானம்

    தியோ - அறிவினை

    யா - யார்

    நஹ - எங்கள்

    ப்ரசோதயாத் - தெளிவுப்படுத்துங்கள்

    ஓம் பூர் : புவ : ஸீவ :

    தத் ஸவிதுர் வரேண்யம்

    பர்கோ தேவஸ்ய தீமஹி

    தியோ : யோந: ப்ரசோதயாத்

    நம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள்.

    • இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது.
    • இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன.

    இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது.

    இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன.

    காயத்ரி மந்திரத்திற்கு ஜாதி, மதம் என்ற எந்த பிரிவும் கிடையாது.

    தத் - வெற்றி

    ச - வீரம்

    வி - பராமரிப்பு

    து - நன்மை

    வ - ஒற்றுமை

    ரி - அன்பு

    நி - பணம்

    யம் - அறிவு

    ஃபர் - பாதுகாப்பு

    க்கோ - ஞானம்

    த்தி - அழுத்தம்

    வா - பக்தி

    ஸ்யா - நினைவாற்றல்

    ஃத்தி - மூச்சு

    மா - சுய ஒழுக்கம்

    யோ- விழிப்புணர்வு

    யோ- உருவாக்குதல்

    நஹ- இனிமை

    பரா- நல்லது

    சோ- தைரியம்

    த்தா- ஞானம்

    யட் - சேவை

    • இது மிக சிறிய மந்திரம்தான். ஆனால், மிக மிக சக்தி வாய்ந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.
    • பிரபல மேலை நாட்டு ஞானி ஆர்தர் கொயெஸ்ட்லர் ‘காயத்ரி மந்திரம் 1000 ஆட்டம் பாம்களுக்குச் சமம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

    காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது, 'மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    ஜேபிஎஸ் ஹால்டேன் என்ற பிரபல விஞ்ஞானி (1892&-1964) காயத்ரி மந்திரத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது ஒவ்வொரு இரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் 'நதிகளில் நான் கங்கையாகவும், மலைகளில் நான் விந்திய மலையாகவும், மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக்கின்றேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    சுவாமி இராம கிருஷ்ண பரமஹம்சர் கூறுகையில் 'பெரிய பெரிய கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதனைக் காட்டிலும், காயத்ரி மந்திரத்தினை ஜபிப்பது மிகப்பெரிய சாதனையாகும்.

    இது மிக சிறிய மந்திரம்தான். ஆனால், மிக மிக சக்தி வாய்ந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

    பிரபல மேலை நாட்டு ஞானி ஆர்தர் கொயெஸ்ட்லர் 'காயத்ரி மந்திரம் 1000 ஆட்டம் பாம்களுக்குச் சமம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    ஜெர்மன் தத்துவ ஞானி மெக்ஸ் முல்லர் (1823-1900) அவர்கள் 'ஒளியினை தவம் செய்து நம் மூளை, மனதினை உயர்த்துவோம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மகாத்மா காந்தி (1869-1948) அவர்கள் 'யார் ஒருவர் காயத்ரி மந்திரத்தினை ஜபிக்கின்றாரோ அவன் நோய்க்கு ஆளாக மாட்டார்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    காயத்ரி மந்திரத்தினை சொல்லுவதன் பொருள் 'உயர் அறிவு சக்தியினை அளித்து, அறியாமையை நீக்க வேண்டும்' என்பதாகும்.

    ×