என் மலர்
ரஷ்யா
- ரஷியா எல்லைக்குள் உக்ரைன் படை சென்றதையடுத்து தாக்குதல் அதிகமாகியுள்ளது.
- ஐந்து பிராந்தியங்களை குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தி ரஷியாவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை. இரு நாடுகளும் டிரோன் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் எல்லையில் உள்ள ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் நுழைந்தனர்.
சுமார் 70-க்கும் அதிகமான குடியிருப்பு பகுதியை சுற்றி வளைத்துள்ளதாக தெரிவித்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான தாக்குதல் அதிரிகரித்து வருகிறது. ரஷியா மீண்டும் ஏவுகணை தாக்குதலை நடத்த தொடங்கியது.
இந்த நிலையில் இன்று காலை உக்ரைன் இதுவரை இல்லாத வகையில் ரஷியாவின் மாஸ்கோ நகரை நோக்கி தொடர்ச்சியாக டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. குறைந்தபட்சம் 11 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது.
மொத்தமாக 45 டிரோன்கள் ரஷியாவில் எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதில் 11 மாஸ்கோ பிராந்தியத்திற்குள் நுழைந்தபோது அழிக்கப்பட்டது. 23-க்கும் மேற்பட்ட டிரோன்கள் எல்லையில் அமைந்துள்ள பிரியான்ஸ்க் பிராந்தியத்திலும், 6 டிரோன்கள் பெல்கோரோட் பிராந்தியத்திலும், மூன்று டிரோன்கள் கலுகா பிராந்தியத்திலும், இரண்டு குர்ஸ்க் பிராந்தியத்திலும் சுட்டு வீழ்த்தப்பட்டன என ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
சில டிரோன்கள் மாஸ்கோவின் பொடோல்ஸ்க் நகரத்தின் மீது சுட்டு வீழ்த்தப்பட்டது என மோஸ்கோ மேயர் தெரிவித்துள்ளார். மேலும், எதிரிகளின் தாக்குதலை முறியடிக்கும் வகையில் பாதுகாப்பு லேயர் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
- ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ரஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள கம்சட்ஸ்கிவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.0 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அந்நாட்டு நிலநடுக்கவியல் துறை உறுதிப்படுத்தி இருக்கிறது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து கம்சட்ஸ்கியின் தலைநகர் பெட்ரோபாவ்லோவை ஒட்டிய எல்லையை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. நிலடுக்கம் பூமியில் இருந்து 50 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் துறை தெரிவித்தது.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அந்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், சுனாமி எச்சரிக்கைக்கான கால அளவு கடந்துவிட்டது.
- குர்ஸ்க் பிராந்தியத்தில் 10 ஆயிரம் உக்ரைன வீரர்கள் ஊடுருவி சென்றுள்ளனர்.
- மற்றொரு பிராந்தியமான பெல்கோரோட்டிலும் சூழ்நிலை மோசமானதால் அவசரநிலை பிறப்பித்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இருந்த போதிலும் போர் முடிவுக்கு வரவில்லை. இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.
வீரர்கள் நேருக்குநேர் மோதாமல் டிரோன், ராக்கெட் மூலம் கட்டமைப்புகளை குறிவைத்து இருநாடுகளும் பரஸ்பர தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில்தான் கடந்த வாரம் திடீரென 10 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் நுழைந்தது ரஷியாவுக்கு தெரியவந்தது. இதனால் அப்பிராந்தியத்தில் அவசரநிலை பிறப்பித்து மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றியதுடன், எல்லையில் இருந்து உக்ரைன் வீரர்களை வெளியெற்ற ரஷியா ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் மற்றொரு எல்லை பிராந்தியமான பெல்கோரோட் பிராந்தியத்திலும் ரஷியா அவசரநிலை பிறப்பித்துள்ளது. உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பெல்கோரோட் பிராந்திய கவர்னர் தெரிவித்துள்ளார்.
இங்குள்ள 5 ஆயிரம் குழந்தைகளை பாதுகாப்பான பகுதியில் உள்ள முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இங்கு மோசமான நிலை உருவாகியுள்ளது. வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் காயம் அடைந்துள்ளனர். உள்ளூர் மக்கள் கவலை அடைந்துள்ளனர். 11 ஆயிரம் மக்கள் தங்களது வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். ஆயிரம் பேர் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என பெல்கோரோட் கவர்னர் வியாசெஸ்லாவ் கினாட்கோவ் தெரிவித்துள்ளார்.
இதனால் குர்ஸ்க், பெல்கோரோட் பிராந்தியங்களில் அசாதாரண நிலை நிலவி வருகிறது. உக்ரைன் 10 ஆயிரம் ராணுவ வீரர்களை குவித்துள்ள நிலையில், ரஷியாவின் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் இருநாட்டு வீரர்களும் நேருக்குநேர் மோதும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைனைச் சேர்ந்த 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களுடன் நுழைந்தனர்.
இது தொடர்பாக உக்ரைன் வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் "உக்ரைனின் நோக்கம் ரஷியாவின் பகுதியை ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும் என்து அல்ல. குர்ஸ்க் பகுதியில் இருந்து உக்ரைன் நோக்கி ரஷியாவின் ஏவுகணை தாக்குதலை நிறுத்துவதற்காகத்தான்" எனத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் படைகள் எப்போது எப்படி ரஷியா எல்லைக்குள் ஊடுருவியது என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. மக்கள் வசிக்கும் 74 பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேவேளையில் குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து ஒரு லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- ரஷியாவில் 74 குடியேற்ற பகுதிகளை உக்ரைன் கைப்பற்றியுள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்
- இந்த தாக்குதல் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு ரஷியாவை நிர்ப்பந்திக்கும் செயலா?
உக்ரைன் போரும் நேட்டோ நண்பர்களும்
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. தொடக்கத்தில் இருந்தே இந்த [போரில் ரஷியாவின் கை ஓங்கியே இருந்தது. உக்ரைன் தலைநகர் கீவ் வரை ரஷிய ராணுவம் முன்னேறிச் சென்றது.
ராணுவ பலம் கொண்ட ரஷியாவின் தாக்குதலைச் சமாளிக்க மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத மற்றும் பொருளாதார உதவிகள் செய்து வருகின்றன.மேற்குலகின் பொருளாதாரத் தடைகளை மீறி இந்த போரில் ரஷியா அதிதீவிரமாக ஈடுபட்டுள்ளது. மறுபுறம் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேட்டோவில் அங்கமாவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
தலைகீழாக மாறிய போர்
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வரும் போரில் முதல் முறையாக உக்ரைன் படைகள் ரஷியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளன. ரஷியாவின் கூர்க்ஸ் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் சரமாரி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கையாகப் பொதுமக்கள் அனைவரும் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்..
தற்போது ரஷியாவின் 1000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உக்ரைன் படைகள் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷிய மக்களின் சுமார் 74 குடியேற்ற பகுதிகளை உக்ரைன் கைப்பற்றியுள்ளதாக ஜெலன்ஸ்கி தெரிவித்திருப்பது உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் ரஷிய மண்ணில் மிகப்பெரிய அளவுக்கு வேற்று நாடு ஒன்றின் படைகள் நடத்தியுள்ள தாக்குதல் இதுவாகும். இதுதொடர்பாக ஜெலன்ஸ்கி தனது சமூக வலைதள பக்கத்தில் ஆக்கிரமிப்பு ரஷிய பகுதியில் பொறுப்பில் உள்ள உக்ரைன் ராணுவ தளபதியுடன் பேசிய வீடியோ காலை பகிர்ந்துள்ளார்.
ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் சொல்வது என்ன ?
உக்ரைன் படைகள் முன்னேறியுள்ள பகுதிகளில் அவர்களை விரட்டும் பணியில் ரஷிய படைகள் ஈடுபட்டுவருவதாகவும்,சில இடங்களில் ஏற்கனவே உக்ரைன் படைப்பிரிவுகள் தோல்வியடைந்து பின்வாங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூர்க்ஸ் பிராந்தியத்தின் எல்லைப்பகுதிகளில் உள்ள 120,000 ரஷிய மக்களை வீடுகளை விட்டு வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துவந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேற்கு முதலாளிகளும் புதினின் ஆவேசமும்
ரஷியாவில் உக்ரைன் படைகள் முன்னேறி வருவது குறித்து பேசியுள்ள அதிபர் புதின், தனது மேற்கு முதலாளிகள் உதவியுடன் இந்த தாக்குதலை உக்ரைன் அரங்கேற்றியுள்ளது. போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ரஷியவை விட அதிக தனது கையை ஓங்கியிருக்கச் செய்யவே இந்த தாக்குதலை உக்ரைன் செய்துள்ளது.
ஆனால் அதற்காக அப்பாவி ரஷிய பொதுமக்கள் மீதும், அணுமின் நிலையங்களின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்துவது ஏற்புடையது அல்ல. எங்களின் தற்போதைய முக்கியமான பணி, எங்கள் இடத்தில் உள்ள எதிரியை அடித்துத் துரத்துவதுதான், ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க ரஷிய ராணுவம் முன்னேறி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

புதின் கூறியதுபோல உக்ரைனின் இந்த தாக்குதல் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு ரஷியாவை நிர்ப்பந்திக்கும் செயலே ஆகும் என்று உக்ரைன் வெளியுறவு மந்திரியும் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கிடையே, உக்ரைனின் இந்த எதிர்பாராத தாக்குதலால் புதின் பேரதிர்ச்சியில் உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
- உக்ரைன் படைகள் முன்னேறுவதைத் தடுக்க ரஷியா தனது ராணுவத்தைக் குவித்து வருகிறது.
- ஐரோப்பாவின் மிகப்பெரிய ஜபோரிஜியா (Zaporizhzhia Nuclear Power Plant) அணுமின் நிலையம் உக்ரைனில் உள்ளது
ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் இணைய முயன்ற உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்த போர் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. ராணுவ பலம் கொண்ட ரஷியாவின் தாக்குதலைச் சமாளிக்க மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத மற்றும் பொருளாதார உதவிகள் செய்து வருகின்றன. எனினும் இந்த போரில் ரஷியாவின் கைகள் ஓங்கி இருக்கிறது.
உக்ரைன் தலைநகர் கீவ் வரை ரஷிய படைகள் தாக்குதல்களை முன்னெடுத்தன.மேற்குலகின் பொருளாதாரத் தடைகளை மீறி இந்த போரில் ரஷியா அதிதீவிரமாக ஈடுபட்டுள்ளது. மறுபுறம் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி நேட்டோவில் அங்கமாவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வரும் போரில் முதல் முறையாக உக்ரைன் படைகள் ரஷியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளன. ரஷியாவின் கூர்க்ஸ் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் சரமாரி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கையாகப் பொதுமக்கள் 76 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். அதேசமயம் கூர்க்ஸ் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் முன்னேறுவதைத் தடுக்க ரஷியா தனது ராணுவத்தைக் குவித்து வருகிறது.

ரஷியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவது குறித்து உக்ரைன் முதலில் மவுனம் காத்து வந்த நிலையில் தற்போது அதிபர் ஜெலன்ஸ்கி வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் ரஷியாவுக்கு எதிரான போரில் இது மிகப்பெரிய வெற்றி என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் உக்ரைனின் இந்த நடவடிக்கை மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையில் உக்ரைனில் ரஷிய ராணுவ வீரர்கள் கைப்பற்றி இருந்த ஐரோப்பாவின் மிகப்பெரிய ஜபோரிஜியா (Zaporizhzhia Nuclear Power Plant) அணுமின் நிலையத்தை அழிக்க திட்டமிட்டு, ரஷிய வீரர்கள் அதற்கு தீ வைத்தனர். இதனால் கரும்புகை எழுந்து அணுவீச்சு தாக்கும் அபாயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு உக்ரைன்தான் ரஷியாவும், ரஷியாதான் காரணம் என்று உக்ரைனும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன.
- ரஷிய ஆயுதப் படைகளில் இந்தியர்களை ஆட்சேர்ப்பு செய்வது ஏப்ரல் முதல் நிறுத்தப்பட்டுவிட்டது.
- அனைத்து ஒப்பந்தக் கடமைகள் மற்றும் உரிய இழப்பீட்டுத் தொகைகள் முழு அளவில் நிறைவேற்றப்படும்.
ரஷியா-உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. இப்போரில் ரஷிய ராணுவத்தில் இந்திய இளைஞர்கள் உதவியாளர்களாக சேர்க்கப்பட்டு சண்டையில் ஈடுபடுத்தப்பட்டனர். ரஷியாவில் வேலை வாங்கி தருவதாக ஏஜென்டுகள் மூலம் அழைத்து செல்லப்பட்ட இளைஞர்களை வலுகட்டடாயமாக ரஷிய ராணுவத்தில் சேர்த்ததாக தகவல் வெளியானது.
இதற்கிடையே ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய 8 இந்திய இளைஞர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து இந்திய இளைஞர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது. சமீபத்தில் பிரதமர் மோடி ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டபோது ரஷிய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்களை விடுவிக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் புதினிடம் வலியுறுத்தினார். இதை ரஷியா ஏற்றுக் கொண்டது.
இந்த நிலையில் இந்தியர்களை ராணுவத்தில் சேர்ப்பது நிறுத்தப்பட்டுள்ளது என்று ரஷியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷிய தூதரகம் கூறியதாவது:-
ரஷிய ராணுவத்தில் பணிபுரியும் இந்திய குடிமக்களின் பிரச்சனை குறித்து கருத்து தெரிவிக்க ஊடகங்களில் இருந்து பல கோரிக்கைகள் வந்தது. உக்ரைனில் ரஷியாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கையின் போது இந்தியர்களின் துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளுக்கு இந்திய அரசுக்கும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தூதரகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
ரஷியாவில் ராணுவ சேவைக்காக தானாக முன்வந்து ஒப்பந்தம் செய்த இந்தியர்களை முன்கூட்டியே கண்டறிந்து அவர்களை வெளியேற்றுவதற்கு இரு நாடுகளிலும் ஒருங்கிணைப்புடன் செயல்படுகின்றன.
ரஷிய ஆயுதப்படைகளில் இந்தியர்களை ஆட்சேர்ப்பு செய்வது ஏப்ரல் முதல் நிறுத்தப்பட்டுவிட்டது. அனைத்து ஒப்பந்தக் கடமைகள் மற்றும் உரிய இழப்பீட்டுத் தொகைகள் முழு அளவில் நிறைவேற்றப்படும்.
ரஷிய அரசாங்கம் ராணுவத்தில் ஆட்சேர்ப்பு குறித்து எந்தவொரு பொது அல்லது தெளிவற்ற பிரச்சாரங்களிலும் ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளது.
- செஸ் வீராங்கனை அமினா போட்டி நடைபெறும் இடத்திற்குள் நுழைகிறார்.
- அவர் எதிராளியின் மேசையை அணுகி செஸ் போர்டில் பாதரசம் தெளிப்பது பதிவானது.
மாஸ்கோ:
ரஷியாவின் தாகெஸ்தானில் நடந்த செஸ் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது வீராங்கனையான ஒஸ்மானோவா திடீரென நோய்வாய்ப்பட்டார். இதையடுத்து அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இந்தப் போட்டியில் ரஷிய வீராங்கனை அமினா அபகராவோ தனது எதிரிக்கு விஷம் வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக போட்டி அமைப்பாளர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவையும் ஆய்வு செய்தனர்.
அதில், செஸ் வீராங்கனை அமினா போட்டி நடைபெறும் இடத்திற்குள் நுழைகிறார். போட்டி தொடங்கும் முன் அமினா அபகரோவா தனது எதிராளியின் மேசையை அணுகி செஸ் போர்டில் பாதரசத்தை தெளிப்பது பதிவாகியுள்ளது.
இதையடுத்து, அமினா அபகராவோவுக்கு விளையாட தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பாக அந்நாட்டு விளையாட்டு மந்திரி கூறுகையில், பலரைப் போலவே நானும் என்ன நடந்தது என்பதில் குழப்பம் அடைந்துள்ளேன். அமினா அபகரோவா போன்ற அனுபவம் வாய்ந்த போட்டியாளரின் நோக்கங்கள் புரிந்துகொள்ள முடியாதவை. அவர் நிச்சயம் இதற்கு பதிலளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
A chess tournament in the Russian republic of Dagestan took a dramatic turn when a player was accused of poisoning her opponent with mercury.
— UNITED24 Media (@United24media) August 7, 2024
Amina Abakarova approached her opponent's table before the start of the match and spilled mercury near the chessboard. pic.twitter.com/vh2YpVmpDU
- பெல்கோரோட் பிராந்தியத்தில் ஆயில் டெப்போ மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
- ஓரியல் பிராந்தியத்தில் குடியிருப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரஷியா- உக்ரைன் எல்லையில் உள்ள ரஷியப் பகுதிகளில் உக்ரைன் நேற்றிரவு சரமாரியாக டிரோன்கள் தாக்குதல் நடத்தியதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம், வான்பாதுகாப்பு சிஸ்டம் மூலம் 75 டிரோன்களை இடைமறித்து அழித்ததாக தெரிவித்துள்ளது.
பெல்கோரோட், கிராஸ்னோடர், கர்ஸ்க், ஓரியல், ரோஸ்டவ், வொரோனேஸ் உள்ளிட்ட பிராந்தியங்களில் உள்ள பகுதிகளை குறிவைத்து உக்ரைன் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
ரோஸ்டவ் பிராந்தியத்தில் மட்டும் 36 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதுவேளையில் ரோஸ்டவ் கவர்னர் வாசிலி கொலுபெவ், 55 டிரோன்களால் ரோஸ்டவ் தாக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.
எத்தனை டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. எத்தனை டிரோன்களை இலக்கை தாக்கியது என்பது குறித்து அவர் விளக்கம் அளிக்கவில்லை. மோரோசோவ்ஸ்க், கமென்ஸ்கி மாவட்டங்களில் உள்ள ஆயுதகிடங்குகள் சேதம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
பெல்கோரோட் கவர்னர் வியாசெஸ்லாவ் கிளாட்கோவ், ஆயில் டெப்போ பாதிக்கப்பட்டதை உறுதி செய்துள்ளார். ஒரு டேங்க் வெடித்து சிதறியதாகவும், வேகமாக மற்றவற்றை வெளியேற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஓரியல் பிராந்திய கவர்னர், இரண்டு டிரோன்கள் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் மோதி தீ விபத்து ஏற்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.
- கட்டிடத்தில் 13 வது மாடியில் இருந்த அறையின் ஜன்னலில் இருந்து இடறி விழுந்துள்ளார்.
- இந்த விபத்தில் அவருக்கு சிறிய அளவிலான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது.
ரஷியாவின் நோவோசிபிர்ஸ்க் [Novosibirsk] நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றின் 13 வது மாடியில் இருந்து விழுந்த இளம்பெண் அதிசயிக்கத்தக்க வகையில் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார்.
சைபீரியாவைச் சேர்ந்த 22 வயதான அந்த இளம்பெண் கடந்த ஜூலை 18 ஆம் தேதி அந்த கட்டிடத்தில் 13 வது மாடியில் இருந்த அறையின் ஜன்னலில் இருந்து இடறி விழுந்துள்ளார். இளம்பெண் கீழே புல் தரையில் விழுந்த உடனே நிதானித்து எழுந்து நின்ற காட்சிகள் வெளியாகி அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளது.
இந்த விபத்தில் அவருக்கு சிறிய அளவிலான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை. உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். இதற்கிடையில் இந்த வீடியோ இணையத்தில் தற்போது தீயாக பரவி வருகிறது.
- உக்ரைனின் இரண்டு டிரோன்களை ரஷியா இடைமறித்து அழித்தது.
- ரஷியாவின் நான்கு டிரோன்களை உக்ரைன் வான் பாதுகாப்பு சிஸ்டம் இடைமறித்தது.
உக்ரைன்- ரஷியா இடையிலான போர் இரண்டு ஆண்டுகளை தாண்டி நடைபெற்று வருகிறது. தற்போது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
ரஷியா தொடர்ந்து உக்ரைன் எரிசக்தி உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைனும் ரஷியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை ரஷியாவின் தெற்மேற்கில் உள்ள ரோஸ்டவ் மாகாணத்தில் உள்ள பகுதியில் உக்ரைன் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதல் காரணமாக எண்ணெய் கிடங்கு தீப்பற்றி எரிந்தது. சுமார் ஐந்து மணி நேர போராட்டத்திற்குப் பின் தீ அணைக்கப்பட்டுள்ளது. சுமார் 2100 சது அடிக்கு அளவிற்கு தீ பரந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த தீ விபத்தால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
மேலும் இரண்டு டிரோன்கள் பறந்து வந்த நிலையில் ரஷியாவின் வான் பாதுகாப்பு சிஸ்டம் அவற்றை இடைமறித்து அழித்துள்ளது.
அதேவேளையில் ரஷியாவின் ஐந்து டிரோன்களில் நான்கு டிரோன்களை உக்ரைன் வான் பாதுகாப்பு சிஸ்டம் இடைமறித்து அழித்துள்ளது. ஒரு விமானம் பெலாரஸ் திசையில் உக்ரைன் வான்வெளியை விட்டு வெளியேறியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- மாஸ்கோவில் சர்வதேச மணல் சிற்பப் போட்டி நடைபெற்றது.
- இதில் இந்திய மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் தங்கம் வென்றார்.
மாஸ்கோ:
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கடந்த 4-ம் தேதி முதல் இன்று (12-ம் தேதி) வரை மணலில் சிற்பங்கள் உருவாக்குவது தொடர்பான சர்வதேச போட்டி நடத்தப்பட்டது.
சர்வதேச அளவில் இருந்து இந்தப் போட்டியில் பங்கேற்க 21 கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர். அவர்களில் ஒருவர் சுதர்சன் பட்நாயக்.
இந்நிலையில், இந்திய மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் தங்கப்பதக்கம் வென்றார்.
இந்தப் போட்டியில், 14-ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஒடியா கவிஞரான அவரது பக்தரான பலராம் தாஸ் உடன் தேர் மற்றும் ஜெகநாதரை சித்தரிக்கும் 12 அடி சிற்பத்தை வடிவமைத்து இருந்தார். இவரது இந்த சிற்பம் தேர்வு செய்யப்பட்டு சுதர்சன் பட்நாயக்கிற்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. விருது வென்றது குறித்து சுதர்சன் பட்நாயக் கூறியதாவது:
இங்கு நடைபெற்ற சர்வதேச மணல் சிற்ப சாம்பியன்ஷிப் விழாவில் தங்கப் பதக்கத்துடன் கோல்டன் சாண்ட் மாஸ்டர் விருதை வென்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனது மணல் கலை நாட்டிற்கு பெருமை சேர்த்தது பெருமைக்குரியது.
மகாபிரபு ஜெகநாத் மற்றும் மணல் கலையின் நிறுவனர் பலராம் தாஸ் ஆகியோரின் மணல் சிற்பத்தை வெளிநாட்டில் உருவாக்க வேண்டும் என்ற கனவு எனக்கு இருந்தது. பூரியில் உலகப்புகழ் பெற்ற ரதயாத்திரை நடந்து வருகிறது. எனவே, மகாபிரபுவின் ஆசீர்வாதத்துடன் இந்த விழாவில் மகாபிரபு ஜெகநாதரின் மணல் ரதத்தை உருவாக்கி உள்ளேன் என பெருமிதத்துடன் தெரிவித்தார்.
- மாஸ்கோவின் நுக்கோவோ விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து.
- மாநில குற்றப் புலனாய்வு விபத்து குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ரஷிய பயணிகளின் ஜெட் விமானம் ஒன்று மாஸ்கோ அருகே பயணிகள் இல்லாமல் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் இருந்த மூன்று பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
சுகோய் சூப்பர்ஜெட் 100 ரக விமானம் மாஸ்கோ பகுதியில் விழுந்து நொறுங்கியதாக ரஷிய அவசர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விமானம் ரஷிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இயற்கை எரிவாயு நிறுவனமான காஸ்ப்ரோம் நிறுவனத்திற்கு சொந்தமான காஸ்ப்ரோம் ஏவியாவுக்கு சொந்தமானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷிய தலைநகருக்கு தென்கிழக்கே 110 கிலோமீட்டர் (68 மைல்) தொலைவில் உள்ள லுகோவிட்சியில் உள்ள விமானம் தயாரிக்கும் ஆலையில் இருந்து விமானம் புறப்பட்டது. மாஸ்கோவின் நுக்கோவோ விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.
நாட்டின் உயர்மட்ட மாநில குற்றப் புலனாய்வு விபத்து குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ரஷியாவில் தயாரிக்கப்பட்ட சூப்பர்ஜெட் 100, SSJ100 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது, இது 2011 இல் சேவைக்கு வந்தபோது நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு ஒரு பெரிய சாதனையாக ரஷிய அதிகாரிகளால் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது,






