என் மலர்
அமெரிக்கா
- 538 பேரை கைது செய்துள்ளது டொனால்டு டிரம்ப் நிர்வாகம்.
- 100-க்கும் அதிகமானோரை ராணுவ விமானம் மூலம் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப், அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
டொனால்டு டிரம்ப் கடந்த திங்கட்கிழமை (20-ந்தேதி) அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். அதில் இருந்து அதிகாரிகள் சட்ட விரோதமாக குடியேறியவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கரோலின் லீவிட் கூறுகையில் "அமெரிக்க அதிகாரிகள் சட்டவிரோதமாக குடியேறிய குற்றவாளிகள் 538 பேரை கைது செய்துள்ளனர்.
பயங்கரவாதிகள் என சந்தேகப்படும் உள்ளிட்ட 538 சட்டவிரோதமாக குடிபெயர்ந்த குற்றவாளிகளை டிரம்ப் நிர்வாகம் கைது செய்துள்ளது. டிரென் டி அராகுவா குரூப்பை சேர்ந்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் சிறார்களுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுக்காக தண்டிக்கப்பட்டுள்ளனர்.

ராணுவ விமானம் மூலம் சட்ட விரோதமாக குடிபெயர்ந்த குற்றவாளிகளை வெளியேற்றியுள்ளது. வரலாற்றில் மிகப்பெரிய நாடுகடத்தல் நடவடிக்கை சிறப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன" எனத் தெரிவித்தார்.
- பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை அதிபர் டொனால்டு டிரம்ப் ரத்து செய்தார்.
- அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான அதிபரின் உத்தரவை அமல்படுத்த வேண்டாம்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் கடந்த திங்கள்கிழமை பதவியேற்றார். அவர் பதவியேற்றவுடன் பல்வேறு அதிரடி உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
குறிப்பாக அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை அதிபர் டொனால்டு டிரம்ப் ரத்து செய்தார்.
இந்த உத்தரவு பிப்ரவரி 19 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக வாஷிங்டன், அரிசோனா, இலினாயிஸ் மற்றும் ஓரிகான் உள்ளிட்ட 22 ஜனநாயக கட்சி தலைமை வகிக்கும் மாகாண நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்நிலையில் டிரம்பின் உத்தரவுக்கு வாஷிங்டன் நீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பித்துள்ளது.
மேலும் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான அதிபரின் உத்தரவை அமல்படுத்த வேண்டாம் என்றும் அமெரிக்க அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த அதிபர் டிரம்ப் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
- ரவிதேஜா முதுநிலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
- இந்தியர்கள் 3000 பேர் துப்பாக்கி சூட்டில் பலியான ரவி தேஜாவின் குடும்பத்தினருக்கு உதவ முன்வந்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திரமவுலி. இவருடைய மனைவி சுவர்ணா. தம்பதியின் மகன் ரவி தேஜா (வயது 26) மகள் ஸ்ரேயா.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சந்திரமவுலி தனது சொத்துக்களை விற்பனை செய்து மகன், மகளை வெளிநாட்டில் படிக்க வைக்க முடிவு செய்தார்.
அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு தனது வீடு உள்பட சொத்துக்களை விற்பனை செய்து ரவி தேஜா, மகள் ஸ்ரேயா ஆகியோரை அமெரிக்காவிற்கு படிக்க அனுப்பினார்.
ரவி தேஜா முதுநிலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தார். பகுதி நேர வேலையாக அங்குள்ள ஒரு உணவகத்தில் உணவு சப்ளை செய்யும் வேலை செய்தார்.
கடந்த 19-ந் தேதி நியூ ஹேவன் என்ற இடத்தில் உணவு வாகனத்தில் ரவி தேஜா சென்று கொண்டிருந்தார்.
அப்போது நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கி சூட்டில் அவர் குண்டு பாய்ந்து பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் அமெரிக்கா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்த நிலையில் துப்பாக்கி சூட்டில் பலியான ரவி தேஜாவின் சகோதரி ஸ்ரேயா GoFundMe.com என்ற ஆன்லைன் முகவரி மூலம் தனது குடும்பத்திற்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
அதில் எனது சகோதரர் இறந்ததன் மூலம் எங்கள் குடும்பத்தினர் மிகவும் மன உளைச்சலில் தவிக்கிறோம். என்னுடைய தாய் குடும்பத் தலைவியாக உள்ளார். தந்தையால் தற்போது வேலைக்கு செல்ல முடியவில்லை.
எங்களை படிக்க வைப்பதற்காக எங்கள் வீடு உட்பட அனைத்தையும் விற்பனை செய்து விட்டோம். மேலும் என்னுடைய கல்விக்கடன், சகோதரர் இறுதிச்சடங்கு போன்ற செலவுக்காகக்காக நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது.
தயவுசெய்து அன்பு உள்ளம் கொண்டவர்கள் உதவி செய்யுங்கள் என உருக்கமாக அதில் பதிவிட்டிருந்தார்.
இதனை பார்த்து அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் 3000 பேர் துப்பாக்கி சூட்டில் பலியான ரவி தேஜாவின் குடும்பத்தினருக்கு உதவ முன்வந்தனர்.
அவர்கள் இதுவரை 97 ஆயிரம் டாலர் அதாவது ரூ. 83 லட்சத்து 88 ஆயிரத்து 560 வழங்கி உதவி செய்துள்ளனர். ரூ.1.29 கோடி வரை நிதி திரட்ட முடியும் என தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அமெரிக்காவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை அதிபர் டொனால்டு டிரம்ப் ரத்து செய்தார்.
- இந்த உத்தரவு அமெரிக்காவில் பிப்ரவரி 19 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் சமீபத்தில் பதவியேற்றார். அவர் பதவியேற்றவுடன் பல்வேறு அதிரடி உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
குறிப்பாக அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை அதிபர் டொனால்டு டிரம்ப் ரத்து செய்தார். இந்த உத்தரவு பிப்ரவரி 19 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்பின் இந்த உத்தரவுக்கு அமெரிக்காவின் இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக பேசிய அமெரிக்க எம்.பி. பிரமிளா ஜெயபால், "இந்த உத்தரவு அரசியலமைப்புக்கு விரோதமானது. பேனாவைக் கொண்டு இதை மாற்றிவிட முடியாது. ட்ரம்ப் என்ன சொன்னாலும் சரி, பிறப்புரிமை குடியுரிமை நாட்டின் சட்டமாகும். எந்த விலை கொடுத்தேனும் அதைப் பாதுகாக்க நான் போராடுவேன்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பிப்ரவரி 19ம் தேதி வரை அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே 'அமெரிக்க குடியுரிமை' கிடைக்கும் என்பதால் அதற்குள் குழந்தையை (C-SECTION) அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுக்க அமெரிக்க வாழ் இந்திய தம்பதிகள் அவசரம் காட்டி வருகின்றனர்.
- 2500 வீரர்களுடன் இணைந்து எல்லையில் ரோந்து பணிகளில் ஈடுபடுவார்கள்.
- புலம்பெயர்ந்தோரை நாடு கடத்த ஏற்பாடு.
சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்று டிரம்ப் அறிவித்தார்.

இந்த நிலையில் அமெரிக்கா-மெக்சிகோ எல்லைக்கு கூடுதலாக 1000 ராணுவ வீரர்களும், 500 கடற்படையினரையும் அனுப்ப தொடங்கியுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இவர்கள் ஏற்கனவே பணியில் உள்ள 2500 வீரர்களுடன் இணைந்து எல்லையில் ரோந்து உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள்.
மேலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடுத்து வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவதற்கான உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் விமானங்களுக்கு உதவ ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அனுப்பப்படுகின்றன.
- எலான் மஸ்க்-இன் செயல்பாடுகள் பேசு பொருளாகின.
- டிரம்ப்-இன் இரவு விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் பதவியேற்றார். இதையொட்டி, டொனால்டு டிரம்ப் பிரமாண்ட இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தில், உலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். டொனால்டு டிரம்ப் பதவியேற்பு விழாவை ஒட்டி, எலான் மஸ்க்-இன் செயல்பாடுகள் பேசு பொருளாகின.
நாஜி சல்யூட் அடித்தது, தனது மகன் எக்ஸ்-ஐ மேடைக்கு அழைத்து வந்தது என எலான் மஸ்க்-இன் பல்வேறு காரணங்களுக்காக பேசப்பட்டது. இந்த நிலையில், டிரம்ப் கொடுத்த இரவு விருந்தில் எலான் மஸ்க்-இன் ரகசிய காதலி கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எலான் மஸ்க் உடன் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்துள்ள ஷிவோன் சிலிஸ் டிரம்ப்-இன் இரவு விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.
ஷிவோன் மற்றும் எலான் இடையிலான உறவு பற்றி தெளிவான தகவல்கள் மர்மமாகவே உள்ளன. எனினும், அவர் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார். சமீபத்திய இரவு விருந்தில் கலந்து கொண்ட ஷிவோன் எலிஸ் டெஸ்லா தலைமை செயல் அதிகாரியுடன் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
எலான் மஸ்க் மட்டுமின்றி இரவு விருந்தில் கலந்து கொண்ட ஜெஃப் பெசோஸ் மற்றும் அவர் திருமணம் செய்து கொள்ள இருக்கும் லாரென் சான்செஸ், இவாங்கா டிரம்ப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோருடனும் ஷிவோன் எலிஸ் உரையாடினார். இத்தனை பெரும் நிகழ்வில் ஷிவோன் எலிஸ் பொதுப்படையாக கலந்து கொள்வது இதுவே முதல் முறை ஆகும்.
முன்னதாக கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற பிளாக்-டை நிகழ்வில் ஷிவோன் கலந்து கொண்டார். எனினும், அவர் பொது வெளியில் தோன்றுவதை தவிர்த்தார். இவரது மகள் அஸ்யூர் எலான் மஸ்க் உடன் நிகழ்வில் தோன்றினார்.
- சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- நமது நாட்டில் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் உள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் சமீபத்தில் பதவி யேற்றார். அவர் பதவியேற்றவுடன் பல்வேறு அதிரடி உத்தரவுகளில் கையெழுத்திட்டார். குறிப்பாக சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் டிரம்ப் தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை தீவிரவாதிகள் என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
அவர் கூறும்போது, `நமது நாட்டில் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் உள்ளனர். இந்த பிரச்சினையை நாங்கள் கவனித்துக் கொள்வோம்' என்றார்.
மேலும் டிரம்ப் கூறும் போது, `ஜனநாயகக் கட்சியினரால் ஆட்சி செய்ய முடியாது என்பதையும், அவர்களின் கொள்கைகள் பயங்கரமானவை என்பதையும் மக்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.
குத்துச்சண்டை வளையத்தில் ஒரு பெண் ஒரு ஆணால் தாக்கப்படுவதை அவர்கள் பார்க்க விரும்பவில்லை. ஒரு குழந்தை ஒரு பையனாக வீட்டை விட்டு வெளியேறி 2 நாட்களுக்குப் பிறகு ஒரு பெண்ணாக திரும்பி வருவதை அவர்கள் விரும்பவில்லை. ஆனால் அது நடக்கக்கூடிய மாகாணங்களும் உள்ளன.
முன்னாள் அதிபர் ஜோ பைடன் பலருக்கும் பொது மன்னிப்பு வழங்கினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தனக்குதானே மன்னிப்பு வழங்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளோரிடா, லூசியானா மாகணங்கள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
- சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து பொதுசேவை குறைக்கப்பட்டது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் மேற்கு கரையோரத்தில் அமைந்துள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இந்த மாதம் தொடக்கம் முதல் காட்டுத்தீ பரவியது. கடுமையான காற்றுவீச்சு காரணமாக கடந்த 2 வாரங்களுக்கு மேலாக தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.
அமெரிக்காவின் தெற்கு மாகணங்களான புளோரிடா, மிசிசிப்பி, லூசியானா உள்ளிட்டவற்றில் புத்தாண்டு தொடங்கி கடுமையாக பனி பொழிந்து வருகிறது. இயற்கை அன்னையின் இந்த முரண்பாடான தாக்குதலில் இருந்து மீள முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது. இந்தநிலையில் புளோரிடா மாகாணத்தில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத அளவில் கடும் பனிப்பயுல் வீசி வருகிறது.
மைனஸ் 20 டிகிரி வானிலையுடன் கடுமையான பனிப்புயல் காரணமாக அங்குள்ள முக்கிய நகரங்களை வெள்ளை பனி மூடியது. குறிப்பாக புளோரிடாவில் உள்ள மில்டன் நகரம் துருவ கண்டம்போல காட்சியளிக்கும் வகையில் பனிபொழிந்து வருகிறது. அங்கு 23 செ.மீட்டர் அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு கொண்டது என அந்த நாட்டின் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் புளோரிடா, மிசிசிப்பி, லூசியானா உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள நகரங்களில் 20 செ.மீட்டருக்கும் அதிகமாக பனிப்பொழிவு பதிவாகி உள்ளதாக அந்த நாட்டின் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புளோரிடா, லூசியானா மாகணங்கள் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
இதனால் அந்த நாட்டின் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன, சாலை மற்றும் ரெயில் போக்குவரத்து பொதுசேவை குறைக்கப்பட்டது. ஹவுஸ்டன், கூல்ப்போர்ட், டல்லாயாசி, மொபில் உள்ளிட்ட நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டன.
இதனால் 2 ஆயிரம் விமானங்கள் ரத்தாகின. அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 10 பேர் பலியாகினர். 3 கோடி மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.
- கடந்த 2021-ம் ஆண்டு ஜோ பைடன் பதவி ஏற்பு நிகழ்ச்சியை 3 கோடியே 38 லட்சம் பேர் நேரலையில் பார்த்துள்ளனர்.
- டிரம்ப் பதவி ஏற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டிரம்ப் கடந்த 20-ந்தேதி பதவி ஏற்றார். வழக்கமாக ஜனாதிபதி பதவி ஏற்பு விழா என்பது வாஷிங்டன் நகரில் உள்ள கேபிடல் எனப்படும் பாராளுமன்ற கட்டிட வளாகத்தில் நடைபெறும். இதில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டு பார்வையிடலாம்.
ஆனால் இந்த முறை கடும் பனிப்பொழிவு காரணமாக, ஜனாதிபதி பதவி ஏற்பு விழா பாராளுமன்ற கட்டிட உள்ளரங்கில் நடைபெற்றது. இந்த விழாவை நேரலையில் பார்க்குமாறு டிரம்ப் கூறியிருந்தார்.
அதன்படி பதவியேற்பு நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இதனை அமெரிக்காவில் 2 கோடியே 46 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இது மிகவும் குறைந்த எண்ணிக்கை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஜோ பைடன் பதவி ஏற்பு நிகழ்ச்சியை 3 கோடியே 38 லட்சம் பேர் நேரலையில் பார்த்துள்ளனர் என்றும், 2017-ம் ஆண்டு டிரம்ப் முதன் முறையாக ஜனாதிபதியாக பதவி ஏற்ற நிகழ்ச்சியை 3 கோடியே 6 லட்சம் பேர் நேரலையில் பார்த்துள்ளனர் என்றும் நீல்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம் பிற முக்கிய தொலைக்காட்சி நிறுவனங்களில் இந்த எண்ணிக்கையில் மாறுபாடு உள்ளது.
இது ஒருபுறம் இருக்க டிரம்ப் பதவி ஏற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதில், போதைப்பொருள் விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட, ரகசிய வலைத்தளமான சில்க் ரோட்டின் நிறுவனர் ரோஸ் உல்ப்ரிசட்டுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இது தொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், ரோஸுக்கு முழுமையான மற்றும் நிபந்தனையற்ற மன்னிப்பு வழங்குவதில் கையெழுத்திட்டதில் நான் மகிழ்ச்சியடைந்தேன் என்று ரோசின் தாயாரிடம் கூறினேன். அவரை குற்றவாளியாக்க வேலை செய்தவர்கள், எனக்கு எதிராக வேலை செய்தவர்கள்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் அனைத்து கூட்டாட்சி பன்முகத்தன்மை, சமபங்கு மற்றும் உள்ளடக்க ஊழியர்களை சம்பளத்துடன் கூடிய விடுப்பில் அனுப்பவும், அவர்களை பணி நீக்கம் செய்வதற்கான திட்டங்களை உருவாக்கவும் டிரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் அமெரிக்காவில் ஆரக்கிள், சாப்ட் பேங்க் மற்றும் ஓபன் ஏ.ஐ. ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்படும் ஒரு புதிய நிறுவனத்தின் மூலம் செயற்கை தொழில் நுட்ப உள்கட்டமைப்பில் 50 ஆயிரம் கோடி டாலர் முதலீடு செய்யப்படும் என்று டிரம்ப் அறிவித்தார். இதன் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் கூறினார்.
டிரம்ப் பதவியேற்ற சில மணி நேரத்தில், வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் ஸ்பானிஷ் மொழிப் பதிப்பு நீக்கப்பட்டது.
இதுபற்றி வெள்ளை மாளிகையின் முதன்மை துணை செய்தி தொடர்பாளர் ஹாரிசன் பீல்ட்ஸ் கூறுகையில், வலைதளத்தின் ஸ்பானிஷ் மொழிபெயர்ப்புப் பகுதியை மீண்டும் ஆன்லைனில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். சில மாற்றங்களுக்கு பின்னர் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறினார். கடந்த 2017-ம் ஆண்டும் இதேபோல் ஸ்பானிஷ் பதிப்பை டிரம்ப் நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தற்போது மீண்டும் காட்டுத்தீ பரவி வருகிறது.
- பலத்த காற்று காட்டுத்தீயின் தீவிரத்தை அதிகப்படுத்தியது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளனர். இதே பகுதியில் சமீபத்தில் தான் இரண்டு மிகப்பெரிய காட்டுத்தீ சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், தற்போது மீண்டும் காட்டுத்தீ பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஸ்டாயிக் ஏரியின் அருகில் உள்ள மலைப்பகுதியில் வேகமாக பரவிய காட்டுத்தீ கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குள் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டது. பலத்த காற்று காட்டுத்தீயின் தீவிரத்தை அதிகப்படுத்த, அந்தப் பகுதி முழுக்க புகை சூழ்ந்து காணப்பட்டது. மேலும், தீ அதிக இடங்களுக்கு பரவும் என்று தெரிகிறது.
புதிதாக பரவி வரும் காட்டுத்தீ காரணமாக சாண்டா கிளாரிட்டா அருகில் அமைந்துள்ள ஏரியை சுற்றி வசிக்கும் 31 ஆயிரம் பேரை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹியூஸ் தீ என்று அழைக்கப்படும் புதிய தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் துறையைச் சேர்ந்த ராபர்ட் ஜென்சன் வலியுறுத்தினார்.
ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் சம்பவ இடத்தில் தண்ணீர் மற்றும் தீயை தடுக்கும் மருந்துகளை தீயில் ஊற்றிக்கொண்டிருந்தன. லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி தீயணைப்புத் துறை மற்றும் ஏஞ்சல்ஸ் தேசிய வனப்பகுதியைச் சேர்ந்த குழுவினரும் தரையில் இருந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- எலான் மஸ்க் மற்றும் இந்திய-அமெரிக்க தொழிலதிபரும் அரசியல்வாதியுமான விவேக் ராமசாமி நியமிக்கப்பட்டனர்.
- விவேக் ராமசாமிக்கும் மஸ்க் மற்றும் டிரம்ப் கட்சியினருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த திங்கள் கிழமை பதவியேற்றுக்கொண்டார். டிரம்ப் பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே அவர் உருவாக்கிய DODGE துறையின் இணை தலைவராக நியமிக்கப்பட்ட விவேக் ராமசாமி (39 வயது) பதவி விலகுவதாக அறிவித்தார்.
அரசின் செயல்திறனை மேம்படுத்தும் முகமை DODGE. புதிதாக உருவான இந்த துறையின் தலைவர்களாக உலக பணக்காரருக்கு டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்டவற்றின் நிறுவனருமான எலான் மஸ்க் மற்றும் இந்திய-அமெரிக்க தொழிலதிபரும் அரசியல்வாதியுமான விவேக் ராமசாமி நியமிக்கப்பட்டனர்.
ஆனால் எக்ஸ் பக்கத்தில் தனது பதவி விலகலை அறிவித்த விவேக் ராமசாமி, 'எனக்கு கிடைத்த மரியாதை. அரசாங்கத்தை சீரமைப்பதில் எலான் மஸ்க் & குழு வெற்றிபெறும் என்று நான் நம்புகிறேன்' என்று கூறியிருந்தார்.
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஓஹியோ மாகாண கவர்னர் பதவிக்கு அவர் போட்டியிட உள்ளார் என்றும் அதனால் பதவி விலகினார் என்றும் முதலில் கூறப்பட்டது.
ஆனால் DODGE இன் மற்றொரு தலைவர் எலான் மஸ்க், விவேக் ராமசாமியை அந்த பதவியை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளார் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிய வழங்கப்படும் எச்-1பி விசா பின்னணியில் விவேக் ராமசாமிக்கும் மஸ்க் மற்றும் டிரம்ப் கட்சியினருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
கடந்த டிசம்பரில் தனது எக்ஸ் பதிவில், அமெரிக்க கலாச்சாரம் சிறப்பானவற்றை விட, அற்பமானவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதால், தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து [H-1B விசா மூலம்] ஆட்களை வேலைக்கு எடுப்பதாக தெரிவித்திருந்தார்.
இது டிரம்பின் குடியரசு கட்சி பெரும்புள்ளிகளிடையேயும், எலான் மஸ்க் தரப்பிலும் புகைச்சலை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதையே காரணம் காட்டி டிரம்பிடம் கூறி விவேக் ராமசாமியை எலான் மஸ்க் வெளியேற செய்துள்ளார் என்று அமெரிக்காவின் பிரபல பொலிட்டிக்கோ [politico] இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, நாட்டிற்குள் வரும் மிகவும் திறமையான மக்களை நான் விரும்புகிறேன். இதனால் எச்-1பி விசாவை நிறுத்த விரும்பவில்லை என்று டிரம்ப் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள 18,000 இந்தியர்களை டிரம்ப் நிர்வாகம் அடையாளம் கண்டுள்ளது
- அமெரிக்காவின் தெற்கு எல்லையில் டிரம்ப், தேசிய அவசரநிலையை அறிவித்தார்.
அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக கடந்த திங்கள்கிழமை பதவியேற்றார். அவரது கடந்த 2016-20 ஆட்சிக் காலத்தை போலவே தற்போதும் அதிரடி முடிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் சட்டவிரோத குடியேற்றங்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை கொண்ட டிரம்ப் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற அச்சம் புலம்பெயர்ந்து அங்கு குடியேறியுள்ள பல நாட்டவரை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களையும் கண்டறிந்து திருப்பி பெறுவதாக இந்திய அரசு டொனால்டு டிரம்பின் நிர்வாகத்துடன் புரிந்துணர்வு மேற்கொண்டுள்ளது என புளூம்பெர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற புளூம்பெர்க் செய்தி மற்றும் ஆய்வு நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள 18,000 இந்தியர்களை டிரம்ப் நிர்வாகம் அடையாளம் கண்டுள்ளது என்றும் நாடு கடத்தப்பட உள்ள அவர்களை இந்திய அரசு சரிபார்த்து திரும்பப்பெறும் என்று கூறப்படுகிறது.
திங்களன்று தனது பதவியேற்பின்போது, அமெரிக்காவின் தெற்கு எல்லையில் டிரம்ப், தேசிய அவசரநிலையை அறிவித்தார்.

நாட்டிற்குள் நிகழும் அனைத்து சட்டவிரோத நுழைவுகளும் உடனடியாக நிறுத்தப்படும் என்றும், தனது நிர்வாகம் மில்லியன் கணக்கான குற்றப்பின்னணி கொண்ட வெளிநாட்டினரை அவர்கள் வந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பத் தொடங்கும் என்றும் டிரம்ப் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.






