என் மலர்
அமெரிக்கா
- இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து ஆயுதங்களை வழங்கி உள்ளது.
- இஸ்ரேலுக்காக பாதுகாப்பு உதவிக்கு அமெரிக்க ராணுவம் எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை.
வாஷிங்டன்:
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் மூண்டுள்ளது. இதில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து ஆயுதங்களை வழங்கி உள்ளது. மேலும் அமெரிக்காவின் போர் கப்பல் இஸ்ரேலுக்கு சென்றது. நேற்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆன்டனி பிளிங்கன் இஸ்ரேலுக்கு சென்றார். அவர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசினார். இந்த நிலையில் அமெரிக்க ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் இன்று இஸ்ரேலுக்கு செல்ல உள்ளார். அவர், இஸ்ரேல் பிரதமர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
இது தொடர்பாக அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின், இஸ்ரேல் தலைவர்களுடன் அவர்களின் செயல்பாட்டு திட்டம், இந்த மோதலுக்கான அவர்களின் நோக்கங்கள் குறித்து பேசுவார். இஸ்ரேலின் பாதுகாப்பு உதவி, தேவைகள் குறித்து விவாதிப்பார் என்றார்.
முன்னதாக லாயிட் ஆஸ்டின் கூறும் போது, இஸ்ரேலுக்காக பாதுகாப்பு உதவிக்கு அமெரிக்க ராணுவம் எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. ஹமாசுக்கு எதிரான போரை தொடர இஸ்ரேல் ராணுவம் சரியான முறையில் செயல்படும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது என்றார்.
- கிரீன் கார்டுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு அமெரிக்காவில் தங்கி பணிபுரிய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
- கிரீன் கார்டு விண்ணப்பம் நிலுவையில் இருக்கும்போது விண்ணப்பதாரர்கள் வேலை வாய்ப்பு அங்கீகார ஆவணத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை (கிரீன் கார்டு) பெற இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாட்டினர் விண்ணப்பித்துள்ளனர். கிரீன் கார்டை பெற லட்சக்கணக்கானோர் காத்து இருக்கிறார்கள். கிரீன் கார்டுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு அமெரிக்காவில் தங்கி பணிபுரிய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிரீன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு பணி அனுமதி செல்லுபடியாகும் காலம் 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு அங்கீகார ஆவணங்களின் அதிகபட்சம் செல்லுபடியாகும் காலத்தை 5 ஆண்டுகள் நீட்டிப்பதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடி வரவு சேவைகள் துறை அறிவித்துள்ளது. கிரீன் கார்டு விண்ணப்பம் நிலுவையில் இருக்கும்போது விண்ணப்பதாரர்கள் வேலை வாய்ப்பு அங்கீகார ஆவணத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அமெரிக்காவில் தொடர்ந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்.
கடந்த மாதம் 22-ந் தேதி அல்லது அதற்கு பிறகு நிலுவையில் உள்ள அல்லது தாக்கல் செய்யப்பட்ட தகுதியான வேலை வாய்ப்பு அங்கீகார ஆவண விண்ணப்பங்களுக்கு இந்த புதிய கொள்கை பொருத்தும்.
இது அமெரிக்காவில் எச்.1பி.விசாவில் பணிபுரியும் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினருக்கும் பயன் அளிக்கும்.
- திடீரென ஹமாஸ் நடத்திய இந்த பயங்கரவாத தாக்குதல் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது
- எந்தவித குழப்பங்களுக்கும் இடம் தராமல் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்றார் ஹாரிஸ்
கடந்த சனிக்கிழமையன்று பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மீது ஒரு எதிர்பாராத தாக்குதலை நடத்தியது.
வான்வழியாக 5000 ராக்கெட்டுகளை ஒரே நேரத்தில் வீசியும், தரை வழியாகவும், நீர் வழியாகவும் தாக்குதல் நடத்தி அந்நாட்டிற்குள்ளே ஹமாஸ் ஊடுருவியது. இத்தாக்குதலில் பல இஸ்ரேலியர்கள் பலியானார்கள்; பல இஸ்ரேலியர்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளால் பிணையக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவர் மீதும் நடந்த இந்த தாக்குதல் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதில் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை முற்றிலும் ஒழிக்க போவதாக கூறி, பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் அவர்களை தேடித்தேடி வேட்டையாடி வருகிறது.
இப்போர் 6-வது நாளாக இன்றும் தொடர்கிறது.
இந்நிலையில், அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இது குறித்து பேசிய அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்ததாவது:
எந்தவித குழப்பங்களுக்கும் இடம் தராமல் பயங்கரவாத செயல்களை கண்டிக்க வேண்டும். இது போன்ற பயங்கரவாத செயல்களை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இஸ்ரேலில் நடந்த தாக்குதல்களால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளேன். இஸ்ரேலை ஆதரித்துள்ள அமெரிக்காவின் நிலைப்பாடு மிகவும் உறுதியானது. தன்னை காத்து கொள்ள இஸ்ரேலுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்க நாங்கள் உறுதியுடன் உள்ளோம். அங்குள்ள அமெரிக்கர்களின் பாதுகாப்பே இப்போது மிகவும் முக்கியம். நானும் அதிபர் ஜோ பைடனும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் தொடர்பில் உள்ளோம். இஸ்ரேலிய மக்களுக்கு நாங்கள் உறுதுணையாக உள்ளோம் என்பதை தெரிவித்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹமாஸ் தாக்குதலில் இருபதிற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- டிராவிஸிற்கு சுமார் ரூ.25 லட்சம் ($30,000) பரிசு தொகையாக கிடைத்தது
- 687 'பை' உணவு வகைகளை தயாரிக்கலாம் என்கின்றனர் சமையல் நிபுணர்கள்
அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் ஹாஃப் மூன் பே (Half Moon Bay) பகுதியில் விவசாயிகளுக்கு ஒரு வித்தியாசமான போட்டி நடைபெற்றது. தங்கள் விவசாய நிலங்களில் மிக பெரிய பூசணிக்காய் வளர்ப்பதில் நடைபெற்ற அந்த போட்டியில் பல விவசாயிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நீண்ட காலமாக நடைபெற்று வரும் இப்போட்டியில் இது 50-வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் மின்னசோட்டா (Minnesota) மாநிலத்தை சேர்ந்த 43 வயதான தோட்டக்கலை வல்லுனரும், பயிற்சியாளருமான டிராவிஸ் கிரெய்கர் (Travis Greiger) என்பவரும் கலந்து கொண்டார்.
இவர் வளர்த்த பூசணிக்காய் மிக பெரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, இவர் முதல் பரிசை வென்றவராக அறிவிக்கப்பட்டார். டிராவிஸிற்கு சுமார் ரூ.25 லட்சம் ($30,000) பரிசு தொகையாக கிடைத்தது.
அவர் தோட்டத்தில் விளைந்த 1,247 கிலோகிராம் எடையுள்ள பூசணிக்காயை பலரும் கண்டு வியந்தனர். டிராவிஸ் 30 வருடங்களுக்கும் மேலாக பூசணிக்காய் வளர்ப்பு உள்ளிட்ட விவசாயத்தில் பெரும் ஆர்வலராக செயல்பட்டு வருபவர்.
டிராவிஸ் வளர்த்த பூசணிக்காயை கொண்டு அமெரிக்கர்கள் விரும்பி உண்ணும் 'பை' (pie) எனும் உணவு வகைகளை சுமார் 687 எண்ணிக்கைகள் வரை தயாரிக்க முடியும் என்கின்றனர் சமையல் நிபுணர்கள்.
இப்போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்தவர் வளர்த்த பூசணிக்காய் டிராவிஸ் வளர்த்ததை விட 113 கிலோகிராம்கள் எடை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரேலுக்கு துணை நிற்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
- ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 22 அமெரிக்கர்கள் உயிரிழந்தனர்
வாஷிங்டன்:
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய 5-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேலுக்கு துணை நிற்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 22 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 22 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 17 பேர் மாயமாகினர். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதை நாம் அறிவோம். அமெரிக்கர்களில் பலரை ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர் என தெரிவித்தார்.
மேலும், அமெரிக்கர்கள் இஸ்ரேல் செல்வதற்கான பயணத்தை மறு மதிப்பீடு செய்யும்படியும், காசா நகருக்குச் செல்வதை தவிர்க்கும் படியும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது.
- லோமா லிண்டா (Loma Linda) பல்கலைக்கழக மருத்துவமனையில் பிரையன்னா சேர்க்கப்பட்டார்
- டாக்டர். ஆரோன் ராபிஸன் தலைமையில் 10 மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றது
அமெரிக்காவில் வசித்து வரும் கிறிஸ்டல் பாட்லி எனும் பெண்ணின் மகள், 6 வயதான பிரையன்னா பாட்லி (Brianna Bodley).
விளையாட்டு, கல்வி என உற்சாகமாக இருந்த பிரையன்னாவிற்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. இதனால் அச்சிறுமியின் கல்வி தடைபட ஆரம்பித்தது. மேலும் அவருக்கு பக்கவாதமும் ஏற்பட்டது. நடக்க முடியாத வகையில் அவள் கால்கள் மடங்கி கொள்ளும்.
கலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா (Loma Linda) பல்கலைக்கழக மருத்துவமனையில் அச்சிறுமி அனுமதிக்கப்பட்டாள். அவளுக்கு "ராஸ்முஸ்ஸென்'ஸ் என்சஃபலைட்டிஸ்" (Rasmussen's Encephalitis) எனும் அரிய வகை மூளை அழற்சி நோய் இருப்பது கண்டுபிடிக்கப்படடது. இதனால் அவள் மூளையின் ஒரு பாகம் சுருங்கியிருப்பதும் தெரிய வந்தது. அவளுக்கு வலிப்பு நோய்க்கு எதிரான மருந்துகளும் ஸ்டீராய்டு மருந்துகளும் கொடுக்கப்பட்டது. ஆனாலும் அவள் நிலை சீரடையவில்லை. கடந்த ஜனவரி மாதம் அவள் நிலைமை மோசமடைய தொடங்கியது.
அரியவகை நோயான இதற்கு சிகிச்சையாக ஒரு பக்க மூளையின் செயலாக்கத்தை நிறுத்துவதுதான் நிரந்தர தீர்வு என மருத்துவர்கள் கண்டறிந்தனர். அந்த மருத்துவமனையின் டாக்டர். ஆரோன் ராபிஸன் தலைமையில் 10 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையில் பல துறை மருத்துவர்களும் பங்கேற்றனர்.
வெற்றிகரமாக நடைபெற்ற இந்த சிகிச்சைக்கு பிறகு அச்சிறுமி தற்போது நலமாக தேறி வருகிறார்.
பல வருடங்களுக்கு முன், இதே நோய்க்கு அழற்சி ஏற்பட்ட மூளையின் ஒரு பகுதியையே நீக்குவது மட்டும்தான் சிகிச்சை முறையாக இருந்து வந்தது. தற்போது மருத்துவர்களின் திறமையாலும் மருத்துவ தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியாலும் மூளையின் ஒரு பக்க செயலாக்கத்தை மட்டும் நிறுத்த முடிவதால் இது ஒரு வியக்கத்தக்க முன்னேற்றமாக மருத்துவ உலகில் பார்க்கப்படுகிறது.
- டோரத்தியின் கடைசி டைவ் அவரது 'உற்சாகமான, நன்கு வாழ்ந்த வாழ்க்கையை' பிரதிபலித்துள்ளது.
- டோரத்தி தூங்கிக் கொண்டிருந்தபோது இறந்துள்ளார்.
அமெரிக்காவில் 104 வயது மூதாட்டி டோரத்தி ஹர்ஃப்னர் என்பவர் கடந்த 1ம் தேதி ஸ்கை டைவிங் செய்து உலக சாதனை படைத்தார். இல்லினாய்ஸின் ஒட்டாவாவில் உள்ள ஸ்கை டைவ் சிகாகோவில் ஒரு விமானத்தில் இருந்து 13,500 அடி உயரத்திலிருந்து டோரத்தி குதித்து சாதனை படைத்தார். இதனையடுத்து, அவர் உலகின் மிகவும் மூத்த ஸ்கை டைவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார்.
இந்நிலையில், கின்னஸ் சாதனை படைத்து ஒரு வாரம் மட்டுமே ஆன நிலையில், மூதாட்டி டோரத்தி உயிரிழந்துள்ளார். டோரத்தி, ப்ரூக்டேல் லேக் வியூ மூத்த வாழ்க்கை சமூகத்தில் அவரது படுக்கையிலே இறந்து கிடந்தார் என்று அவரது நண்பர் ஜோ கானன்ட் கூறினார். அவர் ஞாயிற்றுக்கிழமை இரவே இறந்து இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து, ஸ்கைடைவ் சிகாகோ மற்றும் யுஎஸ் பாராசூட் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர், டோரத்தியின் கடைசி டைவ் அவரது 'உற்சாகமான, நன்கு வாழ்ந்த வாழ்க்கையை' பிரதிபலித்துள்ளது. ஸ்கை டைவிங் என்பது நம்மில் பலர் பாதுகாப்பாக நடத்தப்படும் ஒரு செயலாகும். ஆனால், வாழ்நாளின் சிலிர்ப்பைப் பெற இது ஒருபோதும் தாமதமாகாது என்று டோரத்தி நமக்கு நினைவூட்டுகிறார்" என்றார்.
டோரத்தி தூங்கிக் கொண்டிருந்தபோது இறந்துள்ளார். இருப்பினும், அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
- பிக் பாப்'ஸ் அங்காடியில் மதுபானம் விற்பனையாகிறது
- கரன் விசாரிக்க தொடங்கியதும் அந்த இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலிருந்து சுமார் 30 கிலொமீட்டர் தொலைவில் உள்ளது மேற்கு கொவினா (West Covina) பகுதி.
இதன் மேற்கு ப்யுன்டே நிழற்சாலையில் (West Puente Avenue) "பிக் பாப்'ஸ் லிக்கர்ஸ் அண்ட் மார்கெட்" எனும் பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு பலவிதமான மக்களுக்கு தேவையான பொருட்களுடன் பல மதுபானங்களும் விற்பனையாகிறது.
இங்கு இரு தினங்களுக்கு முன் மாலை 09:00 மணியளவில் 25 வயதிற்கு உட்பட்ட 2 ஆண்கள் பொருட்களை வாங்குவது போல் உள்ளே நுழைந்தனர். உள்ளே நுழைந்த அவர்கள், அங்குள்ள பொருட்களை பிறர் கவனிக்காத வகையில் திருட தொடங்கினர்.
அங்கு மேற்பார்வையில் இருந்த கரன் சிங் (Karan Singh) எனும் 34 வயதான இந்தியர், இவர்களின் நடவடிக்கையை கண்காணிக்க தொடங்கினார். அவர்கள் திருடுவதை உறுதி செய்து கொண்ட கரன், அவர்களை இடைமறித்து விசாரிக்க தொடங்கினார். அப்போது அவர்களுக்குள் நடந்த வாக்குவாதம் மோதலாக மாறியது.
இதில் அந்த இருவரும் கரனை திடீரென துப்பாக்கியால் சுட்டனர். சுட்டதும் அந்த இருவரும் ஒரு காரில் தப்பி சென்றனர்.
அதிர்ச்சியடைந்த அந்த அங்காடியில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களும் அந்நாட்டு அவசர உதவி எண்ணான 911-ஐ அழைத்தனர். விரைந்து வந்த சேவை பணியாளர்கள் கரனை உடனே மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த அங்காடியின் உரிமையாளரின் உறவினரான கரன், கடந்த ஒரு வருடம் முன்பு அமெரிக்கா வந்தவர். இவருக்கு திருமணமாகி மனைவியும் 12 வயது மகனும் இந்தியாவில் உள்ளனர். மனைவியையும் மகனையும் அமெரிக்காவிற்கு அழைத்து வர பணம் சேமிக்க கரன் தீவிரமாக முயன்று வந்தார்.
கரனை கொன்றவர்களை பிடிக்க மேற்கு கொவினா காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
- சீன தூதரகத்துக்குள் காருடன் புகுந்த நபர் யார்? இது தாக்குதலா? விபத்தா? என்பது குறித்து போலீசார் தெரிவிக்கவில்லை.
- சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் வெளியுறவுத்துறை புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சான்பிரான்சிஸ்கோ:
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் சீன துணை தூதரகம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் சீன தூதரகத்தின் நுழைவாயிலில் வாலிபர் ஒருவர் காரில் வேகமாக மோதினார்.
இதில் அந்த கார், சீன தூதரகத்தின் நுழைவாயிலை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். சீன தூதரகத்துக்குள் சென்று காருடன் மோதிய நபரை பிடிக்க முயன்றனர்.
அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் அந்த நபர் காயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சீன தூதரகத்துக்குள் காருடன் புகுந்த நபர் யார்? இது தாக்குதலா? விபத்தா? என்பது குறித்து போலீசார் தெரிவிக்கவில்லை. இது குறித்து போலீஸ் செய்தி தொடர்பாளர் கேத்ரின் விண்டர்ஸ் கூறும்போது, "சீன தூதரக விசா அலுவலகத்துக்குள் காருடன் மோதிய நபரின் அடையாளம் இன்னும் தெரியவில்லை. அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்த போது, தூதரக நுழைவாயிலில் கார் ஒன்று மோதி இருந்தது. அங்கு சந்தேக நபருடன் தொடர்பு கொள்ள முயன்ற போது துப்பாக்கி சூடு நடந்தது என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் வெளியுறவுத்துறை புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக சீன தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காரில் தூதரகத்தின் ஆவண மண்டபத்திற்குள் நுழைந்தார். இது அங்கிருந்த ஊழியர்கள், மக்களின் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியது என்று தெரிவித்தது.
- சுமார் 1000 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்டனர்
- இரு பிரிவினருக்கும் உலகெங்கிலும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தருகின்றன
கடந்த சனிக்கிழமை காலை பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மீது பெரும் தாக்குதல் நடத்தியது.
சுமார் 1000 இஸ்ரேலிய உயிர்களை பலி வாங்கிய இந்த தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேல், ஹமாஸ் மீது பதிலடி தாக்குதலை உடனடியாக துவங்கியது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன. ஈரான், கத்தார் உள்ளிட்ட பல நாடுகள் ஹமாஸ் அமைப்பை ஆதரிக்கின்றன.
போராடும் இரு பிரிவினருக்கும் உலகெங்கிலும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவின் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைகழகத்தை சேர்ந்த 34 மாணவ அமைப்புகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து அறிக்கை வெளியிட்டன. "பல வருடங்களாக இஸ்ரேல் கடைபிடிக்கும் நிறவெறி கொள்கையே தற்போதைய போருக்கு காரணம்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் முன்னாள் ஹார்வர்டு மாணவர்களாக இருந்து தற்போது அமெரிக்க அரசியலில் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் பலர், இந்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ள பிரதிநிதிகளின் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை வலியுறுத்தியுள்ளனர்.
ஹார்வர்டு பல்கலைக்கழக தலைமை பொறுப்பில் உள்ள க்ளாடின் கே (Claudine Gay) மற்றும் டீன் பொறுப்பில் உள்ள 15 பேருக்கும் மேற்பட்டவர்கள், நேற்று வெளியிட்ட அறிக்கையில், "ஹமாஸ் தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகளை கேட்டு எங்கள் இதயம் நொறுங்குகிறது" என தெரிவித்திருந்தனர். ஆனால், மாணவர் அமைப்பின் குற்றச்சாட்டு குறித்து எந்த வாக்கியமும் அதில் இடம் பெறாதது விமர்சனங்களுக்கு வழி வகுத்துள்ளது.
- பிலடெல்பியாவின் ரீடிங் பகுதியில் பிக்பாக்கெட் செய்து பிடிப்பட்ட நபர் 1895-ம் ஆண்டு சிறையில் சிறுநீரக செயலிழப்பால் இறந்தார்.
- உடல் 128 ஆண்டுகளாக ரீடிங் பகுதியில் உள்ள ஆமன் தேவாலயத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் பென்சில் வெனியா மாகாணத்தில் எம்பாமிங் செய்து பதப்படுத்தி பாதுகாக்கப்பட்டு வந்த உடல் சுமார் 128 ஆண்டுகளுக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
பிலடெல்பியாவின் ரீடிங் பகுதியில் பிக்பாக்கெட் செய்து பிடிப்பட்ட நபர் 1895-ம் ஆண்டு சிறையில் சிறுநீரக செயலிழப்பால் இறந்தார்.
அந்த நபர் சிறையில் அடைக்கப்பட்ட போது தனது உண்மையான பெயரை கூறாமல் ஜேம்ஸ் மர்பி என்று பதிவு செய்திருந்தார். அவரது உடலை யாரும் வாங்கி செல்ல வரவில்லை.
இதையடுத்து அவரது உடலை உரியவர்கள் பெற்று கொள்ளும் வரை எம்பாமிங் நுட்பங்களை பயன்படுத்தி மம்மியாக மாற்றினர். அந்த உடலை பதப்படுத்தி பாதுகாத்து வந்தனர்.
அவருக்கு ஸ்டோன்மேன் வில்லி என்று பெயரிடப்பட்டது. அவரது உடல் 128 ஆண்டுகளாக ரீடிங் பகுதியில் உள்ள ஆமன் தேவாலயத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து வந்தனர்.
இந்தநிலையில் கைதியின் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன் படி ஸ்டோன்மேன் வில்லி உடல் அங்குள்ள பாரெஸ்ட் ஹில்ஸ் மெமோரியல் பூங்காவில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக ஸ்டோன்மேன் வில்லி, ஐரிஷ் வம்சாவளியை சேர்ந்தவர் என்றும், அவர் நியூயார்க்கில் வசித்ததும், மதுவுக்கு அடிமையானவர் என்பதையும் கண்டு பிடித்தனர்.
அவரது தந்தை ஒரு பணக்கார தொழில் அதிபர் ஆவார். தான் திருட்டு வழக்கில் சிக்கியதால் தந்தை பெயரை கொடுக்க விரும்பாததால் தனது உண்மையான பெயரை கூறாமல் போலி பெயரை பயன்படுத்தினார் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
- முடக்கி வைத்திருந்த நிதியை ஈரானுக்கு அளித்ததால் பைடன் மீது விமர்சனம்
- குழந்தைகள், இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளது கொடியது
ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து அதிரடி தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் 700-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஹமாஸ் தாக்குதல் நடத்திய நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ஜோ பைடன் அரசை விமர்சித்துள்ளார். சமீபத்தில் கைதிகள் பரிமாற்றம் செய்ததுடன், ஈரானின் 6 பில்லியன் டாலர் பணத்தை பரிமாற்றம் செய்ய அமெரிக்கா சம்மதம் தெரிவித்ததை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் இஸ்ரேல் மீதான தாக்குதல் குறித்து டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-
கொடியது. குழந்தைகள், இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நான் உங்களுடைய அதிபராக இருந்தபோது, வலிமையின் காரணமாக நாம் அமைதியை பெற்றிருந்தோம். தற்போது நமக்கு பலவீனம், சிக்கல், குழப்பம் உள்ளது. நான் அதிபராக இருந்திருந்தால், இஸ்ரேலில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் அட்டூழியங்கள் ஒருபோதும் நடந்திருக்காது'' என்றார்.






