search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "students organization"

    • சுமார் 1000 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்டனர்
    • இரு பிரிவினருக்கும் உலகெங்கிலும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தருகின்றன

    கடந்த சனிக்கிழமை காலை பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மீது பெரும் தாக்குதல் நடத்தியது.

    சுமார் 1000 இஸ்ரேலிய உயிர்களை பலி வாங்கிய இந்த தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேல், ஹமாஸ் மீது பதிலடி தாக்குதலை உடனடியாக துவங்கியது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன. ஈரான், கத்தார் உள்ளிட்ட பல நாடுகள் ஹமாஸ் அமைப்பை ஆதரிக்கின்றன.

    போராடும் இரு பிரிவினருக்கும் உலகெங்கிலும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தருகின்றன.

    இந்நிலையில், அமெரிக்காவின் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைகழகத்தை சேர்ந்த 34 மாணவ அமைப்புகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து அறிக்கை வெளியிட்டன. "பல வருடங்களாக இஸ்ரேல் கடைபிடிக்கும் நிறவெறி கொள்கையே தற்போதைய போருக்கு காரணம்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் முன்னாள் ஹார்வர்டு மாணவர்களாக இருந்து தற்போது அமெரிக்க அரசியலில் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் பலர், இந்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ள பிரதிநிதிகளின் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை வலியுறுத்தியுள்ளனர்.

    ஹார்வர்டு பல்கலைக்கழக தலைமை பொறுப்பில் உள்ள க்ளாடின் கே (Claudine Gay) மற்றும் டீன் பொறுப்பில் உள்ள 15 பேருக்கும் மேற்பட்டவர்கள், நேற்று வெளியிட்ட அறிக்கையில், "ஹமாஸ் தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகளை கேட்டு எங்கள் இதயம் நொறுங்குகிறது" என தெரிவித்திருந்தனர். ஆனால், மாணவர் அமைப்பின் குற்றச்சாட்டு குறித்து எந்த வாக்கியமும் அதில் இடம் பெறாதது விமர்சனங்களுக்கு வழி வகுத்துள்ளது.

    நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக புரட்சிகர மாணவர்கள் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
    சென்னை:

    புரட்சிகர மாணவர்கள் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

    ‘விருதுநகர் மாவட் டம், அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியின் உதவி பேராசிரியர் நிர்மலா தேவி, உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கும்படி செல்போனில் மாணவிகளை வற்புறுத்தும் உரையாடல் ‘வாட்ஸ்அப்பில்’ வெளியானது. இதையடுத்து நிர்மலா தேவியை போலீசார் கைது செய்தனர். தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்கின்றனர்.

    இதற்கிடையில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானத்தின் தலைமையில், ஒரு விசாரணை குழுவை தமிழக கவர்னர் அமைத்துள்ளார். ஒரு குற்றச்செயலுக்கு இரு அமைப்பு விசாரணை நடத்தினால், அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும்.

    எனவே, நிர்மலா தேவிக்கு எதிரான வழக்கை, டி.ஐ.ஜி. பதவிக்கு குறையாத பெண் போலீஸ் அதிகாரி தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். அந்த விசாரணையை இந்த ஐகோர்ட்டு கண்காணிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தமிழக தலைமை செயலாளர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்டோருக்கு பதில் அளிக்கும் படி நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டது. இந்த வழக்கு வருகிற 23-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

    இந்த நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக முன்கூட்டியே இன்று விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வக்கீல், ஐகோர்ட்டில் முறையிட்டார்.

    ‘ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானத்தின் விசாரணை முடிந்து, வருகிற 15-ந் தேதி அவர் தன்னுடைய விசாரணை அறிக்கையை தமிழக கவர்னரிடம் வழங்க உள்ளார். எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு பதிலளித்த நீதிபதிகள், இந்த வழக்கு கடைசியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உத்தரவிட்டனர்.


    ×