என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • காசா மீது இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
    • இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு இடையே போர் சூழல் நிலவி வரும் நிலையில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. தனது 2 போர் கப்பல்களை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பி உள்ளது.

    மேலும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசினார். இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்வதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரீன்-ஜீன்-பியர் கூறும்போது, "இஸ்ரேலுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேலுக்குச் செல்ல உள்ளார். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

    பின்னர் ஜோ பைடன், ஜோர்டான் தலைநகர் அம்மானுக்குச் சென்று அங்கு ஜோர்டான் மன்னர் அப்துல்லா, எகிப்து அதிபர் அப்தெல் பக்தா எல்-சிசி, பாலஸ்தீனிய மேற்கு கரை அதிபர் மஹ்மூத் அப்பாஸ் ஆகியோரை சந்திக்கிறார்.

    அப்போது பாலஸ்தீன மக்களின் கண்ணியம் மற்றும் உரிமைக்காக ஹமாஸ் நிற்கவில்லை என்பதை வலியுறுத்துவார். மேலும் காசாவில் உள்ள பொதுமக்களின் மனிதாபிமான தேவைகள் குறித்து விவாதிப்பார் என்றார்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நாளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்துப் பேசுகிறார். ஹமாஸ் அமைப்பு மீதான தாக்குதல் குறித்து இருவரும் விவாதிக்கிறார்கள்.

    ஏற்கனவே அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன், இஸ்ரேலுக்குச் சென்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்து பேசி இருந்தார். இதற்கிடையே ஜோ பைடனின் இஸ்ரேல் பயணம் குறித்து ஆன்டனி பிளிங்கன் கூறும்போது, இஸ்ரேலுடன் அமெரிக்காவின் ஒற்றுமையை ஜோ பைடன் மீண்டும் உறுதிப்படுத்துவார். ஹமாஸ் பிடித்த பணயக் கைதிகளை விடுவிக்கவும் அவர் முயற்சி செய்வார்.

    ஹமாசுக்கு பயனளிக்க கூடிய வகையிலும், பொது மக்களின் உயிரிழப்புகளை குறைக்கும் மனிதாபிமான உதவிகள் காசாவுக்குள் நுழைய அனுமதிக்கும் வகையிலும் இஸ்ரேல் எவ்வாறு தனது நடவடிக்ைக களை மேற்கொள்ளும் என்பதை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கேட்பார் என்றார்.

    ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் காசா மீது இஸ்ரேலின் முப்படைகளும் தாக்குதல் நடத்த தயார் நிலையில் உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் இஸ்ரேல் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • படுகாயத்துடன் உயிருக்கு போராடிய பெண் செல்போன் மூலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
    • கொலை செய்யப்பட்ட சிறுவன் மற்றும் படுகாயம் அடைந்த அவனது தாய் பெயர் விவரங்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.

    சிகாகோ:

    அமெரிக்கா சிகாகோவில் இருந்து தென்மேற்கே 65 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பகுதியில் 32 வயது முஸ்லிம் பெண் தனது 6 வயது மகனுடன் வசித்து வந்தார்.

    நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது 71 வயது முதியவர் ஒருவர் வீட்டுக்குள் கத்தியுடன் புகுந்தார். திடீரென அவர் அந்த பெண்ணையும், அவரது மகனையும் வெறித்தனமாக கத்தியால் தாக்கினார் . 6 வயது சிறுவனை அவர் தொடர்ந்து கத்தியால் குத்திக்கொண்டே இருந்தார். இதில் அவனது உடலில் 26 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் அவன் கீழே சரிந்தான்.

    இதைபார்த்த அந்த பெண் தனது மகனை காக்க முதியவருடன் போராடினார். அவரையும் முதியவர் கத்தியால் குத்தினார். அவரிடம் இருந்து தப்பிக்க அந்த பெண் வீட்டு குளியல் அறைக்குள் ஓடினார். ஆனாலும் அந்த முதியவர் அவரை விடவில்லை. கத்தியால் தாக்கி விட்டு அங்கிருந்து ஓடி விட்டார். இதில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அவர் செல்போன் மூலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    மேலும் தனது கணவருக்கும் செல்போனில் தகவல் அனுப்பினார். இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணையும், சிறுவனையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுவன் பரிதாபமாக இறந்தான். மருத்துவ பரிசோதனையில் அவனது உடலில் கத்தி இருந்தது தெரியவந்தது. அந்த கத்தி வெளியே எடுக்கப்பட்டது. சிறுவனின் தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சிறுவனை ஈவு இரக்கம் இல்லாமல் குத்திக்கொன்ற ஜோசப் சுபா என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அவர் நில உரிமையாளராக இருந்து வருகிறார். இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையே நடந்து வரும் சண்டையின் எதிரொலியாக அமெரிக்காவில் வசித்து வந்த பாலஸ்தீனத்தை சேர்ந்த சிறுவனை முதியவர் குத்திக்கொன்றதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட சிறுவன் மற்றும் படுகாயம் அடைந்த அவனது தாய் பெயர் விவரங்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அப்பாவி பாலஸ்தீன பொதுமக்களை ஏற்று கொள்ள பல அரபு நாடுகள் தயங்குகின்றன
    • கத்தார், லெபனான், ஜோர்டான், ஈரான், எகிப்து என்ன செய்கின்றன என நிக்கி கேட்டார்

    கடந்த அக்டோபர் 7 அன்று, தனது நாட்டின் மீது நடைபெற்ற தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல், பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க போவதாக கூறி பாலஸ்தீனம் முழுவதும் அவர்களை தேடி பழி வாங்கி வருகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினரின் போர் 10-வது நாளாக தீவிரமடைந்து வரும் நிலையில், காசா பகுதியில் உள்ள பொதுமக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் ஏற்கனெவே அறிவித்திருந்தது.

    ஆனால், அப்பாவி பாலஸ்தீன பொதுமக்களை தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க பல அரபு நாடுகள் தயங்குகின்றன.

    அடுத்த வருடம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் குடியரசு கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர் நிக்கி ஹாலே, அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பி, தனக்கு ஆதரவை தேடி பிரச்சாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து அவர் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கருத்து தெரிவித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    பாலஸ்தீனத்தில் உள்ள அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பை குறித்து நாம் கவனம் கொள்ள வேண்டும். ஆனால் தனது நாட்டை விட்டு ஓடி செல்லும் சூழலில் பரிதாபமாக உள்ள காசா பொதுமக்களுக்கு, அரபு நாடுகள் தங்கள் நாட்டின் கதவுகளை திறந்து அவர்களை உள்ளே அனுமதிக்க ஏன் தயங்குகின்றன? அரபு நாடுகள் என்ன செய்கின்றன? கத்தார், லெபனான், ஜோர்டான், ஈரான், எகிப்து ஆகிய நாடுகள் ஏன் அந்த அப்பாவி பொதுமக்களை தங்கள் நாட்டிற்குள் அனுமதித்து பாதுகாப்பு அளிக்க மறுக்கின்றன?

    எகிப்திற்கு ஒவ்வொரு வருடமும் $1 பில்லியனுக்கும் மேல் அமெரிக்கா வழங்கி வருகிறது. அப்படியிருந்தும் பாலஸ்தீனர்களை ஏன் அவர்கள் தங்கள் நாட்டு மக்களோடு மக்களாக வாழ அனுமதிக்க மறுக்கிறார்கள்? பாலஸ்தீன மக்களை தங்கள் அருகாமையில் வைத்து கொள்ள அந்த நாடுகளே விரும்பவில்லை. அவ்வாறு இருக்கும் போது இஸ்ரேல் எப்படி தங்கள் அருகாமையில் தங்க வைத்து கொள்ள விரும்பும்? நாம் இந்த பிரச்சனையை நேர்மையான பார்வையுடன் அணுக வேண்டும். பாலஸ்தீனர்களின் நலனுக்காக அரபு நாடுகள் எதுவும் செய்யவில்லை என்பதே உண்மை.

    ஹமாஸ் அமைப்பினர் தற்போது செய்து வருவதை நிறுத்த சொல்லி உடனே தடுக்க அரபு நாடுகளால் முடியும்; ஆனால் அவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள்.

    இறுதியாக அவர்கள் இஸ்ரேலையும் அமெரிக்காவையும்தான் குறை சொல்வார்கள்.

    இவ்வாறு நிக்கி ஹாலே கூறினார்.

    • கடந்த வாரம் நடந்த மிஸ் போர்ச்சுக்கல் அழகி போட்டியில் மெரினா மஷேடி வெற்றி பெற்று பட்டம் வென்றார்.
    • ரிக்கி கோலே ஜூலை மாதம் நடந்த அழகி போட்டியில் மிஸ் நெதர்லாந்து அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    எல்சால்வடார்:

    ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சவால் விடும் வகையில் திருநங்கைகளும் ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அழகி போட்டி வரலாற்றில் முதன் முறையாக 2 திருநங்கைகள் பங்கேற்க உள்ளனர்.

    72-வது உலக அழகி போட்டி இந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த 90 அழகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இவர்களுக்கு போட்டியாக 2 திருநங்கைகளும் களம் இறங்கி உள்ளனர். அதில் ஒருவரது பெயர் மெரினா மஷேடி. 23 வயதான இவர் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் நடந்த மிஸ் போர்ச்சுக்கல் அழகி போட்டியில் இவர் வெற்றி பெற்று பட்டம் வென்றார்.

    மற்றொரு திருநங்கை பெயர் ரிக்கி கோலே. நெதர்லாந்து நாட்டை சேர்ந்த மாடல் அழகி ஆவார். அவர் ஜூலை மாதம் நடந்த அழகி போட்டியில் மிஸ் நெதர்லாந்து அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் மிஸ் நெதர்லாந்து பட்டம் வென்ற முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றார்.

    உலக அழகி போட்டியில் கலந்து கொள்ளும் 2 திருநங்கைகளில் யாராவது ஒருவர் வெற்றி பெற்று மகுடம் சூட்டினால் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை என்ற சாதனையை படைக்கலாம்.

    இது தொடர்பாக ரிக்கி கோலே கூறும் போது, சிறுவயதில் இருந்து நான் என் பாதையில் வந்த அனைத்தையும் வென்றேன். எனக்கு எனது குடும்பத்தினர் நல்ல ஊக்கம் அளித்து வருகிறார்கள். அவர்கள் ஆதரவால் தான் இது போன்ற சாதனைகளை செய்ய முடிகிறது. தற்போது என்னை பாருங்கள். இங்கே நான் வலிமையான, தன்னம்பிக்கையுடன் உங்கள் முன்பு ஒரு திருநங்கையாக நிற்கிறேன் என்று தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
    • இஸ்ரேல், பாலஸ்தீன போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உறுதுணையாக நிற்கும் என்றார்.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

    நேற்றைய 9-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து ஐநூறைக் கடந்துள்ளது.

    காசாவில் உள்ள ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் ராணுவம் எந்த நேரத்திலும் மும்முனை தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால் இதை தடுத்து நிறுத்தவேண்டும் என்பதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தீவிரமாக உள்ளார். இதற்காக அவர் நேற்று இரவு இஸ்ரேல் பிரதமருடன் பேச்சு நடத்தினார்.

    இந்நிலையில், அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் இஸ்ரேல் போர் தொடர்பாக பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    இஸ்ரேல் போரில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டும். இந்த போரில் அப்பாவி பொதுமக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. காசாவில் உள்ள அப்பாவி மக்கள் குடிதண்ணீர், மருந்து இல்லாமல் தவிப்பது தெரிய வந்துள்ளது.

    மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு இஸ்ரேல் அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும். உடனடியாக காசா மக்களுக்கு குடிதண்ணீரை வழங்கும்படி இஸ்ரேலுக்கு நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

    ஆயுதம் ஏந்திப் போராடும் ஹமாஸ் படையினரை முழுமையாக ஒடுக்கவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஹமாஸ் படையினர் முற்றிலுமாக வெளியேற்றப்பட வேண்டும். அதற்காக காசாவை ஆக்கிரமித்து அந்தப் பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று இஸ்ரேல் நினைப்பது சரியல்ல.

    இஸ்ரேலில் தரைவழி தாக்குதல் மிகப்பெரிய தவறாக முடிந்துவிடும். அந்த தவறை இஸ்ரேல் செய்யாது என்று நம்புகிறேன். காசா பகுதி முழுக்க முழுக்க பாலஸ்தீன அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டும். அதில் அமெரிக்கா தெளிவான கொள்கை முடிவுடன் இருக்கிறது.

    காசாவில் உள்ள அப்பாவி மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அவர்கள் விரும்பினால் அருகில் உள்ள நாடுகளுக்கு இடம்பெயர உதவி செய்யவேண்டும். காசா வடக்கு பகுதி மக்கள் எகிப்து நோக்கிச் சென்ற வண்ணம் உள்ளனர்.

    அவர்களை எகிப்து நாடு அரவணைத்து உதவவேண்டும். இதற்காக நாங்கள் எகிப்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறோம். காசாவில் உள்ள பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்ந்து உறுதி செய்யப்பட வேண்டும்.

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையே ஏற்பட்டுள்ள போரை தொடர்ந்து அமெரிக்கா அந்தப் பகுதிக்கு மேலும் ஒரு கப்பலை அனுப்பி இருக்கிறது. இந்தப் போரில் இதுவரை 30 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

    என்றாலும் இந்தப் போரில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட விரும்பவில்லை. அதற்கான காரணமும் இல்லை. இஸ்ரேலுக்கு கூடுதல் உதவிகள் செய்ய அமெரிக்காவில் கோரிக்கை எழுந்துள்ளது. அதுபற்றி பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.

    • எவ்வித நிபந்தனை இன்றி ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும்.
    • காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் விரைவில் கிடைக்க இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும்.

    நியூயார்க்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

    நேற்றைய 9-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து ஐநூறைக் கடந்துள்ளது.

    ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில்,மத்திய கிழக்கில் நாம் படுகுழியின் விளிம்பில் இருப்பதால், எனக்கு இரண்டு மனிதாபிமான வேண்டுகோள்கள் உள்ளன. எவ்வித நிபந்தனைகளும் இன்றி ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும், காசாவில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகள் விரைவில் கிடைக்க இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
    • மக்கள் தொடர்ந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதால் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

    இஸ்ரேல்- ஹமாஸ் போர் கடந்த 7ம் தேதி முதல் தொடங்கியது. இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

    மேலும், இந்த போர் தாக்குதலால் மக்கள் தங்களின் வீடு, உடமைகளைவிட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், காசாவில் மோதலின் முதல் ஏழு நாட்களில் இதுவுரை 10 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, ஐ.நாவின் தகவல் தொடர்பு இயக்குனர் ஜூலியட் டூமா கூறுகையில்," காசாவில் நடந்த போரின் முதல் ஏழு நாட்களில் ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மக்கள் தொடர்ந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதால் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    • சிலைக்கு ‘சமத்துவத்தின் சிலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
    • இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்தும் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    அம்பேத்கரின் நினைவை போற்றும் வகையில் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தின் அக்கோகீக் நகரில் 13 ஏக்கர் பரப்பளவில் அம்பேத்கர் சர்வதேச மையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் அம்பேத்கரின் முழு உருவ சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த சிலைக்கு 'சமத்துவத்தின் சிலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிலை 19 அடி உயரம் கொண்டது. இது மிகவும் உயரமான சிலை ஆகும். சிலை திறப்பு விழாவில் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்தும் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த சிலையை பிரபல சிற்பி ராம் சுதார் வடிவமைத்துள்ளார். இவர் குஜராத் நர்மதா ஆற்றங்கரையில் நிறுவப்பட்டுள்ள 'ஒற்றுமையின் சிலை' என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் சிலையை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்துள்ளது.
    • அதன்படி, இஸ்ரேலுக்கு தேவையான ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் காரணமாக இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. நேற்றைய 8-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்துள்ளது. அதன்படி, இஸ்ரேலுக்குத் தேவையான ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்கி வருகிறது.

    இதற்கிடையே, இஸ்ரேல் மீது அண்டை நாடுகள் தாக்குதல் நடத்துவதை தடுக்கும் வகையிலும், போரில் ஈரான் உள்ளிட்ட பிறநாடுகள் பங்கேற்கக் கூடாது என எச்சரிக்கும் வகையிலும் உலகிலேயே மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் போர்டை இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. அந்த விமானம் தாங்கி போர்க்கப்பல் இஸ்ரேல் எல்லை அருகே மத்திய தரைக்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேலுக்கான ஆதரவை மேலும் உறுதி செய்யும் வகையிலும், ஈரான் உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் வகையிலும் 2வது விமானம் தாங்கி போர்க்கப்பலை அமெரிக்கா மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த விமானம் தாங்கி போர்க்கப்பலுடன் மேலும் சில போர்க்கப்பல்களும் இஸ்ரேலுக்கு ஆதரவாக மத்திய தரைக்கடலில் நிலைநிறுத்தப்படுகிறது.

    மத்திய தரைக்கடல் பகுதியில் 2 அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் நிலைநிறுத்தப்படுவதால் வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராயிஸ் திருடு போனது
    • துப்பு தருபவர்களுக்கு ரூ.4 லட்சம் பரிசு அறிவித்திருந்தார்

    அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி, பல கோடீசுவரர்களின் விருப்பமான வசிப்பிட பகுதியாக உள்ளது.

    ஏரியல் பேனர்ஸ் (Aerial Banners) எனும் நிறுவனத்தின் உரிமையாளரான பாப் பென்யோ (61) எனும் பெரும் கோடீசுவரர் இங்கு தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அப்பகுதியில் உள்ள இவரது மிக பெரிய பண்ணை வீட்டில் தனது பல கார்களுடன் ஒரு விலையுயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் ரெய்த் (Rolls Royce Wraith) காரையும் பாப் வைத்திருந்தார். இதன் விலை சுமார் ரூ.2 கோடி ($250,000) இருக்கும்.

    சில நாட்களுக்கு முன் அவரது மனைவி ஓல்கா பென்யோ (41) தனது 2 குழந்தைகளுடன் அக்காரில் வெளியே சென்று விட்டு மீண்டும் பங்களாவிற்கு திரும்பினார். அவர் காரை அதன் நிறுத்துமிடத்தில் நிறுத்தி விட்டு பங்களாவிற்கு உள்ளே சென்ற சிறிது நேரத்தில் 2 திருடர்கள் உள்ளே நுழைந்தனர்.

    பல பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கும் அக்காரை சுலபமாக சிறிது நேரத்தில் அவர்கள் திருடி வெளியே வேகமாக ஓட்டி சென்று விட்டனர். பங்களாவின் நிறுத்துமிடத்தின் ரிமோட் உபகரணத்தை போன்றே தாங்களாக ஒன்று தயார் செய்து வந்து அவர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். அவரது நிறுத்துமிடத்தில் ஆஸ்டன் மார்ட்டின் கார் ஒன்றும், 1970 செவர்லே காரும் இருந்தது. அந்த கார்களை விட்டு விட்டு ரோல்ஸ் ராயிஸ் காரை திருடி சென்றுள்ளனர்.

    இதனையடுத்து கார் திருடு போனதை காவல்துறையிடம் தெரிவித்த பாப் பென்யோ, காணாமல் போன காரை கண்டு பிடித்து தர வித்தியாசமாக விளம்பரம் செய்தார்.

    ஒரு விமானத்தின் பின்பகுதியில் ஒரு மிக பெரிய பேனரில் தனது செல்போன் நம்பருடன் "காணவில்லை - ஊதா நிற ரோல்ஸ் ராயிஸ்" என குறிப்பிட்டு, அத்துடன் அதை கண்டு பிடித்து தருபவர்களுக்கு சுமார் ரு.4 லட்சம் ($5000) பரிசும் அறிவித்திருந்தார்.

    அந்த விமானம் இந்த பேனருடன் வானில் மியாமி நகர் முழுவதும் பறந்தது.

    அந்த விளம்பரத்தை பார்த்த ஒரு பெண், அந்த ரோல்ஸ் ராயிஸ் காரை தான் கண்டதாக தகவல் தந்ததையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று அதை மீட்டனர். கார் பத்திரமாக மீட்கப்பட்டாலும் அதனுள்ளே பென்யோவின் மனைவி வாங்கி வைத்திருந்த விலையுயர்ந்த பல பொருட்கள் களவாடப்பட்டிருந்தது.

    காணாமல் போன விலையுயர்ந்த காருக்காக பாப் கையாண்ட நூதன விளம்பர வழிமுறை சமூக வலைதளங்களில் மிகவும் பேசப்படுகிறது.


    • அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து இஸ்ரேலை ஆதரிக்கின்றன
    • தனது பெரிய போர் கப்பலை இஸ்ரேல் கடற்பகுதியில் அமெரிக்கா நிறுத்தியுள்ளது

    இருபத்தி ஏழு அமெரிக்கர்கள் உட்பட 1000 பேருக்கும் மேல் பரிதாபமாக பலியாகிய இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலை அடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழிக்க போவதாக கூறி பாலஸ்தீனம் முழுவதும் அவர்களை இஸ்ரேல் தேடி தேடி வேட்டையாடி வருகிறது.

    அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து உட்பட பல நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக தனது பெரிய போர் கப்பலை இஸ்ரேல் கடற்பகுதியில் நிறுத்தியுள்ளது.

    இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினரை குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பென்சில்வேனியா மாநில பிலடெல்பியாவில் பேசும் போது குறிப்பிட்டதாவது:

    இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதல் குறித்த முழு விவரங்களை கேட்க கேட்க, அல் கொய்தாவை விட ஹமாஸ் பயங்கரமான அமைப்பு என்பதில் சந்தேகமே இல்லை. நாங்கள் இஸ்ரேலுடன் துணை நிற்கிறோம் என்பதிலும் சந்தேகமே வேண்டாம். அமெரிக்க உள்துறை செயலாளர் ஆன்டனி பிளிங்கன் மற்றும் ராணுவ செயலர் லாயிட் ஆஸ்டின் இஸ்ரேலுக்கு நேரில் சென்றனர். பதில் தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்க தயாராக உள்ளது. பாலஸ்தீனத்தின் பெரும் பகுதி மக்கள் ஹமாஸிற்கு ஆதரவு அளிக்கவில்லை என்பதை மறுக்க முடியாது. இப்போரில் காணாமல் போயிருக்கும் அமெரிக்கர்களை குறித்து அவர்களின் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டு நான் ஆறுதல் கூறி அவர்களை மீட்க அமெரிக்கா அனைத்தையும் செய்ய உள்ளது என நம்பிக்கை தெரிவித்தேன்.

    இவ்வாறு பைடன் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பூமியை பொறுத்தவரை ஓர் ஆண்டில் 2 முதல் 5 சூரிய கிரகணங்கள் நிகழக்கூடும்.
    • அமெரிக்காவின் வானிலை ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் இணைய தள பக்கத்தில் சூரிய கிரகணம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    வாஷிங்டன்:

    சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த சமயத்தில் சூரியனின் ஒளியை சந்திரன் மறைக்கும். பூமியை பொறுத்தவரை ஓர் ஆண்டில் 2 முதல் 5 சூரிய கிரகணங்கள் நிகழக்கூடும்.

    இந்நிலையில் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று நடைபெற உள்ளது. 178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசை தினத்தில் இந்த அரிய கிரகணம் நிகழ்கிறது.

    இந்திய நேரப்படி இரவு 8.34 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 2.25 மணி வரை சூரிய கிரகணம் நடக்க உள்ளது. இரவு நேரம் என்பதால் இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் தெரியாது.

    இந்த சூரிய கிரகணம் அமெரிக்காவில் நன்றாக தெரியும் என்றும் நெருப்பு வளையம் போல காட்சி அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெருப்பு வளைய சூரிய கிரகணம் நிலவு பூமியில் இருந்து வழக்கத்தை விட சற்று தொலைவில் இருக்கும் போது நிகழ்கிறது. இது சூரியனை முழுமையாக மறைக்காது. அதற்கு பதிலாக ஒரு மெல்லிய நெருப்பு வளையம் போல் தெரியும்.

    அமெரிக்காவின் வானிலை ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் இணைய தள பக்கத்தில் சூரிய கிரகணம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    பித்ரு அமாவாசை எனப்படும் மகாளய அமாவாசை தினத்தில் கிரகணம் ஏற்படுவது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, 178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசை தினத்தில் இந்த அரிய கிரகணம் ஏற்படுவதால் இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது நல்லது. பல ஆண்டுகாலத்திற்கு புண்ணியத்தையும் முன்னோர்களின் ஆசியையும் கொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து வருகிற 28-ந்தேதி பவுர்ணமி நாளில் சந்திர கிரகணமும் ஏற்பட உள்ளது. இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 28- ந்தேதி ஏற்படும் சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இரவு 11.31 மணிக்கு தொடங்கி மறுநாள் 29- ந்தேதி அதிகாலை 3.56 மணி வரை நீடிக்க உள்ளது. இதன் காரணமாக சந்திர கிரகணத்தை இந்தியாவில் மிகவும் தெளிவாக வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×